Tag: director shankar

  • 256 அடி கட்டவுட்!.. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.. செலவு மட்டும் இத்தனை லட்சமா?..

    நடிகர் ராம்சரண்: தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்சரண். இவருக்கு தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் இவர்களுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக ஜொலித்து வரும் ராம்சரண் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    இந்த திரைப்படம் மூலமாக இந்திய அளவில் பிரபலமாக இருந்த ராம்சரண் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார். இப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இந்த திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகின்றார்.

    இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் படு பிஸியாக இறங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அமெரிக்காவில் தொடங்கி இருந்தது. தொடர்ந்து இயக்குனர் சங்கர் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.

    ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ராம்சரண் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ராம்சரண் ரசிகர்கள் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதாவது ஆந்திராவில் ராம்சரனுக்காக அவரின் ரசிகர்கள் 256 அடிக்கு கட்டவுட் ஒன்றை வைத்து இருக்கிறார்கள்.

    தற்போது வரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை. கிட்டத்தட்ட பத்து லட்சம் செலவு செய்து ராம்சரனின் ரசிகர்கள் இந்த கட்டவுட்டை வைத்திருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது. கட்டவுட்டுக்கு இவ்வளவு செலவா? என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    இருப்பினும் பல நாட்கள் கடுமையாக உழைத்து ராம்சரனுக்காக அவரின் ரசிகர்கள் இந்த கட்டவுட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இது இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு முன்பு பிரபாஸுக்கு 200 அடிக்கு ஒரு கட்டவுட் வைத்திருந்தார்கள். அதனை தற்போது ராம் சரண் ரசிகர்கள் முறியடித்து இருக்கிறார்கள். கட்டவுட்டை போலவே படமும் மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

    அந்த எண்ணத்தை இயக்குனர் சங்கர் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் மீது இயக்குனர் சங்கர் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கின்றார். இந்தியன் 2 திரைப்படத்தில் பட்ட அவமானத்தை இப்படத்தின் மூலம் துடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது.

  • கதை என்னது ஆனா படம் அவரது!.. கேம் சேஞ்சர் குறித்து ஓபனாக பேசிய கார்த்திக் சுப்புராஜ்!..

    கேம் சேஞ்சர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். இதுவரை பெரியளவு தோல்விகளை கண்டிராத இயக்குனராக வளம் வந்த ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

    இந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்குவதற்கு தயாரானார் சங்கர். இந்த படம் துவங்கப்பட்ட பிறகு கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு சில காலம் தடைப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் சங்கர் ஈடுபட்டிருந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பணிகளை முடிப்பதற்கு காலதாமதம் ஆனது.

    தற்போது இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் ராம்சரண், எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு தயாரித்திருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது.

    படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் சங்கர் முதற்கட்டமாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்து வருகின்றார். எப்போதும் தன்னுடைய கதையை திரைப்படமாக எடுக்கும் சங்கர் முதன் முறையாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதையை படமாக எடுத்திருக்கின்றார்.

    அதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரின் வழக்கமான படங்களாக இருக்குமா இல்லையா என்று சந்தேகம் எழுந்திருக்கின்றது. அதற்கு காரணம் கேம் சேஞ்சர் திரைப்படம் நேரடி தமிழ் படம் கிடையாது, தெலுங்கு படம். இதனால் கேம் ரேஞ்சர் திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து வருகின்றது. படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காகவே தொடர்ந்து படக்குழுவினர் பிரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பேசி இருந்தார். அதாவது இந்த திரைப்படத்தின் கதையை முதலில் நான் எழுதியவுடன் எனது டீமில் இருக்கும் நபர்களிடம் இந்த கதை குறித்து டிஸ்கஷன் செய்தேன். இது ஒரு அரசியல் கதையாக தான் நான் எழுதியிருந்தேன்.

    இதனை கேட்ட எனது நண்பர்கள் இது இயக்குனரின் சங்கர் கதை போல இருக்கின்றது. அதாவது அவர் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போல் இருக்கின்றது என்று கூறினார்கள். இது போன்ற கதையை நிச்சயம் ஒரு பெரிய நடிகரை வைத்து எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று யோசித்தேன். எதற்கு குழப்பம் என்று அவரிடமே இந்த கதையை கொண்டு போய் சேர்த்தேன்.

