Tag: tamanna

  • Tamanna: விருது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா

    Tamanna: விருது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா

    ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் 2கே கிட்ஸ்களிடமும் சென்றடைந்தவர் தமன்னா.

    இதற்கு முன் பல படங்கள் நடித்திருந்தலும் அப்போது கிடைக்காத புகழ் இந்த ஒரு பாடல் மூலம் இந்தியா முழுவதும் அவரை கொண்டு சென்றது.

    பொதுவாக தமன்னா விழாக்களுக்கு வரும்போது கவர்ச்சியான உடைகள் அணிந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ELLE list 2026 விழாவில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.

    அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை அள்ளி வருகின்றன.

  • விஷால் சுந்தர்.சி காம்போ புருஷன் படத்துவக்க விழா புகைப்படங்கள்

    விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் அடுத்து வரும் படம் புருஷன். இவர்களது கூட்டணியில் இது நான்காவது படமாகும்.

    இதற்கு முன்பு ஆம்பள, மதகத ராஜா, ஆக்சன் ஆகிய படங்கள் வெளிவந்தன. நாயகியாக தமன்னா நடிக்கிறார். இசை சுந்தர்.சி ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

    இப்படம் ஒரு ஆக்ஷன்-காமெடி குடும்பத் திரைப்படமாக இது உருவாகிறது.

    இந்த படத்தின் டைட்டில் புரொமோசன் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்துவக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சுந்தர்.சி, குஷ்பு, தமன்னா, விஷால், யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

  • சாமியார் ஆகும் நடிகைகள் லிஸ்ட்… பின்னணியை அலசும் பிரபலம்… இதெல்லாமா நடந்தது?

    சினிமா உலகில் நடிகைகள் ஏன் சாமியார் ஆகிறார்கள். அவர்களுக்கு அப்படி என்ன மன அழுத்தம் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அலசுகிறார். வாங்க பார்க்கலாம்.

    நடிகை புவனேஸ்வரி 90களில் மிகப் பிரபலம். பூனைக்கண் புவனேஸ்வரின்னு தான் எழுதுவாங்க. சர்ச்சைகளிலும் பிரபலம் ஆனவர். அவர் திடீர்னு என்ன பண்ணினாங்கன்னா நான் பெண் சாமியார் ஆகிட்டேன்னு சொன்னாங்களாம். காளி என் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வந்து தேடு. அங்கு நான் இருப்பேன்னு சொன்னது.

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆன்மிகத்தில் இருப்பதாகவும் 8 ஆண்டுகள் காளியைத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடைசியில தாராபுரம் பக்கத்தில் ஒரு ஊருல கோவில்ல இருக்காங்களாம். அவங்க செய்தி ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கியது. நடிகை ஸ்ரேயா கோவை ஈஷா மையத்தில் இங்கு வந்துதான் நான் தியானம் பண்ணினேன்.

    மன நிம்மதி கிடைச்சதுன்னு சொல்றாங்க. சமீபத்தில் மகாகும்பமேளாவில் நடிகை மம்தா குல்கர்னி காவி உடை போட்டு மொட்டை அடிச்சி மண்டலேஸ்வரர்னு பட்டம் கொடுத்தாங்க. துறவறம் எல்லாம் செய்தாங்க. அது சர்ச்சையானது. அவர் நண்பர்கள்னு ஒரு தமிழ்ப்படத்தில் நடித்தவர். எஸ்ஏ.சி.தான் டைரக்ட் பண்ணினார். சூப்பர்ஹிட் படம். இவர் ஒரு இந்தி நடிகை. போதை வழக்கில் கைதாகி சவுத் ஆப்ரிக்காவில் செட்டானார். இவருக்குப் போய் ஏன் மண்டலேஷ்வர் பட்டம் கொடுக்கலாம்னு கேள்வி எழுந்தது. அதன்பிறகு பட்டத்தைத் திரும்பப் பெற்றார்களாம்.

