Tag: யுவன் சங்கர் ராஜா மலையாளம் படம்

  • இனிமே அவர்தான் மியூசிக் டைரக்டர்!.. சிம்பு எடுத்த முடிவில் ஷாக்கான யுவன்!…

    இனிமே அவர்தான் மியூசிக் டைரக்டர்!.. சிம்பு எடுத்த முடிவில் ஷாக்கான யுவன்!…

    சிம்புவின் சினிமா வாழ்வில் அவருக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தது யுவன் சங்கர் ராஜா என்றுதான் சொல்லவேண்டும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சிம்பு நடித்து வெளியான மன்மதன் உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்தான். எனவேதான் தனது படங்களில் யுவனை தொடர்ந்து இசையமைக்க வைத்தார் சிம்பு.

    அதோடு யுவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் இருக்கிறார்
    . அனிருத் பல படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறிய பின்னரும் கூட சிம்பு அனிருத் பக்கம் செல்லவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் மட்டுமே அனிருத் இசையமைக்கிறார்.

    சமீப காலமாக நடிகர் சிம்பு சாய் அபயங்கருடன் நெருக்கமானவராக மாறியிருக்கிறார். பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பது உறுதியானது. இதையடுத்து துபாயிலிருந்த சிம்பு சாய் அபயங்கரையும், ராம்குமாரையும் துபாய்க்கு வரவழைத்து மூவரும் சேர்ந்து சில பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள்..

    ஆனால் படம் டிராப் ஆகிவிட்டதால் அந்த பாடல்களை பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து சாய் அபியங்கரையே இசையமைக்க வைக்கலாம் என சிம்பு திட்டமிட்டிருக்கிறாராம். அந்த படங்களில் துபாயில் உருவாக்கிய அந்த பாடல்களை பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.

  • மலையாள சினிமாவில் கால்பதிக்கும் யுவன் சங்கர் ராஜா

    மலையாள சினிமாவில் கால்பதிக்கும் யுவன் சங்கர் ராஜா

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

    அரவிந்தன் படம் மூல இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் யுவன் சங்கர் ராஜா. முதல் படத்திலேயே பாடல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காடல் கொண்டேன் என பல படங்களூக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை இளைய தலைமுறையினர் கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதன் முறையாக மலையாள படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார் யுவன். மலையாள சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் பணி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அதிரடி ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான அந்தப் திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்லார்.

    ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் இந்த இரண்டாவது படத்திற்கு பரிபாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்தான் யுவன் சங்கர் ராஜா, மலையாளத் திரையுலகில் முதல் முறையாக தடம் பதிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் இந்த படம் மூலம் மல்லுவுட்டில் தடம் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.