Tag: actress asin

  • அப்போ பார்த்தது போலவே இருக்காரே….10வது திருமண நாளை கொண்டாடும் அசின்

    தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ரவிமோகன் நடிப்பில் வந்த குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் அறிமுகம் ஆன அவர் விஜய், அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வலம் வந்த அவர், தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோது, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்கள் தங்களது 10-வது திருமண ஆண்டைக் கொண்டாடுகின்றனர். 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அசின் – ராகுல் சர்மா திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    திருமணத்திற்கு பின்பு திரையுலகை விட்டு வில்கி இருந்த அசின் எப்போதாவது சில புகைபடங்களை சமூகவலைதளங்களில் பகிர்வார். இந்த நிலையில் தனது 10வது திருமண நாளையொட்டி அவரது கணவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 10 வருடங்கள் ஆனாலும் அப்போது பார்த்த மாதிரியே அசின் இப்போது உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    அசின்-ராகுல் தம்பதியருக்கு அரின் என்ற மகள் உள்ளார்.

  • Asin: அசின் திரையுலகை விட்டு போனதுக்கு காரணமே அவர்தானாம்.. இது தெரியாதே

    அசின்:

    தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அசின். நடித்தது குறைவான படங்கள்தான். ஆனால் இவரின் தாக்கம் தமிழ் சினிமாவில் மிகப்பெரியது. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் இவருக்கு நல்ல ஒரு மார்கெட் இருந்தது.

    அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்தார். தமிழில் கஜினி, போக்கிரி, சகலகலா வல்லவன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , காவலன் போன்ற திரைப்படங்களில் நடித்து தொடர் வெற்றியை கொடுத்தார். இவர் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். தமிழில் சூர்யாவுடன் கஜினி படத்தில் நடித்த அசின் ஹிந்தி கஜினியிலும் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்தார்.

    தமிழில் இவர் அறிமுமான திரைப்படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அசின் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருடைய இந்த அவசர திருமணம் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மார்கெட்டை உயர்த்திக் கொண்டே வந்தார் அசின்.

    ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார். இன்று வரை அசினை மிஸ் செய்பவர்கள் ஏராளம். அவர் நடித்த படங்களில் கிளாமர் காட்டாமல் நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி ரசிகர்களை உருவாக்கினார். இவர் மும்பையில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் சினிமாவை விட்டு போனதுக்கு காரணமே அவருடைய அப்பாதான் என நடிகர் மனோஜ் கிருஷ்ணன் கூறியிருக்கிறார்,

    அசினின் அப்பாவை பொறுத்தவரைக்கும் பெரிய கண்டிப்பானவராம். யாருடனும் சகஜமாக அசினை பழகவிடமாட்டாராம். இதுகூட அவர் சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று மனோஜ் கிருஷ்ணன் கூறினார்.

  • தமிழ்லயும் தொடரும் பாலியல் தொல்லை.. அசின் கோலிவுட்டே வேணானு ஏன் போனாங்க?

    Actress Asin: ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே திரும்பி பார்க்கும் வகையில் மலையாள சினிமா பல இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டிருக்கின்றது. பாலியல் வன்கொடுமைகள் மலையாள சினிமாவில் அதிகம் நடப்பதாகவும் அதுவும் பல முன்னணி நடிகர்கள் தான் இதில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது.

    இதனால் இந்திய சினிமாவே பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் மலையாளத்தில் ஹேமா கமிஷன் இறங்கி எப்படி தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதோ அதேபோல தெலுங்கு தமிழ் கன்னடம் என மற்ற மொழி சினிமாக்களிலும் அந்த மாதிரி ஒரு கமிட்டி வரவேண்டும் என நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர் .

