Tag: சிவகுமார்

  • பேரனான பிக்பாஸ் சிவகுமார் மீது சிவாஜி குடும்பத்தில் இருக்கும் வெறுப்பு என்ன? அதிர்ச்சி பின்னணி…

    Shivakumar: தமிழ் சினிமா பிரபலங்களின் குடும்பத்தில் எப்பொழுதுமே பிரச்சனை என்பது ஓயாத விஷயமாக தான் இருக்கும். ஆனால் சில பிரபலங்களின் வீட்டு விஷயங்கள் புரியாத புதிராகவே இருக்கும்.

    இப்படி ஒரு பிரபலமாக தான் இருக்கிறார் சிவகுமார். இவர் பிரபல நடிகர் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாருக்கு பிறந்தவர். சிவகுமார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்த போது, அவருடைய நடிப்புக்கான ரீல்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவியது.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அவர் உள்ளே வரும்போது ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நடிப்பு திறமையால் தன் பக்கம் இருப்பார் என பலரும் அவர் மீது நம்பிக்கை வைக்க ஆனால் அவரால் சில வாரங்கள் கூட நிகழ்ச்சிக்குள் தாக்கு பிடிக்க முடியாமல் கடந்த வாரம் வெளியேறினார்.

    நிகழ்ச்சி போல் எங்குமே தன்னை சிவாஜியின் பேரன் என சொல்லிக் கொள்ளாதவர் சிவகுமார். இதற்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறதாம். தன்னுடைய அம்மாவின் இறுதிக்காலத்தில் தந்தையும் அவருடைய குடும்பமும் எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தன்னை எப்போதுமே மீனாட்சி ராம்குமாரின் மகனாக மட்டுமே காட்டிக்கொள்ள விரும்புகிறார்.

    பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சி மகன் தான் ராம்குமார். மீனாட்சியை தன் மனைவி என்றும், சிவகுமாரை தன்னுடைய மகன் என்றும் ராம்குமார் சொல்லிவிட்டாலும் இருவரும் பிரிந்து தான் இருந்து வருகின்றனர். இதற்குரிய காரணம் பெரிதாக வெளியில் சொல்லப்படவில்லை.

    ராம்குமாருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும் இருந்தார். இந்த ஜோடிக்கு பிறந்தது தான் நடிகர் துஷ்யந்த், தர்ஷன் உள்ளிட்டவர்கள். கண்ணம்மாள் மற்றும் மீனாட்சி இருவரில் யார் முதல் மனைவி என பல இடங்களில் விளக்கமாக சொல்லப்படவில்லை. இது குறித்து சிவாஜி குடும்பத்தில் என்ன நடந்தது என்றும் தகவல்கள் வெளியாகவில்லை.

    அது மட்டுமில்லாமல் ஏற்கனவே ராம்குமார் மற்றும் பிரபுவின் சகோதரிகள் சொத்தை ஏமாற்று விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில், சிவகுமாரை உள்ளே விடுவதால் மேலும் சிக்கல் வரும் என்பதும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சாகி வருகிறது.

    இருந்தும் சிவகுமார் தன்னுடைய தாயின் கடைசி காலத்தில் வராத குடும்பத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  • அடம் பிடிச்ச இயக்குனர்… மகனுக்காக முதல் முறையாக சத்யராஜிடம் சிபாரிசுக்கு சென்ற சிவக்குமார்…

    Sivakumar: கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் தயங்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சனையில் முதல்முறையாக சிவகுமாரை இறங்கி பேசிய சம்பவமும் நடந்திருக்கிறது.

    இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்த இப்படத்தில் கார்த்திக், சாயிஷா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து இருந்தார்.

    முதலில் இத்திரைப்படத்தில் நடித்த சத்யராஜ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாகுபலி படத்தில் நடித்திருந்த சத்யராஜ் என்னுடைய நடிப்பிற்கு இப்படம் தீனி போடாதே என தயங்கி இருக்கிறார். வேறு வழியில்லாத இயக்குனர் பாண்டிராஜ் ராஜ்கிரணை அணுகி அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்.

    அவராலும் கால்ஷீட் பிரச்சினையால் படத்தில் நடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து தான் எதிர்பார்க்கும் பிரபலங்கள் படத்தில் இணையாமல் போக கோபமான பாண்டிராஜ் இப்படத்தை இப்போது எடுக்க வேண்டாம் என முடிவு எடுத்து தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லிவிடுகிறாராம்.

