Tag: மிஸ்டர் எக்ஸ்

  • LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    ஒரு படம் வெளியானால் இயக்குநர்களை தான் பலரும் பாராட்டுவார்கள். அந்த படத்தில் மற்ற இடங்களில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா தொடர்ந்து டல் அடித்து வரக் காரணமே இயக்குநர்கள் தான் என்கின்றனர்.

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை இந்தியாவில் வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சனிக்கிழமையான நேற்றும் படத்துக்கு பெரிதாக கூட்டம் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படமும் மண்ணைக் கவ்வி விட்டதாக கூறுகின்றனர்.

    பிரதீப் ரங்கநாதனுக்காக இந்த வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிக வசூல் ஈட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி வசூல் ஈட்டியதாக போஸ்டர் அடித்து வெளியிட்டனர். இந்த படம் 50 கோடியை கடக்கவே படாதபாடு பட்டுவிட்டது. நல்லவேளை 210 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்டதை போலவே இதே மொக்கை கதையை விக்னேஷ் சிவன் படமாக்கியிருந்தார் என்றால் இன்னமும் ஒரு 100 கோடி இழப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர்.

    மிஸ்டர் எக்ஸ் வசூல்: ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நல்லா ஹேண்ட்ஸம் ஆகவும் சிக்ஸ் பேக் வைத்து வாட்ட சாட்டமாகவும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். எஃப்ஐஆர் படமே அதிகபட்சமாக 24 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் அவர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2 நாட்களில் அதிகபட்சமாக 1.36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா இந்த ஏப்ரல் மாதத்தில் ரொம்பவே டல் அடித்து வருகிறது. தனுஷின் கர திரைப்படமாவது கை கொடுக்குமா? அல்லது இட்லி கடை போல கவிழ்த்து விடுமா என தியேட்டர் ஓனர்கள் முதல் திரையுலகமே அச்சத்தில் உள்ளது.

  • ரொம்ப நாள் கழிச்சு ரைசா வில்சனுக்கு கிடைச்ச பட வாய்ப்பு.. மிஸ்டர் எக்ஸ் பிடிஎஸ் போட்டோக்கள் வைரல்!..

    ரொம்ப நாள் கழிச்சு ரைசா வில்சனுக்கு கிடைச்ச பட வாய்ப்பு.. மிஸ்டர் எக்ஸ் பிடிஎஸ் போட்டோக்கள் வைரல்!..

    பிக் பாஸ் போட்டியாளராக முதல் சீசனில் களமிறங்கியவர் தான் ரைசா வில்சன். அதற்கு முன்னதாகவே தனுஷ், கஜோல், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் அசிஸ்டண்ட்டாக நடித்திருப்பார். பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் கல்யாண் உடன் இவருக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டது.

    நிகழ்ச்சி முடிந்த உடனே இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட்டும் கொடுத்தனர். அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்திலும் ரைசா வில்சன் இணைந்து நடித்தார். ஆனால், திடீரென ஹரிஷ் கல்யாணுக்கு திருமணமாக இவர்கள் இனைந்து நடிப்பது நின்று போனது.

    ரைசா வில்சன் தனது முகத்தை அழகாக்க எடுத்த சிகிச்சை விபத்தாக மாறி அவரது முகத்தையே வீங்க வைத்த நிலையில், அந்த மருத்துவருக்கு எதிராக பஞ்சாயத்தைக் கூட்டினார். அதன் பின்னர், பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

    மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான எஃப்ஐஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரைசா வில்சன் மீண்டும் மனு ஆனந்த் இயக்கிய மிஸ்டர் எக்ஸ் படத்திலும் காமினி எனும் கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவர்ச்சி ரோலில் நடித்துள்ளார்.

    ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் உடன் ரைசா வில்சன் நடித்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் சமயத்தில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    பல பிக் பாஸ் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் அதன் பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். ஓவியா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, லாஸ்லியா, ஷிவானி நாராயணன் என பலர் ஹீரோயினாக மாறினாலும் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. அந்த வரிசையில் ரைசா வில்சனும் இணைந்த நிலையில், 2026லும் அவர் நடித்த படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரைசா வில்சனுக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் இப்படி சொல்கிறார்.

    இது ஒரு ஸ்பை திரில்லர் படம். படத்தோட ஆரம்பத்துல ஹீரோ ரா ஏஜென்ட்டா வாராரு. ஜி20 மாநாடு சென்னையில் நடக்குது. இந்தியாவுல நியூக்ளியர் டிவைஸ ஒரு ஏஜென்ட் பாதுகாத்து வர்றாரு. அவரையும், அந்த டிவைஸையும் கடத்திக் கொண்டு போய் வெளிநாட்டுல வச்சிடுறாங்க.

