Tag: TVK

  • நாம எலெக்‌ஷன்ல நின்னா கூட சிஎம் ஆகிடலாம் போல!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!..

    நாம எலெக்‌ஷன்ல நின்னா கூட சிஎம் ஆகிடலாம் போல!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!..

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சூர்யா, சியான் விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதில், நடிகர் மகேஷ் பாபுவும் சமூக வலைதளத்தின் மூலம் தனது பாராட்டை தெரிவித்தார்.

    மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சுமார் என்பது சதவிதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் மகேஷ் பாபு செயல்பட்டு வருகிறார். அவர் தயாரிப்பில் உருவாகும் ராவ் பஹதூர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது பழைய ஹிட் திரைப்படமான அதிதி 4K வடிவில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்ற விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இன்றைய நாள் பெருமளவில் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.

    இரு திரையுலக முன்னணி நடிகர்களுக்கிடையேயான இந்த வாழ்த்து பரிமாற்றம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விஜயின் அரசியல் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

    ஒக்கடு, போக்கிரி உள்ளிட்ட பல மகேஷ் பாபு படங்களை விஜய் ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய போட்டியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சூர்யாவும் விஜய்யை மனமார வாழ்த்தியுள்ளார். அவர் நடித்த கருப்பு படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.

  • தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் நின்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

    சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்ததாக ஆரம்ப நிலவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு பகுதிகளிலும் அவரது கட்சி வலுவான முன்னிலை பெற்று வெற்றிப்பெற்றது. மேலும், தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான ஆதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றி, நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. புதிய கட்சியாக இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வெற்றியைத் தொடர்ந்து, கட்சித் தலைமையகம் மற்றும் விஜயின் இல்லம் முன்பு ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மொத்தத்தில், பெரம்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த இந்த வெற்றிகள், தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றன. மேலும், பல திரை பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீரகள், நிச்சயம் நல்லது செய்வார்.. விசில் அடித்துக் கொண்டாடிய SAC!

    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீரகள், நிச்சயம் நல்லது செய்வார்.. விசில் அடித்துக் கொண்டாடிய SAC!

    தமிழக அரசியல் களத்தில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

    சென்னையில் உள்ள விஜயின் இல்லத்தில் அவரது தாய், உறவினர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் கொண்டாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த அரசியல் வெற்றியின் தருணம் இதுவே என்ற உணர்வில், குடும்பத்தினர் உணர்ச்சி வசப்பட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு நிலவிய கொண்டாட்ட சூழலைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, குடும்பத்தினரை அணைத்துப் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிகாலைவேளையில் திருத்தணி முருகன் கோவில் சென்று தனது மகன் அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், விஜயின் அடையாளமாக பார்க்கப்படும் வெள்ளை சட்டை மற்றும் சாண்டல் நிற பேண்ட் அணிவகுப்பை, இன்று அவரது தந்தையும் பின்பற்றியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், ஒரு முதலமைச்சரின் தந்தையாகப் போவதில் அவர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். முதலமைச்சர் என அறிவிக்கும் முன்னதாகவே அவர் வீட்டில் கோண்டாட்டம் தொடங்கிவிட்டதை பார்த்த ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்தியுள்ளது.

  • திருப்பதி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா!.. பர்த்டே கிப்ட் பலமா இருக்கே!..

    திருப்பதி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா!.. பர்த்டே கிப்ட் பலமா இருக்கே!..

    இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நடிகை த்ரிஷா திருப்பதி கோவில் சென்று ஏழுமலையான் தரிசனை பெற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தற்போது விஜய் வீட்டுக்கு த்ரிஷா வந்துள்ளார். த்ரிஷாவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், த்ரிஷா தேர்தலன்று வாக்களித்ததை பற்றி கேள்வி எழுப்பிய போது விஜயுடன் நடித்திருந்த கில்லி பாடலுடன் பதிவு ஒன்றை போட்டி தான் விஜய்க்கே ஒட்டளித்ததாக வெளிப்படையாக சொல்லிவிட்டார். இந்நிலையில் இன்று அவர் தன் பிறந்தநாளுக்காக மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் வெற்றிக்காகவும் வேண்டிக்கொண்டிருப்பார் என விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    வரும் மே மாதம் 14ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா சூர்யாவுடன் நடித்து வரும் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு த்ரிஷா வராததும் பலரின் மனதில் பல கேள்விகல்ளை எழுப்பியிருந்தது. திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், முக்கியமான நாளில் ஆன்மிகத்தை முன்னிலைப்படுத்திய த்ரிஷாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆன்மிக முறையில் கொண்டாடியுள்ளார். இதற்காக அவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரர் கோவில் சென்றார். த்ரிஷாவின் இந்த ஆன்மிக பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

