Tag: Sathyaraj

  • 20 வருட சம்பளத்தை சத்யராஜுக்கு மொய் எழுதிய நபர்!.. ஒரு செம பிளாஷ்பேக்!…

    கோவையை சேர்ந்தவர் சத்யராஜ். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடி அலைந்தவர் இவர். பொதுவாக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடும் நடிகர்கள் என்றாலே ஊரில் கஷ்டப்பட்ட குடும்பம், சினிமாவுக்காக சென்னை வந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.

    ஆனால், சத்யராஜுக்கு இது பொருந்தாது. ஏனெனில், அடிப்படையில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சத்யராஜ். எனவே, அவருக்கு பணம் என்பது பிரச்சனையாக இருந்தது இல்லை. சென்னையில் தங்கி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போதும் அவரிடம் ஒரு பைக் இருந்தது. அதில்தான் சென்று வாய்ப்பு கேட்டார்.

    அவரின் உயரத்திற்கு வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பே வந்தது. சரி கிடைத்ததில் நடிப்போம் என அவரும் நடித்தார். பல படங்களில் வெறும் ‘யெஸ் பாஸ்’ என்கிற வசனம் மட்டும்தான் அவருக்கு கிடைத்தது. ஒரு கட்டத்தில் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கும் புரமோஷன் வந்தது. அதன்பின் மணிவண்னனின் இயக்கத்தில் அவர் நடித்த நூறாவது நாள் படம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது.

    வில்லனாக நடித்து கொண்டிருந்தவரை தனது கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாற்றினார் பாரதிராஜா. ஆனாலும், ஒருபக்கம் வில்லனாகவும் நடித்தார் சத்யராஜ். ஆனால், ஒருகட்டத்தில் இனிமேல் ஹீரோ மட்டுமே என முடிவெடுத்து பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். இப்போது வயது காரணமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

    சத்யராஜ் கோவையை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஒருவர் தான் 20 வருடங்களாக சேர்த்து வைத்த சம்பள பணத்தை மொய்யாக எழுதினார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மையில் அது நடந்த ஒன்று. இதை சூர்யாவின் அப்பா நடிகர் சிவக்குமாரே சொல்லியிருக்கிறார்.

    ஜமீன்தார் மகனான சத்யராஜ் மகாராஷ்டிராவில் கவர்னராக இருந்த சுப்பிரமணியம் என்பவரின் மகளை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் சிறுவயதிலிருந்தே சத்யராஜுக்கு கேர் கேட்டராக வேலை பார்த்த கருப்பையா என்பவர் 20 வருடங்களாக சத்யராஜ் வீட்டில் வாங்கிய சம்பளத்தை சத்யராஜ் திருமணத்தின் போது அதை அப்படியே மொய்யாக எழுதினார். பணக்காரர்கள் கொடுத்த பல பரிசு பொருட்களை விட இதுதான் என் மனதில் நிற்கிறது என சொல்லியிருக்கிறார் சிவக்குமார்.

  • அடம் பிடிச்ச இயக்குனர்… மகனுக்காக முதல் முறையாக சத்யராஜிடம் சிபாரிசுக்கு சென்ற சிவக்குமார்…

    Sivakumar: கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் தயங்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சனையில் முதல்முறையாக சிவகுமாரை இறங்கி பேசிய சம்பவமும் நடந்திருக்கிறது.

    இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்த இப்படத்தில் கார்த்திக், சாயிஷா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து இருந்தார்.

    முதலில் இத்திரைப்படத்தில் நடித்த சத்யராஜ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாகுபலி படத்தில் நடித்திருந்த சத்யராஜ் என்னுடைய நடிப்பிற்கு இப்படம் தீனி போடாதே என தயங்கி இருக்கிறார். வேறு வழியில்லாத இயக்குனர் பாண்டிராஜ் ராஜ்கிரணை அணுகி அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்.

    அவராலும் கால்ஷீட் பிரச்சினையால் படத்தில் நடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து தான் எதிர்பார்க்கும் பிரபலங்கள் படத்தில் இணையாமல் போக கோபமான பாண்டிராஜ் இப்படத்தை இப்போது எடுக்க வேண்டாம் என முடிவு எடுத்து தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லிவிடுகிறாராம்.

