Tag: ajithkumar

  • விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    நடிகர் அஜித்தும், விஜயும் சமகாலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். எம்ஜிஆருக்கு சிவாஜி போல, ரஜினிக்கு கமலை போல, விஜய்க்கு போட்டி நடிகராக அஜித் இருந்தார்.

    அதனால்தான், இருவரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.
    அதேநேரம் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. விஜய் அரசியல் கட்சி துவங்கிய போது முதல் ஆளாக திரையுலகில் இருந்து அஜித் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒரு பேட்டியில் கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே காரணமில்லை என அஜித் கூறினார்.

    அதேபோல் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் சொன்னதாக செய்திகள் வெளியான போது உடனே அதை மறுத்து செய்தி வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்களும் அஜித்தை கொண்டாட துவங்கிவிட்டனர். இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

    அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபலமான நடிகர் குணச்சித்திர நடிகராக நடிக்கவிருந்தார். ஆனால் அந்த நடிகர் தொடர்ந்து விஜயை பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டே இருந்தால் கடுப்பான அஜித் ஆதிக்கை அழைத்து ‘அவர் விஜயை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார். படத்திலிருந்து அவரை தூக்கிடுங்க’ என சொல்லிவிட்டாராம்.

    இப்போது இதையும் விஜய் ரசிகர்கள்கொண்டாடி வருகிறார்கள்.. அந்த நடிகர் அனேகமாக பிரகாஷ்ராஜாக இருக்கலாம் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • நண்பர்களுக்கு திருமண நாள் பார்ட்டி கொடுத்த அஜித்!.. வைரல் போட்டோ…

    நண்பர்களுக்கு திருமண நாள் பார்ட்டி கொடுத்த அஜித்!.. வைரல் போட்டோ…

    30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர் அஜித்குமார். அமராவதி படத்தில் அறிமுகமாகி அதன்பின் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருகட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். விஜய்க்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் அஜித் இருக்கிறார்.

    கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அடுத்த படம் வெளியாகவில்லை. அடுத்த படத்திற்கு அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.

    சமீபத்தில் கார் ரேஸுக்காக பெல்ஜியம் சென்றிருந்த அஜித் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். அதிகாலை 6.45 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தமிழ்நாட்டிலேயே முதல் ஆளாக அஜித் வாக்களித்தார். வெள்ளை நிற கோட், சூட், கருப்பு நிற கண்ணாடி அணிந்து ஸ்டைலாக அவர் வந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், ஏப்ரல் 24ம் தேதியான நேற்று அஜித் தனது 26வது திருமண நாளை கொண்டாடினார். இதையடுத்து, தனக்கு நெருக்கமான நண்பர்களான இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  • ஓட்டு போட வந்து செல்பி எடுத்த அஜித்!. செல்போனில் விலை இவ்ளோதானா?!..

    ஓட்டு போட வந்து செல்பி எடுத்த அஜித்!. செல்போனில் விலை இவ்ளோதானா?!..

    நடிகர் அஜித் மிகவும் நாகரிகமானவர் என்கிற இமேஜ் எப்போதும் அவர் மீது உண்டு. சாலை விதிகளை சரியாக கடைபிடிப்பார், பெண்களிடம் மிகவும் நாகரிகமாக நடந்துகொள்வார், யாரிடம் பேசினாலும் அவரின் பேச்சிலும், செயலிலும் நாகரிகமாகமும், அடக்கமும் இருக்கும் என பலரும் சொல்வார்கள்.

    ஒருபக்கம் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சென்னைக்கு வந்து தவறாமல் வாக்களிப்பதை அஜித் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கார் ரேசுக்காக பெல்ஜியத்தில் இருந்த அஜித்தை விமான மூலம் சென்னை வந்தார்.

    இன்று காலை 6.45 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து அவர் வாக்களித்தார். அப்போது வெள்ளை நிற கோட் சூட் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். வழக்கமாக கையில் செல்போன் எடுத்து வராத அஜித் இந்த முறை கருப்பு நிற கலரில் ஒரு செல்போனை வைத்திருந்தார். அதோடு தன்னை சுற்றி கூட்டம் இருக்கும் போது அதை செல்பி வீடியோவாகவும் அஜித் எடுத்தார்.

    இந்நிலையில், அஜித் கையில் வைத்திருப்பது இல்ல Samsung S21FE மாடல். இதன் விலை 33 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் மட்டுமே. இவ்வளவு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் மிகவும் குறைவான விலையில்தான் செல்போனை பயன்படுத்துகிறார்.. இதிலும் அஜித் எளிமைதான் போல’ என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

  • அஜித்தை நம்புனா டைம் வேஸ்ட்!. அந்த நடிகரிடம் துண்டு போட்ட சிறுத்தை சிவா..

    அஜித்தை நம்புனா டைம் வேஸ்ட்!. அந்த நடிகரிடம் துண்டு போட்ட சிறுத்தை சிவா..

    கார்த்தியை வைத்து சிறுத்தை என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்தின் வெற்றிக்கு பின் சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார். அந்த படத்துக்கு பின் அஜித்தை வைத்து வீரம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட். அதோடு சிவாவை அஜித்துக்கு மிகவும் பிடித்து போனது. அஜீத்தை பொறுத்தவரை அவருக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அந்த இயக்குனரின் படங்களில் நடிப்பார். அப்படி வீரத்திற்கு பின் சிவாவின் இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய அப்டங்களில் நடித்தார்.

    அதன்பின் ரஜினியை வைத்து அண்ணாத்த, சூர்யாவை வைத்து கங்குவா ஆகிய படங்களை சிறுத்தை சிவா இயக்கினார். இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதிலும் கங்குவா படத்தை நெட்டிசன்கள் மிகவும் மோசமாக ட்ரோல் செய்தார்கள். இந்த படத்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு 100 கோடிக்கும் மேல் கடன் ஏற்பட்டது.

    தற்போது அஜித்தின் சில விளம்பர படங்களை சிவா இயக்கி வருகிறார். தன்னை நம்பி எந்த ஹீரோக்களும் நடிக்க முன்வரவில்லை என அஜித்திடம் சிறுத்தை சிவா ஃபீல் பண்ணி பேச நீங்கள் ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என அஜித் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

    அதேநேரம் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படமே எப்போதும் துவங்கும் என தெரியவில்லை. இந்த படம் முடிய எப்படியும் அடுத்த வருடம் ஆகிவிடும்.. அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் நடிகர் தனுசை வைத்து படம் பண்ணும் முயற்சியில் சிறுத்தை சிவா இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது..

  • தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்!.. சைலண்டா சம்பவம் பண்ணிய AK!..

    தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்!.. சைலண்டா சம்பவம் பண்ணிய AK!..

    தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் அஜித் குமார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக காதல் படங்களில் நடித்துவந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். விஜய்க்கு அடுத்து இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. விஜய் எப்போது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தாரோ அப்போது முதலே அவருக்கு போட்டி நடிகராக அஜித் வலம் வந்தார்.

    ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்ளுவது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என அஜித்துக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது. இதற்காக பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில்தான் அஜித் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது..

    அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் அவரின் புதிய படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாலும் முன்வரவில்லை. இந்த நிலையில் அஜித் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதும் தான் நடிக்க போகும் படத்தை தானே தயாரிக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அஜித் துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் Ajith Sports Service Company. இது சினிமா தயாரிப்புக்காக அல்ல.,

    அஜித்குமார் கடந்த சில மாதங்களாகவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம்தான் வெளியிடுகிறது.. அதற்காகவே அஜித் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் அஜித் எந்த காலத்திலும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கமாட்டார். அஜித் புத்திசாலி’ என சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

  • சும்மா பேசுறதுக்கு சம்பளம் கொடுத்த அஜித்!.. நடிகர் சொன்ன ஆச்சர்ய தகவல்!…

    சும்மா பேசுறதுக்கு சம்பளம் கொடுத்த அஜித்!.. நடிகர் சொன்ன ஆச்சர்ய தகவல்!…

    அஜித்தை வைத்து ரெட் திரைப்படத்தை இயக்கியவர் சிங்கம் புலி. ராம் சத்யா என்கிற பெயரில் அந்த படத்தை இயக்கியிருந்தார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர் சினிமாவில் கதாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என பல வேலைகளை செய்தவர். இயக்குனர் பாலா, சுந்தர்.சி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவர். அவர்களின் பல படங்களில் இவர் வேலை பார்த்துள்ளார். நான் கடவுள் திரைப்படத்தில் கூட பிச்சைக்காரராக நடித்திருந்தார்..

    விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் கூட இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சிங்கம் புலி அஜித்தை பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். ‘
    ரெட் படத்திற்கு மின் திடீரென ஒரு நாள் அஜித் சாரிடமிருந்து அழைப்பு வந்தது.. அப்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது பில்லா 2 படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருந்தது.. நான் 30 நாட்கள் அஜித் சாரோடு தங்கியிருக்க வேண்டும் என சொல்லி சுரேஷ் சந்திரா அழைத்தார்.. நானும் கோவாவுக்கு போனேன்.. அஜித் சாருக்கு அடுத்து எனக்கு ரூம் போட்டு கொடுத்தார்கள்.

    அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் முப்பது நாட்களும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. காலை முதல் சாயந்திரம் வரை என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அதன் பின் ஷூட்டிங் போயிட்டு மீண்டும் காலை வருவார்.. மீண்டும் பேசுவோம்.. நிறைய திரைப்படங்களைப் பற்றி பேசுவார்.. ‘ஒரு படம் வந்திருக்கே. அது என்ன கதை?’ எனக்கேட்பார்.. தெலுங்கு படங்கள் பற்றி விசாரிப்பார்.

    சில ஹாலிவுட் படங்களை போட்டு காட்டி சண்டை காட்சியை எப்படி எடுத்திருக்கிறாங்க பாரு’ என்பார். 30 நாட்கள் முடிந்தவுடன் எனக்கு ஒரு சம்பளத்தையும் கொடுத்தார். ‘நான் நடிக்கவே இல்லையே.. சும்மா பேசிக் கொண்டிருந்தேன் எனக்கு எதற்கு காசு?’ என்று கேட்டேன்.. நீங்க நிறைய படங்களை விட்டுவிட்டு வந்திருக்க்க.. இது அதுக்கான சம்பளம்’ என்று சொன்னார். ‘அடுத்த படத்துக்கும் என்ன கூப்பிடுங்க’ ன்னு சொன்னேன். ‘என்னா இப்படி ஆரம்பிச்சிட்டே’ என்றார். அவரோடு நேரம் செலவழித்தது பசுமையான நினைவுகள்’ என அவர் பேசியிருக்கிறார்.

  • அஜித்துக்கு BE 6 SUV காரை பரிசாக கொடுத்த மஹிந்திரா நிறுவனம்!.. விலை என்ன தெரியுமா?..

    அஜித்துக்கு BE 6 SUV காரை பரிசாக கொடுத்த மஹிந்திரா நிறுவனம்!.. விலை என்ன தெரியுமா?..

    நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பல நாடுகளிலும் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் அவரின் டீம் கலந்து கொண்டு வருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்திய அளவில் பிரபலமாக்குவேன் என சொல்லியிருக்கிறார் அஜித்.

    பலரையும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்குள் நான் கொண்டு வருவேன்.. ரசிகர்களும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைப்பற்றி பேசுகிறேன்’ என தொடர்ந்து சொல்லி வருகிறார் அஜித். அவரின் குட் பேட் அக்லி வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அவரின் அடுத்த படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை. எனவே, தொடர்ந்து கார் ரேஸ்களில் அஜித் கலந்துகொண்டு வருகிறார்..

    இந்நிலையில், அஜித்குமாருக்கு கார் ரேஸ் மீதுள்ள ஆர்வத்தை பாராட்டும் வகையில் மகேந்திரா நிறுவனம் BE 6 SUV காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 30 லட்சம் என சொல்லப்படுகிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் பிரிவு தலைவர் ஆர்/வேலுச்சாமி இந்த காரை அஜித்துக்கு பரிசளித்திருக்கிறார்.

  • அரசியலுக்கு வருவார் அஜித்!.. 2031-ல் முதல்வர்!. பிரபல ஜோதிடரின் கணிப்பு!..

    அரசியலுக்கு வருவார் அஜித்!.. 2031-ல் முதல்வர்!. பிரபல ஜோதிடரின் கணிப்பு!..

    அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அஜித். மங்காத்தா, பில்லா போன்ற திரைப்படங்கள் இவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது.. அதோடு அந்த படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும் உருவாக்கியது..

    தமிழ் சினிமாவில் விஜயின் போட்டி நடிகராக இருந்தவர் அஜித். தற்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அஜித்துக்கு எந்த போட்டியும் இல்லை.. அதேநேரம் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் பல நாடுகளிலும் நடக்கும் மோட்டார் ரேஸ் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்..

    விஜயை போல அஜித்துக்கு அரசியல் ஆர்வமெல்லாம் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்.. எனது சுயநலத்திற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என பலமுறை அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் பிரபல ஜோதிடர் ஒருவர் 2031ம் வருடம் அஜித் அரசியலுக்கு வருவார்.. அவர் முதலமைச்சராவார் என தெரிவித்திருக்கிறார்..

