Tag: Ilayaraja

  • சாப்பாட்டுக்கு காசில்லாம நடந்து போனேன்!.. பிளாஷ்பேக் சொல்லும் இளையராஜா!…

    Ilayaraja: இளையராஜா இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனால், அப்படியே 60 வருடங்களுக்கு பின்னால் போனால் அவர் சாப்பாட்டுகே கஷ்டப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சொந்த ஊரை விட்டு சென்னை வந்தவர்தான் இளையராஜா.

    அவர்களுக்கு முன்பே நடிகராகும் ஆசையில் சென்னை வந்தவர் பாரதிராஜா. அவர் வடபழனியில் பகுதியில் உள்ள ராம் தியேட்டருக்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்தார். சென்னை போனால் பாரதிராஜா தங்கியுள்ள அறையில் நாமும் தங்கிகொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இளையராஜா, அவரின் சகோதரர் அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும் சென்னை வந்தார்கள்.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சில நாடக நடிகர்களை வைத்து நாடகம் போட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. சென்னை வந்த பின் இளையராஜா பிரதர்ஸ் செலவுக்காக நாடகங்களுக்கு இசையமைக்க துவங்கினார்கள். பாரதிராஜா போட்ட நாடகங்களுக்கு மட்டுமல்ல. பலரின் நாடகங்களுக்கும் இசையமைத்தார்கள். இயக்குனர் ஷங்கர் காமெடி நடிகராக நடித்த நாடகங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

    எல்லா நேரமும் அதற்கு சம்பளம் கிடைக்கும் என சொல்ல முடியாது. சில சமயம் வெறும் கையோடும் திரும்ப வேண்டியிருக்கும். இதுபற்றி இளையராஜாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியபோது ‘ஒருமுறை தி.நகரில் இருந்த ராமராவ் திருமண மண்டபத்தில் நடந்த ஒரு நாடகத்திற்கு இசையமைக்க போனோம். நாடகம் முடிந்துவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். யாரும் பணம் கொடுக்கவில்லை.

    அங்கிருந்து டாக்ஸில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு செல்லக்கூட பணம் இல்லை. கையில் 50 பைசா இருந்தது. எனவே, கீபோர்டு, தபேலா போன்ற இசைக்கருவிகளை ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் மூவரும் நடந்தே போனோம்.

    இரவு 10.45 மணி இருக்கும். டிரஸ்ட்புரம் ரவுண்டானா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து நந்தகுமார் என்கிற நண்பர் ஒருவர் எங்களை பார்த்துவிட்டு கீழே இறங்கிவிட்டார். நடந்ததை கேட்டுவிட்டு ‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?’ எனக்கேட்டார். இல்லை என சொன்னதும் அருகில் இருந்த ஹாலிவுட் ஹோட்டலுக்கு அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அறையில் பசியோடு இருந்த பாரதிராஜாவுக்கும் டிபன் வாங்கிக்கொண்டு போனோம். ஒருவேளை சாப்பாடு போட்டவரை கூட நான் மறந்தது இல்லை’ என சொல்லியிருக்கிறார்.

  • நாங்கலாம் கஷ்டபட்டு சம்பாதிச்சா.. அவர் மட்டும்!.. இளையராஜாவை சீண்டிய ரஜினி!..

    Rajinikanth: திரைப்பட உலகில் எப்போதும் ஒருவரை சார்ந்திருப்பது என்பது தொடர்ந்து இருக்கும். குறிப்பாக 1960 முதல் 80 காலகட்டம் வரை அது அதிகமாகவே இருந்தது. சில கூட்டணிகள் செண்டிமெண்டாகவே பார்க்கப்படும். உதாரணத்திற்கு ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளார். அந்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜாதான்.

    80களில் படங்களின் வெற்றிக்கு இளையராஜா தேவைப்பட்டார். ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், ராமராஜன் போன்ற முக்கிய நடிகர்கள் எல்லோருமே தங்களின் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால்தான் அப்போது பெரிய நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு வேறு எந்த புதிய இசையமைப்பாளர்களுக்கும் போகாது.

