Tag: captain vijayakanth

  • என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

    என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

    திரைத்துறையில் விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் போல நட்பை பார்க்கவே முடியாது. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவு புரிதலோடு இருந்தது.. அதனால்தான் அவர்களை இருவரும் ஒன்றாக பல வருடங்கள் பயணித்தார்கள். இருவருமே மதுரை சேர்ந்தவர்கள்.. சிறு வயது முதலே நண்பர்கள்.. விஜயகாந்த் நடிகனாக வேண்டும் என முடிவெடுத்து சென்னை வந்த போது கதாசிரியராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவருடனே வந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்.

    ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு எல்லாமுமாக ராவுத்தர் மாறினார். விஜயகாந்த் நடிக்கும் படங்களுக்கு கதைகளை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, சம்பளத்தை முடிவு செய்வது என்கிற எல்லா வேலைகளையும் இப்ராஹிம் பார்த்துக்கொண்டார். ராவுத்தர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசாமல் விஜயகாந்த் கேட்பார்..

    இதுதான் அவர்களின் நட்பின் சாராம்சம். அதேபோல் விஜயகாந்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார் ராவுத்தர். படிப்படியாக சினிமாவில் வளர்த்தது ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியது, அப்படியே அவரை அரசியலுக்கு தயார்படுத்தியது என விஜயகாந்தின் முக்கிய வளர்ச்சிக்கு ராவுத்தர் காரணமாக இருந்தார்.

    ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் என்று பேசிய தயாரிப்பாளர் காஜா மொய்தீன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் – ராவுத்தர் போல ஒரு நட்பை நான் சினிமாவில் யாரிடமும் பார்த்ததில்லை.. விஜயகாந்த் சார் தனது திருணம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்தார்.

    ஆனால், அதில் ராவுத்தருக்கு விருப்பமில்லை.. வேண்டாம் என தடுத்தார். விஜயகாந்த் கேட்கவில்லை. உடனே ராவுத்தர் தரையில் படுத்து ‘என்னை தாண்டி நீ போடா’ என்றார்.. அவ்வளவுதான்.. விஜயகாந்த் எதுவுமே பேசவில்லை.. அப்படியே போய் உட்கார்ந்து விட்டார்.. ‘நீ என்ன சொல்றியோ கேக்குறேன்’ என சொல்லிவிட்டார். அப்படி ஒரு நட்பு அவர்களுடையது’ என்று சொல்லி இருக்கிறார்..

    மேலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் பிரிந்து விட்டாலும் இருவரும் எங்குமே யாரையுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்ராஹிம் ராவுத்தர் இறந்த போது விஜயகாந்த் பல மணி நேரங்கள் அழுது கொண்டே இருந்தார்’ எனவும் காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.

  • முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…

    முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…

    விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகவே ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டவர். தன்னால் என்ன உதவி முடியுமோ அதை எப்போதும் மக்களுக்கு செய்தவர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்போதும் இருந்தவர் இவர். அதனால்தான் அவர் அரசியலுக்கும் வந்தார்.

    திரையுலகில் பலருக்கும் உதவி செய்திருக்கிறார் விஜயகாந்த். பலரையும் சினிமாவில் வளர்த்துவிட்டிருக்கிறார். விஜய்க்கு மார்க்கெட் இல்லாமல் இருந்தபோது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டதால் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். இந்த படம்தான் விஜயை பி மற்றும் சி செண்டர்களில் பிரபலப்படுத்தியது.

    இந்நிலையில், பிரபல சண்டைக்காட்சி இயக்குனர் மற்றும் நடிகர் பெப்சி விஜயன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் அன்பு நிறைந்த ஒரு மனிதர். அவர் சாதாரண நபர் கிடையாது.. பிரச்சனை என்றால் யாராக இருந்தாலும் இறங்கி சண்டை போடுவார்.. அவர் ஒரு உண்மையான வீரன்.. யாருக்கும் பயப்பட மாட்டார்.. அதேநேரம் நேர்மைக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும் மட்டுமே பயப்படுவார்..

