Tag: vijaysethupathi

  • இப்போதான் மகாராஜாவா வாழுறாரு.. அது புடிக்கலையா? சூர்யா 45ல் களமிறங்கும் VJS?

    ஒரு வழியாக மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டி இருக்கிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்களுக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவே அவரை காட்ட பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். அதற்கும் சம்மதம் தெரிவித்து தமிழ் முதல் ஹிந்தி வரை பல படங்களில் வில்லனாக நடித்து வில்லன் கதாபாத்திரத்திலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார் விஜய் சேதுபதி.

    சொல்லப்போனால் ஹீரோவாக ரசித்ததை விட வில்லனாக மக்கள் அவரை கொண்டாட ஆரம்பித்தனர். இருந்தாலும் ஒரு சூப்பர் ஹீரோவாக ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்குள் இருந்தது. அப்படி ஒரு திரைப்படம் தான் மகாராஜா திரைப்படம். அந்த படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பெரிய அளவில் பேசப்பட்டது. படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

    அதிலும் சீனா வரை சென்று சாதனை படைத்தது மகாராஜா திரைப்படம். சரி இனிமே ஹீரோவாகவே நடிக்க கவனம் செலுத்தலாம் என நினைத்த விஜய் சேதுபதி திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் எண்டிரி ஆனார். அந்த நிகழ்ச்சி மூலமும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது .இதற்கிடையில் சூர்யாவை வைத்து ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 வது படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவிப்பார் என கோடம்பாக்கத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை இல்லாத அளவு இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு அத்க சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்களாம். அதே சமயம் விஜய் சேதுபதி சூர்யா 45 படத்தில் நடித்தால் கூட அது சூர்யாவுக்கு ஒரு விதத்தில் கெட்ட பெயராக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    ஏனெனில் இந்த படம் ஒரு வேளை வெற்றி பெற்றால் அது விஜய் சேதுபதி நடித்து அதனால் தான் ஹிட்டானது என்ற பெயர் கூட வந்துவிடும். ஏனெனில் கங்குவா திரைப்படம் அந்த அளவு விமர்சனத்தை சந்தித்தது. அதனால் அந்த விமர்சனத்தை எல்லாம் போக்குவதற்காகவே விஜய் சேதுபதியை இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பார்கள் என்ற ஒரு பேச்சும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் விக்ரம் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • சூர்யா 45 படத்தின் விறுவிறுப்பான கதைகளம் இதுதான்… கேமியோ ரோலில் விஜய் சேதுபதி..!

    சூர்யா 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். இது காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    சூர்யா 45

    அடுத்து சூர்யா 45 படமும் தயாராகி வருகிறது. படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வந்துள்ளன. எதிரும் புதிருமான துருவங்களில் சூர்யா, திரிஷா நடிக்கும் சூர்யாவின் 45வது படத்தின் கதைகளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களைப் பார்ப்போம்.

    கதை

    நீதிமன்றம் மற்றும் கோவில்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. சூர்யா, திரிஷா வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக வாதாடுகிறார்கள். மிகவும் சுவாரசியமான கதைகளமாகத் தெரிகிறது.

    படப்பிடிப்பு

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரிஷா ஜோடியாக நடிக்கிறார்.

    சாய் அபியங்கர்

    ஏ.ஆர்.ரகுமான் முதலில் இசை அமைப்பதாக இருந்தது. அவர் தனது விவாகரத்து காரணங்களால் விலகிக் கொண்டார். தற்போது சாய் அபியங்கர் இசை அமைக்க உள்ளார். இதைப் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பென்ஸ் படத்துக்கும் இவர்தான் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா 45 படத்தைப் பற்றி புதுத்தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

    விஜய்சேதுபதி

    படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிய வருகிறது. 2024ல் அவருக்கு வெளியான மகாராஜா படத்தின் மூலம் 100 கோடியை அள்ளிய வசூல் நாயகன் லிஸ்டில் அவரும் இணைந்துள்ளார். விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தைப் பொருத்தவரை இந்த சூர்யா 45 படமும் தனித்துவமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் திரைக்கதையைப் பார்த்து பார்த்து சுவாரசியம் குறையாமல் வடிவமைத்து வருகிறார்கள்.

