Tag: tvk vijay

  • தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். விஜய் ஒரு முக்கியமான, பிரபல நடிகராக இருந்ததால் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என விஜய் நம்புகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் ஆதரவும் தனது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர் அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நியமித்தார்.

    நடந்து முடிந்த தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
    விஜய் அரசியலுக்கு வந்தது முதலே ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

    இதனால் விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் கருத்து சொல்லவில்லை. ஏனெனில் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது.. அப்படி பகைத்துக் கொண்டால் கண்டிப்பாக தங்கள் படம் வெளியாவதற்கு பிரச்சினை செய்வார்கள் என்பது தெரிந்து பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்..

    இந்நிலையில்தான், இசையமைப்பாளர் இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல தனது youtube சேனலில் ‘இது எங்கள் நீதி’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘சின்னத்தம்பி உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை பகிர்ந்திருக்கிறார். அதுவும் விஜயின் போட்டோவோடு அந்த பாடலை பகிர்ந்திருக்கிறார். இந்த படம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கி 1988ல் வெளியானது. இந்த படத்தில் ராம்கி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.. அதோடு விஜயும் இந்த படத்தில் சிறுவனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

  • Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிரபார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் அப்போது வெளியாகவில்லை. ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்படவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி சென்று ஒரு மாதம் ஓடிப்போனதே தவிர படத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்கவேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் சொன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீடியோ எடிட்டர் படத்தை திருடியது தெரியவந்தது. அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

  • மே 4ம் தேதி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ஸ்டாலின் சார்!.. தெறிக்கவிட்ட விஜய்!…

    மே 4ம் தேதி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ஸ்டாலின் சார்!.. தெறிக்கவிட்ட விஜய்!…

    திமுகவை திட்டுவதற்காகவே, திமுகவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காகவே அரசியலுக்கு வந்தது போல் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் எப்போது தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கினாரோ அப்போது முதலே திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார் விஜய்.
    அதிலும் கரூர் சம்பவத்திற்கு பின் திமுகவின் மீதான விமர்சனம் மிகவும் கடுமையாக மாறிவிட்டது. ஏனெனில், கரூர் சம்பவதிற்கு பின் அரசியல் சதி இருக்கிறது என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார்.

    இந்நிலையில், இன்று சென்னை நந்தனம் பகுதியில் பிரச்சாரம் செய்த விஜய் ‘நாங்கள் இதிலெல்லாம் அரசியல் செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு கரூர் சம்பவத்திற்கு நான் தாமதமாக வந்ததே காரணம் என சட்டசபையில் சொன்னார் ஸ்டாலின் சார். நான் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு எப்படி சென்றேன் என்று உங்களுக்கு தெரியுமா? செல்லும் வழியில் காத்திருந்த மக்களை தவிர்த்துவிட்டு நான் செல்ல முடியுமா? உங்கள் மீது தவறே இல்லை என்றால் ஏன் செந்தில் பாலாஜியை கரூரில் நிற்க வைக்காமல் கோவைக்கு அனுப்பினீர்கள்?’ என்று விஜய் கேள்வி எழுப்பினார்..

    மேலும், தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ம் தேதி மிகவும் சிறப்பான நாள் என ஸ்டாலின் சொல்லியிருக்கார். ஆமாம், அன்று ஸ்பெஷலான நாள்தான்.. அன்றுதான் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள்.. கத்திரி வெயில் மண்டையை பொளக்கும்.. அந்த வெயில் மக்களுக்காகவே ஆகாது.. எப்படா இந்த சூரியன் மறையும்? எப்படா இந்த சூரியன் ஒழியும்? என்று எல்லோரும் சூரியனை வெறுத்து ஒதுக்கும் நாள்.. அதுதான் இந்த தேர்தல் முடிவுகள் அறிகுறி’ என விஜய் பேசியிருக்கிறார்..

  • அரசியலுக்கு வந்தா பிரெஸ்ஸ சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?.. முட்டு கொடுக்கும் எஸ்.ஏ.சி..