    எனக்கு பெப்சில எந்த பிரச்சினை நடந்தாலும் முதல் ஆளா வந்துருவார். 85 ஏக்கர் இடத்தில் Ford கம்பெனி கார் நிறுத்திட்டாங்க.. நான் பிரச்சனை பண்ணேன். அடுத்த நாள் என்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்துட்டாங்க.. இதை தெரிந்து விஜயகாந்த் சார் நிறைய பேருக்கு கூட்டிட்டு வந்து நடுரோட்டில் உட்கார்ந்துட்டார்.. நீங்க வாங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்’ என சொன்னார்.. அதுதான் விஜயகாந்த்’ என கூறியிருக்கிறார்..

  • விஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!… புரட்யூசர் சொன்ன அந்த சம்பவம்!…

    தமிழ் சினிமா பல நடிகர்களை பார்த்திருந்தாலும் விஜயகாந்தை போல நல்ல, எளிமையான, மற்றொரு உதவும் குணம் கொண்ட, மற்றவர்களை வளர்த்துவிடும் ஒரு மனிதரை, ஒரு நடிகரை யாரும் பார்த்ததில்லை.
    பல நடிகர்களும் பலருக்கும் பல உதவிகளை செய்திருந்தாலும் விஜயகாந்த் அளவுக்கு யாருமே செய்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    பல புதிய நடிகர்களை, இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்திருக்கிறார் விஜயகாந்த். மேலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவரால் என்ன முடியுமோ அதை செய்தவர்தான் விஜயகாந்த்.. திரையுலகில் விஜகாந்தால் வளர்ந்தவர்கள், வசதி பெற்றவர்கள், உதவி பெற்றவர்கள் பலர்.

    அதனால்தான் அவரை திரையுலகமே கொண்டாடுகிறது.. அவர் மறைந்த பின்னரும் விஜயகாந்தை மக்கள் கொண்டாடுவற்கு அவரின் குணம்தான் காரணம். ‘அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ இந்த பாடலில் வரும் வரிகள் விஜயகாந்த்துக்கு 100 சதவீதம் பொருந்தும்.
    அவர் உயிரோடு இருக்கும்போது அவரை ட்ரோல் செய்தவர்கள், அவரை கிண்டலடித்தவர்கள் அவர் மறைந்த பின் அவரை கொண்டாடுகிறார்கள்..

    விஜயகாந்தை வைத்து படமெடுத்தவரும், விஜயகாந்ந்துக்கு நெருக்கமானவருமாக இர்ந்த தயாரிப்பாளர் டி.சிவா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஒரு தயாரிப்பாளராக விஜய் ஆண்டனியை நான் விஜயகாந்த் மாதிரிதான் பார்ப்பேன்.. ஷுடிட்ங்கில் கேரவேன் வேண்டாம் என சொல்லிவிட்டு ஓரமா ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார்.

    அசிஸ்டெண்ட் ஏதாவது கேட்டா வாங்கி தராதீங்க சார்.. முறுக்கு, சுண்டல் எடுத்துட்டு வந்துருவேன் சார்.. என்று சொல்வார்.. எனக்கு ஸ்பெஷலா ரூம் போடாதீங்க.. எல்லாருக்கும் போடுற மாதிரி சாதாரண லாட்ஜ்ல ரூம் போடுங்கன்னு சொல்லுவார்.. காசு கொடுக்கலைன்னா கூட ‘பரவாயில்லை சார் அப்புறம் வாங்கிக்கிறேன்’ னு சொல்லுவார்’ என சொல்லியிருக்கிறார்.

  • Vijayakanth: படம் ஃபிளாப் ஆனா விஜயகாந்த் இததான் செய்வாரு!… தயாரிப்பாளர் பேட்டி!…

    சினிமாவில் எந்த திரைப்படம் வெற்றி பெறும், எந்த படம் தோல்வி அடையும் என கணிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். நல்ல கதை, அதற்கு ஏற்ற திரைக்கதை. சரியான நடிகர், நடிகைகள், அதை சரியாக இயக்கும் இயக்குனர் என எல்லாம் பொருந்தி வர வேண்டும். ஏதோனும் ஒன்று சரியாக அமையாவிட்டாலும் படம் தோல்வியடையும்.