    துறவறம் போவதற்கு பக்தியைத் தாண்டி மன அழுத்தம் இருக்கலாம். தனுஸ்ரீ தத்தா விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்துள்ளார். அவர் உண்மையிலேயே மொட்டை போட்டு ஜடா முடி வளர்த்து சாமியார் ஆனார். அதைக் கேட்டபோது, இந்த சினிமா வாழ்க்கையில் சந்தித்தது கொடூரமான முகங்கள், கேவலமான முகங்கள் என்றும் அவ்வளவு வக்கிரமான ஆள்களையும் சந்தித்து விட்டு ஒருகட்டத்தில் இதானா வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்ததும் சாமியார் ஆனதாக தெரிவித்துள் ளாராம்.

    தமன்னா கூட கோவில் கோவிலா போனாங்க. அவரை பொம்பள சங்கின்னுலாம் சொன்னாங்க. கௌஹாத்தியில் ஒரு கோவிலுக்குப் மாலை போட்டுட்டு இருந்தாங்க. சமீபத்தில் கூட ஜோதிகா, சூர்யா அங்கு போய் விளக்கேத்தி விட்டு வந்தாங்க. பூனைக்கண் புவனேஸ்வரியிடம் நான் இன்டஸ்ட்ரில அவ்வளவு கொடுமையை அனுபவிச்சேன்ன சொன்னாங்க.

    விபசார வழக்கில் கைதாகும்போது ஒரு பேட்டி கொடுத்தாங்க. நான் விபச்சாரின்னா இவங்க எல்லாம் யாருன்னு ஒரு நாலு நடிகைகளைப் பற்றி சொன்னாங்க. அப்போ சோஷியல் மீடியா எல்லாம் இல்லாத காலகட்டம். ரஜினி வெளியூர்ல இருந்தாரு. அவரை எல்லாம் வரவைச்சிட்டாங்க. கவுண்டமணி, விவேக்கை எல்லாம் கூப்பிட்டாங்க. அரை பக்கம் பேட்டி கொடுத்து கதிகலங்கச் செய்துட்டாங்க. அப்புறம் அவருக்கு வாய்ப்பே கிடைக்கல. அப்படின்னா எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்துருக்கும்? நடிகையைத் தாண்டி அவர்களுக்கு பெரிய மன அழுத்தம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • முதல் பிளாக்பஸ்டர்!.. தமன்னா பண்ண புண்ணியத்தால் தப்பித்த தமிழ் சினிமா!.. 7 நாள் வசூல் எவ்வளவு?

    ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை கடந்த ஆண்டு காவாலா டான்ஸ் மூலமாக தமன்னா எப்படி காப்பாற்றினாரோ அதே போல சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படத்தையும் தமன்னா தனது நடிப்பால் காப்பாற்றியுள்ளார்.

    அரண்மனை 4 படத்தை மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கும் இந்த ஆண்டு முதல் வெற்றியை தமன்னா தான் தேடிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நான் நல்லா நடிப்பேன்.. யாராவது ஒரு சான்ஸ் கொடுங்க!.. விஜய் பட நடிகைக்கா இந்த நிலைமை?..

    அச்சச்சோ பாடலில் தமன்னா காட்டிய தாராள கவர்ச்சியை பார்த்து விட்டு சென்சார் பிளர் செய்து விட்டது. ஆனால், அந்த பாடல் யூடியூபில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் நடனமாடும் போது எடிட்டர் பார்த்த டிரான்சிஷனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சேஷு காமெடி காட்சிகள் சுமாராக இருந்தாலும் முதல் பாதியில் வரும் ஹாரர் காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்த இந்த ஆண்டு கோலிவுட்டுக்கு கிடைத்த முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அரண்மனை 4 மாறியுள்ளது.

    இதையும் படிங்க: தூள் கிளப்பிய கவின்.. வேறலெவல் நடிப்பு.. ஆனால், அந்த பிரச்சனை இருக்கு ?..’ஸ்டார்’ விமர்சனம் இதோ!