    இதை கேள்விப்பட்ட நடிகர் சிவகுமார் நேரடியாக பேச இப்போ இயக்குனருக்கு யார் தான் வேண்டுமா என கேட்டிருக்கிறாராம். இயக்குனர் இப்படத்தில் சத்யராஜ் சாரினை கேட்பதாக கூற, முதல்முறையாக நேரடியாக சத்யராஜை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சிவகுமார்.

    இயக்குனர் நீ தான் வேண்டும் என கேட்கிறார். இந்த படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறினாராம். சிவகுமார் சொன்ன ஒரே காரணத்தால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் சத்யராஜ்.

    அவர் சொல்லிய காரணத்தால் மட்டுமே படத்தில் நடிக்க வந்த சத்யராஜ் இருக்கு அடுத்த சில நாட்களில் படம் பிடித்துப் போகி இயக்குனரை அழைத்து நல்லவேளை இந்த படத்தை மிஸ் பண்ண பார்த்திருப்பேன் என வருத்தம் தெரிவித்ததாகவும் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்து இருக்கிறார்.

  • சூப்பர் ஹிட்டான சத்யராஜ் கவுண்டமணி காம்போ.. இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் எது தெரியுமா?

    பெஸ்ட் காம்போ: இந்த காம்போ எப்பொழுதுமே ரசிகர்களுக்கு பிடித்தமான காம்போப்பா என சினிமாவில் ஹீரோ ஹீரோயின் ஜோடிகளை பற்றி பேசுவார்கள். அதற்கு இணையாக ஒரு ஜோடியை பற்றி மக்கள் பேசினார்கள் என்றால் அது சத்யராஜ் மற்றும் கவுண்டமணி காம்போதான். இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றனர். சத்யராஜ் படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் கவுண்டமணி இருக்க மாட்டார்.

    கவுண்டருக்கு ஃபேவரைட்: டபுள் ஹீரோ சப்ஜெக்ட் மாதிரிதான் படமுழுக்க சத்யராஜுடனேயே டிராவல் செய்வார் கவுண்டமணி. இருவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் அந்த கோவை லொள்ளு என்பது பிறவியிலேயே இருந்த ஒன்று. அது படங்களிலும் பயன்படுத்தினார்கள். ஏன்ப்பா இந்த பாவமான மூஞ்சிய எங்கப்பா வாங்குனா என சத்யராஜை பார்த்து கவுண்டமணி கேட்பதில் இருந்து நிறைய கவுண்டர்கள் இவர்கள் படத்தில் இருக்கும்.

    முதல் படம்: சத்யராஜின் நூறாவது படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை படத்தில் கவுண்டமணி தனியாளாக மேலோட்டமான நகைச்சுவை நடிகராக 1989 ஆம் ஆண்டில் நடித்தார். அதன் பிறகு 1990 ஆம் ஆண்டில் வெளியான வாழ்க்கைச் சக்கரம் படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள். முதல் படமே இவர்களால் பெரிய அளவில் பிரபலமடைந்தது. அதற்கடுத்த படியாக பிரம்மா, முறைமாமன், நடிகன், மலபார் போலீஸ் என பல படங்கள் இவர்களின் காம்போவில் வெற்றியடைந்த படங்கள்.

    அதில் நடிகன் திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி ஏற்கனவே சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நீ இந்தப் பெண்ண இதுக்கு முன்னாடி பார்த்ததில்லல. உலக மகா நடிப்புடா சாமி என்ற வசனத்தை சத்யராஜ்தான் கவுண்டமணியை பேச சொல்லியிருக்கிறார். அதை போல கேப்மாரி , மொள்ளமாரி எல்லாம் சேர்த்து வைத்த ஒருத்தன் என்று நான் தான் என்னை பார்த்து பேச சொன்னேன் என்றும் சத்யராஜ் கூறியிருப்பார்.