  • வெற்றிமாறன் சம்பவம் லோடிங்!.. தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி.. விடுதலை 2 ட்விட்டர் விமர்சனம்..

    விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தின் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் சமூகத்திற்கு ஒரு கருத்தை எடுத்துக் கூறும் படமாக அமையும்.

    அப்படிதான் விடுதலை திரைப்படமும் இருந்தது. முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. முதல் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

    அவரின் ஆரம்பகால கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருக்கின்றார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

    இருப்பினும் பெங்களூரு போன்ற பகுதிகளில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த காரணத்தால் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

    விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை விடுதலை 2 திரைப்படத்தின் மூலமாக நம்மால் பார்க்க முடியும். அந்த அளவிற்கு மனுஷன் நடிப்பில் மிரட்டி இருக்காரு.. வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கன்பார்ம். படம் கல்ட் கிளாசிக் என்று கூறி இருக்கிறார்கள். அதிகாரத்திற்கு எதிராக மக்களின் குரலாக இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது.

    படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் காதல் காட்சிகளையும் அழகாக சித்தரித்து இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன். விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியருக்கு இடையே இருக்கும் காதல் காட்சி மிகச் சிறப்பாக இருக்கின்றது. படத்தின் முதல் 30 நிமிடம் மாஸாக இருக்கின்றது.

    விஜய் சேதுபதியின் டயலாக், ஆக்சன் காட்சிகள் பக்காவாக இருக்கின்றது. புரட்சி பற்றிய கருத்துக்கள் இந்த திரைப்படத்தில் அதிக அளவில் இருக்கின்றது என்று தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஆக மொத்தம் இப்படத்தின் மூலமாக வெற்றிமாறன் மீண்டும் ஒருமுறை தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக நிரூபித்து இருக்கின்றார்.

    Also Read : விடுதலை 2 படம் வேற லெவல்!. நிறைய டிபேட் நடக்கும்!.. வெளியான முதல் விமர்சனம்!..

  • பாரபட்சம் காட்டுகிறாரா விஜய்சேதுபதி? தடை செய்யனுமா? பிக்பாஸில் நடப்பது என்ன?

    பிக்பாஸ் சீசன் 8:

    70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேலையில் இந்த சீசன் பற்றிய பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 70 நாட்களை கடந்தும் இன்னும் வீட்டில் நிறைய போட்டியாளர்கள் இருப்பதாகவே தெரிகிறது. அதனால் இனிமேல் வரும் வாரங்களில் டபுள் எஃபெக்ஷன் நடக்க வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.

    தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக இருக்கின்றது. இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களிடம் ஒரு உத்வேகமும் கடும் போட்டியும் நிலவி வருகிறது. அதற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டில் நிறைய டாஸ்க்கள் அதுவும் கஷ்டமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அந்த டாஸ்க்கில் ஜெஃப்ரி ராணவ்வை கீழே அழுத்தியதில் ராணவின் தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

    பாரபட்சம் காட்டும் விஜய்சேதுபதி:

    உடனே அவர் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் ராணவ் உள்ளே அனுப்பப்பட்டார். இன்னொரு புறம் பிக்பாஸில் ராணவ் கூறும் எதையும் விஜய் சேதுபதி காது கொடுத்து கேட்க வில்லை என ராணவின் தந்தை தற்போது கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசும்போது ராணவ் என்ன பேசினாலும் நீ உட்காருன்னு விஜய் சேதுபதி சொல்லிடுறாரு. அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    குடும்பப் பின்னணி அது இதுன்னு சொல்லி சில போட்டியாளர்கள் கிட்ட மட்டும் ரொம்ப அக்கறையா நடந்துக்கிறார் என்று நினைக்கத் தோணுது. சமமா நடத்த வேண்டியதுதானே அவருடைய பொறுப்பு என ராணவின் அப்பா அவருடைய வேதனையை கொட்டி இருக்கிறார். ராணவின் அப்பா கூறுவதைப் போல ஆரம்பத்திலிருந்து இப்போது வரைக்கும் விஜய் சேதுபதியின் மீது இந்த மாதிரி ஒரு விமர்சனம் இருக்கத்தான் செய்கிறது .

