Tag: எம்ஜிஆர்.

  • அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.

    ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.

    இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.

    பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.

    நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.

    கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  • அதிநவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸாகும் எம்ஜிஆர் படம்… டிரெய்லரே மாஸ் காட்டுதே!

    தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர்தான். இவரது படங்கள் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் சலிக்காது. அந்த வகையில் இப்போது ரீ ரிலீஸாக உள்ள படம் என்னன்னு பார்க்கலாமா…

    1975ல் எம்ஜிஆர், ராதாசலுஜா இணைந்து நடித்த படம் இதயக்கனி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் பாடல் கட்சியின் கொள்கைப் பாடலாகவே மாறிப்போனது. இப்போது எங்கு கூட்டம் நடந்தாலும் கூட இந்தப் பாட்டைத் தான் போட்டு எம்ஜிஆர் மாதிரி வேஷம் போட்டு ஆடுவார்கள்.

    இந்தப் படம் அந்த வகையில் எம்ஜிஆரின் அரசியல் பயணத்துக்கு உறுதுணையாகவே இருந்தது. படத்தில் மனோகர், தேங்காய்சீனிவாசன், ஐசரிவேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோசனா உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்ற பாடல் அவ்வளவு அழகு… அவ்வளவு அற்புதம்… எப்போது கேட்டாலும் மனதை வசீகரிக்கக்கூடியது.

    படத்தில் கூலிங்கிளாஸ் மஞ்சள் சட்டை சகிதம் எம்ஜிஆர் வரும் காட்சிகள் எல்லாமே பட்டையைக் கிளப்பும் ரகங்கள்தான். 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் பேவை சார்பில் இந்தப் படம் மீண்டும் ரீ ரிலீஸாகிறது.

    வரும் 4.7.2025ம் தேதி 100 திரையரங்குகளில் 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சினிமாஸ்கோப்பில் படம் வெளியாகிறது. சத்யா மூவீஸின் 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. உலக எம்ஜிஆர் பேரவை அமைப்புகள் இந்தப் படத்தை பெருமையுடன் வழங்குகிறது. பிரான்ஸ், புதுவை, அமீரக பேரவைகள் என்றும் டிரெய்லரில் டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது.

    ‘உழைக்கும் தொழிலாளர்களே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே’ என்று எம்ஜிஆர் பேசும்போது மீண்டும் நாம் எம்ஜிஆர் காலகட்டத்தில் வாழும் உணர்வு உண்டாகிறது.

    கூலித்தொழிலாளி ஒருவர் எங்க எஜமான் ஏழைகளுக்குக் கொடுத்து கொடுத்து கைசிவந்தவர் மட்டுமல்ல. கருணையைக் காட்டிக் காட்டி மனசும் சிவந்த பொன்மனச் செம்மல் ஐயா அவரு என்று சொல்லும் போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு பரவச உணர்வு உண்டாகிறது என்றே சொல்லலாம்.

    தேங்காய் சீனிவாசன் ஒரு காட்சியில் அவர் பாடியே புல்லட் ஃபரூப். துப்பாக்கியே அவருக்கிட்ட தோத்துருக்கு. தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர்தான் எங்க பாஸ்னு சொல்கிறார். அப்போது திரையரங்கில் விசில் பறப்பது நிச்சயம்.

    படத்தின் டிரெய்லரைக் காண: https://www.youtube.com/watch?v=5qsTTEG6kw0

  • எம்ஜிஆர் தயாரித்த படங்கள் லிஸ்ட்… ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்

    முதலாவதாக எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் 1958ல் வெளியான படம் நாடோடி மன்னன். முதன் முதலில் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 150 நாளுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம். மதுரை தங்கம் தியேட்டரில் 120 நாள்கள் ஓடி சாதனை செய்த படம். சரோஜாதேவி எம்ஜிஆருடன் நடித்த முதல் படம். பாதி கருப்பு வெள்ளை, பாதி கலர் என எடுத்த படம். எஸ்எம்.சுப்பையா நாயுடு இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

    இரண்டாவதாக எம்ஜிஆர் தயாரித்த படம் அடிமைப்பெண். இது 1969ல் வெளியானது. இந்தப் படத்தை கே.சங்கர் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இரட்டை வேடத்தில் நடித்தனர்.

