Author: sankaran v

  • ஊரை ஏமாத்தலாம்… என்னை ஏமாத்த முடியாது..! வாக்குச்சாவடியில் பொளந்து கட்டிய டிஆர்!

    ஊரை ஏமாத்தலாம்… என்னை ஏமாத்த முடியாது..! வாக்குச்சாவடியில் பொளந்து கட்டிய டிஆர்!

    இன்று காலை முதலே பரபரப்பாக வாக்குப்பதிவு அரங்கேறிய வண்ணம் உள்ளது. திரை பிரபலங்கள் பலரும் சென்னையில் வாக்களித்தனர். அஜித், விஜய், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திரிஷா, இளையராஜா உள்பட பலர் வாக்கு அளித்தனர்.

    நடிகர் டி.ராஜேந்தர் வாக்களிக்கும்போது ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த இடமே ஒரு நிமிடம் அதிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

    சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த டி.ராஜேந்தர் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை எங்கே என்பதே அவரது வாதமாக இருந்தது. வயதானவங்களுக்கு என்ன மரியாதை? எவ்வளவு நேரமா உட்கார்ந்துருக்காங்க. எல்லாரும் ஒரே கியூவுலதான் நிக்கணுமா? எங்கேயா கியூ போட்டுருக்காங்க? போட்டதைக் காட்டுங்க. நீயும் தாடி நானும் தாடி. கேள்வி கேட்பேன். ஊரை ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது.

    அதாவது அப்படி தூண்டிவிட்டு டிஆர்.கோபப்பட்டார்னு நியூஸ் போட முடியும். உன் வேலையை நீ பார்த்துட்டேல்ல. சொன்னது வேற. செய்றது வேற. உன் பேரு என்னய்யா? சரவணன். நீ சரவணன். நான் சர்ரு சர்ருன்னு கேள்வி கேட்குறவன். தெரியுதா? சரசரசரன்னு கேள்வி கேட்குறவன். அப்புறம் சொடக்கு போட்டு எதிரில் நீட்டிய பத்திரிகையாளர்களின் மைக்கை விலக்கினார். அந்த இடமே ஒரு நிமிடம் ஆடிப்போனது.

  • இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் செட்டாகாத பாடல்… பிரபலம் தந்த சுவாரசிய தகவல்

    இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் செட்டாகாத பாடல்… பிரபலம் தந்த சுவாரசிய தகவல்

    பண்டை தமிழர் வாழ்வில் இருந்த மெல்ல மறைந்து போன கொலைச்சிந்து வடிவத்தை மீட்டெடுத்த பெருமை இசைஞானி இளையராஜாவையேச் சேரும். ஏற்கனவே இளையராஜாவினன் இசையில் மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும் காட்டுவழி போற பொண்ணே பாடல் இந்த வடிவத்தில் இருந்தது. இன்னொரு பாடல் உண்டு. இளையராஜாவைத் தவிர வேறு யாரும் இந்தப் பாட்டைப் பாடி இருந்தாலும் அந்தளவுக்கு யதார்த்தமான கிராமத்து நடை, ஒரு வெள்ளந்தியான மனிதனின் நிலை கிடைத்திடுமா என்பது சந்தேகம்.

    அப்படி ஒரு பாடல் தான் வைரமுத்து எழுதியது. கரிமேடு கருவாயன் படம் 1986ல் விஜயகாந்த், நளினி நடிப்பில் வெளியானது. இளையராஜா இசை அமைத்துள்ளார். மதுரை அருகில் உள்ள கருவாயன் என்ற வீரமனிதனின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது. 2வகையான கதையைச் சொல்றாங்க. ஒண்ணு அவர் சோழவந்தானில் வாழ்ந்தவர் என்பது. இன்னொன்னு பரவை முனியம்மாவின் கொலைச்சிந்து வடிவத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர் என்ற கதை. இன்னொன்றும் சொல்றாங்க.