    ஆஃப் ஸ்கிரீன் கவுண்டர்: ஆன் ஸ்கிரீன் கவுண்டர் மட்டுமில்லாமல் ஆஃப் ஸ்க்ரீன் கவுண்டர் அடிப்பதிலும் சிறந்தவர் கவுண்டமணி. நாயை பார்த்து இதுக்கு பேர் என்ன கேட்டதற்கு நாய்க்கு பேர் நாய்தான் என சொன்னதாகட்டும், ஏன்ப்பா எல்லாரும் நடிக்க வந்துட்டா யார்தான் சினிமா பார்க்குறது என சந்தானத்திடம் கேட்ட கேள்வியாகட்டும் கவுண்டருக்கே பொறந்தவராக கவுண்டமணி திகழ்ந்து வருகிறார்.

  • விஜய் அஜித் ஹீரோயின் இப்போ எனக்கு ஜோடி.. எப்படி நம்ம கெத்து? சத்யராஜ் கலாய்

    மிரட்டல் வில்லன்: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் வில்லனாக நடித்து அதன் பின் ஹீரோவாக பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியவர் சத்யராஜ். கடலோர கவிதைகள் படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார் சத்யராஜ். அதுவரை கமல் மற்றும் ரஜினியின் படங்களில் வில்லனாக நடித்து மக்களை மிரட்டி வந்தார். குறிப்பாக அந்த நூறு நாள்கள் படத்தில் மொட்டை தலையுடன் வில்லனாக நடித்தது இன்று வரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

    புது அத்தியாயம்: இவருடைய கெரியரில் எப்பவுமே ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் படங்களாக வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்களை சொல்லலாம். இந்தப் படம்தான் இவருக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுத்தது. அதுவும் அமைதிப்படை படத்தில் வில்லனாக ஒரு பக்கம் நடித்திருந்தாலும் இன்னொரு பக்கம் ரொமாண்டிக் சீன்களில் அற்புதமாக நடித்திருப்பார் சத்யராஜ்.

    கட்டப்பா காட்டிய வழி:சமீபகாலமாக குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வரும் சத்யராஜுக்கு பாகுபலி படம்தான் மற்றொரு அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொல்லலாம். கட்டப்பாவாக ஒரு செகண்ட் ஹீரோவாகவே பாகுபாலி படத்தில் நடித்திருப்பார் சத்யராஜ். அதிலிருந்தே எங்கு போனாலும் கட்டப்பா என்றேதான் சத்யராஜை அழைத்து வருகின்றனர்.கட்டப்பா கேரக்டர் அவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்றுதான் சொல்லவேண்டும்.

    இந்த நிலையில் நேற்று ஜெய், யோகிபாபு, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் தயாராகியிருக்கும் பேபி அண்ட் பேபி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவிற்கு படத்தில் நடித்த அத்தனை பேரும் கலந்து கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசும் போது அஜித் மற்றும் விஜய்க்கு ஹீரோயினாக நடித்தவர் இப்போது எனக்கு ஹீரோயின் என மிகவும் சந்தோஷமாக சொல்லிக் கொண்டார்.

    இது எனக்கு சந்தோஷம் என்றாலும் அவருக்கு எப்படி இருந்தது என எனக்கு தெரியவில்லை என அந்த நடிகையை பற்றி கூறினார். அவர் வேறு யாருமில்லை. நடிகை கீர்த்தனா. விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் ஹீரோயினே கீர்த்தனாதான். அதை போல அஜித்துடன் பவித்ரா மற்றும் ரெட்ட ஜடை வயசு படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

  • சத்யராஜ் மிஸ் பண்ணிய சூப்பர்ஹிட் படங்கள்… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

    தமிழ்சினிமாவில் 80களில் இருந்து இப்போ வரை நடித்து வருபவர் சத்யராஜ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்னு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப்படங்களில் நடித்தவர். வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சில முக்கிய படங்களில் நடிக்கத் தவற விட்டுள்ளார்.

    நாயகன்: 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் நாயகன். இளையராஜா இசை அமைத்துள்ளார். பிசி.ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் கதையை மணிரத்னம் சத்யராஜிடம் தான் சொன்னாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

    உழவன் மகன்: ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படம் உழவன் மகன். விஜயகாந்த், ராதிகா, ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முதலில் சத்யராஜ் தான் நடிக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது.

