Tag: Jananayagan

  • Jananayagan: அப்புறம் சொல்றோம்!. சென்சார் அதிகாரிகள் பதிலால் தயாரிப்பாளர் அப்செட்..

    Jananayagan: அப்புறம் சொல்றோம்!. சென்சார் அதிகாரிகள் பதிலால் தயாரிப்பாளர் அப்செட்..

    கே.வி.என் புரடெக்‌ஷன் தயாரிப்பில் விஜய், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு கடத்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியிட முடியவில்லை..

    ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பு படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி வழக்கு சென்றும் தயாரிப்பாளருக்கு ஆதரவாக தீர்ப்புக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார். தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது..

    எப்படியும் படம் மே மாதமே வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆனது. ஜனநாயகன் படத்தின் எடிட்டிங்கில் வேலை செய்த ஒருவர் பணத்திற்காக படத்தை திருடி வேறொரு நபரிடம் கொடுக்கப்பட்டு அது இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    எனவே படத்தை வேகமாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் நாளை அதாவது திங்கட்கிழமை தங்களின் முடிவை சொல்கிறோம் என கூறியிருக்கிறார்கள். படத்துக்கு இன்று தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும்.. வருகிற 30-ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்த நிலையில், தணிக்கை அதிகாரிகளின் இந்த முடிவு அவரை அப்செட்டாகி ஆகிகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. ஒருமாத காலம் இந்த படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை..

    அந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆனது. எனவே தயாரிப்பாளர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து உமாசங்கர் என்பவரை கைது செய்தனர். முதலில், அவர் ஒரு பிரிலேன்ஸ் வீடியோ எடிட்டர் எனவு சொல்லப்பட்டது. அதன்பின் உமா சங்கர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. ஒரு ஃபிரிலேன்ஸ் எடிட்டர் படத்தை திருடி உமாசங்கரிடம் விற்றுள்ளார். உமா சங்கர் இணையதளத்தில் அப்லோடு செய்திருக்கிறார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது தொடர்பாக அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதிப் ராகவ் எடிட்டர் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து பிரதீப் ராகவ் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    படம் கசிந்தததற்கு பிரதீப் ராகவ் நேரடியாக காரணம் இல்லை என்றாலும் அவரது கவனக்குறைவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தின் விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர் அல்லாத ஒருவரை உதவியாளராக அவர் பயன்படுத்தியுள்ளார் என எடிட்டர் சங்கம் அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறது.

  • கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேவைக்காக தனுஷ் வங்கிகளில் கொள்ளையடிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது..

    அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ‘விக்னேஷ் ராஜா. நீங்கள் ஒரு ஜீனியஸ்’ என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக ஜனநாயகன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

    வருகிற 24-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் எனவும் அனேகமாக அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 29 அல்லது 30ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை, ஏப்ரல் 29 அல்லது 30-ல் ஜனநாயகன் வெளியாவது உறுதியானால் தனுஷின் கர திரைப்படம் அந்த படத்தோடு போட்டி போடுமா இல்லை ரிலீஸ் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அல்லது ஜனநாயகன் மே முதல் வாரத்தில் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறாது.

  • Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிரபார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் அப்போது வெளியாகவில்லை. ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்படவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி சென்று ஒரு மாதம் ஓடிப்போனதே தவிர படத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்கவேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் சொன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீடியோ எடிட்டர் படத்தை திருடியது தெரியவந்தது. அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

  • ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு மாத காலமாகியும் எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

    ஆனால் அதை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இப்போதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு முழுபடமும் இணையத்தில் வெளியானது. பலரும் அதை இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர்.. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே படம் வெளியாகாமல் கால தாமதமானதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிற நிலையில் தற்போது முழு படமும் லீக்காகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. எனவே இந்த நஷ்டத்தை போக்க அதே தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. பல ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது..

    ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.. விஜய் இப்போது வரை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை.. ஜனநாயகன் லீக் ஆனதும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ஆறுதலுக்காக கூட ‘ஒன்றும் வருத்தப்படாதீர்கள்.. நாம் ஏதாவது செய்வோம்’ என சம்பிரதாயத்திற்கு கூட விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சொல்கிறார்கள்.

