Tag: Santhanam

  • ஆர்யா காசுல ஜோரா புது வீடே கட்டிட்டாரே சந்தானம்!.. சிறப்பாக நடைபெற்ற புதுமனை புகுவிழா!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில் சந்தானம் தனது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் சச்சின், பொல்லாதவன், பில்லா, அழகிய தமிழ் மகன், சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

    முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தயாரிப்பாளராகவும், கிக் என்ற படத்தில் பாடகராகவும் அவதாரமெடுத்தார்.

    சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ லாஞ்சில் சந்தானம் நான் புதுசா வாங்குன வீடு நல்லாவே இல்லைன்னு சொல்லி, ஆர்யா அந்த வீட்ட இடிச்சிடுன்னு சொல்லி இடிச்சிட்டான், எங்க அம்மாவும் மணைவியும் வெள்ளிக்கிழமையான விளக்கு ஏத்த அந்த வீட்டுக்கு போவாங்க , அப்படி அவங்க போயிட்டு வீட காணும்னு தேடிட்டு இருந்தாங்க என பேசியிருந்தார்.

    இந்நிலையில் இடிச்ச இடத்தில் ஒரு புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையே நடத்தியுள்ளார் சந்தானம். அவர் கோமாதா பூஜை செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தை வைத்து ஆர்யா டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்தது மட்டுமின்றி சந்தானத்தின் கடன் சுமைகளையும் போக்கியிருந்தார்.

  • சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் சென்ற மே மாதம் 16ம் தேதி வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் வசூலை அள்ளியது. இந்iநிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒடிடி ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக நீக்கப்பட்டது.

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராகவும் இப்படத்தில் ஒரு முகம் தெரியாத இயக்குனர் அழைத்ததற்காக மர்மமான திரையரங்கிற்கு செல்கிறார். பின்னர் திரைப்படம் தொடங்கியதும் சந்தானமும் அவர் குடும்பமும் படத்திற்குள் மாட்டிக்கொள்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்ற, மர்மமான புதிர்களை தீர்த்து, ஆவியின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்று கதை செல்கிறது. இப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் திரைப்பட விமர்சகர்களை கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், ஓடிடி ரசிகர்களுக்கு நல்லாவே இந்த படம் வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆபாச காட்சிகள் பெரிதாக ஏதுமில்லை.

  • இப்படி டீல்ல விட்டாரே!.. சிம்புவை நம்பி எல்லாம் போச்சே!.. புலம்பும் சந்தானம்..

    Actor Santhanam: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் மன்மதன் படத்தில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார் சந்தானம்.

    சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் சந்தானத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. எனவே, சிம்பு, ஆர்யா, ஜீவா, கார்த்தி, சூர்யா, விஷால் போன்ற இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சந்தானம்தான் காமெடி என்கிற நிலை உருவானது. இதுபோக விஜய், அஜித் படங்களிலும் நடித்தார்.

    காமெடியனாக நன்றாக போய்க்கொண்டிருந்தபோது இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவு செய்தார். ஆனால், அப்படி 10 படங்களுக்கு மேல் நடித்தும் சந்தானத்தால் ஒரு முன்னணி ஹீரோவாக மாறமுடியவில்லை. ஏனெனில், சந்தானத்தை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்கவில்லை. தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள் மட்டும் ஓடியது.

    ஆனாலும், நடித்தால் ஹீரோ என்கிற முடிவிலேயே இருந்தார். இந்நிலையில்தான் சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் நடிக்க ஒப்புகொண்டார். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புகொக்ண்டார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே அவர் நடிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களின் சம்மதிக்க வைத்ததாகவும் சொன்னார் சந்தானம்.

    குட் நைட் பட இயக்குனர் ராம்குமார் இப்படத்தை இயக்கவதாக இருந்தது. ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போய்விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். சிம்புவை நம்பி மற்ற படங்களின் தேதியை இதற்கு கொடுத்தால் இப்போது இப்படி ஆகிவிட்டதே என சந்தானம் அப்செட்டில் இருக்கிறாராம்.

