Tag: jason sanjay

  • விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் எப்போ வரும்னு தெரியல?.. அடுத்த படத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன்!..

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் எப்போ வரும்னு தெரியல?.. அடுத்த படத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன்!..

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சந்தீப் கிஷன் அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க சென்று விட்டார். சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

    கதைக்கு முக்கியத்துவம் தரும்… தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

    தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பவர் பேட்டா’ எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

    இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான… பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து ‘பவர் பேட்டா’ ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க … ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.

    கவர்ச்சிகரமான தலைப்பு – ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்… அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.

    இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

  • நடிகராக மாறிய விஜய் மகன்!.. அப்ப சிறப்பான சம்பவம் இருக்கு…

    தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட, ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிறு வயதில் விஜய் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் வந்து நடனமாடியிருப்பார். திடீரென இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு 2 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

    ஏனெனில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜயின் மகன் என்பதால் கண்டிப்பாக ஜேசன் சஞ்சய் ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் அவரோ எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை.. இயக்கத்தில்தான் ஆர்வம் என குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டார்.

    ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படத்திற்கு சிக்மா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வீடியோ போன வருடம் டிசம்பர் மாதம் வெளியானது.. இந்த வருட இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

    நடிப்பில் எனக்கு ஆர்வமில்லை என சொல்லி எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.. அது உண்மையா இல்லையா என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்..

  • முதல் படத்திலேயே தட்டி தூக்கிய ஜேசன்!.. அடுத்த படம் கிடைச்சாச்சி!…

    நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படமும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் அவர் இயக்கியுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் சம்பத், நடன இயக்குனர் ராஜி சுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

    ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல நடிகராகத்தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்து படமெடுக்க திரையுலகில் உள்ள பலரும் முயற்சியும் செய்தார்கள். ஆனால் எனக்கு நடிப்பதில் ஆர்வமில்லை என கறாராக மறுத்துவிட்டார் ஜேசன். ஏனெனில் அவருக்கு இயக்குனராகும் ஆசையே அதிகமாக இருந்தது.

    sigma

    ஒரு வருடத்திற்கு முன்பு லைக்கா தயாரிப்பில் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார் என்கிற செய்தி வெளியானபோது பலரையும் அது ஆச்சரியப்படுத்தியது. ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு அனுபவமும், சினிமா அறிவும் ஜேசனுக்கு இருக்குமா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் உடைத்து தற்போது சிக்மா படத்தை சிறப்பாக எடுத்து முடித்து விட்டார் ஜேசன். சமீபத்தில் இந்த புரமோ வீடியோவும் வெளியானது.

    யுடியூப்பில் இந்த வீடியோ பல மில்லியன் வியூஸ் போயிருக்கிறது. இந்நிலையில் சிக்மா படத்தை முழுவதுமாக பார்த்த லைக்காவுக்கு படம் மிகவும் பிடித்துப்போக ஜேசனை பாராட்டியதோடு மீண்டும் நமது தயாரிப்பில் நீங்கள் ஒரு படத்தை இயக்குங்கள் என்றும் சொல்லியிருக்கிறதாம். அனேகமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் அடுத்த படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதே 5 மணி…விஜய் மகனுடனும் போட்டி போட்ட சிவகார்த்திகேயன்

    தமிழில் சூபப்ர் ஸ்டார் என்றால் அது விஜய்தான். தற்போது அவர் அரசியல் கட்சி துவங்கி முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். இவரது நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் வருகிற பொங்கலையொட்டி ஜனவ்ரி 9ம் தேதி வெளியாகிறது.

    இந்த நிலையில் சிவகார்த்திகேயன் , ஜெயம்ரவி,அதர்வா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படமும் 10ம் தேதி வெளியாகிரது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக் பேசப்பட்டு வருகிறது. விஜயுடன் சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் போட்டியாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜேசன் இயகத்தில் லைக்கா புரொடக்சன் தயாரிப்பில் சந்தீப் நாயகனக நடிக்கும் சிக்மா பட்த்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. ஆனல் அதே நேரமான 5 மணிக்கு சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாக உள்ள படத்தின் கிளிம்பஸ் வீடியோவும் வெளியானது. இந்த படத்தின் மர்ற விபரங்கள் நாளை வெளியாக உல்ள்து என்று கூறப்பட்டுள்ளது அந்த வீடியோவில்.