    அவரும் இந்த கதையைப் படித்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்துப் போனதாக கூறினார். பின்னர் அவரே இந்த திரைப்படத்தை இயக்குகிறேன் என்று கூறியதால் அந்த கதையை இயக்குனர் சங்கரிடம் கொடுத்துவிட்டேன்’ என்று தெரிவித்திருக்கின்றார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • கேம் சேஞ்சர் படத்துல முதல்ல நடிக்க இருந்தது விஜய்யா?.. கடைசில இப்படி பண்ணிட்டாரே ஷங்கர்!..

    கேம் சேஞ்சர்: பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஷங்கர். இவரது திரைப்படங்கள் என்றாலே மிகவும் பெரியளவில் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரை தோல்வியை கண்டிராத இயக்குனராக வளம் வந்த சங்கருக்கு மிகப்பெரிய பேரடியை கொடுத்தது இந்தியன் 2 திரைப்படம் தான்.

    கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் மனம் தளராத சங்கர் தொடர்ந்து படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதையை தனக்கு ஏற்றது போல் மாற்றி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு தயாரானார் ஷங்கர்.

    தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரணை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து இருக்கின்றார். மேலும் எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கலந்த காமெடி கதையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் ராம்சரண் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடமும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்திருக்கின்றார். இந்த படத்தின் மீது ராம்சரண் ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் சங்கர் இப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார்.

    இந்தியன் 2 திரைப்படத்தால் ஏற்பட்ட தோல்வியை சரி செய்வதற்கு கேம் சேஞ்சர் திரைப்படம் உதவியாக இருக்கும் என்று மலைபோல் நம்பி இருக்கின்றார். கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலில் இப்படத்தின் ஆடியோ லான்ச் அமெரிக்காவில் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடக்க இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்திலும், சென்னையிலும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. சென்னையில் நடைபெற இருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறாராம்.

    அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் இப்படம் குறித்து மற்றொரு சுவாரசிய தகவலும் வெளிவந்திருக்கின்றது. அதாவது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதையை முழுவதுமாக முடித்தவுடன் ஷங்கர் நடிகர் விஜயை சந்தித்துதான் இப்படத்தின் கதையை கூறியிருந்தாராம். கதையும் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனது .

    ஆனால் இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்திற்காக ஒன்றரை வருடங்கள் கால்சீட் கேட்டிருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் பின்வாங்கி விட்டார். அதனை தொடர்ந்து தான் தெலுங்கில் ராம் சரணை வைத்து இப்படத்தை இயக்கினாராம் ஷங்கர். கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஒரு தொடர்பு இருப்பதால் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

  • 4 பாட்டுக்கு 75 கோடிதான்!.. ஆனா அதுல ஷங்கர் செஞ்சிருக்க விஷயத்தை கொஞ்சம் பாருங்க..!

    கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் நான்கு பாடலுக்கு மட்டுமே கிட்டதட்ட 75 கோடி செலவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்து போயிருந்தார்கள். நான்கு பாடலுக்கு 75 கோடியா? என்று ரசிகர்கள் பலரும் வாயைப் பிளந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அந்த 75 கோடி எப்படி செலவானது என்பது குறித்து தகவல் வெளிவந்திருக்கின்றது.

    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.

    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று நம்பி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கின்றார். மேலும் பாடலுக்கு மட்டுமே 75 கோடி செலவு செய்து இருக்கின்றார். அப்படி அவர் எதற்காக இவ்வளவு செலவு செய்து பாடலை எடுத்துள்ளார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

    ஜருகண்டி பாடல்:

    ராம் சரண், கியாரா அத்வானியும் இணைந்து ஆடி இருக்கும் ஜருகண்டி பாடலுக்கு பிரபுதேவா டான்ஸ் கொரியாகிராப் செய்திருக்கின்றார். இந்த பாடலில் மொத்தம் 600 டான்ஸர்கள் ஆடி இருக்கிறார்கள். கிராமத்து செட்டு போட்டு 13 நாட்கள் இப்பாடலுக்கு ஷூட்டிங் நடந்திருக்கின்றது. இதில் அனைவரும் அணிந்திருந்த உடைகள் சனலால் உருவாக்கப்பட்டது.

    நானா ஹைரானா:

    நானா ஹைரானா என்ற பாடலை இன்ஃப்ரா ரெட் கேமரா வைத்து எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் முதன்முதலாக இன்ஃப்ரா ரெட் கேமரா வைத்து எடுக்கப்பட்ட பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் ஷூட்டிங் செய்யப்பட்டிருக்கின்றது.