    அரசியலுக்கு வந்தா பிரெஸ்ஸ சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?.. முட்டு கொடுக்கும் எஸ்.ஏ.சி..

    பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். எதிர்க்கட்சிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டியதை செய்தியாளர்கள் மூலம் சொல்வார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனம் தெரிவிப்பார்கள்.. அறிக்கைகளை வெளியிடுவார்கள். வெளியே எங்கு சென்றாலும் செய்தியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்விகள் கேட்டால் பதில் சொல்வார்கள்.

    அதற்கு சிறந்த உதாரணமாக நாம் தமிழர் கட்சி சீமானை சொல்ல முடியும். அவர் எப்போதும் செய்தியாளர்களை கண்டு ஓடியதில்லை. அவருக்கு பின் எடப்பாடி பழனிச்சாமியை சொல்லலாம். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை மிகவும் குறைவாகவே செய்தியாளர்களை சந்திக்கிறார்.. அதிகபட்சம் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்..

    ஒருபக்கம் நடிகராக இருந்து கட்சி துவங்கிய நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை. எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் அவர் பேடி கொடுத்ததில்லை. தமிழக அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான அரசியலை விஜய் செய்து வருகிறார். விஜய் செய்தியாளர் சந்திப்பதில்லை என்கிற விமர்சனத்தை பலரும் அவர் மீது வைக்கிறார்கள்.

    ஆனால் அவர் எந்த பதிலும் சொல்வதில்லை.. செய்தியாளர்கள் கூப்பிட்டால் கூட காது கேட்காத மாதிரி சென்று விடுகிறார். இந்நிலையில், நேற்று ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘ஒரு அரசியல்வாதி தினமும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற ரூல்ஸ் ஏதாவது இருக்கிறதா?.. நான் தேர்தலில் நிற்கிறேன்.. எனக்கு ஓட்டு போங்கள்’ என்று கூட அவர் விளம்பரம் செய்வதில்லை.. அதை மட்டும் ஏன் நீங்கள் கேட்கவில்லை?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..

  • விஜய் அண்ணா பெரிய சொத்தை மறைச்சிட்டாரு! வெடியை கொளுத்தி போட்ட விஜய் டிவி பிரபலம்!

    விஜய் அண்ணா பெரிய சொத்தை மறைச்சிட்டாரு! வெடியை கொளுத்தி போட்ட விஜய் டிவி பிரபலம்!

    TVK Vijay: பிரபல நடிகர் விஜய் கட்சி தொடங்கி தன்னுடைய முதல் தேர்தலில் பரபரப்பாக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பெரிய சொத்து ஒன்றை மறைத்துவிட்டதாக விஜய் டிவி பிரபலம் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தற்போதைய தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு நடிகர்களும், சீரியல் பிரபலங்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    பெரம்பூர், திருச்சி கிழக்கில் நிற்கும் விஜய் ஒரு தொகுதியிலாவது கண்டிப்பாக வெல்வார் எனக் கூறப்படுகிறது. அவருடைய வேட்பு மனு தாக்கலே பல பிரச்சனைகளை கிளப்பி இருக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் பல வித்தியாசங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

    தொடர்ந்து, மீண்டும் அதை மாற்றி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் பெரிய சொத்தை மறைத்துவிட்டதாக பிக்பாஸ் தமிழின் டைட்டில் வின்னரான ராஜூ பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை வேளச்சேரி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது விஜயின் பெரிய சொத்தே நாம் தான்.

    அவருடைய அசைக்க முடியாத சொத்து. அவர் அதை கணக்கு காட்ட மாட்டார். நாம் தான் அதை ஏப்ரல் 23ந் தேதி காட்ட வேண்டும் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அலை அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது.

  • நேர்ல வர முடியாது!. ஒன்லி வீடியோ கால்.. விவாகரத்து வழக்கில் விஜய் எடுத்த முடிவு!..

    நேர்ல வர முடியாது!. ஒன்லி வீடியோ கால்.. விவாகரத்து வழக்கில் விஜய் எடுத்த முடிவு!..

