Tag: vijay tv

  • Siragadikka Aasai: அது சரி அடுத்து சத்யா கல்யாணமா? என்ன செய்ய போகிறார் மீனா?

    Siragadikka Aasai: அது சரி அடுத்து சத்யா கல்யாணமா? என்ன செய்ய போகிறார் மீனா?

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

    ஏற்கனவே மீனாவுக்கும், சீதாவுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் அடுத்து சத்யா கல்யாண டிராக்கை கொண்டு வருவார்கள் என பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் தான் சத்யாவுக்கும், சிந்தாமணி மகள் ரேகாவுக்கும் காதல் தொடங்கியது. 

    ஒரு கட்டத்தில் இந்த ரகசியம் உடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிந்தாமணி தான் தன்னுடைய அம்மா என்பதை ரேகா சத்யாவிடம் சொல்லிவிட்டார். இதனால் பயந்த சத்யா இந்த காதல் சரி வராது. உங்க அம்மாவால் தான் எல்லா பிரச்சனையும். 

    அக்காவை ஆள் வைத்து கொலை செய்ய பார்த்தாங்க உங்க அம்மா. இதெல்லாம் வேண்டாம் என்கிறார். ஆனால் ரேகா நாம் பேசுவதை விட உங்க அக்கா, மாமாவிடம் இது பற்றி பேசலாம் எனக் கூறி அவரை அழைத்து செல்கிறார். 

    அப்போது இருவரையும் ஒன்றாக பார்க்கும் சிந்தாமணி சந்தேகத்துடன் அவரை ஃபாலோ செய்து செல்கிறார். இந்த நேரத்தில் அமெரிக்க புது பொண்ணுடன் டேட்டிங் செல்ல மனோஜ் தயாராகி அதற்கான வேலைகளை பார்த்து கொண்டு இருக்கிறார். 

    மறுபக்கம் வீட்டில் மீனாவிடம் பிரச்சனையை பேச பூ கடை ஆட்கள் வர அவர்களை அசிங்கப்படுத்தி பேசுகிறார் விஜயா. அப்போ மீனா வந்து அவர்களை அழைத்து உட்கார வைத்து விஷயத்தை கேட்க அவர்கள் சிந்தாமணி மிரட்டுவதால் தங்களால் கடை போட முடியவில்லை எனக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

    அப்போ விஜயா வந்து வீட்டு வேலையை யார் செய்வார் எனக் கேட்க முத்து தான் செய்வதாக சொல்கிறார். பின்னர் காபி வேணும், ரூம் க்ளீன் செய்ய வேண்டும் என முத்து விஜயா வெறுப்பேற்றி பார்க்கிறார். அங்கிருந்த பெண்கள், இப்படி ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கணும் என பாராட்டிவிட்டு செல்கின்றனர்.

    மனோஜ் டேட்டிங், சத்யா காதல் விவகாரம் உடைந்தால் சிந்தாமணி பிரச்சனை செய்ய இருப்பார் என்பதால் அடுத்தடுத்த எபிசோட் பரபரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Siragadikka Aasai: மனோஜுக்கு நடந்த நிச்சயத்தார்த்தம்… ரோகிணி என்ன ஆட்டம் போட போறாங்களோ?

    Siragadikka Aasai: மனோஜுக்கு நடந்த நிச்சயத்தார்த்தம்… ரோகிணி என்ன ஆட்டம் போட போறாங்களோ?

    Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்தக்கட்டமாக தற்போது மனோஜுக்கு இரண்டாம் கல்யாண வேலைகளை விஜயா தொடங்கி விட்டார். 

    மலேசியா பெண், பணக்காரி என டயலாக் விட்டு வந்த ரோகிணியின் எல்லா பொய்களும் உடைந்து விட்ட நிலையில் அவரை விஜயா வெளியேற்றி விட்டார். தற்போது இருவருக்குமான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. 

    தற்போது மனோஜுக்கு பெரிய பணக்காரியை கல்யாணம் செய்து வைக்க விஜயா மும்முரமாக பெண் தேடி வந்தார். அப்படி அவருக்கு தற்போது ஒரு அமெரிக்க பெண் கிடைத்துவிட அவசர அவசரமாக நிச்சயத்தை முடித்துவிட்டார். 

