Tag: நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்

  • டி ராஜேந்தரே பார்த்து பொறாமை படணும்!.. ஆல் ரவுண்டராக கலக்கும் தனுஷ்.. எவ்ளோ டெடிகேஷன்..

    நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் படு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இயக்கத்திலும் முழு கவனத்தை செலுத்தி வருகின்றார்.

    பவர் பாண்டி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக மாறிய தனுஷ் அதைத் தொடர்ந்து 7 வருடத்திற்கு பிறகு தன்னுடைய 50-வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தொடர்ந்து இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார்.

    இந்த திரைப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். இந்த திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

    தவான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிக்சர் நேற்று வெளியானது. இதில் நடிகர் ராஜ்கிரனுடன் தனுஷ் இருந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது. சினிமாவில் தொடர்ந்து பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் தனுஷ் ஆல் ரவுண்டராக இருந்து வருகின்றார். ஹீரோவாக அறிமுகமாகி பாடகராகி, எழுத்தாளராகி, தயாரிப்பாளராகி தற்போது இயக்குனராகவும் இருந்து வருகின்றார்.

    பெயருக்காக இல்லாமல் அனைத்து துறைகளிலும் தன்னை சிறந்த ஒரு நபராக காட்டி இருக்கின்றார் நடிகர் தனுஷ். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் இவர் கால் பதிக்கும் இடமெல்லாம் வெற்றியாக குவிந்து வருகின்றது. தமிழ் சினிமாவிலேயே டி ராஜேந்தர் அவருக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் நடிகர் தனுஷ் மட்டும் தான். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதில் முழு ஈடுபாடுடன் செய்யக்கூடிய ஒரு நடிகராக இருந்து வருகின்றார்.

    சமீபத்தில் இட்லி கடை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது டூப் போடாமல் சில காட்சிகளை எடுத்ததால் தனுசுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் சென்னை வந்து இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்த தனுஷ் மீண்டும் குபேரா திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்று இருக்கின்றார்.

    இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் நிலையில் அப்படத்தில் ஒரு பாடலையும் நடிகர் தனுஷ் பாடி கொடுத்திருக்கின்றாராம். தனக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலும் தனது படம் என்று வரும்போது அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு முழு ஈடுபாட்டுடன் அந்த வேலையை செய்து கொடுத்திருக்கின்றாராம் நடிகர் தனுஷ். இவரை அடுத்த டி ராஜேந்தர் என்றே நாம் சொல்லலாம் என சினிமா விமர்சனங்கள் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

  • அஜித்தால் தனுசுக்கு ஏற்பட்ட சிக்கல்.. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடின்ற மாதிரில்ல இருக்கு!

    நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களை ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள், மற்றொருபுறம் தனது இயக்கம் என இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தி வருகின்றார். இவர் கடைசியாக ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

    இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.

    இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கின்றது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷுக்கு ஒரு புதிய பிரச்சனை வந்திருக்கின்றது. அதுவும் நடிகர் அஜித்தின் திரைப்படங்களால் தான்.

    நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி வந்தார்கள். ஆனால் திடீரென்று படம் பொங்கல் ரேசிலிருந்து விலகியது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

    ஒருவேளை விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானால் அது தனுஷுக்கு சிக்கலாக அமையும். ஏனென்றால் அவர் இயங்கி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகின்றது. அது மட்டும் இல்லாமல் குபேரா திரைப்படத்தையும் பிப்ரவரி மாதம் தான் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக ஒரு புறம் தகவல் வெளியாகி இருக்கின்றது.

    விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானால் தனுஷின் குபேரா திரைப்படம் அடி வாங்கும். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு புறம் இருக்க தனுஷ் தற்போது நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் மாதம் அதாவது தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

    இதற்கிடையில் ஏப்ரல் மாதம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்துடன் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானால் நிச்சயம் இட்லி கடை திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றார் நடிகர் தனுஷ். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதை பொருத்து தனது படங்களின் ரிலீஸ் தேதியை அவர் மாற்றலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

  • எங்க கூடவே வம்புக்கு வந்தா எப்படிப்பா?.. விடாமுயற்சியால் திடீரென பிளானை மாத்திய தனுஷ்..

    விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் திடீரென்று தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியாகவில்லை என்ற அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற ஆங்கில திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் சரியாக வாங்காமல் படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

    இதனால் பிரேக் டவுன் படத்தை தயாரித்த பாராமென்ட் நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இந்த பிரச்சினை காரணமாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாமல் இருந்து வந்தது. இதற்கு இடையில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியிட்டு தேதியைக் கூட படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.

    அதன்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என்று கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள். இதனால் படக்குழுவினர் நேற்று விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலருடன் சேர்த்து படம் வெளியிட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது.

    தனுஷின் NEEK விலகல்: நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்துகின்றார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.

    இந்த திரைப்படம் ஒரு காதல் சப்ஜெக்ட் என்பதால் பிப்ரவரி மாதம் 7ம் தேதி படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருந்தார்கள். ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருப்பதால் தனுஷ் தனது படத்தின் தேதியை மாற்றுவதற்கு முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

    அதன்படி நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்தை வருகிற ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடுவதற்கு தனுஷ் முடிவு செய்து இருக்கின்றாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே தனுஷின் இட்லி கடை திரைப்படத்துடன் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் மோதுகின்றது.

    இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படமும் தனுஷின் NEEK திரைப்படத்துடன் வெளியாக இருப்பதால் தற்போது வெளியீடு தேதியை மாற்ற முடிவு செய்திருக்கின்றாராம் தனுஷ்.

  • நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்துக்கு வந்த முதல் ரிவ்யூ.. எஸ்.ஜே சூர்யா சொன்னத பாருங்க..!

    Actor Dhanush: ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு நடிகர் தனுஷ் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து ஒரு காதல் திரைப்படமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய காலத்தில் காதல் எப்படி இருக்கின்றது என்பதை எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் தனுஷ்.

    இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தானே தயாரிக்கவும் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.

    இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடல் யூட்யூபில் செம டிரெண்டிங்கில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக படத்தை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

    இப்படம் எப்போது வெளியாகும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கின்றது. அதுவும் இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் குறித்து நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

    அந்த பதிவு தற்போது இணையதளம் பக்கங்களில் வைரலாகி வருகின்றது. ‘நடிகரும் இயக்குனருமான தனுசுடன் சேர்ந்து நிலவுக்கு என்னுடைய என்மேல் கோபம் திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஒரு பொழுதுபோக்கான வேடிக்கையான இளம் தலைமுறைகளை கவரும் தனித்துவமான படம் இது.

    மேலும் தனுஷ் உங்களிடம் ஒரு கேள்வி ராயன் படத்திற்குப் பிறகு மிக பிசியாக இருந்த போதும் எப்படி உங்களால் இப்படி ஒரு அழகான படத்தை எடுக்க முடிந்தது. என்ன மாதிரியான இயக்கம். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

    மேலும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திற்கு முதல் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் 90% முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • NEEK படத்திலிருந்து வெளியான ‘புள்ள’ பாடல்!.. எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

    Actor Dhanush: தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். அதிலும் ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷுக்கு நிற்க கூட நேரமில்லை என்றே கூறலாம், அந்த அளவுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்திருக்கின்றார்.

    தனுஷ் லைன்அப்: ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரிக்கவும் செய்திருக்கின்றார். அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது.

    இது இரண்டுமே இவர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள். இது இல்லாமல் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

    மேலும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க போவதாக கூறப்பட்டு வருகின்றது. இது இல்லாமல் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் ஏகப்பட்ட திரைப்படங்களை கமிட் செய்து வைத்திருக்கின்றார் நடிகர் தனுஷ்.

    NEEK படம்: நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார். மேலும் அவருடன் இணைந்து அனிகா சுரேந்திரன், பிரியா, மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

    இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. அதிலும் முதலில் வெளியான கோல்டன் ஸ்பேரோ என்கின்ற பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது.