  • 10 கோடி கொடுத்தாலும் நோ சொன்ன சந்தானம்… சிம்புவுக்கு மட்டும் ஓகேன்னா சும்மாவா?

    சந்தானம், ஆர்யா, சிம்பு இருக்குற மேடையில நெகிழ்ச்சிகரமான பல சம்பவங்கள் பேசப்பட்டன. சமீபத்தில் நடந்த பட விழாவில் சந்தானம் பேசியது நெஞ்சைக் குளிரச் செய்தது. அது இதுதான். நான் வந்து லொள்ளு சபால நடிச்சிக்கிட்டு இருக்கேன். அது மிகப்பெரிய ஹிட். அதுக்கு ஒரு ஆடியன்ஸே இருக்காங்க. அப்போ சிம்பு படத்துல நடிக்கும்போது லொள்ளு சபா போடுற நேரம் சூட்டிங்கை பிரேக் பண்ணிட்டு டிவி முன்னாடி உட்கார்ந்துடுவாராம்.

    கொஞ்ச நேரம் சிரிச்சிப் பார்த்துட்டு திரும்ப சூட்டிங்குக்கு வந்துடுவாராம். வந்ததும் மன்மதன் படத்துல யாரை காமெடியனா போடலாம்னு டிஸ்கஷன் நடந்துக்கிட்டு இருந்தது. அப்போ வடிவேலு பீக்ல இருக்காரு. அப்போ சிம்புவுக்கு லொள்ளுசபா சந்தானம் மைன்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. அவரு பேரை சொன்ன போது என்னங்க உங்க முடிவு?

    வடிவேலுவை போட்டா வியாபாரம் நல்லா போகும். புதுமுக நடிகரைப் போட்டா யாரு பார்ப்பா? ரிஸ்க் எடுக்காதீங்கன்னு நிறைய பேரு சிம்புகிட்ட சொல்றாங்க. இல்லங்க. இந்த நபர் பக்காவா பண்ணுவாருன்னு சிம்பு சொல்றாரு. அவ்வளவு எதிர்ப்புக்கு இடையிலேயும் மன்மதன் படத்துல நடிக்க வச்சாரு சிம்பு.

    சந்தானம் முதன் முறையா பெரிய ஸ்க்ரீன்ல வரப்போறாரு. அதுவும் சிம்புவோட மன்மதன் படம். அவரை சாதாரணமா காட்டக்கூடாது. அவரு வரும்போதே கிளாப்ஸ் வாங்கணும். அப்படிங்கறதுக்காக பாபி பாபி பாபின்னு ஒரு டயலாக் வச்சி அவருக்கு இன்ட்ரோ கொடுத்தாராம் சிம்பு.

    அந்த நன்றிக்கடன் தான் இன்னைக்கு சிம்பு என்ன சொன்னாலும் கேட்பேன்னு சந்தானம் சொல்றாரு. சிம்பு கூப்பிட்டதால அவரோட 49வது படத்துல சந்தானம் நடிக்க சம்மதிச்சிருக்காரு.

    சந்தானம் தொடர்ந்து காமெடியன்ல இருந்து ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல அவரு படங்கள் சரியா ஓடல. அந்த நேரத்துல ஒரு தயாரிப்பாளர் வந்து 10 கோடி தாரேன். ஒரு பெரிய நடிகர் படத்துல காமெடி ரோல் பண்ணுங்கன்னு சொல்றாரு. ஏற்கனவே இவர் ஹீரோ படங்களில் கமிட்டாகி இருந்ததால அவர் அதுக்கு மறுத்துட்டாரு.

    அவர் நினைச்சிருந்தா அதை ஒத்துக்கிட்டு பல கடன்களை அடைச்சிட்டு நிம்மதியா தொடர்ந்து காமெடியனா நடிச்சிருக்க முடியும். ஆனாலும் அவர் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களைக் கைவிடல. இன்னைக்கு வரைக்கும் சந்தானம் பற்றி அவரு கூட இருந்த எல்லாரும் அவரு பேரைச் சொல்லக் காரணம் அவர் செஞ்ச உதவிதான்.