    இதை கேள்விப்பட்ட நடிகர் சிவகுமார் நேரடியாக பேச இப்போ இயக்குனருக்கு யார் தான் வேண்டுமா என கேட்டிருக்கிறாராம். இயக்குனர் இப்படத்தில் சத்யராஜ் சாரினை கேட்பதாக கூற, முதல்முறையாக நேரடியாக சத்யராஜை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சிவகுமார்.

    இயக்குனர் நீ தான் வேண்டும் என கேட்கிறார். இந்த படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறினாராம். சிவகுமார் சொன்ன ஒரே காரணத்தால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் சத்யராஜ்.

    அவர் சொல்லிய காரணத்தால் மட்டுமே படத்தில் நடிக்க வந்த சத்யராஜ் இருக்கு அடுத்த சில நாட்களில் படம் பிடித்துப் போகி இயக்குனரை அழைத்து நல்லவேளை இந்த படத்தை மிஸ் பண்ண பார்த்திருப்பேன் என வருத்தம் தெரிவித்ததாகவும் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்து இருக்கிறார்.

  • சைக்கிளில் வந்த சிவகுமாருக்கு ஜெய்சங்கர் கொடுத்த உற்சாகம்… இதுக்கெல்லாம் வருத்தப்படாதே!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட கலைஞராக இருந்தார் என்பதை சிவகுமார் ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

    1960களில்தான் ஒரு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவிஎம்.ராஜன், ஸ்ரீகாந்த், நான் ஆகிய 5 பேரும் கதாநாயகர்களாக அறிமுகமானோம். இதுல தொடர்ந்து படங்கள் நடிக்கக்கூடிய வாய்ப்புன்னா அது ஜெய்சங்கருக்குத்தான் கிடைத்தது.

    தயாரிப்பாளர், லைட்மேன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காத ஒரு நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். அனைவரின் தோள்மீதும் கைபோட்டு சர்வசாதாரணமாக அவர் பேசுவார். அதேமாதிரி மற்றவர்களைக் காயப்படுத்துகிற மாதிரியான வார்த்தை எதுவும் அவரது வாயில் இருந்து வராது. எனக்கு தெரிஞ்சி சினிமா உலகிலே எதிரிகளே இல்லாமல் இருந்த நடிகர்னா நான் ஜெய்சங்கரைச் சொல்வேன்.

    jaisankar

    jaisankar

    பல தருணங்களில் எனக்கு ஆதரவாக ஜெய்சங்கர் இருந்திருக்கிறார். நான் தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்து வந்த அந்தக் காலகட்டத்தில் நடிகர் சங்க வளாகத்தில் டென்னிஸ் ஆடுவதற்காக பல முக்கியமான கதாநாயகர்கள் எல்லாம் வருவாங்க.

    அப்போது ஜெய்சங்கரும் தனது காரில் வருவார். நான் அப்போ என்னுடைய சைக்கிள்ல நடிகர் சங்க வளாகத்துக்குப் போவேன். அப்போது எனது வசதி அப்படி. எனது முகத்தில் இருந்த மாற்றத்தைப் பார்த்த ஜெய்சங்கர் ‘ஏன் சிவா வாட்டமா இருக்கே, சினிமா உலகிலே வெற்றி, தோல்வி என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது.

    உனக்கு ஒரே ஒரு நல்ல வாய்ப்பு வந்தா போதும். உன்னுடைய வாழ்க்கையே தலைகீழா மாறிடும். அதனால இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காதே’ன்னு ஆறுதல் சொன்னார் ஜெய்சங்கர். மிகுந்த மன வருத்த்தில் இருந்த எனக்கு அந்தளவுக்கு தைரியத்தைத் தந்தன என்கிறார் சிவகுமார்.

    மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.வசதியில்லாமல் சைக்கிளில் வந்த சிவகுமாரைப் பார்த்து நக்கல் பண்ணாமல், அவரது மனவேதனையை அவரது முகத்தில் குறிப்பால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப பக்குவமாகப் பேசி உள்ளார் ஜெய்சங்கர். அதுமட்டுமல்லாமல் அவருடைய மனவேதனைக்கு மாமருந்தாக அமைந்து ஒரு நல்ல தைரியத்தைக் கொடுத்துள்ளது ஜெய்சங்கரின் பேச்சு.

