Tag: arjun

  • எப்போ பணம் வேணாலும் தயங்காம கேளுங்க…வெண்ணிற ஆடை மூர்த்தியை நெகிழ வைத்த அர்ஜூன்

    80, 90களில் கமெடி நடிகர்களில் தவிர்க்க முடியாதவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வெண்ணிற ஆடை படம் மூலம் அறிமுகம் ஆனவர் அவர். அந்த படம் ஹிட் அடிக்கவே அவரை வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்க துவங்கினர். தன்னுடைய முகத்தில் சில சேட்டை பாவங்களுடன் வித்யாசமான சப்தங்கள் தந்து நம்மை சிரிக்க வைப்பவர். நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி மற்றும் வடிவேலு என அனைத்து காமெடி நடிகர்களுடன் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் கவர்ந்து வருபவர் அவர். தற்போது வயோதிக காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

    பொதுவாகவே அர்ஜூன் தனது படங்களில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு கேரக்ட கொடுப்பது வழக்கம். கற்பக வந்தாச்சு படத்திலிருந்து துரை, சின்னா,வேதம் என பல படங்களிலும் அவருக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க் வந்தார் அர்ஜூன்.

    இந்த நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, அர்ஜூன் சார பத்தி ஒன்னு சொல்லியே ஆகனும். முதலில் அவர் படத்தில் நடிக்கும்போது சம்பளம் பேசிக் கொள்வேன். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்படபின்பு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டேன். அர்ஜூன் படமா எனன் அம்ப்ளம்னாலும் ஓகேனு சொல்லிடுவேன். அப்படி இருக்கையில் ஒரு படத்தில் அவருடன் நடித்தபோது எனக்கு சம்பளம் அதிகமாக கொடுத்துவிட்டார். அது குறித்து அவர்ரிடம் கூறினேன். அதற்கு அவர் உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துனக்க.. மீதியை சின்ன நடிகர்களுக்கு கொடுத்துடுங்க என்றார். மேலும் சர் உங்களுக்கு எப்போது பணம் வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்க என்றார். அவ்வலவு நல்ல மனிடஹ்ர் அர்ஜூன் சார் என்றார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

  • இது அதுல்ல… ஐஸ்வர்யா நடிப்பில் சீதா பயணம்… அப்பா அர்ஜூன் சாதிப்பாரா? சறுக்குவாரா? டீசர் கொடுத்த ஷாக்!

    Aishwarya Arjun: ஐஸ்வர்யா அர்ஜூன் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் சீதா பயணம் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் அர்ஜூன். அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்து வந்தது. நடிப்பு மட்டுமல்லாமல் டைரக்‌ஷனிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

    1992ம் ஆண்டு சேவகன் என்ற படத்தினை இயக்கினார். அப்படம் சுமார் வெற்றியை பெற்றாலும் தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட துருவ் சர்ஜாவின் மார்ட்டின் படத்தின் கதையை எழுதியது அர்ஜூன் தான்.

    இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் சீதா பயணம். இப்படத்தினை அவருடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராம் இண்டர்நேஷனல் மூலம் அர்ஜூனே தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

    இப்படத்தின் ஹீரோவாக விஸ்வாக் சென் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு நிரஞ்சன் சுதியை என்னும் புதுமுக நடிகரை அறிமுகம் செய்து இருக்கிறார்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில், கிட்டத்தட்ட இருவரின் கார் பயணம் அதிகம் இருப்பதால் பையா படத்தினை போல இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் டீசரின் இறுதியில் துருவ் சர்ஜா ஒரு கேமியோ ரோலிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • சரக்கு ஊற்றி!.. அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட தம்பி ராமையா மகன்!.. ஒரே மஜா தான் போல!..