    மிகப்பெரிய வெற்றிப்படம். சிறந்த பாடல்கள் இடம்பெற்றன. எம்ஜிஆருக்காக எஸ்பிபி முதன் முதலாக குரல் கொடுத்த ஆயிரம் நிலவே வா பாடல் இடம்பெற்ற படம். அதிக வசூல் சாதனை பெற்ற படம்.

    உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973ல் வெளியானது. எம்ஜிஆர் தயாரித்தார். இரட்டை வேடங்களில் நடித்தார். வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம். பிரம்மாண்டமான பொருள்செலவில் எடுக்கப்பட்டது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது. எம்ஜிஆருடன் மஞ்சுளா, லதா, சந்திரகலா உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுக்காதது ஜெயலலிதாவுக்கு ரொம்ப வருத்தத்தை உண்டாக்கியது. எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆர் இயக்கிய 2வது படம் இது.

    எம்ஜிஆர் தயாரித்த 4வது படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். எம்ஜிஆர் இயக்கிய படம். அவருடன் லதா ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு நடித்த படம். 1978ல் வெளியானது. மன்னர் காலத்துப் படமாக இருந்ததால் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெற்றி பெறவில்லை. 75 நாள்கள் ஓடியது. எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். எம்ஜிஆர் நடித்த கடைசி படம்.

  • எம்ஜிஆருக்குப் போட்டியா வந்தாரா மு.க.முத்து? பிரபலம் சொல்லும் பதில் என்ன?

    மறைந்த நடிகர் மு.க. முத்து பற்றி ஒரு செய்தி உண்டு. அவர் எம்ஜிஆர் மாதிரி சினிமாவில் நடிக்கிறார். அவருக்குப் போட்டியா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்ன சொல்கிறார்? வாங்க பார்க்கலாம்.

    எம்ஜிஆருக்குப் போட்டியா முக.முத்துன்னு எல்லாம் எடுத்துக்கக்கூடாது. ஏன்னா எம்ஜிஆர் கொடுத்த வெற்றியும்இ கடந்து வந்த பாதைகளும், அவர் நடித்த படங்களும் அதுக்கான வசூலும் வேற. ஆனா அரசியலுக்கு ஒரு காய் நகர்த்த வேண்டும் என்ற சிந்தனையோட முக.முத்துவை சிலர் நகர்த்திக் கொண்டு வச்சிருப்பாங்கன்னு வேணா பார்த்துக்கலாம்.

    ஆனா எம்ஜிஆர் அதை எப்படி எடுத்துக்கிட்டாருன்னுதான் பார்க்கணும். எம்ஜிஆர் தன்னோட படங்களுக்குப் பெரிய பலமாக நினைச்சது பாடல்களைத் தான். பாடல்கள் என்ன செய்யும்னா பெரிய லெக்சர் நடத்தி கூட்டத்தை நடத்தி சொல்லக்கூடிய விஷயத்தை ரீச் பண்ண முடியாமப் போகும்போது ஒரு 3 நிமிட பாடல் வந்து சொல்லிடும்.

    அது கடைக்கோடியில இருக்குற ரசிகர்களுக்கும் போய்ச் சேரும். அதனால பாட்டை வந்து எம்ஜிஆர் தனக்கான பெரிய ஆயுதமாகவே வச்சிக்கிட்டாரு. அதனால தான் ஒவ்வொரு படத்துக்கும் பாடல்கள் எப்படி வரணும்கறதை அவரே வடிவமைச்சாரு. இதயவீணை படத்துக்கு 5 டியூன்ல இருந்து ஒவ்வொரு இசைக்கண்ணிகளாக எடுத்து ஒரே பாட்டா வச்சாரு.

    எம்ஜிஆர் பாடலைத் தன்னோட ஆயுதமா நினைச்சாலும் அவரால பாட முடியாது. ஆனா மு.க.முத்துவால் நல்லா பாட முடியும். அருமையான குரல் வளம் உள்ளவர். எம்ஜிஆர் படத்துக்கு உள்ள மாதிரி மு.க.முத்துவுக்கும் பெரிய டீம் இருக்கு. எம்ஜிஆர் என்ன சொல்றாருன்னா உன் படத்தை எல்லாம் எனக்குப் போட்டுக் காட்ட மாட்டியான்னு ஒரு தடவை கேட்டுள்ளார்.

