Tag: premalatha

  • Vijayakanth: பிரேமலதாவுக்கே விபூதி அடிச்ச ஏ.ஆர்.முருகதாஸ்!.. ரமணாவில் நடந்த சம்பவம்!…

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ரமணா. இந்த படம் விஜயகாந்தின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அஜித்தை வைத்து
    தீனா படத்தை இயக்கிய் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரமணா இரண்டாவது படமாக அமைந்தது. இரண்டாவது படமே விஜயகாந்தை வைத்து ரமணா போன்ற ஒரு படத்தை கொடுத்ததால் கோலிவுட் முன்னணி இயக்குனராக ஏ.ஆர்.முருகதாஸ் மாறினார்.
    அதன் பின்னர்தான் அவர் சூர்யா, விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார்.

    இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ரமணா படம் பற்றி பேசியபோது ‘இந்த படத்தின் கதையை சொல்ல நான் விஜயகாந்த் சார் வீட்டுக்கு போனபோது அவரும், அவரின் மனைவி பிரேமலதாவும் கதையை கேட்டார்கள். கதாநாயகன் சிகரெட் பிடிக்கக்கூடாது.. மது அருந்தக்கூடாது.. குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக்கூடாது.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ சாவது போல காட்சி இருக்க கூடாது என்று சொன்னார் பிரேமலதா. இதில் முதல் இரண்டையும் தவிர மற்ற இரண்டும் படத்தில் இருந்தது.

    ஆனாலும் நான் கதையை சொல்ல துவங்கினேன். கதையே சொல்லிக்கொண்டே வந்தேன்.. படத்தில் விஜயகாந்த் சார் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பார். ‘அப்பாவா’ என்று ஷாக்கானர் பிரேமலதா. ‘பிளாஷ்பேக்கிலும் அப்பாவா?’ என்றார். ஆனாலும் கதையை தொடர்ந்து கேட்டார்.

    படத்தின் இறுதி காட்சியை சொன்னதும் ‘கிளைமாக்ஸில் ஹீரோ உயிரோடு இருப்பது போல் மாற்றிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார் அதற்கு விஜயகாந்த் சார் ‘இல்லை.. இந்த கதைக்கு இதுதான் சரியான கிளைமாக்ஸ்’ என சொன்னார். கதையை சொல்லி ரசிகர்களை கன்வின்ஸ் செய்து எப்படி தயார்படுத்துவோமோ அப்படி அவர்களையும் நான் தயார்படுத்தினேன்’ என்று சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

  • இரண்டாவது மாநாட்டை எதிர்நோக்கி! மாறப்போகும் விஜயின் இமேஜ்.. பிரேமலதா கொடுத்த பிரஷர்

    விக்கிரவாண்டியில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தி மற்ற அரசியல் தலைவர்களுக்கு ஜெர்க் கொடுத்தார் நடிகரும் தவெக தலைவருமான விஜய். இதுவரை திமுக அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே கோலோச்சி இருந்த நிலையில் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மூன்றாவது கட்சியாக மிகவும் வலிமையாக வந்து நிற்கிறது விஜயின் தவெக கட்சி. இந்த நிலையில் அவருடைய இரண்டாவது மாநாடு பற்றி தான் தற்போது செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அவருடைய இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய் .

    முதலில் இந்த மாதம் 25ஆம் தேதி மாநாட்டை நடத்துவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த தேதியில் இருந்து தற்போது பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 25ஆம் தேதி அவர் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை பற்றியும் அதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை பற்றியும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவருடைய youtube சேனலில் விளக்கமாக கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 25 என்பது விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் விஜயின் திருமண நாள் இரண்டும் ஒரே தேதியில் வருவது கூடுதல் சிறப்பு.

    அந்த தேதியில் விஜயகாந்தின் சொந்த மண்ணான மதுரையில் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என எண்ணி தான் விஜய் அந்த தேதியை தேர்ந்தெடுத்துருப்பார். ஆனால் இப்போது 21ஆம் தேதி அந்த மாநாட்டை தள்ளி வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு ஒரு வேலை கூட்டணிக்காக இருக்குமோ என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அந்த சந்திப்பில் விஜய் அவருடைய இரண்டாவது மாநாட்டை 25ஆம் தேதி நடத்தக் கூடாது, அப்படி நடத்தினால் விஜயகாந்தின் ஒட்டுமொத்த ஓட்டும் விஜய்க்கு சென்று விடும்.