    அர்ஜுன் மகளை கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் கோயிலில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி லீலா பேலஸில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நடிகர்கள் என்பதால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக இருவரும் நடனமாடும் காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. திரைப்படங்களில் காட்டுவதைப் போல மது கோப்பைகளை அடுக்கி வைத்து ஷாம்பைன் பாட்டிலை ஓபன் செய்து உமாபதி ராமையா கோப்பைகளில் நிரப்பும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அப்பா பெயரையே பயன்படுத்த மாட்டியா?.. சிவாஜி மகனுக்கு என்ன நிலைமை ஆச்சு தெரியுமா?.. பிரபலம் பேச்சு!..

    நடிகர் அர்ஜுன் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், அதில் போட்டியாளராக பங்கேற்ற உமாபதி ராமையாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்தது போல அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவின் காதல் கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில் பலநூறு கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார் உமாபதி ராமையா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பல கோடிகள் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கணவனும் மனைவியும் ஆட்டம் பாட்டத்துடன் பிரபலங்களை வியக்க வைத்த போட்டோக்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நடிக்கனு கூப்பிட்டு அவங்க எதிர்பார்த்ததே வேற! குஷ்பு படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்

    உமாபதி ராமையா நடித்த பித்தல மாத்தி திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அந்த படத்தின் புரமோஷனுக்கே வராமல் தனது திருமணத்தில் பிசியாக உமாபதி ராமையா இருந்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் தியேட்டர் வாசலில் படத்தைப் பார்க்க யாருமே வரவில்லை என புலம்பினார்.

    சினிமாவில் ஹீரோவாக பெரிதாக சாதிக்காத நிலையில், அவரை போலவே ஹீரோயினாக அறிமுகமானாலும் ஹிட் அடிக்காமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்ட ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் தற்போது வெளிநாட்டில் ஹனிமூன் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்த்!.. விஜய் போட்ட கண்டிஷன்!. பதட்டத்தில் வெங்கட்பிரபு…

  • பாலியல் புகாரில் சிக்கிய 3 முக்கிய பிரபலங்கள்!.. ஆனாலும் ஒன்னும் பண்ண முடியலயே!..

    பொதுவாக பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது எல்லா துறையிலும் இருக்கிறது. பேருந்தில் செல்லும் பெண்கள் கூட பாலியல் சீண்டல்களை சந்திப்பதுண்டு. பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் என எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது இருக்கிறது.

    பல வருடங்களாக பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். ஆனால், எல்லோரும் தண்டிக்கப்படுகிறார்களா என்பதுதான் இல்லை. ஏனெனில் சட்டத்திற்கு ஆதாரம் வேண்டும். சினிமாத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது அதிக அளவில் இருக்கிறது. அதற்கு பல ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம் ‘வாய்ப்பு’ என்பதுதான்.

    இதையும் படிங்க: உச்சத்தில் வர வேண்டிய நடிகை… விபச்சார வழக்கால் தொலைந்த வாழ்க்கை…

    அதோடு, ‘என்னிடம் இவர் இப்படி நடந்து கொண்டார்’ என வெளியே சொன்னால் யாரும் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். திரையுலகில் எல்லோரும் அப்படி இல்லை என்றாலும் சிலர் இன்னமும் அப்படித்தான் இருக்கிறார்கள். அதேநேரம், சொல்லப்படும் பாலியல் புகார் உண்மையிலேயே நடந்ததா இல்லை கவன ஈர்ப்புக்காகவும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டும் அது நடந்ததா? என்பது புகார் சொல்பவருக்கே வெளிச்சம்.

    அப்படி திரையுலகில் பாலியல் புகாரில் சிக்கிய 3 பிரபலங்கள் பற்றி பார்ப்போம். முதலில் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் எந்த பாலியல் புகாரிலும் சிக்கவில்லை. ஆனால், பாடகி சின்மயி ‘வைரமுத்து என்னை தவறான நோக்கத்தில் அழைத்தார்’ என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். டிவிட்டரில் பல பதிவுகளை போட்டார். ஆனால், வைரமுத்து எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை.

