Tag: danush

  • பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கர. தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை இதுதான். 90களில் ஈராக், குவைத் போர் நடந்தது. இந்த சமயத்தில் இன்டர்நேஷனல் மில்டரி போய் போரை முடித்து வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நடக்குற கதை. அப்போ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நடக்குற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ஹீரோ தனுஷ் திருட்டு வேலையில் இறங்கி மாட்டிக் கொள்கிறார். அதிகாரியை அடித்துவிட்டு தப்பி விடுகிறார். காதலியை அழைத்து ஆந்திரா போய் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார்.

    கொஞ்சநாளில் அவருக்கே சலிப்பு வருகிறது. நாமே ஒரு தொழில் செய்யலாம்னு நினைத்து ஊரில் ஒரு ஓட்டல் வைக்கலாம்னு வர்றாரு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுல இவரது டிராக்டர் ஓடாம இருக்கு. வங்கியில் டியூ கட்ட வேண்டி இருக்கு. சொத்தை அடமானம் வைத்துதான் கடன் வாங்கி இருக்காங்க. அதனால் சொத்தை வங்கி ஜப்தி செய்கிறது. பெரிய தொகை தேவைப்படுகிறது. அப்போ தான் சொத்தை மீட்க முடியும். அதனால ஹீரோ மறுபடியும் கொள்ளை அடிக்கிறார்.

    இப்போ அதே அதிகாரி மீண்டும் பிடிக்கிறார். அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஒரு பீரியட் பிலிம். கதைக்கு சுவாரசியமான திரைக்கதை இல்லை. வங்கி கொள்ளை அடிப்பதுதான் கதை. வங்கியைக் கொள்ளை தான் அடிக்கப் போறாங்கன்னு உயர் அதிகாரிக்குத் தெரிந்தபிறகும் அவரது நடவடிக்கை பெரிதாக இல்லை. சின்ன விவசாயிகள் கூட வீட்டு வீட்டுக்கு டிராக்டர் வாங்கி வைப்பது எல்லாம் அபத்தம். வங்கி அதிகாரின்னா வசூல் பண்ணித்தானே ஆகணும். அவரைக் கெட்டவனா காட்டுறாங்க.

    கந்து வட்டிக்காரன் மாதிரி காட்டுறாங்க. சூரஜ் வெஞ்சனமூர்த்தி சிரிப்பு போலீஸ் அதிகாரியாகத் தான் காட்டுறாங்க. வில்லன் மாதிரி இல்லை. படம் டெட் ஸ்லோவா இருக்கு. படத்தைப் பார்க்க போக முக்கிய காரணம் தனுஷைத் தாண்டி போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவோட படம். நல்லா இருக்கும்னு நினைச்சா இது விறுவிறுப்பு இல்லாம எப்படா முடியும்கற மாதிரி இருந்தது. ரொம்ப போராகிப் போச்சு என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.

  • ஆடியோ லாஞ்சுக்கு பிறகாவது தனுஷ் படத்துக்கு ஹைப் வருமா?.. இட்லி கடை பஞ்சாயத்து பத்தி வாய் திறப்பாரா?

    கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் மற்றும் அவரது டீம் பல ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு பட்டித் தொட்டி எங்கும் தக் லைஃப் என ஒரு படம் வரப் போகிறது என்பதை தெரிவித்தது மட்டுமின்றி கன்னட மொழி பற்றி பேசி கர்நாடகாவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி தேசியளவில் வைரல் செய்தியாகவும் தனது படத்தை கமல்ஹாசன் படு ஜோராக வியாபாரம் பார்த்து வருகிறார்.

    ஆனால், ஜூன் மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ள தனுஷின் குபேரா படம் தொடர்பாக இதுவரை பெரிதாக எந்தவொரு ஹைப்பும் எழவில்லை. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில், தான் தனுஷ் இந்த படத்தில் நல்லா நடிச்சிருக்காரே என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

    நாளை குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பிறகு தான் படத்திற்கான ஹைப் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி விட்டார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திட்டமிட்டபடி இட்லி கடை படம் வெளியாகுமா? அமலாக்கத்துறை சோதனையில் தனுஷ் சிக்கினாரா? இல்லையா? தேவையில்லாமல் மற்ற பிரபலங்களின் விவாகரத்து சர்ச்சையில் தனுஷ் பெயர் சிக்குவது உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் குபேரா படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு செல்வார்கள் என தெரிகிறது. வரும் ஜூன் 20ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள குபேரா படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

  • தனுஷின் குபேரா டீசர் எப்படி இருக்கு?.. நாகார்ஜுனாவை அடிக்குற சீன் செம!.. சரஸ்வதி சபதமா இருக்குமோ?

