Tag: மதுரை வீரன்

  • அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.

    ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.

    இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.

    பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.

    நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.

    கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  • வில்லன் நடிகருக்காக எம்ஜிஆர் செய்த செயல்… அதனாலதான் அவருக்கு இவ்ளோ மாஸா?

    மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்றைக்கும் மக்கள் மனதில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் அவரது நல்ல நல்ல பண்புகள்தான்.

    காவல்காரன் படத்துக்காக ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட இருந்தது. அதுக்கான ஒத்திகை சத்யா ஸ்டூடியோவில் நடந்தது. அந்த ஒத்திகையில் கலந்து கொண்ட போது கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் என்பவருக்கு விபத்து ஏற்பட்டது. அவரால காலைத் திருப்பவே முடியலை. இந்த சம்பவம் நடைபெற்ற போது எம்ஜிஆர் இன்னொரு படத்துக்காக வாஹிணி ஸ்டூடியோவில் இருந்தார்.

    இப்படி ஒரு சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் எம்ஜிஆர் காரை எடுத்துக் கொண்டு நேராக சத்யா ஸ்டூடியோவுக்குப் போனார். அப்போது அங்கு வந்து கண்ணனுடைய உடல்நிலையை விசாரித்தார். இவரது உடல்நிலை சரியாகும் வரை இந்தப் படப்பிடிப்பை நடத்த வேண்டாம். அது 10 நாளானாலும் சரி. 15 நாள்களானாலும் சரின்னு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்லி விட்டார்.

    kavarchi villain k.kannan

    kavarchi villain k.kannan

    அன்றைய தினம் பார்த்தால் அவன் ஒரு சாதாரண நடிகன். இவரை உடனடியாக மாற்றி விட்டு கூட படப்பிடிப்பை நடத்தி இருக்கலாம். ஆனால் எனக்காக பத்து பதினைந்து நாள்கள் காத்திருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லி படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ள மாபெரும் மனிதர் தான் எம்ஜிஆர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    அசோகன், நம்பியார், வீரப்பா, மனோகருக்குப் பிறகு பிரபல வில்லனாக வந்தவர் தான் கே.கண்ணன். ஆரம்பத்தில் இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகராகத் தான் இருந்தார். அதன்பிறகு அந்த ரசிகர் மன்றத்தில் பொருளாளராக இருந்தார். எம்ஜிஆருடன் மதுரை வீரன் என்ற படத்தில்தான் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவரது கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை எம்ஜிஆருடன் இணைந்து நடித்துவிட்டார்.

    kavalkaran

    kavalkaran

    புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பொருத்தவரை அவர் படத்தில் மட்டும் புரட்சி பண்ணவில்லை. நிஜ வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்களின் மூலமாக நிறைய புரட்சி பண்ணியுள்ளார் என்பதே உண்மை.

  • நான் அப்படி நடிக்க மாட்டேன்.. நீங்க வேணா டூப் போட்டு எடுத்துக்குங்க!. எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த காட்சி!…

    சிவாஜிக்கு ராசியாக இருந்த பத்மினி எம்.ஜி.ஆருடன் முதன் முதலாக நடித்த திரைப்படம்தான் மதுரை வீரன். டி.யோகனந்த் இயக்கிய முதல் எம்.ஜி.ஆர் படமும் இதுதான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் மிகவும் இயல்பாக நடித்திருந்தார். நாட்டுப்புற பாடலில் மக்களால் வணங்கப்பட்ட ஒருவர்தான் மதுரை வீரன்.

    அந்த காலத்தில் வாய் வழியாகவும், கூத்துகள் மூலமாகவும் அதிகம் பேசப்பட்ட கதைதான் மதுரை வீரன். அதிகாரத்திமிர் கொண்ட மன்னர்களால் ஒருவர் மாறு கால், மாறு காய் வாங்கப்பட, அதாவது, ஒரு கால் மற்றும் கை வெட்டப்பட்டதால் மரணமடைந்த ஒரு கடவுள்தான் மதுரை வீரன் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

    இதையும் படிங்க: இந்த படத்தில் நான் நடிக்கட்டுமா?.. எம்.ஜி.ஆர். கேட்டு வாங்கி நடித்த அந்த திரைப்படம்!…

    அதைத்தான் மதுரை வீரன் என்கிற பெயரில் சினிமாவாக எடுத்தனர். எம்.ஜி.ஆர் திமுகவில் வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. எனவே, பகுத்தறிவு மற்றும் மூடநம்பிக்கை தொடர்பான காட்சிகளில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அப்போதுதான் மதுரை வீரன் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தார்.

    படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு கால், ஒரு கை வெட்டப்பட்டு அவர் மரணமடைவது போல் காட்சி எடுக்கப்பட்டது. அதன்பின், அவர் ஆவியாக மாறி தனது மனைவிகளான பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோரோடு இணைந்து கடவுள் போல காட்சி கொடுக்க வேண்டும். இதுதான் காட்சி.