    அதி்லும் ஒரு படம் பற்றி பேசும்போதே இளையராஜாவிடம் முதலில் பேசிவிடுவார்கள். அதன்பின்னர்தான் ஹீரோ யார் என்றே முடிவு செய்வார்கள். அந்த அளவுக்கு இளையராஜா முக்கியமானவராக இருந்தார். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது இளையராஜாவுக்கும் பொருந்தும்.

    92ல் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். ஒருபக்கம் தேவா வந்தார். அதுபோக வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் வந்தார்கள். எனவே, இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. பெரிய இயக்குனர்கள் இளையராஜாவை கைவிட்டதன் காரணம் இளையராஜாவின் கோபமும், அவர் பேசும் ஸ்டைலும்தான் என பொதுவாக திரையுலகில் சொல்வார்கள்.

    ரஜினிக்கு கடைசியாக இளையராஜா இசையமைத்த திரைப்படம் வீரா. இந்த படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது. 30 வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. பாட்ஷா படத்தில் இளையராஜாவின் சம்பளம் தொடர்பாக ரஜினி பேசியது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்பட்டு முகத்தில் அடித்தது போல் ரஜினியிடம் பேசிவிட்டார். எனவே, அந்த படத்திற்கு தேவா இசையமைத்தார். அந்த படமும், படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்க ரஜினி இளையராஜா பக்கம் போவதே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என மாறிவிட்டார்.

    இந்நிலையில்தான் ஒரு புதிய தகவல் வெளியே தெரியவந்துள்ளது. தளபதி பட ஆடியோ விழாவில் இளையராஜா 2 நிமிடம் மட்டுமே கலந்துகொண்டார். ‘எனக்கு வேலை இருக்கிறது.. நான் போகிறேன்’ என மைக்கில் பேசிவிட்டு அவர் சென்றுவிட அது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேடையில் பேசிய ரஜினி ‘நாங்களெல்லாம் வெயில், மழையில் நடித்து, சேற்றில், மண்ணில் சண்டை போட்டு உருண்டு சம்பாதித்தால் இளையராஜா ஏசி அறையில் சொகுசாக அமர்ந்துகொண்டு இசையமைத்து சம்பாதிக்கிறார்’ என பேசிவிட்டார். ஆனாலும், அப்போது இளையராஜாவை விட்டால் ஆளில்லை என்பதால் ரஜினி அமைதியாக இருந்தார். பாட்ஷா படத்தில் ராஜாவுடன் மனக்கச்சப்பு ஏற்பட்ட இப்போது வரை இருவரும் இணையவே இல்லை. அதேநேரம், இளையராஜாவை அவ்வப்போது தேடிப்போய் சந்திப்பதை ரஜினி இப்போதும் நிறுத்தவில்லை.

  • நீ, இளையராஜாலாம் இங்க வராதீங்கடா!… எஸ்.பி.பி-யிடம் சொன்ன இசைக்கலைஞர்கள்!..

    Ilayaraja spb: இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சினிமாவை பொறுத்தவரை இளையராஜாவுக்கு சீனியர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.எஸ்.வி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருக்கும் கருப்பு வெள்ளை காலத்திலேயே பாடியிருக்கிறார்.

    அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமான பின் அவரின் இசையிலும் பாட துவங்கினார் எஸ்.பி.பி. இருவரும் ஒரே வயது என்பதால் ‘வாடா போடா’ என பழகும் நண்பர்களாக மாறினார்கள். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகராக எஸ்.பி.பியே இருந்தார்.

    ஒரு பாடலை கம்போஸ் பண்ணி முடித்தவுடன் எஸ்.பி.பி அதை பாடவேண்டும் என்பதுதான் இளையராஜாவின் சாய்ஸாக இருக்கும். அவர் ஊரில் இல்லை என்றால் மட்டுமே அந்த வாய்ப்பு யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்ற பாடகர்களுக்கு போகும். ஏனெனில், எஸ்.பி.பி சினிமாவில் பாடுவது மட்டுமில்லாமல் அடிக்கடி இசைக்கச்சேரிகளில் பாட வெளிநாடுகளுக்கு போய்விடுவார்.