    புள்ள பாடல்: இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் எழுதியிருக்கும் ‘உன் கூட சேர்ந்தால் போதும் புள்ள’ என்கின்ற பாடல் வெளியாகி இருக்கின்றது. முதலாவது பாடல் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் துள்ளலாக இருந்த நிலையில், இரண்டாவது பாடல் காதலில் தோற்றவர்களுக்காக எழுதப்பட்டது போன்று இருந்தது. மூன்றாவதாக ஏண்டி என ஒரு காதல் பாடல் வெளியானது.

    அதனை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் பாடல் காதல் பிரிவுக்கு பிறகு மீண்டும் சேர வேண்டும் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பாடலும் நிச்சயம் மற்ற மூன்று பாடல்களை போல மிகப் பெரிய வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • மக்களுக்கே உன் மேல்தான் கோபம்.. இதுல நிலவுக்கா கோபம்? தனுஷை வெளுத்தெடுத்த பிரபலம்

    வெற்றிகரமாக டிராகன்: சமீபத்தில் தான் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படமும் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் ரிலீஸானது. டிராகன் திரைப்படம்தான் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் தனுஷையும் ஒரு விழா மேடையில் பங்கம் செய்திருக்கிறார். இதோ அவர் கூறியது:

    சமீபத்தில் அதுவும் ஒரு வாரத்திற்குள் ஒரு படம் பார்த்தேன். அந்த படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த தம்பி இயக்குனர் நடிகராகவும் இருக்கிறார். அவர் முகத்தில் அழகு என்பதை இல்லை, காலேஜ் மாணவர்கள் அத்தனை பேரும் திரையரங்குகளில் தான் குவிந்து கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. டிராகன் படத்தை பற்றி தான் சொல்கிறேன் .

    அது படமா?: இதோடு இன்னொரு படத்தையும் பார்த்தேன். அந்த படத்தில் ஒரு ஹீரோ. அதுவும் வேலை இல்லாத ஒரு ஹீரோ. அவருடைய அப்பா அம்மா அந்த ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். உடனே பெண்பார்க்க போகிறார்கள். பெண்ணை பார்ப்பதற்கு முன்பு வரை திருமணம் வேண்டாம் என்ற முடிவிலேயே அந்த ஹீரோ உட்கார திடீரென ஹீரோயின் இறங்கி வருகிறார்.

    ஹோட்டலில் சந்திப்பு: ஹீரோவை பார்த்ததும் ஹீரோயின் டேய் இங்க என்னடா பண்ற என கேட்க அதன் பிறகு தான் ஏற்கனவே இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அந்தப் பெண்ணை பார்த்ததும் ஹீரோவுக்கு கொஞ்சம் ஆசை வந்துவிட்டது .திருமணம் பண்ணிக்கலாம் என நினைக்கிறான். அடுத்த நாள் அந்த பெண்ணை ஹோட்டலில் சந்திக்கலாம் என நினைத்து ஹோட்டலுக்கு வரச் சொல்கிறான் .

    கலாச்சாரம் சீர் குழைவு: உடனே ஹோட்டலில் இருவரும் உட்கார்ந்தார்கள். இருவருக்கும் நடுவில் ஒரு பிராந்தி பாட்டில் .அதை அந்தப் பெண் தான் முதலில் திறந்து டம்ளரில் ஊற்றி கொடுக்கிறார் .அந்த ஹீரோ அதை வாங்கிக் கொள்கிறார் .இந்த பெண்ணும் அதை குடிக்கிறார். இந்த ஒரு கலாச்சாரம் அதுவும் நம் தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவில் நடக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி படித்தேன். மூன்று கல்லூரி மாணவிகள் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் .அவர்கள் செய்த அட்டூழியம் என அந்த செய்தியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் .

