Tag: Vijay

  • நாம எலெக்‌ஷன்ல நின்னா கூட சிஎம் ஆகிடலாம் போல!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!..

    நாம எலெக்‌ஷன்ல நின்னா கூட சிஎம் ஆகிடலாம் போல!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!..

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சூர்யா, சியான் விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதில், நடிகர் மகேஷ் பாபுவும் சமூக வலைதளத்தின் மூலம் தனது பாராட்டை தெரிவித்தார்.

    மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சுமார் என்பது சதவிதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் மகேஷ் பாபு செயல்பட்டு வருகிறார். அவர் தயாரிப்பில் உருவாகும் ராவ் பஹதூர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது பழைய ஹிட் திரைப்படமான அதிதி 4K வடிவில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்ற விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இன்றைய நாள் பெருமளவில் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.

    இரு திரையுலக முன்னணி நடிகர்களுக்கிடையேயான இந்த வாழ்த்து பரிமாற்றம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விஜயின் அரசியல் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

    ஒக்கடு, போக்கிரி உள்ளிட்ட பல மகேஷ் பாபு படங்களை விஜய் ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய போட்டியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சூர்யாவும் விஜய்யை மனமார வாழ்த்தியுள்ளார். அவர் நடித்த கருப்பு படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.

  • தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் நின்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

    சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்ததாக ஆரம்ப நிலவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு பகுதிகளிலும் அவரது கட்சி வலுவான முன்னிலை பெற்று வெற்றிப்பெற்றது. மேலும், தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான ஆதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றி, நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. புதிய கட்சியாக இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வெற்றியைத் தொடர்ந்து, கட்சித் தலைமையகம் மற்றும் விஜயின் இல்லம் முன்பு ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மொத்தத்தில், பெரம்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த இந்த வெற்றிகள், தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றன. மேலும், பல திரை பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • சிஎம் விஜய்க்கு வாழ்த்துகள்!.. சியான் விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை வரிசை கட்டிட்டாங்களேப்பா!..

    சிஎம் விஜய்க்கு வாழ்த்துகள்!.. சியான் விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை வரிசை கட்டிட்டாங்களேப்பா!..

    தமிழக அரசியல் களத்தில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, விக்ரம், சிவகார்த்திகேயன், கவின், விக்ராந்த், காஜல் அகர்வால், ஜீவா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். “இது ஒரு புதிய தொடக்கம்”, “உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்” போன்ற வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகர் விக்ராந்த் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் மிகவும் மிகவும் மகிழ்ச்சி தமிழ்நாடு மக்கள் உங்கள் மீதும் உங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உண்மையிலேயே இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி” இன்று, மக்கள் அதை முழு நம்பிக்கையுடன் எதிரொலித்துள்ளனர். இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தத் தருணம் உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்புக்கும் ஒரு உண்மையான சான்றாகும்.
    தமிழ்நாடு மக்கள் உரக்க, தெளிவாக, மிகுந்த பெருமையுடன் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். இது வெறும் வெற்றி மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுடன் ஏற்பட்ட ஆழமான, வலிமையான பிணைப்பின் கொண்டாட்டம்.

    உத்வேகம் தரும் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, ​​உங்களுக்கு மிகுந்த வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம். பலரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வருவீர்களாக. இந்த மகத்தான சாதனைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்! உங்கள் தலைமைத்துவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், மேலும் மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    மேலும் நடிகர் ஜீவா விசிலடித்து வாழ்த்து கூறியுள்ளது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் #VijayPoliticalEntry மற்றும் #TVKVictory போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

  • விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீரகள், நிச்சயம் நல்லது செய்வார்.. விசில் அடித்துக் கொண்டாடிய SAC!

    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீரகள், நிச்சயம் நல்லது செய்வார்.. விசில் அடித்துக் கொண்டாடிய SAC!