    இளையைராஜா என்னை நினைக்கிறார்.. அவர் எதை விரும்புகிறார் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார் எஸ்.பி.பி. அதுதான் இளையராஜாவுக்கும் தேவையாக இருந்தது. இளையராஜாவின் இசையில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன், சத்தியராஜ் என பலருக்கும் அற்புதமான மெலடிகளை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

    இடையில் இசைக்கச்சேரிகளில் எனது பாடலை என் அனுமதியின்றி பாடக்கூடாது என எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டிஸ் அனுப்ப, இருவரும் சில வருடங்கள் பேசாமல் இருந்த சம்பவமும் நடந்தது. ஆனால், அதே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ‘எழுந்து வா பாலு’ என வீடியோ போட்டார் இளையராஜா. இப்போது இளையராஜாவின் லைவ் கச்சேரிகளில் எஸ்.பி.பியின் மகன் சரண் பாடிக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘சில சமயம் மும்பையில் பாடலை ரெக்கார்டிங் செய்வோம். ஒருமுறை பாடலுக்கு இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் என்னையும், இளையராஜாவையும் பார்ட்டிக்கு அழைத்தார்கள். ‘ராஜா வரமாட்டார். நான் வருகிறேன்’ என சொல்லி பார்ட்டியில் கலந்து கொண்டேன். மதுபோதையில் அவர்கள் ‘டேய் நாங்க இங்க ஜிங்கிள்ஸ் வாசிச்சிக்கிட்டு பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம். ராஜா கொடுக்கிற நோட்ஸ்லாம் வாசிக்கவே முடியல. சின்ன தப்பு பண்ணாலும் அதை கரெக்ட்டா கண்டுபிடிச்சி மறுபடி வாசிக்க சொல்றார். நீ என்னடான்னா ஒரே டேக்ல பாடுற.. நீ, இளையராஜாலாம் இங்க வராதீங்கடா. சென்னையிலேயே ரிக்கார்டிங் பண்ணுங்க’ என சொன்னார்கள்’ என பகிர்ந்து கொண்டார் எஸ்.பி.பி.

  • சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் நான் அல்ல.. பொய்யான வதந்தி.. பொங்கி எழுந்த இளையராஜா!..

    இசைஞானி இளையராஜா:

    உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். இன்றும் மற்ற இசையமைப்பாளர்களுக்கு இணையாக படங்களில் இசையமைத்து வருகின்றார். இவரது இசையில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜமா. இதனை தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்திருக்கின்றார்.

    இப்படத்திலிருந்து வெளியான தினம் தினமும் என்ற பாடல் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கின்றது. விடுதலை 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முடிந்தது.

    மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். இசைஞானி இளையராஜா என்றாலே அவரைச் சுற்றி எப்போதும் சில விமர்சனங்கள் வலம் வரும். அதாவது அவர் அனைவரிடத்திலும் தலைகனத்தோடு நடந்து கொள்கிறார்.

    தன்னுடைய பாடல்களை பயன்படுத்துபவர்களுக்கு காப்பிரைட்ஸ் கொடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றார். மேலும் தன்னுடன் பாடுபவர்களை அவர் மதிப்பதில்லை என்றெல்லாம் பல பிரச்சனைகள் அவரை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும். அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் தற்போது வரை சினிமாவில் பிஸியாக இருந்து வருகின்றார் இளையராஜா.

    81 வயதாகும் இளையராஜா என்றும் சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். தன் திரை வாழ்க்கையில் பாரதிராஜா முதல் பாலா வரை ஏராளமான புதுமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து அவர்களின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்த வரும் இளையராஜா. ஒரு காலத்தில் இவரின் இசையால் பல படங்கள் ஹிட்டுக் கொடுத்துள்ளது.

    இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜா இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கின்றார். அப்போது இளையராஜா கருவறைக்குள் நுழைந்து தரிசனம் செய்ய இருந்தபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் கருவறைக்கு வெளியே வந்து சாமி தரிசனம் செய்து கோவில் மரியாதைகளை ஏற்றுக்கொண்டார்.

    இந்த செய்தி சமூக வலைதள பக்கங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. காலை முதலே பலரும் இந்த விஷயத்தை பெரிதாக்கி ஆளுக்கு ஒரு கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இசைஞானி இளையராஜா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.

    அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம்’ என்று கூறியிருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • இளையராஜாவை இசையமைக்கவிடாமல் தடுத்த மிஷ்கின்!.. அதான் முட்டிக்கிச்சா!…

    Ilayaraja: சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படத்திலேயே இவர் வித்தியாசமான இயக்குனர் என்பதை உணர்த்தினார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடியது.

    அதன்பின் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஜீவாவை வைத்து முகமூடி, விஷாலை வைத்து துப்பறிவாளன், புதிய முகத்தை போட்டு பிசாசு, உதயநிதியை வைத்து சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை இயக்கி அவரே அதில் நடித்தார். அவரின் நடிப்பு பாராட்டை பெற்றாலும் படம் ஓடவில்லை.

    ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. அதன்பின், விஜய் சேதுபதியை வைத்து ‘ட்ரெயன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விஜய் சேதுபதி கால்ஷீட் இல்லாததால் படம் பாதியிலேயே நிற்கிறது.

    கடந்த சில வருடங்களாகவே மிஷ்கின் திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். மாவீரன் படத்தில் வில்லனாகவே நடித்திருருந்தார். லோகேஷ் இயக்கிய லியோ படத்திலும் நடித்திருந்தார். இப்போது எல்லோரும் மிஷ்கினை தங்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டனர்.

    மிஷ்கின் இளையராஜாவின் தீவிர ரசிகர். ஆனாலும் அவருடன் சண்டை போட்டிருக்கிறார். ‘இனிமே என்ன பார்க்க வராத’ என இளையராஜா திட்டி விரட்டிய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். சைக்கோ படத்தில் கூட ‘உன்ன நினைச்சி நினைச்சி’ பாடலை சித் ஸ்ரீராம் பாட வேண்டாம் என இளையராஜா சொல்ல, இல்லை ‘அவர்தான் பாட வேண்டும்’ என மிஷ்கின் அடம்பிடிக்க இருவருக்கும் முட்டிக்கொண்டது. கடைசியில் மிஷ்கின் ஆசைப்படியே அந்த பாடலை சித் ஸ்ரீராமே பாடியிருந்தார்.

    அதேபோல், மிஷ்கின் இயக்கி நடித்த நந்தலாலா படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ஆனால், அது ஒரு ஜப்பான் மொழி படத்தின் காப்பி என்பதை மிஷ்கின் தன்னிடம் சொல்லவே இல்லை என்கிற கோபமும் இளையைராஜாவுக்கு இருந்தது. அந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது முதல் காட்சியை பாராட்டிவிட்டு இசையமைக்க துவங்கியிருக்கிறார் ராஜா.

    ஆனால், அவரை மிஷ்கின் தடுத்து ‘மியூசிக் வேண்டாம்’ என சொல்ல ராஜாவோ ‘என்னய்யா சொல்ற.. டைட்டில் கார்டுக்கு மியூசிக் போடாம நான் இருந்ததே இல்ல’ என சொல்லியிருக்கிறார். ‘மியூசிக் இல்லாம டைட்டில் வந்த முதல் படமா இது இருக்கட்டும்’ என சொல்லி அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். அவர் ஆசைப்பட்டது போலவே பின்னணி இசை இல்லாமல்தான் நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டு படத்தில் வரும்.

  • போதையில ஒருத்தர் கேட்ட கேள்வி!.. ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையே மாறிப்போச்சே!…

    AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் அப்பா சேகர் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்பா இசையமைப்பாளர் என்பதால் சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டார் ரஹ்மான்.