    மனம் நொந்து பேசுகிறேன்: ஒரு தாத்தாவாக மனம் நொந்து போய் இதை சொல்கிறேன் .இந்த குடும்பத்தை காப்பாற்றுகிறது பெண்கள்தான். தாய்மார்கள் தான். ஆம்பளை எக்கேடு கெட்டால் கூட பெண்கள் நல்ல முறையில் இருப்பதினால் தான் குடும்பம் நல்ல முறையில் வாழ்கிறது. ஆக ஒரு திருமணம் செய்யப் போகிற பெண் பிராந்தியை ஊற்றி டேய் குடிடா என சொல்லி இவளும் குடிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கிறார்கள் .

    இது எந்த பண்பாட்டை சேரும் .அப்புறம் என் மேல என்ன கோபம், என்ன கோபம்னு டைட்டிலில் வைத்தால் என்ன பிரயோஜனம். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் .அந்தப் படத்தை தான் நான் சொல்கிறேன் .டேய் மக்களுக்கே உன் மேல் தான் கோபம் .பண்ண படம் எல்லாம் அப்பன கிண்டல் பண்றது, அப்பன கேவலப்படுத்துவது. இதை பார்த்து வருகிற இளைஞர்கள் எல்லாரும் எப்படி ஒழுங்கா வருவார்கள் ?அதாவது கொஞ்சம் நகைச்சுவையாக ஏதாவது பண்ணலாம். ஆனால் சமுதாயம் கெட்டுப் போகிற அளவுக்கு தயவு செய்து வேண்டாம் என வேண்டுகோளை விடுக்கிறேன். நான் யாரு மேலையும் குற்றம் சொல்லவில்லை என கே ராஜன் அந்த மேடையில் பேசியிருந்தார்.

  • ஆடுனது ஒரு குத்தமாடா? NEEK பாடலால் பிரியங்கா மோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

    தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ரம்யா ரங்கநாதன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். முற்றிலும் இளைஞர்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இளைஞர்களுக்கு இடையேயான காதல், திருமணம், அவர்களுக்கு இடையில் இருக்கும் உறவுமுறை போன்றவைகளை மையப்படுத்தி இந்த படம் வெளியானது.

    இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இந்த படத்தில் அமைந்த கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த பாடலில் பிரியங்கா மோகன் நடனமாடி இருப்பார். அதுவும் ஐயர் வீட்டு மாமி போன்ற உடை அணிந்து வித்தியாசமான ஒரு காஸ்ட்யூமில் கலக்கல் நடனம் ஆடியிருப்பார் பிரியங்கா மோகன்.

    இந்த நிலையில் பாடலின் முழு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த பாடலுக்கான மீம்ஸும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பதிவிட்டு பின்னணியில் பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை பாடலை போட்டு ரசிகர்கள் பிரியங்கா மோகனின் நடனத்தை கிண்டல் செய்து வருகின்றனர். பிரியங்கா மோகனை பொறுத்தவரைக்கும் இதுவரை நடித்த படங்களில் பெரிதாக நடனம் ஆடியிருக்க மாட்டார்.

    அவர் ஆடி மிகப்பெரிய ஹிட்டான பாடல் என்றால் அது இந்த கோல்டன் ஸ்பேரோ பாடல்தான். ஆனால் நெட்டிசன்களுக்கு கிடைச்ச வரைக்கும் போதுமே. இந்த பாடலையும் பிரியங்கா மோகனின் நடனத்தையும் பட்டர்ஃப்ளை பாடலுக்கு சரியாக மேட்ச் செய்து கிண்டலடித்து இருக்கின்றனர். இந்த மீம்ஸ்தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

  • Trending: ‘தனியாளா தவிச்சாலும் இதுவே மேலு’.. ஹார்ட்ட மூடு!.. ரிலீசான 2 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் NEEK 2வது சிங்கிள்!..

    தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று இருக்கின்றது.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றார்.

    இதையும் படிங்க: ஐயப்பனை கொச்சைப்படுத்தல!.. இசைவாணிக்கு துணையா நாங்க இருக்கோம்?!.. அறிக்கை வெளியிட்ட இசைக்குழு!..