    ரா மச்சா:

    ரா மச்சா மச்சா என்ற பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து இருக்கின்றார். இந்த பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 டான்ஸர்கள் நடனமாடி இருக்கிறார்கள். ஷங்கர் படங்களில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.

    தோப் பாடல்:

    தோப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் கொரிய கிராப் செய்து இருக்கின்றார். அந்த பாடலுக்கு ரஷ்யாவை சேர்ந்த கிட்டத்தட்ட நூறு டான்ஸர்கள் ஆடி இருக்கிறார்கள். இந்த பாடல் 8 நாட்களில் சூட்டிங் செய்யப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டு டான்ஸர்கள் ஒரு பாடலுக்கு 100 பேர் ஆடி இருப்பது பலரையும் இயக்க வைத்திருக்கின்றது.

  • கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பே இல்ல… பெரிய பிரச்சனையில் வசமா சிக்கிடுச்சே..!

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2படத்தைத் தொடர்ந்து வெளிவரக் காத்திருக்கும் படம் கேம் சேஞ்சர். படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

    ஆனாலும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்காது என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. அடுத்து படத்திற்கு வரும் சிக்கல் குறித்தும் பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    கேம் சேஞ்சர் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்ல. அதுதான் உண்மை. என்னதான் ஷங்கர் படமாக இருந்தாலும் இது ஒரு பான் இண்டியா படம்னு பொய் சொன்னாலும் மக்களுக்குத் தெரியும் இது ஒரு டப்பிங் படம்னு.

    எல்லாத்துக்கும் மேல ராம்சரணுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை. அல்லு அர்ஜூனுக்கு இருக்குற ரசிகர்கள் அவருக்கு இல்லை. அதுக்கு அப்புறம் பார்த்தா ஷங்கரின் முந்தைய படம் இந்தியன் 2 பெரிய அளவில் போகல.

    director shankar

    director shankar

    முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்கற ஆர்வம் ரசிகர்களுக்கு வராது. ஏன்னா இந்தியன் 2 பார்த்த அனுபவம் இருக்கு. படம் நல்லாருந்தா அப்புறம் வந்துடுவாங்க. இதுல இன்னொரு சிக்கல் இருக்கு. இந்தியன் 3 படத்தை இவரு சொன்ன மாதிரி முடிச்சிக் கொடுக்கல.

    இன்னும் 80 கோடி ரூபா பணம் கேட்குறாருன்னு புகார் எழுகிறது. அந்த அடிப்படையில் கேம் சேஞ்சர் படத்துக்கு ரெட் போடுங்கன்னு லைகா சார்பாக தமிழ்க்குமரன் கவுன்சில்ல ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    லைகா, தமிழ்க்குமரன்னு சொன்னாலும் பின்னணியில் இருக்குறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான். அவங்க தான் ஆபரேட் பண்றாங்க. கவுன்சில் தலைவரா இருக்குற தேனான்டாள் முரளி வந்து திமுகவைச் சேர்ந்தவர். ரெட் ஜெயண்ட் இந்தப் படத்துக்குத் தடை போடச் சொன்னா கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆகறதுக்கே சிக்கல் ஏற்படும்.

    அது சட்டப்படி தவறு. ஷங்கர் மீது புகார் இருந்ததுன்னா அவரை அழைத்துப் பேசணும். உங்களை மாதிரி ஒரு தயாரிப்பாளர் பணத்தைக் கொட்டி எடுத்த படத்தைத் தடுப்பதுங்கறது தவறான விஷயம். அந்தத் தவறைத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனமும், லைகாவும் செய்ய நினைக்கிறது ரொம்ப தவறான விஷயமாத் தான் நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கேம் சேஞ்சர் படம் வரும் பொங்கல் தினத்தையொட்டி 10ம் தேதி வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனையை சமாளித்து படம் வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • பழைய பார்முலா கைகொடுக்காது மிஸ்டர் ஷங்கர்… கேம் சேஞ்சர் வேற எதைச் சொல்லுது?

    கேம்சேஞ்சர் டிரைலரைப் பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரி தான் தோணுது. உங்களுக்கு என்ன தோணுது என ஆங்கர் ஒருவர் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனனிடம் கேட்க அவர் சொன்ன பதில்தான் இது.

