Tag: chiyan vikram

  • அடிச்சி தூக்கிய தங்கலான்!.. முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!…

    Thangalaan: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் தங்கலான். பல வருடங்களுக்கு முன்பு கோலார் தங்க வயலில் வேலை செய்து வந்த தமிழர்கள் பற்றிய கதை இது. பிரசாந்த் நீல் கற்பனை செய்த கேஜிஎப் முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே.

    ஆனால், விக்ரம் நடித்து வெளியாகியுள்ள தங்கலான் உண்மைக்கு மிகவும் நெருக்கமான படமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள். இந்த படத்தில் ஒரு குழுவின் தலைவன் தங்கலனாக விக்ரம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தங்கலானாகவே வாழ்ந்திருக்கிறார் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

    படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் விக்ரமின் நடிப்பை சிலாகித்து பேசி வருகின்றனர். மேலும், ரஞ்சித்தின் இயக்கமும், ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். இந்த படம் சுதந்திர தினமான நேற்று வெளியானது.

    thangalaan

    ஏற்கனவே விக்ரம் பிதாமகன், ஐ போன்ற படங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் தங்கலான் படத்திற்காக அதிக உழைப்பு கொடுத்திருக்கிறார். தங்கலானோடு பிதாமகன், ஐ படங்களை ஒப்பிட்டால் 8 சதவீதம் கூட கிடையாது என சியான் விக்ரமே பல மேடைகளிலும் சொன்னார்.

    இந்நிலையில், முதல் நாள் வசூலாக தங்கலான் திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 11 கோடிகளை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கேரளாவில் விக்ரமுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. எனவே, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என 3ம் சேர்த்து இப்படம் அங்கு 3 கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம்.

    விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் குறைவுதான் என்றாலும் வார இறுதி நாட்கள் தொடார்ந்து வருவதால் தங்கலான் படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.

  • தங்கலானுக்கு விருது கொடுக்கலனா பிரச்சனை பண்ணுவோம்!… பொங்கும் ரசிகர்கள்!…

    Thangalaan: சேது திரைப்படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து காட்டினார் விக்ரம். அந்த படத்திற்காக மொட்டை போட்டு, உடல் உடை குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். குறிப்பாக, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களை உருக வைத்தது.

    அந்த படத்திலிருந்தே விக்ரமுக்கு ரசிகர்களும் உருவானார்கள். தில், தூள், சாமி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் இடையிடையே நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்தும் நடிப்பது விக்ரமின் வழக்கம். இன்னும் சொல்லப்போனால் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற தாகம் அவரிடம் எப்போதும் உண்டு.

    vikram
    vikram

    அதனால்தான் காசி, அந்நியன், ஐ போன்ற படங்களில் நடித்தார். ஐ படத்திற்காக அவர் கொட்டிய உழைப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. உடலில் பாதி உடையை குறைத்து மெலிந்து கூனன் போல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள தங்கலான் படத்திலும் தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார் விக்ரம்.

    தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு அசத்தலாக இருப்பதாக படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் சொல்லி வருகிறார்கள். தங்கலான் படம் விக்ரமுக்காகவே பார்க்கலாம் எனவும் பலரும் சொல்கிறார்கள். சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு தங்க சுரங்க வயலில் வேலை செய்த தமிழர்கள் பற்றிய கதை இது.

    vikram
    vikram

    வெள்ளையர்கள் எப்படி மக்களை ஒடுக்கி, மிரட்டி வேலை வாங்கினார்கள் என இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் தங்கலானாகவே விக்ரம் வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. விக்ரமுக்கு விருது கொடுக்கவில்லை எனில் பிரச்சனை செய்வோம் எனவும் ஒரு ரசிகர் சொல்லும் வீடியோவும் வெளியானது.

    நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் என்றாலே விக்ரமுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். இதை ஏற்கனவே, காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் அவர் நிரூபித்து காட்டியிருக்கிறார். இப்போது விக்ரமின் திரைவாழ்வில் தங்கலான் படமும் ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கிறது.