    ஒரு வாரத்தில் அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி வெற்றிநடை போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 40 கோடி ரூபாய் வசூலை அரண்மனை 4 படம் அள்ளியிருக்கிறது. இந்த வாரமும் தியேட்டர்களில் ரசிகர்கள் கவினின் ஸ்டார் மற்றும் அரண்மனை 4 படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜாலியாகவும் த்ரில்லாகவும் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் நிச்சயம் அரண்மனை நான்கு படத்தை தான் பார்ப்பார்கள். இன்னும் ஒரு வாரம் இதே வேகத்தில் படம் ஓடினால் 100 கோடி ரூபாய் வசூலை தொட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் வில்லனாகக் கெத்து காட்டிய படங்கள்… டாங்லீக்கே முன்னோடியாக இருந்த கேப்டன்!

  • சன் டே செம கூட்டம்!.. சுந்தர் சிக்கு அடித்த ஜாக்பாட்.. அரண்மனை 4 படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?..

    அரண்மனை 3 திரைப்படம் ஆர்யா, ராஷி கனனா நடிப்பில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தை முழு நம்பிக்கையுடன் எடுத்து வெற்றி பெற்றுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் தமன்னாவின் கணவராக சந்தோஷ் பிரதாப் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் தான் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க சுந்தர் சி திட்டமிட்டு இருந்தாரா? அதனால் தான் மக்கள் செல்வன் படத்தில் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இல்லையே என மறுத்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தாலும் அவருக்கு படத்தில் பெரிய வேலை ஏதும் இல்லை. இயக்கத்தில் அதிக கவனத்தை செலுத்தி புரொடக்‌ஷன் வேல்யூ கொண்ட படமாக அரண்மனை 4 படத்தை கொடுத்துள்ளார். அதுதான் இந்த படத்தின் வெற்றிக்கான காரணம் என கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: ஓவர் வீராப்பால் தலைல துண்ட போட்டதுதான் மிச்சம்! விஜய்க்கு எதிரா சுந்தர் சி எடுத்த ரிஸ்க்

    தமன்னாவின் நடிப்பு மற்றும் அந்த பாக் பேயின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமன்னாவின் மகனாக நடித்துள்ள சிறுவன் முதல் பாதியில் நன்றாக நடித்து குழந்தைகளை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்.

    பேய் வரும் அமானுஷ்யமான காட்சிகளை எந்தவொரு சிஜி சொதப்பலும் இல்லாமல் நேர்த்தியாக சுந்தர் சி படம் பிடித்திருப்பது மற்றும் படத்தின் லொகேஷன், கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் அம்மன் சிலை என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது.

    இதையும் படிங்க: ரஜினியின் சோகப்பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? சரியான நேரத்தில் சமாளித்து அசத்திய வைரமுத்து

    படத்தின் தொடக்கத்திலேயே பாக் பேயை கிளப்பி விட அது செய்யும் அட்டகாசங்களை காட்டி சுந்தர். சி தொடங்கிய இடத்திலேயே சிக்சர் அடித்து விட்டார். முதல் பாதி விறு விறுப்பாக சென்ற நிலையில், இரண்டா பாதியில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனும் சென்டிமெண்ட் காட்சிகளுடன் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படம் போல வந்து ரசிகர்களை கவர்கிறது.

    முதல் நாள் வசூல் 4.65 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2ம் நாள் வசூல் 6.65 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில், சன் டே ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் அரண்மனை 4 படத்தைப் பார்க்க தியேட்டரில் குவிந்த நிலையில் 7.50 கோடி ரூபாய் வசூலை நேற்று மட்டும் அந்த படம் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 18.80 கோடி ரூபாய் வசூலை அரண்மனை 4 திரைப்படம் பெற்று இருப்பதாகவும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான புதிய படங்களில் முதல் வெற்றி படமாக அரண்மனை 4 மாறி உள்ளதாக கூறுகின்றனர். 50 முதல் அதிகபட்சமாக 75 கோடி வசூல் ஈட்டும் இந்த படம் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    இதையும் படிங்க: தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!.. காஜி ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்டுதான்!…

  • அரண்மனை 4 எப்படி இருக்கு?.. தமன்னா, ராஷி கன்னாவ பார்க்குறதுக்கே துட்டை அள்ளி வீசலாம் போல!..

    தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஹரிக்கு போட்டியாக மூன்று பாகங்களை கடந்து நான்காவது பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். அரண்மனை முதல் பாகம் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சுந்தர் சி, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

    அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா, திரிஷா, பூனம் பஜ்வா, சித்தார்த், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரண்மனை இரண்டாம் பாகமும் ஓரளவுக்கு ஓடியது. ஆனால், கடைசியாக ஆர்யா, ராஷி கன்னா, விவேக், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

    இதையும் படிங்க: ஒரே நாளில் ஊத்தி மூடிய அஜித்தின் ரீ ரிலீஸ் படங்கள்!.. ‘தல’ ஆட்டம் ஒரு நாள் கூட தாண்டலையே பாஸ்!..

    இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், இன்று வெளியான படம் ரசிகர்களை கவரும்படி உள்ளதாகவும் சுந்தர் சி கம்பேக் என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்கள் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

    அரண்மனை 4 டெக்னிக்கல் ஆகவும், காமெடி, ஹாரர், விஷுவல், இடைவேளைக்கு முந்தைய காட்சி மற்றும் கடைசி கிளைமாக்ஸுக்கு முன்பாக 40 நிமிடங்கள் படம் தீயாக இருப்பதாக படத்தை பார்த்த மற்ற ஊர் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.  அரண்மனை 4 திரைப்படம் சிறப்பாக இருக்காது என பலரும் நினைத்து வந்த நிலையில், அதற்கு மாறாக கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    கிளைமேக்ஸில் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடனம் ஆடும் “அச்சச்சோ” பாடல் வரை மக்கள் கூட்டமாக இருந்து பார்த்து ரசித்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: குழந்தைகளை வளர்ப்பதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா? டிப்ஸ்களை அள்ளி வீசிய சின்னக் கலைவாரணர்!..

    https://twitter.com/antoviews/status/1786232109688136029

  • பையா பட சமயத்துல கார்த்தி – தமன்னா காதலிச்சாங்களா?.. லிங்குசாமி என்னப்பா இப்படி சொல்லிட்டாரு!..

    லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படத்தில் நடித்த கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் அப்போது காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. இந்நிலையில் அது தொடர்பான கேள்விக்கு இயக்குனர் லிங்குசாமி வெளிப்படையாக பதில் அளித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் முரட்டு இளைஞனாக நடித்திருப்பார். ஆனால் அதன் பின்னர் வெளியான பையா படத்தில் சாக்லேட் பாயாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

    இதையும் படிங்க: உங்க படத்துல ஐட்டம் சாங்!. அஜித்துக்கு நான் ஜோடி!. கோட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நடிகை!…

    மில்க் பியூட்டி ஆன தமன்னா பையா படத்தில் ”அடடா மழைடா” பாடலுக்கு கவர்ச்சி பொங்க நடனமாடி இருப்பார். கார் டிராவல் கதையாக உருவான அந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது அவர்களின் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆகி இருக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் ஹெவியாக வெளியாகின.

    இந்நிலையில் 14 வருடங்கள் கழித்து அது தொடர்பாக பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் லிங்குசாமி. கார்த்தி அந்த அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. அவர் அப்பா சிவக்குமார் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் செய்வார். சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடக்கும். இருவரும் காதலித்ததாக வெளியான வதந்திகளை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும் என கன்ஃபியூஸான பேச்சால் ரசிகர்களை குழப்பி விட்டார்.

    இதையும் படிங்க: நீயெல்லாம் ஞானியா?.. இளையராஜாவுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த வைரமுத்து!.. இப்படி சொல்லிட்டாரே!..