    காட்டம் காட்டிய கூல் சுரேஷ்:

    சில போட்டியாளர்களிடம் அவர் அக்கறை காட்டுவதாகவும் சில போட்டியாளர்களிடம் அவர் வெறுப்பையும் தாண்டி அவர்களை கண்டு கொள்ளவே இல்லை என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். அதுவும் ராணவ் பற்றி தான் அவர் குறிப்பிட்டு பேசி இருந்தார்.

    இன்று அவருடைய கை உடைந்து விட்டது. நாளை வேறு ஏதாவது உடைந்தால் அவருக்கு குழந்தை பிறக்குமா? என்ன விளையாட்டா விளையாடுறீங்க? தமிழகம் இப்போதுதான் அமைதியாக இருக்கிறது. அதை இப்போது சீர்குலைப்பதே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இனி பிக் பாஸ் 9 சீசன் வரவே கூடாது என்றும் கூல் சுரேஷ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: நிரோஷாவுக்கு ரஜினி பட வாய்ப்பு வந்தது எப்படி? அவரே சொல்லிட்டாரே..!

  • வாத்தியார் எடுத்த பாடம் எப்படி இருந்துச்சு?.. விடுதலை 2 படத்தின் முழு விமர்சனம் இதோ!..

    விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான விடுதலை பாகம் 1 மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

    இதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் 2-வது பாகத்தை எடுத்து வந்தார். அந்த வகையில் இன்று இப்படத்தின் 2-வது பாகம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது. முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி மற்றும் அவரின் கடந்த கால வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் வெற்றிமாறன்.

    படத்தின் கதை கரு:

    முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் எதிராக நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து திரைகதையை கொடுத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படத்தில் மக்கள் படை உருவான கதை, கம்யூனிசத்தை வாத்தியாரான விஜய் சேதுபதி தேர்ந்தெடுத்ததற்கான காரணம். போலீசுக்கு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில் யார் ஜெயித்தது என்பதை மையமாக வைத்து இயக்கியிருக்கின்றார் .

    விஜய் சேதுபதி படம் முழுக்க வாத்தியாராக கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கின்றார். கம்யூனிசத்தை தேர்ந்தெடுக்கும் வாத்தியார் சொல்லும் கருத்துக்கள் அனைத்துமே ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. பண்ணையார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறைகள், அதற்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள் என அனைத்தையும் திரைக்கதையாக வடிவமைத்து காட்டி இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

    அது மட்டும் இல்லாமல் உயர் ஜாதி பெண்களை தாழ்த்தப்பட்ட ஆண்கள் காதலிப்பது, அப்படி அவர்கள் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழும் போது ஏற்படும் பிரச்சனைகள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக நடத்தும் கொலைகள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக காட்டி இருக்கின்றார்.

    கதாபாத்திரங்கள்: இந்த பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மஞ்சு வாரியர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார். இவர்களின் மகனாக நடித்த கென் கருணாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

    அசுரன் திரைப்படத்திற்கு பிறகு கென் கருணாசுக்கு மற்றொரு சிறந்த படமாக விடுதலை 2 அமைந்துள்ளது. முதல் பாகத்தில் கெத்து காட்டிய சூரி 2வது பாகத்தில் காணாமல் போய்விட்டார். சேத்தன் நடிப்பு காமெடியாக இருந்தது. விஜய் சேதுபதிக்கு மஞ்சுவாரியிருக்கும் இடையே ஆன காதல் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

    படத்தின் பிளஸ்: படத்தின் முதல் 30 நிமிடமும், கடைசி 30 நிமிடமும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கின்றது. விஜய் சேதுபதியின் நடிப்பு மிரள வைத்துள்ளது. படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பேசிய ஒவ்வொரு வசனங்களும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் பாதி ஃப்ளாஷ் பேக் காட்சிகளாலும், இரண்டாம் பாதி நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகளாலும் நிரப்பப்பட்டுள்ளது.