  • எம்ஜிஆரோட வாழ்க்கையில இவ்வளவு துன்பங்களா? அடப்பாவமே..! சிவகுமார் புட்டு புட்டு வச்சிட்டாரே!

    எம்ஜிஆர் தனது ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதுகுறித்து பிரபல நடிகர் சிவகுமார் என்ன சொல்றாருன்னு பாருங்க.

    17 நாள் திரும்பிருக்காரு: எம்ஜிஆர் நீங்க நினைக்கிற மாதிரி சின்ன வயசுல சந்தோஷமா எல்லாம் இல்ல. அளவு கடந்த சோகம். காலையில 7 மணிக்கு மேக்கப் போட்டு இருப்பாரு. சாயங்காலம் 5 மணி வரைக்கும் கூப்பிடவே மாட்டாங்க. ‘போய்ட்டு நாளைக்கு வாப்பா’ன்னு சொல்லிடுவாங்க. அப்படியே 17 நாள் திரும்பிருக்காரு. அப்படி வந்துக்கிட்டு இருந்தவருக்கிட்ட ஒருநாள் இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் நீ போலீஸ் வேடம்தான் போடப்போற. உங்கிட்ட சைக்கிள் இருக்கான்னு கேட்டுருக்காரு.

    திருடன் திருடன்…: உடனே ஓடிப்போய் பக்கத்துல சைக்கிள்கடை கிட்ட நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்து நடிக்க வர்றாரு. உடனே ஒருத்தர் திருடன் திருடன்… என் சைக்கிளைத் திருடிட்டான்னு பின்னாடியே ஓடி வர்றாரு. அப்புறம் எம்ஜிஆர் 17 நாள் எனக்கு ஷாட் இல்ல. இப்ப தான் டைரக்டர் கூப்பிட்டுருக்காரு.

    இந்த ஒரு ஷாட்ல மட்டும் நடிச்சிக்கிறேன். அப்புறம் உங்க சைக்கிளைத் தந்துடறேன்னு சொன்னாராம். அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரர் தான் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு. பின்னாளில் அவரு இயக்கத்தில் எம்ஜிஆர் நடிச்ச படம் பெற்றால்தான் பிள்ளையா.

    MGR டிரஸ்: எம்ஜிஆர் வாய்ப்பு தேடி வந்தபோது அவருக்கு 2 வேட்டி, 2 சட்டை. ஒரு பட்டாபட்டிதான். அவரு டிரஸ்சைத் துவைச்சிக் காயப்போடுவாரு. அந்தக் காலத்துல இஸ்திரி பெட்டி எல்லாம் அவருக்கிட்ட இல்ல. அதனால சொம்புல சுடுதண்ணீர் வச்சி அதைக் கொண்டு டிரஸ்சை தேய்ச்சிப் போட்டுக்கிட்டு வாய்ப்ப தேடி வருவாரு.

    அப்போ ஒரு பஸ்ஸ்டாண்டுல ஐயா பசி வயிற்றைக்கிள்ளுது. 3 நாளாச்சுன்னு ஒரு குடும்பம் கேட்கும்போது தன்னிடம் பஸ்சுக்காக வச்சிருந்த 7 ரூபாய்ல 3 ரூபாயை அவங்களுக்குக் கொடுத்து பசியாற்றினார். இருக்கும்போது கொடுக்குறது பெரிய விஷயம் அல்ல. இல்லாதபோதும் கொடுக்குறதுதான் பெரிய விஷயம்.

    அப்பவே எம்ஜிஆருக்குள்ள அந்தக் கொடை வள்ளல் குணம் இருந்துருக்கு. எம்ஜிஆருக்கு 2 சம்சாரம். முதல் சம்சாரம் 2 வருஷத்துல செத்துப் போயிடுச்சு. 19 வயசுல கல்யாணம் பண்ணினாரு. 2 வருஷத்துல பொண்டாட்டி செத்துப் போயிடுச்சு. சோறு போட முடியல. வசதியில்ல. இன்னொரு அம்மாவைக் கல்யாணம் பண்றாங்க.

