Tag: indian 3

  • ஷங்கரின் வீட்டுக்கே போன ரஜினி!.. இந்தியன் 3 டேக் ஆப் ஆனதன் பின்னணி!…

    Indian3: ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் லஞ்சத்தை எதிர்த்து களம் இறங்கிய கதை. லஞ்சம் வாங்கினால் இந்தியன் தாத்தா கத்தியால் குத்துவார் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்ததால் படம் சூப்பர் ஹிட் ஆனது.

    இந்த படம் வெளியாகி 28 வருடங்கள் கழித்து இந்தியன் 2-வை எடுத்தார் ஷங்கர். லைக்கா புரடெக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. இந்தியன் 2 துவங்கும் போது கமலுக்கு பேசிய சம்பளம் 30 கோடி. ஆனால், விக்ரம் சூப்பர் ஹிட் ஆனதால் கமல் அதிக சம்பளம் கேட்டார். ஒருபக்கம், ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை துவங்கினார்.

    லைக்காவுக்கும், ஷங்கருக்கும் முட்டிக்கொள்ள ‘இந்தியன் 2-வை முடிக்கமால் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது’ என லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பின் அது பேசி தீர்க்கப்பட்டு ஷூட்டிங் துவங்கியது. ஒரே நேரத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என 2 படங்களையும் ஷங்கர் இயக்கினார்.

    இந்தியன் 2-வுக்கு பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதோடு, படம் ட்ரோலிலும் சிக்கியது. ஷங்கர் ஒரே ஃபார்முலாவில் படம் எடுக்கிறார். ஒரே கிரின்ச்சாக இருக்கிறது. ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என பலரும் சொன்னார்கள். ஒருபக்கம், இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். இன்னும் ஒரு பாடல் காட்சியும், சில கிராபிக்ஸ் வேலைகளும் மட்டுமே பாக்கி இருக்கிறது.

    ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் கமல் இதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில்தான் ரஜினி கமலிடமும், லைக்காவிடமும் பேசி இந்தியன் 2 டேக் ஆப் ஆக உதவியிருக்கிறார் என நேற்று செய்திகள் வெளியானது. ஆனால், நடந்ததே வேறு என்கிறார்கள். ரஜினியை தொடர்பு கொண்டு பேசிய லைக்கா சுபாஷ்கரன் ‘இந்தியன் 2-வில் இவ்வளவு கோடி முதலீடு செய்திருக்கிறோம். நீங்கள் கமல்,ஷங்கர் இருவரிடமும் பேசி படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்’ என கோரிக்கை வைத்தாராம்.

    உடனே களத்தில் இறங்கிய ரஜினி ஷங்கரின் வீட்டுக்கே நேரில் போயிருக்கிறார். படத்தை முடிக்க 6 கோடி செலவாகும் என ஷங்கர் சொல்ல அங்கிருந்தவாறே சுபாஷ்கரனுக்கு போன் போட்டிருக்கிறார் ரஜினி. ‘6 கோடி முடியாது ஒன்றரை கோடியில் முடிக்க சொல்லுங்கள்’ என சுபாஷ்கரன் சொல்ல ஷங்கர் அப்செட் ஆகிவிட்டார். அதன்பின் ரஜினி பேசி சுமூக முடிவை எட்ட உதவி செய்திருக்கிறார்.

    இந்தியன் 3 ரிலீஸாகும் வரை ஷங்கரும், கமலும் சம்பளம் கேட்கக் கூடாது. படம் வியாபாரம் ஆகும்போது அவர்களின் சம்பளத்தை கொடுத்துவிடுகிறோம் என லைக்கா தரப்பு சொல்லியிருக்கிறது. கமலும், ஷங்கரும் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்றே சொல்லப்படுகிறது. கமல் நடித்த காட்சிகளை ஷங்கர் ஏற்கனவே எடுத்துவிட்டார் என்பதால் மற்ற நடிகர்கள் மட்டுமே இதில் நடிக்கவுள்ளனர். விரைவில் இதற்கான வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • படுத்துக்கிடந்த இந்தியன் 3ஐத் தூக்கி விட்ட ரஜினி…! 77ல் விட்டுக் கொடுத்த கமலை மறப்பாரா?

