Tag: GeminiGanesan

  • ஜெய்சங்கருக்குக் கிடைக்க வேண்டிய 2 அருமையான வாய்ப்பு… ஆனால் தட்டிப் பறித்ததோ எம்ஜிஆர், ஜெமினி!

    ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 2 மிக முக்கியமான படங்களைத் தவறவிட்டவர் ஜெய்சங்கர். இவ்வளவுக்கும் ஏவிஎம்மின் பிள்ளைகளான சரவணன், குமரன், பாலசுப்பிரமணியம் அனைவருடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் மக்கள் திலகம் ஜெய்சங்கர். எம்ஜிஆர் நடித்த அன்பே வா கலரில் உருவானது.

    அந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. அவரைத் தான் ஹீரோவாகப் போடணும்னு ஏவிஎம். நினைத்தார். இதற்கிடையில் எம்ஜிஆரின் கால்ஷீட் உடனடியாகக் கிடைக்கவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எம்ஜிஆரை நடிக்க வைத்தார்கள்.

    அதே போல ஜெய்சங்கர் தவற விட்ட இன்னொரு முக்கியமான படம் ராமு. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த குழந்தையும், தெய்வமும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தனது அடுத்த படத்திலும் ஜெய்சங்கரையே ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என ஏவிஎம் நினைத்தனர்.

    இந்த நிலையில்தான் ராமு என்ற ஒரு படத்தை ஏவிஎம் எடுக்கப்போவதை ஜெமினிகணேசன் அறிந்தார். உடனே அவர் மெய்யப்பச் செட்டியாரைத் தொடர்பு கொண்டு அந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது நீ வாங்கற சம்பளம் அதிகம். நான் இந்தப் படத்தை சின்ன பட்ஜெட்ல எடுக்கலாம்னு நினைக்கிறேன்னு ஏவிஎம். சொன்னாராம். அதற்கு ஜெமினி நீங்க என்ன சம்பளம் கொடுக்குறீங்களோ கொடுங்க. ஆனா நான் தான் இந்தப் படத்தில ஹீரோவா நடிப்பேன்னு சொன்னாராம் ஜெமினி.

    ஜெமினி ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து ஹிட் கொடுத்தவர். அதனால் அவரது பேச்சைத் தட்ட முடியாத ஏவிஎம். தன்னுடைய மகன்களிடம் அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக ஜெமினிகணேசனை ஒப்பந்தம் செய்யலாம்னு சொன்னார்.

    அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாத சரவணன், குமரனுக்கோ ஜெய்சங்கரை மாற்ற துளி கூட விருப்பமில்லை. என்றாலும் அப்பா சொன்னதை தட்டாமல் இருவரும் ஏற்றனர். அதனால்தான் ராமு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு அமைந்தது. ஜெய்சங்கருக்கு அது மிஸ் ஆனது.

  • ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

    சாவிதிரி, ஜெமினிகணேசன் பிரிவுக்கு சந்திரபாபு தான் காரணம் என்று சொல்கிறார்கள். இது குறித்து சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா!…

    1965-66ல் தட்டுங்கள் திறக்கப்படும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதை எழுதி இயக்கியவர் சந்திரபாபு. மனோகர் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜெமினிகணேசன் தான் நடித்தார். சாவித்திரி தான் ஹீரோயின். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், சோ, தங்கவேலு, விகே.ராமசாமி, சந்திரபாபு உள்பட பலர் நடித்தனர்.

    TT
    TT

    ஜெமினிகணேசனும், சந்திரபாபுவும் நல்ல நண்பர்கள். இருவரும் நன்றாக மது அருந்துவார்கள். ஜெமினியும், சாவித்திரியும் திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் நெருக்கம் குறைய ஆரம்பித்தது. பணத்தின் மீது தான் ஜெமினிகணேசன் குறியாக இருந்தாராம். இந்நிலையில் சாவித்திரிக்கும் குடும்பம், குழந்தைகள் பற்றிய கவலை வந்துவிட்டது. தனக்கு ஒரு துணை தேவை என்று எண்ணினார்.

    இந்த நிலை சந்திரபாபுவுக்கு சாதகமாகி விட்டது. ஏற்கனவே இருவரும் நெருங்கிப் பழகுவார்கள். ஆனால் இந்த நிலையில் சொல்ல வேண்டுமா? அப்போது சாவித்திரிக்கும், சந்திரபாபுவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது. வெளியே ஒன்றாக ஷாப்பிங் போவார்களாம். இரவில் நீண்ட நேரம் கழித்துத் தான் திரும்புவார்களாம்.

    இந்நிலையில் தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் திடீரென மனோகரைக் கதாநாயகனாகப் போட்டாராம் சந்திரபாபு. இதற்கு ஜெமினிகணேசன் சந்திரபாபுவுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தாராம். இந்த சண்டையில் கைகலப்பாகி விட்டதாம். சாவித்திரியுடன் இனி கனெக்ஷன் வச்சேன்னா தொலைச்சிடுவேன்னு சட்டையைப் பிடித்துக் கேட்டாராம்.

    Jawahar
    Jawahar

    அந்த உடனே சந்திரபாபு சாவித்திரிக்குப் போன் பண்ணி விட்டாராம். அவரும் வந்துவிட, ஜெமினிகணேசன் அவரை திட்டினாராம். அதற்கு சாவித்திரியும் சந்திரபாபுவுக்கு ஆதரவா பேசிவிடுகிறார். இருவரும் சேர்ந்து மது குடித்தீர்களான்னு கேட்டார். ஆமா இதுல என்ன தப்பு? நான் படம் எடுத்து நஷ்டத்துல கஷ்டப்பட்டபோது என்னைப் பார்த்தீங்களான்னு கேட்டாராம் சாவித்திரி.

    இந்த விவாதம் கடுமையாக மாறியதும் அவர் ஜெமினியின் கண் எதிரேயே மது அருந்தினாராம். நான் உங்களோட இனி வர மாட்டேன், இங்கே தான் இருக்கப் போறேன்னும் சொன்னாராம். இவன் இருக்குறது வாடகை வீடு. நாம சொந்த வீடு. காரு பங்களா இருக்குன்னு எவ்வளவோ ஜெமினி கணேசன் எவ்வளவு சொல்லியும் சாவித்திரி அவருடன் செல்லவே இல்லை’ என ஜவஹர் தெரிவித்தார்.

    அதேநேரம், சந்திரபாபுவும் , சாவித்ரியும் நட்பாகத்தான் பழகினார்கள். இது ஜெமினி கணேசனுக்கும் தெரியும் எனவும் சிலர் சொல்வதுண்டு.