    என்னன்னா அப்போ அவரு நடிக்கிறதுக்கு தினமும் 15 லட்சம் கொடுப்பாங்களாம். அதுல பெரும் தொகையை அவரு கூட இருந்தவங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துடுவாராம். அதனாலதான் இன்னைக்கும் அவரைப் போற்றிப் புகழ்றாங்க. சிம்புவுக்கு இப்போ ஒரு வெற்றி அவசியம். அது எஸ்டிஆர் 49 ஆ கூட இருக்கலாம்.

    இன்னைக்கு ஒரு வெற்றி அவசியம் தேவை. தமிழ்சினிமாவுல காமெடிக்கு பெரிய வறட்சி. அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர் ஆர்யா. அந்தவகையில சந்தானம் என்றென்றும் நன்றி மறக்காதவர். இதற்கிடையில் அஜித் விடாமுயற்சி படத்துக்காக சந்தானத்தை நடிக்கக் கேட்டாராம். அதுக்கு சந்தானமும் ஓகே சொல்லிருக்காரு. அப்போ அது விக்னேஷ் சிவன் கையில இருந்ததாம். அதுக்கு அப்புறம் கதை எல்லாம் மாற்றி மகிழ்திருமேனி கைக்குப் போய் வேற மாதிரி ஆனது.

  • காமெடியன் டூ ஹீரோ.. ஒரே நாளில் ரிலீஸாகும் சூரி, யோகிபாபு, சந்தானத்தின் படங்கள்

    தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோக்களாக பல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானம் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சிக்கு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதன் பிறகு மன்மதன் படத்தின் மூலமாகத்தான் காமெடியனாக அறிமுகமானார். சிம்பு தான் இவரை முதன் முதலில் வெள்ளி திரையில் அறிமுகம் செய்து வைத்தது.

    dd

    dd

    அதிலிருந்து தொடர்ந்து சிம்புவின் படங்களில் காமெடியனாக நடித்து அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து இவருடைய காமெடியும் வொர்க் அவுட் ஆக தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் சந்தானம். ஹீரோ கால்சீட் கிடைக்கிறதோ இல்லையோ சந்தானத்தின் கால்ஷீட் கிடைப்பதே மிகவும் அரிதாக இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தானும் ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில் ஹீரோவாக களமிறங்கினார் சந்தானம்.

    yogibabu

    yogibabu

    ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுக்க சமீப கால படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை .இந்த நிலையில் அவர் மீண்டும் காமெடியனாக சிம்புவின் 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதைப்போல சூரியும் ஆரம்பத்தில் காமெடியனாக இருந்து விஜய் அஜித் என அனைத்து ஹீரோக்களுடனும் நகைச்சுவை செய்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறக்கினார் .அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய சூரியும் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதேபோல யோகி பாபுவும் காமெடியில் கலக்கி வந்தாலும் கதையின் நாயகனாக ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார் யோகி பாபு .

    maaman

    maaman

    இந்த நிலையில் மே 16ஆம் தேதி இந்த மூன்று ஹீரோக்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. சூரி நடிக்கும் மாமன் திரைப்படமும் சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் யோகி பாபு நடிக்கும் ஜோரா கைய தட்டுங்க திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக ஜொலித்து வரும் இந்த மூன்று நடிகர்களும் ஒரே தேதியில் போட்டி போடுவது இதுதான் முதல் முறை. இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • விரைவில் சூரி, சந்தானம் படம் மோதல்… ஜெயிக்கப் போவது யாரு?

    நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவான வரிசையில் சூரி, சந்தானம் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் முதலாவதாக ஹீரோவானவர் சந்தானம். ஆனால் அவர் வழி ஹீரோவானாலும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் சூரியோ ஆக்ஷன் ஹீரோவாகி விட்டார். விடுதலை படத்தில் வித்தியாசமான சூரியைப் பார்க்க முடிந்தது. அந்த வகையில் இருவருடைய படங்களும் வரும் 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயிக்கப் போவது யாருன்னு பார்க்கலாம்.