    எங்கவீட்டுப்பிள்ளை: 18 வயசுல டிபி நோயாளி. பொண்டாட்டியை சைக்கிள் ரிக்ஷாவுல உட்கார வச்சி மைலாப்பூர் ஆஸ்பத்திரி வரை 5 கிமீ. நடந்து போவாரு. அப்படி எல்லாம் போய் வைத்தியம் பார்த்தாரு. இப்படி எல்லாம் போராடி முதன் முதலா 54ல மலைக்கள்ளன் ஹிட்டாச்சு. அலிபாபா, மதுரை வீரன், எங்கவீட்டுப்பிள்ளை ஹிட்டாச்சு. நாடோடி மன்னன் சொந்தமா எடுத்து ஹிட்டாச்சு. அப்புறம் நாட்டையே பிடிச்சிட்டாரு. அதாவது வள்ளுவர் என்ன சொல்றாரு… ‘அளவுகடந்த துன்பத்தைத் தாங்குறவன் ஒருநாள் உச்சம் தொடுவான்’.

    முதல் அமைச்சர்: ‘ஏன்டா கஷ்டம் வருது’ன்னு நினைக்காதீங்க. கடவுள் உன்னை சோதிக்கிறாருன்னா ஒருநாள் பெரிய ஆளா ஆக்குவாருன்னு அர்த்தம். எப்பவுமே தாமரைப்பூ மாதிரி வாழ முடியாது. துன்பம் ஜாஸ்தி வந்தா ஒரு சோதனை நம்ம பெரிய ஆளா வருவோம். அப்படி தொடர்ந்து துன்பத்தை சந்தித்து வந்த எம்ஜிஆர் நாட்டின் முதல் அமைச்சர் ஆகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • கங்குவா தோல்வியால் மாமனாரின் பேச்சையே மீறிய ஜோதிகா… வைரலாகும் வீடியோ!..

    Kanguva: கங்குவா படத்தின் தோல்வியை தொடர்ந்து சூர்யா குடும்பம் மொத்தமாக மாறி இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

    நடிகர் சூர்யா தன்னுடைய மொத்த குடும்பத்துடன் மும்பை பக்கம் குடிபெயர்ந்தார். ஜோதிகாவின் அப்பா அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த மாற்றம் என கூறப்பட்டாலும் சூர்யாவின் பாலிவுட் கனவுக்காக தான் இந்த முடிவு என தகவல்கள் வெளியானது.

    இதையும் படிங்க: சமரச பேச்சுவார்த்தை!.. நேரில் ஆஜரான ஜெயம் ரவி-ஆர்த்தி ரவி?!… மீண்டும் இணையுமா இந்த ஜோடி?…

    எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின்னர் கோலிவுட்டில் நடிகர் சூர்யா பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். அது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    தொடர்ச்சியாக பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வந்தவருக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் கர்ணன் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அப்படத்தை பிரபல இயக்குனர் ஓம்பிரகாஷ் இயக்க இருந்தார். ஆனால் தற்போது கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் சூர்யாவை வைத்து இந்த படத்தை இயக்க அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நடிகர் சூர்யா சமீப காலமாக கோயில்களில் அதிகமாக காணப்படுகிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ஜோதிகாவும் அடிக்கடி கோவில்களை விசிட் அடித்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை ஜோதிகா கோயில்களுக்கு செலவு செய்ததற்கு பதில் மருத்துவமனைகளை கட்டலாம் என பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.

    இது மட்டுமில்லாமல் நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் திருப்பதி குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏழை ஒருவன் கஷ்டப்பட்டு காடுகளை சுற்றி கோயிலுக்குள் வந்தால் அவனை துரத்தி விடுகின்றனர்.

    இதையும் படிங்க: புஷ்பா 2 நிகழ்ச்சியில் பொங்கிய தேவி ஸ்ரீ!.. எதுக்கு அப்படி பேசினாரு?!.. தயாரிப்பாளர் விளக்கம்..!

    ஆனால் பணக்காரன் ஒருவன் மனைவிக்கு தெரியாமல் குமரியை அழைத்துக் கொண்டு கெஸ்ட் ஹவுஸில் ரூம் எடுத்து நைட்டெல்லாம் சரக்கடித்து, சந்தோஷமாக இருந்து குளிக்காமல் கோயிலுக்கு வந்தால் அவனுக்கு கும்ப மரியாதை செய்கின்றனர் எனப் பேசி இருக்கிறார். தற்போது சிவகுமாரின் இந்த வீடியோவுடன் ஜோதிகா கோயிலுக்கு செல்லும் வீடியோக்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    வீடியோவிற்கு: https://x.com/Senthil_TNBJP/status/1861792088947318825

  • காசு விஷயத்துல சூர்யாவோட அப்பா என்ன மாதிரி ஆள் தெரியுமா?.. கஜினி பட கதையை சொன்ன தயாரிப்பாளர்!..