    இதற்கிடையில் ரோகிணி விவாகரத்து வழக்கில் பெரிய இடியாக தன்னுடைய எமோஷனல் டிராமாவை போட்டு அடுத்த 6 மாசத்துக்கு ஜீவனாம்சம் கொடுத்து நீதிபதி வழக்கை தள்ளி வைத்து இருக்கிறார். இதை விஜயா பேச்சை கேட்டு வீட்டில் மறைத்து வைத்து இருக்கின்றனர். 

    இந்நிலையில் தற்போது கல்யாண வேலைகளை தொடங்கினால் ரோகிணி கண்டிப்பாக இறங்கி விளையாட போகிறார். இதனால் மீண்டும் வழக்கு பிரச்சனையாகி ரோகிணி வீட்டுக்குள் வரும் நிலைக்கூட உருவாகலாம். அதும் இல்லாமல் வீட்டை விஜயா விற்றும் விட்டார். 

    சிந்தாமணிக்கு சத்யா காதல் விவகாரம் தெரிவது போல புரோமோ வேறு வெளியாகி இருப்பதால் குடும்பத்தையே துரத்த போகிறார். இதனால் பல மாதமாக டல்லடித்த சிறகடிக்க ஆசை பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • Siragadikka Aasai: நீதுவை வச்சு செஞ்சுவிட்ட மீனா!… ரோகிணியின் புது ப்ளான்… டிஆர்பியில் மாற்றம் வருமா?

    Siragadikka Aasai: நீதுவை வச்சு செஞ்சுவிட்ட மீனா!… ரோகிணியின் புது ப்ளான்… டிஆர்பியில் மாற்றம் வருமா?

    Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள். 

    பூக்கடை சங்க தேர்தலில் மீனா ஜெயிச்சுவிட்ட கடுப்பில் சிந்தாமணி உட்கார்ந்து இருக்க அவரை பார்க்க வருகிறார் ரோகிணி. எப்படி மீனா ஜெயிச்சா என ரோகிணி கேட்க எல்லாம் முத்துவால் தான். அவள் எப்படி இனிமே சங்கத்தை நடத்துகிறா பாரு என்கிறார். 

    பூ கட்டுறது மட்டும் வேலை இல்ல சங்கத்தில் கணக்கு பார்க்கணும், பிரச்சனையை சரி செய்யணும் என எவ்வளவோ இருக்கு. அதை மீனாவால் பார்க்க முடியாது. பார்க்கவும் விட மாட்டேன். அங்கு இருக்கும் ஆட்களை காசு கொடுத்தால் என் பக்கம் வந்துவிடுவார்கள் என தெம்பாக பேசுகிறார். 

    மீனா கொடுத்த ஐடியாவால் ரவி மற்றும் ஸ்ருதியை டூருக்கு அனுப்பும் ஐடியாவில் உள்ளனர். ஆனால் ரெஸ்டாரெண்ட்டை என்ன செய்வது என்பதால் மீனா மற்றும் முத்துவை பார்த்துக்க ரவி சொல்ல முதலில் தயங்கி பின்னர் ஒப்புக்கொள்கின்றனர். 

    அடுத்த நாள் இருவரும் ரெஸ்டாரெண்ட்டில் பரபரப்பாக வேலை செய்ய அங்கு நீத்து வருகிறார். ரவி எங்க எனக் கேட்க அவர் பொண்டாட்டியுடன் டூர் சென்று இருப்பதாக சொல்கிறார். என்கிட்ட சொல்லலையே பொக்கெட் ஓபனிங் வராமல் எங்கு சென்றார் எனக் கடுப்பில் திட்டுகிறார். 

    அவர் இன்னொருத்தி புருஷன் வெட்கமா இல்லையா எனக் கடுப்படிக்க நீத்து முத்துவை அசிங்கமாக பேசுகிறார். ரெளடி எனத்திட்ட கடுப்பில் மீனா நீத்துவை அடித்து விடுகிறார். இதில் அவரும் கோபத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார். ரோகிணி விவாகரத்து வழக்கில் ஒரு ப்ளான் போடுகிறார். 

