Tag: Kubera

  • விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்.. நாகார்ஜுனா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

    குபேரா படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்ல புறப்பட்டனர். அப்போது நாகார்ஜுனா விமான நிலையத்திற்குள் வரும்போது விமான நிலைய ஊழியர் ஒருவர் நாகார்ஜுன் அருகே வந்து அவரை சந்திக்க முயற்சி செய்தபோது உடனடியாக நாகார்ஜுனாவின் பாடிகாட் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாமல், அந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் நாகார்ஜுனா திமிராக நடந்து சென்றார் என வீடியோக்கள் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் நாகார்ஜுனா அந்த நபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: காதும் காதும் வச்ச மாதிரி நடந்த சந்திப்பு! பெரிய நடிகருடன் காதல் வயப்பட்ட மீனா?..

    அதன் பின்னர் நாகர்ஜுனா நடிகர் தனுஷை விமான நிலையத்தில் சந்தித்து தனுஷ் மற்றும் அவரது மகன் லிங்கா உடன் பேசிக்கொண்டு செல்லும் வீடியோக்களும் வைரல் ஆகின. இந்நிலையில், சோசியல் மீடியாவில் அந்த வீடியோ வைரலானதை அறிந்து கொண்ட நாகார்ஜுனா அதுதொடர்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோல இது நடக்காது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நாயகன் படத்துக்கு முன்னோடி எந்தப் படம்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கே போய் சுட்டுருக்காங்கன்னு பாருங்க…!

    பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடி்ப்புக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    நடிகர் நாகார்ஜுனா சோசியல் மீடியாவின் அந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்ட நிலையில், அவரது ரசிகர்கள் நாகார்ஜுனாவின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர். தமிழில் ரட்சகன், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜுனா தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் தனுஷின் குபேரா படத்தில் பணக்காரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷ் பிச்சைக்காரராக நடித்து வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது.

    இதையும் படிங்க: அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

  • கண்டெய்னர் ஃபுல்லா பணம்!.. தனுஷின் குபேரா படத்தின் கதை இதுதானா?.. லீக் பண்ண போஸ்டர்?..

    டோலிவுட்டு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் குபேரா படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

    நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். முன்னதாக தெலுங்கு இயக்குனருடன் இணைந்து வாத்தி படத்தில் தனுஷ் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ அதே அளவுக்கு வாத்தி திரைப்படம் தெலுங்கிலும் வரவேற்பு பெற்றது.

    இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?

    வாத்தி படத்துக்கு முன்பாகவே சேகர் கமுலா இயக்கத்தில் நடிப்பதற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த படம் தற்போது பரபரப்பாக சூட்டிங் செய்யப்பட்டு வருகிறது. நாகார்ஜுனாவின் பிறந்தநாள் கூட இன்று இல்லை ஆனால் திடீரென அவரது கேரக்டர் போஸ்டரை வெளியில போவதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    ஒரு கண்டெய்னர் முழுக்க குவியல் குவியலாக படம் கொட்டிக்கிடக்க சந்தோசம் இல்லாமல் கொட்டும் மழையில் குடையை பிடித்துக்கொண்டு பணத்தின் பக்கம் பார்க்காமல் திரும்பி நிற்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இது செம ஆஃபரே இருக்கே!. வாயடைத்து போன மகாநதி சீரியல் நடிகை!.. வீடியோ பாருங்க!..

    முன்னதாக வெளியான தனுஷ் போஸ்டரில் பிச்சைக்காரன் போல இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருந்தனர். இந்த இரண்டு போஸ்டர்களையும் படத்தின் டைட்டிலும் வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட கதை இதுவாகத்தான் இருக்கும் என யூகிக்க முடிகிறது.

    பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ் நாகார்ஜுனாவை சந்தித்து அவரது பிரச்சனைகளை சரிசெய்து எப்படி பணக்காரன் ஆகிறார். எப்படி குபேரன் ஆகிறாள் என்பதுதான் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

    இதையும் படிங்க: டாடா படத்திலும் அந்த பிரச்னை இருந்துச்சு… உடைத்த கவின்.. என்னங்க வாரிசு இயக்குனரையே அசிங்கப்படுத்திட்டீங்க…

  • பிச்சைக்காரராக தனுஷ்!… சண்டை செய்யும் உச்ச நடிகர்… குபேரா படத்தின் கதை இதுதானா?

    Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸாக இருக்கும் குபேரன் படத்தின் முக்கிய தகவல்கள் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. கேப்டன் மில்லரின் தோல்வியை தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை சமாதானம் செய்யும் நோக்கில் தனுஷ் பழைய பன்னீர்செல்வமாக களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.

    நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் நடிப்பிற்காக மிகவும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களிலேயே நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டுவிட்டார். தொடர்ச்சியாக கமர்ஷியல் நாயகனாகவே வலம் வந்தார்.

    இதையும் படிங்க: திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…

    அவர் நடிப்பில் வெளியான அசுரன், வாத்தி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் தனுஷ் சமீபகாலமாக தன்னுடைய பார்மில் இல்லை என்று தான் கூற வேண்டும். அவர் நடிப்பில் கடைசியான வெளியான கேப்டன் மில்லர் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது.

    தற்போது தனுஷ் ராயன் படத்தினை இயக்கி இருக்கிறார். அதை தொடர்ந்து தன்னுடைய அக்கா மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை இயக்க இருக்கிறார். இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகும் 51வது படத்துக்கு குபேரன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷூடன், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையும் படிங்க: எல்லா படத்திலையும் செஞ்சாச்சு… இதுலையா மிஸ் பண்ணுவாரு.. விஜயின் பக்கா ப்ளான்!.

    இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக தோன்றி அரசியல்வாதியாக மாறும்படி கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம். மேலும், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நாகர்ஜூனா நடிக்க இருக்கிறார். இருவருக்குமான மோதலே படத்தில் முக்கிய இடம் பிடிக்க இருக்கிறது. இப்படத்தில் தனுஷின் லுக் இதுவரை இல்லாத அளவு இருக்குமாம்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தினை இந்த வருடத்தின் இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சில தினங்கள் முன்னர் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கார்த்தியை கைது செய்த போலீஸ்!.. இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்!.. நடந்தது இதுதான்!..