    நடிகர் விஜயின் மனைவி சங்கீதா இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அந்த விவாகரத்து மனுவில் தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தான் வீட்டில் இருக்கும் போதே நடிகையை அழைத்துவந்து விஜய் குடும்பம் நடத்தியதாகவும், அதை தட்டி கேட்டால் தன்னை பொருளாதார ரீதியாக முடக்கியதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்படவில்லை எனவும் பல புகார்களை கூறியிருந்தார்..

    மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் வெளியிடுவதோடு, நடிகையின் மீது வழக்கும் தொடர்வேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த செய்தி வெளியாகி சில நாட்களிலேயே விஜய் நடிகை திரிஷாவை கூட்டிக்கொண்டு ஜோடி சகிதமாக ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சங்கீதா தொடர்ந்த விவாகரத்து தொடர்பான வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. சங்கீதா மட்டுமே விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்..

    அதோடு இரு தரப்பினரும் தாங்கள் நேரில் வர முடியாது என கூறிவிட்டதால் வருகிற ஜூன் 15ம் தேதி காணொளி மூலம் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே தனது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கை விஜய் வீடியோ கால் மூலம் மட்டுமே அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • விஜயை திட்டிய அப்பா சத்யராஜுக்கு மகன் சிபிராஜ் பதிலடி!.. தளபதி ஸ்டைல்!…

    விஜயை திட்டிய அப்பா சத்யராஜுக்கு மகன் சிபிராஜ் பதிலடி!.. தளபதி ஸ்டைல்!…

    நடிகர் விஜய் அரசியல்வாதியான பின் திரை துறையிலிருக்கும் ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்கள் உள்ளிட்ட யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனெனில் பொதுவாகவே திரையுலகம் ஆளுங்கட்சியை எப்போதும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். இது காலம் காலமாக நடப்பதுதான். அதோட ஆளுங்கட்சியோடு இணக்கமாகவும் காட்டிக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு பல ஆதாயங்களும் கிடைக்கும்.

    அதனால்தான் அரசியலுக்கு வருவது என முடிவெடுத்ததும் சினிமாவிலிருந்து விலகினார் விஜய். ஒருபக்கம் கடந்து சில நாட்களாகவே பிரகாஷ்ராஜ், சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதில் சத்யராஜின் மகள் திவ்யா ஏற்கனவே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருபக்கம் அவர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவ்வர் விஜயை விமர்சித்து பேசியிருந்தார்.

    விஜய் கட்சி ஆரம்பித்தபோது பெரியாரியும், அம்பேத்காரையும் கொள்கை தலைவர்கள் என சொன்னதும் அவர்களின் கொள்கைகளை விஜய் தம்பி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறார் என சந்தோஷப்பட்டேன். ஆனால் தமிழக முதல்வரை ஸ்டாலின் அங்கிள் என்கிறார், ஸ்டாலின் சார் என்கிறார்..

    இப்படி மரியாதை இல்லாமல் அவர் பெரியவர்களை பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் மதிக்கும் விஜய் எப்படி இப்படி மாறினார் என தெரியவில்லை.. திமுகவை தவிர்த்து மற்ற யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவுக்கு போகும் ஓட்டுதான். எனவே விஜயை ஆதரிக்காதீர்கள்’ என சத்யராஜ் பேசியிருந்தார்..

    ஒருபக்கம் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜயின் தீவிர ரசிகர்.. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருபவர். இந்நிலையில், சத்யராஜ் பிரச்சாரத்தில் விஜயை விமர்சித்து பேசியிருந்த நிலையில் தான் டிவிட்டர் பக்கத்தில் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து விஜய் முன்பு சொன்ன ‘உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்தறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என்கிற பன்ச் டயலாக்கை பதிவிட்டிருக்கிறார்.
    இது அப்பா சத்யராஜுக்கு அவரின் மகன் சிபிராஜ் கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.