    கமல் வரும் 25ம் தேதி திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக பதவி ஏற்க உள்ளார். இதற்காக தன் நண்பர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். வேள்பாரி விழாவில் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரைப் புகழ்ந்து பேசினார். இந்தியன் 3 ஐ எடுப்பதற்காக ரஜினியே உள்ளே இறங்கி சுபாஷ்கரனிடம் பேசி உள்ளார். இந்தப் படத்துக்காக கமலும், ஷங்கரும் சம்பளம் வாங்கப்போறது இல்லையாம். ரஜினிகாந்த் இந்தியன் 3க்காக பேசி சுமூகமான தீர்வைத் தந்துள்ளார் என்றும் அதற்கு நன்றி சொல்வதற்குத் தான் கமல் தற்போது அவரை சந்தித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ஒருவேளை இந்தியன் 3ல் கேமியோ ரோலில் ரஜினி நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

    ரஜினியும் கமலும் 80களில் திரையுலகில் கோலோச்சிக் கொண்டு இருந்தனர். அவரது ரசிகர்களுக்குள் கடும் போட்டி இருந்தது. இருவரின் படங்களுக்கும் ஆரோக்கியமான போட்டி இருந்ததே தவிர பொறாமை கிடையாது. அதே நேரம் கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். பஞ்சு அருணாசலம் ஒரு அருமையான கதையை எழுதினார்.

    அதில் ரஜினி, சிவக்குமாரை நடிக்க வைக்கலாம் என திட்டம் போட்டார். படத்தில் சம்பத் என்பது தியாகி கேரக்டர். அதில் ரஜினி நடிப்பதாக இருந்தது. இன்னொரு கேரக்டர் நாகராஜ். முதலில் நாகராஜ் கேரக்டரில் ரஜினியும், சம்பத் கேரக்டரில் சிவக்குமாரும் நடிப்பதாக இருந்தது. படத்தின் இயக்குனர் எஸ்பி.முத்துராமன். திடீர்னு பஞ்சு அருணாசலத்துக்கு ஒரு யோசனை வருது.

    ஆர்டரைத் திருப்பிப் போட்டா என்னன்னு நினைச்சிட்டாரு. ரஜினிக்கு சம்பத் கேரக்டரிலும், நாகராஜ் சிவக்குமார் கேரக்டரிலும் நடிக்க வைப்பதுன்னு முடிவு செய்தார். அவர்களிடம் போய் விவரம் சொன்னார். இது சரியா வருமான்னு சிவக்குமார் கேட்டார். அதற்கு பெரிய கதாசிரியர் பஞ்சு அருணாசலம் விளக்கம் சொன்னதும் சம்மதிக்கிறார்.

    அதே போல ரஜினியும் முதலில் தயங்கி பின் சம்மதிக்கிறார். படத்தில் நீளமான வசனத்தை ரஜினிக்குப் படித்துக் காட்டியதும் ஒன்றும் பேசாமல் செட்டை விட்டு வெளியே போய்விட்டாராம். அதன்பிறகு ரஜினி ஏவிஎம் வாசலில் வைக்கப்பட்டுள்ள ஏவிஎம் லோகோவில் உள்ள முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு மீண்டும் செட்டுக்கு வருகிறார்.

    அங்கு இது நான் நடிக்க வேண்டிய கேரக்டர் இல்லை. கமல் நடிக்க வேண்டியதுன்னு சொல்கிறார். அதற்கு எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் கமல் இதுமாதிரி நிறைய நடிச்சிட்டாரு. இதுல நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு சொல்லி ஆர்வத்தை உண்டாக்கினர். நீண்ட டயலாக்கை உங்களால் எவ்வளவு பேச முடியுமோ பேசுங்க. அப்புறம் கட் பண்ணி சேர்த்துக்கலாம்னு சொன்னதும் அவர் சம்மதித்தார். அதுதான் புவனா ஒரு கேள்விக்குறி. சுமித்ராவின் நடிப்பும் அட்டகாசம்தான்.