    வீரன் வேலுத்தம்பி: 1987ல் ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் வீரன் வேலுத்தம்பி. ராதாரவி லீடு ரோல். கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோல். இந்தப் படத்துக்கு முதலில் விஜயகாந்த்துக்குப் பதிலாக சத்யராஜைத் தான் கேமியோ ரோலில் நடிக்கக் கேட்டார்களாம். ஆனால் அவர் கேமியோ ரோல்னதும் நோ சொல்லிவிட்டாராம்.

    ஏழை ஜாதி: 1993ல் லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் ஏழை ஜாதி. விஜயகாந்த், ஜெயப்பிரதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தக் கதை முதல்ல சத்யராஜிக்குத்தான் போனதாம். ஆனால் வழக்கம்போல கால்ஷீட் பிரச்சனை.

    செந்தூர பாண்டி: எஸ்ஏ.சி. இயக்கத்தில் 1993ல் வெளியான சூப்பர்ஹிட் படம் செந்தூர பாண்டி. இந்தப் படத்தில் விஜயகாந்த், விஜய் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் முதலில் விஜயகாந்த் ரோலில் சத்யராஜ்தான் நடிக்க இருந்தாராம். அப்புறம் விருப்பம் இல்லாமல் நோ சொல்லி விட்டாராம்.

    முறை மாமன்: 1995ல் சுந்தர்.சி. இயக்கிய படம். ஜெயராம், குஷ்பு நடித்துள்ளனர். முதலில் சத்யராஜ் நடிக்க இருந்த கதை. கால்ஷீட் பிரச்சனையால் மிஸ் ஆனது.

    இவை மட்டும் அல்லாமல், அஜீத்தின் தீனா, பார்த்திபனின் அழகி, சூர்யாவின் காக்க காக்க படங்களும் மிஸ் பண்ணி விட்டாராம் சத்யராஜ். அதே போல ஷாம் நடித்த இயற்கையில் பசுபதி ரோலில் சத்யராஜை நடிக்கச் சொல்ல ‘நோ’ சொன்னாராம்.

    சிவாஜி: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லன் ரோலுக்காக சத்யராஜிடம் பேச நோ சொன்னார்களாம். அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் நடிக்க சத்யராஜை அழைக்க அதுவும் மிஸ் பண்ணி விட்டார்.

    பிகில் படத்தில் ராயப்பன் ரோல்ல சத்யராஜ் நடிக்க முடியாமல் போனது. காரணம் விஜயே டபுள் ஆக்ட் பண்றேன்னு சொல்லிவிட்டாராம். அதே போல மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் சத்யராஜிக்கு ஒரு கேரக்டரை ரெடி பண்ணினாராம் இயக்குனர். ஆனால் அதுவும் நடக்காமல் போயிடுச்சு.

  • சத்யராஜை மாத்த முடியாது… அவர் தான் ஹீரோ.. நள்ளிரவில் வாக்குவாதம் செய்த தங்கர்பச்சான்

    பைரவி படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும், தயாரிப்பாளருமாக இருப்பவர் பாலாஜி பிரபு. இவர் 9 ரூபாய் நோட்டு படத்துக்காக நைட் ஒன்றரை மணிக்கு நடந்த விவகாரம் பற்றி இப்படி சொல்கிறார்.

    ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கும் அப்பாவுக்கும் நல்ல பிரண்ட்ஷிப் இருந்தது. 9 ரூபா நோட்டு படத்தை நாங்க ஆரம்பிச்சி இந்தப் படத்தை டிராப் பண்றதுக்குக் காரணமே அவர் தான். இந்தப் படத்தை ஆரம்பிச்சதில் இருந்து பல சிக்கல்கள் எங்களுக்கு தங்கர்பச்சானால் வந்தது. அதை எடுக்க முடியாது என்ற சூழ்நிலை வந்த போது இதற்காக ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரன்கிட்ட நாங்க போனோம்.

    Also read: கயல் முதல் மருமகள் வரை… சன் டிவியின் டிஆர்பி ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்…

    அப்போ அவரோட தென்றல் படம் அவருக்கிட்ட இருந்தது. அதுல தங்கர்பச்சன் தான் டைரக்டர். அப்போ ஆஸ்கர் ரவிச்சந்திரன் ‘சத்யராஜிக்கு மார்க்கெட் கிடையாது. அதனால அவரைத் தூக்கிட்டு சாயாஜி ஷிண்டேவைப் போடுங்க. நான் இந்தப் படத்துக்கு பர்ஸ்ட் காப்பி எடுக்கிறேன்’னு சொன்னாரு. அது எனக்கே ஷாக்காத் தான் இருந்தது.