    ஒரு கதை சுவாரசியமாக வர கொஞ்சம் கொஞ்சமாக இட்டுக்கட்டி பாடும்போது வரலாற்றில் சுவாரசியமான விஷயங்கள் சேர்க்கக் கொஞ்சம் மாற்றுவாங்க. ஆனால் கரிமேடு கருவாயன் வாழ்ந்தது உண்மை. அவர் தங்கச்சிக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ரொம்ப எளிமையான மனிதர். தங்கை வேலை பார்த்த இடத்தில் பண்ணையார் கற்பழிக்கிறார்.

    அவரைக் கொல்றாரு கருவாயன். போலீஸ் அவரைத் தேடி சுட்டுக் கொல்றாங்க. கருவாயன் கையில் அரிவாள், துப்பாக்கி கிடையாது. கவன் வில் தான் உண்டு. இவருக்கு தென்னை மரம் ஏறும் வழக்கம் உண்டு. அங்கு போய் ஒளிந்து கொள்வார். போலீஸே பிடிக்க முடியாது. இந்தப் படத்தில் வரும் கொலைச்சிந்து வடிவ பாடல் இதுதான். அப்படி இட்டுக்கட்டி பாடிய இளையராஜா பாடல்தான் இது. கதை கேளு கதை கேளு கரிமேடு கருவாயன் கதை கேளுன்னு பாடுறாரு.

    இந்தப் பாடலில் கட்டுக்கதை அல்ல. ஒட்டுக்கதை அல்ல. கண்டு கேட்டு வந்தேன் ஒருவாரு. வைகை நதிக்கரை ஓரத்துல அங்கு வாழ்ந்து ஜெயித்தவன் வரலாறுன்னு வரிகள் வருகிறது. அவனைப் போலீஸ் சுட்டுக் கொல்லுது. தங்கச்சியைப் போலீஸ் கற்பழிக்கிறான். அதென்ன வாழ்ந்த ஜெயித்தவன் வரலாறுன்னு கேட்கலாம். வாழ்ந்து தன் குடும்பத்தை அழிச்சவனை ஜெயிச்சவன் வரலாறுன்னு கவிஞர் அழகா சொல்லிருக்காரு. உண்மையிலே அவன் கள்ளன் இல்ல. மதுரை ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை என்ற இடத்தில் யா யா யான்னு இளையராஜா ராகம் போட்டு இழுத்துப் பாடுவார்.

    அது அவ்ளோ ரசனையாக இருக்கும். அதே போல அடுத்த வரிகளில் போலீஸ்காரனால எல்லாம் கருவாயனைப் பிடிக்க முடியாது. அவன் சாதாரண மனுஷன் இல்லேன்னு எள்ளி நகையாடுவது போல இருக்கும். பாடலில் கருவாயனின் தனித்திறமை, காதல் எல்லாவற்றையும் நயம்பட பாடியிருப்பார் இளையராஜா. பாடல் முழுக்க கொலைச்சிந்து வடிவில் அவ்வளவு அழகியலும், யதார்த்தமும் கலந்து இளையராஜாவும், வைரமுத்துவும் தந்து இருப்பார்கள். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • சோ கேட்ட அந்தக் கேள்வி… தங்கவேலு சொன்ன சூப்பர் பதில்!

    சோ கேட்ட அந்தக் கேள்வி… தங்கவேலு சொன்ன சூப்பர் பதில்!

    ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்னு நம் முன்னோர்கள் சொல்வாங்க. அது நிஜம் தான். நெல்லைக் கொட்டுனா அள்ளிடலாம். சொல்லைக் கொட்டுனா அள்ள முடியுமா? அதனால எந்த ஒரு வார்த்தையையும் பார்த்து தான் பேச வேண்டும். தேவையில்லாத வார்த்தைகள் பேசுவதால எத்தகைய பின்விளைவுகள் உண்டாகும்னு பார்க்கலாமா..!

    நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவைப் பொருத்தவரைக்கும் ”நீ உருப்படவே மாட்டே. நாசமாப் போயிடுவ…” போன்ற வார்த்தைகளை எந்தக் காலத்திலும் அவர் பேசவே மாட்டார். படங்களில் அதுமாதிரி வசனங்கள் இருந்தாலும் கூட அதை எல்லாம் தவிர்க்கப் பார்ப்பார் தங்கவேலு. அதைப்பற்றி ஒருநாள் பேசிக்கொண்டு இருந்தபோது சோ அவரிடமே கேட்டார்.

    ”இதுமாதிரி பேசுறதால நெஜமாகவே அடுத்தவங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்னு நினைக்கிறீங்களா?”ன்னு கேட்டார். நினைக்கிறது மட்டும் இல்ல. என் வாழ்க்கையிலயே அதுமாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்குன்னு சோ விடம் சொன்னார் சோ.

    ஒரு சமயம் என் கையில காசு இல்லாம இருந்தபோது என்எஸ்.கிருஷ்ணன்கிட்ட உதவி கேட்டுப் போனேன். ஒரு 200 ரூபாய் இருந்தா கொடுங்கன்னு அவரிடம் கேட்டேன். உடனடியாக பாக்கெட்டில் இருந்து 200 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்ததோடு நிற்கல.

    ”இந்தா 200 ரூபாய். என் மகாலெட்சுமியையே எடுத்து உன் கையில கொடுத்து விட்டேன்”னு சொல்லிக் கொடுத்தார். அப்படி அவர் கொடுத்ததுக்கு அப்புறம் அவர் வாழ்க்கையிலேயே பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பணத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். இதுக்கு என்ன சொல்றது?

    இதனாலதான் அறம் தவிர்க்கும் வார்த்தைகளை நான் எப்பவுமே பேசுவதில்லை. நானும் பேச மாட்டேன்னு சோவுக்கு விளக்கம் கூறினாராம் கே.ஏ.தங்கவேலு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • சினிமா உலகில் ஸ்ரீதர் நுழைந்த கதை… நடிகனாக விரும்பியவருக்கு அடித்த லக்!

    சினிமா உலகில் ஸ்ரீதர் நுழைந்த கதை… நடிகனாக விரும்பியவருக்கு அடித்த லக்!

    தமிழ்த்திரை உலகிலே பல சாதனைகளைச் செய்த புதுமை இயக்குனர் ஸ்ரீதர். கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் உள்பட பல வெற்றிகரமான படங்களை இயக்கிய ஒரு பெரிய லெஜண்ட் இயக்குனர் ஸ்ரீதர். இவர் சினிமா உலகிலே எங்கே தனது வாழ்க்கையைத் தொடங்கினார்னு தெரியுமா? எப்படியாவது சினிமாவில் சேர்ந்து நடிகனாகி விட வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.

    அவர் வாய்ப்பு தேடி அலைந்தபோது அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. அப்போது அவர் கண்ணில் பட்டதுதான் ஜூபிடர் பிக்சர்ஸ் விளம்பர போர்டு. அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் எப்படியாவது சினிமாவில் சேர்ந்துடலாம்னு அங்கு வேலை தேடினார் ஸ்ரீதர். அங்கு அவருக்கு தரப்பட்டது ஃபிலிம் ரெஃப்ரசன்டேட்டிவ் வேலை. அந்தக் காலகட்டத்துல வேலைக்காரி என்ற படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அந்தப் படம் மிகவும் வெற்றிகரமாக தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தது.