    மே 16ல் சூரி நடித்த மாமன் படம் வருகிறது. சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வருகிறது. சந்தானம் படம் அதிரிபுதிரி காமெடியா இருக்கும்னு சொல்றாங்க. அந்த டீமே அவ்ளோ ஹேப்பியா இருக்கு. புரொமோஷன் நிகழ்ச்சியில நாங்க டென்ஷனாவே இருந்தது இல்லை. ஒர்க்கையே ஜாலியா தான் செய்வோம்னு சந்தானம் சொன்னாரு.

    அந்தப் படத்துக்கு சிம்பு புரொமோஷனுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினதும், சந்தானம் சிம்புவுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து வர்றாரு என்பதையும் மேடையில் பார்க்க முடிந்தது. ஒரு காமெடி படம்னா ஒரே படத்தை 3 தடவை பார்க்கற மாதிரி இருக்கும். ஏற்கனவே சந்தானத்தின் டிடி படம் ஹிட். இதுவும் ஹிட் அடிக்கும்னு தெரியுது.

    சந்தானம், ஆர்யா நட்பு தொழில் முறையையும் தாண்டியது. டிடி நெக்ஸ் லெவல் படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம், சூரி இருவருமே திறமையான நடிகர்கள் என்பதை அவ்வப்போது அவர்களின் படங்களின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

    மாமன் படத்தின் கதை ஆசிரியராகவும் சூரி அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இரு படங்களுக்குமே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த வகையில் படங்கள் திரைக்கு வரட்டும். எது வெற்றி என்பது தெரிந்து விடும்.

    இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எப்பவுமே காமெடி ஜானருக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உண்டு. சமீபத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதகஜராஜா படம் சந்தானத்துக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளதால் இந்தப் படத்துக்கும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  • சந்தானம் எத்தன படத்துக்கு வந்திருக்காரு? யோகிபாபுவை மட்டும் டார்கெட் பண்ண காரணம்

    Yogibabu: தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்திருக்கின்றனர். சினிமாவில் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுவது நகைச்சுவைதான். ஆனால் சமீபகாலமாக அந்த நகைச்சுவை படங்களில் குறைந்து கொண்டேதான் வருகின்றது. நாகேஷ் முதல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் வரை இவர்கள் காலத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது.

    இவர்களுக்கு பிறகு வந்த சந்தானம், சூரி போன்றோர் அதை கொஞ்சமாவது காப்பாற்றி வந்தார்கள். ஆனால் இப்போது சூரியும் சந்தானமும் ஹீரோவாக நடிக்க போய்விட்டதால் நகைச்சுவைக்கு வெற்றிடம் வந்தது உண்மைதான். இதில் யோகிபாபு இந்த நகைச்சுவைக்குள் வந்தாலும் அவருடைய காமெடி அந்தளவு எடுபடவில்லை. ஆனாலும் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை யோகிபாபு நடித்து வருகிறார்.

    அதனால்தான் என்னவோ அவரால் அவர் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷனுக்கு வரமுடியவில்லை. இதை பற்றி பெரிய பிரச்னையே சமீபத்தில் எழுந்தது. ஒரு தயாரிப்பாளர் ‘ப்ரோமோஷனுக்கு வந்தால் 7 லட்சம் கேட்கிறார் யோகிபாபு’ என சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு யோகிபாபுவும் பதில் பேசியிருந்தார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும் போது ஏன் யோகிபாபுவை மட்டும் டார்கெட் பண்றாங்க என கேட்டிருக்கிறார்.

