Tag: பானுமதி

  • எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அப்படி இருந்த அவரிடமே கதாநாயகியான ஒருவர் நேருக்கு நேராக மோதியுள்ளார். யார் என்ன சம்பவம்னு பார்க்கலாமா…

    நாடோடி மன்னன் படத்தில் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் பிரச்சனையா? அப்புறம் ஏன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    நாடோடி மன்னன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோதே அந்தப் படத்தின் கதாநாயகியான பானுமதிக்கும், அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்து இயக்கிய எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டன.

    ஒரு நாள் ஒரு காட்சியைத் திரும்ப திரும்ப படமாக்கியபோது இதுக்குத் தான் ஒரு நல்ல டைரக்டரைப் போட்டுப் படம் எடுத்துருக்கணும். கே.சுப்பிரமணியத்தைப் போட்டுப் படமாக்கி இருந்தா இது மாதிரி பிரச்சனை எல்லாம் வந்துருக்காது என எம்ஜிஆர் முகத்துக்கு நேராகவே கூறினார். அது மட்டும் இல்லாம அந்தப் படத்தின் பாடல்களின் போது, பாடல்களின் கம்போசிங்கின் போது எல்லாம் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் இடையே உரசல்கள் இருந்துக்கிட்டே தான் இருந்தது.

    அதன் காரணமாகத் தான் இனியும் அவரோட ஃபோர்ஷனைத் தொடர முடியாதுங்கறதால அதை அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு கதாநாயகியை அறிமுகப்படுத்துவது என முடிவெடுத்தார் எம்ஜிஆர். அப்படி அந்தப் படத்துக்குள்ளே வந்தவர் தான் சரோஜாதேவி என்றார் எம்ஜிஆர்.

  • சீரியஸாக சண்டை போட்ட எம்ஜிஆரை சிரிக்க வைத்த பானுமதி… அடடே வில்லனும் சிரிச்சிட்டாரே..!

    தமிழ்த்திரை உலகில் பானுமதயைத் தைரியமான நடிகை என்பார்கள். இவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் ஆனவை. மலைக்கள்ளன், கலை அரசி, மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்ஜிஆருடன் பழகிய நாட்களை இவருக்கு எப்படி இருந்ததுன்னு அவரே சொல்கிறார். பார்க்கலாமா…

    மிஸ்டர் ராமச்சந்திரன் என்று எம்ஜிஆரை அழைக்கக்கூடிய வகையில் உரிமை பெற்றவர் என்றால் தமிழ்சினிமா உலகிலே அது பானுமதி மட்டும்தான். பல திரைப்படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் எம்ஜிஆரைப் பற்றிய பல நினைவுகளை ஒரு பத்திரிகை பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

    பல கதாநாயகர்களோடு நான் நடித்து இருந்தாலும் என்னால் மறக்க முடியாதவர்னா அது எம்ஜிஆர் மட்டும்தான். அவர் செட்டுக்குள்ள வந்தாலே அங்கு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். இத்தனைக்கும் அவர் ஒரு பரம சாது. அவர்கூட வருபவர்கள்தான் அத்தனை ஆட்டமும் போடுவாங்க.

    என் மேல எப்பவுமே எம்ஜிஆருக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. ஒரு திரைப்படத்திலே நம்பியாரிடம் இருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகக் கத்திச்சண்டை போடுவது மாதிரி ஒரு காட்சி. நம்பியாரும், எம்ஜிஆரும் கத்திச்சண்டை போடுவாங்க. நான் அதைப் பார்த்துப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பேன்.

    இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க. போட்டுக்கிட்டே இருக்காங்க. அந்தக் காட்சி முடிந்தபாடாக இல்லை. நான் எத்தனை முறைதான் எந்த வசனமும் பேசாம நடுங்கிக் கொண்டே இருப்பது. அதனால நேரா எம்ஜிஆருக்கிட்ட போனேன். ‘நீங்களும்தான் எவ்வளவு நேரமா சண்டை போடுவீங்க. உங்களால என்னைக் காப்பாற்ற முடியலன்னா விட்டுருங்க.