    விஜயின் நடவடிக்கையை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு விஜய் இன்னொரு படம் நடித்து கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஒருபக்கம், படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார். அனேகமாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஜனநாயகன் படத்தை பாத்தீங்களா? உங்களுக்கு எப்படி கிடைச்சது.? செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய பி.டி.செல்வகுமார்

    ஜனநாயகன் படத்தை பாத்தீங்களா? உங்களுக்கு எப்படி கிடைச்சது.? செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய பி.டி.செல்வகுமார்

    விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ஜன நாயகன். ஹெ.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜ ஹெக்டே என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம் கடந்தபொங்கலுக்கு வெளிவ்யாவ்தக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியிடும் காலம் தாமதமாகி வந்தது. தற்போது வரை கூட படத்திற்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடண்டஹ் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஜன நாயகன் முழு படமும் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்து ரஜினி , கமல் உள்ளிட்ட பல்ரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த திருட்டு விவகாரம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஜன நாயகன் படத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். அந்தப் பிரின்ட்டில், தெளிவாக எடிட்டர் வெர்ஷன் என்று எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் எடிட்டர் வெர்ஷன் மூலமாகப் படக்குழுவிடம் இருந்து தான் வெளிநபர்களுக்குக் கசிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனடியாக குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், ஜன நாயகன் திருட்டுப் பிரின்ட்டைப் பார்க்கக் கூடாது என்றும், மீறிப் பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதே… அப்படியிருக்க நீங்கள் எப்படி அந்தப் படத்தைப் பார்த்தீர்கள்? என்று கேள்விகளை எழுப்பினர்.

    இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பி.டி.செல்வகுமார் உடனடியாகத் தடுமாறினார். ஆனாலும் தனது பேச்சை அப்படியே மாற்றி, இல்லை… இல்லை… நான் முழுப் படத்தையும் பார்க்கவில்லை. என்னிடம் சிலர் சில காட்சிகளை மட்டுமே கொண்டு வந்து காட்டினார்கள். அதைத்தான் நான் பார்த்தேன். தவிர, உலகம் முழுவதும் இன்று ஜன நாயகன் படத்தை எல்லாருமே பார்த்துவிட்டார்கள் என்று கூறி மழுப்பிச் சமாளிக்க முயன்றார்.

  • தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..

    தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..

    விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பாகவே இன்று உலகம் முழுவதும் பலரது வீட்டு டிவிக்களில் முழு ஹெச்டி வடிவத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், படக்குழுவை தாண்டி தியேட்டர் ஓனர்கள், ஓடிடி நிறுவனம், படத்தை வாங்கியுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி என பலருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

    இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்றும் அதை ஹேக் செய்து லீக் செய்தவர்களை கண்டுபிடிக்க பிரதமர் மோடி வரை கேவிஎன் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் தரப்பு தான் படத்தை லீக் செய்ததாக திமுகவினர், அதிமுகவினர், நாதகவினர் பொய் பிரச்சாரம் சொல்லி, படத்தின் லிங்குகளை அதிகம் ஷேர் செய்து வருவதாக தவெகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

    மேலும், விஜய்க்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு அந்த நோய், இந்த நோய் என வேண்டுமென்றே சில மீடியாக்கள் பொய் செய்திகளை பரப்பி விஜய்யை முடக்க முயற்சி செய்தாலும், அவர் இன்று கன்னியாகுமரியில் மீண்டும் மக்கள் அலையை திரட்டி மாஸ் காட்டியுள்ளார்.

    இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையை நாளை சரி செய்ய ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. திருப்பூர் சுப்ரமணியம் அதுதொடர்பாக பேசியுள்ளார். ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கை சான்று கிடைத்தாலே அடுத்த நாளே படம் தியேட்டரில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

    தமிழ்புத்தாண்டு செவ்வாய்க்கிழமை என்பதால், திங்கட்கிழமையான நாளை சென்சார் சான்றிதழ் கிடைத்தால் படம் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவுகளை போட்டு வருகின்றனர். ஆனால், அதிகபட்சம் தேர்தல் முடிந்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஜனநாயகன் விவகாரத்தில் இயக்குனர் சொன்ன தகவல்… படம் எப்போ ரிலீஸ்?

    ஜனநாயகன் விவகாரத்தில் இயக்குனர் சொன்ன தகவல்… படம் எப்போ ரிலீஸ்?

    விஜய் அரசியலில் முழுமூச்சாக இறங்கி விட்டார். கடைசி படம் ஜனநாயகன். அதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு திடீர் என சென்சார் ரூபத்தில் பிரச்சனை. அது தான் பத்தாதுன்னு பார்த்தா இப்போ முழு படமும் லீக். இதென்னப்பா இப்படி ஒரு சோகம் விஜய்க்கு? ஒருவேளை அரசியல் காழ்ப்புணர்ச்சியா இருக்குமோ என்றெல்லாம் பலரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் சொல்வது என்னன்னு பாருங்க.

    ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன் உள்பட பலர் நடித்த படம் ஜனநாயகன். இது கடந்த பொங்கல் அன்றே வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் சென்சார் சர்டிபிகேட் சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை. தேர்தலுக்குப் பிறகு மே 2வது வாரம் படக்குழு வெளியிடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் 5 நிமிடக் காட்சிகள் கசிந்தன.