    பழம்பெரும் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் காசு விஷயத்தில் ரொம்பவே கறாரான ஆள் என்பதை இயக்குனர் ஏ.எல். விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான அழகப்பன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது சிவகுமார் பற்றி கூறியுள்ளார்.

    எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே இளம் நடிகராக அறிமுகமான சிவகுமார் பல படங்களில் முருகனாகவும் கிருஷ்ணராகவும் வேடமிட்டு நடித்துள்ளார். சிந்துபைரவி திரைப்படம் சிவகுமாருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

    இதையும் படிங்க: பிரபாஸை பார்த்து விஜய் கத்துக்கணும்!.. கல்கி படத்துக்காக ரெபல் ஸ்டார் பண்ணது என்ன தெரியுமா?..

    பத்ரகாளி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் சிவகுமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளன. சினிமாவை விட்டு விலகி பேச்சாளராக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சொற்பொழிவுகளை ஆற்றி வரும் சிவகுமார் தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாற்றியுள்ளார்.

    கஜினி பட சமயத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு 80 லட்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. அந்த பணத்தை கொடுத்துவிட்டு படத்தின் ஹிந்தி ரைட்ஸ் உரிமையை காத்து வாங்கிக் கொள்ளுங்கள் படம் பெரிய அளவில் போகும் உங்க பையன் சூர்யாவும் பெரிய ஆளா ஆகிடுவான்னு கூறினேன். ஆனால் அவர், ”அழகப்பா பணம் வீட்டுக்குள்ள வரணும் வெளியே போகக்கூடாது” என்றார்.

    இதையும் படிங்க: பிரபாஸை பார்த்து விஜய் கத்துக்கணும்!.. கல்கி படத்துக்காக ரெபல் ஸ்டார் பண்ணது என்ன தெரியுமா?..

    அந்த படத்தை சிரஞ்சீவி மச்சான் அல்லு அரவிந்த் வாங்கி வெளியிட்டார். அவருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. சிவகுமாருக்கு பேரு புகழ் எல்லாம் கிடைத்தது. அது அவரோட பாலிசி, அந்த அளவுக்கு சிரமப்பட்டு சினிமாவுக்குள் வந்தவர் அவர். அதானால், தான் தன்னிடம் இருந்து பணம் வெளியே போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என கூறியுள்ளார்.

  • நீச்சல் தெரியாமல் கடலில் சிக்கிக்கொண்ட ரஜினி… பதறித்துடித்த படக்குழு… பின்னர் என்ன ஆனது தெரியுமா?

    Rajinikanth: பொதுவாக ரஜினி எப்பையுமே தன்னுடைய படத்துக்கு அதீத உழைப்பை கொடுப்பார். தனக்கு தெரிகிறதோ இல்லையோ அந்த விஷயத்தினை தைரியமாக செய்து அசத்திவிடுவார். ஆனால்  அது பல சமயங்களில் அவர் உயிருக்கே உலைக்கு வைக்கும் நிலைக்கும் சென்றுள்ளது.

    இப்படித்தான் ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா இணைந்து நடித்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி. இப்படத்தினை எஸ் பி முத்துராமன் இருப்பார். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரஜினிகாந்த் கேரியரில் முக்கிய இடம் பிடித்தது.

    இதையும் படிங்க: ஒரு சீனுக்கு இவ்வளவு வசனமா?!.. ஆள விடுங்க!.. படப்பிடிப்பிலிருந்து மாயமான ரஜினி…

    இப்படத்தின் ஷூட்டிங்கில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்ததாம். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் ஒரு பாறையில் நின்று சிவகுமாரும் ரஜினிகாந்த்தும் பேசுவது போல ஒரு காட்சி படமாகி கொண்டிருந்தது.  அங்கிருந்த சிலர் ரொம்ப நேரம் இருக்க சொல்லாதீங்க தண்ணி மேலே வந்து விடும் என எச்சரித்து விட்டு சென்றார்களாம்.