    நானே கத்திச்சண்டை போட்டு என்னை நம்பியாருக்கிட்ட இருந்து காப்பாத்திக்கறேன்’னு சொன்னேன். உடனே வெள்ளிக்காசு சிதறியது போல எம்ஜிஆரும், நம்பியாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னுடைய வாழ்க்கையிலயே எம்ஜிஆர் மனம் விட்டு சிரித்ததை அன்றைக்குத் தான் நான் பார்த்தேன் என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் பானுமதி தெரிவித்துள்ளார்.

    நாடோடி மன்னன், கலை அரசி ஆகிய படங்களில் எம்ஜிஆர், நம்பியார், பானுமதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • நாடோடி மன்னன் படத்தை எடுக்கவிட மாட்டேன்!. எம்.ஜி.ஆருடன் மல்லுக்கட்டிய பானுமதி…

    எம்.ஜி.ஆர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம்தான் நாடோடி மன்னன். முதல் படத்திலேயே ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். திட்டமிட்டதை விட செலவு அதிகமாக அதுவரை தான் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்தார். அதோடு, சொந்தமாக வாங்கியிருந்த வீட்டையும் அடமானம் வைத்தார். கடனும் வாங்கினார்.

    இந்த படம் வெற்றி அடைந்தால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நான் நாடோடி என சொன்னார். அந்த அளவுக்கு பணத்தை இதில் போட்டிருந்தார் எம்.ஜி.ஆர். இந்த படம் உருவாகும்போதே கடனை கேட்டு அவருக்கு பலரும் நெருக்கடி கொடுத்தனர். சிலர் நீதிமன்றத்தை நாடி அவரின் வீட்டை அபகரிக்கவும் முயன்றனர். அதையெல்லாம் சமாளித்து படத்தை எடுத்தார். இந்த படத்தை பொறுத்தவரை துவக்கம் முதலே எல்லோமே அவருக்கு பிரச்சனைதான்.

    இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்காக எல்லோரிடமும் கையேந்திய இயக்குனர்!.. எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

    நாடோடி மன்னன் படத்தை துவங்கியபோது அதற்கு அவர் வைத்த பெயர் உத்தம புத்திரன். ஆனால், அதே பெயரில் சிவாஜியும் ஒரு படத்தை துவங்க அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஹாலிவுட்டில் வெளியான The Prisioner of Zenda என்கிற படத்தின் கதையை தழுவியே நாடோடி மன்னன் பட கதையை உருவாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

    ஆனால், இதே கதையை மையமாக வைத்து நடிகை பானுமதியும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். எனவே, ‘The Prisioner of Zenda படத்தின் கதையை வைத்து தமிழில் நான் ஒரு படமெடுக்க திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் வீட்டு கொடுங்கள்’ என அவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..

    நாடோடி மன்னன் பட கதை என் மனதில் நன்றாக உருவாகி இருக்கிறது. The Prisioner of Zenda படத்தில் வரும் மன்னன் வேடம் மட்டுமே நாடோடி மன்னன் படத்திலும் வரும். மற்றபடி நாடோடி மன்னன் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், அதை எடுக்க வேண்டாம் என நீங்கள் கேட்காதீர்கள்’ என டீசண்ட்டாக சொல்லிவிட்டார்.

     

    உடனே பானுமதி பிடிகொடுக்கவில்லை என்றாலும் ஒரு வாரம் கழித்து ‘சரி நீங்களே அந்த படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார் பானுமதி. நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாவும் அவரே நடித்தார். ஆனால், 80 சதவீதம் படம் முடிந்த நிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுவிட்டு படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின் சரோஜா தேவியை சில காட்சிகளில் நடிக்க வைத்து படத்தை முடித்தார் எம்.ஜி.ஆர்.

    அப்படி வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று எம்.ஜி.ஆரை பெரிய நடிகராக மாற்றியது. அவருக்கு ரசிகர் கூட்டத்தையும் இப்படம் உருவாக்கியது.

    இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

  • இவர் பாடலன்னா படம் ஓடாது!.. இசையமைப்பாளர்கள் பட்ட பாடு!.. செண்டிமெண்ட்டில் ஜெயித்த பானுமதி..

    அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட நடிகை என்றால் அது பானுமதி தான். பாடி நடிக்கக்கூடிய நடிகை இவர். நடிகை, பாடகி, எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் பானுமதி. இவர் இயக்கிய முதல் படம் சண்டிராணி.