    அந்தப் படத்துக்கு ரெஃப்ரசன்டேட்டிவாகப் போன ஸ்ரீதருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் இரண்டரை ரூபாய். அந்த வேலை ஸ்ரீதருக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அதுக்கு முக்கியமான காரணம் நிறைய நேரம் அவருக்குக் கிடைத்தது. மதியம் 2மணிக்கு படம் ஆரம்பிக்கும்போது தியேட்டருக்குப் போனா போதும். அப்புறம் அங்கு ஒரு மணி நேரம் இருந்துட்டு திரும்பிடுவாரு. திரும்ப மாலை 6மணிக்குப் போகணும். இரவு காட்சியில் பாதி வரை இருந்துட்டு திரும்ப தன்னோட அறைக்கு வந்துடுவார். நேரம் நிறைய கிடைத்ததால அதைப் பயன்படுத்திக் கொண்டு லட்சியவாதின்னு ஒரு அருமையான கதையை எழுதி முடித்தார் ஸ்ரீதர்.

    அந்தப் படம்தான் ரத்த பாசம் என்ற பெயரில் படமாகி தமிழ் சினிமா உலகின் கதவை ஸ்ரீதருக்குத் திறந்து விட்டது. அந்தக் கதையைக் கொண்டு போய் சேர்க்கறதுக்கு ஸ்ரீதர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் காலகட்டத்தில் ஸ்ரீதர் ஊரான செங்கற்பட்டுல இருந்துதான் பேசும்படம் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு இருந்த சம்பத்குமார் என்பவர் வந்து கொண்டு இருந்தார். அவர் அந்த ஊர்வாசி. அதனால அவருக்கிட்ட போய் சினிமா உலகத்துல நான் சேர ஏதாவது வழி காட்டுங்கன்னு ஸ்ரீதர் கேட்டார். அப்போ ரொம்ப பிரபலமாக இருந்த நாடககம்பெனி டிகே பிரதர்ஸ். இந்தக் கதையை அவங்க நாடகமா போட்டாங்கன்னா நிச்சயமா உங்க வாழ்க்கையில திருப்புமுனை ஏற்படும்னு ஸ்ரீதரை அவரை சந்திக்க அனுப்பி வைத்தார். டிகே.ஸ்கூல்ல ஸ்ரீதர் சந்தித்த முதல்; நபர் டிகே.சண்முகம்.

    கதையை முழுமையா எழுதிட்டீங்களான்னு கேட்டதற்கு, கதையை முழுமையா எழுதிட்டேன். இப்ப அது இல்ல. கதைச்சுருக்கம் மட்டும்தான் கையில இருக்குன்னு சொன்னார் ஸ்ரீதர். அந்த 3 பக்க கதைச்சுருக்கத்தை ஸ்ரீதர் கொடுத்ததும் அதைப் படித்துப் பார்த்தார் டிகே.சண்முகம். அந்த இளைஞனிடம் ஒரு ஃபயர் இருக்கு என்பதைத் தெரிந்து கொண்டார். முழு கதையும் கொண்டு வாங்க. நாடகமாகப் போடறதுக்கு யோசிக்கலாம் என்றவர் ஸ்ரீதரிடம் இருந்து முழு கதையையும் வாங்கிப் படித்துப் பார்த்தார். வாழ்க்கையில் பிறக்கும்போதே ஒருவன் கெட்டவனா பிறக்குறது இல்லை.

    சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுது என்பதுதான் ஸ்ரீதர் எழுதி இருந்த கதையின் மூலக்கரு. கரூர் டிகே.சண்முகத்துக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருந்ததால இந்தக் கதையை நாங்க நிச்சயமாக நாடகமா போடுறோம். நீங்க வச்சிருந்த லட்சியவாதிங்கற பேரு பொருத்தமாக தோணல. அதனால ரத்த பாசம்னு பேரை மாற்றி நாடகமாகப் போட்டார் டிகே.சண்முகம். அந்த நாடகத்தின் வெற்றி தான் ஸ்ரீதருக்கு சினிமா உலகிலே கதவைத் திறந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் இப்படி சொல்கிறார்.

    இது ஒரு ஸ்பை திரில்லர் படம். படத்தோட ஆரம்பத்துல ஹீரோ ரா ஏஜென்ட்டா வாராரு. ஜி20 மாநாடு சென்னையில் நடக்குது. இந்தியாவுல நியூக்ளியர் டிவைஸ ஒரு ஏஜென்ட் பாதுகாத்து வர்றாரு. அவரையும், அந்த டிவைஸையும் கடத்திக் கொண்டு போய் வெளிநாட்டுல வச்சிடுறாங்க.

