Tag: Sathyaraj

  • ஒரு பாப்கார்னும்.. பன்னும் வாங்கித் தந்தா என்னை கட்டிக்கலாம்!.. சத்யராஜ் மகள் ஓபன் டாக்!..

    ஒரு பாப்கார்னும்.. பன்னும் வாங்கித் தந்தா என்னை கட்டிக்கலாம்!.. சத்யராஜ் மகள் ஓபன் டாக்!..

    வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல பரிமாணங்களில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தற்போது வெளியாகும் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் மகள் திவ்யா சத்யராஜ் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சத்யராஜ் அவர்களின் மனைவி மகேஷ்வரி சத்யராஜ். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் சிபிராஜ் தமிழ் திரைப்படங்களில் நடிகராக செயல்பட்டு வருகிறார். அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்ததுடன், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கியுள்ளார்.

    மகள் திவ்யா, திரைப்படத் துறையில் அதிகமாக ஈடுபடாமல், சமூக சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக நலத்திட்டங்களில் அவர் ஆற்றும் பணி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதை தாண்டி கடந்த சில மாதங்களாக திமுகவுக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் மட்டும் பேசி வருகிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த திவ்யா சத்யராஜ் தன்னைப் பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்காக ஜாதகம் எழுதப்படவில்லை. பொதுவாக பள்ளி விடுமுறையில் குழந்தைகள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வார்கள்; ஆனால் என்னைக் கண்டால், பலர் தங்களுடைய குழந்தைகளை என்னுடன் பழக விடமாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “எனக்கு திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. மோதிரம், தாலி போன்றவற்றில் விருப்பம் இல்லை. ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து, “நான் தனியாக சந்தோஷமாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து சந்தோஷமாக இருந்தாலும் சரி, நான் சந்தோஷமாக இருப்பதுதான் என் தந்தைக்கு முக்கியம். என் அப்பா நடித்த படங்களில் கடலோர கவிதைகள் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வில்லனாக நடிப்பதை விட ரொமான்டிக் ஹீரோவாக நடித்தால் தான் எனக்கு அதிகம் பிடிக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், “எனக்கு நடிப்பை விட நியூட்ரிஷன் மற்றும் அரசியலில் அதிக ஆர்வம் உள்ளது. என்னை திருமணம் செய்பவர் சத்யம் சினிமாவில் ஒரு படம் பார்க்க அழைத்து, டீ மற்றும் பன் வாங்கிக் கொடுத்தாலே போதும்; நகைகள் எதுவும் தேவையில்லை,” என்று சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

  • ஆடு பகை.. குட்டி உறவு!.. சத்தியராஜுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவு கொடுத்து சிபிராஜ் போட்ட போஸ்ட்!..

    ஆடு பகை.. குட்டி உறவு!.. சத்தியராஜுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவு கொடுத்து சிபிராஜ் போட்ட போஸ்ட்!..

    நடிகர் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளராக களத்தில் இறங்கிய நிலையில், தலைவா படத்தில் அவர் நடித்ததையே மறந்துவிட்டு விஜய்க்கு எதிராக மோசமாக பேசினார். ஆனால், அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்ட நீண்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

    “1993-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, பொள்ளாச்சி சக்தி ஹோட்டல் டெரஸில் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள நீங்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் மாமாவுடன் வந்திருந்தபோதுதான் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தேன். இந்த அடக்கமான இளைஞர், என்னையும் சேர்த்து லட்சக்கணக்கான இதயங்களை வென்று, எதிர்காலத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது நான் சிறிதும் அறிந்திருக்கவில்லை!

    நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக, நீங்கள் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மதிப்பது முக்கியம் என்று நான் உணர்கிறேன், மேலும் நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக நிற்பேன்.பல ஆண்டுகளாக, நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளீர்கள்.

    உங்கள் மீதான எங்கள் பரஸ்பர அன்பால் நாங்கள் ஒன்றுபட்டிருந்ததால்தான் எனது பல நெருங்கிய நட்புகள் உருவாயின. அப்போது என் காதலியாக இருந்து பின்னர் மனைவியான ரேவதியுடனான எனது முதல் சந்திப்பு, 20-11-2000 அன்று ஆல்பர்ட் திரையரங்கில் ‘பிரியமானவளே’ திரைப்படத்தைப் பார்த்தபோது நிகழ்ந்தது.