    காவாலா பாடலில் தமன்னா நடனமாடி அதைவிட படு கிளாமராக பையா படத்தில் இடம்பெற்ற பாடல்களில் தான் தமன்னா கிளாமராக ஆடினாரா? என்கிற கேள்விக்கு அந்த படத்தில் நடிக்கும் போது தமன்னாவின் வயது 19 அப்போதே சொன்னேன் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இப்படியே இருப்பீர்கள் என்றேன். சமீபத்தில் பையா ரீ ரிலீஸ் காரணமாக அவரை சந்தித்த போது அதை நினைவுபடுத்தி சொன்னார்.

    சினிமாவில் ரொம்பவே சின்சியரான பொண்ணு தமன்னா அதனால் தான் அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்து தனக்கான உச்சத்தை தொட்டு உள்ளார் எனக் கூறியுள்ளார்.

    இதையெல்லாம் படிங்க: காலேஜ் படிக்கும் போது காதலில் விழுந்தாரா விஜய்?!.. அதனால்தான் காதல் படங்களில் அப்படி நடிச்சாரா?!..

  • தமன்னாவால் கெட்டுப்போன இசை நிகழ்ச்சி… ரசிகர்களுக்கு இப்படி ஒரு கொடுமையா…?

    இலங்கை யாழ்ப்பாணத்தில் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் தமன்னா கலந்து கொண்டு காவாலய்யா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். டிக்கெட்டை இங்குள்ள இந்திரகுமார் என்பவரது நிறுவனம் சப்ளை செய்தது.

    முதலில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தோஷப்படுத்துவதற்காக இலவசமாக இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று இந்த நிறுவனம் அறிவித்ததாம். அதன்பிறகு டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியதாம். அதாவது ரூ.25000, மூ.7000, ரூ.3000 என்று கட்டணத்தை நிர்ணயித்ததாம்.

    Tamanna
    Tamanna

    முன்வரிசையில் இருப்பவர்களுக்கு ரூ.25000 டிக்கெட் என்று இருந்தது. இங்குள்ள ரசிகர்களைப் பொருத்தவரை தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை நேரில் பார்ப்பதற்காக பெரிதும் ஆர்வம் காட்டுவார்களாம். அதிலும் தமன்னா போன்ற கவர்ச்சி நடிகை வந்தால் சும்மா விடுவார்களா? முண்டியடிக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் அந்த அரங்கில் போதுமான எல்இடி திரைகள் வைக்கப்படவில்லையாம். அரை கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களுக்குத் தமன்னாவைப் பார்த்தால் வெறும் வெள்ளை புள்ளியாகத் தான் தெரிவார்.

    அதனால் அவர்கள் முன்னுக்கு வந்து எப்படியாவது தமன்னாவைப் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதனால் முன்வரிசையில் இருப்பவர்களின் இருக்கைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் அங்கு ஒரு தள்ளுமுள்ளு நடக்கிறது. இதில் பலரும் மயக்கம் போட்டு விழ, மருத்துவமனைக்குத் தூக்கி விட்டு போனார்களாம்.

    அதிலும் தமன்னா இந்தப் பாடலுக்குக் கிட்டத்தட்ட ஆபாச நடனம் போல தான் எல்லா மேடைகளிலும் ஆடி வருகிறாராம். இது இளைஞர்களைப் பெருமளவில் தூண்டி ஒரு அநாகரிகமான செயலுக்கு வித்திடுகிறது. அந்த வகையில் இசை அமைப்பாளர் அனிருத் எவ்வளவோ பரவாயில்லையாம். இவரது இசை நிகழ்ச்சிகளில் கடைசியில் இருந்து முன்வரிசைக்கு ரசிகர்கள் மத்தியில் நடந்து வருவாராம். அதனால் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து விடுகிறார்.

    ஜெயிலர் படத்தில் வரும் இந்தப் பாடல் செம மாஸாக இருந்தது. படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினால் கூட பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஆனால் நேரில் ஆடும்போது எத்தனை இளசுகளின் பாதை மாறுகிறது என்பதை நிகழ்ச்சி நடத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான அந்தனன் தெரிவித்துள்ளார்.