    திடீரென அப்பா இறந்துவிடவே சிறு வயதிலேயே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ரஹ்மானுக்கு வந்தது. எனவே, இளையராஜா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பல திரைப்படங்களிலும் இசைக் கலைஞராக வேலை பார்த்துள்ளார். ஒருகட்டத்தில் தனியாக இசையமைக்க துவங்கினார்.

    முதலில் இவர் இசையமைத்தது விளம்பர படங்களுக்குதான். ரோஜா படத்தில் இவர் கொடுத்த இசை இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அப்போது தேசிய விருது பட்டியலில் இளையராஜாவும் இருந்தார். பாலுமகேந்திரா போட்ட ஒரு ஓட்டு ரஹ்மானுக்கு தேசியவிருதை உறுதி செய்தது.

    பெரும்பாலும் மெலடிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மேற்கத்தியை இசையை கொடுத்து அதிர வைத்து ஆட்டம் போட வைத்தார் ரஹ்மான். குறிப்பாக அவரின் இசை இளசுகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. தொடர்ந்து ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், திருடா திருடா என அடித்து ஆடினார் ரஹ்மான்.

    தமிழ் மட்டுமின்றி ஹிந்திக்கும் சென்று கொடி நாட்டினார். ரங்கீலா படத்துக்காக ரஹ்மான் போட்ட இசைக்கு நடனம் அமைக்க முடியாமல் பாலிவுட் நடன இயக்குனர்கள் திணறினார்கள். ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக 2 தேசிய விருதுகளை பெற்றார் ரஹ்மான். விருதை கையில் வாங்கிக்கொண்டு ‘எல்லாப் புகழுக்கும் இறைவனுக்கே’ என சொன்னார்.

    இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ரஹ்மான் ‘எனக்கு 19 வயது இருக்கும்போது இரண்டு இசையமைப்பாளர்களுடன் ஒரு குழுவில் வேலை செய்தேன். அந்த குழுவில் இருந்த ஒரு கிதார் கலைஞர் ஒருநாள் குடிபோதையில் என்னிடம் ‘ஏன் சினிமா இசையை மட்டுமே வாசிக்கிறாய்.. உனக்கு வேறு எதுவும் தெரியாதா?’ எனக்கேட்டார். அதன்பின்னரே எனது தனித்துவமான இசையை அடையாளம் காணும் பயணம் துவங்கியது’ என சொல்லி இருக்கிறார்.

  • என்கிட்ட ஒரு கதை இருக்கு… ஆனா ஒருத்தனும் இல்ல!.. இப்படி சொல்லிட்டாரே இளையராஜா!…

    இளையராஜா ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல. பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகள் இருக்கிறது. அவர் இசையமைத்த பல படங்களுக்கு அவரே பாடல்களை எழுதி இருக்கிறார். அது மட்டுமல்ல. அவருக்குள் ஒரு போட்டோகிராபர், ஒரு கதாசிரியர், ஒரு இயக்குனர் என பல திறமைகள் இருக்கிறது.

    இது அவருடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் தெரியும். ஒரு படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது அந்த படத்தில் இயக்குனர் என்ன தவறு செய்திருக்கிறார் என கண்டுபிடித்துவிடுவார். சில காட்சிகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ சொல்வார். அப்படி வெற்றியடைந்த படங்கள் பல இருக்கிறது.

    பின்னணி இசை மூலம் பல காட்சிகளுக்கு உயிர் ஊட்டியிருக்கிறார். பல மொக்கை படங்களையும் தனது இசையால் ஓட வைத்திருக்கிறார். அதனால்தான் அவரை இசைஞானி என அழைக்கிறார்கள். இளையராஜா இயக்குனர்களை வாழ வைத்த கடவுளாகவே பார்க்கப்பட்ட காலம் உண்டு.

