Tag: vijay’s son jason sanjay

  • ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் அப்டேட்!.. சும்மா அதிருது!…

    Jason Sanjay: ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியிருப்பார். எனவே, கண்டிப்பாக எதிர்காலத்தில் ஜேசன் நடிகராக களமிறங்குவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ இயக்குனராக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார்.

    பள்ளி படிப்பை சென்னையில் முடித்த ஜேசன் அதன்பின் அம்மாவுடன் லண்டனுக்கு சென்று அங்கு செட்டில் ஆனார். அங்கு சினிமா இயக்கம் பற்றிய சில படிப்புகளையும் படித்தார். அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை இயக்கினார். அதன்பின் சினிமாவுக்கு ஏற்றது போல் ஒரு கதை எழுதினார்.

    லைக்கா நிறுவனத்திடம் அந்த கதையை சொல்லி படம் டேக் ஆப் ஆனது. பட அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் கழித்தே ஷூட்டிங் துவங்கியது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.

    தற்போது இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளிவர துவங்கியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பேங்காங்கில் ஒரு வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து ஆகஸ்டு முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

    இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. ஜேசன் சஞ்சய் படத்திற்கு கண்டிப்பாக விஜயின் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். அதேநேரம், ஒரு இயக்குனராக ஜேசன் சஞ்சய் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

  • துப்பாக்கியுடன் ஜேசன் சஞ்சய்!.. அப்பா மாதிரியே ஸ்டைலா சுடுறாரே!.. வைரல் வீடியோ….

    Jason Sanjay: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்து வேட்டைக்காரன் படத்தில் அவருடன் சேர்ந்து நடனமாடியிருப்பார். அப்பாவை போல விஜயும் பின்னாளில் நடிகராக மாறுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனர அவதாரம் எடுத்திருக்கிறார்.

    கடந்த சில வருடங்களாவே சஞ்சய் அப்பா விஜயுடன் இல்லை. அம்மாவோடு லண்டனில் இருக்கிறார். அங்கு சினிமா இயக்கம் பற்றியை படித்தார். அதன்பின் நண்பர்களோடு சேர்ந்து குறும்படங்கள் எடுப்பதிலும் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் சினிமா எடுக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. ஒரு கதையை ரெடி பண்ணி லைக்கா நிறுவனத்தில் சொல்லி சம்மதம் வாங்கினார்.

    சங்கீதா விஜயின் அப்பா லைக்கா சுபாஷ்கரனுக்கு நெருக்கம் என்பதால் இது நடந்திருக்கிறது. 2 வருடங்களுக்கு முன்பே இதுபற்றிய அறிவிப்பு வெளியானது. படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமலேயே இருந்தது. அதன்பின் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிப்பது உறுதியானது. சமீபத்தில் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.

    அதன்பின்னரே ஷூட்டிங் நடப்பது தெரியவந்தது. வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்பா விஜயை போலவே துப்பாக்கியை ஜேசன் ஹேண்டில் செய்யும் வீடியோ வெளியானது. பேப்பரில் வரையப்பட்ட ஓவியம் ஒன்றை பார்த்து அவர் சுடும் வீடியோ விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    இதைப்பார்க்கும் போது விஜயின் துப்பாக்கி, பீஸ்ட் மற்றும் கோட் படங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஜேசன் இயக்கத்தை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

  • உஷாரான பார்ட்டிதான்.. அப்பாவை மிஞ்சிய பிள்ளையா இருப்பாரு போல ஜேசன் சஞ்சய்

    சமீபகாலமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப்பாகி விட்டதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கின்றது. அதைப் பற்றிய ஒரு தகவல் தான் இப்போது வைரலாகி வருகின்றது. கனடாவில் சினிமா பற்றிய படிப்பை முடித்த கையோடு ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் சென்னைக்கு வந்தார் ஜேசன் சஞ்சய். முதலாக குறும்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார் .

    அதன் பிறகு சென்னை வந்ததும் முதல் வேலையாக லைக்காவுடன் புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அது சம்பந்தமான புகைப்படம் வெளியானதுமே இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெரிய நடிகரின் மகன் முதல் படமே பெரிய நிறுவனத்துடன் என பல சர்ச்சைகள் கிளம்பின. இது விஜயின் சிபாரிஸாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

    ஆனால் விஜய் எக்காரணத்தைக் கொண்டும் தன் மகனுக்காக சிபாரிசு செய்ய மாட்டார் என்றும் விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இன்னொரு பக்கம் விஜயின் மனைவி சங்கீதா லண்டனில் இருப்பதால் சங்கீதாவின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர். அவருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்கனவே ஒரு நல்ல நட்பு இருப்பதாகவும் அதன் காரணமாக கூட ஜேசன் சஞ்சய்க்கு இந்த பட வாய்ப்பு வந்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

    இப்படி பெரிய பூகம்பத்தையே கிளப்பிய அந்த புகைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியும் நிலையிலும் இன்னும் இந்தப் படம் முடிந்த பாடு இல்லை. இப்பொழுது தான் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது. மூன்று நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடந்தது. அதோடு இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக திடீரென ஒரு செய்தி கிளம்பியது. ஆனால் ஜேசன் சஞ்சயை பொறுத்த வரைக்கும் முதல் கட்ட படப்பிடிப்பை அந்த மூன்று நாட்களில் முடித்து விட வேண்டும் என்று எண்ணினாராம் .

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பை யாழ்ப்பாணம் ஏரியா பக்கம் நடத்துவதாக திட்டமிட்டு இருந்தாராம். இதில் அனைவரும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் இந்த படத்தை ஜேசன் சஞ்சய் பர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தான் பண்ணுகிறாராம். அதற்காக 25 கோடி ரூபாயை முன்னதாகவே படத்திற்காக வாங்கி விட்டாராம் ஜேசன் சஞ்சய். இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் கூறும் பொழுது விஜயின் மகன் ரொம்பவும் உஷாராக தான் இருக்கிறார் என சொல்கிறார்கள்.

    ஆனால் பர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் பண்ணும் பொழுது இவருக்கு இது முதல் படம் .புரொடக்ஷன் சம்பந்தமாக இவருக்கு என அதில் அனுபவம் மிக்க நபர்கள் இருக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி இருப்பதாக தெரியவில்லை. எப்படி ஃபர்ஸ்ட் காப்பி என்ற அடிப்படையில் இந்த படத்தை பண்ணுகிறார் என ஆச்சரியத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.