    கமல், ரஜினியே தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டு இளம் நடிகர்களோடு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க தான் புதுசு புதுசான வார்த்தைகளைப் போடுறாங்க. அதுக்குத்தான் டிமாண்ட் இருக்கு. இன்னைக்கு இளைஞர்கள் அந்த வார்த்தையைத்தான் புழக்கத்தில் வச்சிருக்காங்க. ஆனா அவங்களோடு சேர்ந்தாதான் தெரியும்.

    ஆனா ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் இன்னும் பழைய பார்முலாவையே பிடிச்சிக்கிட்டு இருக்காங்க. கேம் சேஞ்சர் படத்தைப் பார்க்கும்போது இன்னும் ஜென்டில்மேனையோ, முதல்வனையோ, இந்தியனையோ தான் பார்க்க முடியுது. இதுல வேற என்ன வித்தியாசத்தைக் கொடுத்து இருக்கீங்க? வெறும் பிரம்மாண்டத்தை வச்சி எல்லாம் படத்தை ஓட வைக்க முடியாது.

    அது பழைய காலம். முதல்ல ஒரு பேஸ் வேணும். அது மேலத்தான் பிரம்மாண்டத்தை வைக்கணும். அந்த பேஸ் பழசா இருந்தா அது எடுபடாது. கேம் சேஞ்சர்ல வேற என்ன வித்தியாசத்தைக் கொண்டு வந்துருக்கீங்க என்று கேள்வி எழுப்புகிறார் அந்தனன்.

    game changer

    game changer

    உங்களோட பழைய படங்கள்ல இருந்து கேரக்டர மட்டும் மாத்திருக்கீங்க. அதுதான இதுல தெரியுது. அப்போ இது என்னவா வரும்னு நமக்கு நம்பிக்கை இல்லாம இருக்கு. இன்னொன்னு பிரம்மாண்டம்கறது எடுபடாது. எளிமையான கதையிலேயே ஜெயிச்சிட்டுப் போயிடலாம்.

    வெறும் பிரம்மாண்டத்தை வச்சே ஓட்ட முடியும்கறது எல்லாம் பழைய காலம். இன்னைக்கு அது எடுபடவே எடுபடாது. இப்போ ஷங்கரோட கேம் சேஞ்சர் என்னவா வரப்போகுதுன்கற அச்சமும் நமக்கு இருக்கு.

    இந்தியன் 2ல பெரிய விமர்சனமா சொன்னது வசனங்கள். அது பெரிசா கனெக்டாகலன்னாங்க. அந்த வகையில் கேம் சேஞ்சரிலும் வசனங்கள் வருது. காமெடி சீன்ஸ் வருது. எதுக்காக அது வருதுங்கற மாதிரிதான் இருந்துச்சு. அதுல குறிப்பா வந்து நீ 5 வருஷத்துக்கு மட்டும்தான் மினிஸ்டர். ஆயுசுக்கும் நான் ஐஏஎஸ்.னு சொல்றாங்க. அது ரொம்ப மாஸா இருக்குற மாதிரி காட்டுறாங்க.

    ஆனா அது பெரிசா எதுவும் கனெக்டாகல என ஆங்கர் அந்தனனிடம் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலைப் பாருங்க. அது வந்து அண்ணா காலத்துல உள்ளது. பேர் சொல்ல விரும்பல. ஒரு தலைவர் காரை விட்டு இறங்கவே இல்லையாம். ஏன்னா ஐஏஎஸ் அதிகாரி வந்து கதவைத் திறக்கணுமாம். இது அண்ணா காதுக்குப் போகுது.

    நாளைக்கு அவன் நினைச்சான்னா உன் இடத்துக்கு வந்துடுவான். ஆனா நீ நினைச்சாலும் அவன் இடத்துக்குப் போக முடியாது. அதுக்கு நிறைய படிக்கணும்பா. அதுக்கு முதல்ல அதிகாரிகள மதிக்கக் கத்துக்கன்னு சொல்றாரு. அப்படி ஒரு தகவல் உண்டு. அதைப் பல படங்கள்ல வச்சிட்டாங்க. இப்ப கொண்டு வந்து அதை வைக்கும்போது எவ்ளோ காலம் பின்னால இருக்குங்கறதுதான் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ஸ்பெஷல் ஷோவுக்கு பர்மிஷன்.. டிக்கெட் விலை மட்டும் இவ்வளவா?.. AA-க்கு டப் கொடுக்கும் ராம்சரண்!..