    இந்த ஏஜென்டையும், டிவைஸையும் பாதுகாப்பா கொண்டு வரணும்னு ஒரு வேலையை ஹீரோக்கிட்ட கொடுக்குறாங்க. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. முதல் பாதியில் நிறைய கேரக்டர்கள். ஓரளவு ஓகே. 2வது பாதியில சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வச்சி, டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சி கதையைவே குழப்பிட்டாங்க. அதிலும் மெய்னா தங்கச்சி கேரக்டரைக் கொண்டு வந்து காட்டுனதுக்கு பிறகு பல்லை இளிச்சிடுது சஸ்பென்ஸ்.

    படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரைக்கும் டுவிஸ்ட் வைக்கிறேன் பாருன்னு கடைசில ஒரு டுவிஸ்ட் வைக்கிறாங்க. அது தேவையே இல்லாத டுவிஸ்ட். இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்த்துட்டு நாம வெளியே வரும்போது நம்முடைய ராணுவ வீரர்கள் தியாகம் பண்ணி இருக்கணும். இந்த மாதிரி ஏஜென்ட்டுகள், உளவாளிகள் எல்லாம் எவ்ளோ உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பாத்திருப்பாங்க அப்படிங்கற சந்தோஷத்தோட, திருப்தியோட வரணும். ஆனா இவங்க என்ன பண்ணிருப்பாங்கன்னா நம்ம ஏஜென்ட் எல்லாரையுமே டபுள் ஏஜென்ட் மாதிரி காட்டுறாங்க. அவங்களைப் பார்த்து பயப்படுற மாதிரி படம் எடுத்து வச்சிருக்காங்க.

    இவங்க ஹாலிவுட் மாதிரி ஸ்பை திரில்லர் படம் எடுக்கப் போறேன்னு கிளம்புனது எல்லாம் தப்பு கிடையாது. அது ரொம்ப ஈசியான வழி. நிறைய படம் ரெஃப்ரன்ஸ் இருக்கு. அதைப் பார்த்து ஒழுங்கா ஒரு கதையை எழுதி இருக்கலாம். குறைஞ்சது ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுதி இருக்கலாம். இவங்க போட்டு குழப்பி சாகடிச்சிட்டாங்க. இந்தப் படத்துக்கு எல்லாம் ஹீரோக்கு எதுக்கு பெரிய ஃபேமிலி பேக்ரவுண்டு ஸ்டோரி?

    வில்லனுக்கு எதுக்கு பிளாஷ்பேக்.? இது மாதிரி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் படத்துல வச்சி கடுப்பேத்தி விட்டாங்க. ஹீரோயிசம் பண்றேங்கற பேருல ஒரு சாகசம் பண்றாரு. சி4 பாம் நிலத்துல வெடிச்சா பெரிய சேதம் வரும்னு அதைக் கையிலே எடுத்துப் போய் நடுக்கடல்ல வெடிக்க வைக்காரு. அது பயங்கரமா வெடிக்கும். வெடிச்சி அடுத்த செகண்டே ஹீரோ உசுரோட வர்றாரு.

    எப்படிடா தப்பிச்சி வந்தாருன்னு பார்த்தா அவரு அண்டர்வேர்ல்டு ஸ்பெஷலிஸ்ட். தண்ணிக்குள்ள தம் கட்டி நீச்சல் அடிச்சி வருவாரு. திரைக்கதையில கோட்டை விட்டுட்டாங்க. படத்துல நிறைய கிரின்ச் சீனையா வச்சி படத்தையே காலி பண்ணிட்டாங்க. படம் முழுக்க வயிறு முட்ட பொங்கலைத் தின்னுட்டு உட்கார்ந்து பார்த்த மாதிரியே இருந்துச்சு என்கிறார் புளூசட்டை மாறன்.

  • மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை தேடி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனை வைத்து எஃப்ஐஆர் திரைப்படத்தை எடுத்த மனு ஆனந்த் அந்த படத்தை விட சூப்பர் படத்தைக் கொடுக்கிறேன் என தனது பேட்டியில் துரந்தர் எல்லாம் கொண்டு வந்து ரிலீஸுக்கு முன்பாக பேசினார்.