    உங்களின் மரியாதைக்குரிய மற்றும் வலிமைமிக்க போட்டியாளர்களைப் போற்றிய என் அன்புக்குரியவர்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்கும்போதுதான், நான் நடத்திய சூடான, அதே சமயம் ஆரோக்கியமான வாக்குவாதங்களும் விவாதங்களும் பெரும்பாலும் நிகழ்ந்தன.எனது வெற்றிகளைப் போலவே உங்கள் வெற்றிகளையும் நான் ரசித்தேன்.

    பல ஆண்டுகளாக உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், குறிப்பாக எனது திருமணத்திற்குப் பிறகு இரவு உணவிற்காக உங்கள் வீட்டிற்கு வந்தபோதும், எனது ‘லீ’ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டபோதும், எனது திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்தி நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களும், நான் உங்களை அழைக்கும்போதோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பும்போதோ எனக்குக் கிடைத்த உடனடி பதில்களும் என் வாழ்வின் மிகவும் பொக்கிஷமான நினைவுகளில் அடங்கும்.

    நான் ஒரு சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், சினிமா உலகிற்குள் நுழைய நீங்கள் எனக்கு ஒரு முக்கிய உத்வேகமாக இருந்தீர்கள்.உங்கள் திரைப்படங்கள் பெரும்பாலும் வெறும் பொழுதுபோக்காகக் கருதப்பட்டாலும், அவை உண்மையான அன்பு, நட்பு, கடின உழைப்பு மற்றும் பலவற்றின் மதிப்பை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தன.

    பெரும்பாலான சுய-உதவி இலக்கியங்களால் வழங்க முடியாத வாழ்க்கையைப் பற்றிய ஆழமான பார்வைகளை உங்கள் குட்டிக் கதைகள் வழங்கின. கடந்த மூன்று தசாப்தங்களாக எங்களை ஊக்கப்படுத்தியதற்கும், மகிழ்ச்சியாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருந்ததற்கும் நன்றி! நீங்கள் எங்களுக்கு அளித்த அந்த அற்புதமான திரையுலகத் தருணங்களை நாங்கள் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுவோம்!

    ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன் ! இது வெறும் ஒரு திரைப்பட வசனம் மட்டுமல்ல; நீங்கள் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை தத்துவமே இது! வென்று வா தலைவா ! நாங்க இருக்கோம்!” என சிபிராஜ் பதிவிட்டுள்ளார்.

  • அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

    அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

    மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த 1994ம் வருடம் வெளியான திரைப்படம் அமைதிப்படை. நடப்பு அரசியலை நக்கலடித்து மணிவண்ணன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது. சத்யராஜ் வழக்கம் போல தனது அலட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார். அதிலும் அமாவாசையாகவும், அரசியல்வாதியாகவும் நடிப்பில் கலக்கியிருந்தார் சத்யராஜ்..

    இந்த படத்தில் இடம்பெற்ற பல அரசியல் வசனங்களை இப்போதுள்ள கால கட்டத்திற்கும் பொருந்துவது போல மணிவண்ணன் எழுதியிருந்தார்.. அதோடு, படத்தில் முக்கிய வேடத்திலும் அவர் நடித்திருந்தார். மேலும், கஸ்தூரி, ரஞ்சிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இளையராஜா இசையமைத்திருந்தார். நடப்பு அரசியலை நக்கலடிக்கும் அமைதிப்படை போல ஒரு திரைப்படம் இப்போது வரை வெளியாகவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள்.. மணிவண்ணனுக்கு பின் அப்படி ஒரு படத்தை எடுக்கும் திறமையும், தைரியமும் யாருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    இந்நிலையில்தான், பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய சத்யராஜ் ‘அமைதிப்படை வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த நேரம் திடீரென ரஜினி போனில் கூப்பிட்டார். ‘அமைதிப்படை நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. நான் பார்க்கணுமே’ என்றார். ‘திடீர்னு கேட்கிறீங்களே.. எந்த தியேட்டரில் போடுவது’ என கேட்டேன். அவரே ஒரு தியேட்டரின் பெயரை சொன்னார்.. அங்கு அவரும் அவரின் மனைவி லதாவும் படம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்தோம்..