    தமிழக அரசியல் களத்தில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

    சென்னையில் உள்ள விஜயின் இல்லத்தில் அவரது தாய், உறவினர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் கொண்டாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த அரசியல் வெற்றியின் தருணம் இதுவே என்ற உணர்வில், குடும்பத்தினர் உணர்ச்சி வசப்பட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு நிலவிய கொண்டாட்ட சூழலைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, குடும்பத்தினரை அணைத்துப் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிகாலைவேளையில் திருத்தணி முருகன் கோவில் சென்று தனது மகன் அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், விஜயின் அடையாளமாக பார்க்கப்படும் வெள்ளை சட்டை மற்றும் சாண்டல் நிற பேண்ட் அணிவகுப்பை, இன்று அவரது தந்தையும் பின்பற்றியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், ஒரு முதலமைச்சரின் தந்தையாகப் போவதில் அவர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். முதலமைச்சர் என அறிவிக்கும் முன்னதாகவே அவர் வீட்டில் கோண்டாட்டம் தொடங்கிவிட்டதை பார்த்த ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்தியுள்ளது.

  • திருப்பதி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா!.. பர்த்டே கிப்ட் பலமா இருக்கே!..

    திருப்பதி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா!.. பர்த்டே கிப்ட் பலமா இருக்கே!..

    இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நடிகை த்ரிஷா திருப்பதி கோவில் சென்று ஏழுமலையான் தரிசனை பெற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தற்போது விஜய் வீட்டுக்கு த்ரிஷா வந்துள்ளார். த்ரிஷாவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், த்ரிஷா தேர்தலன்று வாக்களித்ததை பற்றி கேள்வி எழுப்பிய போது விஜயுடன் நடித்திருந்த கில்லி பாடலுடன் பதிவு ஒன்றை போட்டி தான் விஜய்க்கே ஒட்டளித்ததாக வெளிப்படையாக சொல்லிவிட்டார். இந்நிலையில் இன்று அவர் தன் பிறந்தநாளுக்காக மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் வெற்றிக்காகவும் வேண்டிக்கொண்டிருப்பார் என விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    வரும் மே மாதம் 14ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா சூர்யாவுடன் நடித்து வரும் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு த்ரிஷா வராததும் பலரின் மனதில் பல கேள்விகல்ளை எழுப்பியிருந்தது. திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், முக்கியமான நாளில் ஆன்மிகத்தை முன்னிலைப்படுத்திய த்ரிஷாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆன்மிக முறையில் கொண்டாடியுள்ளார். இதற்காக அவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரர் கோவில் சென்றார். த்ரிஷாவின் இந்த ஆன்மிக பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

    மேலும், பிறந்தநாள் மற்றும் விஜய்யின் வெற்றியை இணைந்து கொண்டாட சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  • விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

    விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

    விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக போகிறார் என தகவல்கள் வெளியாகின்றன. நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் உண்மை தெரிந்துவிடும். ஒருவேளை விஜய் சிஎம் ஆனாருன்னா அதுக்கு காரணம் ரெண்டே பேரு தான் என கூல் சுரேஷ் பேசியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ரஜினிகாந்தை தனது கடினமான உழைப்பால் முந்தியவர் தான் விஜய். அஜித் – விஜய் என்கிற போட்டி தாண்டி ரஜினிகாந்த் – விஜய் என்கிற போட்டி வந்தது. சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளத்தை விஜய் வாங்கியதாக கூறப்பட்டது.

    இதுக்கு மேல் சினிமாவில் சாதிக்க ஒன்றும் இல்லை என நினைத்த விஜய் மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என தவெகவை தொடங்கி தைரியமாக தேர்தலையும் பல சோதனைகளை கடந்து சந்தித்து விட்டார்.

    திமுகவுக்கு ஆதரவாக பல எக்ஸிட் போல்கள் வந்தாலும் இந்தியா டுடேவின் ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு விஜய்க்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கணித்து அரசியல் வட்டாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

    பலரும் விஜய் தான் முதல்வர் ஆகப் போகிறார் என பேச ஆரம்பித்துள்ளனர். சிலர், விஜய் ஆகவே மாட்டார் என பேசி வருகின்றனர். அந்தளவுக்கு தனது முதல் தேர்தலிலேயே பெரும் ஆளுமையை விஜய் நிரூபித்துள்ளார் என்பது தான் உண்மை.