    படத்தின் மைனஸ்: படத்தின் காட்சிகளும் கதையும் விறுவிறுப்பாக சென்றாலும் அரசியல் பாதையில் இடம் பெற்ற சில வசனங்கள் தோய்வை ஏற்படுத்துகின்றது. தேவையற்ற அரசியல் வசனங்கள் படத்தில் சுவாரசியத்தை குறைப்பதாக இருக்கின்றது. முதல் பாதி ஆவரேஜ் ஆக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

    அதுவே இரண்டாம் பாதி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றது. இளையராஜாவின் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும், பின்னணி இசை இன்னும் தரமாக கொடுத்திருக்கலாம். வெற்றிமாறன் திரைப்படத்தில் எப்போதும் இருக்கும் டப்பிங் பிரச்சினை இந்த திரைப்படத்திலும் சில இடங்களில் இருக்கின்றது. மற்றபடி எப்போதும் போல் வெற்றிமாறன் தனது பாணியில் படத்தை தரமாக எடுத்து இருக்கின்றார்.

    Also Read : பெரிய அப்பாடாக்கரா? கோவா கல்யாணத்துக்கு போற.. விஜயை சீண்டிய கூல் சுரேஷ்

  • அஜித்துக்கு வில்லனாக எப்போது? விஜய்சேதுபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்

    விஜய்சேதுபதி:

    விஜய்சேதுபதி ஒரு நடிகருக்கு வில்லனாக நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது ஒரு பெரிய ஹைப் ஏற்பட்டு விடுகிறது. அந்தளவுக்கு விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பப்படுகின்றனர். சேதுபதி, நானும் ரவுடிதான், 96 என ஹீரோவாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய்சேதுபதி பேட்ட படத்தின் மூலம் முதன் முதலில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார்.

    ஆனால் பேட்ட படத்தில் அவருடைய வில்லனிசம் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டியிருப்பார். ஏற்கனவே விஜய்க்கு இருக்கும் ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ்களுக்கு விஜய்சேதுபதி சேதுபதி வில்லனாக நடித்தது அவருக்கு மேலும் கூடுதல் பலமாக அமைந்தது. விஜய்ரசிகர்களும் விஜய்சேதுபதியை வரவேற்கத் தொடங்கினார்கள்.

    அஜித்துக்கு வில்லனாக எப்போது?:

    சொல்லப்போனால் அடுத்தடுத்து விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ரசிகர்களின் ஆதரவுதான் காரணமாக அமைந்தது. இதன் உச்சக்கட்டம்தான் விக்ரம் திரைப்படம். அந்த படத்தில் கமலையே ஒரு சீனில் புரட்டி எடுத்திருப்பார் விஜய்சேதுபதி. இப்படி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களான ரஜினி, விஜய், கமல் இவர்களுக்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதி ஏன் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவில்லை என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது.

    நான் ரெடிதான்.. ஆனா?:

    அதற்கான பதிலை இப்போது விஜய்சேதுபதி கூறியிருக்கிறார். முதன் முதலில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கத்தான் வாய்ப்பு வந்ததாம். பேட்ட படத்திற்கு முன்பாகவே அஜித்துக்கு வில்லனாக நடிக்கத்தான் விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதுக்கு விஜய்சேதுபதியும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம். கிணத்துல போட்ட கல்லா அந்தப் பக்கம் அமைதியா இருந்துட்டாங்க என விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    வில்லனாக மாஸ் காட்டி வந்த விஜய்சேதுபதி மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் தன் ஹீரோயிசத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார். சீனா வரை அவரின் புகழ் கொடிகட்டி பறக்கிறது. இப்போது விடுதலை 2 படம் வெளியாகி மீண்டும் விஜய்சேதுபதியின் புகழ் உச்சத்தை அடைந்திருக்கிறது.