    இவர் தயாரித்த முதல் படம் ரத்னமாலா. இவர் நடித்த கடைசி படம் செம்பருத்தி. அழகான பொண்ணு நான், போறவளே போறவளே, அசைந்தாடும் தென்றலே, மாசிலா உண்மைக் காதலே, என் காதல் இன்பம், கண்ணிலே இருப்பதென்ன, கண்களின் வெண்ணிலவே போன்ற முத்து முத்தான பாடல்களைப் பாடியவர் பானுமதி தான்.

    MK
    MK

    இவரைப் பொருத்த வரை தான் நடிக்கும் படங்களில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பெயர் எடுப்பதை விட பாடி நடிப்பது தான் அவருக்குப் பிடித்தமான வேலை. அவர் நடிக்கின்ற எல்லாப் படங்களிலுமே பானுமதி பாடியிருப்பார்.

    அவரிடம் வேலை வாங்குவது இசை அமைப்பாளர்களுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. அந்த இசை அமைப்பாளர் போடும் டியூனுக்கு பானுமதி பாட மாட்டாராம். அந்த டியூனும், இசையும் இவருக்குப் பிடித்து இருந்தால் மட்டுமே பாடுவாராம்.

    பெரும்பாலும் அந்த இசை அமைப்பாளர்களைத் தன் பக்கம் திருப்பக்கூடிய வல்லமை பானுமதிக்கு உண்டு. இது அந்த இசை அமைப்பாளர்களுக்கும் தெரியுமாம். அதனால் உங்களுக்குத் தெரியாததாம்மா… இது தான் டியூன். நீங்க பாடுங்கன்னு சொல்லி அவரது போக்கிலேயே போய் பாடலைக் கறந்து விடுவார்களாம்.

    பானுமதியைப் பொருத்த வரை இன்னொரு சென்டிமென்ட்டும் இருக்கு. நான் பாடி நடித்த படங்கள் தான் வெற்றி பெறும். இல்லேன்னா அந்தப் படம் வெற்றி பெறாது. உதாரணத்திற்கு ராஜபக்தி, பூவும் பொட்டும் என்ற ரெண்டு படங்களையும் சொல்லலாம். அதனால் ரெண்டு படமும் ஓடவில்லை என்று பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்தாராம் பானுமதி.

  • குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ!. கடுப்பாகி பானுமதி செய்த தரமான சம்பவம்!…

    Banumathi: 50களில் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் பானுமதி. பாடகி, நடிகை, கதாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். அதனால், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களே இவருடன் கவனமாக நடிப்பார்கள்.

    பானுமதி எவ்வளவு திறமைசாலியோ அதே அளவுக்கு கோபக்காரரும் கூட. படப்பிடிப்பில் அவருக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் உடனே கிளம்பி வீட்டுக்கு போய்விடுவார். அதன்பின் இயக்குனரும், தயாரிப்பாளரும் அவரின் வீடு தேடிச்சென்று சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.

    இதையும் படிங்க: பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…

    இப்படி பலமுறை நடந்திருக்கிறது. நடிகையர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சாவித்ரி அறிமுகமான மிஸ்ஸியம்மா படத்தில் கூட முதலில் நடித்தவர் பானுமதிதான். ஆனால், படத்தின் காட்சிகளில் தயாரிப்பாளர் தலையிட்டதால் கோபமடைந்து அப்படத்திலிருந்து வெளியேறினார் பானுமதி. எனவே, அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சாவித்ரி.

    நாடோடி மன்னன் படம் 80 சதவீதம் முடியும் நிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுக்கொண்டு படத்தில் இருந்து வெளியேறினார் பானுமதி. எனவே, அவருக்கு பதில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். பானுமதி அம்மாவுக்கு முன் நான் சின்ன பையன் என நடிகர் திலகம் சிவாஜியே சொன்னார் எனில் பானுமதியின் இமேஜ் எப்படி இருந்திருக்கும் என புரிந்து கொள்ளலாம்.