    விஜய் சிஎம் ஆக மாறினால் அதற்கு ஸ்லீப்பர் செல்லாக இருந்து உதவி இரண்டு பேர் தான் காரணம் என்றும் ஒன்று பிக் பாஸ் ஜூலி, இன்னொன்று சாட்டை துரைமுருகன் தொடர்ந்து விஜய் பற்றி நெகட்டிவாக பேசி பேசியே மக்கள் சப்போர்ட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்து விட்டனர் என ஒரே போடாக போட்டுள்ளார்.

  • விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!

    விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!

    தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் வெளியான படங்களில் அண்ணாச்சி நடித்த ‘லெஜண்ட்’ படம் மட்டுமே கொஞ்சம் தேவலாம். ஆனால், அந்த படமும் வசூல் ரீதியாக ஓடவில்லை. பரத் நடித்த காளிதாஸ் 2, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தயாரித்து பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, TN2026, கடைசியாக வெளியான தனுஷின் கர என ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக ஒரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை.

    தேர்தல் தான் முக்கிய காரணம் என்றும் அதெல்லாம் கிடையாது, படங்கள் சிறப்பாக இல்லை என்றும் அதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மே மாதம் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகுமா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், தனுஷின் கர மற்றும் சூர்யாவின் கருப்பு படங்களுக்கு போட்டியாக ஜன நாயகன் வெளியாகாது எனக் கூறுகின்றனர்.

    கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிலையில், நடிகை த்ரிஷா அந்த விழாவில் பங்கேற்கவில்லை. த்ரிஷாவை தவிர்த்து படத்தில் நடித்த சுவாசிகா உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்றனர்.

    மேலும், இதுதொடர்பாக த்ரிஷா தனக்கான இன்வைட் மிஸ் ஆகியிருக்கோமோ என்னமோ என பகிரங்கமாக கலாய்த்த நிலையில், தற்போது படக்குழு த்ரிஷாவின் அறிமுக புரமோவை சவுத் குயின் என்ப் போட்டு வெளியிட்டு சமாளிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

    விஜய்யுடன் த்ரிஷா ஜோடியாக வெளியே வந்ததும் விஜய் – த்ரிஷா உறவுகள் குறித்து வலம் வரும் தகவலால் தான் சூர்யா தனது கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷா வேண்டாம் என முடிவு செய்துவிட்டாரா? என கேள்விகள் அதிகரித்துள்ளன.

    கருப்பு படம் இன்னொரு ‘கர’ படமாக ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்கள் குறிப்பாக சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

    S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

    அஜித்தின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒரு பிரபலத்தை ஆதிக் ரவிச்சந்திரன் புக் செய்து வைத்திருந்தார் என்றும் ஆனால், விஜய் பற்றி மோசமாக அந்த பிரபலம் பேசிய நிலையில், அவரை நீக்கிடுங்க என அஜித் அதிரடியாக ஆர்டர் போட்டுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி பரபரப்பு கருத்தை தெரிவித்து திரையுலகை ஷாக் ஆக்கியுள்ளார்.

    அஜித் நடித்த கடைசி படமான குட் பேட் அக்லி படத்திலேயே ஐ எம் வெயிட்டிங் என விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருந்தார். தேர்தல் அன்று காலையிலேயே முதல் நபராக வந்து வாக்கு செலுத்தி சென்றார். விஜய் போலவே மீடியாக்களை அவர் சந்திப்பதை தவிர்த்தார். ஆனால், மாற்றம் வேண்டாம் என அஜித் சொன்னதாக சில மீடியாக்கள் செய்தியாக்கி அதை மு.க. ஸ்டாலினிடம் சொல்லி செய்தியாக்கினர்.

    மு.க. ஸ்டாலினும் அந்த செய்தியை விசாரிக்காமல் அதை தேர்தல் தினத்துக்கு சாதகமாக பயன்படுத்தினார். ஆனால், அஜித் உடனடியாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவை வைத்து அறிக்கை வெளியிட்டு அது முற்றிலும் பொய் என்றார்.