    கிரிஷை அவருடன் கோர்ட்டுக்கு கூட்டி செல்கிறார். மனோஜுடன் விஜயா சென்று இருக்க வக்கீல் இவர்கள் இன்று என்ன செய்வார்களோ எனக் கடுப்பில் இருக்கிறார். நாளை நடக்க இருக்கும் எபிசோட் ரோகிணிக்கு சாதகமாக ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவு கொடுக்கிறார். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

  • பிரதீப் ரங்கநாதனால் மீண்டும் வைரலாகும் கனா காணும் காலங்கள் ஜோ!! 

    பிரதீப் ரங்கநாதனால் மீண்டும் வைரலாகும் கனா காணும் காலங்கள் ஜோ!! 

    KKK Jo: 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த சீரியல் என ஒரு லிஸ்ட் கேட்டால் கண்டிப்பாக அதில் கனா காணும் காலங்கள் பள்ளி கதை இடம்பெறும் என்பதில் துளி சந்தேகமும் இல்லை. அதிலிருந்த பெரும்பாலான கேரக்டர்கள் ரசிகர் மனதில் இன்றும் இன்னுமும் இடம் பிடித்து வருகின்றனர்.

    இதில் ஒரு முக்கிய கேரக்டராக வந்தது ஜோ. அதில் நடித்தவர் யுதன். காமெடி ரோலில் நடித்தாலும் அவருடைய கேரக்டர் பலரிடமும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. அதை தொடர்ந்து சினிமாவிலும் காதல் சொல்ல வந்தேன் பட்டாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

     ஆனால் தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகி தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை தற்போது  சமூக வலைத்தளம் மீண்டும் வலை போட்டு தேட தொடங்கியுள்ளதற்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் காரணமாக இருக்கிறார். தன்னுடைய அடுத்த படமான எல் ஐ கே பட நிகழ்ச்சியில் பேசியவர் என்னுடைய ஆரம்ப காலங்களில் கனா காணும் காலங்கள் மிகப் பிரபலமாக இருந்தது.

    அதில் நடித்த ஜோவை நாங்கள் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டோம். நான் இயக்குனராக ஆசைப்பட்டு பரபரப்பாக இருந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் ரெஸ்டாரண்டில் எஸ் ஜே சூர்யாவை சந்தித்தேன். அவரிடம் இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு கேட்டபோது ப்ரொபைல் கொடுத்து விட்டு செல்லுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன் என பதில் கூறியிருந்தார்.

    பெரிய மறுப்பு இல்லை என்றாலும் அது எனக்கு பெரிய அளவில் மன உளைச்சலை கொடுத்தது. நானும் அதை நினைத்துக் கொண்டு கீழே இறங்கியபோது யுதனை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்ன பேசினேன் என தற்போது எனக்கு ஞாபகம் இல்லை.

     ஆனால் அவர் எனக்கு பெரிய அளவில் ஆறுதல் கொடுத்ததால் தான் அதை மீண்டும் என்னுடைய உழைப்பில் காட்டி நான் உயர்வதற்கு காரணமாக இருந்ததாக குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் யுதன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னை இன்னும் பல ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி எனக்கூறி பதிவிட்டு இருக்கிறார்.

  • Pandian Stores2: ஆத்தாடி தேடி பிடிச்சு ஒரு கதையை பிடிச்சிட்டீங்க போலயே!!

    Pandian Stores2: ஆத்தாடி தேடி பிடிச்சு ஒரு கதையை பிடிச்சிட்டீங்க போலயே!!

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியின் ஒரிஜினல் சீரியலாக ஒளிபரப்பாகி வெற்றி கண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தை தொடர்ந்து கதைக்களம் இல்லாமல் தற்போது இரண்டாம் பாகம் போராடிக் கொண்டிருக்கிறது.