    ஏற்கெனவே ஜனநாயகனோடு மோதும் சிவகார்த்திகேயன் தற்போது விஜய் மகன் இயக்கிய படத்தின் டீஸர் வெளியான நேரத்தில் தனது படத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் தந்தையுடன் மட்டுமல்ல மகனுடனும் போட்டி போடுகிறாரோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Sigma: ஜேசன் சஞ்சய் சும்மா மிரட்டுறாரே!… எப்படி இருக்கு சிக்மா டீசர் வீடியோ?!..

    Sigma: ஜேசன் சஞ்சய் சும்மா மிரட்டுறாரே!… எப்படி இருக்கு சிக்மா டீசர் வீடியோ?!..

    ரசிகர்களால் தளபதி என்ன கொண்டாடப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக களமிறங்கி எல்லோருக்கும் டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஜேசன். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

    ஜோசப் சஞ்சய் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. சுயம்புவாக சினிமாவை கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் சிக்மாவின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசர் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    நிலம், நீர், காற்று மற்றும் பணம் இவர்களின் மதிப்பு கூட ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் மனிதர்களும், மனித உறவுகளின் மதிப்பும் மாறாமல் இருக்கிறது என டீசரில் வசனம் வருகிறது. இதை பார்க்கும்போது ஒரு நல்ல கருத்தை அடிப்படையாக வைத்து படத்தை ஜேசன் சஞ்சய் உருவாக்கியிருப்பது புரிகிறது. தமனின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.

    ஜென்சி ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக சம்பத் நடித்திருக்கிறார். மேலும் நடன இயக்குனர் ராஜ் சுந்தரமும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது பிரச்சனைகளை பார்த்து ஒதுங்கிச் செல்லும் ஒரு சராசரி இளைஞனாக இல்லாமல் ஏதோ ஒன்று மாற்ற நினைக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரமாகவே சந்தீப் கிஷனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது புரிகிறது.

    எனவே கண்டிப்பாக சிக்மா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும், ஜேசன் சஞ்சய் இயக்குனராகவும் வெற்றி பெறுவார் என கணிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    https://www.youtube.com/watch?v=s9X3AIpYTT4&feature=youtu.be
  • இல்ல தாத்தா எனக்கு அப்பா வேண்டாம்!.. எஸ்.ஏ.சியிடம் சொன்ன ஜேசன் சஞ்சய்!…

    ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போலவே நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஆச்சரியம் கொடுத்திருக்கிறார். அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் ஜேசனோ ‘எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை’ என சொல்லிவிட்டார் லண்டனில் சினிமா இயக்கம் தொடர்பான சில படிப்புகளையும் ஜேசன் படித்தார் என சொல்லப்படுகிறது.

    அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென லைகா புரடெக்‌ஷன் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு பக்கம் விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜய் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுன் கூட பேசுவதில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இப்போதும் விஜய் சென்னை நீலாங்கரையில் தனிமையில்தான் வசித்து வருகிறார்.

    சந்தீப் கிஷன் ஹீரோவாக வைத்து சிக்மா என்கிற படத்தை எடுத்து வருகிறார் ஜேசன். விஜயின் மகனை இயக்குனராக பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் தனது மனைவி ஷோபனாவுடன் ஊடகம் ஒன்றில் பேசிய ஜேசனின் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘ஜேசன் இயக்குனராக போகிறேன் என என்னிடம் சொன்னபோது ‘உனக்கு என்னப்பா.. வீட்டிலேயே ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார்.. அவரை வச்சி படமெடுத்தா படம் கண்டிப்பா ஹிட்டு.. உனக்கு பெரிய பிரச்சினையே இல்லை’ என்று சொன்னேன்.

    ஆனால் அவரோ ‘இல்ல தாத்தா என் மைண்ட்ல விஜய் சேதுபதிதான் இருக்கார்., நான் என்னை நிரூபித்துவிட்டு அப்புறம் அப்பாவ வச்சு படம் எடுப்பேன்’ என்று சொன்னார் அவரின் தன்னம்பிக்கையை பார்த்த போது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஒரு இயக்குனர் அப்படித்தான் யோசிக்க வேண்டும்.. அப்போதுதான் இவர் நம் இனம் ன்று தெரிந்து கொண்டேன்’ என சொல்லி சந்தோஷப்பட்டார் எஸ்.ஏ.சி.

  • ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் அப்டேட்!.. சும்மா அதிருது!…

    Jason Sanjay: ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியிருப்பார். எனவே, கண்டிப்பாக எதிர்காலத்தில் ஜேசன் நடிகராக களமிறங்குவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ இயக்குனராக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார்.

    பள்ளி படிப்பை சென்னையில் முடித்த ஜேசன் அதன்பின் அம்மாவுடன் லண்டனுக்கு சென்று அங்கு செட்டில் ஆனார். அங்கு சினிமா இயக்கம் பற்றிய சில படிப்புகளையும் படித்தார். அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை இயக்கினார். அதன்பின் சினிமாவுக்கு ஏற்றது போல் ஒரு கதை எழுதினார்.

    லைக்கா நிறுவனத்திடம் அந்த கதையை சொல்லி படம் டேக் ஆப் ஆனது. பட அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் கழித்தே ஷூட்டிங் துவங்கியது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.

    தற்போது இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளிவர துவங்கியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பேங்காங்கில் ஒரு வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து ஆகஸ்டு முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

    இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. ஜேசன் சஞ்சய் படத்திற்கு கண்டிப்பாக விஜயின் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். அதேநேரம், ஒரு இயக்குனராக ஜேசன் சஞ்சய் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

  • துப்பாக்கியுடன் ஜேசன் சஞ்சய்!.. அப்பா மாதிரியே ஸ்டைலா சுடுறாரே!.. வைரல் வீடியோ….

    Jason Sanjay: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்து வேட்டைக்காரன் படத்தில் அவருடன் சேர்ந்து நடனமாடியிருப்பார். அப்பாவை போல விஜயும் பின்னாளில் நடிகராக மாறுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனர அவதாரம் எடுத்திருக்கிறார்.

    கடந்த சில வருடங்களாவே சஞ்சய் அப்பா விஜயுடன் இல்லை. அம்மாவோடு லண்டனில் இருக்கிறார். அங்கு சினிமா இயக்கம் பற்றியை படித்தார். அதன்பின் நண்பர்களோடு சேர்ந்து குறும்படங்கள் எடுப்பதிலும் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் சினிமா எடுக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. ஒரு கதையை ரெடி பண்ணி லைக்கா நிறுவனத்தில் சொல்லி சம்மதம் வாங்கினார்.

    சங்கீதா விஜயின் அப்பா லைக்கா சுபாஷ்கரனுக்கு நெருக்கம் என்பதால் இது நடந்திருக்கிறது. 2 வருடங்களுக்கு முன்பே இதுபற்றிய அறிவிப்பு வெளியானது. படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமலேயே இருந்தது. அதன்பின் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிப்பது உறுதியானது. சமீபத்தில் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.

    அதன்பின்னரே ஷூட்டிங் நடப்பது தெரியவந்தது. வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்பா விஜயை போலவே துப்பாக்கியை ஜேசன் ஹேண்டில் செய்யும் வீடியோ வெளியானது. பேப்பரில் வரையப்பட்ட ஓவியம் ஒன்றை பார்த்து அவர் சுடும் வீடியோ விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    இதைப்பார்க்கும் போது விஜயின் துப்பாக்கி, பீஸ்ட் மற்றும் கோட் படங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஜேசன் இயக்கத்தை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

  • ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா? அப்போ முழுக்கு போட்டு போகல.. நண்பரே சொல்லிட்டாரே

    தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வளர்ச்சியை அடைந்தார் விஜய். அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும் போது வராத விமர்சனங்கள் இல்லை. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். அவரை உருவ கேலி செய்து மூலையில் உட்கார வைத்தனர். அவரை பற்றி பல வகைகளில் பத்திரிக்கைகளில் செய்திகள் எழுதினார்கள் . அதை தட்டி கேட்டு சண்டையும் போட்டிருக்கிறார் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.

    ஆனால் இன்று தமிழகத்தை ஆளும் வருங்கால தலைவராக மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தமிழ் நாட்டுக்கு கண்டிப்பாக ஒரு மாற்று அரசியல் தேவை என்பதை நன்கு புரிந்து கொண்ட விஜய் தன்னுடைய 300 கோடி சம்பளத்தையும் உதறி தள்ளிவிட்டு மக்களுக்காக அரசியல் பணி செய்ய வந்திருக்கிறார். இவர் எப்போது அரசியலில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போவே அவருடைய மகன் ஜேசன் சஞ்சயும் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார்.