    அதற்கு உடனே மு.க.முத்து தன்னோட டீமை அழைச்சி வந்து எம்ஜிஆருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினாராம். அப்போது எம்ஜிஆர் அவரிடம், உனக்கென ஒரு தனிபாணியை அமைச்சிக்கிட்டு முன்னுக்கு வரணும்னு சொல்றாரு. அதே நேரம் அவரு கையில கட்டி இருந்த ரேடோ வாட்சைக் கழட்டி அவருக்கு கட்டி வாழ்த்திருக்காரு எம்ஜிஆர். பிள்ளையோ பிள்ளை படத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற பாடலில் மு.க. முத்துவின் டிரஸ், கெட்டப் போட்டு ஆடுவது எல்லாம் அப்படியே எம்ஜிஆரைப் பார்த்த மாதிரி இருக்கு.

    எம்ஜிஆர் மாதிரியே ஓடுவார். கிருஷ்ணன் பஞ்சுவில் இருந்து எல்லாரும் இவரை எப்படியாவது முன்னாடி கொண்டு வரணும்னு உழைக்கிறாங்க. எம்ஜிஆர் முக.முத்துவின் பாடல்களை எல்லாம் கேட்டு ஷாக் ஆகிட்டாரு. முக.முத்துவுக்கு எழுதப்பட்ட பாடல்கள் எல்லாமே எம்ஜிஆரை நோக்கித்தான் எழுதப்பட்டன. எம்ஜிஆருக்கு நட்பில் நெருக்கமாக இருந்த வாலி தான் மு.க.முத்துவுக்கும் பாடல்களை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கண்ணதாசனின் அண்ணன் மகனை ஓங்கி அறைந்த எம்ஜிஆர்! பின்ன நடிகையிடம் வாலாட்டலாமா?

    எம்ஜிஆர் ஒருமுறை கண்ணதாசனின் அண்ணன் மகனை ஓங்கி அறைந்ததாக ஒரு தகவல் வெளியானது. அது ஏன் அறைந்தார் என்ன நடந்தது என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஒரு காலத்தில் எம்ஜிஆரும் கண்ணதாசனும் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகி வந்தார்கள். அரசியல் காரணங்களுக்காக எம்ஜிஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சிக்க வேண்டிய சூழ்நிலை.

    அதனால் தான் தன்னுடைய படங்களுக்கு கண்ணதாசனை பாடல் எழுத எம்ஜிஆர் கூப்பிடுவது இல்லை. அந்த நேரத்தில் தான் வாலியை எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார். எம்ஜிஆரும் கண்ணதாசனும் சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். எம்ஜிஆர் புகழை மேலும் பரவலாக்க மிகப்பெரிய உதவியாக இருந்தது கண்ணதாசனின் பாடல்கள் தான்.

    அதைப்போல கண்ணதாசனுக்கும் ஒரு சிறந்த மேடையாக அமைந்தது எம்ஜிஆரின் திரைப்படங்கள். கண்ணதாசனின் எழுத்தாற்றலை இந்த உலகம் அறிய செய்ததும் எம்ஜிஆரின் திரைப்படங்கள்தான். இருவருமே தமிழ் மீதும் கலைமீதும் மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும் இருந்திருக்கின்றனர்.

    குறிப்பாக எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய அச்சாணியாக அமைந்தது கண்ணதாசன் எழுதிய நான் ஆணையிட்டால் பாடல். இந்த நிலையில் கண்ணதாசனின் அண்ணன் மகனை எம்ஜிஆர் ஓங்கி அறைந்ததாக ஒரு தகவல் வெளியானது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை விளக்கமாக கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன். கண்ணதாசனின் அண்ணன் மகன் தான் பஞ்சு அருணாச்சலம்.

    lakshmi

    lakshmi

    பஞ்சு அருணாச்சலத்துடன் பிறந்தவர்கள் கே என் சுப்பு, கே என் லட்சுமணன், கே என் கிருஷ்ணன் ஆகிய மூவர். இதில் கே என் சுப்பு அன்னக்கிளி போன்ற பல படங்களின் தயாரிப்பாளர். கே என் லட்சுமணன் ஆரம்பத்தில் ஃபிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அப்போது நடிகை லட்சுமியை பற்றி ஏதோ தவறாக அந்த பத்திரிக்கையில் எழுத அந்த விஷயத்தை எம்ஜிஆர் காதுக்கு லட்சுமி கொண்டு சென்றிருக்கிறார் .அதன் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடந்தது என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

  • ரஜினி, எம்ஜிஆர் ஸ்டில் அந்த ஒண்ணுதான் இருக்கு… வேற எதுவுமே இல்லையே… என்னாச்சு?

