தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

ajith poster

Written by

in

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது தவெக என்னும் கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமாவை பொறுத்தவரை விஜய்க்கு எப்போதும் போட்டி அஜித் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய்க்கு அஜித் ரசிகர்கள் விஜ்ய அஜித் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பரிசாக அளித்தனர்.

இந்த நிலையில் நாளை அஜித் பிறந்த நாளையொட்டி மதுரை நகரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவெடு தல வா என குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.