    படம் சக்கை போடு போட்டது. அந்த வகையில் ரஜினிக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த படம்னா அது இதுதான். அன்று முதல் பஞ்சு அருணாசலம் எப்போ கூப்பிட்டாலும் உடனே வீடு தேடி போவார் ரஜினி. அதே போல ஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் எஸ்பி.முத்துராமனைத் தேடி வேட்டி சேலை பழம் எல்லாம் கொடுத்து அவரிடம் ஆசி வாங்கி வருவார்.

    ஆனால் இந்தப் படம் முதலில் மகரிஷி எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. முதலில் கமலுக்கு இதைச் சொல்ல அவர் ஆர்.சி.சக்தியிடம் ஓகே சொல்லவில்லை. இது படிக்கத்தான் நல்லாருக்கும். சினிமாவுக்கு செட்டாகாதுன்னு கமல் சொல்லி விட்டாராம். அதே நேரம் பஞ்சு அருணாசலமும் அதே நாவலைத் தழுவி எடுத்த படம்தான் இந்த புவனா ஒரு கேள்விக்குறி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • ரஜினியே பேசினாலும் இந்தியன் 3 டேக் ஆப் ஆகாது!.. கமல், ஷங்கர் கேட்கும் சம்பளம் இவ்வளவு கோடியா?!..

    Indian 3: லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. 1996ல் வெளியான இந்தியன் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இந்தியன் 2-வும் ஹிட் அடிக்கும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். வழக்கமாக ஷங்கரின் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார். ஆனால், இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்தார்.

    ஆனால், படம் வெளியான பின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஷங்கரின் அதே பழைய ஃபார்முலா கிரின்ச்சாக இருக்கிறது. ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். எனவே, இப்படம் வசூலை பெறவில்லை. பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

    இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். ஒரு பாடலும், சில கிராபிக்ஸ் காட்சிகளும் மட்டுமே பாக்கி இருக்கிறது. நான் இந்தியன் 2 நடிக்க ஒப்புக்கொண்டதே இந்தியன் 3-க்காகத்தான் என புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் சொன்னார். ஆனால், இந்தியன் 2 ஹிட் அடிக்கவில்லை என்பதால் கமலும், ஷங்கரும் இந்தியன் 3 பற்றி ஆர்வம் காட்டவில்லை.

    சமீபத்தில் ரஜினி ஷங்கர், கமலிடம் பேசி இந்தியன் 3 டேக் ஆப் ஆக உதவியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் ஒரு முக்கிய விஷயம் தெரிய வந்திருக்கிறது. இந்தியன் 2 உருவான போது கமலுக்கும், ஷங்கருக்கும் தலா 36 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் 33 சதவீத பங்கு என பேசியிருக்கிறார்கள். அதேபோல், இந்தியன் 3-க்கு கமலுக்கும், ஷங்கருக்கும் தலா 100 கோடி சம்பளம், லாபத்தில் 25 சதவீதம் என பேசியிருக்கிறார்கள்.

    ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் இந்தியன் 3-க்கு பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்கும் நிலையில் லைகா இல்லை. கமலும், ஷங்கரும் சம்பளத்தை குறைக்க தயாராக இல்லை. எனவேதான், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினியே பேசினாலும் இந்தியன் 3 டேக் ஆப் ஆகுமா என்பது தெரியவில்லை.

  • யாரு சொன்னா ஓடிடின்ன.. உறுதியா சொன்ன சங்கர்… அப்ப மீம்ஸ் கிரியேட்டருக்கு வேலை இருக்கு

    இந்தியன் திரைப்படம்:

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை பெற்றவர் சங்கர். இவர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் சங்கர் மீண்டும் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    இதையும் படிங்க: தயாரிப்பாளர் கேட்டதும் சம்மதித்த இளையராஜா… ஆனா கவிஞர் என்ன இப்படி இருக்காரு?

    இந்தியன் 2 திரைப்படம்:

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், மனோபாலா, விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இந்தியன் தாத்தாவை சமூக வலைதள பக்கங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள், நெட்டிசன்கள் ட்ரோல் செய்து ஒரு வழி செய்து விட்டார்கள். படம் ரிலீஸ்-ஆன சமயத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வந்ததால் நொந்து போய்விட்டார் இயக்குனர் சங்கர்.