    இதையும் படிங்க: பாலைவனத்தில் ஆயிரம் பேரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!.. அடிமைப்பெண் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

    ஆனால், இந்த காட்சியில் நடித்தால் திமுக தரப்பில் இருந்து தனக்கு எதிர்ப்பு வரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, நான் இந்த காட்சியில் நடிக்க முடியாது. மீறி நடித்தால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே, எனக்கு பதில் வேறு ஒருவரை வைத்து இந்த காட்சியை எடுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார்.

    madurai
    #image_title

    எம்.ஜி.ஆர் அதில் உறுதியாக இருந்ததால் இயக்குனரும் வேறு வழியில்லாமல் ஒரு டூப் நடிகரை போட்டு அந்த காட்சியை இயக்குனர் எடுத்திருக்கிறார். சுமார் 2 வருடங்கள் உருவான மதுரை வீரன் திரைப்படம் புத்தாண்டுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

     

  • சிங்கம்புலி மகாராஜா படத்துல நடிக்க அந்தப் படங்கள் தான் காரணமாம்…! அட இப்படி எல்லாமா யோசிப்பாரு?

    மகாராஜா படத்துல சிங்கம்புலி இப்படி கொடூரமான நெகடிவ் கேரக்டர்ல
    நடிப்பாருன்னு யாருமே நினைச்சிருக்க மாட்டாங்க. ஆனா அவரு எதுக்காக இப்படி நடிக்க சம்மதிச்சாருன்னு தான் எல்லாரும் கேட்கிறாங்க. அதுக்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க…

    ஆண்டவன் கட்டளை, கருப்பன் படங்கள் எல்லாத்துலயும் விஜய் சேதுபதி நல்லாருக்கணும்னு நினைக்கிற கேரக்டர். இந்தப் படத்துல மட்டும் அவரு நல்லாருக்கக்கூடாதுன்னு நினைக்கிற கேரக்டர். இதை நான் காசுக்காக பண்ணல.

    இதையும் படிங்க… கமலை வைத்து எம்ஜிஆர் போட்ட மெகா திட்டம்… அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமா?

    எப்படி ஒரு கெட்டதைக் காமிச்சி இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்களோ அதுக்காகத் தான் நடிச்சேன். என்னைப் பார்த்து நிறைய பேரு திருந்துனாங்கன்னா அதுக்கு நான் ஒரு படிக்கல்லா இருந்தா அதுவே போதும்.

    இந்தக் கேரக்டருக்கு நான் எப்படி ஒத்துக்கிட்டேன்னா அதுக்கு டைரக்டர் நித்திலன் சாரும், விஜய் சேதுபதியும் தான் காரணம். தயாரிப்பாளரும் முடிவு பண்ணி விட்டார். நானும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைச்சித் தான் பண்ணினேன். அதுவும் ஒரு வாரம் யோசிச்சித்தான் முடிவு பண்ணினேன். 16 வயதினிலே படத்துல ரஜினி சாரே ரேப் பண்ணப் போவாரு.

    அவரை ஊனமா இருக்குற கமல் கல்லைப் போட்டுக் கொல்வாரு. டி.எஸ்.பாலையா தான் ‘மதுரை வீரன்’ல எம்ஜிஆருக்கு மாறு கால் மாறு கை வாங்குவாரு. அதுக்கு அப்புறம் அவரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தில்லானா மோகனாம்பாள் படத்துல காமெடியா நடிக்கலையா?

    ஒரு ஆக்டரா நம்மை எதுவும் செய்யலாம் அப்படிங்கறதுக்காக இதை எடுத்துக்கங்கன்னு நிறைய பேரு சொல்றாங்க. அடுத்தடுத்த படங்களில் நிறைய ஹியூமரும் இருக்கு. ஆனா இனி மகாராஜா பட கேரக்டர் மாதிரி நடிக்கறதுக்கு ரொம்ப யோசிக்கணும் என்கிறார்.

    இதையும் படிங்க… கிளப்பிட்டாங்கய்யா… கிளப்பிட்டாங்கய்யா… அஜீத் அரசியலுக்கு வருகிறாரா…? வந்தா விஜய் மாதிரி இருக்காதாம்…!

    நடிச்சது நடிச்சதுதான். அதை இனி மாத்த முடியாது என்று தெரிந்ததும் சிங்கம்புலியின் முகத்தில் பேட்டி கொடுக்கும்போது பல மாறுதல்களும், ஒரு வித மன இறுக்கமும் தென்படுவதைப் பார்க்க முடிகிறது. இனியும் ரசிகர்கள் அவர் காமெடியாக நடிப்பதை ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.