    Also Read: நிரோஷாவுக்கு ரஜினி பட வாய்ப்பு வந்தது எப்படி? அவரே சொல்லிட்டாரே..!

  • என்னய்யா இவரு ரிலீஸ்க்கு முதல் நாள் வரைக்கும் படத்த எடுத்திருக்காரு!.. இருந்தாலும் இது ஓவரு!..

    இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். தான் இயக்கிய ஏழு திரைப்படங்களில் ஒரு திரைப்படத்திற்கு கூட தோல்வியை சந்திக்காதவர். இவரின் படங்கள் என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக படம் பார்ப்பவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனுக்காகவே திரையரங்குக்கு சென்ற படம் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு தனது கதைக்களத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தக்கூடிய ஒரு இயக்குனர்.

    விடுதலை திரைப்படம்:

    இவர் கடந்த ஆண்டு நடிகர் சூரி, பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக விடுதலை திரைப்படத்தின் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வந்தது. இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. படத்தில் விஜய் சேதுபதியின் அரசியல் வசனங்கள் சற்று தொய்வை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கூறியிருந்தார்கள். மற்றபடி படம் வெற்றிமாறன் ஸ்டைலில் தரமாக இருக்கின்றது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

    படத்தின் வசூல்:

    நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் மட்டும் 7 கோடி ரூபாயும் இந்தியா முழுவதும் சேர்த்து 8 கோடி ரூபாயும் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கின்றது. வரும் நாட்கள் வார நாட்கள் என்பதால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெற்றிமாறனின் சின்சியாரிட்டி:

    பொதுவாக வெற்றிமாறன் தனது திரைப்படங்களை மிகவும் ஸ்லோவாக எடுப்பார். இது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தை முதல் நாள் வரைக்கும் கரக்ஷன் செய்து மாற்றி இருக்கின்றார். படம் வெளியீட்டுக்கு முன்னதாக படத்தில் இருந்து எட்டு நிமிட காட்சிகளை நீக்கி இருப்பதாக அறிவித்திருந்தார்.

    தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருந்த வெற்றிமாறன் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் வரைக்கும் விஜய் சேதுபதியை டப்பிங் பேச வைத்ததாக கூறியிருக்கின்றார். அதிலும் அவசர அவசரமாக இரவு 12 மணிக்கு போன் செய்து அழைத்து இதற்கு மட்டும் டப்பிங் பேசிக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.

    அதிலும் நடிகர் சூரி சென்னையில் இல்லை. திருச்சியில் இருந்ததால் திருச்சியில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்கே அந்த காட்சிகளை அனுப்பி டப்பிங் பேசி கொடுக்க சொல்லி கூறி இருக்கின்றார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் வரைக்குமா படம் எடுப்பீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Also Read : சங்கர் கணேஷ் கல்யாணத்துக்கு வந்த சிக்கல்… எம்ஜிஆரும், சிவாஜியும் நடத்திய அற்புதம்

  • மண்டமேல இருக்கிற கொண்டைய மறந்துட்டாரே வெற்றிமாறன்!.. விடுதலை 2-ல இத கவனிக்கலையா?..

    விடுதலை திரைப்படம்: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது விடுதலை 2 திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

    அதற்கு காரணம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் தான். முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஹீரோவாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

    இதனால் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதனை விடுதலை 2 திரைப்படம் சிறப்பாக பூர்த்தி செய்து இருக்கின்றது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதாவது படத்தில் விஜய் சேதுபதியின் அரசியல் வசனங்கள் தொய்வை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள்.