    இதையும் படிங்க: ரகசிய கேமரா வைத்து நடிகையை ரசிப்பார்கள்!.. பகீர் தகவலை சொன்ன ராதிகா!…

    இதில் தமிழில் ஏற்கனவே சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் தொடர்பாக சில பிரச்சனைகளை கொண்டு வந்தார். ஆனால் அவருடைய நிலைமை இப்போது என்னவாகிவிட்டது? அவருடைய வேலைவாய்ப்பு பறிபோனது. யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. இருந்தாலும் தனக்கான நியாயம் கிடைக்கும் வரை அவர் குரல் கொடுத்துக் கொண்டே தான் வருகிறார்.

    இன்னுமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அசின் பற்றி அவர் கூறிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எத்தனையோ பெண்கள் இதை விட்டால் நமக்கு அடுத்த் வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலைமையில் இருப்பதால்தான் பல கொடுமைகளை தாங்கிக் கொண்டு சகித்துக் கொண்டு வருகிறார்கள்.

    இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்தினார் எம்.எஸ்.வி! மறக்கவே மாட்டேன்! இளையராஜா சொல்றத கேளுங்க!..

    பாட்டு, டப்பிங் இது மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே வழி என நான் நினைத்திருந்தால் இதை என்னால் தைரியமாக சொல்லி இருக்க முடியுமா? 15 வருஷத்திற்கு முன்பு ராதாரவி தலைவராக இருக்கும்போது என்னால் அவரை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லையே. ஏனெனில் அந்த ஆளு அசால்ட்டாக ரெட் கார்டை கொடுக்கிறவர்.

    chinmay
    chinmay

    நடிகை அசினுக்கு ரெட் கார்டு கொடுத்த நாய்ங்க தானே அதுங்க. கடைசியில அசின் பண்ணது என்ன? எந்த தப்பும் பண்ணல. ஒரு ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அசின் ஒரு பாடல் காட்சிக்காக ஸ்ரீலங்கா போக வேண்டியதாக இருந்தது. அதை எதிர்த்து இந்த ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து அசினுக்கு எதிராக ரெட் கார்டு கொடுத்திருக்காங்க.

    இதையும் படிங்க: குட் பேட் அக்லியில் விஜயின் டயலாக்கா? அதைவிட இன்னொரு சர்ப்ரைஸ் கோட்டில்… பரபர அப்டேட்!

    இதைவிட ஒரு பைத்தியக்காரத்தனமான ஐடியா வேற எங்க இருக்க முடியும்? இந்த மாதிரி பொறுக்கி கும்பல் கையில் பவரை வச்சிக்கிட்டு இருக்க, நீ என்னடா ரெட் கார்ட் கொடுக்கிறது? நானே போறேன் என இங்கிருந்து கிளம்பி பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் அசின். அதன் பிறகு இப்பொழுது உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரராக மாறியிருக்கிறார். ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்த அசின் இப்போது  யாருமே தொட முடியாத அளவில் ஒரு உச்சத்திற்கு சென்று விட்டார்.

  • நான் இருக்கும்போது நயன்தாராவா?!.. அசின் செய்த வேலையில் அப்செட் ஆன ஏ.ஆர்.முருகதாஸ்!…

    20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இருந்தவர் அசின். கேரளாவை சேர்ந்த இவர் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் சிவகாசி, காவலன், போக்கிரி ஆகிய படங்களில் நடித்தார்.

    சூர்யாவுடன் கஜினி, வேல் ஆகிய படங்களில் நடித்தார். ஜெயம் ரவி உள்ளிட பல நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். அஜித்குமாருடன் ஆழ்வார் மற்றும் வரலாறு ஆகிய படங்களில் நடித்தார். மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர். கஜினி படத்தின் கதை, திரைக்கதையே இவரை சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

    asin
    asin

    கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்தார். விக்ரமுடன் மஜா படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் அசின் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் சென்று அமீர்கானை வைத்து கஜினி படத்தை எடுத்தபோது அசினே அப்படத்திலும் நடித்தார்.

