Tag: Nagesh

  • சினிமாவுக்கு வருவதற்கு முன் நாகேஷ் பார்த்த வேலை இதுதான்… இவருக்கு இப்படி ஒரு திறமையா?..

    நாகேஷ்… தமிழ்சினிமாவைத் தன் அசாத்திய நகைச்சுவையால் கட்டிப்போட்ட ஓர் உன்னத கலைஞன். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல. நாம் அறிந்திடாத பல தகவல்கள் இவரைப் பற்றி உள்ளன. பார்க்கலாமா…

    நாகேஷின் இயற்பெயர் நாகேஷ்வரன். கன்னட பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். தாராபுரம் பகுதியில் கன்னடர்கள் வாழும் குறிஞ்சிப்பாடியில் பிறந்தார். தந்தை கர்நாடகா மாநிலம் அரிசிக்கரே பகுதியில் ரயில் நிலையத்தில் வேலை பார்த்தார். சிறுவயதில் நாகேஷ் அவர்களது நண்பர்களால் குண்டு ராவ் என்று அழைக்கப்பட்டாராம்.

    தாராபுரத்தில் பள்ளிப்படிப்பும், கோவையில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார். படிப்பு முடிந்ததும் திருப்பூர் ரயில்வேயில் எழுத்தாளராக வேலை பார்த்தார். சிறுவயதில் இருந்தே நாடகங்கள் மேல் கொண்ட பற்றால் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.

    மணியன் எழுதிய டாக்டர் நிர்மலா நாடகத்தில் இவர் தை தண்டபாணி என்ற கேரக்டரில் நடித்தார். அது ஒரு நோயாளி வேடம். தை தை என்று குதித்ததால் தை நாகேஷ் என்றும், பின்னர் தாய் நாகேஷ் என்றும் அழைத்தனர். இவர் அறிமுகமான முதல் படம் தாமரைக்குளம். 1959ல் வெளியானது. ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் இவரது நடிப்பு பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

    Nagesh
    Nagesh

    இதில் இவரது ஜோடி மனோரமா. கே.பாலசந்தரின் சர்வர் சுந்தரம் இவரது திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல். திருவிளையாடலில் தருமியாக நடித்த இவரது கேரக்டரை இப்போது வரை மறக்க முடியாது. அதன்பின் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் சக்கை போடு போட்டார்.

    கமலின் சிறந்த நண்பர். அதே நேரம் கமல் இவரது தீவிர ரசிகர். இவரது அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என நடித்த அத்தனை படங்களிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார்.

  • என்னை தூக்கிட்டு அந்த நடிகர போட்டாங்க!.. முதல் படத்திலேயே ஏமாந்து போன தேங்காய் சீனிவாசன்!..

    நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் தேங்காய் சீனிவாசன். ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக பட்டைய கிளப்ப அதுவே அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. சீனிவாசனின் அப்பாவும் ஒரு நாடக நடிகர் என்பதால் இயல்பாகவே சீனிவாசனுக்கும் அந்த ஆர்வம் வந்தது.

    ஒரு விரல் என்கிற திரைப்படம் மூலம்தான் சீனிவாசன் சினிமாவில் நடிக்க துவங்கினார். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. காமெடிதான் தனக்கு சரியான ரூட் என புரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்தார் சீனிவாசன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என பலரின் படங்களிலும் நடித்திருக்கிறார்.

    இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

    பல படங்களில் நெகட்டிவ் வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி இருக்கிறார். ஒரு மாதத்தில் இவரின் நடிப்பில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் அளவுக்கு 70களில் பிசியான நடிகராக இருந்தார் சீனிவாசன். பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தில் மாதவியின் அப்பாவாக அசத்தலாக் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

    தேங்காய் சீனிவாசன் கடைசியாக நடித்த திரைப்படம் கிருஷ்ணன் வந்தான். இது கவிஞர் வாலி எழுதி நாடகம் ஆகும். இது சினிமாவாக உருவானது. 1987ம் வருடம் மரணமடைந்தார். சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. திடீரென ஒருநாளில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு இன்னொருவருக்கு போய்விடும்.

    தேங்காய் சீனிவாசனுக்கும் அப்படித்தான் நடந்தது. இதுபற்றி ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்ன தேங்காய் சீனிவாசன் ‘எனக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து அட்வான்ஸ் 301 ரூபாய் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு திருப்பதிக்கு போய் சாமி கும்பிட்டுவந்து படப்பிடிப்புக்கு போனேன். ஆனால், வியாபார நோக்கத்துக்காக நாகேஷை போட்டுவிட்டார்கள். அதோடு, இந்த படத்தில் நீ இல்லை’ எனவும் சொல்லிவிட்டார்கள். அதன் பின்னர்தான் எனக்கு ஒரு விரல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது’ என கூறினார்.

    இதையும் படிங்க: அப்பவே அந்த வேலையைப் பற்றி அப்பட்டமாக சொன்ன தேங்காய் சீனிவாசன்… என்ன படத்தில் தெரியுமா?

  • லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..

    தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னி விடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பெரும்பாலும் காமெடியனாகக் கொடி கட்டிப் பறந்தவர் நாகேஷ் தான்.

    இவரது ஏடாகூடமான பேச்சு பார்க்கும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி விடும். இதே உணர்வு நிஜத்திலும் இவருக்கு இருந்ததாம். தனது வெகுளித்தனமான கேள்விகளால் பலரின் கோபத்தையும் சம்பாதித்துள்ளார்.

    இதையும் படிங்க: சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்ட நாகேஷ்!. அதுவும் எப்படி தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

    இவரது ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததும் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். அங்கு இருந்து கொண்டே இதற்கான வாய்ப்பைத் தேடினார். ஒரு முறை அலுவலகம் சென்ற போது மறுநாள் நாகேஷுக்கு மேனேஜரிடம் நாடக ஒத்திகைக்கு லீவு கேட்க வேண்டி இருந்தாம்.

    என்ன செய்வது என்று யோசித்தார். மளமளவென கடிதம் ஒன்றை எழுதினார். மேனேஜரிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த மேனேஜர் நாகேஷைத் திட்டி லீவெல்லாம் கிடையாது. நாளைக்கு ஆபீஸ் கண்டிப்பா வரணும்னு சொல்லிவிட்டாராம்.

    இதையும் படிங்க… தனுஷ் ஒன் மேன் ஷோ!. எபிக் பிளாக்பஸ்டர்!.. கேப்டன் மில்லர் டிவிட்டர் விமர்சனம்…

    இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நாகேஷ் அதை மேனேஜரிடம் காட்ட முடியாமல் அவரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்தாராம். மறுநாள் ஆபீசுக்கு டவுசர், பனியனுடன் வந்தாராம். இதைப் பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். மேனேஜர் கோபம் கொண்டு ‘ஏன் இந்த டிரஸில் வந்துருக்கே?’ என கேட்டாராம்.

    Nagesh
    Nagesh

    எனக்கு இருப்பதோ 2 பேண்ட், 2 சர்ட் தான். ஒண்ணு நேற்று தான் போட்டேன். இன்னொன்னு மழையில் நனைந்து விட்டது. அதைப் போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடிக்கும். அதனால் தான் இப்படி வந்தேன். இதை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் தான் லீவு கேட்டேன் என்று சொல்ல அதன்பிறகு லீவு கிடைத்தாம். நாடக ஒத்திகைக்கும் போய் விட்டாராம்.