    இந்த ஏஜென்டையும், டிவைஸையும் பாதுகாப்பா கொண்டு வரணும்னு ஒரு வேலையை ஹீரோக்கிட்ட கொடுக்குறாங்க. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. முதல் பாதியில் நிறைய கேரக்டர்கள். ஓரளவு ஓகே. 2வது பாதியில சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வச்சி, டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சி கதையைவே குழப்பிட்டாங்க. அதிலும் மெய்னா தங்கச்சி கேரக்டரைக் கொண்டு வந்து காட்டுனதுக்கு பிறகு பல்லை இளிச்சிடுது சஸ்பென்ஸ்.

    படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரைக்கும் டுவிஸ்ட் வைக்கிறேன் பாருன்னு கடைசில ஒரு டுவிஸ்ட் வைக்கிறாங்க. அது தேவையே இல்லாத டுவிஸ்ட். இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்த்துட்டு நாம வெளியே வரும்போது நம்முடைய ராணுவ வீரர்கள் தியாகம் பண்ணி இருக்கணும். இந்த மாதிரி ஏஜென்ட்டுகள், உளவாளிகள் எல்லாம் எவ்ளோ உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பாத்திருப்பாங்க அப்படிங்கற சந்தோஷத்தோட, திருப்தியோட வரணும். ஆனா இவங்க என்ன பண்ணிருப்பாங்கன்னா நம்ம ஏஜென்ட் எல்லாரையுமே டபுள் ஏஜென்ட் மாதிரி காட்டுறாங்க. அவங்களைப் பார்த்து பயப்படுற மாதிரி படம் எடுத்து வச்சிருக்காங்க.

    இவங்க ஹாலிவுட் மாதிரி ஸ்பை திரில்லர் படம் எடுக்கப் போறேன்னு கிளம்புனது எல்லாம் தப்பு கிடையாது. அது ரொம்ப ஈசியான வழி. நிறைய படம் ரெஃப்ரன்ஸ் இருக்கு. அதைப் பார்த்து ஒழுங்கா ஒரு கதையை எழுதி இருக்கலாம். குறைஞ்சது ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுதி இருக்கலாம். இவங்க போட்டு குழப்பி சாகடிச்சிட்டாங்க. இந்தப் படத்துக்கு எல்லாம் ஹீரோக்கு எதுக்கு பெரிய ஃபேமிலி பேக்ரவுண்டு ஸ்டோரி?

    வில்லனுக்கு எதுக்கு பிளாஷ்பேக்.? இது மாதிரி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் படத்துல வச்சி கடுப்பேத்தி விட்டாங்க. ஹீரோயிசம் பண்றேங்கற பேருல ஒரு சாகசம் பண்றாரு. சி4 பாம் நிலத்துல வெடிச்சா பெரிய சேதம் வரும்னு அதைக் கையிலே எடுத்துப் போய் நடுக்கடல்ல வெடிக்க வைக்காரு. அது பயங்கரமா வெடிக்கும். வெடிச்சி அடுத்த செகண்டே ஹீரோ உசுரோட வர்றாரு.

    எப்படிடா தப்பிச்சி வந்தாருன்னு பார்த்தா அவரு அண்டர்வேர்ல்டு ஸ்பெஷலிஸ்ட். தண்ணிக்குள்ள தம் கட்டி நீச்சல் அடிச்சி வருவாரு. திரைக்கதையில கோட்டை விட்டுட்டாங்க. படத்துல நிறைய கிரின்ச் சீனையா வச்சி படத்தையே காலி பண்ணிட்டாங்க. படம் முழுக்க வயிறு முட்ட பொங்கலைத் தின்னுட்டு உட்கார்ந்து பார்த்த மாதிரியே இருந்துச்சு என்கிறார் புளூசட்டை மாறன்.

