Tag: தனுஷ்

  • இன்னும் அதே மரமா?.. 11 வருஷமா 3 நாளில் 30 கோடி.. தனுஷ் ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்!..

    இன்னும் அதே மரமா?.. 11 வருஷமா 3 நாளில் 30 கோடி.. தனுஷ் ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்!..

    கடந்த 2015ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்தி நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம் 3 நாளில் 30 கோடி வசூலை ஈட்டியதை கொண்டாடி தனுஷ் போட்ட ட்வீட்டை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ். ரவிகுமார், எம்.எஸ். பாஸ்கர், கருணாஸ் நடித்த கர திரைப்படமும் 3 நாளில் 30 கோடி வசூலை அள்ள போராடி வருகிறது.

    தனுஷின் கர திரைப்படம் கிராமத்து ஹாலிவுட் படம் என்றெல்லாம் பில்டப் விட்டார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ரொம்பவே போர் அடிக்கிறது என போர் தொழில் இயக்குநரை டேமேஜ் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனுஷின் 11 வருட பழைய ட்வீட்டை போட்டு இன்னமும் அதே மரமா என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். தனுஷ் கண்டிப்பாக இந்த பிரச்னைகளை அடுத்த படத்தில் சரி செய்து கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்து வரும் நிலையில், அந்த படம் கண்டிப்பாக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர்.

  • ’29’ படத்துல தனுஷ் நடிச்சிருந்தா அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கிடைச்சிருக்கும்!.. ரத்னகுமார் பளிச்!..

    ’29’ படத்துல தனுஷ் நடிச்சிருந்தா அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கிடைச்சிருக்கும்!.. ரத்னகுமார் பளிச்!..

    தனுஷ் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், சமீபத்தில் இயக்குநர் ரத்னகுமார் அளித்த பேட்டியில் ‘29’ படத்தில் தனுஷ் சார் நடித்திருந்தால் நிச்சயமாக இது அவரோட படமாக சூப்பராக வந்திருக்கும் என்று பேசியுள்ளார்.

    தனுஷ் நடித்த கர படம் வெளியாகி 3 நாட்களில் வாஷ் அவுட் என ரிசல்ட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் ஏன் ஒவ்வொரு ஊருக்கு சென்று சோகமான பிரச்னைகளை மட்டுமே படமாக்கி வருகிறார் என கலாய்த்து வருகின்றனர்.

    ரசிகர்கள் கொண்டாடும் படங்களை தனுஷ் எடுக்க தவறி வருவதாகவும் ஃபாஸ்ட் ஃபுட் கடை, இட்லி கடை, ஆந்திரா மெஸ் என ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை தனுஷுக்கு இருந்த நிலையில், தொடர்ந்து தனது படங்களில் அதனை வலிய திணித்து வருகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

    மேயாத மான் படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த ரத்னகுமார், அமலா பாலை நிர்வாணமாக நடிக்க வைத்த ஆடை படத்திற்கு பிறகு பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் அவர் சந்தானத்தை வைத்து இயக்கிய குலு குலு திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில், பல வருடங்கள் கழித்து 29 படத்தை இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் முதலில் தனுஷ் சார் தான் நடித்திருக்க வேண்டும். அவரிடம் கதை சொன்னேன். ஆனால், இப்போது இருக்கும் சூழலில் இந்த படம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் பண்ணியிருந்தால் இன்னமும் சூப்பரான படமாக வந்திருக்கும் என்று பேசியுள்ளார்.

  • பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கர. தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை இதுதான். 90களில் ஈராக், குவைத் போர் நடந்தது. இந்த சமயத்தில் இன்டர்நேஷனல் மில்டரி போய் போரை முடித்து வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நடக்குற கதை. அப்போ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நடக்குற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ஹீரோ தனுஷ் திருட்டு வேலையில் இறங்கி மாட்டிக் கொள்கிறார். அதிகாரியை அடித்துவிட்டு தப்பி விடுகிறார். காதலியை அழைத்து ஆந்திரா போய் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார்.

