Tag: Kubera

  • 2025-ல் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்!.. முதலிடத்தில் எம்புரான்!….

    இந்தியாவை பொறுத்தவரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகி வருகிறது. சின்ன பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மொழியிலும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இதில், பெரிய நடிகர்கள் முதல் சின்ன படங்கள் வரை அடக்கம்.

    2025ல் இதுவரை 6 மாதங்கள் முடிந்திருக்கிறது. இந்த ஆறு மாதங்களில் பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அதிக வசூலை பெற்ற டாப் 10 படங்களை பற்றி பார்ப்போம். இதில் முதலிடத்தில் எம்புரான் இருக்கிறது. மலையாள படமான எம்புரானை நடிகர் பிரித்திவிராஜ் இயக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகம் போல உருவான இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 265.60 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது.

    அடுத்து தில் ராஜு இயக்கத்தில் தெலுங்கு படமாக வெளிவந்த சங்கராந்திக்கி வஸ்துனம் படம் 2வது இடத்தில் இருக்கிறது. வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து காமெடி படமாக வெளியான இப்படம் 248.15 கோடி வசூல் செய்திருக்கிறது. 3வது இடத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் சேர்த்து 245.10 கோடி வசூல் செய்தது.

    4வது இடத்தில் மோகன்லாலின் துடரும் படம் இருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த இந்த படம் 232.60 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். 5வது இடத்தில் கேம் சேஞ்சர் இருக்கிறது. தில் ராஜு இயக்கத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து உருவான இப்படம் 178.35 கோடி வசூல் செய்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    6வது இடத்தில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்து 151.85 கோடி வசூல் செய்தது. 7வது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் 138.10 கோடி வசூல் செய்தது.

    8வது இடத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான குபேரா படம் இருக்கிறது. இந்த படம் தமிழில் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்றது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 129 கோடி வசூல் செய்திருக்கிறது. 9வது இடத்தில் பாலையாவின் தெலுங்கு படமான டக்கு மகாராஜ் இருக்கிறது. இப்படம் இதுவரை 116.50 கோடி வசூல் செய்திருக்கிறது. 10வது இடத்தில் நானியின் HIT3 படம் இருக்கிறது.

    மொத்தத்தில் அதிக வசூலை பெற்ற டாப் தென்னிந்திய படங்களில் 2 மலையாள படங்களும், 5 தெலுங்கு படங்களும், 3 தமிழ் படங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • தெலுங்கு டைரக்டர்ஸ நம்பி ஹிட் கொடுத்த 3 கோலிவுட் ஹீரோக்கள்!.. குபேராவில் கலக்கிய தனுஷ்!…

    80களில் ஹிந்தியில் ஹிட் அடிக்கும் படங்களை தமிழில் எடுப்பார்கள். இப்படி பல அமிதாப்பச்சன் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினி நடித்த பில்லா கூட ஹிந்தியில் அமிதாப் நடித்த படங்களில் ஒன்றுதான். கமல் எடுத்த குருதிப்புனல் படம் கூட ஹிந்தியில் வெளியான Drohkaal படத்தின் ரீமேக்தான். அதேநேரம், ஒருகட்டத்தில் அது கொஞ்சம் குறைந்தது.

    அவ்வளவு ஏன்?.. ரஜினி அடித்த பாட்ஷா படம் கூட அமிதாப் நடித்த ஒரு படத்திலிருந்து சுட்ட கதைதான். இது ஒருபுறம் எனில், தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவு உண்டு. 80களில் நிறைய தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது.

    குறிப்பாக சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், விஜயசாந்தி, ராஜசேகர் போன்ற நடிகர்களின் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணாவின் படங்களும் தொடர்ந்து வெளியாகி வந்தது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி2, ஆர்.ஆர்.ஆர். நான் ஈ போன்ற படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது.

    அதன்பின் நடிகர் பிரபாஸின் தெலுங்கு படங்களும் தொடர்ந்து தமிழில் வெளியாகி வருகிறது. புஷ்பா, புஷ்பா 2 இரண்டு படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது. தெலுங்கு பட இயக்குனர்களின் படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெறுவதால் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவும் தமிழ் சினிமா ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில், சில நடிகர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.

    கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியவர் வம்சி. இந்த படத்தில் நாகார்ஜுனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஹிட் அடித்தது. இதே இயக்குனரை நம்பி விஜய் நடித்து வெளியான வாரிசு படமும் நல்ல வசூலை பெற்றது.

    அதேபோல், வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படமும் தமிழில் நல்ல வசூலை பெற்றது. இந்த இயக்குனர்தான் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

    அதேபோல், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவை நம்பி தனுஷ் நடித்த படம்தான் குபேரா. இந்த படத்தில் நாகார்ஜுனவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குபேரா படம் தமிழில் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட் அடித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஹிட் படமாக மாறிவிட்டது. இப்படி தனுஷ், விஜய், கார்த்தி ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களை வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தெலுங்கு இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

  • ஏன்டா டேய் எவன் கெட்டாலும் நான்தான் காரணமா? பொங்கி எழுந்த தனுஷ்..?!

    குபேரா படத்தின் ஆடியோ லாஞ்ச்ல தனுஷ் பேசிய பேச்சு பரபரப்பாக இருந்தது. அதுல தனுஷ் என்ன சொன்னாருன்னா, சேகர் கம்முலாவின் இயக்கத்தில் குபேரா படத்தின் முதல் நாள் சூட்டிங் திருப்பதி மலை அடிவாரத்தில் நடந்தது. அதுவும் பிச்சைக்காரன் கெட்டப்.

    அதுவும் பர்மிஷன் வாங்காம எடுத்தாங்களாம். கேண்டிட் கேமரா மாதிரி அங்கே இங்கே வச்சி தனுஷை பிச்சைக்காரன் கெட்டப் போட்டு கீழ்த்திருப்பதியில் படம் எடுத்தாங்களாம். அங்கே அதிகமா கூட்டம். அப்படி இருந்தும் சூட்டிங்னு தெரிஞ்சி கூட்டம் அதிகமாகி நிறைய டிராபிக்காகி சேகர் கம்முலா வருத்தம் தெரிவித்தாராம்.

    தனுஷ் ஒரு தண்ணீர் மாதிரி. எந்தப் பாத்திரத்துல ஊத்துனாலும் அந்த வடிவமா மாறிடுவாரு. வாழ்க்கையில ஏதாவது ஒரு வகையில ஜெயிக்கணும்னுதான் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்கோம். நானும் அப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கேன். சில பேரு ஜெயிக்கிறவங்களைப் பத்தி நெகடிவிட்டியா பேசணும். அவங்க மனசைக் காயப்படுத்தணும். சேத்தை அள்ளிப் போடணும். அந்தக் கூட்டம் தொடர்ச்சியாக என் மீது நெகடிவிட்டியாக சாயத்தையும், சேத்தையும் வாரிக்கிட்டே இருக்காங்க.

    எங்க அப்பா என்னை சினிமாவுக்குள்ள கொண்டு வந்தாரு. எங்க அண்ணன் எனக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் நானே கரணம் போட்டு இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன்னு தனுஷ் தெரிவித்துள்ளார்.

    ரஜினி வீட்டுல பொண்ணு கட்டுனாருன்ன உடனே இன்டஸ்ட்ரியில பலபேரும் திட்டு திட்டுன்னு திட்டினாங்களாம். இவருக்கு எப்படிய்யா பொண்ணு கொடுத்தாங்கன்னு பலரும் பேசினாங்க. தனுஷூக்கு இங்கிலீஷ் கத்துக் கொடுத்தது, 5 ஸ்டார் ஓட்டலுக்குப் போனா எப்படி நடந்துக்கணும், எப்படி டிரஸ் பண்ணனும்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் ஐஸ்வர்யாதான்.

    மகன் பட்டமளிப்பு விழாவில் இருவரும் இணைந்து போஸ் கொடுத்தாங்க. என்னதான் பிரச்சனை என்றாலும் மகன் விஷயத்தில் ஒண்ணு சேர்ந்தது சந்தோஷம். போயஸ் கார்டன்ல ரஜினிக்கு இணையாக அவரையும் தாண்டி பெரிய மாளிகையைக் கட்டிருக்காரு தனுஷ்.