    80களில் ஒரு புதுமுக இயக்குனர் தனக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில் இளையராஜாவை எப்படியாவது சந்தித்து கதை சொல்லி அவரின் சம்மதத்தை வாங்கிவிடுவார். இளையராஜா இசையமைக்கிறார் எனில் ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன் வருவார். இப்படி பல இயக்குனர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

    இளையராஜா பாவலர் கிரியேசன்ஸ் என்கிற பெயரில் சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அதோடு, அவரிடம் சில கதைகளும் இருக்கிறது. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘பாரதிராஜா இயக்கிய நாடோடித் தென்றல் படத்தின் டைட்டில் கார்டில் கதாசிரியர் என என் பெயரை போட்டார்கள். ஆனால், உண்மையில் அது என்னுடைய கதை இல்லை.

    நான் பாரதிராஜாவிடம் சொன்ன அதை அவர் எடுக்கவே இல்லை. அந்த கதை இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. யாரேனும் அதை எடுக்க விரும்பினால் என்னிடம் கதை கேட்க வரலாம். கிளாசிக்கான கதை அது. ஆனால், அதுபோன்ற கதையை எடுக்க இப்போது யாரும் முன்வரமாட்டார்கள்’ என கூறியிருக்கிறார்.

  • ரமேஷ் கண்ணாவுக்கு இளையராஜா கொடுத்த ஒரு லட்சம்!.. செம காமெடி ஸ்டோரி!….

    Ramesh khanna: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ரமேஷ் கண்ணா. 40 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறார். 80களிலேயே சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். உதவி இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என பல திறமைகள் கொண்டவர் இவர்.

    நாடக அனுபவம்: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர். 5 வயதிலேயே பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நாடக குழுவில் நடித்திருக்கிறார். 10 வயதிற்குள் சுமார் ஆயிரம் நாடகங்களில் நடித்தவர் இவர். இதற்காக ஜனாதிபதியிடம் பாராட்டை பெற்றார். பாண்டியராஜன், கோடி ராமகிருஷ்ணா, விக்ரமன் ஆகியோரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார்.

    நடிகராக வளர்ச்சி: கே.எஸ்.ரவிக்குமாருக்கு மிகவும் பிடித்த உதவி இயக்குனர் இவர். 90களில் சினிமாவில் நடிக்க துவங்கினார். விக்ரம் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் கார்த்திக்கின் நண்பராக நடித்தது இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. விஜய், சூர்யா இணைந்து நடித்த ஃபிரண்ட்ஸ் படத்திலும் அவர்களின் நண்பனாக நடித்திருப்பார். படையப்பா படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக வருவார். அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்திருப்பார்.

    இயக்குனர் அவதாரம்: 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடிப்பார். சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அஜித் – தேவயாணி ஆகியோரை வைத்து தொடரும் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றியடையவில்லை. சூர்யா நடித்த ஆதவன் படத்தின் கதை இவருடையதுதான். முனி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

    இளையராஜா: சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ரமேஷ் கண்ணா இளையராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். நான் வேலை செய்த ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அப்போது அவரின் ரிக்கார்டிங் தியேட்டரில் நான் இருந்தேன். திடீரென ஒரு பொட்டலத்தை என்னிடம் கொடுத்து ‘இதை நீ வைத்துக்கொள்’ என சொல்லிவிட்டு போய்விட்டார்.

    பிரித்துப்பார்த்தால் அதில் ஒரு லட்சம் பணம் இருந்தது. அப்போது அது பெரிய தொகை. எனக்கு தினமும் பேட்டாவே 10 ரூபாய்தான். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒரு கடைக்கு சென்று டீ கூட குடிக்க முடியவிலை. வெளியே போகவும் முடியவில்லை. அப்போது வந்த இளையராஜா சிரித்துக்கொண்டே ‘என்ன டென்ஷன் ஆயிட்டியா?’ என கேட்டுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டார். அதன் பின்னரே எனக்கு நிம்மதி வந்தது’ என சொல்லியிருந்தார்.

  • கமலையும் இளையராஜாவையும் கதறி அழ வைத்த சிறுவர்கள்!.. ஒரு பிளாஷ்பேக்!…

    Kamal Ilayaraja: கமலும், இளையராஜாவும் ஒருவரை ஒருவர் மதிக்கும் நல்ல நண்பர்கள். இசையில் இளையராஜாவை கமல் வியந்து பார்த்தால், நடிப்பில் கமலை இளையராஜா வியந்து பார்க்கிறார். இருவரும் ஒருவரை பரஸ்பரம் புரிந்தும் வைத்திருக்கிறார்கள். பலரிடமும் சீறும் இளையராஜா கமலிடம் எப்போதும் அன்பாகவும், மரியாதையாகவே பேசுவார். அது கமல் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை.

    இளையராஜா கமல் கூட்டணி: தமிழ் சினிமா உலகம் கமலை சரியாக கொண்டாடவில்லை என சில பேட்டிகளில் இளையராஜவே சொல்லி இருக்கிறார். 80களில் கமலின் எல்லா திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜாதான். கமலின் பல படங்களுக்கு அற்புதமான மனதை மயக்கும் மெலடி பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார்.

    ஹே ராம் திரைப்படம்: அந்த பாடல்களை 70 மற்றும் 80 கிட்ஸ்கள் இன்னமும் கேட்டு ரசித்து வருகிறார்கள். கமல் இயக்கிய ஹே ராம் படத்திற்கு முதலில் வேறு ஒருவர் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், கமலுக்கு அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, இளையராஜாவிடம் போனார். ஏற்கனவே பாடல் காட்சிகளை கமல் எடுத்துவிட்டார். எனவே, எடுத்த காட்சிகளுக்கு இசையமைத்தரர் இளையராஜா.

    ராஜ பார்வை: அப்படி உருவான ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ மற்றும் ‘இசையில் துவங்குதம்மா’ போன்ற பாடல்கள் சூப்பர் மெலடி பாடல்களாக அமைந்தது. கமலின் 100வது திரைப்படம் ராஜபார்வை. கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை துவங்கி முதலில் தயாரித்த திரைப்படம் இது. இந்த படத்தில் கண் பார்வை இல்லாதவராக கமல் நடித்திருந்தார்.

    கமல் இளையராஜா கண்ணீர்: இந்நிலையில், சமீபத்தில் இளையராஜாவும், கமலும் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய கமல் ‘ராஜ பார்வை படம் உருவானபோது நானும் இளையராஜாவும் கண்பார்வையற்ற சிறுவர்கள் படிக்கும் ஒரு பள்ளிக்கு சென்றோம். நாங்கள் இருவரும் வருவது தெரிந்ததும் அவர்கள் எங்களுக்காக ஒரு பாடலை பாடினார்கள். அதைப்பார்த்து எனக்கும், ராஜாவுக்கும் கண்ணீரே வந்துவிட்டது. நான் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் திரும்பி அழுது கொண்டிருந்தோம்.

    நாங்கள் இருவரும் அழுவதை கண்டு அந்த ஆசிரியர் ஒரு சிறுவனிடம் சென்று ஏதோ பேசினார். அதன்பின் அந்த சிறுவன் எங்களிடம் ‘நான் ஒரு ஜோக் சொல்லட்டுமா?’ என கேட்க எங்களுக்கு இன்னமும் அழுகை வந்தது. எங்களால் ஆறுதல் படுத்தவே அந்த சிறுவன் ஜோக் சொல்ல வந்தாலும் அதுவே எங்களை மேலும் அழ வைத்தது’ என சொல்லி இருக்கிறார்.

    அந்தி மழை பொழிகிறது: இந்த படத்தில்தான் ‘அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்கிற அற்புதமான மெலடி பாடலை இளையராஜா உருவாக்கி ரசிகர்களுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அப்பா வச்ச பேரு இளையராஜா ஆனது எப்படி?!.. இசைஞானி சொன்ன செம ஃபிளாஷ்பேக்!…

    Ilayaraja: சினிமாவில் பெரும்பாலானோருக்கு உண்மையான பெயர் இருக்காது. கணேசன் சிவாஜி கணேசனாகவும், சிவாஜி ராவ் ரஜினியாகவும், வெங்கடேஷ் பிரபு தனுஷாகவும், சரவணன் சூர்யாவாகவும், டயானா மரியம் குரியன் நயன்தாராவாகவும் சினிமாவில் அறிமுகமானார்கள். அவர்களின் உண்மையான பெயர் பலருக்கும் மறந்துவிடும்.