    யோகிபாபுவை பொறுத்தவரைக்கு ஹீரோவாக நடித்த படம் என்றால் கண்டிப்பாக ப்ரோமோஷனுக்கு வருவார். ஒரு கேமியோ ரோல், சப்போர்ட்டிங் ரோல் என்றால் எப்படி வரமுடியும்? அப்படியே பார்த்தாலும் கவுண்டமணி நடித்த படங்கள் எத்தனை? ஆனால் எந்த படத்திற்கு ப்ரோமோஷனுக்கு வந்திருக்கிறார்? வடிவேலுவும் எத்தனை பட ப்ரோமோஷனுக்கு வந்திருக்கிறார்.

    yogibabu

    yogibabu

    வடிவேலு வந்திருப்பார். ஒரு வேளை ஹீரோவாக நடித்த படம் என்றால் வந்திருக்கிறார். சந்தானம், சூரி எல்லாருமேதான் சொல்கிறேன். அப்படி இருக்கும் போது யோகிபாபுவை மட்டும் டார்கெட் பண்ணா எப்படி என தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

  • உதயநிதிக்கு ஆதரவா பிரச்சாரத்தில் இறங்குவீங்களா? பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு சந்தானம்

    Santhanam: தற்போது சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தை ஆர்யா தயாரித்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் தொடர்ச்சிதான் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. அதனால் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது.

    டிடி நெக்ஸ்ட் லெவெல் திரைப்படம் வரும் 16 ஆம் தேதி ரிலிஸாக இருக்கின்றது. அதனால் பட ப்ரோமோஷனில் சந்தானம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று கூட பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் சந்தானம், ஆர்யா ஆகியோர் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தனர். அப்போது சந்தானத்திடம் ‘அரசியலுக்கு வரமாட்டேனு சொன்னீங்க’

    ‘ஆனால் இப்போது உங்க நண்பர் உதய் அரசியலில் இருக்கிறார். வா பிரச்சாரத்திற்கு போவோம் என்று சொன்னால் நீங்கள் போவீங்களா?’ என்று கேட்டார். அதற்கு சந்தானம் ‘பிரச்சாரத்தையும் தாண்டி நீங்க உழைச்சா உங்களுக்கு காசு. நான் உழைச்சா எனக்கு காசு. எல்லாத்தையும் தாண்டி நம்முடைய கம்ஃபர்ட் சோன்னு ஒன்னு இருக்கு. இப்போ சிம்பு அவருடைய படத்தில் நடிக்க கூப்பிட்டார்’

    ‘ நீ பழைய மாதிரிதான் நடிக்கணும்னு என்னை ஃபோர்ஸ் பண்ணவில்லை. எனக்குனு சுதந்திரம் கொடுத்திருக்காரு. எனக்கு என்னுடைய கேரக்டர் எப்படி இருக்கனும்னும் சொல்லிட்டாரு. அதை போலதான் என்னுடைய கம்ஃபர்ட் சோனுக்குள்ள இருந்தால் கண்டிப்பாக பிரச்சாரம் பண்ணுவேன்.’என சந்தானம் கூறியிருக்கிறார். அதாவது அவரை அவராக விட்டுவிட வேண்டும் என சொல்ல வருகிறார் சந்தானம்.

    uthaynithi

    uthaynithi

    இந்தப் படத்திற்கு பிறகு சந்தானம் மீண்டும் சிம்புவுடன் அவருடைய 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. சந்தானம் சிம்பு கூட்டணியில் வெளியான படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அதனால் இந்தப் படத்திலும் மீண்டும் சந்தானத்தின் காமெடியை எதிர்பார்க்கலாம்.

  • திருப்பதி வந்தா திருப்பம் வரும்..ஆனா சந்தானத்திற்கு? 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

    DD Next Level: வரும்பதினாறாம் தேதி சந்தானம் நடிப்பில் வெளியாக கூடிய திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தை ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார் .இந்த நிலையில் படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற ஒரு பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம் மீதும் பட தயாரிப்பு மீதும் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரில் இந்துக்கள் தங்களுடைய புனித ஸ்தலமாக கருதுவது ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலை தான். ஆனால் இந்த படத்தில் அந்த இந்துக்களின் மனம் புண்படும் வகையில் கோவிந்தா கோவிந்தா என்ற பாடலை வைத்திருக்கிறார்கள். அது திருப்பதி கோவிலை அசிங்கப்படுத்தி உருவாக்கி இருப்பதாக சந்தானம் மற்றும் ஆர்யா மீது புகார் எழுந்திருக்கிறது.