    கொஞ்சநாளில் அவருக்கே சலிப்பு வருகிறது. நாமே ஒரு தொழில் செய்யலாம்னு நினைத்து ஊரில் ஒரு ஓட்டல் வைக்கலாம்னு வர்றாரு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுல இவரது டிராக்டர் ஓடாம இருக்கு. வங்கியில் டியூ கட்ட வேண்டி இருக்கு. சொத்தை அடமானம் வைத்துதான் கடன் வாங்கி இருக்காங்க. அதனால் சொத்தை வங்கி ஜப்தி செய்கிறது. பெரிய தொகை தேவைப்படுகிறது. அப்போ தான் சொத்தை மீட்க முடியும். அதனால ஹீரோ மறுபடியும் கொள்ளை அடிக்கிறார்.

    இப்போ அதே அதிகாரி மீண்டும் பிடிக்கிறார். அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஒரு பீரியட் பிலிம். கதைக்கு சுவாரசியமான திரைக்கதை இல்லை. வங்கி கொள்ளை அடிப்பதுதான் கதை. வங்கியைக் கொள்ளை தான் அடிக்கப் போறாங்கன்னு உயர் அதிகாரிக்குத் தெரிந்தபிறகும் அவரது நடவடிக்கை பெரிதாக இல்லை. சின்ன விவசாயிகள் கூட வீட்டு வீட்டுக்கு டிராக்டர் வாங்கி வைப்பது எல்லாம் அபத்தம். வங்கி அதிகாரின்னா வசூல் பண்ணித்தானே ஆகணும். அவரைக் கெட்டவனா காட்டுறாங்க.

    கந்து வட்டிக்காரன் மாதிரி காட்டுறாங்க. சூரஜ் வெஞ்சனமூர்த்தி சிரிப்பு போலீஸ் அதிகாரியாகத் தான் காட்டுறாங்க. வில்லன் மாதிரி இல்லை. படம் டெட் ஸ்லோவா இருக்கு. படத்தைப் பார்க்க போக முக்கிய காரணம் தனுஷைத் தாண்டி போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவோட படம். நல்லா இருக்கும்னு நினைச்சா இது விறுவிறுப்பு இல்லாம எப்படா முடியும்கற மாதிரி இருந்தது. ரொம்ப போராகிப் போச்சு என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.

  • தனுஷின் ‘கர’ படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா?.. டைம் வேஸ்ட்டா?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!..

    தனுஷின் ‘கர’ படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா?.. டைம் வேஸ்ட்டா?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!..

    தனுஷ் நடித்துள்ள படம் என்பதை விட போர் தொழில் பட இயக்குநர் படம் என்கிற நம்பிக்கையில் தான் முதல் நாளில் தனுஷின் ‘கர’ படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்றனர். ராயன், இட்லி கடை, தேரே இஷ்க் மெயின் என தனுஷ் தொடர்ந்து வச்சு செய்து வரும் நிலையில், இந்த முறையும் ரசிகர்களை தலைவலிக்க செய்தே அனுப்புகிறார்.

    ராமநாதபுரத்தில் ஈராக் போரின் போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நடந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு கதையை தனுஷுக்கு உருவாக்கியுள்ளார் விக்னேஷ் ராஜா.

    படத்தில் மமிதா பைஜுவே ஒரு 3 சீனுக்குத்தான் அதிக பட்சம் வருகிறார். இட்லி கடை படத்தில் தனுஷ் ஊருக்கு வந்த உடனே அப்பா ராஜ்கிரண், அம்மா இறந்துவிடுவார்கள். அதே போலத்தான் இந்த படத்திலும் தனுஷ் ஊருக்கு வந்த உடனே அப்பா கே.எஸ். ரவிக்குமார் இறந்துவிடுகிறார்.