    அதுமட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

    இது மட்டும் இல்லாமல் ராயன் படத்தை இயக்கி முடித்ததற்கு பிறகு தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் கடந்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.

    dhanush neek single
    dhanush neek single

    இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது.  இப்படத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்கின்ற பாடல் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் இன்றைய தினம் வெளியாகி இருக்கின்றது. ஜிவி பிரகாஷ் இசையில் இந்த பாடல் லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகி இருக்கின்றது.

    ‘காதல் பெயிலா போச்சுடா’ என்ற பாடல் ஒய் திஸ் கொலவெறி மோடில் உருவாகி இருக்கின்றது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாடியிருக்கின்றார். சூப் சாங்காக உருவாகி இருக்கும் இப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதல் தோல்வியை மிகச் சிறப்பாக காட்டி இருக்கின்றனர் நடிகர் தனுஷ்.

    இதையும் படிங்க: சூர்யாவை விடாத கங்குவா ஜுரம்?!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!.. ஆனா இதுல அவரு தப்பிச்சுட்டாரு!..

    இந்த பாடல் வெளியாகி இரண்டு மணி நேரத்தில் டாப் 10 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கின்றது. ஒய் திஸ் கொலவெறி பாடல் எப்படி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததோ அதேபோல் காதல் பெயிலா போச்சுடா என்ற பாடலும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பாடல் வரிகளை நடிகர் தனுஷ் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வருகிறார்கள்.

  • சூப் சாங் ஸ்டைலில் களமிறங்கும் NEEK படத்தின் செகண்ட் சிங்கிள்!… அதுவும் எப்ப தெரியுமா?!…

    தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் தனது இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். கடைசியாக தனது 50 ஆவது படமான ராயன் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்தது.

    இதையும் படிங்க: பாலிவுட்டிலே டேரா போட்ட அட்லீ!.. அடுத்த படம் இந்த கான் நடிகருடனா?!.. அதிர்ஷ்டக்காத்து பிச்சிக்கிட்டு அடிக்குதே!…

    இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது அக்கா மகன் பவிஷ் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.

    அதை தொடர்ந்து அனிகா சுரேந்திரன் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடெக்ட்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    dhanush neek
    dhanush neek

    ஆனால் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகவில்லை. தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பேரோ’ வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்த பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியிருந்தார்.

    கலர்ஃபுல்லாக இருந்த இந்த பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் லவ் பெயிலியர் பாடல் வரும் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றதாம். இந்தப் பாட்டிற்கு சூப் சாங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலுக்கு சூப் சாங் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: ரஹ்மான் கிடைச்சது பெரிய பாக்கியம்.. சாயிராவுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த இயக்குனர்

    இப்பாடல் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பேமஸானது. அதேபோல இந்த படத்திலும் லவ் பெயிலியர் பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு சூப் சாங் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. வரும் 25ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்னும் 3 தினங்களில் வெளியாக உள்ள இரண்டாவது பாடல் இதே போல மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • NEEK: தனுஷ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் அப்டேட்!

    தனுஷ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக தகவல்.

    இயங்குனர் தனுஷ்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இயக்கத்திலும் மாஸ் காட்டி வருகின்றார். 2017 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். பின்னர் தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தமிழ் சினிமாவில் தன்னை இயக்குனராகவும் நிரூபித்து இருக்கின்றார் நடிகர் தனுஷ். கையில் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்து வருகின்றார்.

    இதையும் படிங்க: K.Balachander: நடிகரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய பாலசந்தர்… யார்…? என்ன படம்னு தெரியுமா?

    புது படங்கள்: தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதைதொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

    இயக்கும் படங்கள்: இப்படி ஏராளமான திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கும் நடிகர் தனுஷ், இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். தன்னுடைய மூன்றாவது திரைப்படமான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இது நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மற்றொரு பக்கம் தன்னுடைய இயக்கம் என்று சினிமாவில் நிற்க நேரமில்லாமல் பிஸியாக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ்.

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை தனுஷே தயாரித்து இருக்கின்றார். இந்த படம் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். மேலும் ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

    இதையும் படிங்க: Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..

    சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிடுவதற்கு நடிகர் தனுஷ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படம் அன்றைய தேதியில் வெளியானால் காதலர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.