    மேலும், பிறந்தநாள் மற்றும் விஜய்யின் வெற்றியை இணைந்து கொண்டாட சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  • ஆடு பகை.. குட்டி உறவு!.. சத்தியராஜுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவு கொடுத்து சிபிராஜ் போட்ட போஸ்ட்!..

    ஆடு பகை.. குட்டி உறவு!.. சத்தியராஜுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவு கொடுத்து சிபிராஜ் போட்ட போஸ்ட்!..

    நடிகர் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளராக களத்தில் இறங்கிய நிலையில், தலைவா படத்தில் அவர் நடித்ததையே மறந்துவிட்டு விஜய்க்கு எதிராக மோசமாக பேசினார். ஆனால், அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்ட நீண்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

    “1993-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, பொள்ளாச்சி சக்தி ஹோட்டல் டெரஸில் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள நீங்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் மாமாவுடன் வந்திருந்தபோதுதான் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தேன். இந்த அடக்கமான இளைஞர், என்னையும் சேர்த்து லட்சக்கணக்கான இதயங்களை வென்று, எதிர்காலத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது நான் சிறிதும் அறிந்திருக்கவில்லை!

    நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக, நீங்கள் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மதிப்பது முக்கியம் என்று நான் உணர்கிறேன், மேலும் நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக நிற்பேன்.பல ஆண்டுகளாக, நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளீர்கள்.

    உங்கள் மீதான எங்கள் பரஸ்பர அன்பால் நாங்கள் ஒன்றுபட்டிருந்ததால்தான் எனது பல நெருங்கிய நட்புகள் உருவாயின. அப்போது என் காதலியாக இருந்து பின்னர் மனைவியான ரேவதியுடனான எனது முதல் சந்திப்பு, 20-11-2000 அன்று ஆல்பர்ட் திரையரங்கில் ‘பிரியமானவளே’ திரைப்படத்தைப் பார்த்தபோது நிகழ்ந்தது.

    உங்களின் மரியாதைக்குரிய மற்றும் வலிமைமிக்க போட்டியாளர்களைப் போற்றிய என் அன்புக்குரியவர்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்கும்போதுதான், நான் நடத்திய சூடான, அதே சமயம் ஆரோக்கியமான வாக்குவாதங்களும் விவாதங்களும் பெரும்பாலும் நிகழ்ந்தன.எனது வெற்றிகளைப் போலவே உங்கள் வெற்றிகளையும் நான் ரசித்தேன்.

    பல ஆண்டுகளாக உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், குறிப்பாக எனது திருமணத்திற்குப் பிறகு இரவு உணவிற்காக உங்கள் வீட்டிற்கு வந்தபோதும், எனது ‘லீ’ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டபோதும், எனது திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்தி நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களும், நான் உங்களை அழைக்கும்போதோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பும்போதோ எனக்குக் கிடைத்த உடனடி பதில்களும் என் வாழ்வின் மிகவும் பொக்கிஷமான நினைவுகளில் அடங்கும்.

    நான் ஒரு சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், சினிமா உலகிற்குள் நுழைய நீங்கள் எனக்கு ஒரு முக்கிய உத்வேகமாக இருந்தீர்கள்.உங்கள் திரைப்படங்கள் பெரும்பாலும் வெறும் பொழுதுபோக்காகக் கருதப்பட்டாலும், அவை உண்மையான அன்பு, நட்பு, கடின உழைப்பு மற்றும் பலவற்றின் மதிப்பை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தன.