    காலை 10 மணிக்கு வருகிறேன் என ரஜினி சொல்லியிருந்தார்.. நானும், மணிவண்ணனும் 10 மணிக்கு சென்றோம். ஆனால் அவர் 9:45 மணிக்கே ரஜினி வந்து படம் ஓடிக் கொண்டிருந்தது.. படம் முழுவதையும் பார்த்த ரஜினி ‘எப்படி தைரியமாக இந்த படத்தை எடுத்தீர்கள்? வசனங்கள் எல்லாம் முன்பே எழுதினீர்களா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தோன்றியதா? என்று பல கேள்விகளை கேட்டார்.. படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக எங்கள் இருவரையும் பாராட்டி சென்றார்’ என சொல்லியிருக்கிறார்.

  • 100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    அந்தக் காலத்தில் எல்லாம் திரை உலகில் 100வது நாள் படம் ஓடுவது என்பது சாதாரண விஷயம். பல முன்னணி கதாநாயர்களின் படங்கள் இப்படி வெற்றி விழாவைக் கொண்டாடும். அதில் ஒன்று தான் இந்த ஜல்லிக்கட்டு படம். சத்யராஜ், சிவாஜி இணைந்து நடித்த இந்தப் படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்துள்ளார்.

    படம் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. படத்துக்கான வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சியும் இதுதான். எப்படி கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார்னு பாருங்க.

    ஜல்லிக்கட்டு படத்தின் பாராட்டு விழாவுக்கு அழைப்பு சொன்னதுமே எம்ஜிஆர் உடனே ஒத்துக்கிட்டாரா? இல்ல. முதல்ல வரலன்னு சொன்னாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    எனக்கே இது ஆச்சரியமான விஷயம். ஒருநாள் காலையில புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நான், சத்யராஜ், என்னுடைய சகோதரர் சித்ரா ராமு ஆகிய மூவரும் சந்தித்தோம். ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவுல நீங்க கலந்துக்கணும்னு கோரிக்கை வைக்கிறோம். என்னைக்கு ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள்னு கேட்டாரு. டிசம்பர் 5ந் தேதி 100 நாள் விழா வருதுன்னு நான் சொன்னதும் விழாவை வச்சிக்கோங்க.

    நான் வர்றேன் என்று மறுகணமே சொல்லி விட்டார் எம்ஜிஆர். அப்படி உடனடியாக அவர் விழாவுக்கு வருவார்னு நாங்க மூவருமே கனவுல கூட நினைச்சிப் பார்க்கல அப்படிங்கறதுதான் உண்மை. இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா கூட அந்தளவுக்கு ஆச்சரியமா இருக்குது அந்த சம்பவம். அதற்கு முன்னால் இந்த மாதிரி தேதி கேட்ட உடனே எம்ஜிஆர் ஒப்புக்கொண்ட சம்பவங்கள் இருக்கான்னு எனக்குத் தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.

  • சிவாஜியே அப்படி நடிச்சார்.. நாம என்ன?.. பாகுபலியில் நடிக்க சத்யராஜ் ஒப்புகொண்ட காரணம்!…

    சிவாஜியே அப்படி நடிச்சார்.. நாம என்ன?.. பாகுபலியில் நடிக்க சத்யராஜ் ஒப்புகொண்ட காரணம்!…

    தெலுங்கில் ஏற்கனவே சில படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஜமவுலி. எம்.ஜி.ஆர் அடிமைப்பெண் கதையை கொஞ்சம் உல்டா செய்த கதைதான் என்றாலும் அதை விஸ்வலாகவும், கதை, திரைக்கதை, வசனங்களிலும் படத்தை வேறுலெவலுக்கு கொண்டு போனார் ராஜமவுலி . இந்த படத்தில் நடிகர் சத்யரஜுக்கு கட்டப்பா என்கிற முக்கிய வேடம் கிடைத்தது. இதற்கு முன் சத்யராஜ் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கட்டப்பா கதாபாத்திரம் சத்யராஜை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது..

    இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் பாகுபலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் பற்றி பேசியிருக்கிறார். ராஜமௌலி சார் உண்மையானவர். இந்த படத்தில் நடிப்பதற்காக என்னிடம் கதை சொல்ல வந்தார்.. ‘இந்த படத்தில் ஒரு ஷாட்டில் ஹீரோவின் காலை எடுத்து உங்கள் தலையில் வைப்பது போல் ஒரு காட்சி இருக்கு.. நீங்கள் நடிப்பீர்களா?’ என்று கேட்டார்.. நீங்கள் சொல்லுங்கள் சார்.. கதை நன்றாக இருந்தால் நடிக்கிறேன் என்றேன்.. ‘இல்லை.. எப்படி இருந்தாலும் நீங்கள் நடிக்க மாட்டீர்கள் என்றால் நான் கதை சொல்லவில்லை’ என்றார்..