    அஜித் குமார் தனக்கு பிடித்த ரேஸ் பக்கம் சென்ற நிலையில், விஜய் மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு இறங்கியிருப்பது அஜித்துக்கு ரொம்பவே பிடித்துள்ளது என்றே கூறுகின்றனர். கருணாநிதிக்கு நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலைஞர் முன்பாகவே அஜித் பேசியதும் ரஜினிகாந்த் கை தட்டியதும் மறக்கவே முடியாது.

    அஜித் குமாரின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருக்க காரணமும் அதுதான் என்கின்றனர்.

    இந்நிலையில், விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக விஜய்யை அட்டாக் செய்து பேசிய நிலையில், அஜித் தற்போது விஜய்க்கு எதிராக பேசிய நடிகர் வேண்டாம் எனக் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போஸ் வெங்கட் கூட தொடர்ந்து விஜய்க்கு எதிராக பேசி வருவதால் ஒருவேளை அவராக இருக்குமா என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    அஜித்துடன் சத்யராஜ் பகைவன் எனும் படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் உடன் ஆசை, ராசி, பரமசிவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

  • திமுகவை விட ரஜினி தான் கடும் அப்செட்டில் இருக்காராம்!.. ஒருவேளை விஜய் சிஎம் ஆகிட்டா?

    திமுகவை விட ரஜினி தான் கடும் அப்செட்டில் இருக்காராம்!.. ஒருவேளை விஜய் சிஎம் ஆகிட்டா?

    வைகோ, திருமாவளவன், பிரேமலதா என தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸிட் போல் ரிசல்ட்டுக்குப் பிறகு தங்கள் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அறிவாலயத்திலும் ஆனந்த அலை இல்லை என்கின்றனர்.

    திமுகவுக்கு ஆதரவான நிர்வாகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளை தாண்டி ஆக்சிஸ் மை இந்தியா ஆப்பு வைத்த நிலையில், விஜய்யின் எழுச்சி நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்துக்கு அது கடும் அப்செட்டை கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கி விட்டனர்.

    ரஜினிகாந்த் தைரியமாக அரசியலுக்கு அறிவித்ததை போல வந்திருந்தால் கூட திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் விஜய்க்கு கொடுத்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் எல்லாம் விஜய் அளவுக்கு பொறுமையாகவும் வலிமையாகவும் கையாண்டு இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

    இது ஒரு பக்கம் இருக்க விஜய் ஒருவேளை சிஎம் ஆகிவிட்டால், அதை எல்லாம் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறோம் என ரஜினிகாந்த் இப்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர். எப்படி இருந்தாலும் மே 4ம் தேதி வரும் உண்மையான ரிசல்ட்டை பார்க்க பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

    விஜய்க்கு எதிராக செயல்பட்ட பலரும் ஒரு வித பயத்திலேயே தற்போது தங்களது பேச்சுக்களை மாற்றி பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். விஜய் தோற்றாலும், ஜெயித்தாலும் விஜய்யின் கட்ஸ் இந்தியளவில் பாராட்டப்பட்டு வருவதும் சூப்பர் ஸ்டாரை பாதித்திருக்கும் என்கின்றனர்.

  • விஜய் இதுவரை பேட்டி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா? அட இப்பதானே தெரியுது!

    விஜய் இதுவரை பேட்டி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா? அட இப்பதானே தெரியுது!

    தவெக தலைவர் விஜய் அரசியல் களத்துக்கு வந்ததுல இருந்தே ஊடகங்களில் பேசுபொருளாகி விட்டார். ஆனால் இதுவரை பேட்டி தான் கொடுக்கல. ஆனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம். ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்தியை வெளியிடுகின்றன. இதன் பின்னணி குறித்து பிரபலம் ஒருவர் இப்படி சொல்கிறார்.

    பொதுவாக தேர்தல் என்றாலே மக்கள் பரபரப்பாகி விடுவாங்க. அவர்களைத் தாண்டி ஊடகங்கள் பரபரப்பாகிடுவாங்க. எப்பவும் 2 முனை போட்டி பலமா இருக்கும். அதையும் தாண்டி 3முனை போட்டின்னா அந்தக் கட்சி ஏதோ ஒரு வகையில மக்களுக்காக போராடி இருப்பாங்க. ஆனா தவெக என்ற ஒரு கட்சி திடீர்னு தோன்றியது. அங்கு எந்த வித அரசியல் அறிவும் இல்லாத கட்சி. செங்கோட்டையன் மாதிரி விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். அவரே சைலண்ட் மோடுல தான் இருக்காரு. அதைத் தவிர்த்துட்டுப் பார்த்தா அது ஒரு கட்சியான்னே கேள்வி எழுகிறது.

    ரஜினி ஏறத்தாழ 50 ஆண்டுகள் சினிமாவில இருக்காரு. அவருக்கிட்ட போய் மைக்கை நீட்டி கேட்டா அவருக்கு என்ன தெரியுதோ அதைச் சொல்வாரு. ஒண்ணுமே இல்லன்னாலும் நோ கமெண்ட்ஸ் என்பார். ஊடகவியலாளர்களைப் பார்த்து கார் கண்ணாடியை இறக்கிய விஜய்னு செய்தி போடுறாங்க. இதெல்லாம் பார்த்தா எவ்வளவு வெட்கங்கெட்ட விஷயத்தைப் பண்ணக்கூடிய ஊடகமா இருக்கு. ஊடக அரண்ணா குறைந்தபட்ச நியாயம் இருக்கணும்.

    இன்றைய கருத்துக்கணிப்பில் மோடியைத் தூக்கிப் பிடிக்கும் நிறுவனம் தான் தவெக ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்கிறது. ஒரு ஊடகம்னா தன்னை மதிக்கிறவனைக் கொஞ்சமாவது மதிக்கணும். விஜய் இதுவரைக்கும் எந்த ஒரு நாளிதழ், மாத இதழுக்கும் விஜய் பேட்டி கொடுக்கல. அப்படின்னா ஏன் இப்படி செய்றாருன்னா நீ எல்லாம் எனக்கு ஆள் கிடையாதுய்யா என்கிற எண்ணம் தான். அப்படின்னா ஊடகங்கள் ஏன் இவருக்குக் கொடி பிடிக்கிறாங்கன்னா எல்லாம் பணம்தான்.

    மக்கள் இந்த ஊடகங்கள் சொல்றதை எல்லாம் வச்சிக்கிட்டு இதெல்லாம் உண்மையான்னு நம்பக் கூடாது. விஜய் வேலை என்னன்னா இளைஞர்களைக் கொஞ்சம் கூட சிந்திக்க விடாம, தான் ஒரு ஆள் ஆட்சிக்கு வரணும்கறதுக்காக பல குடும்பங்களைப் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் சிதைத்த மோசமான இடம் விஜய்க்கு உண்டு. அவரை இனம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டிய வேலை, தேவை எல்லாம் இருக்கு. ஒரு அரசியல் தலைவன்னா உங்க அறிவை மேம்படுத்துனா அவன் உண்மையான தலைவன்.

    உங்க சமூக அந்தஸ்தை மேம்படுத்துனா அவன்தான் உண்மையான அரசியல் தலைவன். மாறாக, உங்களுடைய அறிவை சிறுமைப்படுத்தி, உங்க மூளையைப் பிறழ்வு ஏற்படச் செய்தால் அவன் நல்ல அரசியல் தலைவன் கிடையாது. அவன் ஒரு மோசமான அரசியல் தலைவன். அவனுக்கு மக்களைப் பத்தின எந்த அக்கறையும் கிடையாது.

    தான் மட்டும் தான் இருக்கணும். மத்தவங்க அடிமையா இருக்கணும் என்கிற மோசமான மனநிலையில் இருப்பவனால மட்டும்தான் இப்படி உருவாக்க முடியும். அறிவாளிகளை உருவாக்காத, சிந்திக்க விடாத விஜய் எப்படிப்பட்டவர்னு நீங்களே முடிவு பண்ண வேண்டிய தருணம்தான் இது. வாக்கு எண்ணிக்கை வரட்டும். இன்னும் 2 நாள் தான் இருக்கு. பார்ப்போம் என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.