    மேலும் அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலை குவிக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.. இதில் ஆச்சரியம் என்னவெனில் இப்படி அஜித்தை பற்றி சொன்ன அந்த ஜோதிடர் 2026ம் வருடம் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும்.. துபாயிலும் பாதிப்பு ஏற்படும்./. தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் பிரச்சனை வரும்.. பெட்ரோலுக்காக மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்றெல்லாம் போன வருடமே கூறியிருந்தார்.. அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கிறது.. எனவே அவர் அஜித்தை பற்றி சொன்னதும் நடக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

  • மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்தின் புதிய படம்!.. ஏகே ஃபேன்ஸ் கூட எதிர்பார்க்கலயே!…

    மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்தின் புதிய படம்!.. ஏகே ஃபேன்ஸ் கூட எதிர்பார்க்கலயே!…

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. விடாமுயற்சி படம் அஜித்துக்கு ஹிட் கொடுக்காத நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது.. எனவே அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என அறிவிப்புகள் வெளியானது.. இதை அவரும் உறுதி செய்தார்..

    ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அஜித்தின் புதிய படத்தின் ஷூட்டிங்.. இதுவரை தொடங்கப்படவில்லை.. இந்த இந்த வருடம் ஏப்ரல் 10 தேதியுடன் குட் பேட் அக்லி வெளியாகி ஒரு வருடம் முடிகிறது.
    புதிய படத்திற்கு அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில்தான், வருகிற மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று அவரின் புதிய படம் ஒன்று வெளியாகிறது..

    யாருக்குமே தெரியாமல் அப்படி என்ன படம் என்று யோசித்தால் அதற்கு பதில் இதுதான்.. அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் கடந்த சில மாதங்களாக உருவாக்கி வந்தார்.. ஒரு கட்டத்தில் இதை சினிமாவை போல உருவாக்கிவிட்டார்களாம். முதலில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டனர்.. ஆனால் இப்போது தியேட்டரிலேயே வெளியிடலாம் என்கிறதுக்கு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.. தற்போது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைத்து வருகிறார்..

    மேலும் சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், யுவன் சங்கர் ராஜா, மாதவன், சிம்பு உள்ளிட்ட பலரும் அந்த படத்தில் அஜித்தை பற்றி பேசுவது போல காட்சிகளை எடுத்துள்ளனராம். எனவே அஜித்தின் புதிய படம் வெளியாகாத நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • பிஸ்னஸே இவ்ளோதான்.. சம்பளம் இவ்ளோ கேட்கலாமா?!.. ஐடியா இல்லாத அஜித்!….

    பிஸ்னஸே இவ்ளோதான்.. சம்பளம் இவ்ளோ கேட்கலாமா?!.. ஐடியா இல்லாத அஜித்!….

    திரையுலகில் சம்பளம் வாங்குவதில் இரண்டு வகையான நடிகர்கள் இருக்கிறார்கள்.. தன்னுடைய படங்கள் இந்த வசூலை பெறும்.. எனவே இவ்வளவு சம்பளம் வாங்கலாம் என சில நடிகர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், பல நடிகர்கள் தன்னுடைய படங்களுக்கான வியாபாரத்தை தெரிந்துகொள்ளாமலேயே ‘எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்’ என அடம் பிடிப்பார்கள்.

    அஜித்குமார் அதில் இரண்டாவது வகை. விடாமுயற்சி படத்தில் 100 கோடியும் குட் பேட் அக்லி படத்தில் 115 கோடியும் சம்பளம் வாங்கிய அஜித் இப்போது விஜய் சினிமாவை விட்டுபோய் விட்டதால் நம்மை விட்டால் ஆள் இல்லை என நினைத்தாரோ என்னவோ!.. தனது புதிய படத்திற்கு 185 கோடி சம்பளம் கேட்கிறார்..

    ஆனால் இந்த சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாவற்றையும் அணுகி அது நடக்காத நிலையில் மும்பை சென்று தயாரிப்பாளர்களை தேடினார்கள்.. அங்கும் அது நடக்கவில்லை
    .. இறுதியாக படத்தை பென் மீடியா அல்லது ரிலையன்ஸ் நிறுவனம் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் அடிபட்டது.

    ஆனால் அந்த நிறுவனங்கள் எல்லாமே தற்போது பின் வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் அஜித்துக்கு 100 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் என பேசி ஒப்புக்கொண்ட பென் மீடியா நிறுவனமும் இப்போது ஏதோ பிடிக்காமல் இதிலிருந்து பின் வாங்கி விட்டது..

    அஜித் நடிக்கும் திரைப்படங்களின் வியாபாரம் என்பது 225 கோடி வரை மட்டுமே இருப்பதாகவும், அது புரியாமல் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டால் ஒரு தயாரிப்பாளர் எப்படி கொடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்…