    அப்போதுதான் திருமால் பெருமை படத்தில் சிவாஜி சார் நடித்த காட்சி நினைவுக்கு வந்தது.. அந்த படத்தில் ஒரு திமிரான ராஜாவாக இருக்கும் சிவாஜி சார் கடவுள் அவதாரத்தில் இருக்கும் சிவக்குமாரின் காலில் உள்ள ஒரு மோதிரத்தை தனது வாயால் கழட்ட முயற்சி செய்வார்.. அப்போது சிவாஜி பெரிய நடிகர்.. சிவக்குமார் ஒரு அறிமுக நடிகர்.. சிவாஜி சாரே அப்படி நடிக்கும் போது நமக்கென்ன என எனக்கு தோன்றியது.. ராஜமவுலி முழுக்கதையையும் சொன்னார். இந்த கதாபாத்திரத்தை விடக்கூடாது’ என்று எனக்கு தோன்றியது என பேசியிருக்கிறார்

  • சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? – சத்யராஜுக்கு பதிலடி கொடுத்த பேரரசு

    சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? – சத்யராஜுக்கு பதிலடி கொடுத்த பேரரசு

    தமிழக அரசியலில் திரைத்துறை பிரபலங்களின் வருகையும், விமர்சனங்களும் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.

    நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய சத்யராஜ், சமீபகாலமாகப் பெரிய நடிகர்களின் பொதுக்கூட்டங்களுக்குப் பெருமளவில் மக்கள் கூடுவதைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    சினிமா நடிகரைப் பார்க்கக் கூட்டம் வருவது சகஜம். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் மனசாட்சிப்படி நடந்துகொண்டால், நிச்சயமாக ‘உதயசூரியன்’ சின்னத்திற்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் போட்டி உங்களுக்கும் எங்களுக்கும் கிடையாது. போட்டி சமூக நீதிக்கும், சனாதனத்திற்கும்தான் என்று கூறினார். இது விஜயை மறைமுகமாக தாக்கி பேசியதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் சத்யராஜின் இந்தப் பேச்சுக்கு திமுக தொண்டர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மாற்றுக் கட்சியினர் இது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரபல இயக்குனர் பேரரசு சத்யராஜின் அந்த பேச்சு குறித்து பதிலளித்துள்ளார். அதில்,

    திரு.சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? அரசியல்வாதியா? திரைப்பட நடிகரா ? சினிமா தொழிலில் இருந்து கொண்டு நடிகர்களை இனி மேலும் சிறுமைப்படுத்தி பேசாதீர்கள்! உங்கள் மகளுக்கு திமுகவில் பதவி கிடைத்தது எப்படி? தியாகி சத்யராஜ் மகள் இன்று முறையிலா கிடைத்தது?
    பிரபல நடிகர் மகள் என்று முறையில் தான் உங்கள் மகளுக்கு பதவி கிடைத்தது. உங்களை மேடையில் உட்கார வைத்ததின் காரணம் என்ன?
    மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவரா? இல்லை மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியா?


    உங்களை மேடை ஏற்றியதற்கான தகுதி என்ன? நீங்கள் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று ஒரே காரணம்தான்!
    ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள் அது உங்கள் விருப்பம், அது தவறில்லை.
    நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள். இந்த கருத்து உங்கள் முகத்திற்கே முன்னேயும் திரும்பும். திரைத்துறையை சார்ந்தவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் எந்த துறை, எந்த தொழில் நமக்கு சோறு போட்டதோ அந்த தொழிலுக்கு எதிராக இருக்கக் கூடாது! இன்னொன்று சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் போட்டியே வராது.
    ஏனென்றால் சனாதனம் என்பது சமூக நீதிதான்
    என்று கூறியுள்ளார்.

  • இயக்குனராக அவரதாரம் எடுத்த ஹீரோக்கள்- படங்கள் பற்றிய ஒரு அலசல்

    தமிழ் திடையுலகில் இன்று முதல் இன்று வரை முன்னணி நடிகர்கள் பல்ர் நடிப்பதுமட்டுமின்றி சில படங்களை இயக்கவும் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் சந்திரபாபு இதற்கு உதாரணம். அதற்கு அடுத்தகால கட்டங்களில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் சரத்குமார் இயக்குனர்களாக அவதாரம் எடுத்தனர். இதில் கமல்ஹாசனி தவிர்த்து மற்ற நடிகர்களில் படங்கள் மற்றும் அதன் வெற்றி தோல்வி குறித்து இங்கு காண்போம்.