    கதை, திரைக்கதை சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் வெற்றி பெறாது. 60களில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர், நடிகர் திலகமாக இருந்த சிவாஜி கணேசன், இப்போது வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி கூட தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார்கள்..

    நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய போது அந்த நஷ்ட பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி. அதன்பின்னரே தற்போது சிலர் சினிமா துறையில் சிலர் மட்டும் அதை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் எல்லோரும் அதை செய்வதில்லை.

    ஒரு தயாரிப்பாளர் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தரலாம். ஆனால் ஒரு நடிகருக்கு நஷடத்தில் பங்கு இல்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்த் தனது படத்திற்கான நஷ்டத்தில் தான் பங்கெடுத்து கொள்வார்.

    தமிழில் சில படங்களை தயாரிப்பாளர் கே.எல்.அழகப்பன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் படம் நடித்து அந்த படம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா தயாரிப்பாளரை கூப்பிட்டு உங்கள் தயாரிப்பில் நான் மீண்டும் நடிக்கிறேன்.. எனக்கு 5 ஆயிரம் சம்பளம் குறைவக கொடுங்கள்’ என சொல்வார். அப்போது அவருடைய சம்பளம் 40 ஆயிரம், 50 ஆயிரமாகத்தான் இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.

  • விஜயகாந்துக்காக வேற ரூட்டில் ஆபிஸ் போன முதலமைச்சர்!.. செம பிளாஷ்பேக்!..

    Vijayakanth: பள்ளிக்கு சரியாக போகாததால் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துகொண்டிருந்தவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே, நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார் விஜய ராஜா. அவருக்கோ யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் பிரபலமான ஹீரோவாக இருந்ததால் தனது பெயரை விஜயகாந்த் என வைத்துக்கொண்டார். ‘அதான் ஒரு காந்த் இருக்காரே இன்னொரு காந்த் எதுக்கு?’ என வாய்ப்பு தேடி போன இடங்களில் நக்கலடித்தார்கள்.

    பல அவமானங்களை சினிமாவில் நடிக்க துவங்கி வெற்றிப்படங்களை கொடுத்து எல்லோராலும் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறினார் விஜயகாந்த். அதன்பின் அவரின் அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது முன்னணி நடிகர்களாக கலக்கி வந்த ரஜினி, கமல் ஆகியோருக்கே டப் கொடுத்தார்.

    அரசியலில் ஈடுபாடு கொண்ட விஜயகாந்த் கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கி பழகி வந்தார். எப்போது நினைத்தாலும் கலைஞருடன் தொலைப்பேசியில் பேசவும், நேரில் சந்திக்கவும் விஜயகாந்த்தால் முடிந்தது. கலைஞரை அடிக்கடி சந்தித்து பேசியும் வந்தார் விஜயகாந்த். கலைஞரும் விஜயகாந்த் மீது அன்பு கொண்டவராகவே கலைஞர் இருந்தார்.

    ஆனால், அரசியல் இவர்களுக்கு இடையே விரிசலை உண்டாக்கியது. தனிக்கட்சி துவங்கிய பின் திமுகவின் எதிரியாக மாறினார் விஜயகாந்த். பாலம் வருவதாக சொல்லி விஜயகாந்தின் திருமண மண்டபத்தையே இடித்தார்கள். எனவே, கலைஞரை கடுமையாக விமர்சிக்க துவங்கினார் விஜயகாந்த். அப்படி இருந்தாலும் கலைஞர் மரணமடைந்த செய்தி கேட்டு வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போதும் அழுதுகொண்டே வீடியோ போட்டார் விஜயகாந்த். அதோடு, சென்னை வந்ததும் நடக்க முடியாத நிலையிலும் கலைஞரின் சமாதிக்கு போய் அழுதார். தற்போது விஜயகாந்தும் நம்முடன் இல்லை.

    இந்நிலையில், விஜயகாந்தை வைத்து வல்லரசு படம் எடுத்த இயக்குனர் மகராஜன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘வல்லரசு படத்தின் முக்கிய காட்சியை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணிக்குள் மவுண்ட் ரோட்டில் பீச் அருகே படமாக்க திட்டமிட்டோம். பல பஸ்களை நிறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற காட்சி அது. ஆனால், வண்டியெல்லாம் வந்து நிற்கவே 11 மணி ஆகிவிட்டது. எப்படியும் 2 மணி வரை நேரம் தேவைப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

    ஏனெனில் முதல்வர் அந்த வழியாகவே கோட்டைக்கு செல்லும் நேரம் அது. இதை நான் விஜயகாந்திடம் சொன்னவுடன் உடனே கலைஞரின் உதவியாளரிடம் பேசினார். சிறிது நேரத்தில் கலைஞரே பேசினார், விஜயகாந்த் விஷயத்தை சொல்ல கலைஞரோ ‘ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் வேற ரூட்டில் கோட்டைக்கு போகிறேன்’ என சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு விஜயகாந்துக்கு செல்வாக்கு இருந்தது’ என அவர் பேசியிருக்கிறார்.

  • என்னை நடிகராக ஏற்றுக்கொண்டால் போதும்!.. கண் கலங்கிய சண்முக பாண்டியன்!…

    Padai thalaivan: நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர். 2015ம் வருடம் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் 3 வருடங்கள் கழித்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை.

    அதன்பின் தமிழனென்று சொல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரெல்லாம் வெளியானது. அதன்பின் படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் நடந்தது. விஜயகாந்த் கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பு இதுதான்.

    ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதோடு, சண்முக பாண்டியன் அப்பாவை கவனித்துக்கொண்டார். எனவே, மதுர வீரன் படத்திற்கு பின் கடந்த 7 வருடங்களாக சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது படை தலைவன் படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்.

    இந்த படம் நேற்று காலை தமிழகத்தில் வெளியானது. விஜயகாந்தின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து வருகிறார்கள். தான் ஆசையாக வளர்க்கும் யானையை சிலர் கடத்தி சென்றுவிட சண்முக பாண்டியன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பையே சண்முக பாண்டியன் கொடுத்திருக்கிறார்

    பல காட்சிகளில் அப்பாவை நினைவு படுத்துகிறார். அப்பாவை போலவே சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். படத்தின் திரைக்கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருந்தால் படம் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் என பலரும் சொல்லி வருகிறார். இந்நிலையில், சண்முக பாண்டியனும், அவரின் சகோதரர் விஜய பிரபாகரனும் சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்கள். ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

    படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது சண்முக பாண்டியன் அழுதபடி வந்தார். செய்தியாளர்களிடம் அவரால் பேசவே முடியவில்லை. அதன்பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசிய அவர் ‘என்னை நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டால் போதும்’ என பேசி கண் கலங்கினார். அவருக்கு பின் பேசிய விஜய பிரபாகரன் ‘சண்முக பாண்டியனின் கடைசிப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது. அப்பாவை கவனித்துகொண்டதால் அவரால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை’ என சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசமுடியாமல் அழுதார்.

    அதன்பின் பேசிய அவர் ‘சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுங்கள். இதை கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அதை செய்யும் கடமை உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் இருவரும் மக்களுக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஆதரவு தேவை’ என கோரிக்கை வைத்தார்.

  • விஜயகாந்துக்கு விருது கொடுத்தது எனக்கு பிடிக்கல!.. கோபத்தில் பொங்கும் கேப்டனின் நண்பர்!..

    Vijayakanth: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கமல், ரஜினி, மோகன் போன்ற நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம் கருப்பு சிங்கமாய் சினிமாவில் நுழைந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். எம்.ஜி.ஆர் பாணியில் துவக்கம் முதலே ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்தவர் இவர்.