    இதையும் படிங்க: தங்கலானை தூக்கி சாப்பிட்ட டிமான்டி காலனி 2.. இனிமே பேசுவீங்க பிரியா பவானிசங்கர்.. படம் எப்படி இருக்கு?

  • தங்கலான் படத்தில் இருக்கும் மெகா சஸ்பென்ஸ்!.. அட சியான் கூட இத சொல்லலயே!…

    Thangalan: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். அந்த படம் மூலம் சியான் விக்ரமாக மாறினார். அதோடு, தான் ஒரு சிறந்த நடிகர், நல்ல வாய்ப்பு கிடைத்தால் என் திறமையை நிரூபிப்பேன் எனவும் திரையுலகினருக்கு காட்டினார். இந்த படத்தின் வெற்றி விக்ரமுக்கு நிறைய பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

    கலைப்படங்களின் காதலனாக இருந்தாலும் தில், தூள், சாமி என அதிரடி ஆக்‌ஷன் மசாலா படங்களில் நடித்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் ஒருபக்கம் காசி போன்ற படங்களில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அழவைத்தார்.

    இதையும் படிங்க: கோட் – தங்கலான் படத்தை வச்சி கங்குவாவை ஹிட் அடிக்க பிளான்!. இது செம ஸ்கெட்ச்சா இருக்கே!..

    நடிகர் கமலை போல விதவிதமான கதாபாத்திரங்களில் பல கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமுக்கு எப்போதும் உண்டு. இது அவர் நடிப்பில் வெளியான கோப்ரா மற்றும் ஐ படங்களை பார்த்தாலே புரியும். இந்த வரிசையில் மீண்டும் விக்ரம் எடுத்திருக்கும் அவதாரம்தான் தங்கலான்.

    ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கிறது. அதாவது, சுதந்திரம் பெறுவதற்கு முன் கர்நாடக தங்க சுரங்கத்தில் வேலை செய்து வந்த தமிழர்களை பற்றிய கதை இது. இந்த படத்தில் நீண்ட தலைமுடி, தாடி என வித்தியாசமான வேடத்தில் அசத்தி இருக்கிறார் விக்ரம்.

    thangalan

    இந்த படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம், இப்படத்தின் படக்குழு பல ஊர்களுக்கும் சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசி படத்திற்கு புரமோஷன் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், தங்கலான் படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாராம். ஆனால், அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது படக்குழு. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட விக்ரம் இதை சொல்லவில்லை. படம் பார்க்கும்போது ரசிகர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று நினைத்திருக்கிறாராம் ரஞ்சித்.

    இதையும் படிங்க: விஜய் படத்துல கண்ணியம் இருக்கு! ஆனா அவர் படத்துல? ஐயோ வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போல

  • தங்கலானுக்கு வச்சிட்டாங்க ஆப்பு!.. கடைசி நேரத்துல இப்படியா?!.. ரிலீஸ் ஆகுமா?!….

    Thangalan: தமிழ் சினிமாவில் கமலுக்கு பின் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் சியான் விக்ரம். வாலிப வயதிலேயே சினிமாவில் நடிப்பதின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், சரியான வாய்புகள் இல்லாமல் இருந்தார். சேது திரைப்படம் அவரின் சினிமா வாழ்க்கையை மாற்றியது. அதன்பின்னரே சியான் விக்ரம் என அழைக்கப்பட்டார்.

    அதன்பின் தில், தூள், சாமி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அடுத்த சூப்பர்ஸ்டார் இவர்தான் என பத்திரிக்கைகள் எழுதியது. விக்ரமுக்கு ஒரு கதையில் நடிப்பதை விட வித்தியாசமான தோற்றம் கொண்ட கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதிலேயே ஆர்வம் அதிகம்.

    அதனால்தன் காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம்தான் தங்கலான். சுதந்திரத்திற்கு முன்பு கர்நாடக தங்க சுரத்தில் வேலை பார்த்த தமிழர்களின் வாழ்வியல் பற்றிய கதை இது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் விக்ரம்.

    Thangalan
    Thangalan

    இதுவரை இப்படி ஒரு தோற்றத்தில் அவர் நடித்ததில்லை என சொல்லுமளவுக்கு மிகவும் புதிய தோற்றத்தில் மிரட்டி இருக்கிறர். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்திருக்கிறார்.

