Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணியின் பார்லருக்கு வரும் ஹரிணியிடம் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு மனோஜை தன்னுடைய கணவர் என்பதை சொல்லிவிடுகிறார். அது மட்டுமல்லாமல் விவாகரத்து வழக்கில் நடந்த விஷயங்களையும் போட்டு கொடுக்கிறார்.
25 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி அவருடன் தான் வாழ வேண்டும். என்னை காசுக்காக கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டாங்க. மாமியார் கொடுமை என ஒன்னுக்கு இரண்டாக போட்டு கொடுக்க ஹரிணி அதிர்ச்சியில் அங்கிருந்து செல்கிறார்.
இன்னொரு பக்கம் முத்துவை பார்க்க வரும் மீனா அம்மா சத்யா காதலை வேண்டாம் என அழுது சொல்லிக்கொண்டு இருக்கிறார். வீட்டிற்கு வரும் முத்து இதை ஏன் அவங்களிடம் சொன்ன எனக் கேட்க அவரும் சத்யா காதல் வேண்டாம் என்றே சொல்கிறார்.
பின்னர் மீனாவுக்கு செயின் வாங்கி வந்து கொடுக்க அவர் சந்தோஷப்படுகிறார். வீட்டில் எல்லாரும் அதை பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்க விஜயா ஒரு செயினுக்கே ஒரு வருஷம் ஆச்சு. மனோஜ் பொண்டாட்டி 500 பவுனுடன் வருவா என்கிறார்.
அந்த நேரத்தில் ஹரிணி ஃபேமிலியுடன் வந்து திட்ட துவங்குகிறார். ரோகிணியை பார்த்த விஷயத்தை சொல்ல தொடங்க அங்கிருந்தவர்களே அதிர்ச்சி அடைகின்றனர். அண்ணாமலையையும் திட்ட முத்து கோபத்தில் நிற்கிறார். விஜயாவுக்கு அப்பு கன்பார்ம் போல.. இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது போலயே!