    அதனால் விஜய் ரசிகர்கள் ஜேசனும் ஹீரோவாகத்தான் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக களமிறங்கினார். இதை பற்றி விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் கூறும் போது ஜேசன் என்னவாக ஆக வேண்டும் என்பதை ஜேசனே முடிவு செய்தது. அதுக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது. சப்போர்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என விஜய் சொன்னாராம்.

    எப்படி விஜய் நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டு அவர் அப்பாவிடம் சொன்னாரோ அதை போல் ஜேசனும் நல்ல டெக்னீசியனாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான்.அவருக்கு படங்களில் நடிக்க நிறைய ஆஃபர்கள் வந்தது. ஆனால் நடிப்பதற்கு ஜேசனுக்கு ஆசையே இல்லை. டெக்னீசியனாக வேண்டும் என்ற ஆசையில் கனடா சென்று அங்கு படித்து எட்டிட்டிங் எல்லாம் கற்றுக் கொண்டார்.

    கூடவே சினிமாட்டோகிராஃபியும் படித்தாராம். அதுமட்டுமில்லாமல் தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என ஜேசன் வெளிக்காட்டவே மாட்டான். அப்படித்தான் ஒரு சமயம் சத்யம் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் போது ஜேசனை நிறுத்தி டிக்கெட் காட்ட சொல்லியிருக்கிறார்கள். இவர் விஜயின் மகன் என தெரியாதாம். அப்போ ஜேசனுடன் வந்தவர் இவர் யார் தெரியுமா? என கேட்டிருக்கிறார்.

    srinath

    srinath

    உடனே ஜேசன் ‘டிக்கெட் காட்ட சொன்னால் காட்டுங்கள்’ என மிகவும் பணிவன்புடன் சொன்னாராம். அப்பா மாதிரியே மகன். அதுமட்டுமில்லாமல் விஜய் திரும்பவும் நடிக்க வருகிறேன் என்று சொன்னால் ஜேசன் இயக்கத்தில் நடிக்க பெரிய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஸ்ரீநாத் கூறினார்.

  • ஜேசன் சஞ்சய் இயக்குனரா?!.. சினிமா குலத்தொழில் இல்லை!. பொங்கிய விஜய் பட இயக்குனர்!..

    அரசியலை போலவே சினிமாவிலும் வாரிசுகள் அதிகமாகவே நுழைவார்கள். பெரும்பாலும் அவர்கள் நடிக்கவே ஆசைப்படுவார்கள். விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால், சூர்யா, கார்த்தி, ஜீவா, அதர்வா, துருவ் உள்ளிட்ட பலருமே வாரிசு நடிகர்கள்தான். அதாவது அவர்களின் தந்தைகள் சினிமாவில் தயாரிப்பாளராகவோ, இயக்குனராகவோ, நடிகராகவோ இருந்தவர்கள்.

    வாரிசாக இருந்தால் சினிமாவில் சுலபமாக நுழைந்துவிடலாம். ஆனால், சினிமாவில் நீடித்து நிற்க திறமை வேண்டும். சத்யராஜின் மகன் சிபிராஜ், பாக்கிராஜின் மகன் சாந்தனு ஆகியோர் பல வருடங்களாக சினிமாவில் போராடியும் அவர்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில்தான் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்திருக்கிறார். சின்ன வயது விஜயை போலவே இருக்கும் ஜேசன் நடிகராக வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். பல இயக்குனர்கள் ஜேசனை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டினார்கள். விஜய் மூலமாகவும் முயற்சி செய்தார்கள். ஆனால், அவரோ நடிப்பில் ஆர்வம் இல்லை. இயக்கம்தான் ஆர்வம் என சொல்லி இப்போது ஒரு படம் இயக்கி வருகிறார்.

    லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கிய பேரரசு ஒரு சினிமா விழாவில் பேசும்போது ஜேசன் சஞ்சய் பற்றி பேசியிருக்கிறார்.

    பொதுவாக இயக்குனரின் மகன், நடிக்க வருவார். அதேபோல், சண்டை பயிற்சி இயக்குனர் மகன், தயாரிப்பாளர் மகன், நடன இயக்குனர் மகன் என எல்லோரின் வாரிசுகளும் சினிமாவில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், விஜயின் மகன் ஜேசன் சஞ்சர் நடிக்க வராமல் இயக்குனராக வந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அப்பா செய்ததையே மகனும் செய்ய இது ஒன்றும் குலத்தொழில் இல்லை’ என பேசியிருக்கிறார்.