    மேலும், மாளவிகா மோகனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், பசுபதி, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற 15ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. எனவே, இப்படத்தை காண விக்ரம் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

    இன்னும் 2 நாட்களில் இப்பபடம் வெளியாகவுள்ள நிலையில் நீதிமன்றம் மூலம் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பு கொடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி ‘படத்தை வெளியிடும் முன் ஒரு கோடியை தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்’ என நிபந்தனை விதித்துள்ளார். எனவே, ஒரு கோடியை ஞானவேல் ராஜா டெபாசிட் செய்தால் மட்டுமே தங்கலான் படம் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

  • கோரமான விபத்து.. 23 சர்ஜரிகள்… காலை எடுக்க வேண்டிய நிலை… மீண்டு வந்த சியான் விக்ரம்!..

    தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் ஒருவரான சீயான் விக்ரம் படங்களில் மட்டுமல்லாமல் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நிறைய சவால்களை கையாண்டு இருக்கிறார். காலை எடுக்கும் சூழ்நிலையில் சென்ற ஒரு சம்பவத்தை தன்னுடைய தங்கலான் ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருக்கிறார்.

    எந்தவித பின் புலனும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் விக்ரம். அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் கோலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் நடித்த திரைப்படம் எல்லாமே அசாதாரணமானது தான்.

    காசி, சேது உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஐ திரைப்படத்தில் தன் உடலை வருத்தி எடையை பெரிய அளவில் குறைத்து நடித்து அசத்தியிருப்பார். அதை பார்த்த ரசிகர்களும் மிரண்டு போயினர். சமீபத்தில் கூட தங்கலான் திரைப்பட சூட்டிங்கில் விக்ரமிற்கு மிகப்பெரிய விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நடிப்பிற்கு வருவதற்கு முன்னரே அவர் வாழ்வில் சந்தித்த மிக துயரமான ஒரு விபத்து குறித்து பேசி இருக்கிறார். கல்லூரி காலங்களிலேயே நடிப்பில் விக்ரமிற்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. அதனால் கல்லூரி நாடகங்களில் நடித்து வந்தார். அப்பொழுது அவர் ஆசை ஒரு துயரமான விபத்தால் தடைப்பட்டது. அதனால் மூன்று வருடங்கள் மருத்துவமனையில் கழிக்க வேண்டிய நிலை உருவானது. 23 சர்ஜரிகள் செய்தும் கால் சரியாகாமல் இருந்த நிலையில் நடக்கவே முடியாது என்ற நிலை உருவானது.

    இரண்டும் விக்ரமுக்கு நடிப்பின் மீது இருந்த தீரா காதல் அவரை கட்டுப்பாடுடன் வைத்தது. தொடர்ந்து முயற்சி செய்தார். அதில் வெற்றிக்கண்ட பின்னரே அவர் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அந்த நேரத்திலும் அவர் கொண்ட ஆர்வமே இங்கு நிறுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.

  • தங்கலான் விழாவில் சியான் இப்படி செய்யலாமா?!… பாலா இல்லாம விக்ரம் வந்துட்டாரா?..

    சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு போராடி மேலே வந்தவர் விக்ரம். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கில நாடகங்களில் நடிப்பார். அப்போது அவரின் நடிப்பை எல்லோரும் பாராட்ட நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சினிமா உலகில் பலமுயற்சிகள் செய்தும் பெரிய இயக்குனர்களின் பார்வை விக்ரம் மேல் படவில்லை.

    பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை. மீரா என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்தின் பாடல்கள் மட்டும் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், விக்ரமுக்கு ஹிட் கிடைக்கவில்லை. எனவே, அப்பாஸ், வினித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க துவங்கினார்.

    ஒருபக்கம், மலையாள படங்களில் ஹீரோக்களின் தம்பியாக பல படங்களிலும் நடித்தார். அப்போதுதான் இயக்குனர் பாலாவின் அறிமுகம் கிடைத்தது. ஏற்கனவே, முரளி, விக்னேஷ் என பலரிடம் சென்று அவர்கள் நடிக்காமல் போன கதையான சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிடைத்தது.