    ஆனால், படத்தை பார்த்தவுடன் இதுக்காக இவ்ளோ பில்டப் என்றும் இதுக்கு லெஜண்ட் சரவணா நடித்த லீடர் படமே ஸ்பை த்ரில்லர் படத்தை எப்படி எடுக்கணும்னு பாடம் நடத்தும் போல இருக்கே என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்தத் தொடங்கி விட்டனர்.

    இடியாப்ப சிக்கல் கதை: நாட்டையே காப்பாற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆனால், அது ஆர்யாவும் இல்லை, கெளதம் கார்த்திக்கும் இல்லை என்கிற இடத்திலேயே இருவருக்கும் விபூதி அடித்துவிட்டு இயக்குநர் புதுசாக செட்டாகாத டோப்பாவை மாட்டி சரத்குமாரை ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிவிட்டார். அப்புறம் அதே சரத்குமார் தான் ஆர்யாவின் அப்பா, இந்தியாவையும் உங்க அப்பாவையும் காப்பத்துறது தான் உன்னோட மிஷன் இம்பாசிபிள் என மஞ்சு வாரியர் மிஷனை தூக்கி தாலி கட்டி குடும்ப வாழ்க்கை நடத்த திட்டமிட்ட ஆர்யாவிடம் கொடுக்க, அவருக்கு வில்லனாக கெளதம் கார்த்திக் ரைசா வில்சன் உடன் ஜோடி போட்டு குதிக்க, கடைசியில் டைரக்டர் மெயின் வில்லனே நான் தான் என வச்ச ட்விஸ்ட்டை பார்த்து விட்டு ஆளவிடுங்கடா சாமி என தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

    ஆர்யா, கெளதம் கார்த்திக்கு மீண்டும் பல்பு தான்: இப்படித்தான் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பிரடேட்டர்களை எல்லாம் கொண்டு வந்து உப்புமா படத்தைக் கொடுத்து காண்டாக்கினர். அதே வகையில் தான் இந்த படமும் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை, உருவாக்கப்பட்ட விதம் எல்லாம் படு மோசம்.

    பிரதமர் மோடிக்கிட்ட பேசிட்டு இருந்துட்டே அடுத்த 10 நிமிஷத்துல கல்பாக்கம் அனல் மின் நிலையத்துக்கு வந்து கிளைமேக்ஸில் மஞ்சு வாரியர் சண்டை போடுறது எல்லாம் காமெடியின் உச்சம். இந்தியாவின் உளவுத்துறையை பெருமைப்படுத்துறோம்னு படம் எடுப்பாங்க பார்த்தால், ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்க. சரத்குமாருக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

    ரேட்டிங்: 2.5/5.

  • மொட்டை மாடி பார்ட்டியில் போன் போட்டு சந்தானத்தை கலாய்த்த விஜே சித்து.. ஆர்யாவோட அட்டகாசம்!..

    மொட்டை மாடி பார்ட்டியில் போன் போட்டு சந்தானத்தை கலாய்த்த விஜே சித்து.. ஆர்யாவோட அட்டகாசம்!..

    நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில், வரும் 17ம் தேதி வெளியாக உள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் மறைந்த அணு ஆயுதம் மற்றும் அதைத் தேடும் ரகசிய ஏஜென்ட்களை மையமாகக் கொண்டு, அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் OTT உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வி.ஜே. சித்து நடத்தும் “மொட்டமாடி பார்ட்டி” நிகழ்ச்சியில் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆர்யாவிடம் சந்தானம் அவர்களுக்கு கால் செய்து ப்ராங்க் செய்யச் சொல்லப்படுகின்றது.

    அப்போது, “சார்பட்டா பரம்பரை – பார்ட் 2” படத்தில் ரஞ்சித், சந்தானத்தையும் நடிக்க அழைக்கிறார் என்று கூறி, ஜான் சீனா மற்றும் ஜாக்கி சான் போன்றவர்களுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சித்து நகைச்சுவையாக பேசுகிறார். இந்த உரையாடல் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர், சித்து, “நீங்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில் தொந்தரவு செய்துவிட்டோம்” என்று கூறியபோது, சந்தானம் “ஆர்யாவுக்காக நான் எதுவாக இருந்தாலும் செய்வேன்” என்று கூறினார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தொடங்கிய ஆர்யா – சந்தானம் நட்பு இன்று வரை தொடர்வதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    மொத்தத்தில், “மிஸ்டர் எக்ஸ்” திரைப்படம் வேகமான, சஸ்பென்ஸ் நிறைந்த ஸ்பை ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    எப்போ பணம் வேணாலும் தயங்காம கேளுங்க…வெண்ணிற ஆடை மூர்த்தியை நெகிழ வைத்த அர்ஜூன்