    இந்த ஒட்டுமொத்த பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கடுப்பு தான் என் மீது சேற்றை வாரிப் பூசக் காரணம் என தனுஷ் சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

    இந்தப் பேச்சில் இருந்து என்ன தெரிகிறது என்றால் தனுஷ் ஏன்டா எவன் குடும்பம் கெட்டாலும் நான் தான் காரணமா? எவ்வளோடா பொய் சொல்வீங்கன்னு தனுஷ் கேட்பது போல தெரிகிறது. சமீபத்தில் விவாகரத்து பிரச்சனையில் சிக்கிய ஜெயம் ரவி, ஆர்த்தி பிரச்சனைக்கும் காரணம் தனுஷ் தான் என்று பலரும் குற்றம்சாட்டினர். அது மட்டும் அல்லாமல் இன்டஸ்ட்ரியில் இந்த மாதிரி எங்கே பிரச்சனை என்றாலும் தனுஷின் பெயர்தான் அடிபடுகிறதாம். அதற்குப் பதிலடி தான் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • ரொம்ப நாளைக்கு அப்புறம்.. கோட் சூட்டில் கலக்கும் தனுஷ்.. மும்பைனா இப்படியா?

    தனுஷ்: தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் குபேரா. இந்த படம் வரும் ஜூன் இருபதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர் வெளியானதுமே இந்த படத்தில் தனுஷின் நடிப்பு கெட்டப் என இதுவரை இல்லாத அளவு மிகவும் தனித்துவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    dhanush

    dhanush

    படத்தின் பட்ஜெட்:

    பார்ப்பதற்கு பிச்சைக்காரன் தோற்றத்தில் இருந்தார் தனுஷ். அதுவே அந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

    முதல் கூட்டணி:

    படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் தனுஷ் இந்த படத்திலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக நாகர்ஜுனாவுடன் தனுஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாகர்ஜுனாவுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    உண்மையிலேயே குபேராவாக வந்த தனுஷ்:

    ஏற்கனவே நாகர்ஜுனா கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தோழா. இப்போது வரை அனைவருக்கும்மான ஃபேவரைட் திரைப்படம். அந்த வகையில் இப்போது தனுசுடன் நாகர்ஜுனா இணைந்து நடிப்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் எந்த ஒரு விழாவுக்கு போனாலும் குறிப்பாக அவருடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவை உற்று நோக்கி பார்த்தால் பெரும்பாலும் அவர் வேட்டி சட்டையுடன் தான் இருப்பார்.

    கழுத்தில் கரு நிற மாலை, வேட்டி சட்டை என பார்ப்பதற்கே தமிழ்நாட்டு பாரம்பரியத்தை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் விதமாக அவருடைய உடை இருக்கும். அப்படித்தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் வேட்டி சட்டையுடன் வந்து உற்சாகப்படுத்தினார் தனுஷ். இப்போது இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கோட் சூட்டுடன் வந்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் தனுஷ். பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போலே காட்சியளிக்கிறார்.


  • புலி போல நடக்கச் சொன்னார் லோகேஷ் கனகராஜ்!.. கூலி பட அனுபவம் பகிர்ந்த குபேரா நடிகர்!..

    டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா தற்போது கூலி, குபேரா போன்ற தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜூனா ஒரு முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திலும் நாகார்ஜூனா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, அமீர் கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கூலி ஆகஸ்ட் 14, 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகளவில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.

    நாகார்ஜூனா தனது இளைய மகன் அகில் அக்கினேனி திருமண கொண்டாட்டத்தில் பிஸியாக இருந்த நிலையில் பேட்டி அளித்த அவர், லோகேஷ் கனகராஜ் மிக அற்புதமான குணம் கொண்டவர், அவர் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களை எடுத்துக்கொண்டால் படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பிரம்மிப்பாக இருக்கும், அதுவும் விக்ரம் படத்தில் ஃபஹத், விஜய் சேதுபதி மற்றும் ஏஜென்ட் டீனா கேரக்டர் எல்லாம் பார்க்க வியப்பாக இருந்தது. அதை தொடர்ந்து கூலி படத்தில் ரஜினிகாந்தை தவிர உபேந்திரா, அமீர் கான், நான் என பலருக்கும் நல்ல கேரக்டர் உண்டு, எங்களுடைய கதாப்பாத்திரங்கள் படத்திற்கு ஒரு ட்ரம்ப் கார்டாகவும் தனித்துவமாக தெரியும் வகையில் அவர் இப்படத்தை இயக்கியுள்ளார் என பேசியுள்ளார்.