    pu chinnappa

    1940களில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் பியூ சின்னப்பா. இவருக்கு மதுபோதையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதேபோல் சிகரெட்டும் பிடிப்பார். இயக்குனர் கிருஷ்னன் பஞ்சு இயக்கத்தில் சின்னப்பா நடித்த திரைப்படம் ரத்தினகுமார். இந்த படத்தின் கதாநாயகி பானுமதி. ஒருநாள் படப்பிடிப்பில் சின்னப்பாவுடன் நடிக்க பானுமதி அவரின் அருகில் சென்றபோது சின்னாப்பாவிடம் இருந்த வந்த மதுபோதை மற்றும் சிகரெட் வாசம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்த ‘எனக்கு தலைவலிக்கிறது’ என சொல்லிவிட்டு படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

    உடனே இயக்குனர் வீட்டிலிருந்த பானுமதியின் கணவரிடம் இதுபற்றி விசாரிக்க பி.யூ.சின்னப்பா குடித்துவிட்டு வந்ததால்தான் பானுமதி படப்பிடிப்பிலிருந்து வந்துவிட்டார் என அவர் சொல்லியிருக்கிறார். இதுபற்றி பியூ சின்னப்பாவிடம் சொல்லப்பட்டது. அடுத்தநாள் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பில் சின்னப்பா மது அருந்தாலும், புகை பிடிக்காமலும் கலந்துகொண்டாராம்.

    மேலும், ‘நான் குடித்துவிட்டு வந்தது பானுமதிக்கு பிடிக்கவில்லை எனில் என்னிடமே அவர் சொல்லி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘எனக்கு தலை வலிக்கிறது’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்’ என சலித்துக்கொண்டாராம் பியூ சின்னப்பா. ரத்தினகுமார் படம்தான் பியூ சின்னப்பாவிடம் இணைந்து பானுமதி நடித்த ஒரே திரைப்படம். இந்த படம் 1946ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…

  • தயாரிப்பளரை அசிங்கப்படுத்த படம் எடுத்த பானுமதி!.. ஆனாலும் இவ்வளவு நக்கல் ஆகாது!..

    Banumathi: தமிழ் சினிமாவில் 50,60களிலேயே நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தவர் நடிகை பானுமதி. அவரின் அப்பா ராமகிருஷ்ணா ஆந்திராவில் நாடக நடிகராக இருந்தவர். அப்பாவின் நடிப்பை பார்த்து வளர்ந்தவர் பானுமதி.

    50,60களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் இவர். மிகவும் திறமைசாலி என்பதால் யாருக்கும் பயப்பட மாட்டார். எம்.ஜி.ஆரையே ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என பெயர் சொல்லித்தான் அழைப்பார். படப்பிடிப்பில் இவருக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் உடனே அந்த படத்திலிருந்து விலகிவிடுவார்.

    இதையும் படிங்க: என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..

    எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி, தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் பானுமதி நடித்தார். ஆனால், சில காட்சிகளில் அவர் நடித்தது எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. எனவே, ரீடேக் எடுக்கவே அதில் கோபப்பட்ட பானுமதி அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின் சரோஜாதேவியை வைத்து அந்த படத்தை முடித்தார். எம்.ஜி.ஆர்.

    அதனால் திரையுலகில் பானுமதியிடம் மட்டும் நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவனமாக நடந்துகொள்வார்கள். சாவித்ரிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த திரைப்படம் மிஸ்ஸியம்மா. ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தை முதலில் நடிக்கவிருந்தது பானுமதிதான்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்த்ததும் கணித்த பானுமதி.. அவர் சொன்ன ஜோசியமும் அப்படியே பலிச்சிடுச்சே!..

    இந்த படத்தை நாகி ரெட்டி மற்றும் சக்கரபாணி ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இதனால், படப்பிடிப்பில் எப்போதும் சக்கரபாணி இருப்பார். எடுக்கும் காட்சிகளிலும் தலையிடுவார். ஒருமுறை ஒரு காட்சியில் பானுமதி வசனம் பேசும்போது சக்கரபாணி ஒன்று சொல்ல அதில் கோபமடைந்த பானுமதி அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

    missiyamma

    அதன்பின் அவர் மீது இருந்த கோபத்தில் தெலுங்கில் சக்கரபாணி என்கிற படத்தையே பானுமதி இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகனுக்கு சக்கரபாணி என பெயர் வைத்து அந்த கதாபாத்திரத்தை கஞ்சனாக காட்டி இருந்தார். இதுதான் பானுமதி இசையமைத்த முதல் படமும் கூட.

