Tag: MGR

  • எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…

    MGR Vijayakanth: புரட்சித்தலைவர் ஒரு நல்ல நடிகர், இயக்குனர் மட்டுமல்ல. அவர் ஒரு நல்ல ரசிகரும் கூட. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்ததால் பல நடிகர்களின் நடிப்பை பார்த்து வளர்ந்தவர். அதனால்தான் மூத்த மற்றும் சிறந்த நடிகர்களுக்கு உரிய மரியாதையை அவர் கொடுப்பார். எம்.கே.தியாகராஜ பகவாதர், டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, ரங்கராவ் என மூத்த கலைஞர்களை மதித்து வாழ்ந்தவர் இவர்.

    80களில் விஜயகாந்த் பிரபலமான நேரங்களில் அவரை எம்.ஜி.ஆரும் தெரிந்து வைத்திருந்தார். ஒருநாள் நள்ளிரவு அவர் தனது காரில் வீட்டிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அடுத்தநாள் ரிலீஸ் ஆகும் விஜயகாந்தின் புதிய படத்திற்கு அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிகொண்டிருந்தனர்.

    இதையும் படிங்க: ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..

    சாலைகளில் இரவு நேரங்களில் யாராவது வேலை செய்துகொண்டிருந்தால் அவர்களை அழைத்து விசாரிப்பது எம்.ஜி.ஆரின் பழக்கம். அப்படி அவரை அவர்களை அழைத்து விசாரித்தபோது ‘எங்கள் தலைவர் படம் நாளைக்கு ரிலீஸ்.. அதனால போஸ்டர் ஒட்டுகிறோம்’ என சொல்ல எம்.ஜி.ஆர் ஆச்சர்யப்பட்டார். தனது டிரைவரிடம் ‘என்னைப்போலவே விஜயகாந்துக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பின்னாளில் அரசியலுக்கு வந்தால் பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கு’ என சொன்னாராம்.

    பல வருடங்களுக்கு முன்பே ஒரு வீடியோவில் பேசிய விஜயகாந்த் ‘எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். நான் சினிமாவில் நடிக்க துவங்கியதும் எப்படியாவது எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. ஆனால், ஜானகி அம்மாவிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் நடித்த உழவன் மகன் படத்தை எம்.ஜி.ஆர் அடிக்கடி விரும்பி பார்ப்பார் எனவும், அப்படத்தில் நான் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டே பாடும் பாடலை அடிக்கடி பார்த்து ரசிப்பார் என சொன்னார்.

    அதுவே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது. ஜானகி அம்மாள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த அன்புடன் இருந்தார். வெளியூர் சென்றால் என் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கி வருவார். என் இரு மகன்கள் பிறந்தபோதும் நேரில் வந்து ஆசிர்வாதம் செய்தார்’ என விஜயகாந்த் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..

  • எம்ஜிஆரை கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு இருந்த நடிகை… அப்புறம் நடந்தது இதுதான்!..

    ஹீரோயின்களில் பலர் சினிமா சான்ஸ் கிடைப்பதற்கு முன்பே நடிப்பதற்கு ஆர்வம் காட்டியவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தான் நடிப்பிலும் ஜொலிப்பார்கள். ஆர்வமே இல்லாமல் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய முடியாது என்பதே உண்மை. ஆனால் இவர் கொஞ்சம் விதிவிலக்கு. சினிமாவே பார்த்தது இல்லையாம். நடிப்பது என்றால் என்ன என்பதே தெரியாதாம். ஆனால் எல்லோரும் சொல்வதைக் கேட்டு நடிக்க வந்து விட்டார். களத்தில் குதித்ததும் நடிப்பும் தானாக வந்துவிட்டது.

    அவர் வேறு யாருமல்ல. அந்தக்கால நடிகை பாரதி. இவர் உயர்ந்த மனிதன், நாடோடி, அவளுக்கென்று ஒரு மனம், மாயமோதிரம், தங்கச்சுரங்கம் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசலாக வைஜெயந்திமாலா மாதிரியே இருப்பார். அவர் பேச்சும், நடையும் நளினமானது. தனது சினிமா அனுபவங்களை இப்படி சொல்கிறார்.

    இதையும் படிங்க… சிவாஜி கட்டிய தாலியை ரொம்ப நாளா மறைத்து வைத்திருந்த பத்மினி…. அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

    நான் காலேஜில் படிக்கும் போது நிகழ்ச்சிகளில் நடனமாடுவேன். அந்தப் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருப்பார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக்கொண்டு இருந்தார். என்னை நடிக்க அழைத்தார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.

    எங்க குடும்பத்தில் படம் பார்க்க கூட தியேட்டருக்கு அழைத்துப் போக மாட்டார்கள். எனக்கு நடிப்பதற்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. என் கல்லூரி ஆசிரியர்கள் என்னை நீ நல்லா அழகா இருக்க. நல்லா நடனம் ஆடுறே. வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாத. நடின்னு சொன்னாங்க. அப்புறம் நடிக்க ஆரம்பிச்சேன்.