    இயக்குனர் சங்கர்:

    இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்த போதே இந்தியன் 3 திரைப்படத்தையும் கையோடு எடுத்துவிட்டார் இயக்குனர் சங்கர். இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து இந்தியன் 3 திரைப்படத்தை ரிலீஸ் செய்வது குறித்து திட்டமிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் படக்குழுவினர்.

    ஆனால் இரண்டாவது பாகம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் அதன் பிறகு மூன்றாவது பாகம் வெளியிடுவது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு இடையில் இயக்குனர் சங்கர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

    இந்தியன் 3 ரிலீஸ்:

    சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். மேலும் இந்தியன் 2 திரைப்படம் இவ்வளவு பெரிய தோல்வியை சந்திக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பலரும் இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் அதனை பொய் என்று மறுத்து இருக்கின்றார் இயக்குனர் சங்கர். இந்தியன் 3 திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கின்றார்.

  • கேம் சேஞ்சருக்கு விழுந்தது க்ரீன் சிக்னல்… போலாம் ரைட்…!

    ஷங்கரின் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படம் பொங்கல் தினத்தையொட்டி வெள்ளித்திரைகளில் வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் இந்தப் படத்தின் மூலமாக அதற்குப் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராம்சரணின் நடிப்பில் வெளிவரும் இந்தப் படம் முதல்வன், இந்தியன், ஜென்டில்மேன் என 3 படங்களின் கலவையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஷங்கர் இன்னும் பழைய டைப் பார்முலாவையே பின்பற்றுகிறார். அவருக்கு இந்தப் பிரம்மாண்டம்தான் பெரிதாகத் தெரிகிறது. அதில் இருந்து வெளியே வர மாட்டேங்குறார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன.

    கடைசியாக கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்டு போடுவார்களா என்றெல்லாம் பேசப்பட்டது. அதனால் படம் வெளியாவதில் சிக்கல் என்றார்கள்.

    இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு வந்துள்ளது. விரைவில் படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்து இருந்தது லைகா நிறுவனம்.

    கமல் இந்தியா திரும்பிய பிறகு பேசிக் கொள்ளலாம் என சுமூகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதே போல கொடுத்த புகாரையும் லைகா நிறுவனம் திருப்பப் பெற்றுள்ளதாம்.

    ஷங்கர் இயக்கத்தில் வரும் ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் படம் வெளியாக உள்ளது. ராம்சரணின் அதிரடி திரைப்படம் இது. தமன் இசை அமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தை ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்குகிறார்.

    அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. கேம் சேஞ்சரில் ராம் சரண் தான் ஹீரோ. கியாரா அத்வானி அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

  • அமெரிக்காவிலிருந்தே பஞ்சாயத்த தீர்த்து வச்ச கமல்.. அடிபணிந்த ஷங்கர்!.. ஆனா ஒரு கண்டிஷன்..

    Game Changer: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தை நேரடி தெலுங்கு படமாக இயக்கி இருக்கின்றார் இயக்குனர் சங்கர். ராம்சரணுடன் இணைந்து இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

    இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கின்றார். ஆந்திராவில் இப்படத்திற்கு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி காட்சி மட்டுமல்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெஷல் காட்சிக்கு அதிக விலைக்கு டிக்கெட் விலை விற்பனை செய்வதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இயக்குனர் சங்கர், நடிகர் ராம்சரண் மற்றும் எஸ்ஜே சூர்யா சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தமிழில் வெளியிடுவதற்கு சில பிரச்சினைகள் இருந்து வந்தது.

    அதாவது லைக்கா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்தை சங்கர் முடித்து கொடுக்காமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று திரைத்துறை கூட்டமைப்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த புகார் சுமூக முடிவை எட்டி இருக்கின்றது. அதாவது நடிகர் கமல்ஹாசன் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.