    முதல் பாகத்தைப் போல இல்லாமல் இந்த முறை அப்பா மற்றும் மகன் இடையில் ஆன பாசத்தை வைத்து கதை நகர்ந்து வருகிறது. போன முறை  பெரிய அளவில் பிசிர் இல்லாமல் கதையை சுமூகமாக நகர்த்திக் கொண்டு சென்றது சீரியல் குழு.

    ஆனால் இந்த முறை பல இடங்களில் தொடர்ந்து ஒரே கதைக்களத்தை பல எபிசோடுகளாக இருக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். அந்த வகையில் சில மாதங்கள் முன்னர் தெரிந்த ராஜி மற்றும் கதிர் கல்யாண ரகசியம் குறித்த சண்டையே சீரியலில் சென்று வந்தது.

    ஒரு வழியாக பல மாதங்களுக்கு இடையே அந்த கதைக்களம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அதை தொடர்ந்து பெரிய அளவில் கதை இல்லாததால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு தற்போது ஒரு வழியாக விடுதலை கிடைத்திருக்கிறது.

    சீரியலில் தற்போது ஒரு புதிய கதைகளும் திறந்திருக்கிறது. ராஜியின் தந்தை வெற்றிவேலுக்கு கேன்சர் என தொடங்கி இருக்கின்றனர். இதை கதிர் கண்டுபிடித்து விடுகிறார். இனி இவர் சேர்ந்து அவர் உயிரை காப்பாற்றி இரு குடும்பமும் சேர்ந்தால் இருக்கும் கதை கூட இல்லாமல் முடிந்து விடுமே. அப்போ சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்ட் தான் போலவே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  • Siragadikka Aasai: மனோஜுக்கு ரெடியான அடுத்த ஜோடி! காணாமல் போன ரோகிணி என்னப்பா?

    Siragadikka Aasai: மனோஜுக்கு ரெடியான அடுத்த ஜோடி! காணாமல் போன ரோகிணி என்னப்பா?

    Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை தொடரில் கடந்த சில எபிசோடுகளாக ரோகிணி மற்றும் மனோஜ் இருப்பவருக்கான விவாகரத்து வழக்கு தொடர்பான கதைக்களமே நகர்ந்து கொண்டு வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்திருக்கிறது சீரியல் குழு.

    சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கியதிலிருந்து ரோகினி சொன்ன பொய்களை மாட்டி விட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டு வந்தனர். ஆனால் இது பெரிய அளவில் இழுவை கொடுத்து சில மாதங்கள் முன்னர் தான் அந்த கதை உடைந்தது.

    டிஆர்பியில் முதலிடத்திலிருந்த சீரியல் இந்த பிரச்சினையால் ஐந்தாவது இடம் கூட பிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. இதனால் ரோகிணியை மாட்டிவிட்டு மீண்டும் முதலிடத்தை பிடிக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்து கதைக்களத்தை மாற்றி இருந்தார்.

    இருந்தும், சிறகடிக்க ஆசை தொடர்ந்து தத்தளித்து தான் வருகிறது. அந்த வகையில் தற்போது மனோஜை தன்னிடம் வைத்துக் கொள்ள ரோகிணியும் அவரிடம் இருந்து விடுபட மனோஜூம் விவாகரத்து வழக்கில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    ஒரு பக்கம் மனோஜ் இருக்கு பெண்பார்க்கும் படலம் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் சிந்தாமணி மற்றும் மீனாவுக்கு இடையேயான தேர்தல் காட்சிகளும் வைக்கப்பட்டு அதுவும் இன்னொரு கதைகளத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது.

    இந்நிலையில் மனோஜ்க்கு தற்போது அமெரிக்கா பெண் ஒருவரை பார்த்து முடிவு செய்துள்ளனர். குடும்பமாக வீடியோ கால் பேசி பெண்ணையும் ஓகே செய்து நிச்சயதார்த்தத்தையும் விரைவில் முடிக்க விஜயா திட்டமிட்டு விட்டார்.