    போலீஸ் ஸ்டேஷனிலேயே சுராஜ் வெஞ்சரமூடுவை அடித்துவிட்டு தனுஷ் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அவரை துரத்தி பிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன. வங்கி மேனேஜராக வரும் ஜெயராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

    வேலியே பயிரை மேயும் கதையாக பேங்க் மேனேஜரே பக்கா திருடனாக இருக்க, திருட்டுத் தொழில் செய்து வரும் தனுஷ் அவரது வலையில் சிக்குகிறாரா? அல்லது தனுஷ் வலையில் ஜெயராம் சிக்குகிறாரா? போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சரமூடு தனுஷை பழி வாங்கினாரா? என்பது தான் படத்தின் கதை.

    ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசை தரமாக உள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கூரை வீடுகளும், ராமநாதபுரம் வறட்சியும் கண்களை கனக்க வைக்கிறது.

    கருணாஸ் எல்லாம் தனக்கு விருது கிடைக்கும் என்றார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. படத்தில் வரும் அந்த கல்ட் கிளாசிக் படத்தின் காட்சி ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

    கர படத்தின் கதையை ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்லாமல், எங்கெங்கோ கொண்டு சென்று கடைசியில், வங்கியில் இருந்து பணத்தை திருடி வங்கிகளிலேயே பணத்தைக் கட்டி மக்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும் கரசாமியாக மாறுகிறார் தனுஷ்.

    கர – கரை சேரவில்லை!

    ரேட்டிங்: 2.25/5.

  • கர படம் தரம்!.. சூப்பர் வில்லேஜ் திரில்லர்!.. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்..

    கர படம் தரம்!.. சூப்பர் வில்லேஜ் திரில்லர்!.. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்..

    போர்த்தொழில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று ரிலிஸாகியுள்ள திரைப்படம் கர. இப்படத்தின் முதல் காட்சி முடிந்துவிட்ட நிலையில், படம் பார்த்த பலரும் படம் எப்படி இருக்குது என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது.
    படம் பார்த்த எல்லோருமே படம் நன்றாக இருப்பதாகவும்,ஒரு நல்ல வில்லேஜ் திரில்லராக கர திரைப்படம் உருவாகியிருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும், விக்னேஷ் ராஜா சிறப்பாக இயக்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்..

    இப்படம் பார்த்த ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் ’Intense rural heist thriller படமாக கர உருவாகியிருக்கிறது. தனுஷ் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், மமித பைஜூ ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், ஜிவி பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். விஸ்வல் அனைத்துமே நன்றாக இருக்கிறாது. முதல் 15 நிமிட காட்சி மிகவும் சிறப்பு.. அடுத்து படம் ஒரு எமோஷனல் கதைக்கு செல்கிறது.. அதன்பின் படம் திரில்லருக்கு மாறுகிறது. இடைவேளை காட்சி மிகவும் சிறப்பு..

    படத்தின் இரண்டாம் பாதி என்கேஜாக செல்கிறது. வழக்கம்போல் தனுஷ் படத்தை தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் சுராஜ் வஞ்சரமுடு, ஜெயராம் ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள். மிக்கி மௌஸ் கேமில் வருவது போல தனுசை துரத்தும் போலீஸ் கதை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அங்கங்கே காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை தரம்.. ஆர்ட் டைரக்சன் சிறப்பாக இருக்கிறது.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    மற்றொருவரோ ‘ முதல் 15 நிமிட காட்சி, இடைவேளையில் வரும் கொள்ளை காட்சி, கிளைமாக்ஸுக்கு முன் வரும் காட்சி தியேட்டரில் பிளாஸ்டாக இருக்கிறது. வழக்கம்போல் தனுஷ் அசத்தியிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், சண்டை காட்சிகள் எல்லாமே தரமாக இருக்கிறது படம் வின்னர்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    கர படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இந்த படம் கண்டிப்பாக தனுஷ் ரசிகர்களை கவர்வதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • அந்த மனசு தான் கடவுள்.. இயக்குநர் மனைவியை கண்கலங்க வைத்த தனுஷ்

    அந்த மனசு தான் கடவுள்.. இயக்குநர் மனைவியை கண்கலங்க வைத்த தனுஷ்

    தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கர. போர் தொழில் வெற்றி படத்தை இயக்கிய விக்னேஷ் ரஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, ஜெயராம், கே.ஸ்.ரவிகுமார், கருணாஸ் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது.

    அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் ராஜாவின் மனைவியும் கலந்துகொண்டார். அப்போது, தனது கணவர் இயக்கும் புதிய படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டி, கரசாமி என்ற பெயரை 1001 முறை அவர் எழுதிய தகவல் மேடையில் பகிரப்பட்டது. இதைக்கேட்டு அரங்கமே நெகிழ்ந்த நிலையில், மைக்கைப் பிடித்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, குறுக்கிட்டு ஒரு சிறிய திருத்தத்தைச் செய்தார். என் மனைவி கரசாமி என்று எழுதியுள்ளார். ஆனால், படத்தின் உண்மையான பெயர் கர என்று அவர் சிரித்தபடி கூறினார்.

    உடனே தனுஷ் இது குறித்து மேடையில் பேசியபோது, அவங்க எழுதுனது வெறும் பேனா, பேப்பர்ல தான். ஆனால் தன் கணவன் எப்படியாவது ஜெயிக்கணும், அவர் படம் பெரிய வெற்றி அடையணும்னு நினைச்சு உருகி உருகி எழுதுனாங்க பாத்தீங்களா.. அந்த மனசுதானே கடவுள். எண்ணம் போல் வாழ்க்கை சிஸ்டர் என்று தனுஷ் பேசினார்.
    தனுஷ் கூறியதை கேட்டதும் விக்னேஷ் ராஜா மனைவி கண் கலங்கிவிட்டார். இந்த சம்பவம் விழாவில் வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

  • ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

    ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

    நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. விஜயின் அரசியல் குறித்து பலரும் பல விதமாக தங்களது கருத்துக்களை முன் வைத்த நிலையில் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியிடம் மைக்கை நீட்டி கேள்விக் கேட்க அவர் சொன்ன வார்த்தை வைரலாகி வருகிறது.

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி தனியாக போட்டியிட்டது. கடைசி வரை கூட்டணிக்கு முயன்றும் யாரும் வரவில்லை. திமுக பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வைத்திருந்தது. ஆனாலும், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி திமுக மற்றும் அதிமுக என்ற பாரம்பரிய போட்டிக்கு மூன்றாவது பெரிய போட்டியாக மாறியது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே விஜய்க்கு அதிக ஆதரவு காணப்பட்ட நிலையில் அவரது ரசிகர் மன்றம் அரசியல் அமைப்பாக மாறி வலுவான அடிப்படை உருவாக்கியுள்ளது.

    தேர்தலுக்குப் பிறகு, இது ஆரம்பமே என்று தெரிவித்துள்ள விஜய் உண்மையில் ஆட்சியை பிடிப்பாரா அல்லது கிங்மேக்கராக இருப்பாரா? என்பது வரும் தேர்தல் முடிவுகளால் தான் தெளிவாகும்.

    இந்நிலையில், தனுஷ் படத்தில் நடித்து வரும் மம்மூட்டி படப்பிடிப்பு வேலைக்காக சென்னை வந்திருந்த நிலையில், செய்தியாளர்கள், தமிழக தேர்தல் சூழல், கேரள அரசியல் நிலைமை மற்றும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்மூட்டி, “ஒண்ணும் தெரியாது” என்று சுருக்கமாக கூறி, சிரித்தபடியே அங்கிருந்து விலகினார்.

    அவரின் இந்த குறுகிய பதில் எந்தவித அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாததாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்களுடன் பரவி வருகிறது. சிலர் இதை நேரடியாக கருத்து தெரிவிக்காமல் நுணுக்கமாகத் தவிர்த்த பதிலாகக் கருத, மற்றவர்கள் விஜயின் அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பாத அணுகுமுறையாகவும் பார்க்கின்றனர். விஜய்க்கு ஒண்ணும் தெரியாது என மம்மூட்டி கூறிவிட்டார் என்றும் திமுகவினர் கிளப்பி வருகின்றனர்.

  • கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேவைக்காக தனுஷ் வங்கிகளில் கொள்ளையடிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது..

    அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ‘விக்னேஷ் ராஜா. நீங்கள் ஒரு ஜீனியஸ்’ என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக ஜனநாயகன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

    வருகிற 24-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் எனவும் அனேகமாக அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 29 அல்லது 30ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை, ஏப்ரல் 29 அல்லது 30-ல் ஜனநாயகன் வெளியாவது உறுதியானால் தனுஷின் கர திரைப்படம் அந்த படத்தோடு போட்டி போடுமா இல்லை ரிலீஸ் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அல்லது ஜனநாயகன் மே முதல் வாரத்தில் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறாது.

  • தனுஷுன் அடுத்த 4 படங்கள்!. இயக்குனர்கள் யார்?!. செம அப்டேட்!..

    தனுஷுன் அடுத்த 4 படங்கள்!. இயக்குனர்கள் யார்?!. செம அப்டேட்!..

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ச்சியாக காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. கமர்சியல் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் தனுஷ்..

    அதில் ஒரு படம்தான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவன் நடித்திருக்கும் கர. இந்த திரைப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே இது தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    கர திரைப்படம் தனுஷின் 54 வது திரைப்படமாகும். இந்நிலையில், தனுஷின் அடுத்த மூன்று படங்கள் என்ன, அந்த படங்களின் இயக்குனர் யார் என்கிற விவரத்தை பார்ப்போம்.. தனுஷின் 55வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்..

    தனுஷின் 56வது திரைப்படத்தை லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார். அதேபோல் தனுஷின் 57வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இது ஒரு சரித்திர கதையாகும். தனுஷ் இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இப்படம் உருவாகவுள்ளது. அடுத்த தனுஷின் 58 வது படமாக வெற்றிமாறன் வடசென்னை 2 இருக்கலாம் என கணிக்கப்படுகிறது..

  • போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கேன்.. ‘கர’ விழாவில் காலரை தூக்கிவிட்ட தனுஷ்!

    போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கேன்.. ‘கர’ விழாவில் காலரை தூக்கிவிட்ட தனுஷ்!

    நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ள கர திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தனுஷ் தனது வாழ்க்கை மற்றும் திரைப் பயணத்தை பற்றி வெளிப்படையாக பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான கர படத்தில் தனுஷுடன் மமிதா பைஜூ, கே. எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படம், ஒரு மனிதன் தனது கடந்த காலத்துடன் போராடி, குடும்பத்தையும் மக்களையும் காப்பாற்றும் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தனது போயஸ் கார்டன் வீட்டைப் பற்றி பேசிய தனுஷ், விமான நிலைய ஊழியர் ஒருவர் தன்னுடன் புகைப்படம் எடுக்க கேட்டதாக கூறினார். அந்த ஊழியர் யாரிடமும் பொதுவாக புகைப்படம் எடுக்க மாட்டார். ஆனால், தனுஷ் போயஸ் கார்டன் குறித்து பேசிய வார்த்தைகள் அவருடைய மகனுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக தெரிவித்தார். எனவே, அதை மோட்டிவேஷனாக எடுத்துக்கொள்வதா அல்லது வெறும் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்வதா என்பது அவரவர் விருப்பம் என்று தனுஷ் கூறினார்.

    அதைத் தொடர்ந்து, கர பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “தனுஷ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் போல இருந்தது. அவரது குழுவினர் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். படம் தொடங்குவதற்கு முன்பே திரையரங்கிற்கு வந்து அமர்ந்து, ஒரு காட்சியும் தவறாமல் பார்க்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமானால் சில விஷயங்களும், பத்து நிமிடம் தாமதமானால் பல விஷயங்களும் புரியாமல் போகலாம்” என்று கூறினார்.

    மேலும், படம் பார்த்த பிறகு தங்களது கருத்துக்களை பகிரலாம். ஆனால், படத்தின் கதை மற்றும் இடைவேளை காட்சிகளை வெளிப்படையாக வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.