    சரஸ்வதி சபதம் படத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என நாரதர் பாட்டுப் பாட ஊமையான சிவாஜி பாட்டுப் பாடும் புலவராக மாறிவிடுவார். கோழையான ஜெமினி கணேசன் வீரமான தளபதியாக மாறிவிடுவார். பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த கே.ஆர். விஜயா கழுத்தில் யானை மாலை போட அவர் ராணியாகி விடுவார்.

    அதுபோல பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷை செல்வந்தனாக நாகார்ஜுனா மாற்ற அதன் பின்னர் என்ன என்ன பிரச்னை எல்லாம் நடக்கிறது என்கிற கதையில் தான் குபேரா படம் உருவாகி உள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது.

    இன்று வெளியான டீசரில் நாகார்ஜுனாவின் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்க, அதன் பின்னர் தனுஷை பிச்சைக்காரனாக காட்டும் இடங்களிலும், அவருக்கு கோட் மாட்டி விட்டு நாகார்ஜுனா பெரிய சிக்கலில் கோர்த்து விடப் பார்ப்பதும், ஒரு கட்டத்தில் நாகார்ஜுனாவையே தனுஷ் அடிக்க பாயும் காட்சிகள் என டீசர் முழுக்கவே எமோஷனல் காட்சிகள் பாடல்களின் வழியே கனெக்ட் செய்யப்பட்டு இருப்பது சூப்பர்.

    இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஃபிளாப் ஆன நிலையில், குபேரா படம் தனுஷுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி ஹர வீர மல்லு படம் வெளியாகும் நிலையில், இந்த படம் தள்ளிப் போகும் என கிசுகிசுக்கள் கிளம்பினாலும் படக்குழு ஜூன் 20 படத்தை வெளியிட உறுதியாக உள்ளனர்.

  • நயன்தாரா விவகாரம் பற்றி எரியுற நேரத்துல தனுஷ் பாங்காக் போயிருக்காராமே… ஏன்னு தெரியுமா?

    நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் தீனி. எங்கு திருப்பினாலும் அதுதான் ஓடுகிறது. நாளை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகிறது.

    நயன்தாரா – தனுஷ் 

    Also read: கங்குவாக்காக களமிறங்கிய ஜோதிகா!.. அவரையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள்?!… இப்படி மாட்டிட்டீங்களே!..

    இந்த சூழலில் நயன்தாராவின் விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி கொடுப்பார் என்று பார்த்தால் சத்தம் காட்டாமல் இருக்கிறாரே. என்ன செய்கிறார் என்று பார்த்தால் தான் தெரிகிறது. அவர் ஊருலயே இல்லையாம். பாங்காக்ல சூட்டிங்க்ல இருக்காராம். அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. நித்யா மேனன் அவருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்.

    இந்தப் படத்தைக் கலைப்படம் போல அணுஅணுவாக செதுக்குகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடக்கிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

    பாங்காக்

    தனுஷ் இயக்குற இட்லி கடை படத்துக்கு பாங்காக் போறாங்களாம். பாங்காக்னு சொன்னாலே யானை தான் நினைவுக்கு வரும். இட்லி கடை படத்துல யானையோட சீன் எதுவும் வைக்கப் போறாங்களான்னு தெரியல என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில் இதுதான்.

    இட்லி கடை படத்துல சத்யராஜ் மிகப்பெரிய பணக்காரராக நடிக்கிறார். அவரோட பங்களாவைக் காட்டுறதுக்கு இங்கே தேடிப் பார்த்துருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரி அமையல. அதனால பாங்காக்ல ஒரு ஆடம்பரமான பங்களாவைப் பார்த்துருக்காங்க. சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படமாக்குறதுக்குத் தான் குறிப்பா தாய்லாந்து போறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இட்லி கடை

    idli kadai
    idli kadai

    தனுஷ் இயக்கும் நாலாவது படம் இட்லி கடை. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகிறது. படத்திற்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தனுஷ் உடன் 9வது முறையாக இணைகிறார். தனுஷூக்கு இது 52வது படம். படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவை செய்கிறார். பிரசன்னா எடிட்டராகப் பணியாற்றி வருகிறார்.

    Also read: அமரன்ல பாதி கூட கலெக்ஷனை எட்டாத கங்குவா… தனுஷால தப்பித்த சூர்யா!

    இந்தப் படத்தின் கதை அம்சம் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனுஷ் இயக்கத்தில் வந்த 2படங்களுமே ஹிட். இதுவும் நிச்சயமாக வெற்றி பெறும் என்றே தெரிகிறது. ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மட்டும் வெளியாகத் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.