    அதனால் அந்த தேதியில் நடத்தாமல் முதலமைச்சருக்கு பிரஷர் கொடுத்திருக்கலாம் என தெரிகிறது .இதை செய்யாறு பாலு அவருடைய பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் விஜயின் தொண்டர்கள் பல பேர் செப்டம்பர் 17ஆம் தேதி மாநாட்டை நடத்த வலியுறுத்தி வருவதாகவும் கூறுகிறார்கள். ஏனெனில் செப்டம்பர் 17 என்பது பெரியாரின் பிறந்த நாள். அது மட்டுமல்ல அதே தேதியில் தான் திமுக ஒரு மாநாட்டையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கு எதிராக நம்முடைய மாநாட்டை நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தவெக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆனால் இதற்கு விஜய் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து தான் அவருடைய நடைபயணம் மக்கள் பயணம் தொடரவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது .ஆனால் விஜயின் ஒரே எண்ணம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தான். சரியாக இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. அப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்னும் விஜய் மக்களை போய் நேரடியாக சந்திக்கவில்லை .எட்டு மாதத்திற்கு ள் ஒருவர் முதலமைச்சராக முடியுமா என்பதிலும் சந்தேகமாக இருக்கிறது.

    ஏனெனில் ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் முதலில் அடிப்படை உறுப்பினராக இருந்து அதன் பிறகு கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து சட்டமன்ற தொகுதியை எதிர்கொண்டு இப்படி படிப்படியாக முன்னேறி தான் முதலமைச்சராக மாறினார். அதுபோல ஸ்டாலினும் எளிதாக முதலமைச்சராக இல்லை .கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தும் அவரை உடனே முதலமைச்சர் சீட்டில் அமர வைக்கவில்லை .அதனால் விஜயும் இந்த எட்டு மாதத்திற்குள் முதலமைச்சராகிவிட முடியும் என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும் .முதலில் அவர் மக்களை போய் சந்தித்து பேச வேண்டும். எப்படியும் செப்டம்பர் மாதத்தில் அவருடைய நடை பயணம் அந்த மக்கள் பயணம் தொடர்ந்தால் தான் அது சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சாதகமாக இருக்கும் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

  • ஷூட்டிங் முடிஞ்சி மிட் நைட் வந்தாலும் கேப்டன் அதை செய்யாம தூங்க மாட்டார்!.. பிரேமலதா சொன்ன சீக்ரெட்!..

    Vijayakanth: நடிகர் விஜயகாந்துக்கு சினிமாவில் நடிப்பதுதான் ஆசை என்றாலும் தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கவேண்டும், தனது திரைப்படங்களில் இடம் பெறும் சண்டை காட்சிகள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் விருப்பம் உடையவர். அதனால், அவரின் சண்டை காட்சிகளை ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள்.

    சில படங்களுக்கு ஒரு வாரம் தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிப்பார். அதற்காக பல கஷ்டங்களையும் படுவார். இதனால், அவரின் தோள்பட்டை கூட கீழே இறங்கிவிடுமாம். ஆனால், கையாலே அதை தூக்கி நிறுத்திவிட்டு மீண்டும் அதே சண்டைக்காட்சியில் நடிப்பாராம்.

    இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

    எம்.ஜி.ஆரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தார் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் படங்களில் இடம் பெற்றும் பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமீபத்தில் விஜயகாந்த் மரணமடைந்தார். அதன்பின்னரும் அவருக்கு அஞ்சலி செலுத்த இப்போதும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    vijayakanth

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவரின் மனைவி பிரேமலதா ‘எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாடல் காட்சிகளை அப்படி ரசிப்பார். வீட்டில் இருந்தால் நிறைய ஹாலிவுட் படங்களை பார்ப்பார். படப்பிடிப்பு முடிந்து மிட் நைட் வீட்டுக்கு வந்தாலும் ஒரு ஆங்கில படத்தை பார்த்துவிட்டுதான் தூங்குவார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?..

    அந்த படத்தில் எப்படி சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என கூர்ந்து கவனிப்பார். அதுபோலவே, அப்போது அவர் நடித்து வரும் படங்களில் சண்டை காட்சிகளை வைப்பார். படப்பிடிப்பு தளங்களில் எல்லோருடனும் அமர்ந்துதான் சாப்பிடுவார். அவர் எங்கு இருந்தாலும் சரி என்னை தொடர்புகொண்டு ‘ஒருவர் வருவார் அவரின் கையில் இவ்வளவு பணம் கொடு’ என்பார்.