    கேம் சேஞ்சர்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் நடிகர் ராம்சரனுடன் இணைந்து அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த திரைப்படத்தை பார்த்து பார்த்து இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ஷங்கர்.

    இப்படத்தை தனது பாணியில் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தில் இருந்த 5 பாடல்களுக்கு மட்டுமே கிட்டதட்ட 75 கோடி செலவானதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் பாடல்கள் அனைத்துமே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

    டிரெய்லரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வருகின்றது. இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கின்றார். மேலும் ஊழலுக்கு நடக்கும் போராட்டம் இப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றது.

    இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. பேன் இந்தியா திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகின்றது. இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் சங்கர் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக இருக்கின்றார். இப்படம் ஷங்கருக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். காரணம் இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வி.

    இதுவரை தோல்வியை சந்தித்திராத ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அவமானத்தை சந்தித்தார். இதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் ஷங்கருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு ஆந்திரா அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. அதாவது அதிகாலை 4 மணி காட்சி மட்டுமில்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

    ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் டிக்கெட்டின் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கின்றது. மிட்நைட் ஷோவுக்கு 600 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. காலை 4 மணி காட்சிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்க்கும் 170 முதல் 200 வரை கூடுதலாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

    இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே புஷ்பா 2 திரைப்படத்திற்கு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராம்சரண் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் ஒரு பக்கம் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

  • கேம் சேஞ்சருக்கு விழுந்தது க்ரீன் சிக்னல்… போலாம் ரைட்…!

    ஷங்கரின் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படம் பொங்கல் தினத்தையொட்டி வெள்ளித்திரைகளில் வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் இந்தப் படத்தின் மூலமாக அதற்குப் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராம்சரணின் நடிப்பில் வெளிவரும் இந்தப் படம் முதல்வன், இந்தியன், ஜென்டில்மேன் என 3 படங்களின் கலவையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஷங்கர் இன்னும் பழைய டைப் பார்முலாவையே பின்பற்றுகிறார். அவருக்கு இந்தப் பிரம்மாண்டம்தான் பெரிதாகத் தெரிகிறது. அதில் இருந்து வெளியே வர மாட்டேங்குறார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன.

    கடைசியாக கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்டு போடுவார்களா என்றெல்லாம் பேசப்பட்டது. அதனால் படம் வெளியாவதில் சிக்கல் என்றார்கள்.

    இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு வந்துள்ளது. விரைவில் படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்து இருந்தது லைகா நிறுவனம்.

    கமல் இந்தியா திரும்பிய பிறகு பேசிக் கொள்ளலாம் என சுமூகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதே போல கொடுத்த புகாரையும் லைகா நிறுவனம் திருப்பப் பெற்றுள்ளதாம்.

    ஷங்கர் இயக்கத்தில் வரும் ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் படம் வெளியாக உள்ளது. ராம்சரணின் அதிரடி திரைப்படம் இது. தமன் இசை அமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தை ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்குகிறார்.

    அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. கேம் சேஞ்சரில் ராம் சரண் தான் ஹீரோ. கியாரா அத்வானி அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

  • ஷங்கருக்கு செக் வைத்த லைக்கா!. தமிழ்நாட்டில் வெளியாகுமா கேம் சேஞ்சர்?!..

    Game Changer: ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுத்ததால் அடுத்தடுத்த படங்களையும் அப்படியே எடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் இவர் மாறினார்.

    பாடல்களுக்கு அதிக செலவு: இந்தியன், அந்நியன், எந்திரன், 2.0, ஐ என பல திரைப்படங்களை ஷங்கர் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுவார்கள். தனது படங்களில் பாடல்களை அதிக செலவு செய்து ரிச்சாக எடுப்பது ஷங்கரின் வழக்கம். ரசிகர்களுகு கண்டிப்பாக அது விருந்தாக அமையும்.

    இந்தியன் 2: ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம் சரியாக போகவில்லை. எனவே, ராம்சரணை வைத்து இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் பெரிதும் நம்பியிருக்கிறார். இந்த படத்தில் 5 பாடல் காசிகளுக்கு 75 கோடி செலவு செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே தெரிவித்திருக்கிறார்.

    இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த படத்திற்கு லைக்கா நிறுவனம் பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.