  • எம்ஜிஆரை நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் ஆக்கியது அவர்களா? அட அவரே சொல்லிட்டாரே!

    எம்ஜிஆரை நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் ஆக்கியது அவர்களா? அட அவரே சொல்லிட்டாரே!

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழ்சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டதற்குப் பின்னால் பல திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார். ஒரு சில படங்களை இயக்கி இருக்கிறார். என்றாலும், தயாரிப்பாளர் என்று அவரது பெயர் முதல் முதலாக இடம்பெற்ற படம்னா நாம் என்ற படம்தான்.

    எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி, இயக்குனர் காசிலிங்கம், பத்திரிகையாளர் ராஜாராம் நால்வரும் சேர்ந்து உருவாக்கியதுதான் மேகலா பிக்சர்ஸ் என்ற நிறுவனம். இது ஜூபிடர் பிக்சர்ஸோடு சேர்ந்து இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் நாம். இந்தப் படத்தின் துவக்க விழா நெப்டியூன் ஸ்டூடியோவில் நடைபெற்ற போது தான் அந்தப் படத்திலே தயாரிப்பாளராக இணைந்தது பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் எம்ஜிஆர்.

    ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என்னை கதாநாயகனாக்கிய நிறுவனம். அதைத் தொடர்ந்து மர்மயோகி என்ற படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். நடிக்க வாய்ப்பு கொடுத்தது மட்டும் இல்லாம அந்தப் படத்தில் ஊதியத்தையும் எனக்குக் கூடுதலாகக் கொடுத்தார்கள் என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு தமிழ் சினிமாவிலே எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள நடிகனா இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணம் ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகளான முகைதீனும், சோமசுந்தரமும்தான்.

    நான் உங்களுக்கு ரொம்பவே நன்றி கடன் பட்டுருக்கேன். என்னைக் கதாநாயகனாக்கியதோடு மட்டும் நிற்காமல், ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலே மாதச்சம்பளத்திற்குப் பணியாற்றிக் கொண்டு இருந்த என்னை இந்தக் கூட்டுத் தயாரிப்பிலே முதலாளியாகவும் அவர்கள் ஆக்கி இருக்கிறார்கள். முதலாளி, தொழிலாளின்னு எல்லாம் வித்தியாசம் பார்க்காம நடிகனும், தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று நினைச்சாங்களே. அந்த பெருந்தன்மையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை என்று அந்த விழாவிலே உணர்ச்சி பொங்க பேசி இருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

  • விஜயகாந்த் திருமணத்தில் ராமராஜன் நளினி…! வைரல் போட்டோ!

    விஜயகாந்த் திருமணத்தில் ராமராஜன் நளினி…! வைரல் போட்டோ!

    தமிழ்த்திரை உலகில் ‘கருப்பு எம்ஜிஆர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் விஜயகாந்த். இன்று அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் அழிவதில்லை. அந்த அளவு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. 1990ல் அவருக்கு திருமணம் நடந்தது. பிரேமலதாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வந்த விஜயகாந்த் திரையுலகில் படிப்படியாக முன்னேறினார். அப்போது ஒரு பிரபல நடிகையுடன் காதல் கிசு கிசு வந்தது. இதற்கிடையில் பிரேமலதாவை பெண் பார்க்கப் போய் அவர்களுக்குள் பிடித்துப் போய் கல்யாணம் நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ராமராஜன், நளினி கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

    திருமணத்திற்கு முன்பு விஜயகாந்துக்கு ராதிகா உடன் காதல் இருந்ததாம். அது தோல்வியில் முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. விஜயகாந்தின் உழவன் மகன் படத்தைப் பார்த்து விட்டு தொடர்ந்து விஜயகாந்த் ரசிகையாகி விட்டாராம் பிரேமலதா. திருமணத்திற்கு பிறகு விஜயகாந்துக்கு வரும் ரசிகைகளின் கடிதங்களை பிரேமலதா தான் படிப்பாராம்.