    எதற்கு என்றெல்லாம் நான் ஒருபோதும் கேட்டதில்லை. அவர் என்ன நினைக்கிறாரே அதை செய்வதுதான் ஒரு மனைவியின் கடமை. அதைத்தான் நான் செய்தேன். இப்போதும் செய்து வருகிறேன். அவர் இருக்கும்போது எல்லோருக்கும் சாப்பாடு போட்டார். அது எப்போதும் தொடரும்’ என பிரேமலதா கூறினார்.

    இதையும் படிங்க: இதனாலதான் கேப்டன் ‘தூ’ன்னு துப்பினார்.. விஜயகாந்த் வீட்டிற்கு வரும் அஜித்!. இவரே சொல்லிட்டாரு..

  • விஜயகாந்த் இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன் நடந்தது இதுதான்!.. உண்மையை சொன்ன பிரேமலதா..

    Vijayakanth: தன்னுடைய கணவர் விஜயகாந்தின் கடைசி நிமிடங்களை கண்ணீருடன் பிரேமலதா சொல்லி கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதை கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி கவலைப்படாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    பிரேமலதா கூறிய போது, வழக்கமான பரிசோதனைக்காக தான் நாங்க டிசம்பர் 25ந் தேதி மருத்துவமனை போக இருந்தோம். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையால் மியாட்டில் டாக்டர்கள் இருக்க மாட்டார்கள் என்றனர். 26ந் தேதி கூட்டிட்டு வர சொன்னார்கள்.

    இதையும் படிங்க: பிக்பாஸில் மட்டும் இல்ல வெளியேவும் தக் லைஃப் செய்த போட்டியாளர்!… இவரும் பிரதீப்புக்கு தான் சப்போர்

    ஆனால் எனக்கு 8 என்றால் பயம். அதனால் கிறிஸ்துமஸ் அன்றே கூட்டி சென்றேன். 2014ல் இருந்து நான் அவருடன் எத்தனை மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அதனால் எப்போதும் போல நம்பிகையுடன் அவரை அழைத்து சென்றேன். என் வீட்டு பெண்களிடமும் கேப்டனுக்காக ஸ்பெஷல் உணவை செய்ய சொல்லி வந்தேன்.

    26ந் தேதி அவருக்கு முறையான டெஸ்ட் எடுக்கப்பட்டது. கோவிட் இருப்பதால் அந்த டெஸ்ட்டும் எடுக்க வேண்டும் என்றனர். சரி எனக் கூறிவிட்டேன். அந்த ரிப்போர்ட்டில் பாசிட்டிவ் என வந்துவிட்டது. இதனால் அங்கு ரெண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்றனர். நானும் ஓகே சொல்லிவிட்டேன். 26, 27 கேப்டன் நல்ல நலத்துடன் இருந்தார்.

    28 காலை 4 மணி முதல் அவருக்கு மூச்சு திணறல் தொடங்கியது. நான் அப்போதும் அவருக்கு தப்பாக நடக்கும் என நம்பவே இல்லை. அங்கிருந்த டாக்டர்கள் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல சொன்னார்கள். நாங்க இத்தனை வருடத்தில் இதை சொல்லி இருக்கோமா? கொஞ்சம் கஷ்டம் என்றனர். நான் என் தம்பி சுதீஷுக்கு கால் செய்தேன்.

    இதையும் படிங்க: திருமுருகன் கூட வொர்க் பண்ணும் போது இந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்! நாதஸ்வரம் ஹீரோயின் பளீச்

    பின்னரே என் மகன்களுக்கு கால் செய்து சொன்னேன். அடுத்து கட்சி நிர்வாகிகளுக்கும், கேப்டன் அக்கா, மாமாவுக்கு கால் செய்து சொன்னதாக கண்ணீருடன் சொல்லி இருக்கிறார். மேலும், உலக அளவில் இன்று மீடியா அவர் புகழை பரப்பி இருக்கிறார்கள். அதை அவர் உயிருடன் இருக்கும் போது செய்து இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பாரே?

    இனி இது தான் எங்க கோயில். கடைசி வரை இங்கு அன்னதானம் நடக்கும். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதான ட்ரஸ்ட் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கேப்டனுக்கு பின்னர் எங்க தலைமுறை கேப்டன் செய்ததை தொடர்ந்து செய்வார்கள் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதையும் படிங்க: மௌனம் கலைத்த தளபதி!.. அரசியல் அறிவிப்பு எப்போ தெரியுமா?!.. லீக் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்..