    அப்பா ‘எப்படி செட்டாகும்’னு கேட்டாரு. ‘பாரதியார் படத்திலேயே அவரைத் தமிழனா ஒத்துக்கிட்டாங்க. அதனால கண்டிப்பா ஒத்துக்குவாங்க. நான் தங்கர்பச்சான்கிட்ட பேச முடியாது. நீங்க பேசுங்க’ன்னு சொல்றாரு. அப்புறம் வந்துட்டோம்.

    9 rupe notu
    9 rupe notu

    நானும், அப்பாவும், தங்கர்பச்சானும் நைட் ஒன்றரை மணிக்கு அசோக் நகர்ல உள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆபீஸ் கேட் வாசல்ல நின்னு பேசிக்கிட்டு இருக்கோம். அப்படி பேசும்போது ‘சத்யராஜைத் தூக்கிட்டு அந்தக் கேரக்டர்ல சாயாஜி ஷிண்டேவைப் போடணும்.

    அதான் கண்டிஷன்’னு அப்பா சொல்லவும் தங்கர்பச்சான் ஷாக்காகிட்டார். அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ‘சத்யராஜ் தான் அதுக்கு சரியா வரும். அது கலைப்படம்’னாரு. ஆனா அதைக் கேட்கல. அதுக்கு அப்புறம் அங்க இருந்தா தங்கர்பச்சான் அழுதுருவாருன்னு நினைச்சி அங்க இருந்து அப்புறம் பேசிக்கலாம்னு நாங்க அழைச்சிட்டு வந்துட்டோம். அப்புறம் அந்தப் படம் நாங்க தயாரிக்க முடியாம டிராப் ஆகிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Also read: கமலுடன் இணைந்து நடிக்கும் காட்சி… 100 முறை ரஜினி சொல்லிப் பார்த்த வசனம்…! அட அந்தப் படமா?

    ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு டாக்டர் ஏ.எஸ்.கணேசன் தயாரிக்க சத்யராஜ் ஹீரோவாக நடித்து வெளியானது அந்த ஒன்பது ரூபாய் நோட்டு. கலைப்படம் என ரசிகர்கள் வரவேற்றனர். தங்கர்பச்சான் இயக்கத்தில் 2007ல் வெளியானது.

     

  • கங்குவா பட சர்ச்சை.. பெர்ஷனல் வரைக்கும் போனது தப்பு! சத்யராஜ் பகிர்ந்த தகவல்

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. சூர்யாவின் கேரியரிலேயே அதிக விமர்சனத்தை சந்தித்த படமாக இந்த படம் அமைந்தது. அதற்கு காரணம் படத்தின் மீது வைத்திருந்த அதிக எதிர்பார்ப்புதான். அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஒட்டுமொத்த படக்குழு தான். பட ப்ரோமோஷனின் போது கங்குவா படத்தை பற்றி பெரிய அளவில் பேசினார்கள்.

    அதாவது படம் 2000 கோடி வசூல் பெரும் .தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு போகும் படமாக இது அமையும் என மிகப் பெரிய பில்டப்பை ஒட்டுமொத்த படக்குழுவும் ஏற்படுத்தினர். அந்த ஒரு எதிர்பார்ப்புடனே படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாந்து போனார்கள். இது ஒரு பக்கம் இருக்க கங்குவா படத்தின் தோல்விக்கு படத்தை ரிவ்யூ பண்ணவர்கள் தான் காரணம் என திருப்பூர் சுப்ரமணியன் கூறுகிறார்.

    இதையும் படிங்க: கமலுடன் இணைந்து நடிக்கும் காட்சி… 100 முறை ரஜினி சொல்லிப் பார்த்த வசனம்…! அட அந்தப் படமா?