    இந்த படத்தில் விக்ரமரை சிறப்பாக நடிக்க வைத்தார் பாலா. இந்த படத்திலிருந்து சியான் விக்ரமாக மாறினார் விக்ரம். அதன்பின் தில் தூள், ஜெமினி, சாமி என ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார் விக்ரம். மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் படத்திலும் நடித்தார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    அதன்பின் விக்ரம் பாலாவின் இயக்கத்தில் நடிக்கவிலை. அதோடு, விக்ரமின் மகன் துருவை வைத்து பாலா இயக்கிய வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு இயக்குனரை வைத்து மீண்டும் எடுத்தார் விக்ரம். இது பாலாவுக்கு அவமானமாகிப் போனது. அதன்பின் விக்ரம், பாலாவுக்கும் இடையே உறவே இல்லாமல் போய்விட்டது.

    இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய விக்ரம் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்கள் பெயரை சொல்லும்போது அவர் பாலாவை சொல்லவில்லை.

    இதையடுத்து, விக்ரமுக்கு சியான் என்கிற பெயர் வர காரணமே பாலாதான். விக்ரம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சேது, பிதாமகன் ஆகிய படங்கள்தான். அப்படி இருக்கும்போது விக்ரம் பாலாவின் பெயரை சொல்லாமல் விட்டது குரு துரோகம் என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • கலைத்தாயின் இளைய மகன்யா நீர்!.. நடிப்பு அரக்கனே பாராட்டியது யாரை தெரியுமா?…

    வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட். இரண்டு படங்களுமே ஹிட் அடிக்கவே அடுத்து இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

    நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்தார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். இது அவருக்கு நன்றாகவே செட் ஆனது. விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார்.

    அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தில் சூப்பர் வில்லனாக வந்து அசத்தினார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பின் மார்க் ஆண்டனி படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என சொல்ல துவங்கிவிட்டனர்.

    கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எக்ஸ் படத்திலும் அற்புதமாக நடித்து சூப்பர்ஸ்டார் ரஜினியிடமே பாரட்டு வாங்கினார். இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லனாக மாறிவிட்டார். இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். இந்தியன் 3-யில் இவருக்கு முக்கிய வேடம் என சொல்லப்படுகிறது.

    இப்போது அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நேற்று மதுரையில் படத்தின் கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியை அருண்குமார் படமாக்கினார். படப்பிடிப்பு நடந்த இடத்தில் 10 நாட்கள் தனது உதவியாளர்களுடன் பயிற்சி எடுத்தார். அதன்பின் எங்களை கொண்டு சென்று 3 இரவுகள் ஒத்திகை பண்ண வைத்தார்.

    அதன்பின் நேற்று இரவு படப்பிடிப்பை துவக்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முடிந்து நினைத்தபடி காட்சிகளை எடுத்து சாதித்துவிட்டார். அவரைப்பற்றி ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘கலைத்தாயின் இளைய மகன்யா நீர். தயாரிப்பாளர் சிபுதமீனுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

  • கோபப்பட்ட ரஞ்சித்!. தங்கலானுக்கு வந்த சிக்கல்!.. செம கடுப்பில் சியான் விக்ரம்…

    ஒரு சினிமாவின் வெற்றி பல வகைகளில் பாதிக்கப்படும். சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும். தற்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்க வேண்டும். வேறொரு பெரிய படம் அந்த படத்தோடு ரிலீஸ் ஆகக் கூடாது. ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்.

    இப்படி எல்லாம் அமைந்தால் மட்டுமே ஒரு படம் ஹிட் அடிக்கும். இல்லையெனில் தோல்வியை சந்திக்கும். விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கூட இதனால்தான் ஓடியது. சூரியின் கருடன் படம் கூட அப்படித்தான். அதேபோல், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பெற்றாலும் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படும்.