    பெரும்பாலான சுய-உதவி இலக்கியங்களால் வழங்க முடியாத வாழ்க்கையைப் பற்றிய ஆழமான பார்வைகளை உங்கள் குட்டிக் கதைகள் வழங்கின. கடந்த மூன்று தசாப்தங்களாக எங்களை ஊக்கப்படுத்தியதற்கும், மகிழ்ச்சியாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருந்ததற்கும் நன்றி! நீங்கள் எங்களுக்கு அளித்த அந்த அற்புதமான திரையுலகத் தருணங்களை நாங்கள் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுவோம்!

    ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன் ! இது வெறும் ஒரு திரைப்பட வசனம் மட்டுமல்ல; நீங்கள் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை தத்துவமே இது! வென்று வா தலைவா ! நாங்க இருக்கோம்!” என சிபிராஜ் பதிவிட்டுள்ளார்.

  • தவெகவில் இணைந்த தாமரைச்செல்வி.. தங்க சங்கிலி பஞ்சாயத்து தீர்ந்துடுச்சாம்மா?..

    தவெகவில் இணைந்த தாமரைச்செல்வி.. தங்க சங்கிலி பஞ்சாயத்து தீர்ந்துடுச்சாம்மா?..

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை தாமரை செல்வி, தற்போது தவெக தலைவர் விஜயின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில், கட்சியில் இணைந்த போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    தாமரை செல்வி ஆரம்பத்தில் கிராமப்புறங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். பாரம்பரிய இசை நாடகங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி, மெதுவாக மக்கள் கவனத்தை பெற்றார். பின்னர், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 90 நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அவரது இயல்பான நடத்தை, நேர்மையான பேச்சு மற்றும் உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் ஆகியவை அவரை பொதுமக்கள் மனதில் தனி இடம் பெறச் செய்தன.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை, தாமரை செல்வியின் முதல் திருமணம் பல சிக்கல்களால் முடிவடைந்தது. அவருக்கு ஒரு மகன் உள்ளார். பின்னர் பார்த்தசாரதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். மேலும், பிக் பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் தனது கணவருடன் இணைந்து பங்கேற்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வரும் தாமரை செல்வி, “சின்ன மருமகள்” என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வேதாவின் கணவர், தாமரை செல்வியிடமிருந்து மூன்று பவுன் சங்கிலியை வாங்கி அடகு வைத்து திருப்பிக் கொடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தாமரை செல்வி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தார்.

    இந்நிலையில், தற்போது அவர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இதனால், இனி அவர் அரசியல் மற்றும் நடிப்பு ஆகிய இரண்டையும் இணைத்து எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  • இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்- புகைப்படங்கள்

    இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்- புகைப்படங்கள்

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்றுசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

  • தவெக மேடையில் சரமாரி கேள்வி எழுப்பிய முன்னாள் ரஜினி மன்ற நிர்வாகி! மிரண்டுபோன ஆதவ் அர்ஜுனா

    தவெக மேடையில் சரமாரி கேள்வி எழுப்பிய முன்னாள் ரஜினி மன்ற நிர்வாகி! மிரண்டுபோன ஆதவ் அர்ஜுனா

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேடையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா முன்பாகவே, கட்சியின் தொண்டர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஆதரவாகப் பேசிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் திமுக அரசைக் கண்டித்து தவெக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசியபோது, ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் அவர் அரசியலுக்கு வரவில்லை. தற்போது திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலேயே அவர் நடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால், விஜய்க்கு அந்த மன தைரியம் அதிகமாக இருப்பதால்தான் அவர் நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளார் என பேசினார்.

    ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) பக்கத்தில், காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் எனப் பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் தவெக பொதுக்கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்திருக்க, தவெக தொண்டர் ஒருவர் ஒலிவாங்கியைக் கையில் எடுத்தார்.

    அவர் பேசுகையில், நான் 45 வருடங்களாக ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பில் இருந்தேன். தற்போது மாற்றுக்கட்சியில் (தவெக) இணையும்போது அந்தப் பொறுப்பில் இருப்பது சரியாக இருக்காது என்பதால் அதை ராஜினாமா செய்துவிட்டேன். ரஜினி சார் ஒரு அற்புதமான மனிதர். அவர் குறித்து யார் தவறாகச் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பயந்தவர் கிடையாது; மிகப்பெரிய போராட்ட குணம் உடையவர் என்று பேசினார்.

