Tag: ராஜா தேசிங்கு

  • அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.

    ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.

    இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.

    பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.

    நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.

    கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  • இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

    எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும். இருவரும் இரட்டை வேடம் ஏற்று பல படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் யாருக்கு அதிகம் வெற்றி என்று பார்ப்போமா…

    நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, அரசிளங்குமரி, ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நீரும் நெருப்பும், நாளை நமதே, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், நினைத்ததை முடிப்பவன், பட்டிக்காட்டு பொன்னையா என 17 படங்களில் எம்ஜிஆர் இரட்டை வேடம் போட்டு அசத்தியுள்ளார்.

    Netru Indru Naalai
    Netru Indru Naalai

    நாடோடி மன்னன், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளன.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இரட்டை வேடப்படங்கள் மொத்தம் 21. அவை, உத்தமபுத்திரன், அன்னையின் ஆணை, சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கௌரவம், எங்கள் தங்க ராஜா, சிவகாமியின் செல்வன், என் மகன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, பட்டாக்கத்தி பைரவன், எமனுக்கு எமன், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, தியாகி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, ரத்த பாசம்.

    Gowravam
    Gowravam

    இவற்றில் உத்தமபுத்திரன், சரஸ்வதி சபதம், கௌரவம், எங்கள் தங்க ராஜா, என் மகன், விஸ்வரூபம், சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய 8 படங்கள் 100 நாள்களைக் கடந்து ஓடியவை.

    இவற்றில் இருந்து நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எம்ஜிஆர் தான் வின்னர். அவர் 17 படங்களில் நடித்து விட்டு 9 படங்களை வெற்றிப்படமாக்கி உள்ளார். சிவாஜி 21 படங்களில் நடித்தும், 8 படங்களில் தான் சாதித்துள்ளார். அதனால் எம்ஜிஆர் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை இந்தப் படங்களில் இருந்து நாம் அறிய முடிகிறது.