    மேலும், புலி போல தன்னை நடந்து வரச் சொன்னார் என்றும் படம் முழுக்க விசில், விசில், விசில் சத்தம் காதை கிழிக்கப் போகுது என்றும் கூலி படத்துக்கு செம ஹைப் ஏற்றியுள்ளார்.

  • வாய் ஏன் ஒரு சைடா வாங்குது.. தனுஷ் முழுசா ரஜினியா மாறிய தருணம்..

    குபேரா:

    தனுஷ் நடிப்பில் அடுத்த வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் குபேரா. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கி இருக்கிறார். தெலுங்கில் 13 படங்களை இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்த திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தீவிரமான புரோமோஷன்:

    ராஷ்மிகா மந்தனா படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கின்றது. வரும் இருபதாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை, ஹைதராபாத், மும்பை என அனைத்து ஊர்களுக்கும் பட குழு சென்று படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

    பதிலடி கொடுத்த தனுஷ்:

    அந்த வகையில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதற்கு முன்பு வரை தனுஷை பற்றி பல சர்ச்சைகளும் வதந்திகளும் வந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் கேட்டுவிட்டு அமைதியாக இருந்த தனுஷ் இந்த மேடையில் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

    dhanush

    dhanush

    கம்பேனியன்ஸ்:

    நம்மைப் பற்றி ஏதாவது உருட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். அதையெல்லாம் பற்றி நாம் கவலை பட கூடாது .தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா. இந்த சர்க்கஸ் எல்லாம் வேண்டாம். இங்க இருக்கிறவர்கள் அனைவரும் என்னுடைய ரசிகர்கள் மட்டும் கிடையாது 23 வருடங்களாக என் கூடவே வந்த என்னுடைய கம்பேனியன்ஸ். என்னுடைய வழி துணை.

    செங்கலை கூட ஆட்ட முடியாது:

    நீங்க சும்மா நாலு வதந்தியை பரப்பி இத காலி பண்ணிடனும்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமே கிடையாது. ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது என்று அந்த மேடையில் பேசியிருந்தார். ஆக்ரோஷமாக அவர் பேசியிருந்தாலும் அவருடைய இந்த பேச்சையும் பேசிய விதத்தையும் ரசிகர்கள் ரஜினியுடன் ஒப்பிட்டு தனுஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    ரஜினி மாதிரி வாயை கூட ஒரு சைடுல வச்சு பேசுறாரே எனக் கூறி வருகின்றனர். தனுஷின் சமீப கால பேச்சுக்கள் ரஜினியை பின்பற்றுவது மாதிரியே தான் இருந்தது. ஆனால் குபேரா ஆடியோ விழாவில் இதுவரை இல்லாத வகையில் தனுஷ் அவருடைய வாயை கூட ஒரு சைடாக ரஜினி மாதிரியே தூக்கி வைத்து பேசினார். அது இப்போது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வீடியோவை பார்க்க: https://x.com/VinodhRavi4/status/1934967487403372730

  • கிளைமேக்ஸ்ல கண்ணீர் வந்துடும்!.. அதர்வாவின் ‘டிஎன்ஏ’ வேறலெவல் மாஸ்டர்பீஸ்!.. விமர்சனம் இதோ!..

    ஒரு நாள் கூத்து படத்தை இயக்கி பலரையும் ஷாக் ஆக்கிய நெல்சன் வெங்கடேஷ் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கரை வைத்து மான்ஸ்டர் எனும் எலி படத்தை இயக்கி பலரையும் ரசிக்க வைத்தார். அதன் பின்னர், ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவனை வைத்து அவர் இயக்கிய ஃபர்ஹானா திரைப்படமும் திடுக்கிட வைத்த படமாகவே அமைந்தது.

    அந்த வரிசையில் தற்போது அவர், அதர்வா, நிமிஷா சஜயனை வைத்து இயக்கியுள்ள படம் தான் டிஎன்ஏ. தனுஷின் குபேரா படத்துக்குப் போட்டியாக நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் பிரஸ் ஷோ போடப்பட்ட நிலையில், அந்த படத்தின் விமர்சனம் இதோ உங்களுக்காக..

    மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி பல ஆண்டுகளாக ஒரு நல்ல படத்தையாவது கொடுத்து விட முடியாதா என போராடி வருகிறார். ஆரம்பத்தில் சமந்தாவுடன் பாணா காத்தாடி, அமலா பாலுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் என நடித்து வந்தார்.

    பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் வேதாகவுடன் இணைந்து நாமும் ஒரு சீயான் விக்ரம் ஆகிவிடுவோம் என உழைத்த உழைப்பெல்லாம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால், இப்போ அவர் சரியான கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்து பெரிய பெரிய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார்.

    மலையாள நடிகையான நிமிஷா சஜயன் தமிழ் சினிமாவில் நடிக்க நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். திவ்யா எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் அவர் அதர்வாவையே தூக்கிச் சாப்பிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஆனந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதர்வா, தனது முதல் காதல் தோல்வியால் தாடி வளர்த்த இதயம் முரளியாக வலம் வர, அதன் பின்னர், நிமிஷா சஜயனை திருமணம் செய்த பின்னர், அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், மருத்துவமனையில் குழந்தை மாறிவிட்டதாக மனைவி சொல்லும் போது, என்ன செய்வதென்றே தெரியாமல், அதன் பின்னால் இருக்கும் மாஃபியாவை துரத்தி பிடிக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் இடங்களில் அதர்வா அதிகம் ஸ்கோர் செய்கிறார்.

    இந்த இரண்டு பேர் மட்டுமின்றி படத்தில் நடித்துள்ள டைரக்டர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன் என அனைவரும் தங்கள் பங்குக்கு நிறைவான நடிப்பை தந்து படத்தை பலப்படுத்துகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் சிறிய பட்ஜெட் படங்கள் சிறப்பாக வந்து தமிழ் சினிமாவை காப்பாற்றி வரும் நிலையில், இந்த மாதம் அந்த வேலையை இந்த டிஎன்ஏ செய்யும் என்றே தெரிகிறது. படம் கடைசி வரை வொர்த்தாகவு, கிளைமேக்ஸ் காட்சியெல்லாம் கண்கலங்கவும் வைத்து விடுகின்றன.

    டிஎன்ஏ ரேட்டிங்: 3.75/5.

  • குபேராவா?.. கூலியா?!.. கன்பியூஸ் ஆன நாகார்ஜுனா !.. அப்செட் அன தனுஷ் .

    Kubera Coolie: தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா நடிகர்களுக்கு நன்றாகவே பரிட்சயம் ஆனவர் நாஜார்ஜுனா. ஏனெனில், உதயம், இதயத்தை துள்ளாதே, ரட்சகன், தோழா போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர். சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். எனவே, தமிழ் நன்றாகவே பேசுவார். மேலும், சமந்தாவின் முன்னள் மாமனார் இவர். அந்த வகையிலும் இவர் கோலிவுட் ரசிகர்களுக்கு நெருக்கமானவர்தான்.

    இப்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் ஒரு நல்ல இயக்குனராக பார்க்கப்படுபவர். குபேரா ஒரு சோஷியல் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

    இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் வருகிற 20ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

    எனவே, படக்குழு தொடர் புரமோஷன்களில் ஈடுபட்டிருக்கிறது. மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் படக்குழு ரசிகர்களை சந்தித்து பேசியது. இதில், தனுஷ் தன்னை பற்றி மோசமாக விமர்சைப்பவர்கள் பற்றி பேசினார். என் ரசிகர்கள் இருக்கும்வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என பன்ச் வசனமெல்லாம் பேசினார்.

    ஒருபக்கம், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார் என்பதான் இப்போது ஹாட் டாப்பிக். லோகேஷுக்கும், ரஜினிக்கும் அதிக ரசிகர்கள் என்பதால் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான். குபேரா பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நாகார்ஜுனாவிடம் கூலி பற்றிய கேள்விகளே அதிகம் கேட்கப்படுகிறது.