    அதற்கு சந்தானமும் நான் பெருமாள் பக்தர் கடவுள். பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அந்த பாடலை வைத்தேன். அதில் நான் கிண்டல் செய்யவில்லை .எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. பெருமாளை எனக்கு பிடிக்கும் என்று கூறி இருந்தார் சந்தானம். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் சந்தானத்தின் மீதும் ஆர்யா மீதும் ஒரு நோட்டீசை அனுப்பி இருக்கிறார் .அந்த நோட்டீஸில் இருப்பதாவது:

    santhanam

    santhanam

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்கக் கோரியும் , 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் நடிகர் சந்தானம் , பட தயாரிப்பு நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு ப்ரகாஷ் ரெட்டி நோட்டிஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

  • இதுல ஒன்னும் தப்பு இல்லையே.. தேவயாணி husband விஷயத்தில் வாய்திறந்த சந்தானம்

    Santhanam: தற்போது சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கின்றது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. பல youtube சேனல்களுக்கு சந்தானம் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இந்த படத்தைப் பற்றியும் அவருடைய சினிமா அனுபவங்களை பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் .

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னை பிரதிபலித்த சந்தானம் இப்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். லொள்ளு சபா நிகழ்ச்சி தான் அவரை சினிமாவிற்கு இழுத்து வந்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிம்பு. லொள்ளு சபா நிகழ்ச்சியில் அவருடைய காமெடி ரசிகர்களால் ஈர்க்கப்பட ஏன் இவர் படத்தில் நடிக்க கூடாது என நினைத்து தன்னுடைய மன்மதன் படத்தின் மூலம் முதன்முதலில் சந்தானத்தை நடிக்க வைத்தார் சிம்பு .

    முதல் படத்தில் சிம்பு சந்தானம் காம்போ ரசிகர்களை பெருமளவு ஈர்க்க தொடர்ந்து சிம்புவின் அனைத்து படங்களிலும் சந்தானம் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகவே மாறினார் சந்தானம். நாகேஷ் வடிவேலு விவேக் இவர்களுக்கெல்லாம் ஒரு தனி பாணி இருக்கும். சந்தானத்திற்கு மற்றவர்களை கிண்டல் செய்தே தன்னுடைய நகைச்சுவையை வளர்த்துக் கொண்டார். தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டே மக்களை சிரிக்க வைத்தவர் சந்தானம்.

    இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் கூடிய சீக்கிரம் ஆரம்பித்து விடும். அதற்கு முன்னதாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஒரு 16ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் இந்த படம். அதனால் படத்தின் மீது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு தேவயானி தன்னுடைய கணவரான ராஜகுமாரன் சந்தானத்துடன் இணைந்து ஒரு காட்சியில் நடித்ததை பற்றி பீல் பண்ணி கூறியிருந்தார். அது எனக்கு பிடிக்கவே இல்லை. அவரை சந்தானம் கிண்டல் செய்தது என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவரிடம் நான் சத்தம் போட்டேன் என்றெல்லாம் கூறினார். இதைப் பற்றி சந்தானத்திடம் கேட்டபோது ஒரு நடிகர் என்றால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தான் வேண்டும்.

    devayani

    devayani

    அதுவும் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவரிடம் ஸ்கிரிப்ட் எல்லாம் சொல்லி அவர் அனுமதியோடுதான் அந்த காட்சியை நாங்கள் படமாக்கினோம். அவரை போர்ஸ் செய்து நடிக்க வைக்கவில்லை. காமெடியாக இருந்தாலும் சரி அது எந்த கேரக்டராக இருந்தாலும் சரி நடிகன் என வந்துவிட்டால் அதை எல்லாம் நாம் பார்க்க கூடாது, இப்போ பர்ஷனலாக ஒருத்தரை கிண்டல் செய்கிறோம் என்றால் அதுதான் தப்பு என்று சந்தானம் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.