Flash BacK: எம்ஜிஆரை மயக்க நினைத்த வயாகரா நடிகை… தலைவரிடம் இந்த ஆட்டம் எல்லாம் பலிக்குமா?

Written by

in

பல போராட்டங்களுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் கதாநாயகன் ஆனார். ஒரு படம் வெற்றின்னா 2 படம் தோல்வி. அப்படித்தான் அவருக்கு சினிமா உலகம் இருந்தது. மலைக்கள்ளன் படம் அப்போதுதான் வந்தது. நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. அப்போது இயக்குனர் டிஆர்.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தார்.

அவர் எம்ஜிஆர், சிவாஜி என இருவரையும் இணைத்து கூண்டுக்கிளி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் தோல்வி அடுத்தடுத்து இவர்களை இணையவிடாமல் செய்தது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அதனால் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

டி.ஆர்.ராமண்ணாவுக்கு எம்ஜிஆரை வைத்து எப்படியாவது ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதனால் குலேபகாவலி என்ற படத்தை இயக்கினார். 1001 அற்புத இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அன்றைய வாலிப வயாகரா, கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி இயக்குனரின் சகோதரிதான்.

இவர்கள் இருவரும் இணைந்து குலேபகாவலி கதையை சினிமாக்க முடிவு செய்தனர். அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பது உறுதியானது.

படத்தின் கதைப்படி குலேபகாவலி நாட்டில் அல்லி தர்பார் நடத்தும் 3 இளம்பெண்களிடம் எம்ஜிஆரின் சகோதரர்கள் கொத்தடிமைகள் ஆக்கப்படுகின்றனர். எம்ஜிஆர் தனது புத்திசாலித்தனத்தால் அவர்களை மீட்டு பகாவலி மலரை எடுத்து வந்து தன் தந்தையின் கண்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்கிறார். இதுதான் குலேபகாவலியின் கதை.

படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் டி.ஆர்.ராமண்ணாவுக்கு குலேபகாவலி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆள்மயக்கி கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராஜகுமாரி கனகச்சிதமாக நடித்திருந்தார்.

இவரோடு ராஜசுலோச்சனா, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா என அல்லிராணிகள் ஆட்டம் போட்டனர். பாடல்கள் எல்லாமே சூப்பர். மயக்கும் மாலை பொழுதே நீ வா வா என்ற பாடல் கூண்டுக்கிளிக்காக எழுதப்பட்டது. கேவி.மகாதேவன் இசையில் விந்தன் எழுதிய பாடல். இது அந்தப் படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக குலேபகாவலியில் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எம்எஸ்வி., பாடலை எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ். இந்தப் படத்தில் நிஜப்புலியுடன் எம்ஜிஆர் மோதுகிறேன் என சொன்னார். கட்டிப்புரண்டு சண்டை போட்டார். நிஜப்புலி கட்டளைக்குக் கீழ் படிய மறுத்தது. ஆனாலும் வெற்றி வேண்டுமானால் நிஜப்புலியுடன் சண்டை போட்டே ஆக வேண்டும் என உறுதியாக இருந்து நிஜப்புலியுடன் சண்டை போட்டாராம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *