Author: adminram

  • Train movie: கன்னகுழிகாரா… ட்ரெய்ன் படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

    மிஷ்கின் இயகத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெய்ன் பட்த்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

    கலைப்புலி தானு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கலையரசன், பப்லு மற்றும் டிம்பிள் ஹாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வழக்கமான தனது பாணியிலிருந்து விலகி கமர்சியலாக எடுத்துள்ளார் மிஷ்கின்.

    விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பாடல் வரிகள் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். கனக்குழிகாரா என்று துவங்கும் இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இப்படத்திற்கு இசையையும் மிஷ்கினே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2025ல் அறிமுகம் ஆன ஹீரோயின்ஸ்…டாப் கியரில் கயாடு

    2025ல் தமிழ் கிட்டத்தட்ட 150 படங்கள் வரை வெளியாகியுள்ளன. அதில் பல படங்கலில் முன்னணி நாயகிகள் நடித்திருந்தனர். சில் படங்களில் புதுமுகங்கள் அறிமுகம் ஆகியிருந்தனர். இந்த ஆண்டு பல புது முகங்கள் வந்தாலும் குறிப்பிட்ட சிலரே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.அவர்களை பற்றி இங்கே காணலாம்.

    கயாடு லோஹர்:

    பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த படம் டிராகன். இப்படத்தில் அறிமுகம் ஆனவ் கயாடு லோஹர். கன்னடத்தில் இபர் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தாலு தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். இப்படம் மூலம் இவர் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். சமூக வலைதளங்களில் இவரை கொண்டாடித்தீர்த்தனர். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

    ருக்மணி வசந்த்:

    இவரும் தமிழில் நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக உருவாகியுள்ளார். கன்னடத்தில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய்சேதுயுடன் ஏஸ் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். ஆனால் ஏஸ் படு தோல்வி அடைந்தது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருந்தார்.காந்தாரா 2 இவரது நடிப்பில் வந்த சூப்பர்ஹிட் படமாகும்.

    கீர்த்தி ஷெட்டி:

    தெலுங்கி கீர்த்தி ஷெட்டி முன்னணி நடிகையாக இருந்தாலும் தம்ழில் அவ்ர் அறிமுகம் ஆகும் படம் வா வாத்தியார். கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தில் இஅவ்ரது கேரக்டர் நன்றாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் படம் வெளியாகும்முன்பே அடுத்த படமாக நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்து வெளிவர உள்ள படம் எல்.ஐ.கே. அனிருத் இசையில் சமீபத்தில் வந்த பாடல் ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீலீலா:

    ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் அறிமுகம் ஆகிறார். தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான இவரது நடனம் பராசக்தியிலும் இடம்பெற்றுள்ளது சமீபத்தில் வந்த பாடல் மூலம் தெரிகிறது.

    மிதிலா பால்கர்:

    இந்தி மற்றும் மராத்தி படங்களில் பிரபலமான இவர் தமிழில் ஓகே எந்தன் பேபி படம் மூலம் அறிமுகம் ஆனார். விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி நாயகனாக அறிமுகமானார். ஆனால் இப்பட்ம் எதிர்பார்த்த அள்வில் வெற்றி பெறவில்லை.

    அஞ்சலி சிவராமன்:

    பேர்ட் கேள் படம் மூலம் அறிமுகம் ஆனவர் அஞ்சலி சிவராமன். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவராலும் பாரட்டப்படட்து.

    சைத்ரா அசார் :

    இந்தி படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழில் 3 படம் மூலம் அறிமுகம் ஆனார்.

  • அப்போது நித்தி அகர்வால்; இப்போது சமந்தா- கூட்ட நெரிசலில் சிக்கும் பிரபலங்கள்

    நடிகர் பிரபாஸ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் தி ராஜா சாப். இந்தப் படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது கூட்ட நெரிசலில் சிக்கினார் நித்தி அகர்வால். அவரிடம் அத்து மீறியும் நடந்துகொண்டனர் ரசிகர்கள்.

    இந்த நிலையில் நேற்று ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சமந்தா. நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் மீட்டு சமந்தாவை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அவரை பாதுகாவர்கள் படாத பாடு பட்டு தான் காரில் ஏற்றி விட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

    இதை கண்ட அவரது பாதுகாவலர்கள் உடனடியாகச் கூட்டத்திலிருந்து நடிகை நிதி அகர்வலை மீட்டு காரில் ஏற்றினர். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம், முகத்தை மூடிய படி அமர்ந்து வேதனை அடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    https://twitter.com/Pokeamole_/status/2002703531611136116?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2002703531611136116%7Ctwgr%5Ebfda047ac1a20ae220fd42dea6cd4f40019efcfd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fhuge-crowd-mob-samantha-in-an-event-1766361960
  • Monisha: 17 வயதில் தேசிய விருது: 21 வயதில் மரணம்- இன்றும் நெஞ்சை விட்டு விலகாத மோனிஷா

    நகக்க்ஷதங்கள் என்ற மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை மோனிஷா உன்னி. அப்போது வயது அவருக்கு 17. முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அவரது இரண்டாவது படமான பெருந்தச்சன் படமும் சூப்பர் ஹிட். அந்த படத்தில் தான் நடிகர் பிரசாந்த் மலையாளத்தில் அறிமுகம் ஆனார்.

    மலையாளத்தை தொடர்ந்து தமிழில் அவர் அறிமுகம் ஆன படம் பூக்கள் விடும் தூது. இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் இசையினை டி.ராஜேந்தர் செய்தார். பாடல்கள் செம ஹிட அடித்தது. ஆனால் படம் சுமாரன வெற்றியையே பெற்றது. இரண்டாவதாக கார்த்திக் உடன் உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் நடித்தார். இந்த படம்தான் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அதிலும் குறிப்பாக அதில் இடம் பெற்ற என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, எனக்குச் சொல்லடி, விஷயம் என்னடி பாடல் இன்றளவிலும் அனைவராலும் கேட்டு கொண்டாடப்படுகிறது.

    தமிழில் முன்னனி நட்சத்திரமாக வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அவர் விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை முடித்து கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மோனிஷாவின் தாயார் மட்டுமே உயிர் பிழைத்தார்.

    திரையுலகில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அன்று கணிக்கப்பட்ட மோனிஷா தனது 21 வயதிலேயே உயிரிழந்தார். இவர் இறந்த பின்பு சரத்குமாருடன் இவர் நடித்திருந்த மூன்றாவது கண் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • Sindhu Dulani: மன்மதன் படத்தில் நடித்த சிந்து துலானி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

    தனுஷ் நடித்த சுள்ளான் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சிந்து துலானி. முதல் படம் சுமாரான வெற்றியை பெற்றபோதிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வனது. மன்மதன், மஜா என சில படங்களில் நடித்தார். இதில் மன்மதன் படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் சுந்தர்.சி நடித்த முரட்டுக் காளை. இதிலும் கிளாமராகவே நடித்திருந்தார்.

    13 ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த சிந்து துலானி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

    மாலத்திவில் சென்றுள்ள அவர் தனது புகைப்படங்களை பகிந்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

  • எப்போ பணம் வேணாலும் தயங்காம கேளுங்க…வெண்ணிற ஆடை மூர்த்தியை நெகிழ வைத்த அர்ஜூன்

    80, 90களில் கமெடி நடிகர்களில் தவிர்க்க முடியாதவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வெண்ணிற ஆடை படம் மூலம் அறிமுகம் ஆனவர் அவர். அந்த படம் ஹிட் அடிக்கவே அவரை வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்க துவங்கினர். தன்னுடைய முகத்தில் சில சேட்டை பாவங்களுடன் வித்யாசமான சப்தங்கள் தந்து நம்மை சிரிக்க வைப்பவர். நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி மற்றும் வடிவேலு என அனைத்து காமெடி நடிகர்களுடன் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் கவர்ந்து வருபவர் அவர். தற்போது வயோதிக காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

    பொதுவாகவே அர்ஜூன் தனது படங்களில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு கேரக்ட கொடுப்பது வழக்கம். கற்பக வந்தாச்சு படத்திலிருந்து துரை, சின்னா,வேதம் என பல படங்களிலும் அவருக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க் வந்தார் அர்ஜூன்.

    இந்த நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, அர்ஜூன் சார பத்தி ஒன்னு சொல்லியே ஆகனும். முதலில் அவர் படத்தில் நடிக்கும்போது சம்பளம் பேசிக் கொள்வேன். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்படபின்பு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டேன். அர்ஜூன் படமா எனன் அம்ப்ளம்னாலும் ஓகேனு சொல்லிடுவேன். அப்படி இருக்கையில் ஒரு படத்தில் அவருடன் நடித்தபோது எனக்கு சம்பளம் அதிகமாக கொடுத்துவிட்டார். அது குறித்து அவர்ரிடம் கூறினேன். அதற்கு அவர் உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துனக்க.. மீதியை சின்ன நடிகர்களுக்கு கொடுத்துடுங்க என்றார். மேலும் சர் உங்களுக்கு எப்போது பணம் வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்க என்றார். அவ்வலவு நல்ல மனிடஹ்ர் அர்ஜூன் சார் என்றார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

  • இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம்: சிறை படத்தின் முதல் விமர்சனம் இதோ

    விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் சிறை.

    கும்கி படம் முலம் அறிமுகம் ஆனவர் விக்ரம் பிரபு. முதல் படமே சூப்பர் ஹிட் மட்டுமின்றி சிவாஜி குடும்பத்திலிருந்து வந்ததால் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தது அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

    இந்த சூழ்நிலையில் அவர் நடிப்பில் வெளியான டாணாகாரன் என்ற படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஓடிடியில் வெளியான இப்படம் திரையரங்கில் வெளிவந்திருந்தால் நிச்சயம் ஹிட் அடித்திருக்கும் என்று பேசப்பட்டது.

    மீண்டும் ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ள படம் சிறை. இப்படத்தில் இன்னொரு நாயகனாக

    விஜய் நடித்த மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல உள்ளிட்டப் படங்களை தயாரித்த எஸ்.எஸ்.லலித்குமாரின் மகன் அக்ஷய்குமார் நடிக்கிறார். நாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வெற்றி மாறனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இப்படத்தையும் லலித்குமார் தயாரித்துள்ளார்.

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தை சமீபத்தில் பார்த்தாராம். இது குறித்து அவர் தனது ட்விடடர் பக்கத்தில் கூறியபோது,

    சிறை இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மற்றும் அவரது டீம் படத்தை சிறப்பாக எடுத்துள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் உடன் நடித்த அனைவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் தனது திரை வாழ்க்கையை இப்படியொரு படத்தில் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

    இவரது இந்த கருத்தை பார்க்கையில் படம் நிச்சயம் வெற்றியடையும் என்பது தெரிகிறது.

  • Rachitha Mahalakshmi: ஒளியிலே தெரிவது தேவதையா?- ரச்சித்தா மகாலட்சுமி கலக்கல் போட்டோஸ்

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடரிலும் நடித்திருந்தார்.

    சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    சின்னதிரையை தொடர்ந்து வெள்ளி திரையிலும் கால் பதித்தார் ரச்சித்தா மகாலட்சுமி. உப்பு கருவாடு படம் மூலம் அறிமுகம் ஆனாலும் சமீபத்தில் வந்த பயர் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் படு கிளாமர் வேடத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது சன் டீவியில் திகில் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆர்டினை பறக்கவிட்டு வருகின்றனர்.

  • இங்கே செய்யுற மாதிரி அங்கே செய்ய முடியுமா? நயன்தாரா குறித்து பிரபல பத்திரிக்கையாளர் கருத்து

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகம் ஆனவர் அவர். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்த படமும் சூபப்ர் ஹிட. இதையடுத்து முன்னணி இடத்தை பிடித்தார் நயன்தாரா.

    விஜய், அஜித், தனுஷ் மர்றும் சிம்பு என முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நாயகியாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றுவந்தார்.

    ஒரு கட்டத்தில் கதையின் நாயகியாக நடிக்க தொடங்கினார். இமைக்கா நொடிகள், அறம் என பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் வெற்றியும் பல படங்கள் தோல்வியும் அடைந்தன. தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், பால்கிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாராவை பொருத்தவரை தான் நடிக்கும் எந்த படம் தொடர்பான விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் தெலுங்கில் அவ்வாறு அவர் நடந்துகொள்வதில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். இவரது இந்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன.

    இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறுகையில் தமிழில் மட்டுமே அவர் பல கண்டிசன்கள் போடுகிறார். தெலுங்கில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அங்கு அவர் மசாலா படங்களிலேயே நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரது அந்த கண்டீசன்களை தெலுங்கு ஹீரோக்களே ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.