    படத்தின் மிஸ்டேக்:

    இந்த திரைப்படத்தில் ஒரு லாஜிக் மிஸ்டேக் ஏற்பட்டுள்ளது. அதாவது விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கௌதம் மேனன் உடன் ஒரு போலீஸ் அதிகாரியாக வருவார். அவரே விடுதலை 2 திரைப்படத்தில் பண்ணையாறாக வருகின்றார். இது எப்படி சாத்தியம் இந்த மிஸ்டேக்கை எப்படி வெற்றிமாறன் கண்டுகொள்ளாமல் விட்டார் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    மிஸ்டேக்கு விளக்கம்:

    படத்தில் ஏற்பட்ட இந்த லாஜிக் மிஸ்டேக்கு சமூக வலைதள பக்கங்களில் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கின்றார். இது படத்தையே மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றது. அதாவது ‘இரண்டாம் பாகத்தில் வர வேல்ராஜ் பண்ணையார் இருக்கிறார் இல்லையா அவருடைய பையன் தான் முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியான வேல்ராஜ் பண்ணையார். தன்கிட்ட வேலை செய்த பெண்களில் ஒரு பெண்ணை பதம் பார்க்க, அந்தப் பெண்ணுக்கு பிறந்தது தான் போலீஸ் வேல்ராஜ்.

    பண்ணையார் வேல்ராஜ், வேலைக்காரி முழுகாமல் இருக்க, சொத்தில் பெரிய பிரச்சினையாகும் என்று ஊரை விட்டு விரட்டிவிட்டார். போலீஸ் வேல்ராஜ் தனது அம்மா பண்ணையாரால் விரட்டியடிக்கப்பட்டு சென்னையில் வாழ்ந்து தன்னை வளர்த்த கதையை பிறகுதான் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு தன்னுடைய அம்மா மூலம் தன் பிறந்த கதை கேட்ட போலீஸ் வேல்ராஜ்.

    பண்ணையாரின் அடாவடித்தனங்களை எதிர்க்கவும், கொட்டத்தை அடக்கவும். இடதுசாரி மற்றும் திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட போலீஸ் வேல்ராஜ் பண்ணையாரின் கூலித் தொழிலாளிகளிடம் காட்டும் வர்க்கபேதங்களை ஒடுக்கவும். சமூக நீதி காக்கவும், முதல் பாக போலீஸ் வேல்ராஜ் போலீஸ் வேலையில் சேர்ந்து சமூக நீதிக்காக அராஜகத்திற்கு எதிராக போராடினாலும் சிஸ்டம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை லேட்டாக புரிந்து கொள்கிறார்.

    ஆனாலும் முதல் பாக போலீஸ் வேல்ராஜ், தனது பண்ணையாரப்பாவை தனது அப்பா தான் அவர் என்று பொது வெளியில் சொல்லிக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இது எப்படி இருக்கு வெற்றிமாறனுக்காக முட்டுக் கொடுப்பர் சங்கம் – இங்கிலாந்து, டார்லிங்டன் கிளை என்று ஒரு சிறப்பான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த பதிவானதை தற்போது வைரலாகி வருகின்றது.

    Also Read: ஆதித்யா டிவி ஆதவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!.. கண்கலங்கிய தருணம்!…

  • 30வருஷத்துல யாரும் கேட்காத கேள்வியை கேட்ட விஜய்சேதுபதி! உறைந்து போன சுந்தர் சி

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருபவர் சுந்தர் சி. இவருடைய படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த குடும்ப திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. முதன் முதலில் முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. அந்தப் படத்தில்தான் குஷ்பூவும் நடிக்க அதிலிருந்தே இருவருக்குமான காதல் ஆரம்பமானது.

    சுந்தர் சி படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் கவுண்டமணி காமெடிதான் ஹைலைட். குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் எவர் கிரீன் நகைச்சுவை திரைப்படமாகும். கவுண்டமணிக்கு பிறகு வடிவேலுவின் காமெடி சுந்தர் சியின் படங்களுக்கு பெரிதும் உதவியது. குறிப்பாக நாய்சேகர் காமெடி இன்றளவும் பேசப்படும் காமெடியாகவே பார்க்கப்படுகிறது.