    எம்ஜிஆருடன் ரஜினி இருக்குற மாதிரி ஸ்டில் இருக்கவே இருக்காது. 1983ல் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க. தமிழ்த்திரை உலகமே சேர்ந்து அவருக்கு நேரு ஸ்டேடியத்துல பாராட்டு விழா நடத்துறாங்க. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இருந்து ஒரு ஊர்வலமா நடிகர்கள் அனைவரும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் போனாங்க. அண்ணா சாலை வழியா போய் நேரு ஸ்டேடியத்துல இறங்கி எம்ஜிஆருக்குப் பாராட்டு விழா நடத்துனாங்க.

    ஒரு பக்கம் பாரதிராஜாவும், பாக்கியராஜூம் நிற்பாங்க. இன்னொரு பக்கம், கமலும், ரஜினியும் நிற்பாங்க. எம்ஜிஆருக்குப் பொன்னாடை, மாலை போடுவாங்க. ரஜினிகாந்த் ஓரமா நின்னுக்கிட்டு இருப்பாரு. அந்த ஒண்ணுதான் ரஜினி எம்ஜிஆரு கூட நிற்பாரு.

    ரஜினி லதாவைக் காதலித்ததும் ஒரு காரணம்னு சொல்றாங்க. ரஜினியோட வளர்ச்சி எம்ஜிஆருக்குப் பிடிக்கலன்னும் ஊடகங்கள் எழுதுனாங்க. அதே மாதிரி ஜெயலலிதா முதல்வர் ஆன நேரம். அண்ணாமலை படத்திலும் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசினதா ஒரு காட்சி இருக்கு.

    கிளி ஜோசியத்துல ஒரு பொம்பளையால உனக்குப் பிரச்சனை வரும்னு சொல்வாரு. அப்போ அங்கே குஷ்பு வருவாரு. வினுச்சக்கரவர்த்தி மினிஸ்டர். அவர் வீட்டுல நாத்தை எல்லாம் ரஜினி நட்டுவாரு. ‘நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னைத் தேவையில்லாம சீண்டாதீங்க. சீண்டுனா தேவையில்லாத விளைவை எல்லாம் சந்திப்பீங்க’ன்னு ரஜினி சொல்வார். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

    ஆனால் ரஜினியின் ஆருயிர் நண்பரான கமல் குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி படத்தில் நடித்துள்ளார். திரையுலகில் அனைவரும் எம்ஜிஆரை வாத்தியார் என்றே அன்புடன் அழைப்பர். அந்த வகையில் கமல், பாக்கியராஜ், ரஜினி என பலரும் அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால் ரஜினி இந்த விஷயத்தில் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகாதது ஆச்சரியமாக இருக்கிறது.

  • இப்படி வாரி வாரி வழங்குறீங்களே… உங்களுக்குன்னு வேணாமா? நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆரின் ‘நச்’ பதில்!

    புரட்சித்தலைவர், பொன்மனச் செல்வர் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவரை எட்டாவது கொடை வள்ளல் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவார். அவரைப் பின்பற்றி வந்தவர்தான் கருப்பு எம்ஜிஆர் என்றழைக்கப்படும் விஜயகாந்த். இருவரும் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் இவர்களது அருஞ்செயல்கள் அவர்களை இன்றும் நம்மிடையே நினைவுபடுத்தி வருகின்றன. அந்த வகையில் எம்ஜிஆர் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

    ‘உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்குணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே. அதுக்கு என்ன காரணம்?’னு எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்கிறார் ஒரு நிருபர். அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் இதுதான். சொத்துக்கள் கடைசி வரை நம்மிடம் இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கறதுதான் என் கருத்து.

    என்னை முதன் முதலா ஹீரோவாக நடிக்க வைத்தவர் ஜூபிடர் சோமு. ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரில் வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டுடியோவுக்கு பங்குதாரரா இருக்கேன். என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவர்.

    அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டுடியோவுக்கு முதலாளியா இருக்க முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா சிலர் சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும், பணத்தையும் சேர்த்து வச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பில் இல்லாதது. சட்டத்தின் பாதுகாப்பில் நாம எத்தனை நாள் வாழ முடியும்?

    அது மட்டுமா? இந்த செல்வம் எல்லாம் யார் தந்தது? மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததில் இருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படற மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும்போது அடையற மகிழ்ச்சியையே நான் பெரிசா நினைக்கிறேன்னு சொன்னார் எம்ஜிஆர்.