    சினிமாவில் நீடிக்க வசீகரமான பெயர் முக்கியம். அதே நேரம் பெயர் அழகாகவும் இருக்க வேண்டும். சொல்வதற்கும் சுலமபாக இருக்க வேண்டும். பாரதிராஜா அறிமுகம் செய்த ராதிகா, ராதா, ரஞ்சிதா, ரேகா, ரேவதி என பலருக்கும் உண்மையான பெயர்கள் வேறு. ஆனால், அவர்கள் இப்போது வரை பாரதிராஜா வைத்த அந்த பெயரில்தான் ரசிகர்களால் அறியப்படுகிறார்கள்.

    80களில் இசை ராஜா: இசைஞானி இளையராஜாவுக்கும் அது அவரின் சொந்த பெயர் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜியம்தான் கோலிவுட்டில் இருந்தது. ரஜினி, கமல், மோகன் என அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான்.

    இளையராஜா நமது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என எல்லா தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவார்கள். எனவே, அவரின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு முன் அவருக்காக காத்திருப்பார்கள். 80களில் உண்மையான ராஜாவாகவே வாழ்ந்தார் இளையராஜா. இந்நிலையில், அவருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என பார்ப்போம்.

    அப்பா வைத்த பெயர்: ஒரு விழாவில் இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் ‘உண்மையில் எனது அப்பா எனக்கு இரண்டு பெயர்களை வைத்தார்… ஜாதகத்தை பார்த்து எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன்.. பள்ளியில் சேர்க்கும்போது சுருக்கமாக இருக்க வேண்டுமென ‘ராஜைய்யா’ என வைத்தார்.. சென்னைக்கு வந்து தன்ராஜ் மாஸ்டரிடம் இசையை கற்றுக்கொள்ளப்போனேன். அந்தகாலத்தில் எம்.எஸ்.வி. முதல் கொண்டு எல்லோருக்கும் மியூசிக் சொல்லிக் கொடுத்தது அவர்தான். அவர் என் பெயரை ராஜா என மாற்றினார். அதன்பின் அன்னக்கிளி பட வாய்ப்பு கிடைத்தபோது என் டியூனுக்காகவே பஞ்சு அருணாச்சலம் படம் எடுத்தார்.

    பஞ்சு அருணாச்சலம்: அந்த படத்திற்கு முன் கோவர்த்தன் என்பவரோடு இணைந்து வரப்பிரசாதம் என்கிற படத்திற்கு இசையமைத்தோம். டைட்டிலில் கோவர்த்தன் ராஜா என போடுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த பெயரையே நான் பஞ்சு அருணாச்சலத்திடம் சொல்ல ‘இந்த படத்துக்கு நீதான் இசையமைப்பாளர். உன் பெயரை மட்டுமே போடுவேன். ஆனால், ராஜா வேண்டாம். ஏற்கனவே ஏ.எம்.ராஜா இருக்கார். குழப்பமாக இருக்கும்’ என்றார். ‘சரி பாவலர் பிரதர்ஸ் என போடலமா?’ எனக்கேட்டேன். ஏனெனில் அந்த பெயரில் இசைக்கச்சேரிகளை நான் நடத்திக்கொண்டிருந்தேன்.

    ‘வேணாம்யா அது ரொம்ப பழசா இருக்கு.. நீ ராஜா.. ஏற்கனவே ஒரு ராஜா இருக்கார். நீ இளையராஜா’ என வைத்துவிட்டார்.. அதுவே நிலைத்துவிட்டது’ என சொன்னார் இளையராஜா. இதில் இன்னொன்றும் இருக்கிறது. அப்பா ராஜைய்யா என வைத்தால் அவரின் அம்மா கடைசிவரை ‘ராசைய்யா’ என்றுதான் கூப்பிட்டார்.