தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சூர்யா, சியான் விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதில், நடிகர் மகேஷ் பாபுவும் சமூக வலைதளத்தின் மூலம் தனது பாராட்டை தெரிவித்தார்.
மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சுமார் என்பது சதவிதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் மகேஷ் பாபு செயல்பட்டு வருகிறார். அவர் தயாரிப்பில் உருவாகும் ராவ் பஹதூர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது பழைய ஹிட் திரைப்படமான அதிதி 4K வடிவில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்ற விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இன்றைய நாள் பெருமளவில் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.
இரு திரையுலக முன்னணி நடிகர்களுக்கிடையேயான இந்த வாழ்த்து பரிமாற்றம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விஜயின் அரசியல் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
ஒக்கடு, போக்கிரி உள்ளிட்ட பல மகேஷ் பாபு படங்களை விஜய் ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய போட்டியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவும் விஜய்யை மனமார வாழ்த்தியுள்ளார். அவர் நடித்த கருப்பு படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.