    விஜயகாந்த் கலைஞரின்பால் ஈர்க்கப்பட்டவர். ராமராஜன் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அவரது கட்சித் தொண்டரும்கூட. இப்படி இருவரும் வேறு வேறு கொள்கையில் இருந்தவர்கள். அப்படி இருக்க எப்படி விஜயகாந்த் கல்யாணத்தில் ராமராஜனும், நளினியும் வந்தார்கள் என்றும் பார்க்கப்படுகிறது. அப்போது விஜயகாந்த் புகழின் உச்சியில் இருந்த நேரம் ராமராஜன் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் முன்னேறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • ஒரே நிமிடத்தில் பாடல் ரெடி… உரையாடலின் போதே எழுதி அசத்திய கண்ணதாசன்!

    ஒரே நிமிடத்தில் பாடல் ரெடி… உரையாடலின் போதே எழுதி அசத்திய கண்ணதாசன்!

    கவிஞர் கண்ணதாசன் எந்தளவுக்கு வேகமாக பாடல்களை எழுதக்கூடியவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாடலை உருவாக்கி விடுவார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைத் தான் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர் முகைதீனுடைய மகன் அபிபுல்லா ஒரு கட்டுரையில் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

    ஒரு நாள் கண்ணதாசனுடன் அமர்ந்து அபிபுல்லா பேசிக்கொண்டு இருந்தபோது தயாரிப்பாளர் மாயாண்டி ஒரு துண்டுச்சீட்டை கண்ணதாசனிடம் நீட்டினார். துண்டுச்சீட்டுல எந்த மாதிரியான சூழலுக்கு அவசரமாக ஒரு பாடல் தேவைப்படுகிறது என்பதை விளக்கமாக எழுதியிருந்தார் மாயாண்டி.

    அப்போது அங்கிருந்த ஸ்டூடியோவில் இருந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. அவர்கள் பேசும்போது அப்படிப் பார்த்தாலும் தப்பு தான். இப்படி பார்த்தாலும் தப்பு தான் என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பேசியுள்ளனர். அதைக் கவனித்துக் கொண்டு இருந்த கண்ணதாசன் அடுத்த ஒரு நிமிடத்தில் பாடல் எழுதத் தொடங்கி விட்டார்.

    ”அப்படிப் பார்த்தாலும், இல்ல இப்படிப் பார்த்தாலும் பெண்களின் சொற்படி ஆடும் ஆடவர் எல்லாம் அப்புறம் இப்புறம் தப்புவதில்லை” என்று பாடலின் முதல் நான்கு வரிகளை எழுதினார் கண்ணதாசன். அடுத்து எழுதிய நாலு வரி தான் அசத்தல். ”கைப்பிடி நாயகன் காதலுக்காக கண்ணகி காத்திருந்தாள். அவள் காதலைத் தள்ளிய கோவலன் மார்பில் மாதவி சாய்ந்திருந்தாள். அப்போதும் அங்கு ஆண்டது எங்கள் அல்லிப் பரம்பரை தான்”.

    என்ன ஒரு கவிநயம் பாருங்கள். இந்தப் பாடல் கண்ணதாசனும், அபிபுல்லாவும் பேசிக் கொண்டு இருக்கும்போது எழுதப்பட்டது. பேச்சுக்கிடையே எழுதப்பட்ட பாடல்னு யாராவது நம்புவார்களா? ஆனால் அங்கு தான் கண்ணதாசன் மற்ற கவிஞர்களிடம் இருந்து உயர்ந்து நிற்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

  • விக்ரம் படத்துக்கு பிரம்மாண்ட விளம்பரம்… வியந்து போன நடிகர் செய்த தரமான சம்பவம்!

    விக்ரம் படத்துக்கு பிரம்மாண்ட விளம்பரம்… வியந்து போன நடிகர் செய்த தரமான சம்பவம்!

