Tag: kvn production

  • கேஜிஎஃப் ஹீரோவுக்கு என்ன ஆச்சு?.. மீண்டும் டாக்ஸிக் ரிலீஸை தள்ளிப்போட்டுட்டாரே?.. போச்சு!..

    கேஜிஎஃப் ஹீரோவுக்கு என்ன ஆச்சு?.. மீண்டும் டாக்ஸிக் ரிலீஸை தள்ளிப்போட்டுட்டாரே?.. போச்சு!..

    நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அந்த வெளியீட்டு தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யஷ் அறிவித்துள்ளார். புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் கீது மோகன்தாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் யஷ், தாரா சுதரியா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கோவாவில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாகும். பல மொழிகளில் உருவாகி, பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது. மேலும், இது வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்லாமல், சைக்காலஜிக்கல் த்ரில்லர் அம்சங்களையும் கொண்டுள்ளது.

    இந்தப் படத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் நிபுணர்களும் பணியாற்றியுள்ளனர். டீசர் வெளியான 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சர்ச்சைகளும் எழுந்தன. “female gaze” என்ற கருத்து தொடர்பாக ஏற்பட்ட விவாதத்திற்கும் யஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை கேவிஎன் தயாரிப்பு மற்றும் மான்ஸ்டர் மைண்ட் க்ரியெஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    “நாம் உருவாக்கும் சில திரைப்படங்கள், சினிமாவை ஏன் காதலிக்கத் தொடங்கினோம் என்பதைக் மீண்டும் நினைவூட்டுகின்றன,” என்று யஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய சினிமா உலகளாவிய மேடையில் தனது குரலை வலுவாக வெளிப்படுத்தும் இந்த காலத்தில், தரத்தை உயர்த்தும் பொறுப்பு நமக்குள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    டாக்ஸிக் திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் புதிய விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வெளியீட்டு தேதியை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • ஜனநாயகன் Loss.. அதே புரடியூசருக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த Toxic.. 1000 கோடி கன்பார்ம்!…

    விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன்பின் உச்சநீதிமன்றம் சென்று தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படம் வெளியாகவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இந்த படம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார். படம் தற்போது மறுதணிக்கையில் இருக்கிறது. அதேநேரம் படம் எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது..

    படம் சொன்ன தேதி வெளியாகாததால் படத்தை வாங்கிய சில வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரிடம் பணத்தை திரும்பி கேட்டதாக தெரிகிறது. மற்ற விநியோகஸ்தர்கள் பேசிய விலையவிட குறைவாக கேட்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஒடிடி நிறுவனமும் பேசியவிலையிலிருந்து குறைத்து சொல்வதாக செய்திகள் கசிந்தது. எப்படி பார்த்தாலும் ஜனநாயகன் படம் சொன்ன தேதியில் வெளியாகாமல் போனதால் இந்த படத்தை தயாரித்துள்ள KVN நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம்..

    அதேநேரம் இதே KVN நிறுவனம் தயாரித்துள்ள Toxic (டாக்சிக்) திரைப்படம் பல கோடி லாபத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் KGF பட புகழ் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை கீத்து மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது..

    இந்நிலையில்தான் இந்த படம் 1000 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது அதாவது இந்த படத்தை தியேட்டரில் வெளியிடும் உரிமை மட்டுமே 650 கோடி விலை போய் இருக்கிறது மேலும் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு உரிமைக்கு 15 கோடி கொடுத்திருக்கிறார்கள். இதுபோக தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, மற்றும் ஆடியோ உரிமை எல்லாம் சேர்த்தால் எப்படியும் இந்த படத்தின் வியாபாரம் கோடியை தொடும் என்கிறார்கள்..

    400 கோடி பட்ஜெட்டில் உருவான டாக்ஸிக் திரைப்படத்தின் வியாபாரம் 1000 கோடியை தோட்டிருக்கிறது. படம் வெளியாகி தியேட்டரில் கிடைக்கும் வசூலை சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 1500 கோடி வியாபாரத்தை தொடலாம் என்கிறார்கள். டாக்சிக் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.

  • Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி குறிச்ச புரட்யூசர்!.. இதாவது நடக்குமா?..

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பட வியாபாரங்களும் நடந்தது. விஜய் ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படம் சென்சார் பிரச்சினைகள் சிக்கியதால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

    ரிலீஸ் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் ஒரு அதிகாரி புகார் கூறியுள்ளார். படத்தை மறுதணிக்கை செய்யவேண்டும் என தணிக்கை வாரியம் சொல்லிவிட்டது. அதன் உயர்நீதிமன்றத்திற்கு போய் தீர்ப்பு கிடைத்து, அதன் பின் மேல்முறையீடு போய் அதற்கு தடை கிடைத்து, அதன்பின் உச்சநீதிமன்றம் போய் தற்போது மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறது.

    இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பிடி ஆஷாவே விசாரிப்பார் என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
    . ஒரு பக்கம் இந்த படத்தை பிப்ரவரி 5ம் தேதி வெளியிடலாம் என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம். ஆனால் அதற்குள் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை எல்லாம் முடிந்து விடுமா என்பது தெரியவில்லை..

    இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்போது தயாரிப்பாளர் தனது வழக்கை வாபஸ் பெறவிருக்கிறார். அதன்பின் படம் மறுதணிக்கைக்கு செல்லும்.. கண்டிப்பாக அதற்கு சில வாரம் அவகாசம் எடுக்கும்.. அது எல்லாம் முடிந்து படம் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

  • ஜனநாயகனுக்கு புது ரீலீஸ் தேதி!.. கேவிஎன் பக்கா ஸ்கெட்ச்!. எல்லாம் கோர்ட் கையில இருக்கு!…

    விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் வந்ததால் ஜனவரி 9ம் தேதி இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் படம் ரிலீஸ் ஆகவில்லை.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் பட நிறுவனத்திற்கு ஆதரவாக தனி நீதிபதி பிடி ஆஷா தீர்ப்பளித்தாலும் உடனடியாக தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பே தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்காத உச்சநீதிமன்றம் ‘இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிற்து. அங்கேயே விசாரிக்கலாம்.. ஒருவேளை அங்கே உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு வாருங்கள்’ என்ன சொல்லிவிட்டது.

    கடந்த 20ம் தேதி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து அன்றே தீர்ப்பும் வெளியாகவிருந்தது. ஆனால் இருதரப்பும் வாதங்களை எடுத்து வைக்க ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. அனேகமாக நாளை வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அப்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால் வருகிற 29ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.

    ஒருவேளை படத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் கண்டிப்பாக தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடும். அப்படி நடந்தால் ஜனவரியில் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை. பிப்ரவரியில்தான் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.