    கோபத்தில் அவர் அப்படி படம் எடுத்தாலும் மிஸ்ஸியம்மா படத்தை பார்த்துவிட்டு ‘இந்த படத்தில் நான் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். அதேநேரம், நான் விலகியதால் சாவித்ரி எனும் திறமையான நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அது எனக்கு சந்தோஷம்தான்’ என்று சொன்னார் பானுமதி.

    இதையும் படிங்க: நடிப்புல ஸ்கோர் பண்ண இப்படியெல்லாம் செய்வாரா பானுமதி!.. ரொம்ப ஓவரே இருக்கே!..

  • என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..

    1957ல் பானுமதி நடித்த படங்கள் 4. அவை அனைத்திலும் நடிகர் திலகம் சிவாஜி தான் நடித்திருந்தார். பிப்ரவரி 27ல் மக்களைப் பெற்ற மகராசி படம் வெளியானது. இதுதான் தமிழ்சினிமாவின் முதல் வட்டார மொழி படம். கொங்கு நாட்டு பாஷை பேசும் செங்கோடனாக சிவாஜியும், அவரது முறைப்பெண் பொன்னுரங்கமாக பானுமதியும் நடித்தனர். போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடலை டிஎம்எஸ்.சுடன் பானுமதி இணைந்து பாடி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

    பானுமதி அசோகனை ஹீரோவாக்கி மணமகன் தேவை படத்தைத் தொடங்கினார். இது காமெடி படம். அவரை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு அசோகனை விலக்கி விட்டு ஹீரோவாக சிவாஜியை நடிக்க வைத்தார். சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் படத்தில் நடித்தனர். சிவாஜியுடன் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக பானுமதிக்கு இருந்தது. சொக்கா போட்ட நவாபு, வாங்க மச்சான் வாங்க என பல சூப்பர்ஹிட் குத்துப்பாடல்கள் இந்தப் படத்தில் இருந்தது.

    ஆரூர்தாஸின் ஆசான் தயாரிப்பு ராணி லலிதாங்கி. பிரபல நடிகர் ஒருவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து ஆண்டவனே இல்லையே தில்லைத்தாண்டவனே உன்போல் ஆண்டவனே இல்லையே என பாடி நடிக்க வேண்டும் என மூடநம்பிக்கைக் கருத்துக்கள் வருகின்றன.

    Ambikapathi
    Ambikapathi

    திமுக கொள்கைகளுக்கு விரோதமாக நடிக்க மாட்டேன் என்று அந்த பிரபல நடிகர் விலகி விட்டார். ஆனால் அதே படத்தை சிவாஜியை வைத்து எடுத்து முடித்து வெற்றி கண்டார் தஞ்சை ராமையா தாஸ். இவர் ஜெயிக்க ஒத்துழைத்தவர் யார் தெரியுமா? பானுமதி தான். லலிதாங்கியாக நடித்தவர் பானுமதி. இவரைத் தவிர வேறு யாரும் நடித்து இருந்தால் அந்த பிரபல நடிகருக்குப் பயந்து நடிக்காமல் போயிருப்பார்களாம்.

    பானுமதியும், நடிகர் திலகமும் நடித்த படம் அம்பிகாபதி. இந்தப் படத்தில் இருவருக்கும் சண்டையே வந்துவிட்டதாம். என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் படத்தில் நடித்த ஒரு சில காதல் காட்சிகளுக்கு உயிர் ஊட்டுவதற்காக தனது சின்ன சின்ன சண்டைகளை மறந்து அருமையாக நடித்தார்களாம்.

    இதையும் படிங்க…அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

    நடிகர் திலகத்துடன் பானுமதி 10 படங்களில் இணைந்து நடித்துள்ளார். கள்வனின் காதலி, தெனாலி ராமன், ரங்கோன் ராதா, மக்களைப் பெற்ற மகராசி, மணமகன் தேவை, ராணி லலிதாங்கி, அம்பிகாபதி, சாரங்கதாரா, ராஜபக்தி, அறிவாளி என்ற படங்கள் தான் அவை. நடிகர் திலகம் குறித்து பானுமதி ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நான் எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன். எல்லா ஹீரோக்களும் என்னை நெருங்க பயப்படுவார்கள். சிவாஜி போல திறமையான நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவர் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக்கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர் என்றாராம்.