    அதனால் இனிமேல் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரத்திற்கு படத்தை பற்றி யாரும் விமர்சிக்க கூடாது என்ற வகையில் அவர் பேசியிருந்தார் .இதைப்பற்றி நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சத்யராஜிடம் கேட்டபோது அவர் அவருடைய கருத்தை கூறியிருந்தார். அதாவது ஒரு படத்தைப்பற்றி ரிவ்யூ பண்ணுவது பத்திரிக்கையாளருடைய உரிமை.

    அதை நான் இல்லை என்று சொல்லல. ஆனால் வேண்டுமென்றே அதிக ஃபோக்கஸ் செய்து அடிக்கணும்ங்கிற குறியோடு பண்றது தவறானது. அது இந்தப் படத்தில் தெளிவாக தெரிந்தது. ஒரு படம் புடிச்சது புடிக்கலைங்கிறது வேற. ஆனால் கரம் கட்டி அடிக்கிறது என்கிறது வேற .இந்த மாதிரி கங்குவா படத்திற்கு வந்தது.

    இதையும் படிங்க:Good Bad Ugly: வீரம் படத்தின் செண்டிமெண்ட்.. அஜித்தை கவுத்திய டிஎஸ்பி.. ஆனா நடந்ததோ? திடீர் மாற்றத்துக்கு காரணம்

    ஏனெனில் படம் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது தனி மனிதனுடைய உரிமை. அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஆனால் இந்த படத்திற்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதோடு படத்தின் ரிவ்யூவையும் தாண்டி பர்சனல் ஆக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை டார்கெட் செய்து அடிப்பது எப்படி சரியா வரும். இது ரிவ்யூவுக்குள் எப்படி வரும். இதுக்கும் ரிவ்யூவுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்டிருக்கிறார் சத்யராஜ்.

  • கமல் படத்தில்தான் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கினேன்..! நெகிழும் சத்யராஜ்

    சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில் கமல், ரஜினி, மோகன் படங்களில் வில்லனாக நடித்தார். அவரது கேரக்டர்கள் எல்லாமே பேசப்பட்டன. அவ்வளவு கெத்தாக நடித்து அசத்தினார். குறிப்பாக காக்கிச்சட்டை படத்தில் அவர் பேசும் ‘தகடு தகடு’ வசனம் இப்போது பார்த்தாலும் செமயாக இருக்கும். விக்ரம் படத்தில் அவர் போட்டு இருக்கும் கூலிங் கிளாஸ் படுமாஸாக இருக்கும்.

    இப்படி ஒரு வில்லனா?

    Also read: சத்தமே இல்லாம பட்டையை கிளப்பிய குட் பேட் அக்லி… இதுலயும் விடாமுயற்சிய மிஞ்சிட்டங்களே?!..

    ஒரு கண்ணாடியில் கூலிங்கும், இன்னொன்று சாதாரணமாகவும் இருக்கும். கண்ணாடியைத் தூக்கி விடும் வகையிலும் படங்களில் நடித்து அசத்தினார். இப்படி ஒரு வில்லன் நடிகரா என எல்லாருமே ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதனால் சத்யராஜ் படத்தில் நடித்தாலே ரசிகர்கள் வரவேற்பு அதிகமாக இருக்கும்.

    மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு சவால் விடும் வகையில் கெத்தாகவும், ஸ்டைலாகவும் நடித்து இருந்தார். அதில் தான் என்னம்மா கண்ணு பாடல் உள்ளது. மங்கம்மா சபதம் படத்தில் கமலுக்கு டஃப் கொடுப்பார்.

    கடலோரக் கவிதைகள்

    1986ல் ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ஹீரோவாக நடித்தார். பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படத்தில் இருந்து அவருடைய கதாநாயகன் அந்தஸ்து நாளுக்கு நாள் ஏறியது. இந்தப் படத்தில் டீச்சராக வரும் ரேகாவை அப்பாவித்தனமாக காதலிக்கும்போது சத்யராஜிக்குள் இப்படி ஒரு நடிகரா என்று நம்மையே வியக்க வைத்து இருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவருக்கு அண்ணா நகர் முதல் தெரு, அமைதிப்படை, வில்லாதி வில்லன் படங்கள் மாஸாக இருந்தன.