    விஜயின் தலைவா படம் கூட அப்படித்தான் பிரச்சனையில் சிக்கியது. 2 நாட்கள் படம் வெளியாகாமல் அப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இப்போது அதே பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் இந்த பிரச்சனையில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சனையில் அரசுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார் பா.ரஞ்சித். இது தங்கலான் படத்தை பாதிக்கும் என பயந்து போயிருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தங்கலான் படத்தோடு டீமாண்டி காலனி 2 படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

    இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது. எனவே, ரஞ்சித் மீதுள்ள கோபத்தில் அதிக தியேட்டர்கள் அவர்கள் எடுத்துக்கொண்டால் தங்கலானுக்கு மிகவும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என பயப்படுகிறார் ஞானவேல் ராஜா.

    ஏற்கனவே, பலமுறை ரிலீஸ் தேதி சொல்லப்பட்டு தள்ளி போய் இப்போது ஆகஸ்டு 15 என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஞ்சித் இப்படி வாயை விட்டு ஏழரையை கொண்டு வந்துவிட்டாரே என பீதியில் இருக்கிறார் ஞானவேல் ராஜா என செய்திகள் கசிந்திருக்கிறது. இந்த விஷயம் சியான் விக்ரமுக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

  • ரஜினி, கமலை வச்சி பக்கா ஸ்கெட்ச் போட்ட விக்ரம்!.. சியானோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!…

    சினிமாவில் நடிகர்களுக்கு உத்வேகமாக எப்போதும் சீனியர் நடிகர்கள் இருப்பார்கள். சிவாஜிக்கு பின் நடிக்க வந்த பலருக்கும் அவரே உத்வேகமாக இருந்தார். ஏனெனில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்துவிட்டு போனாவர் அவர். அதேபோல், ஆக்‌ஷன் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர்கள் எம்.ஜி.ஆர் ரூட்டில் பயணித்தார்கள்.

    நடிகர் ரஜினி கூட பின்பற்றியது எம்.ஜி.ஆரின் ரூட்டைத்தான். கமர்ஷியல் ரூட்டில் பயணித்து சூப்பர்ஸ்டாராகவும் அவர் மாறினார். விஜயகாந்தும் அதே ரூட்டில்தான் சென்றார். ஏனெனில், தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் ஆகவேண்டுமெனில் ஒரு நடிகர் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் இப்போதுவரை மாறாத விதியாக இருக்கிறது.

    இதையும் படிங்க: ‘கோட்’ படத்தால் கொண்டாட்டம்.. 14 வருஷம் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் விஜய்!

    சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா போன்ற எல்லா நடிகர்களுமே இந்த ரூட்டில் பயணிப்பதற்கு காரணம் இதுதான். வெறும் கலைப்படங்களில் நடித்தால் காணாமல் போய்விடுவோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதில் நடிகர் விக்ரம் முக்கியமானவர்.

    சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு, பல வருடங்கள் போராடி சேது படம் மூலம் கவனிக்க வைத்து, தில், துள், சாமி என அடித்து ஆடிய ரசிகர்களிடம் பிரபலமாகி ஸ்டாராக மாறியவர் இவர். ஒருபக்கம் மசாலா படங்களில் நடிக்கும் விக்ரம் மறுபக்கம் காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

    இதையும் படிங்க: கோட் படத்தின் வில்லன்… கேமியோ ரோலில் முன்னணி நாயகி… அப்டேட்களால் திணறடித்த படக்குழு!…

    நடிப்புக்காக அவர் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார் என்பதை ‘ஐ’ படத்தில் அவரின் ஒல்லியான தோற்றத்தை பார்த்தால் தெரியும். தன்னுடைய சக்சஸ் சீக்ரெட் பற்றி ஒருமுறை சொன்ன விக்ரம் ‘எனக்கு ரஜினி, கமல் இருவரையும் பிடிக்கும். ஆனால், அவர்களில் ஒருவரை பின்பற்ற எனக்கு விருப்பமில்லை.

    ஆனால், அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு ரூட் இருக்கிறது. ரஜினியிடமிருந்து மாஸ், கமலிடமிருந்து கிளாஸ் என இரண்டையும் எடுத்துக்கொண்டு அந்த ரூட்டில் பயணித்தேன். அதுவே என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது’ என சொல்லி இருக்கிறார்.