    தற்பொழுது அமெரிக்காவில் ஏஐ டெக்னாலஜியை படிப்பதற்காக சென்றிருக்கும் கமலஹாசன் அதனை முடித்துவிட்டு இயக்குனர் அன்பு அறிவு இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டிஸ்கஷனில் ஈடுபட்டு இருக்கின்றார். அவர் ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    இதற்கிடையில் இந்தியன் 3 படத்தை மையமாக வைத்து கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிடுவதற்கு பிரச்சனை எழுந்திருப்பதால் அங்கிருந்து வீடியோ கால் மூலமாக லைக்கா மற்றும் சங்கர் உடன் பேச்சுவார்த்தை நடத்திய கமல்ஹாசன் தான் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்.

    அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரும் இந்தியன் 3 திரைப்படத்தை தற்போது எடுத்தவரை லைக்கா நிறுவனத்திற்கு போட்டுக் காட்டுவதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றார். இதனால் கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிடுவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்திருக்கின்றது. இருப்பினும் ஷங்கர் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கின்றாராம்.

    தான் தற்போது வரை இந்தியன் 3 திரைப்படத்தில் எடுத்த காட்சிகளை போட்டு காட்டுகிறேன். ஆனால் மீதம் இருக்கும் காட்சிகளை இப்படித்தான் எடுக்க வேண்டும். இவ்வளவு பட்ஜெட்டில் தான் எடுக்க வேண்டும் என்கின்ற எந்த ஒரு கண்டிஷனும் தனக்கு போடக்கூடாது. என்னுடைய விருப்பப்படி என்னுடைய மேக்கிங் ஸ்டைலில் தான் மீதி படத்தை எடுப்பேன் என்று கூறியிருக்கின்றார். இதற்கு லைக்கா நிறுவனமும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

  • கேம் சேஞ்சர் சோலி முடிஞ்சது.. அடுத்தது இந்தியன் 3 தான்.. ஷங்கர் போடும் பெத்த பிளான்!..

    இயக்குனர் ஷங்கர்: பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வைத்திருப்பவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றது. பெரிய அளவு தோல்விகளை சந்தித்திராத இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றார்.

    இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. கமல்ஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கினார் ஷங்கர். இந்த திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் படம் வெறும் 148 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்தியன் 2 திரைப்படம் பெரியளவு நஷ்டத்தை சந்தித்தது. இதற்கிடையில் இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

    தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரண் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    வெளியான முதல் நாளே படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகி இருந்தாலும் தமிழ் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழில் இந்த திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் மொத்தம் தற்போது வரை 200 கோடியை கூட தொடவில்லை என்று கூறப்படுகிறது.

    வரும் நாட்களிலும் பெரிய அளவு வசூல் இருக்காது என்று கூறப்படுகின்றது. இப்படி கேம் சேஞ்சர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடிவாங்கி இருக்கின்றது. அடுத்த கட்டமாக இயக்குனர் சங்கர் இந்தியன் 3 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தின் பாதி படப்பிடிப்பு இந்தியன் 2 திரைப்படத்துடன் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 6 மாதம் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு கால அவகாசம் ஆகும் என்று சமீபத்தில் பேட்டியில் கூறுகின்றார்.

    மேலும் அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘அடுத்த கட்டமாக இந்தியன் 3 திரைப்படத்தின் வேலைகளை தொடங்க இருக்கின்றோம். ஏற்கனவே படத்தின் பாதி காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியன் 3 படத்தின் பணிகள் அடுத்த ஆறு மாதத்தில் நிறைவடையும். படத்தில் மிகப்பெரிய விஎப்ஹெச் பணிகள் நிலுவையில் உள்ளது.

    மேலும் சில காட்சிகள் படமாக வேண்டி இருப்பதால் அடுத்த கட்டமாக இந்தியன் 3 திரைப்படத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாக முடிவு செய்து இருக்கின்றேன்’ என்று கூறி இருக்கின்றார். ஷங்கரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் கேம் சேஞ்சர் சோலிய மொத்தமா முடிச்சு விட்டுட்டீங்க. அடுத்த டார்கெட் இந்தியன் 3-யா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

  • கேம்சேஞ்சர் தான் அந்தப் படத்துக்கு ஹைப்!.. என்ன இப்படி சொல்லிட்டாரு எஸ்.ஜே சூர்யா!..