    அதன்பின் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்தார். மார்க்கெட் பீக்கில் இருக்கும்போது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் கஜினி படத்தில் இவர் ஏற்ற கல்பனா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

    அதேநேரம், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ஏ.ஆர்.முருகதாஸை அவர் கதறவிட்ட சம்பவமும் நடந்தது. கதைப்படி மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியில் விற்கப்படவிருந்த குழந்தைகளை அசின் காப்பாற்றி ரயில் மூலம் சென்னை அழைத்து வருவார். அந்த காட்சியை படம்பிடிக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் அனுமதி வாங்கி இருந்தார் முருகதாஸ்

    படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் ‘ஒரு பாடல் பாக்கி இருக்கிறதே. அதை எப்போது எடுப்பீர்கள்?’ என அசின் கேட்க ‘அந்த பாட்டு உங்களுக்கு இல்லை. நயன்தாராவுக்கு’ என முருகதாஸ் சொல்ல கோபமடைந்தார் அசின். கேரவானுக்கு போனவர் 2 மணி நேரம் கீழே இறங்கவே இல்லை. அதோடு, எனக்கு வயிற்று வலி. நடிக்க முடியாது எனவும் சொல்லி இருக்கிறார். இதனால் அப்செட் ஆகி உட்கார்ந்துவிட்டாராம் முருகதாஸ். அதன்பின் ஒருவழியாக அவரை சமாதானம் செய்து அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • என்னது சிம்புவுக்கு ஜோடி அசினா? போட்டோ சூட்டெல்லாம் எடுத்து டிராப் ஆன படம்.. என்ன ரீசன் தெரியுமா?

    Simbu Asin: இன்று ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ இல்லையோ குணச்சித்திர படங்களில் நடித்துவரும் பல கலைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களை பெரும்பாலும் எல்லா படங்களிலும் நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணமாக சரத்குமார், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் எல்லாம் அவரவர் திறமைக்கேற்ப நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக எஸ் ஜே சூர்யா பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து அவர்களையே ஓவர் டேக் செய்து போய்க் கொண்டே இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா அவர் இயக்கிய இரண்டு படங்களுமே காலம் காலமும் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்த படங்களாகும்.

    இதையும் படிங்க: குட்டி இடுப்பு செம கும்தவா இருக்கு!.. வேதிகாவை ஜூம் பண்ணி ரசிக்கும் ரசிகர்கள்!…

    அதிலும் இரு பெரும் டாப் ஹீரோக்களான விஜய் அஜித் ஆகியோர்களை வைத்து வாலி, குஷி போன்ற இரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் இன்றளவும் எஸ் ஜே சூர்யா வின் கெரியர் அந்த இரு படங்களாலேயே பெருமளவு பேசப்பட்டு வருகிறது. அந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் ஏன் படத்தை இயக்கவில்லை?

    இப்போது ஒரு படத்தை கொடுக்கலாமே என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். ஆனால் அந்த படங்களுக்குப் பிறகு அவர் இயக்கவிருந்த ஒரு படம் அதுவும் சிம்புவை வைத்து. இதைப் பற்றிய ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு, அசின் ஆகியோர் நடிப்பில் ஏசி என்ற பெயரில் ஒரு படம் தயாராகும் நிலையில் இருந்ததாம்.

    இதையும் படிங்க: திவ்யாவாக திரையுலகை திண்டாட வைத்த சோனியா.. த்ரிஷா நயன் ரேஞ்சுக்கு ஏன் ஜொலிக்க முடியல?

    அதற்காக போட்டோ சூட் எல்லாம் எடுத்து படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளருக்கும் பட குழுவுக்கும் ஏதோ சில பிரச்சனை காரணமாக அந்த படம் அப்படியே டிராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இல்லையெனில் குஷி வாலி இந்த வரிசையில் அடுத்து இந்த படமும் ஒரு ஹிட் அடித்து இருக்கும் என்று கருதப்படுகிறது.