    விஜயகாந்த்:

    தமிழ் சினிமாவின் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், தனது திரையுலகப் பயணத்தின் பிற்பகுதியில் ‘விருதகிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    2010-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாகும். இதில் விஜயகாந்த் ‘விருதகிரி’ என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றும் ஒரு சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கு எதிரான போராட்டமே இப்படத்தின் மையக்கரு. இந்த படத்தில் சண்டைகாட்சிகள் பிரமாண்டமாக எடுத்திருந்தார். பல காட்சிகள் வெளி நாடுகளில் எடுக்கப்பட்டன. பரபரப்பான திரைக்கதை இப்படத்திற்கு கூடுதல் பல சேர்ந்தது. விருதகிரி ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. இந்த படமே விஜயகாந்த் ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மன்சூர் அலிகான்னா அடிப்பீங்க!.. நயினார் நாகேந்திரன்னா பயமா?.. திரிஷா மௌனம் ஏன்?…

    சத்யராஜ்:

    வில்லனாகத் தொடங்கி கதாநாயகனாக உயர்ந்து, பின் குணச்சித்திர நடிகராகப் கலக்கிகொண்டிருக்கும் சத்யராஜ், தான் உச்சத்தில் இருந்த காலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம் வில்லாதி வில்லன்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    1995-ம் ஆண்டு வெளியான இப்படம் சத்யராஜின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். இதில் அவர் மூன்று விதமான வேடங்களில் நடித்திருப்பார். ஒரு ஊழல்வாதி அரசியல்வாதிக்கும், அவருக்கு எதிராகப் போராடும் இளைஞனுக்கும் இடையிலான மோதலை நகைச்சுவை கலந்த ஆக்ஷனாக அவர் இயக்கியிருந்தார்.
    இயக்குநராக இருந்துகொண்டே மூன்று சவாலான கதாபாத்திரங்களைச் கையாண்டது சத்யராஜின் திறமைக்குச் ஒரு சான்று.
    வழக்கமான கவுண்டமணியுடன் இணைந்து தனது ‘லொள்ளு’ பாணி நகைச்சுவையைத் திரைக்கதையில் அழகாக பயன்படுத்தியிருந்தார். நக்மாவின் கவர்ச்சி மர்றும் வித்யாசாகரின் பாடல்கள் என அனைத்தும் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு கை கொடுத்தது.

    இதையும் படிங்க: இது இருந்தால் எதுவும் தேவையில்லை… விக்னேஷ் சிவன் சொன்ன காதலர் தின வாழ்த்து..

    சரத்குமார்:

    ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த சரத்குமார், தனது 100-வது திரைப்படமான ‘தலைமகன்’ மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

    படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

    2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் போராட்டத்தை மையமாக கொண்ட கதை களம். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இபடத்தின் கதையை வைத்திருந்தார். இப்படத்திற்குப் பால் ஜேக்கப் இசையமைத்திருந்தார். ஒரு நடிகராகத் தான் விரும்பிய வேகத்தைத் திரைக்கதையில் கொண்டு வர சரத்குமார் முயன்றார். ஆனாலும் படம் தோல்வியையே சந்தித்தது.

  • Mankatha: சத்யராஜ் நடிக்க வேண்டிய படமா ‘மங்காத்தா’? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் இயக்குனர்

    அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மங்காத்தா. இது அஜித்துக்கு 50வது திரைப்படம். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். கூடவே அர்ஜூன் முக்கிய படமான கேரக்டரில் நடித்திருப்பார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. படம் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றியை ருசித்தது.

    இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தை இன்று ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர் படக்குழு. படத்தை பார்க்க அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா ஆகிய இருவரும் மங்காத்தா படத்தை ஒரு ரசிகராக பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

    இதில் ஆதிக் விசில் அடித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் மங்காத்தா படத்தை பார்த்து வருகிறார். இதற்கிடையில் மங்காத்தா ரீ ரிலீஸை ஒட்டி வெங்கட் பிரபு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் மங்காத்தா படத்தில் அவர் பணியாற்றிய அனுபவம் குறித்தும் படத்தைப் பற்றியும் பேசியுள்ளார்.