    கேம்சேஞ்சர் திரைப்படம் இந்தியன் 3 திரைப்படத்திற்கு நிச்சயம் ஒரு ஹைப்பாக இருக்கும் என்று கூறி இருக்கின்றார் எஸ்.ஜே சூர்யா.

    Actor SJ Suriya: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய எஸ்.ஜே சூர்யா. பின்னர் இயக்குனராக பல ஹிட் படங்களை இயக்கி இருக்கின்றார். இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். தற்போது இயக்கத்தை விட்டு விட்டு முழு நேரமும் நடிகராக நடித்து அசத்தி வருகின்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

    இதையும் படிங்க: உங்கள ‘பொண்ணு’ கேட்டு வந்துருக்கோம்… வீட்டுக்கே சென்ற டாப் ஹீரோ

    எஸ்.ஜே சூர்யாவிற்கு கௌரவ பட்டம்:

    நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு நேற்று வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்ட எஸ்.ஜே சூர்யா என்னுடைய உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைத்த பரிசு. இதனை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியிருந்தார்.

    sj suriya
    sj suriya

    இயக்குனர் அவதாரம்:

    எஸ் ஜே சூர்யா கடைசியாக இசை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து முழு நேரமும் நடிகராக மாறிவிட்டார். வில்லன், கேரக்டர் ரோல் என அடுத்தடுத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக ஜொலித்து வருகின்றார். ஒரு படத்திற்கு 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகின்றார். இந்நிலையில் அடுத்ததாக அவர் ஒரு இயக்கப் போவதாக அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்தார்.

    இயக்குனர் சங்கரின் கேம்சேஞ்சர்:

    நடிகர் எஸ்.ஜே சூர்யா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    indian 3
    indian 3

    அதற்கு பதில் அளித்த எஸ்.ஜே சூர்யா தெரிவித்ததாவது: ‘கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும். அந்த பிளாக்பஸ்டர் ஹிட்டானது இந்தியன் 3 படத்திற்கு ஹைப்பாக இருக்கும். இயக்குனர் சங்கர் ஒரு கடின உழைப்பாளி. அவர் இந்திய சினிமாவிற்கு ஒரு பெருமை. கேம்சேஞ்சர் திரைப்படம் சங்கர் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு கேம்சேஞ்சராக இருக்கும்’ என்று கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: ஒரு வழியா பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு போலயே!.. மீட்டிங் போட்டு கன்ஃபார்ம் பண்ண இளையராஜா-ரஜினி!

    இயக்குனர் சங்கர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்திலும் எஸ் ஜே சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அடுத்ததாக இந்தியன் 3 திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கின்றார். தற்போது கேம்சேஞ்சர் திரைப்படத்தை இந்தியன் 3 திரைப்படத்திற்கு ஹைப் என்று அவர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

  • 23 கெட்டப்பில் கலக்கும் கமல்… அதே நேரம் சொந்தப் படத்துக்கு வந்த சிக்கலைப் பாருங்க..!

    உலகநாயகன் தற்போது பம்பரமாக சுழன்று பல படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவுக்கும் போய் பல தொழில்நுட்பங்களைக் கற்று வருகிறார். தினமும் ஒரே வேலையைப் பார்க்கும் நமக்கே அது எப்போடா முடியும்னு ரொம்ப கஷ்டமா இருக்கு.

    ஆனா ஒரே ஆளாக உலகநாயகன் எத்தனை வேலைகளைப் பார்க்கிறார்? அவருக்கு எவ்வளவு சிக்கல்கள், எத்தனை சவால்கள் வரும் என்று எண்ணிப் பாருங்கள். அவரைப் பற்றி லேட்டஸ்டாக வந்த அப்டேட்டுகளைப் பார்ப்போம்.

    கல்கி 2ம் பாகத்தில் நந்து மாதிரி ஒரு கெட்டப். மொத்தம் 6 பாகத்தில் 23 கெட்டப்பாம். அதனால கல்கி 2ம் பாகத்தில் 6 கெட்டப்கள் வரலாம். 30 நாள்கள் கல்கி படத்துக்காக கமலிடம் கால்ஷீட் கேட்டு இருக்காங்களாம். இந்தியன் 3 படத்துல ரெட்ஜெயண்ட் விலகுவதாகவும், லைகாவும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்சும் மட்டுமே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படம் வந்தால் தான் இதுபற்றிய முழுவிவரம் தெரியவரும்.