    எந்த யுடியூப்பிற்கு அவர் பேட்டி கொடுத்தாலும் கூலி படம் பற்றிய அதிக கேள்விகள் கேட்கிறார்கள். அவரும் முடிந்த அளவுக்கு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவிலும் கூலி பற்றி நிறைய பேசினார். அப்போது தனுஷின் முகமே மாறியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. மொத்தத்தில் குபேரா பட புரமோஷனை நாகார்ஜுனா கூலி பட புரமோஷனாக மாற்றிவிட்டார். இதில் தனுஷே கொஞ்சம் அப்செட் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

  • குபேரா எப்படி இருக்கு? தனுஷ், பாக்கியராஜ் பற்றி யாருக்கும் தெரியாத தகவலைச் சொன்ன பயில்வான்…!

    தனுஷ் நடித்த குபேரா படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா…

    குபேரா படத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேகர் கம்முலா கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். தனுஷ் நடித்த முதல் தெலுங்கு படம் இதுதான். தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது.

    தனுஷூக்குத் தாய்மொழி தெலுங்கு. அவர் அழகா தெலுங்கு பேசுவார். தனுஷ் முதல் முறையாக இந்தப் படத்தில் பிச்சைக்காரனாகவே வாழ்ந்து இருக்கிறார். பிச்சைக்காரனாவே வாழணும். அந்த டிரஸ்தான். குளிக்க முடியாது. சாப்பிட முடியாது. நாத்தம் புடிச்ச அந்த டிரஸ்சைப் போட்டுத்தான் நடிக்கணும்.

    அவ்ளோ பெரிய நடிகர். அப்படியே வாழ்ந்து இருக்கிறார். அதனால பிச்சைக்காரனா நடிக்கிறது பெரிய விஷயம். தனுஷ் பிச்சைக்காரனாவே வாழ்ந்து இருக்கிறார். வழக்கமா குத்து, வெட்டுன்னு பார்த்தவங்களுக்கு இது புதுசா இருக்கும். ஆனா படம் ஸ்லோவாகத் தான் போகுது. முதல்ல இந்தப் படம் மூன்றரை மணி நேரம் ஓடுச்சு. அப்போ எழுந்த நெகடிவ் விமர்சனத்தால் 3 மணி நேரமாக இயக்குனர் குறைத்து விட்டார்.

    இந்தப் படத்தின் முக்கியமான திருப்புமுனை ராஷ்மிகா மந்தனா கேரக்டர்தான். நாகர்ஜூனா இந்தப் படத்தில் தனுஷ் எங்கெங்கே மாட்டிக்கிடுவாரோ அங்கெல்லாம் வந்து நிற்கிறது அவர்தான். அவர் வில்லனா, நல்லவனான்னு தெரியாது. சேகர் கம்முலாக்குத் தான் தெரியும். நாகர்ஜூனா தனுஷை இசை விழாவில் பாராட்டியுள்ளார்.

    படத்தில் வில்லன் வெப்சீரிஸில் நடித்துள்ளார். ஹீரோ மாதிரியாகவே இருக்கிறார். ஒரு பிச்சைக்காரனுக்கு என்னடா வில்லன்னு கேட்கலாம். இருக்கு. அதுலதான் மேட்டர் இருக்கு. பாக்கியராஜ் இப்போது படங்கள் இல்லை. ஆனாலும் இதுல ஒரு சின்ன கேரக்டர்ல பேசக்கூடிய அளவில் நடித்துள்ளார்.

    இவரும் ஒரு தெலுங்கர் தான். இந்தி வில்லன்கூட போட்டுருக்காங்க. இந்தப் படத்தில் ஆன்மிகத்தைப் புகுத்தி இருக்காங்க. ஆன்மிகத்தினால் வெற்றி உண்டுன்னும் சொல்லிருக்காங்க. தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். அவரது வழக்கமான சேட்டைகள், குறும்புகள் இந்தப் படத்தில் இல்லை. பாடல்கள் சுமார்தான்.

    பின்னணி இசை சூப்பர். பட்ஜெட் 120 கோடி. 200 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிவிட்டது. தனுஷ் ஈசியா தெலுங்கு மார்க்கெட் போவார். அதற்கான வாய்ப்புகள் அதிகம். பணம் மனிதரால் படைக்கப்பட்டது. சரியான நேரத்தில் பணம் நண்பனாகும். எதிர்பாராத நேரத்தில் எதிரியாகும். பணத்தால் உயிர் வாழ வைக்க முடியாது.