  • நடிகர்கள் பின்னால் போகாதீங்க!.. விஜயை மறைமுகமாக அட்டாக் பண்ணிய ரஜினி!..

    நடிகர்கள் பின்னால் போகாதீங்க!.. விஜயை மறைமுகமாக அட்டாக் பண்ணிய ரஜினி!..

    ஜெயிலர் பட விழாவில் ரஜினி எப்போது காக்கா – கழுகு கதையை சொன்னாரோ அப்போது முதலே விஜய் ரசிகர்கள் ரஜினியை திட்ட துவங்கினார்கள். ஏனெனில் ‘கழுகு மேலே பறந்துகொண்டிருக்கும். அதைப் பார்த்து நாமும் மேலே பறக்க வேண்டும் என்று காக்காவும் மேலே பறக்க முயற்சி செய்யும்.. ஆனால் காக்காவால் அது முடியாது.. கீழே விழுந்துவிடும்’ என்று பேசினார் ரஜினி.

    ரஜினி காக்கா என சொன்னது விஜயைத்தான் என நினைத்த விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக திட்ட துவங்கினார்கள்.. அதோடு ஒவ்வொரு முறையும் ரஜினியின் படம் வெளியாகும் போதும் அந்த படத்திற்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம்..இது தவறு என விஜய் ஒருமுறை கூட தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்..

    ஒருபக்கம் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு ரஜினி பின்வாங்கிய நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். தற்போது அவரின் தவெக சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘இளைஞர்களின் சிந்தனை படிப்பின் மீது மட்டுமே இருக்கவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.. நடிகர்கள் பின்னாள் செல்லாதீர்கள்.. அவர்களின் பின்னால் சென்று உங்களுக்கு காயம் ஏற்பட்டால் யாரும் உதவ மாட்டார்கள்.. அது உங்களுக்குத்தான் ஆபத்து. படிக்கும் நேரத்தில் படிக்காவிட்டால் காலம் முழுக்க கஷ்டப்படவேண்டும்.. போதைப்பொருட்கள் பழக்கம் கொண்ட நண்பர்களிடமிருந்து விலகியிருங்கள்’ என்று ரஜினி அறிவுரை சொல்லியிருக்கிறார்..

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு முறையும் வெளியே வரும்போதும் அவரின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரு பக்கத்திலும் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.. எப்படியாவது விஜயை அருகில் பார்க்க வேண்டும், ஒரு செல்பி எடுக்க வேண்டும் என அவர்கள் ஆபத்தான முறையில் செயல்படுவதை பார்கும் போது பதறுகிறது..

    ஏற்கனவே ஒருவர் தஞ்சாவூரில் விபத்தில் சிக்கி ஒரு கல்லூரி மாணவர் மரணமடைந்தார்.. மேலும், பல பேரும் கீழே விழுகிறார்கள். இன்று விஜய் நெல்லை வந்தபோதும் இது நடந்தது. இந்நிலையில்தான், ரஜினி இளைஞர்களுகு இப்படி ஒரு அறிவுரையை கூறியிருக்கிறார்.

  • விஜய்யால் மது குடிக்காமல் இருக்க முடியாது – ரஞ்சனா நாச்சியாரின் பேச்சும்.. பதிலடி கொடுக்கும் அனுமோகனின் வீடியோவும்!

    விஜய்யால் மது குடிக்காமல் இருக்க முடியாது – ரஞ்சனா நாச்சியாரின் பேச்சும்.. பதிலடி கொடுக்கும் அனுமோகனின் வீடியோவும்!

    தமிழக அரசியல் களம் தேர்தல் அறிவிப்புக்கு பின் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக உள்ளன. நடிஅகர் விஜயின் தவெக கட்சியும் இதில் அடங்கும். விஜயின் ஒவ்வொரு நகர்வையும் அனைத்துக் கட்சிகளும் கவனித்து வருகின்றன. அதே வேலை அவர் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. விஜய்காந்தையே மிஞ்சி விடுவர் போல விஜய்.

    தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணிஅந்த ரஞ்சனா நாச்சியார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யால் மது குடிக்காமல் இருக்கவே முடியாது. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, மது அருந்திவிட்டுதான் வந்து பேசுகிறார்” என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்தார். எந்தவொரு ஆதாரமும் இன்றி அவர் பேசிய இந்தக் கருத்து, விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. கிட்டதட்ட விஜய்காந்தை வடிவேலு விமர்சித்தது போலவே இருந்தது.

    ரஞ்சனா நாச்சியாரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஜய் ரசிகர்கள் தற்போது மூத்த நடிகர் அனுமோகன் அளித்த பழைய பேட்டி ஒன்றினை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    அந்த வீடியோவில் பேசியுள்ள அனுமோகன், நான் அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவன். ஒருமுறை விஜய்யுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்த போது, என்னிடம் வந்த விஜய், எனக்கு சிகரெட் வாசனை சுத்தமாக ஒத்துக்காது. தவிர இது உடம்புக்கும் நல்லது கிடையாது. அதனால் முடிந்தவரை சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுங்கள் என்று மிகவும் அக்கறையாக அட்வைஸ் செய்தார். ஒரு சக நடிகரின் உடல்நலன் மீது அவர் காட்டிய அந்த அக்கறை என்னை மிகவும் நெகிழச் செய்தது” என்று அனுமோகன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    சிகரெட் வாசனையே பிடிக்காத விஜய்யைப் பார்த்து, மது குடிக்காமல் இருக்க முடியாது என்று ரஞ்சனா நாச்சியார் கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற அவதூறு என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

  • எதுவும் பேசாம அமைதியா இரு!.. ஹெச்.வினோத்தின் கையை கட்டிப்போட்ட விஜய்!.

    எதுவும் பேசாம அமைதியா இரு!.. ஹெச்.வினோத்தின் கையை கட்டிப்போட்ட விஜய்!.

    ஒருபக்கம் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்தில் சிக்கியிருக்கிறது. ஒருபக்கம் விஜய் கரூர், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு சென்றபோது அங்கு அவரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தை ஜனநாயகன் படத்திற்காக படக்குழு பயன்படுத்திக் கொண்டது என சிலர் புகார் சொன்னார்கள்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை பகிர்ந்து இதுதான் படக்குழு, இதுதான் கேமரா, இந்த இடத்தில் வைத்துதான் படத்திற்காக ஷூட் செய்தார்கள் என்றெல்லாம் பலரும் பதிவிட்டார்கள். குறிப்பாக சவுக்கு சங்கர், நக்கீரன் கோபால் போன்ற பத்திரிகையாளர்களும் இந்த கருத்தை சொல்ல பலரும் அதை நம்ப துவங்கி விட்டனர்..

    ஆனால், தவெ இதை மறுத்துள்ளது. செய்தியாளன் இதுபற்றி கருத்துதெரிவித்த அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் ‘சில அரசியல் புரோக்கர்கள் காழ்புணர்ச்சி காரணமாக சொல்லும் கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்.. அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்’ எனக் கூறியிருந்தார்.

    ஒருபக்கம் இந்த விஷயம் ஹெச்.வினோத்தையும் டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இப்படி எல்லாம் பேசுகிறார்களே.. இதைப் பற்றி கண்டிப்பாக நாம் விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைத்து விஜயை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.. அப்போது அவரிடம் விஜய் ‘நீங்கள் எதுவும் பேசாதீர்கள்.. இது முழுக்க முழுக்க அரசியல்.. நீங்கள் நிறைய படங்களை எடுக்க வேண்டும்.. இதற்குள் நீங்கள் வராதீர்கள்.. இந்த பிரச்சனை அதுவாக சரியாகும்’ என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி விட்டாராம்..

    ஆனால் ஹெச்.வினோத்தை பேச விஜய் அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இது விஜய்க்கு மட்டுமில்லை. ஹெச்.வினோத்துக்கும் கெட்ட பெயர்தான்.. மக்கள் அவரையும் சேர்த்து தப்பாக பேசுவார்கள்’ என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..