    2 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தின்னு பல மொழிப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்துல அந்தந்த மொழிகளைக் கற்றுக்கொண்டேன். இன்று 8 மொழிகள் எனக்குத் தெரியும்.

    bhaathi22
    bhaathi

    தமிழ்ல என்னோட முதல் படமே உயர்ந்த மனிதன். சிவாஜியுடன் இணைந்து நடித்தேன். அடுத்து எம்ஜிஆருடன் நாடோடி படத்தில் நடித்தேன்.

    தெலுங்கு, கன்னட படங்களிலும் நிறைய ஹிட்டுகளைக் கொடுத்துள்ளேன். முதல்ல நடிக்கும்போது மனதுக்குள் அழுது கொண்டே இருந்தேன். அதன்பிறகு இது கடவுள் கொடுத்த வரம்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இதுதான் தொழில் என்றதும் அதில் கவனம் செலுத்தினேன். பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டில் தான் ஆர்வம். ஒலிம்பிக் கனவுகள் எல்லாம் இருந்தது. ஆனால் விதி வலியது என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

    இதையும் படிங்க… காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்… அட அவர் அப்பவே அப்படித்தான்!..

    நடிக்க வந்ததும் என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அப்போது நான் மறுத்துவிட்டேன். கால் மேல் கால் போட்டு உட்கார்வது எனது பழக்கம். மற்றவர்கள் சொன்னதால் எம்ஜிஆர் முன் மட்டும் அப்படி இருக்க மாட்டேன். அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் உடனே கால் மேல் கால் போட்டு விடுவேன்.

    ஒருமுறை நான் இப்படி இருந்தபோது எம்ஜிஆர் கவனித்து விட்டார். உடனே இயக்குனர் பந்துலு அவ சின்னப்பொண்ணு தெரியாம செய்துட்டா என்றாராம்.

  • எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?

    பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பொறுப்பைத் தயாரிப்பாளர் அவரிடமே விட்டு விடுவார்களாம். அவரது படங்களில் முக்கியமாக இடம்பெறுபவர் வி.எஸ்.ராகவன். எம்ஜிஆரின் 100வது படத்தில் தான் அவருக்கு எம்ஜிஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    எங்கள் தங்கம், உரிமைக்குரல், சங்கே முழங்கு உள்பட எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல படங்களில் வி.எஸ்.ராகவன் நடித்தார். டெக்னீஷியன்கள், துணை நடிகர்களும் எம்ஜிஆர் படம்னா நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். காரணம் மற்ற படங்களை விட இங்கு கூடுதல் சம்பளம். இதற்கும் மேலாக எம்ஜிஆரே எல்லோருக்கும் சம்பளம் பேசியபடி வந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வாராம்.

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த விஎஸ்.ராகவனுக்கு சம்பளம் முதலில் ஒரு தொகை பேசப்பட்டதாம். அதன்பிறகு சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பு தரப்பில் இருந்து கூறினார்களாம். இது அவருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியதாம். உடனே கவிஞர் வாலியிடம் தன் நிலைமையைக் கூற, அவரும் ஒரு யோசனை கூறினாராம்.

    இதையும் படிங்க… என்னம்மா இந்த ரேஞ்சில இறங்கிட்ட!.. கவர்ச்சி நடிகை போல மாறிய விஜே பார்வதி…

    அதே போல, வி.எஸ்.ராகவனும் தயாரிப்பு தரப்பில் இப்படி பேசினாராம். என் சம்பளம் எம்ஜிஆரின் ஒப்புதலோடு பேசி முடிவு செய்யப்பட்டது. அவர் நான் குறைவாக வாங்கிக் கொண்டால் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது என்று கேட்டாராம். மறுபேச்சில்லாமல் ஏற்கனவே அவருக்குப் பேசிய சம்பளம் கிடைத்ததாம்.

    ராகவனின் தாயார் உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது தான் இயல், இசை, நாடகத்திற்கு எம்ஜிஆர் அவரைக் கௌரவ செயலாளராக நியமித்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென ராகவனின் வீட்டுக்கு வந்தார். ஒரு பெரும் தொகையைக் கொடுத்து எம்ஜிஆர் உங்கள் தயாரைக் கவனித்துக் கொள்வதற்காகத் தந்து அனுப்பினார் என்றார்.

    இதையும் படிங்க… மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    அதற்கு நன்றி தெரிவித்த ராகவன், இந்தப் பணத்திற்கு இப்போது அவசியமில்லை என்று திருப்பிக் கொடுத்து அனுப்பினார். இது எம்ஜிஆருக்கு வருத்தம் தந்தது. அதன்பின் ஒரு நாள் ராகவன் எம்ஜிஆரிடம் இப்படி சொன்னார். உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

    அந்த சமயத்தில் நீங்கள் மருத்துவ செலவுக்கு என்று பெரிய தொகையக் கொடுத்து அனுப்பினீர்கள். அப்போது அது தேவைப்படவில்லை. நான் வாங்குவதும் முறையாக இருக்காது. அதனால் தான் திருப்பி அனுப்பினேன் என்றார். அவரது விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்ட எம்ஜிஆர் அவரை மனதாரப் பாராட்டினாராம்.