    இந்தியன் 3-க்கு வந்த சிக்கல்: லைக்கா நிறுவனம் இப்போது நிதி நெருக்கடியில் இருக்கிறது. இந்த படம் தயாரித்த இந்தியன் 2, லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களால் இந்நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம். இந்த பிரச்சனையால்தான் லைக்கா நிறுவனம் தயாரித்த விடாமுயற்சி படமே ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது.இந்தியன் 2 தோல்வி என்பதால் இந்தியன் 3 படத்தை ஷங்கர் உடனடியாக முடித்து கொடுக்க வேண்டும் என லைக்கா விரும்புகிறது. அந்த படத்தின் பல காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டாலும் இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் பல காட்சிகளை மாற்றியெடுக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். இதற்கு 65 கோடியை அவர் சம்பளமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு லைக்கா சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

    கேம் சேஞ்சருக்கு ரெட் கார்டு:

    இந்நிலையில்தான், இந்தியன் 3 படத்தை முடிக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என திரைத்துறை கூட்டமைப்பிடம் லைக்கா நிறுவனம் புகார் அளித்துள்ளது. 4 நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்க ஒப்பந்தம் இன்னும் துவங்கப்படவில்லை. விரைவில் இது தொடர்பான பிரச்சனையில் தீர்வு எட்டப்படும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • கேம் சேஞ்சர் படம் விஜயகாந்த் படத்தின் காப்பியா?!. எல்லாத்துக்கும் கேப்டன்தானா!…

    Game Changer: சினிமாவில் ஒரு கதையை போலவே மற்றொரு படம் உருவாவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. சூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தை சில வருடங்கள் கழித்து அந்த கதையை கொஞ்சம் மாற்றி வேறு மாதிரி எடுப்பார்கள். சில இயக்குனர்கள் அந்த கதையை கொஞ்சம் உல்டா செய்து எடுப்பார்கள்.

    இதற்கு பெரிய உதாரணம் இயக்குனர் அட்லீ. மணிரத்னத்தின் மௌன ராகம் படத்தை உல்டா செய்து ராஜா ராணி எடுத்தார். அது ஹிட் அடிக்கவும் தொடர்ந்து ஹிட் அடித்த பழைய படங்களை உல்டா செய்ய துவங்கினார். விஜயகாந்தின் சத்ரியன் படத்தை தெறி படமாகவும், கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை மெர்சலாகவும் எடுத்தார்.

    ஷாருக்கானின் சக்தே இண்டியா மற்றும் சில ஆங்கில படங்களில் வந்த காட்சிகளை சுட்டு பிகில் எடுத்தார். இதை அட்லி மட்டுமல்ல. எல்லா மொழிகளிலும் பல இயக்குனர்கள் அதை செய்வார்கள். சில படங்களை இது அந்த படத்தின் காப்பி என்பதை கண்டுபிடித்துவிடலாம். சிலவற்றை ரசிகர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. இரண்டு மூன்று படங்களின் கதையை கலந்து எடுத்துவிடுவார்கள்.

    விஜயகாந்த் படங்களை தொடந்து இயக்குனர்கள் காப்பி அடிப்பார்கள். ஏனெனில், அவரின் படங்களில் பக்கா ஹீரோயிசம் இருக்கும். விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய கோட் படம் கூட விஜயகாந்தின் ராஜதுரை படம் என சொல்லப்பட்டது. ஆனால், ‘அந்த படத்தை நான் பார்த்த பின்னர்தான் அது எனக்கே தெரிந்தது’ என வெங்கட்பிரபு சொல்லியிருந்தார்.

    தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து 500 கோடி செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் கதை கூட விஜயகாந்தின் தென்னவன் பட கதை போலவே இருப்பது தெரியவந்துள்ளது. தென்னவன் படத்தில் ஐஏஸ் படித்த தேர்தல் அதிகாரியான விஜயகாந்துக்கும், முதலமைச்சர் நாசருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.

    கேம் சேஞ்சர் படத்தில் ஐஏஎஸ் அதிகாரி ராம்சரணுக்கும், முதல்வர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை. தென்னவன் படத்தில் பிளாஷ்பேக் இருக்காது. கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இந்த கதையை ஷங்கர் தனது ஸ்டைலில் இயக்கியிருக்கிறார்.

    இந்த கதையை ஷங்கருக்கு சொன்னது இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். மொத்தத்தில் பல இயக்குனர்கள் கேப்டன் கதையை சுட்டு பட்டி டிங்கரிங் செய்து படமெடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது.