Author: Saranya M

  • ஹாரிஷ் ஜெயராஜ் அப்படி செய்ய சூர்யா தான் காரணமா?.. விஜய்க்கு எதிராக நடந்த சதியா?..

    கிட்டத்தட்ட பத்து வருடங்கள் விஜய் படத்துக்கு தன்னால் பாட்டு போட முடியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹாரிஸ் ஜெயராஜ் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை எழுப்பி உள்ளது. முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஹாரிஸ் ஜெயராஜ் ஏன் மறுத்தார் என்கிற கேள்வியை நோக்கி ஆராய்ந்த விஜய் ரசிகர்கள் அதற்கு சூர்யா தான் காரணம் என்று சண்டையை ஸ்டார்ட் பண்ணி விட்டனர்.

    நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை முந்துவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார் என்றும் விஜய் படங்களை ஹாரிஸ் ஜெயராஜ் வேண்டாம் என ஒதுக்கிய நேரங்களில் எல்லாம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை அவர் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு விஜய்க்கு எதிரான சதியை சூர்யாவும் அவரது குடும்பமும் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர் என்கின்றனர்.

    ஆனாலும் பெரிதாக சூர்யாவால் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறினார் என்பதுதான் உண்மை என விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அடுத்த சண்டையை ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வில்லை என்றாலும் விஜய்யின் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    சூர்யாவை நம்பி தொடர்ந்து அவர் படங்களுக்கு இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என தளபதி ரசிகர்கள் ட்விட்டர் சண்டையை கிளப்பியுள்ளனர். தற்போது சூர்யாவே ஹரிஷ் ஜெயராஜுக்கு பட வாய்ப்புகளை கொடுக்காமல் ஒதுக்கி வைத்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

    ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைக்க முடியாத காரணத்திற்காகவே தான் 10 வருடங்கள் விஜய் படங்களுக்கு இசையமைக்க முடியாமல் கடைசியாக நண்பன் படத்துக்கு மட்டும் இசையமைத்தேன் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தனது பேட்டியில் கூறிய நிலையில், இந்த விவாதம் எழுந்துள்ளது.

  • ஹோலி கொண்டாட சொன்னா.. உனக்கு யாரும்மா கண்ட இடத்துல நலங்கு வச்சுருக்கா?.. பூனம் பஜ்வா பரிதாபங்கள்!

    நடிகை பூனம் பஜ்வா ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பூனம் பஜ்வா 2005ம் ஆண்டில் வெளியான மொடதி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மேலும், தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தில் நடித்திருந்தார்.

    அதை தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோஹி, தம்பி கோட்டை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பூனம் பஜ்வா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பூனம் பஜ்வாவின் மார்க்கெட் குறைய தொடங்கியதால் தொடர்ந்து சில வருடங்களாக அவருக்கு படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களே அமைந்து வருகிறது.

    ஆம்பள, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சைடு ரோலில் நடித்துள்ளார். மேலும், 2020ம் ஆண்டு பூனம் பஜ்வா தான் இயக்குனர் சுனீல் ரெட்டியுடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.

    அதை தொடர்ந்து தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற பாவாடை மற்றும் ஜாக்கேட் அணிந்து வண்ணம் பூசிக்கொண்டு கூலர்ஸுடன் படு கிளமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவிற்கு ரசிகர்கள், செக்ஸி குயின், கார்ஜியஸ், பியூட்டி என பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    மேலும், ஹோலி கொண்டாட சொன்னா உடம்பு முழுக்க உனக்கு யாரும்மா நலங்கு வச்சது என்றும் கிண்டல் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு பூனம் பஜ்வாவை பங்கம் பண்ணியுள்ளனர். இன்ஸ்டாகிராமை வைத்தே பல நடிகைகள் பொழப்பு ஓடிக் கொண்டிருப்பது போல இவரது பொழப்பும் இதை நம்பித்தான் ஓடுது என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

  • பிரேக்கப் எல்லாம் வதந்தியா?.. தமன்னா காதலரோடு ஜோடியா ஹோலி கொண்டாடியிருக்காரு பாருங்க!..

    நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சமீபத்தில் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டார்கள் என்றும் இருவரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிய நிலையில் பிரேக்கப் வதந்தி காட்டுத்தீ போல பரவியது.

    ஆனால், அதற்கு. முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ஹோலி பண்டிகையின் போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக நடிகை ரவீனா டாண்டன் நடத்திய ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு சென்று இருப்பது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வட இந்தியாவில் ஹோலி பண்டிகை மிகப் பெரிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் அதற்கான விழாக்களை ஏற்பாடு செய்து பிரபல நடிகர்களை அங்கே பங்கேற்க செய்து ஆட்டம் பாட்டத்துடன் உடல் முழுவதும் கலர் பூசி தண்ணீர் அடித்துக் கொண்டு விளையாடும் நிகழ்வுகள் வட இந்தியாவில் நேற்று களைகட்டின.

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்த தமன்னா கடந்த சில ஆண்டுகளாக இந்தியில் படங்களில் நடிப்பதும் வெப் சீரிஸ்களில் காட்டுதனமான கவர்ச்சியை காட்டி, படுக்கையறை காட்சிகளிலும் படு தாராளமாக நடித்த வருகிறார்.

    லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2வில் விஜய் வர்மா உடன் ஆபாச காட்சிகளில் எல்லை மீறி நடித்த நிலையில் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. கடந்த ஆண்டு இறுதியிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொண்டு பாலிவுட் புதிய ஜோடிகளாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு விஜய் வர்மா இன்னும் தயாராகவில்லை என்றும் தமன்னாவின் வீட்டில் வற்புறுத்துவது அதிகமான நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக இந்தி மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன.

    ஆனால், தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் அது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று ஆளவந்தான், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகை ரவீனா டண்டன் தனது வீட்டில் நடத்திய ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தமன்னா மற்றும் விஜய் வர்மா பங்கேற்றத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் பிரேக்கப் செய்யவில்லையா என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

    அல்லது இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் நடிகை ரவீனா டண்டன் ஈடுபட்டு வருகிறாரா? என்றும் கேட்கத் தொடங்கியுள்ளனர். இருவரும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு வராமல், தனித்தனியாக அவரது வீட்டுக்குப் போயுள்ளனர். மேலும், ஹோலி கொண்டாடிய புகைப்படங்களையும் ஜோடியாக வெளியிடவில்லை. தமன்னா தனியாக ரவீனா டாண்டன் மகளுடன் ஹோலி கொண்டாடும் வீடியோவை மட்டுமே வெளியிட்ட நிலையில், இருவரும் பிரேக்கப் செய்தது உறுதிதான் என்றும் கூறுகின்றனர்.

  • என் நெஞ்சில வேற யாரும் கை வைக்கல!.. கண்ட இடத்துல கலர் பவுடர்!.. பிக் பாஸ் பிரபலம் கொண்டாடிய ஹோலி!..

    தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றான நகைச்சுவை நிறைந்த குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    தர்ஷா குப்தா குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும், தர்ஷா அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு நகைச்சுவை திருவிழா, சரிகமப போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.

    இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ரூத்ர தாண்டவம் படத்தின் மூலம் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து, சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஒ மை கோஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் தர்ஷா குப்தா சமிபத்தில் நடந்து முடிந்த நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கியிருந்தார். ஆனால் குக் வித் கோமாளி அளவிற்கு தர்ஷா குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ளவில்லை. பிக் பாஸில் தர்ஷாவின் செயல் அவரின் ரசிகர்களை ஏமாற்றம் அடையச்செய்தது.

    இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு தர்ஷா குப்தா தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்தும் தலையில் ஒரு வெள்ளை நிற துணியை சுற்றிக்கொண்டு உடல் முழுவதும் வண்ணங்களை கண்ட இடங்களில் தீட்டிக்கொண்டுள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த ஹோலி பண்டிகையில் உங்கள் வாழ்க்கை வெற்றியையும், செழிப்பையும், அன்பையும் பெறட்டும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்க்கு தர்ஷா குப்தாவின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

  • சிவகார்த்திகேயன் ஹிரோயினை தட்டித் தூக்கிய பிரதீப் ரங்கநாதன்!.. இந்த படத்திலும் 3 லட்டு வேண்டுமாம்!

    கடந்த மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    2019ம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்திலேயே அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார். அதை தொடர்ந்து 2022ம் ஆண்டு லவ் டுடே படத்தில் பிரதீப் ஹிரோவாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். அந்த படம் 100 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீஸில் அள்ளியது.

    மேலும், கடந்த மாதம் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் பாக்ஸ் ஆபிஸில் 150கோடி வரை வசூலை அள்ளி குவித்து அஜித்தின் விடாமுயற்சி படத்தையே வீழ்த்தியது. அந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், வி.ஜே.சித்து உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒ மை கடவுளே படத்தின் இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து இப்படத்தையும் இயக்கியிருந்தார். மேலும், லியோன் ஜேம்ஸ் இசையமத்து பட்டையை கிளப்பியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் பிரதீப்புடன் மமிதா பைஜூ, அனு இமானுவல் மற்றும் ஐஸ்வர்யா ஷர்மா என மூன்று ஹிராயின்கள் நடிக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டிராகன் படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இவானா என 3 நடிகைகள் நடித்த நிலையில், அடுத்த படத்திலும் 3 லட்டுகளா என சினிமா துறையில் பேசத் தொடங்கிவிட்டனர். மாஸ் ஹீரோவாக உருவானால் இதெல்லாம் சகஜம் தான் என்றும் கூறுகின்றனர்.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படத்துக்கு முன்பாக இந்த படம் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறுகின்றனர்.

  • ஷகீலாவுக்கும் எனக்கும் என்ன பிரச்னை!.. மகள் மிலா எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டாங்க!..

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான ஷகீலா ஒரு கட்டத்துக்கு மேல் அந்த துறை பெரிதாக வளர்ச்சி அடையாத நிலையிலும் பல சிக்கல்களும் மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த நிலையிலும் அப்படி நடிப்பதை நிறுத்திக்கொண்டார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் மதிப்பும் கிடைத்தது.

    ஷகீலா படத்தின் போஸ்டரையே பெண்கள் பார்க்காமல் கடந்து போனதும் மாதர் சங்கங்கள் அந்த போஸ்டர்களை கிழித்து வந்த காலம் எல்லாம் மாறி ஷகீலா திருநங்கையான மிலாவை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்ததை அறிந்த மக்கள் அவரை அம்மாவாகவும் அக்காவாகவும் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

    ஷகீலாவின் வளர்ப்பு மகளாக மாறிய திருநங்கை மிலா கலாட்டா உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியெல்லாம் விமர்சனம் செய்து வந்தார். பிக் பாஸ் போட்டியாளராக இவர் தான் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், இவருக்கு பதிலாக முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து பங்கேற்றார். அதற்கு அடுத்த சீசனிலும் ஷிவின் கணேஷ் பங்கேற்றார்.

    ஷகீலாவின் மகளாகவே வலம் வந்த மிலா திடீரென ஷகீலாவின் வீட்டை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஷகீலா மிலாவை மிஸ் யூஸ் செய்தாரா என்கிற அளவுக்கு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், தனக்கும் ஷகீலாவுக்கும் எந்தவொரு சண்டையும் இல்லை. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் அவங்க வீட்டில் இருக்க முடியவில்லை. அதன் காரணமாகத்தான் வெளியேறினேன். ஷகீலா வீட்டுக்கு போகும் போதே 10 லட்சம் பணம், 15 லட்சம் காருடன் தான் சென்றேன் என்றும் மிலா கூறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது தம்பி வீட்டில் 4 மாதங்கள் இருந்ததாகவும் தற்போது தனது பெற்றோர்கள் வீட்டிற்கே சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

  • புது வீடு.. புது புல்லட்!.. முத்துகுமரன் கலக்குறாரே!.. அப்பாவுக்கு கொடுத்த செம சர்ப்ரைஸ்!..