    துவக்கத்தில் சில தோல்விப்படங்களை கொடுத்தாலும் ஒருகட்டத்தில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். அதிகமான படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார். நடிகர் என்பதை விட மனிதாபிமானம் மிக்க ஒரு மனிதராகவே விஜயகாந்த் மக்களால் பார்க்கப்பட்டார். தன்னால் முடிந்தவரைக்கும் மற்றவர்களுக்கு உதவுவது, மற்றவர்களின் பிரச்சனையை தன்னுடைய பிரச்சனையாக கருதி அதை தீர்த்து வைப்பது, பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது என அவர் செய்த தர்மங்கள் ஏராளம்.

    அதனால்தான் அவர் மறைந்தபோது அவரின் இறுதி ஊர்வலத்தில் அத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டனர். வீட்டின் மேலே இருந்தும், பாலங்களில் இருந்தும் அவரின் உடல் மீது பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்கிற இமேஜைத்தான் விஜயகாந்த் உருவாக்கிவிட்டு போயிருக்கிறார்.

    அதிலும், சினிமாவில் விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. சாப்பாட்டில் கூட வேறுபாடு காட்டிய திரையுலகில் முதன் முதலில் படப்பிடிப்பில் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு, அதுவும் கறி சாப்பாட்டை இலையில் போட்டவர் விஜயகாந்த். திரையுலகில் பலரின் வாழ்க்கை விஜயகாந்தால் மாறியிருக்கிறது. அவரின் மறைவுக்கு பின் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும், விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவருமான வசனகர்த்தா லியாகத் அலிகான் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன் விருது கொடுத்துவிட்டு விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்திருக்கிறார்கள். பத்மபூஷனை விட பத்மவிபூஷன் விருது பெரியது. அதை சிரஞ்சீவிக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் சிரஞ்சீவியை குறை சொல்லவில்லை?.. ஆனால், அவர் அரசியல் கட்சி துவங்கி தோற்றுப்போனவர். விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெற்றவர்.

    விஜயகாந்த் எந்த விதத்தில் சிரஞ்சீவியை விட குறைந்து போய்விட்டார்?. விஜயகாந்த் எவ்வளவு பேரை இலவசமாக படிக்க வைத்திருக்கிறார்.. அவரால் பல இன்ஜினியர்களும், டாக்டர்களும் உருவாகியிருக்கிறார்கள். பலருக்கும் சாப்பாடு போட்டு பசியை போக்கி இருக்கிறார். பல புதிய தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கியிருக்கிறார். அவருக்கு பத்மவிபூஷன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு’ என பொங்கியிருக்கிறார்.

    லியாகத் அலிகான் விஜயகாந்தை வைத்து பாட்டுக்கு ஒரு தலைவன், ஏழை ஜாதி, எங்க முதலாளி போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கீர்த்தி சுரேஷுக்கு போவ.. விஜயகாந்துக்கு வர மாட்டியா?!. விஜயை போட்டு பொளக்கும் ரசிகர்கள்…

    Vijay Vijayakanth: நடிகர் விஜய் கலகலப்பாக பேசும் சுபாவம் கொண்டவர் கிடையாது. அவரின் நட்பு வட்டாரம் கூட மிகவும் சிறியது. நேரம் கிடைக்கும்போது அந்த 4 நண்பர்களோடு கொஞ்ச நேரம் செலவழிப்பார். மற்றபடி ஷூட்டிங் போனால் 6 மணிக்கு வீட்டுக்கு போய் விடுவார். எதைப்பற்றியும் யாரிடமும் பேச மாட்டார். எப்போதும் மிகவும் அமைதியாகவே இருப்பார்.

    படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் ஜாலியாக இருக்க மாட்டார். நடித்து முடித்ததும் கேரவானுக்குள் போய்விடுவார். படப்பிடிப்பு குழுவினரிடம் கூட அதிகம் பேச மாட்டார். இதுதான் அவரின் சுபாவமும் கூட. விஜயின் இந்த சுபாவத்தை பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அவருடன் நடித்த நடிகைகளே பேட்டிகளில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், விஜய் மாறவும் இல்லை. இதுபற்றி விளக்கம் சொன்னதும் இல்லை.

    கேட்டால் ‘கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும், உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என தத்துவம் சொல்லுவார். விஜய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் இருக்கிறது. அதில், அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான முக்கிய அப்டேட் மட்டுமே பதிவிடப்படும்.

    நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதுபற்றி எந்த கருத்தும் சொல்லமாட்டார். அப்படிப்பட்ட விஜய்க்கு அரசியலில் சாதிக்கும் ஆசை வந்திருக்கிறது. தனியாக கட்சி துவங்கி மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார். அந்த மாநாட்டில் மட்டும் கொஞ்சம் அதிகமாக பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

    ஆனால், அரசியலுக்கு வந்த பின்னரும் விஜய் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்ட போது விஜய் நேரில் போய் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண உதவிகளை செய்தார். இது அப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ‘நான் அங்கு சென்றால் கூட்டம் கூடும்’ என சொல்லி சப்பை கட்டு கட்டினார் விஜய்.

    மழைக்கு போகாத விஜய் சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக திரிஷாவை அழைத்துக்கொண்டு தனி விமானம் மூலம் கோவாவுக்கு போனார். மக்கள் பிரச்சனைக்கு போகாத விஜய் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்து மட்டும் போகிறார் என அப்போது அவரை பலரும் ட்ரோல் செய்தார்கள். ஆனால், விஜய் வழக்கம்போல் மௌனமாகவே இருந்தார்.

    இந்நிலையில், விஜயகாந்த் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் டிசம்பர் 28ம் தேதியான நேற்று விஜயகாந்த் சமாதி அருகே குரு பூஜை நடந்தது. இதில் கலந்துகொள்ள வேண்டும் என விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் மற்றும் மூத்த மகன் விஜய பிரபாகரன் விஜயை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆனால், கேப்டனின் குரு பூஜையில் விஜய் கலந்து கொள்ளவில்லை. அதோடு, விஜயகாந்த் பற்றி தனது சமூகவலைத்தள பக்கங்களிலும் விஜய் எந்த பதிவையும் போடவில்லை. இது ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    விஜய்க்கு மார்க்கெட்டே இல்லாமல் இருந்தபோது செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து ஹிட் அடிக்க வைத்தார் விஜயகாந்த். இதை எந்த பேட்டிகளிலோ, சினிமா விழாக்களிலோ சொல்லி விஜய் நன்றி சொன்னதே கிடையாது. அதேபோல், சினிமாவில் நடித்து வரும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை தனது படத்தில் நடிக்க வைத்து விஜயகாந்த் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக்கடன் செய்திருக்கலாம். அதையும் விஜய் செய்யவில்லை. தற்போது விஜயகாந்தின் குருபூஜைக்கும் அவர் போகவில்லை. இது விஜயகாந்த் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • கேப்டனுக்கு இதுதான் உண்மையான சந்தோஷம்!. பிரேமலதா நெகிழ்ச்சி பேட்டி!..

    Vijayakanth: விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். மதுரையில் இருந்தபோது அவரை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்து செல்வது, சாப்பாடு வாங்கி கொடுப்பது என எல்லா செலவையும் அவர்தான் செய்வார்.

    சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். துவக்கத்தில் சில அவமானங்களை சந்தித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படி அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை. அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

    அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். எப்போதும் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும், மற்றவர்களை மேலே தூக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் விஜயகாந்துக்கு உண்டு.

    அதனால்தான் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் தனது அலுவகத்திற்கு எப்போது யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு போட்டார். அவர் போட்ட சாப்பாட்டில் கஷ்டப்பட்ட பல கலைஞர்கள் உயிர் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போதும் விஜயகாந்த் பற்றி நன்றியுணர்ச்சியோடு நினைவு கொள்கிறார்கள்.