    இப்போது வரை சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் காம்போவில் வெளியான காமெடி இன்றளாவும் காமெடி சேனல்களில் பிரதான இடத்தை பிடித்துவருகிறது. இந்த நிலையில் சுந்தர் சியிடம் விஜய்சேதுபதி கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சியை பற்றி விவாதித்தது பெரும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது என ஒரு பேட்டியில் சிலாகித்து பேசியிருக்கிறார் சுந்தர் சி.

    முறைமாமன் படத்தில் வரும் ‘திரௌபதி அழகு கௌரவர்களை அழிக்க, கண்ணகி அழகு மதுரையை எரிக்க, இந்த அழகு யார் குடியைக் கெடுக்க?’ என்று கவுண்டமணி பேசும் வசனத்திற்கு விஜய்சேதுபதி மிகப்பெரிய ரசிகராம். இந்த வசனத்தை சொல்லி என்னிடம் ‘எப்படி எழுதினீங்க’ என்று கேட்டார். படம் ரிலீஸாகி 30 வருஷத்துக்கும் மேலாகிறது. ஆனால் இத்தனை வருடங்களில் யாருமே இத நோட் பண்ணி என்னிடம் கேட்டதில்லை என சுந்தர் சி நெகிழ்ந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    தற்போது சுந்தர் சி தன்னுடைய டிராக்கையே மாற்றியிருக்கிறார். நகைச்சுவை கலந்த திரில்லர் படங்களை எடுத்து பெரிய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அரண்மனை படத்தின் தொடர்ச்சியான பாகங்களை கொடுத்து பெரும் வெற்றியை பதிவு செய்தார் சுந்தர் சி. அடுத்ததாக அரண்மனை 5 திரைப்படத்திற்காகவும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  • சிக்குனது யாரு?.. நயன்தாராவா?.. ஹரியா?!.. ரணகளமாக போகும் விஜய்சேதுபதி படம்!..

    நடிகர் விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்யக்கூடிய ஒரு நடிகர்.

    கடந்த சில வருடங்களாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வந்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கின்றார். அதனை தொடர்ந்து மகாராஜா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக கம்பேக் கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது வெளிநாடுகளிலும் சக்க போடு போட்டு வருகின்றது.

    இவர் கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு போராளியாக வாத்தியார் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரையும் அசர வைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

    ஹரி கூட்டணியில் விஜய் சேதுபதி:

    விடுதலை 2 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ஹரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் கடைசியாக விஷால், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரை வைத்து ரத்னம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து புதிய படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்த ஹரி தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இயக்குனர் ஹரி விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இதற்காக விஜய் சேதுபதி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

    மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா தயாரிக்க இருக்கின்றார். நடிகை நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை தயாரிக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.

    சிக்குனது நயன்தாராவா? ஹரியா?

    ஹரியைப் பொறுத்தவரையில் தனது படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்கள் அனைவருமே மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு இயக்குனர். தான் கிழித்த கோட்டை கூட தாண்டக்கூடாது என்று எண்ணுபவர். அப்படி இருக்கையில் தயாரிப்பாளரும் தான் சொல்பேச்சை கேட்கக்கூடிய ஒரு நபராக இருக்க வேண்டும் என்று தானே எண்ணுவார்.

    ஆனால் நயன்தாரா அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் என்ன நினைக்கிறாரோ அதனை தான் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர். இப்படி இருக்கையில் இருவருக்கும் எப்படி செட்டாகும். அப்படி ஒரு வேலை இந்த திரைப்படத்தை நயன்தாரா தயாரித்தால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வரப்போகிறது என்பது தெரியவில்லை.

    ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் ஐயா திரைப்படத்தின் மூலமாக நடிகை நயன்தாராவை சினிமாவிற்கு அறிமுகம் செய்ததே இயக்குனர் ஹரிதான். இதனால் தனது முதல் பட இயக்குனர் என்பதற்காக நயன்தாரா ஹரி சொல்வதை கேட்பாரா? அல்லது ஹரி நயன்தாரா சொல்வதைக் கேட்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.