    இதையும் படிங்க: என் படத்தை பாக்க மாட்டேனு சொல்லிட்டாரு! ரஜினி பற்றி பகத்பாசில் சொன்ன சீக்ரெட்

    ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தும் அவர் மீது எந்த நடிகையும் பாலியல் புகாரை சொல்லவில்லை. ஆனால், நிபுணன் என்கிற படத்தில் அவருடன் நடித்த சுருதி ஹரிஹரன் என்பவர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நீதிமன்றம் வரை அவர் சென்றும் ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    sruthi

    தெலுங்கில் அதிரடி படங்களில் நடித்து வருபவர் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. நிஜவாழ்க்கையிலேயே ரசிகர் ஏதேனும் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொண்டால் பொது இடம் என கூட பார்க்காமல் பளார் என அறை விடுவார். தமிழ் பட நடிகை விசித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பாலையா தன்னுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது கணவர் மட்டுமே தனக்கு துணையாக நின்றதாகவும் கூறி இருந்தார். ஆனால், பாலையா எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை.

    இது போக ஸ்ரீரெட்டி என்பவர் விஷால், ராகவா லாரன்ஸ், உதயநிதி என பலர் மீது பலரும் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திகொண்டதாக சொல்லி பரபரப்பை பற்ற வைத்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

  • அந்த வடிவேலு படத்தில் நடிக்க வேண்டியது விஜயா?!.. படம் வேறலெவலா இருந்திருக்குமே!…

    தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த திரைப்படத்தில் எந்த நடிகர் நடிக்கிறார் என்பதை யாராலும் முடிவு செய்யவே முடியாது. அதை காலமும், சூழ்நிலையுமே தீர்மானிக்கும். ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமல் நடிப்பார். கமல் நடிக்க வேண்டிய படத்தில் ரஜினி நடிப்பார். அஜித்துக்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடித்து ஹிட் கொடுப்பார்.

    விஜய் நடிக்க வேண்டிய படத்தில் சூர்யா நடிப்பார். இப்படி நடிகர்களின் கால்ஷீட்டுக்கு ஏற்றபடி எல்லாமே மாறும். எந்த கதைக்கு யார் நடிகர் என்பதை சில காரணங்களே தீர்மானிக்கும். ஷங்கர் தான் எழுதிய எல்லா கதைகளுக்கும் முதலில் சென்றது ரஜினியிடம்தான். ஜென்டில்மேன் கதை கமலுக்கு சொல்லப்பட்டது. இந்தியன் கதையை கூட ரஜினியை மனதில் வைத்துதான் ஷங்கர் எழுதினார்.

    இதையும் படிங்க: மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..

    கமலுக்கு அவர் சொல்லி ரோபோ கதைதான் பின்னாளில் ரஜினி நடிக்க எந்திரனாக வெளிவந்தது. இப்படி பல உதாரணங்கள் சினிமா உலகில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் மசாலா திரைப்படங்களை இயக்கி வருபவர் சுராஜ். இயக்குனர் சுந்தர் சி-யிடம் சினிமா கற்றவர் இவர்.

    எனவே, இவரின் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. தலைநகரம், மருதமலை, மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார். கடைசியாக வடிவேலு வைத்து நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய தலைநகரம் மற்றும் மருதமலை ஆகிய இரண்டு படங்களிலும் வடிவேலுவின் காமெடி ஹைலைட்டாக இருக்கும்.

    இதையும் படிங்க: தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி!.. சோகத்திலும் நடிக்கவந்த நடிகர் திலகம்!..

    தலைநகரத்தில் டுபாக்கூர் ரவுடி நாய் சேகராக வந்து வந்து கலக்கி இருப்பார். மருதமலை படத்தில் என்கவுண்டர் ஏகாம்பரமாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இந்த படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் வடிவேல் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட்.

    உண்மையில் மருதமலை படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் விஜய்தானாம். கதையெல்லாம் பிடித்து போய் சுராஜுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் சச்சின் படத்தில் நடிக்க போய்விட, அர்ஜூனை வைத்து படத்தை எடுத்திருக்கிறார் சுராஜ். இதை சுராஜே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அர்ஜூன் நன்றாக நடித்திருந்தாலும் விஜய் நடித்திருந்தால் இப்படம் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.