    அவர் பேட்டியில் கூறும் போது அஜித்துக்கு முன்பு போலீஸ் கேரக்டரில் சத்யராஜ்தான் நடிக்க வேண்டியதாம். அதுமட்டுமில்லாமல் ஜீவா, விவேக் ஓபராய், மற்றும் பிரசன்னா இவர்களும் நடிப்பதாக இருந்ததாம். அதன் பிறகு ஒரு நாள் அஜித்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது இந்த கதையின் ஒன் லைனை வெங்கட் பிரபு அஜித்திடம் சொல்லியிருக்கிறார்.

    அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன் பிறகுதான் ஒட்டுமொத்த ஆர்ட்டிஸ்ட்டும் மாற்றப்பட்டிருக்கின்றனர். அர்ஜூன் கேரக்டருக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் நாகர்ஜூனாவாம். ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சினையால் நாகர்ஜூனாவால் நடிக்கமுடியவில்லையாம். அதன் பிறகுதான் அர்ஜூன் உள்ளே வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அர்ஜூன் தயங்கினாராம்.

    ஏனெனில் மங்காத்தா படத்தில் அர்ஜூன் கேரக்டர் சாதாரணமாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால் படம் வெளியான பிறகு வெங்கட் பிரபுவை அழைத்து தன்னுடைய நன்றியை தெரிவித்தாராம் அர்ஜூன். அந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டர் இந்தளவு வலிமையாக இருக்கும் தான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார் அர்ஜூன்.

  • கோலிவுட்டிலேயே இதுதான் முதல்முறை.. ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ‘கூலி’

    கூலி சாதனை:

    ரஜினியுடன் பல மெகாஸ்டார்கள் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி .இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, அமீர்கான், சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாகிர் என பல மொழி முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

    ஓவர்சீஸ் உரிமை:

    படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்திற்கான ஓவர்சீஸ் உரிமை கிட்டத்தட்ட 81 கோடிக்கு விற்று இருப்பதாக தெரிகிறது. கோலிவுட்டிலேயே இந்த படத்திற்கு தான் இதுவரை கிடைத்த அதிகபட்ச ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.

    விஜய்க்கே இவ்வளவுதான்;

    5 தசாப்தகால உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் இன்னும் அவருடைய அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறார். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய விலை கொடுத்து யாரும் வாங்க முன்வரவில்லை. இதற்கு முன் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமை அறுபது கோடிக்கு விற்றதாக தெரிகிறது.

    அதிகபட்ச ஒப்பந்தம்:

    அடுத்ததாக கூலி திரைப்படம் தான் அதிகபட்சமாக 81 கோடி வரைக்கும் விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே ஒரு பெரிய சாதனை என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒன்றரை மாத காலம் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி இன்னும் படத்தை பெரிய அளவில் கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

    coolie

    coolie

    ஒட்டுமொத்தமாக இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வந்த லோகேஷ் இப்போது ரஜினியுடன் இணைந்து இருப்பது இன்னும் இந்த படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. எப்படி கமலுக்கு விக்ரம் என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தாரோ அதைப்போல ரஜினிக்கும் அதைவிட ஒரு பெரிய அளவில் வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • விக்ரம் பிரபுவுக்காக தனுஷ் செய்த சூப்பர் உதவி!.. ‘லவ் மேரேஜ்’ டிரைலர் ரொம்ப நல்லா இருக்கே!…

    நடிகர் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக அவருக்கு இறுகப்பற்று நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிடுள்ளார்.

    ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் அஸ்யூர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான சண்முக பிரியன் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படம் வருகின்ற ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சத்தியராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையில் “பேஜாரா ஆனேன்” மற்றும் “எடுடா பாட்டில்” ஆகிய பாடல்கள் வெளியாகி 1 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்று பிரபலமடைந்தது.

    இப்படம் ஒரு கிராமத்துப் பின்னணியில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. திருமணம் தாமதமாவதால் ஒருவர் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. மேலும், இப்படம் 90’s கிட்ஸ்களுடன் ஒப்பிடும் படமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று லவ் மேரேஜ் படத்தின் ட்ரேயிலர் வெளியிட்டு விழா நடைப்பெற்ற நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் விக்ரம் பிரபுவின் முந்தைய படமான இறுகப்பற்று வெற்றிக்குப் பிறகு அவரது மற்றொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு இணைந்து நடித்துள்ள காதி படமும் விரைவில் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.