    ஆனால் இதுவரை ரோகிணி கொடுத்த எந்த காட்சிகளும் காட்டப்படாததால் மனோஜ்க்கு இந்த கல்யாணம் நடந்து விடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனாலும் ரோகிணி இதை விட மாட்டார் விட்டு பிடிக்க இ ருப்பாரோ என்ற எண்ணமும் ரசிகர்களிடம் இருக்கிறது.

    விட்ட இடத்தைப் பிடிக்க சீரியல் குழு தொடர்ச்சியாக கதைக்களங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. இதுவாவது மீண்டும் டிஆர்பியில் நல்ல இடம் பிடித்துக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Siragadikka Aasai: மீனாவால் தர்ம அடி வாங்கிய விஜயா? பரபரப்பாகும் தேர்தல் களம்!

    Siragadikka Aasai: மீனாவால் தர்ம அடி வாங்கிய விஜயா? பரபரப்பாகும் தேர்தல் களம்!

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சீன் நம்பர் ஒன் தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் தற்போது தேர்தல் களம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்த சுவாரஸ்ய காட்சிகள் தொடங்கி இருக்கிறது. 

    அதிக எபிசோட்களாக மொக்கை கதையாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலில் தற்போது பூ கடை சங்க தேர்தல் என்ற கதைக்களத்தினை கொண்டு வந்துள்ளனர். மீனாவும் சிந்தாமணியும் இந்த தேர்தலில் மோதிக்கொள்கின்றனர்.

    சிந்தாமணிக்கு தோல்வி பயம் வந்த நிலையில் ஆள் வைத்து குத்த பார்க்க முத்துவை நோக்கி வந்தவரை முன்னால் வந்து மீனா தடுக்க அவருக்கு கத்தி குத்து நடந்து இருக்கிறது. இதை தொடர்ந்து அவருக்கு ஆதரவு பெருகும் என பார்த்தால் ஸ்ருதி செய்த கருத்து கணிப்பில் 35 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.

    இதனால் மீனாவை வெற்றி பெற வைக்க என்ன செய்யலாம் என ப்ளான் செய்து அதற்காக டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் ஒரு பக்கம் சூடு பறக்க செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க விஜயா வெறுப்பில் மீனாவின் போஸ்டர்களை கிழிக்க செல்கிறார்.

    அங்கு வந்த மீனாவின் தோழிகள் விஜயாவை அடி வெளுக்க அய்யோ அம்மா என கதறிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்கிறார். அடி ஓவராக விழுந்து இருக்க வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு இருக்கிறார். முத்து அப்போ வந்து விஜயா பெயரை சொல்லாமல் அண்ணாமலையிடம் நடந்த விஷயத்தை மாட்டிவிட்டு செல்கிறார். 

    இதனால் மீனாவிடம் இனிமேல் இது போல பண்ணாதே என அவரை திட்டிவிட்டு செல்கிறார். மீனா இந்த தேர்தலில் ஜெயிக்க போறாரா என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கும் அளவுக்கு வெறுத்தனமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

    சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    கடந்த சில மாதம் முன்பு வரை சிறகடிக்க ஆசை தொடர் தான் மொத்த சீரியல் டிஆர்பியிலும் டாப் இடத்தினை பிடித்தது. ஆனால் ஒரே கதைக்களம் வில்லிக்கு முக்கியத்துவம் என அந்த சீரியல் தொடர் சறுக்கலை சந்தித்தது. இதனால் டிஆர்பியில் சறுக்கி நான்காம் இடம் மட்டும் பிடித்தது. 

    இதை தொடர்ந்து சீரியல் கதையில் மாற்றம் தொடர்ந்து செய்யப்பட்டது. ரோகிணியின் சீக்ரெட்டுகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டது. ஆனாலும் அது ரசிகர்களிடம் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் கடுப்பை மட்டுமே ஏற்படுத்தியதால் அதுவும் சுவாரஸ்யமாக அமையவில்லை. 