    தொடர்ந்து முழு படமும் லீக்கானது. இது படக்குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயின் கடைசி படத்தை எவ்வளவு தான் டார்கெட் செய்வீர்கள் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கண்டனம் தெரிவித்தார். படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன்னும் லீக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் வெளியீட்டுக்கு முன்பே ஜனநாயகன் படம் கசிவது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவை சுமந்து செல்கிறது. திரைப்படத்தைப் பகிராமல் ஆதரவைத் தாருங்கள் என வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

  • ஒரு நாள் லேட் ஆனாலும்.. விஜய்க்காக வாய் திறந்த பூஜா ஹெக்டே!.. மமிதா பைஜுவை காணோமே!..

    ஒரு நாள் லேட் ஆனாலும்.. விஜய்க்காக வாய் திறந்த பூஜா ஹெக்டே!.. மமிதா பைஜுவை காணோமே!..

    தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வருவதில் பல்வேறு தடைகள் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் அந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விஜய்க்கு ஆதரவாக பல பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டேவும் தனது கருத்துகளை X (முன்னாள் Twitter) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் இதுவரை திரைக்கு வராமல் தாமதமாகி வருகிறது. தேர்தலுக்கு பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இந்த லீக் சம்பவம் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் பரவி வருவது படக்குழுவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்வை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், படம் சட்டவிரோதமாக லீக் செய்யப்பட்டுள்ளதாகவும், யாருடைய செல்போன்களிலும் அந்தக் காட்சிகள் கிடைத்தால் உடனடியாக அவற்றை நீக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இப்படியான லீக்குகள் திரைப்படத் துறைக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களுக்கு இது தீவிர பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் பல திரையுலக பிரபலங்களும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகை பூஜா ஹெக்டே, தனது X தள பதிவில் ரசிகர்களிடம் மனமார்ந்த வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அவர், ஜனநாயகன் படத்தின் லீக் ஆன காட்சிகளை பார்க்காமல் தவிர்த்து, படம் அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியான பிறகு சென்று பார்வையிட்டு ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  • எதுவும் பேசாம அமைதியா இரு!.. ஹெச்.வினோத்தின் கையை கட்டிப்போட்ட விஜய்!.

    எதுவும் பேசாம அமைதியா இரு!.. ஹெச்.வினோத்தின் கையை கட்டிப்போட்ட விஜய்!.

    ஒருபக்கம் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்தில் சிக்கியிருக்கிறது. ஒருபக்கம் விஜய் கரூர், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு சென்றபோது அங்கு அவரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தை ஜனநாயகன் படத்திற்காக படக்குழு பயன்படுத்திக் கொண்டது என சிலர் புகார் சொன்னார்கள்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை பகிர்ந்து இதுதான் படக்குழு, இதுதான் கேமரா, இந்த இடத்தில் வைத்துதான் படத்திற்காக ஷூட் செய்தார்கள் என்றெல்லாம் பலரும் பதிவிட்டார்கள். குறிப்பாக சவுக்கு சங்கர், நக்கீரன் கோபால் போன்ற பத்திரிகையாளர்களும் இந்த கருத்தை சொல்ல பலரும் அதை நம்ப துவங்கி விட்டனர்..

    ஆனால், தவெ இதை மறுத்துள்ளது. செய்தியாளன் இதுபற்றி கருத்துதெரிவித்த அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் ‘சில அரசியல் புரோக்கர்கள் காழ்புணர்ச்சி காரணமாக சொல்லும் கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்.. அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்’ எனக் கூறியிருந்தார்.

    ஒருபக்கம் இந்த விஷயம் ஹெச்.வினோத்தையும் டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இப்படி எல்லாம் பேசுகிறார்களே.. இதைப் பற்றி கண்டிப்பாக நாம் விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைத்து விஜயை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.. அப்போது அவரிடம் விஜய் ‘நீங்கள் எதுவும் பேசாதீர்கள்.. இது முழுக்க முழுக்க அரசியல்.. நீங்கள் நிறைய படங்களை எடுக்க வேண்டும்.. இதற்குள் நீங்கள் வராதீர்கள்.. இந்த பிரச்சனை அதுவாக சரியாகும்’ என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி விட்டாராம்..

    ஆனால் ஹெச்.வினோத்தை பேச விஜய் அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இது விஜய்க்கு மட்டுமில்லை. ஹெச்.வினோத்துக்கும் கெட்ட பெயர்தான்.. மக்கள் அவரையும் சேர்த்து தப்பாக பேசுவார்கள்’ என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..