  • எம்ஜிஆருக்கு முன்பணம் கொடுக்க முடியாமல் திணறிய சந்திரபாபு… உதவி செய்தது அவரா?

    பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடி வீட்டு ஏழை. அந்தப் படம் தொடர்ச்சியாக போகாமல் இடையில் நின்று போனது. அதற்குக் காரணம் எம்ஜிஆருக்கு சம்பளம் கொடுக்க சந்திரபாபுவிடம் பணம் இல்லை. குறைந்தபட்சம் எம்ஜிஆருக்கு 25 ஆயிரம் ரூபாயாவது முன்பணம் கொடுக்கணும். ஆனால் அவரிடம் பணம் இல்லை.

    இதனால் தோழி சாவித்திரியிடம் கேட்க அவரும் உதவும் மனப்பான்மை கொண்டவராக இருந்ததால் உடனடியாக 25 ஆயிரம் ரூபாயை சந்திரபாபுவிடம் கொடுத்து விட்டார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிற உங்களுக்கும் முன்பணம் கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன்.

    ஆனால் அதை எங்கே இருந்து கொடுப்பது? நானே உங்ககிட்ட வாங்கித்தான் எம்ஜிஆருக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னார் சந்திரபாபு. அப்போது சாவித்திரியும் நான் உங்ககிட்ட முன்பணம் கேட்டேனா? நீங்க படப்பிடிப்பை ஆரம்பிங்க. உங்களுக்கு எப்போ கொடுக்க முடியுமோ அப்போ கொடுங்க. எந்த அவசரமும் இல்லைன்னு அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    சாவித்திரியைப் பொருத்தவரை வெளியுலகில் மட்டும் இல்லாமல் திரை உலகைச் சார்ந்த தனது நண்பர்களுக்கும் எந்தளவு உறுதுணையாக இருந்தார் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். அந்தளவு பெருந்தன்மையோடு சாவித்திரி உதவியும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை என்பதும் உண்மை. அந்தப் படத்தினால சந்திரபாபு மிகப்பெரிய நட்டத்தை சந்திக்க நேர்ந்தது என்பதும் சோகமான விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    சந்திரபாபு தயாரிக்க நினைத்த மாடிவீட்டு ஏழை படத்திற்கு எம்ஜிஆரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. காலதாமதம் ஆனது. அதனால் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இயக்குனராக அறிமுகமாக இருந்த சந்திரபாபுவுக்கு பெரிய நஷ்டம். படத்துக்கு சந்திரபாபு கணிசமாக முதலீடு செய்தார்.

    இருந்தும் சில நிதி நெருக்கடிகள் படத்தை நகர விடாமல் செய்தன. கடைசியாக எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து அதே பெயரில் 1981ல் படம் வெளியானது. இதை பூம்புகார் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை எழுதியவர் மு.கருணாநிதி. அமிர்தம் இயக்கிய அந்தப் படத்தில் சிவாஜி, ஸ்ரீபிரியா, சுஜாதா உள்பட பலர் நடித்தனர்.

  • Flash back: கவிஞர் சொன்னதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட எம்ஜிஆர்… காட்சியை மாற்றச் சொன்னா ஆளையா மாற்றுவாரு?

    மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று குதிரையில் அமர்ந்தபடி பாட்டுப் பாடிக்கொண்டே வருவார். இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். வாங்க மச்சான் வாங்க, மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ ஆகிய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இன்றும் திருமண வீட்டில் ஒலிக்கும் புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே பாடலையும் எழுதியவர் இவர்தான்.

    இவர் பாடலாசிரியர் மட்டும் அல்ல. கதாசிரியரும் கூட. சினிமாவில் மட்டும் அல்ல. பல நாடகக்குழுக்களுக்கும் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த சமயம் தஞ்சை ராமையதாஸிடம் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களிடம் கதை இருக்கிறதா என கேட்டுள்ளார்.

    பகடை பன்னிரெண்டு என ஒரு கதையை நாடகத்திற்காக எழுதி இருந்தார். அப்போது திரைப்படத்திற்காக அந்தக் கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத அதுவே குலேபகாவலி என்ற படமானது. அப்போது ஏற்பட்ட நட்பில் எம்ஜிஆரை வைத்து லலிதாங்கி என்ற படத்தைத் தயாரித்தார். 1935ல் வெளியான லலிதாங்கி படத்தின் ரீமேக்தான் இது.

    10ஆயிரம் அடி வரை வளர்ந்த இந்தப் படத்தில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. ஒரு காட்சியில் கடவுளை துதி பாடும் வகையில் எம்ஜிஆர் பாடல் ஒன்று இருந்தது. அப்போதுதான் எம்ஜிஆர் திமுகவில் இணைந்து இருந்தார். அதனால் ‘கட்சிக் கொள்கைக்கு எதிராக நான் கடவுளை துதிபாடும் வகையில் நடிக்க மாட்டேன்’ என்றார். ‘நீங்கள் காட்சியையும், பாடலையும் மாற்றுங்கள்’ என்றார்.

    ஆனால் இதற்கு தஞ்சை ராமையாதாஸ் சம்மதிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஹீரோ எம்ஜிஆரையே

    படத்தில் இருந்து தூக்கிவிட்டார். அவருக்குப் பதிலாக சிவாஜியை வைத்து ராணி லலிதாங்கி என்ற பெயரில் படமாக்கினார். அது 1957ல் வெளியானது. இதே போல அறிவாளி என்ற படத்தில் முதலில் எம்ஜிஆர் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பதிலாக சிவாஜி நடிப்பில் வெளியானது.

  • Flash BacK: எம்ஜிஆரை மயக்க நினைத்த வயாகரா நடிகை… தலைவரிடம் இந்த ஆட்டம் எல்லாம் பலிக்குமா?

    பல போராட்டங்களுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் கதாநாயகன் ஆனார். ஒரு படம் வெற்றின்னா 2 படம் தோல்வி. அப்படித்தான் அவருக்கு சினிமா உலகம் இருந்தது. மலைக்கள்ளன் படம் அப்போதுதான் வந்தது. நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. அப்போது இயக்குனர் டிஆர்.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தார்.

    அவர் எம்ஜிஆர், சிவாஜி என இருவரையும் இணைத்து கூண்டுக்கிளி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் தோல்வி அடுத்தடுத்து இவர்களை இணையவிடாமல் செய்தது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அதனால் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    டி.ஆர்.ராமண்ணாவுக்கு எம்ஜிஆரை வைத்து எப்படியாவது ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதனால் குலேபகாவலி என்ற படத்தை இயக்கினார். 1001 அற்புத இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அன்றைய வாலிப வயாகரா, கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி இயக்குனரின் சகோதரிதான்.

    இவர்கள் இருவரும் இணைந்து குலேபகாவலி கதையை சினிமாக்க முடிவு செய்தனர். அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பது உறுதியானது.

    படத்தின் கதைப்படி குலேபகாவலி நாட்டில் அல்லி தர்பார் நடத்தும் 3 இளம்பெண்களிடம் எம்ஜிஆரின் சகோதரர்கள் கொத்தடிமைகள் ஆக்கப்படுகின்றனர். எம்ஜிஆர் தனது புத்திசாலித்தனத்தால் அவர்களை மீட்டு பகாவலி மலரை எடுத்து வந்து தன் தந்தையின் கண்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்கிறார். இதுதான் குலேபகாவலியின் கதை.

    படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் டி.ஆர்.ராமண்ணாவுக்கு குலேபகாவலி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆள்மயக்கி கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி கனகச்சிதமாக நடித்திருந்தார்.

    இவரோடு ராஜசுலோச்சனா, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா என அல்லிராணிகள் ஆட்டம் போட்டனர். பாடல்கள் எல்லாமே சூப்பர். மயக்கும் மாலை பொழுதே நீ வா வா என்ற பாடல் கூண்டுக்கிளிக்காக எழுதப்பட்டது. கேவி.மகாதேவன் இசையில் விந்தன் எழுதிய பாடல். இது அந்தப் படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக குலேபகாவலியில் பயன்படுத்தப்பட்டது.

    இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எம்எஸ்வி., பாடலை எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ். இந்தப் படத்தில் நிஜப்புலியுடன் எம்ஜிஆர் மோதுகிறேன் என சொன்னார். கட்டிப்புரண்டு சண்டை போட்டார். நிஜப்புலி கட்டளைக்குக் கீழ் படிய மறுத்தது. ஆனாலும் வெற்றி வேண்டுமானால் நிஜப்புலியுடன் சண்டை போட்டே ஆக வேண்டும் என உறுதியாக இருந்து நிஜப்புலியுடன் சண்டை போட்டாராம்.