    பணத்தால் நிர்கதியாகும் சூழலும் உருவாகும். குபேரனா இருப்பவன்கூட சில நேரத்துல பிச்சைக்காரனாகத்தான் வாழ்வான். மதிப்பு இருக்கும்போது அது ரூபாய். இல்லன்னா வெற்றுக்காகிதம் என்ற மிகப்பெரிய தத்துவத்தைப் படத்தில் சொல்லி இருக்காங்க. யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படம்.

    அரசியல்வாதிகள் இப்போ எப்படி நடந்துக்கிட்டு இருக்காங்களோ அதை திரையில் பார்க்கலாம். விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரனும், குபேராவில் வரும் பிச்சைக்காரனும் வேற வேற. இப்ப நாட்டுல நடக்குற அரசியல எடுத்துருக்காங்க. மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • kubera: குபேரா கையில தான் இருக்கு இட்லிகடையோட அமோக வியாபாரம்… ஆனா அது ஒண்ணுதான் இடிக்குது!

    சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் தனுஷ் முதன்முறையாக பிச்சைக்காரன் வேடத்தில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.

    குபேரா கிட்டத்தட்ட 3 வருஷமா இந்த புராஜெக்ட் போய்க்கிட்டு இருக்கு. மணிரத்னம், ராஜமௌலி மாதிரி இயக்குனர்கள் ட்ரெண்ட்செட்டை உருவாக்குனாங்க. சேகர் கம்முலா ஒரு ஃபீல் குட் இயக்குனர். 3 மணி நேரம் 15 நிமிடம் இந்தப் படத்தோட ரன்னிங் டைம். இதுக்கு 2 இன்டர்வெல் விடணும்னு எல்லாம் ஒரு பேச்சு எழுந்தது.

    இன்னைக்கு உள்ள காலகட்டத்துல என்னதான் படத்தை செதுக்கினாலும் மூணேகால் மணி நேரம் படத்துல உட்கார வைக்கிறது சோர்வை உண்டாக்கும். ஆனா இந்தப் படத்தைப் பார்த்தவங்க ஒரு நாவல் படித்த மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா இவங்களைச் சுற்றித்தான் கதை.

    தனுஷைப் பொருத்தவரை ஒரு பிச்சைக்காரன். இவர் மிகப்பெரிய இடத்தில் உள்ள ஆளை எப்படி ஆட்டுவிக்கிறான்கறதுதான் கதை. மாஸ்டர் மைன்ட் உள்ள ஒரு நபர். பிளாக் மணியை மாத்துற இடம் வரைக்கும் தனுஷ் போகிறார். ஒரு சாதாரண நபருக்கு உச்சக்கட்ட பணம் வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. படத்துல ஒரு சீனைத் தூக்கினாலும் மொத்தமா தூக்க வேண்டி இருக்குமாம்.

    ஒவ்வொரு சீன்லயும் டீட்டெய்ல் இருக்குதாம். இது பிளாக் மணியைப் பற்றிய ஒரு கதை. பல ரியல் லைஃப்ல உள்ள தொழில் அதிபர்கள், பண முதலைகள் கதை கூட அங்கங்கே வச்சிருக்காங்க. பல ஆயிரம் கோடி வாங்கிட்டு வெளிநாட்டுக்குப் போனாங்க. அதெல்லாம் அங்கங்கே வச்சிருக்கறதால படத்தைப் பார்க்க ஒரு ஆர்வம் வரும்.

    என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனுஷ் தெளிவா பண்ணக்கூடியவர். அசுரன், ராஞ்சனா படங்களைப் பார்த்தாலே தெரியும். இந்தப் படம் தெலுங்குல தனுஷூக்கு பெரிய ஓபனிங் கொடுக்கும். இது ஹிட்டானா தனுஷ் நடிக்கும் தமிழ் படங்களும் தெலுங்குல பெரிய பிசினஸைத் தரும். இட்லி கடைக்கும் நல்ல பிசினஸ் அங்க கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் சுபையர் தெரிவித்துள்ளார்.