    பிக் பாஸ் சீசன் 8ன் வெற்றியாளரான முத்துகுமரனுக்கு பிக் பாஸ் வீட்டில் அதிகமான கேப்டன்ஷிப் பதவியை பெற்றதற்க்காக ராயல் என்ஃபில்ட் பைக்கை பரிசாக அறிவித்திருந்தனர். முத்துகுமரன் அந்த பைக்கை தன் தந்தைக்கு சர்ப்ரைசாக கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

    முத்துகுமரன் சிறு வயதிலிருந்து பல புத்தகங்களை வாசித்து தன் பேச்சு திறமையை வளர்த்துக்கொண்டார். தனது பேச்சு திறமையால் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைத்தது. அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அந்த மேடை தான் அவருக்கு பிக்பாஸில் பங்குபெருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

    தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8ல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட முத்துகுமரன் தன் பண்பான பேச்சுத் திறமையாளும், அன்பான குணத்தாலும் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கவர்ந்து அப்போட்டியில் வெற்றிப்பெற்றார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான கேப்டன்ஷிப்பை வென்றவர்களுக்கு ராயல் என்ஃபில்ட் வழங்குவதாக அறிவித்தபடி அவர் இன்று அதை வாங்கிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் வி.ஜே. வசந்த் ஏன் உங்களுக்கு இந்த பைக் மேல இவ்வளவு க்ரேஸ் என கேட்டதற்கு முத்து பல்ஸர்ல போறது குதிரைல போகிற மாதிரி ஆன என்ஃபில்ட் புல்லட்டுல போறது சிங்கத்துல போகிற மாதிரி என்றார்.

    முத்துகுமரன் மற்றும் அவரது இரு நண்பர்களுக்கும் மிலிட்ரிக்கு போக வேண்டும் என்றும் புல்லட் வண்டி வாங்கி ஓட்ட வேண்டும் என்றும் ஆசை இருந்ததாக கூறியுள்ளார். தனது நண்பர்களில் ஒருவரை அந்த வண்டியை திறந்து வைக்க செய்து மகிழ்ந்தார். பின்பு சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வண்டியை கொண்டுவந்து தன் அப்பாவுக்கு சர்ப்பரைஸ் கொடுத்தார். முத்துகுமரனின் அப்பா என் பிள்ளையின் பல நாள் கனவு நிறைவேறியது அவனின் கடினமான உழைப்பாலும் முயர்ச்சியாலும் கிடைத்தது அதற்கான வாய்ப்பை அளித்த விஜய் டிவிக்கும் பிக் பாஸ் டீமிற்க்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

    முத்துகுமரன் பிக்பாஸ் வீட்டில் தனது முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றி மற்றும் உங்கள் சார்பில் என் அப்பாவிற்கு நான் என்ஃபில்ட் புல்லட் வாங்கி கொடுத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

  • இப்போ நடிப்பதே கஷ்டமா இருக்கு!.. இது தான் காரணம்!.. சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் புலம்பல்!..

    முரளி, வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ராதா பல வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். கடந்த மாதம் பிப்ரவரி 14ஆம் தேதி தெலுங்கில் வெளியான தல திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் அந்தப் படம் விரைவில் தமிழ் டப்பிங் செய்து வெட்டு என்கிற பெயரில் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதா தற்போது தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டதாக கூறியுள்ளார்.

    கேரளாவில் இருந்து தான் நடிகைகளை அழைத்து வருகின்றனர். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நடிப்பது மிகவும் கடினம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்புகளே கிடைப்பதில்லை என்பதுதான் கொடுமையான விஷயமாக மாறி உள்ளது.

    இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு மலையாள நடிகைகளை கோலிவுட்டுக்கு கொண்டு வந்து நடிக்க செய்து வருகின்றனர். இதன் காரணமாக இங்குள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ரொம்ப நாள் கழித்து, தான் நடித்த தெலுங்கு படம் தமிழில் வெளியாக காத்திருக்கிறது. இப்போது எல்லாம் படங்கள் வெளியானாலே வெற்றி தான் என்கிற நிலை உருவாகியுள்ளது.

    பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்துக் கிடக்கின்றன. கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட படம் வெளியானாலே வெற்றி தான் என சினிமா உலகினர் கொண்டாடி வருகின்றனர் என்று வெளிப்படையாக பல விஷயங்களை சுந்தரா ட்ராவல்ஸ் பிரபலம் ராதா கூறியுள்ளார்.

    சுந்தரா ட்ராவல்ஸ் படத்தை தாண்டி கேம், மானஸ்தன், அடாவடி மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

  • நாய் மாறி வேலை செய்யணும்!.. அப்போதான் அப்படி வாழலாம்!.. சூர்யாவின் தத்துவத்தை பாருங்க!..

    நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொன்ன வார்த்தையை தான் இன்னமும் பின்பற்றி வருவதாக பேசி இருப்பது ரசிகர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கோலிவுட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

    நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய சரிவை கொடுத்தது.

    ஆனாலும் நடிகர் சூர்யா துண்டு விழாமல் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கண்ணாடிப் பூ பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த சிங்கிளை சீக்கிரமே வெளியிட போவதாகவும் ரசிகர்களுக்கு அந்த பாடலும் நிச்சயம் பிடிக்கும் என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் பாடல் வேலையில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கர் பிஸியாக இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நாயைப் போல உழைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ராஜா போல வாழ முடியும் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒருமுறை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை இன்னமும் தான் கடைப்பிடித்து வருவதாக சூர்யா கூறியுள்ளார்,

  • பிரதீப் ரங்கநாதன் ஃபேன் ஆகிட்டாரா வரலட்சுமி சரத்குமார்?.. முதுகுல குத்தியிருக்க டாட்டூவை பாருங்க!..

    நடிகை வரலட்சுமி சரத்குமார் உடல் எடையை கணிசமாக குறைத்து சூப்பர் ஸ்லிம்மாக மாறி உள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் அவர் பின்பக்கமாக திரும்பி நின்று முதுகை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தில் இருந்த டாட்டூவை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இவ்ளோ பெரிய டாட்டூவா என வாயை பிளந்து வருகின்றனர்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரதீப் ரங்கநாதன் ரசிகையாக மாறிவிட்டாரா என்றும் டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு திடீரென தற்போது முதுகில் பெரிய சைஸ் டிராகன் டாட்டூவை போட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் அப்படி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    வரலட்சுமி சரத்குமார் கடந்தாண்டு நிக்கோலாய் சச் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் இரண்டாவதாக வரலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.

    மிகப்பெரிய தொழில் அதிபரான நிக்கோலாய் சச் தேவை பார்த்தாலே மோனா படத்தில் வரும் ஹீரோ போலவே இருப்பார். அவரும் உடம்பில் ஏகப்பட்ட டாட்டூக்களை பச்சை குத்தி உள்ள நிலையில், அவரைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி வரலட்சுமி சரத்குமாரும் சீனாவின் நம்பிக்கை சின்னமான டிராகனை தனது முதுகில் பச்சை குத்தியிருக்கலாம் என்கின்றனர்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹனுமான் மற்றும் மேக்ஸ் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின. ஹனுமான் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலையும் மேக்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலையும் ஈட்டியது.

    ஹீரோயினாக நடிப்பதை விட துணை கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நயன்தாராவை போல இவரும் பல படங்களில் ஹீரோ இல்லாமல் உமன் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து பார்த்தார். ஆனால், எந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

    தமிழ் சினிமாவை விட தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பல படங்களில் பிஸியாக இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.