    ஆனால் படக்குழு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சூட்டிங் நடத்தி இருக்கிறார்கள். நேரம் ஆக ஆக மேலே ஏறிய தண்ணி ஒரு கட்டத்தில் பெரிய அலையாக வந்து ரஜினிகாந்த் மற்றும் சிவகுமாரை அடித்து உள்ளே இழுத்து சென்றது. இதனால் படக்குழு ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டனர். இதில் ரஜினிக்கு சுத்தமாக நீச்சலே தெரியாது என்பதால் அவரின் நிலை குறித்து படக்குழுவுக்கு பயமே வந்து விட்டதாம்.

    இதையும் படிங்க: அண்ணனுக்காக சூப்பர்ஸ்டார் படத்தையே ஸ்டாப் பண்ண அட்லீ!… டைட்டில் தாங்க மாஸ்…

    நல்ல வேலையாக அங்கிருந்த மீனவர்கள் ஒரு சிலர் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து சிவகுமார் மற்றும் ரஜினியை தேடிப் பிடித்து வெளியில் இழுத்து வந்த கரையில் போட்டனர். இதில் ரஜினி நிறைய தண்ணீர் கொடுத்ததால் மயக்கமாக்கி விட்டாராம். பட குழு அழுது கொண்டே அவருக்கு முதலுதவி செய்து அவர்  கண் திறந்த உடன் தான் நிம்மதி பெருமூச்சு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

  • இது உருப்படாத தொழில்!.. போய் படிக்குற வேலைய பாருடா!.. மனோபாலாவிடம் கத்திய சிவக்குமார்!

    சினிமாவில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் நடிகர்கள் நிறைய பேர் சென்னை வருவது உண்டு. நிறைய கஷ்டப்படுவார்கள். அவர்கள் எல்லாருக்கும் அந்தக் கனவு நனவாகி விடாது. ஒரு சிலருக்குத் தான் அந்த யோகம் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகரும், இயக்குனருமான மனோபாலா. அவர் தனது சினிமா உலகில் நுழைந்த சுவாரசியமான அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

    எனக்கு ஆரம்பத்தில் சினிமாவிலும், ஓவியத்திலும் தான் ஆர்வம். நான் சிறுவயதில் இருந்தே டிராயிங் நல்லா வரைவேன். அதனால எனக்கு சென்னை ஆர்ட்ஸ் காலேஜ்ல படிக்க ஆசை. அங்கு 5 நாள் தேர்வு நடந்தது. அதில் நான் செலக்ட் ஆனேன். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. காலேஜ் சேர்ந்ததும் நடிகர் சிவகுமாரும் பெரிய ஓவியர்னு கேள்விப்பட்டு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். அவரை நேரில் போய் பார்த்தேன்.

    Manobala, Kamal
    Manobala, Kamal

    அப்போது சிவக்குமார், இங்க வந்து படிக்க வந்துருக்க… இது உருப்படாத தொழில். போய் படிடா… இந்தத் தொழிலுக்கு வந்துருக்கேன்னாரு. நானே தொழிலை மாத்திட்டேன். அவரு எனக்கு அட்வைஸ் பண்ணினாரு. ஆனாலும் மனசு கேட்கல. நான் 5 வருஷம் அங்கே போய் படிச்சேன். சாயங்காலம் சிவகுமாரைப் போய் பார்ப்பேன். இடையில கமல்ஹாசனை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.

    என்னோட காலேஜ்ல படிச்ச பையன் கலை. அவனோட அப்பா பெரிய மோல்டர். அதனால சூட்டிங்லாம் கூட்டிட்டுப் போவாங்க. அப்போ சூரியகாந்தி படத்தோட சூட்டிங் நடந்தது. அங்கு தங்கப்பன் மாஸ்டர் சாங் எடுத்துக்கிட்டு இருக்காரு. ஜெயலலிதா மேடம் நடிச்சிக்கிட்டு இருக்காங்க. அங்கு தங்கப்பன் மாஸ்டரிடம் வேலை பார்க்குற ஒருத்தர் இருந்தாரு. அவர் தான் கமல்ஹாசன். அவருக்கிட்ட தொடர்பு கிடைச்சது. கமல் நடிக்க ஆரம்பிச்சிட்டாரு.