    சினிமா உலகத்தைப் பொருத்தவரைக்கும் எந்தக் காலகட்டத்திலும் பெருந்தன்மையான நடிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம்.

    சுசி கணேசன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் விக்ரம் நடித்த படம் கந்தசாமி. இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா நடித்து இருந்தார். அந்தப் படத்துக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.20 லட்சம். அந்தத் தொகையைப் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே தாணு அவருக்குக் கொடுத்து விட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் தாணு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தார். அவர் விளம்பரம் செய்த பாணியைப் பார்த்து வியந்த கிருஷ்ணா தனது நெருங்கிய நண்பரை அழைத்தார்.

    ‘இந்தப் படத்துக்கு நான் 20 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கேன். அவர் விளம்பரம் செய்றதைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு. இவ்ளோ விளம்பரம் செய்றதுக்கு அவருக்கு காசு வேணாமா? அதனால நான் என்னோட சம்பளத்தை அவ்ளோ வாங்கிக்க விரும்பல. கொஞ்சம் குறைச்சிக்க விரும்புறேன். எனக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் இருந்தா போதும். அதனால வாங்கின சம்பளத்துல இருந்து 10 லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுக்குறேன்.

    இதைத் தாணுவிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்று சொல்லி அந்த நண்பர்கிட்ட 10 லட்ச ரூபாயைக் கொடுத்து இருக்கிறார் கிருஷ்ணா. எப்படிப்பட்ட பெருந்தன்மைன்னு பாருங்க. நடிகர் கிருஷ்ணாவுடன் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. அவரு மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்னா திரைப்படத்தோட வெற்றி தோல்வியை அவரு மாதிரி நிதர்சனமாக யாரும் பேச முடியாது.

    அவர் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருடைய நண்பர்கள் எல்லாம் அவருடைய படங்களை சுமாராக ஓடுவதாகச் சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் கிருஷ்ணா. எங்கே படம் ஓடுது? ஏன் சும்மா சொல்றீங்கன்னு அவர் முகத்துக்கு நேராக சொல்லக்கூடியவர்தான் கிருஷ்ணா. அது மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது என்பது மிகவும் அரிது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

  • ஜனநாயகன் விவகாரத்தில் இயக்குனர் சொன்ன தகவல்… படம் எப்போ ரிலீஸ்?

    ஜனநாயகன் விவகாரத்தில் இயக்குனர் சொன்ன தகவல்… படம் எப்போ ரிலீஸ்?

    விஜய் அரசியலில் முழுமூச்சாக இறங்கி விட்டார். கடைசி படம் ஜனநாயகன். அதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு திடீர் என சென்சார் ரூபத்தில் பிரச்சனை. அது தான் பத்தாதுன்னு பார்த்தா இப்போ முழு படமும் லீக். இதென்னப்பா இப்படி ஒரு சோகம் விஜய்க்கு? ஒருவேளை அரசியல் காழ்ப்புணர்ச்சியா இருக்குமோ என்றெல்லாம் பலரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் சொல்வது என்னன்னு பாருங்க.

    ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன் உள்பட பலர் நடித்த படம் ஜனநாயகன். இது கடந்த பொங்கல் அன்றே வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் சென்சார் சர்டிபிகேட் சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை. தேர்தலுக்குப் பிறகு மே 2வது வாரம் படக்குழு வெளியிடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் 5 நிமிடக் காட்சிகள் கசிந்தன.

    தொடர்ந்து முழு படமும் லீக்கானது. இது படக்குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயின் கடைசி படத்தை எவ்வளவு தான் டார்கெட் செய்வீர்கள் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கண்டனம் தெரிவித்தார். படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன்னும் லீக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் வெளியீட்டுக்கு முன்பே ஜனநாயகன் படம் கசிவது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவை சுமந்து செல்கிறது. திரைப்படத்தைப் பகிராமல் ஆதரவைத் தாருங்கள் என வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.