    கூலி

    sathyaraj
    sathyaraj

    இப்போது கூட லோகேஷ்கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது சத்யராஜ் ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    Also read: உருட்டுனா இப்படிதான்… டிஆர்பியில் செம அடி வாங்கிய விஜய்… சீன் காட்டும் சன்டிவி

    எனக்கு ரொம்ப ஆச்சரியமான சம்பளம் ஜப்பானில் கல்யாண ராமன் படத்துக்குத் தான் வாங்குனேன். நான் வில்லனா நடிக்கும்போது 15 ஆயிரம் தான் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். ஆனா ஜப்பானில் கல்யாணராமன் படத்துக்கு பஞ்சு அருணாசலம் எனக்கு 1 லட்சம் சம்பளம் கொடுத்தாரு என்கிறார் சத்யராஜ்.

  • Ajithkumar: ‘தம்பி அஜித்’ வாண்டட் ஆக புகழ்ந்த சத்யராஜ்… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!

    Ajithkumar: தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார். இவரின் இடத்தை நிரப்பிட இன்னும் யாரும் பிறந்து வரவில்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவு காமெடி, குணச்சித்திரம், வில்லன் என எந்த வேடம் கொடுத்தாலும் பொருந்தி போகக் கூடிய நடிகர் சத்யராஜ்.

    அதனால் தான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சத்யராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினி அடம்பிடிக்கவும் காரணமாக இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவொன்றில் நடிகர் அஜித்தினை சத்யராஜ் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

    இதையும் படிங்க: போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? அமரன் படக்குழுவிற்கு சரமாரியாய் கேள்வி கேட்கும் பிரபலம்

    மதம் குறித்து பேசுகையில், ‘தம்பி அஜித் இதைத்தான் சிறப்பாக சொன்னார். நீங்கள் வேறு நாட்டுக்கு செல்லும்போது, சம்பந்தம் இல்லாத ஒரு மனிதர் மீது உங்களுக்கு வெறுப்பு வருவதற்கு காரணம் மதம் என அழகாக எடுத்து கூறினார். அவருக்கு எனது பாராட்டுகள்’ என வாழ்த்தி இருக்கிறார்.

    Ajith vijay
    Ajith vijay

    சத்யராஜ் அஜித்தை வாழ்த்தியது செய்தி இல்லை தான். ஆனால் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் கடைசி படத்தில் நடிக்க மறுத்து விட்டு, அஜித்தை திடீரென புகழ்ந்தது தான் இந்த செய்தி இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாக உள்ளது. இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ஒரு மூத்த நடிகர் என்றும் பாராமல் சத்யராஜை மோசமாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தக் லைஃப்ல கமல் செய்த மேஜிக்… விஸ்வரூபமா, குருதிப்புனலா? இப்படி தெறிக்க விடுறாரே!

  • என் லெவலுக்கு இந்த படம் தேவையில்லை… தளபதி69ஐ தூக்கி எறிந்த சத்யராஜ்… காரணம்தான் ஹைலைட்டே!..

    Thalapathy69: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான தளபதி69 திரைப்படத்தில் நடிக்க இருந்த சத்யராஜ் தற்போது படத்தில் இருந்து மொத்தமாக விலகி இருக்கிறார். இதற்கான காரணமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்போது அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

    அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

    இப்படத்தின் கதை தெலுங்கில் வெளியான பகவந்த கேசரி படத்தினை மையமாக வைத்து உருவாகப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். தற்போது அரசியலுக்கு நுழைய இருக்கும் விஜயும் இதே போன்ற அரசியல் கதையில் நடிக்க விரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

    படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. தற்போது சத்யராஜ் படத்தில் நடிக்கவில்லை என தகவல்கள் கசிந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்குள் சென்று இருப்பதால் அவருடன் நடிக்க சத்யராஜ் விருப்பம் இல்லையாம். அது மட்டுமல்லாமல் சத்யராஜ் சம்பளத்தை கொடுக்க தற்போது பட்ஜெட் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்னர் நடிகை சத்யராஜ் மற்றும் விஜய் இருவரும் இணைந்து தலைவா திரைப்படத்தில் அப்பா மற்றும் மகனாக நடித்திருந்தனர். அப்படத்தினை விட நண்பன் திரைப்படத்தில் இருவரின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.