    பாலசந்தரின் எல்லா படங்களையும் பக்கத்தில் இருந்து அவர் டைரக்ஷன் பண்ணியதைப் பார்த்தேன். பெயிண்டிங் படிச்சி ஆர்ட் டைரக்டரா வரணும்னு நினைச்ச எனக்கு பாலசந்தரைப் பார்த்ததும் டைரக்டரா ஆகணும்னு தோணுச்சு. 16 வயதினிலே படத்தையும், முள்ளும் மலரும் படத்தையும் பார்க்கும் போது யாரிடம் சேர்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் ஒருநாள் கமலே என்னை பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

     

  • செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

    தனது பல ஆண்டுகால நண்பர் சால்வை அணிவிக்க வந்த போது அவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது போல சால்வையை பிடுங்கி கோபத்துடன் சிவகுமார் தூக்கி எறிந்தது பெரும் பஞ்சாயத்தை கூட்டியது.

    அந்த நபர் நெருங்கிய நண்பராக இருந்தாலும், பொதுவெளியில் சிவகுமார் செய்தது தவறு கிடையாது என பிரச்சனை கிளம்பிய நிலையில், அந்த நண்பருடன் இணைந்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பும் கேட்டிருந்தார் சிவகுமார்.

    இதையும் படிங்க: வேட்டையன் வரார் வழிவிடுங்கோ!.. அந்த கெட்டப்பில் வெளியான ரஜினிகாந்த் வீடியோ.. செம வைரல்!..

    இதே போல செல்ஃபி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்ட போது அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து வீடியோ போட்டிருக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சாமானியர்கள் என்றால் சிவகுமாருக்கு இளக்காரம் போல என ப்ளூ சட்டை மாறன் புதிய ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.

    சூர்யா மற்றும் கார்த்தியின் அப்பாவான சிவகுமார் பலருக்கு அறிவுரை வழங்கி வரும் நல்ல மரியாதையான இடத்தில் இருக்கும் போது கோபம் தான் சத்ரு என்பதை கூட அவர் கற்றுக்கொள்ளவில்லையே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு!.. ஒருவழியா ஓடிடியில் ரிலீஸான ஆன்டி இண்டியன்!

    ”அந்த செல்போன் தம்பியும், உங்கள் நண்பரும் சாமான்யர்கள். அதனால்தான் இப்படி தட்டி விடுகிறீர்கள். இதையே ஒரு அரசியல்வாதி, தொழிலதிபர் அல்லது பிரபல நடிகர் மற்றும் அவரது குடும்பத்தார் செய்திருந்தால் தட்டி விட்டிருப்பீர்களா?  ஆக.. பணக்காரன், பாமரன் எனும் பேதம் பார்ப்பதே இதற்கு முக்கிய காரணம்.” என ப்ளூ சட்டை மாறன் சிவகுமார் தான் இப்போதைக்கு கிடைத்த ஒரே கன்டென்ட் என ரவுண்டு கட்டத் தொடங்கி விட்டார்.

  • யோகா, தியானம்லாம் பண்ணியும் கோபம் குறையலையேப்பா! சிவகுமாரை பங்கமா கலாய்த்த பிரபலம்!..

    காரைக்குடியில் கரு. பழனியப்பன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்ற நடிகர் சிவகுமார் தனக்கு சால்வை அணிவிக்க வந்த முதியவரை பார்த்து கடுப்பாகி அவர் கையில் வைத்திருந்த சால்வையை தூக்கி வீசி எறிந்த வீடியோ வைரலான நிலையில், சிவகுமாருக்கு ஏன் இவ்வளவு கோபம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களுடன் நடித்து வந்த சிவகுமார் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு சொற்பொழிவு மற்றும் அறிவுரைகள் வழங்குவது என தனது துறையை மாற்றிக் கொண்டார்.

    இதையும் படிங்க: அய்யய்யோ ஆளவிடுங்க!.. எனக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் சம்மந்தமே இல்லை!.. அலறியடித்த அமீர்!

    தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக மாற்றிய நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

    ஏற்கனவே செல்ஃபி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை கோபத்தில் சிவகுமார் தூக்கி எறிந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் இவரை கிண்டல் செய்து வந்தனர்.

    இதையும் படிங்க: கோலிவுட்ல ஒரு கேம் ஆஃப் த்ரோன்ஸா?.. விஷுவல்ஸ் மிரட்டுதே!.. சிம்பு புது வீடியோ பார்த்தீங்களா? ..

    இந்நிலையில், யோகா தியானம் எல்லாம் செய்யும் சிவகுமார் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு ட்வீட் போட்டு அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.

    “யோகா கற்றுக்கொண்டால் மனம் அமைதியாகும். கோபம் வராது.” என பதிவிட்டு சிவகுமார் யோகா செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வம்பிழுத்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் சூர்யா ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.