    தொடர்ந்து நான்கு முதல் ஏழாம் இடத்தில் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது. இதனால் ரோகிணிக்கு எதிராக கதையை மாற்றினாலும் அவர்கள் விட்ட இடத்தினை பிடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் ஹீரோ ஹீரோயின் பக்கம் கைவைக்க ப்ளான் செய்துவிட்டதாக தெரிகிறது. 

    பூ சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சிந்தாமணிக்கு எதிராக மீனா களமிறங்குகிறார். இதை தெரிந்துக்கொண்டு அவரை கொலை செய்ய ஒரு ஆளை செட் செய்து களத்திற்குள் இறக்க திட்டமிட்டு விட்டார் சிந்தாமணி. அப்படி மீனாவை கொலை செய்ய வரும் ஆள் முத்துவை குத்த போக நடுவில் மீனா வர இருப்பது போல புரோமோ வெளியாகி இருக்கிறது. 

    இதனால் மீனாவை மொத்தமாக முடித்துவிட ப்ளான் செய்துள்ளார்களா? இல்லை கொலை முயற்சி போல காட்டி ஹாஸ்பிட்டல் காட்சியில் அடுத்த சில வாரங்கள் ஓட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

    Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

    Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தொடங்க இருக்கும் நிலையில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகிவிட்டது. 

    இந்த சீசனிலும் முதலில் ரக்‌ஷன் தான் தொகுப்பாளராக வர இருந்த நிலையில் அவர் படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக OG ஆங்கர் என்ற அடையாளத்துடன் மாகாபா ஆனந்த் கலந்துக்கொண்டு இருக்கிறார். 

    டபுள் போட்டியாளர்கள் என்பதால் இந்த முறை தொகுப்பாளரும் ஜோடியாக வந்துள்ளனர். அதற்காக ஐந்தாவது சீசன் போட்டியாளராக இருந்த சோயா வந்து இருக்கிறார். மேலும் நான்காவது நடுவராக ரோஜா களமிறங்கி இருக்கிறார். 

    கடந்த சீசன் போல மூன்று நடுவர்களான தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் வந்துள்ளனர். போட்டியாளர்களாக சின்னத்திரை நடிகர்களான சங்கீதா , அரவிந்த் சிஜூ, கிரிக்கெட் வர்ணனையாளரான அனிருத் மற்றும் மாடல் சம்யுக்தா கலந்துள்ளனர். 

    காமெடி நடிகையான நிஷா – அவர் கணவர் ரியாஸ் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சுநாத் ராஜேஸ்வரி மற்றும் சோஷியல் மீடியா பிரபலமான சாந்தா மகேந்திரன்,  டிராவி மற்றும் ராஜி கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

    இந்த முறை சமையல் டாஸ்குகளும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் கோமாளிகளில் குரோஷியை தவிர மற்ற எல்லாருமே அதே முகங்கள் தான் என்பதால் காமெடிக்கு யோசிக்க கூட செய்யலாம். 

  • சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

    சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

    Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன் மற்றும் விஜய் டிவியின் சம அளவிலான சீரியல்கள் முதல் 10 இடத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

    பத்தாவது இடத்தில் ஜீ தமிழ் சீரியலின் கார்த்திகை தீபம் 4.92 புள்ளிகளுடன் இருக்கிறது. விஜய் டிவியின் புதிய தொடரான அழகே அழகு ஒன்பதாவது இடத்தில் 5.06 புள்ளிகளுடன் இருக்கிறது. 6.26 புள்ளிகளுடன் சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் எட்டாவது இடம் பிடித்து இருக்கிறது. 

    ஏழாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.36 புள்ளிகளுடன் இடம்பெற்று இருக்கிறது. ஆறாவது இடத்தில் விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் 7.14 புள்ளிகளுடன்  இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் 7.22 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது. 

    நான்காவது இடத்தில் விஜய் டிவியின் நம்பர் ஒன் இடத்தினை தக்க வைத்து இருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். மூன்றாவது இடத்தில் அன்னம் சீரியலும் கயல் சீரியலும் ஒரே இடத்தினை பகிர்ந்து இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியலும் முதல் இடத்தில் மூன்று முடிச்சு சீரியலும் இடம் பிடித்துள்ளது.