    சத்யராஜ்கிட்ட பிக்பாஸ் பற்றி ஆஃபர் வந்துருக்காமேன்னு கேட்குறாங்க. பிக்பாஸ் யார் பண்ணது? கம்பேரிசன்லயே நம்மளைக் கொன்னுடுவாங்க. அவரோட பொசிஷனுக்கு எல்லாம் நாம போக முடியாதுன்னு ஒரே போடாக போட்டாராம் சத்யராஜ்.

    Amaran
    Amaran

    சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் அமரன் படத்தில் இருந்து சோனி நிறுவனம் வெளியேறி விட்டதாம். எஸ்டிஆர் 48 படம் பண்ணாததுக்குக் காரணம் சோனி வெளியேறியது தானாம். அந்த நிறுவனம் தயாரிப்பு விஷயத்தில் ரொமப் கறாராக இருந்ததால் கமலே படத்தைத் தனியாகத் தயாரிப்பதாக முடிவு எடுத்து விட்டார்.

    அந்த வகையில் படமும் அக்டோபர் 31ல் ரிலீஸ் ஆகிறது. படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல. கமல் ரசிகர்களுக்கும் ரொம்பவே உள்ளது. அமரன் வெற்றிவாகை சூடுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    எது எப்படியோ, தடைகளைத் தாண்டி சரித்திரம் படைக்கும் கமலுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சாதனைகளாக மாற்றத் தெரியாதா என்றே அவரது ரசிகர்கள் தரப்பில் சொல்லப்படும் விஷயமாக உள்ளது.

     

  • வேறலெவல் லுக்கில் உலக நாயகன்!.. இந்தியன் 3 கெட்டப் இதுதான்!.. லீக்கான டிரெய்லர் வீடியோ!…

    லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்தியன் 2. 1996ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக 28 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் 750 தியேட்டர்களிலும், உலகமெங்கும் 5 ஆயிரம் தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது.

    முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களையெடுக்கும் சேனாதிபதி இந்தியன் 2-வில் பேன் இண்டியா அளவில் இந்தியா முழுவதும் களையெடுக்கிறார்.

    28 வருடங்கள் கழித்து 2ம் பாகம் வெளியானாலும் 3ம் பாகம் இன்னும் 6 மாதங்களில் வெளியாகவுள்ளது. இந்தியன் தாத்தா சேனாதிபதியுடைய அப்பாவின் வரலாறு, வெள்ளையர்களை எதிர்த்து அவர் போட்ட சண்டை என கதை போகிறது. இந்தியன் 2-வில் நடிக்க இந்தியன் 3-தான் காரணம் என கமலே சொல்லி இருக்கிறார் எனில் அது எப்படிப்பட்ட வேடம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    உண்மையில் இந்தியன் 3 எடுக்கும் எண்ணம் ஷங்கருக்கு இல்லை. ஆனால், இந்தியன் 2 எடுக்கும்போது கதை போன விதம் அடுத்த பாகத்திற்கு அவரை இழுத்து சென்றுவிட்டது என்றுதால் சொல்ல வேண்டும். இந்தியன் 2 வுக்கான கதைதான் இந்தியன் 3-ஆக மாறியது. அதன்பின் இந்தியன் 2-வுக்கு வேறு கதை எழுதி இயக்கினார் ஷங்கர் என சொல்கிறார்கள்.

    லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் இந்தியன் 2-வை உருவாக்கி இருக்கிறது. ஒருகட்டத்தில் நிதிநெருக்கடியை சமாளிக்க முடியாமல் லைக்கா திணறியபோது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்க முன் வந்தது. இதனால்தான் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 டேக் ஆப் ஆனது.

    இந்தியன் 2 படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இப்படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் சில காட்சிகளை முன்னோட்டமாக காட்டி இருக்கிறார்கள். இந்நிலையில், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. காஜல் அகர்வாலும், கமலும் ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கிறது.