    மேலும் மேடையில் அமர்ந்திருந்த ஆதவ் அர்ஜுனாவை நோக்கி, ஆதவ் அர்ஜுனா சார் அவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கிறேன். நீங்கள் எந்த எண்ணத்தில், பொதுவெளியில் ரஜினி சார் குறித்து அப்படிப் பேசினீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உலகில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்… ரஜினி சாரைப் பற்றி இனி யாராவது தவறாகப் பேசினால், உங்கள் சார்பில் நான் முன்னின்று கேள்வி கேட்பேன் என்று அதிரடியாகப் பேசினார்.

    தங்கள் கட்சியின் மேடையிலேயே, தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியைப் பார்த்து, ரஜினிக்காகத் தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் தவெக மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் ஆதவ் அர்ஜுனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    https://twitter.com/SpicyChilli4U/status/2033924097328001050
  • விஜய் கட்சி மீது புகார் கொடுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்! என்ன சேதி தெரியுமா?

    விஜய் கட்சி மீது புகார் கொடுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்! என்ன சேதி தெரியுமா?

    Vijay: நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். இது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகி வருகிறது. 

    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி. இவர் அதற்கு முன் கலந்துக்கொண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பலரிடமும் பிரபலமாகி உள்ளே வந்தார். ஆனால் இங்கு நிலைமை தலைகீழானது. ஓவியாவுக்கு எதிராக அவர் சொன்ன ஒரு வார்த்தையால் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகினார். 

    வெளியில் வந்து கூட ஜூலிக்கு பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனமே வந்தது. ஐந்து வருடத்துக்கு பின்னர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னரே அவர் மீதான அவதூறை மாற்றினார். தொடர்ந்து வெளியில் வந்து சில படங்கள் நடித்தார்.

    பின்னர் அவருடைய நீண்ட கால காதலரை கரம் பிடித்து யூட்யூப் நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக ஜூலி தவெக தரப்புக்கு எதிராக வீடியோ போட்டு வைரலாகி வந்தார். அதை தொடர்ந்து அவர் மீது கிட்னி திருட்டு வழக்கு இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை பலரும் பகிர்ந்து வந்தனர். 

    இந்நிலையில் தன் மீது தவறான தகவலை தவெக கழகத்தினர் செய்வதாக ஒரு நிர்வாகி உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்து இருக்கிறார். மேலும் இவர்கள் மீதான வழக்கை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

  • அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும் – விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அமீர்

    அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும் – விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அமீர்

    தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தமிழகமெங்கும் சுற்றுபயணம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு நேரில் சென்று விசாரண நடத்தினார்கள். அதோடு தவெக தலைவர் விஜய் கடந்த ஜனவரி 6ம் தேதி டெல்லி சென்று சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார் விஜய். அதன்பின் சில நாட்களில் மீண்டும் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார். அதன்பின் விஜய்க்கு எவ்வித அழைப்பும் வரவில்லை . இதனால் விஜயுடனான விசாரணை முடிந்து விட்டதாக பார்க்கப்பட்டது.

    இந்நிலையில்தான் மார்ச் 10ம் தேதியான நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விஜய் தரப்பில் தேர்தல் பணிகள் இருப்பதால் இரண்டு வாரங்கள் கழித்து நீங்கள் சொல்லும் தேதியில் நான் ஆஜராக தயாராக இருக்கிறேன் என்றும், மேலும் டெல்லியாக இல்லாமல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேயே விசாரணைக்கு ஆஜராக விரும்புகிறேன் எனவும் விஜய் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது என்டிஏ கூட்டணியில் விஜய் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடப்பதாகவும், கூட்டணியில் இணையவைக்கவே இந்த அழைப்பு என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான அமீர் தனது வாட்ஸபில் ஒரு ஸ்டேடஸ் வைத்துள்ளார். அதில் சிபிஸ் விசாரணைக்கு பயந்து என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து விடாதீர்கள். அத்தோடு உங்க அரசியல் முடிஞ்சிடும் என்று பதிவிட்டுள்ளார்.