    நடிகர், நடிகைகளுக்கு ஒரு மாதிரி உணவு, மற்றவர்களுக்கு வேறு மாதிரி உணவு என்பதுதான் 80களில் சினிமாவில் நடைமுறையாக இருந்தது. இப்போதும் பல நிறுவனங்கள் அப்படித்தான் சாப்பாடு போடுகிறது. இதை மாற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு என்பதை அறிமுகம் செய்ததே விஜயகாந்துதான். வேறு தயாரிப்பாளர் எனில் அதற்கான செலவை தனது சம்பளத்தை பிடித்துக்கொள்ள சொன்னவர் அவர்.

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘கேப்டனுக்கு சமைக்க தெரீயாது. ஆனால், சமையலை தாண்டி அவருக்கு ஒன்னுதான் தெரியும். அது எல்லோரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதில்தான் அதிக சந்தோஷப்படுவார். வீட்டிற்குக் யாராவது உறவினர் வந்தால் நான் தோசை ஊற்றுவேன். அவர்தான் அதை எடுத்துக்கொண்டு போய் பரிமாறுவார். அவர்கள் சந்தோஷமாக சாப்பிடுவதை பார்ப்பது அவருக்கு அவ்வளவு சந்தோஷம்’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

  • சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஷாம்பு விற்ற விஜயகாந்த்!.. கேப்டன் இதெல்லாம் செஞ்சிருக்காரா?!..

    Vijayakanth: திரையுலகமும், ரசிகர்களும் பல நடிகர்களை பார்த்திருக்கிறது. ஆனால், எல்லோரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சில நடிகர்களுக்கு மட்டுமே அந்த இடம் கிடைக்கும். அது அவர்கள் சிறந்த நடிகர்களாக இருந்ததால் அல்ல, அவர்கள் நல்லவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவராகவும் இருந்திருப்பார்கள்.

    அப்படி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் விஜயகாந்த். அவர் ஒன்றும் நடிப்புக்கான தேசிய விருதை வாங்கியது இல்லை. சிவாஜி, கமல் போல அவர் நடிப்பில் உச்சமும் தொட்டதில்லை. அவர் தன்னை ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக மட்டுமே அதிகம் காட்டியிருக்கிறார். அதேநேரம், சத்ரியன், செந்தூரப்பூவே, சின்னக் கவுண்டர் உள்ளிட்ட பல படங்களில் தனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும் என காட்டியிருக்கிறார். விஜயகாந்த் அழுதால் ரசிகர்களுக்கே கண் கசியும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடிப்பார். ஆனால் இந்த கட்டுரை அதை பற்றியதில்லை. விஜயகாந்தை பற்றி யாருக்கும் தெரியாத ஒன்றை பற்றியது.

    விஜயகாந்தின் அப்பா மதுரையில் ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்தார். இப்போதும் அது உறவினர்களால் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கு சரியாக போகாத விஜயகாந்த் ஒரு கட்டத்தில் படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் ரைஸ் மில்லை கவனித்தார். அதன்பின் சினிமா ஆசை வர அப்பா சொல்லியும் கேட்காமல் சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

    சில வருட போராட்டங்களுக்கு பின் வாய்ப்புகள் கிடைக்க பல தடைகளை தாண்டி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன் வேறு வேலை செய்திருப்பார்கள். ரஜினி கூட பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தார்.

    அதேபோல், விஜயகாந்த் ஒரு ஷேம்பு கம்பெனியில் விற்பனை பிரதிநிதி அதாவது ‘Sales Representative’ ஆக வேலை செய்தார் என்கிற தகவல் வெளியே தெரியவந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஒன்றை வைத்திருக்கும் ஆர்.எஸ்.,மனோகர் என்பவர்தான் இந்த ஆச்சர்ய தகவலை கூறியிருக்கிறார்.

    1970களில் இருந்தே எனக்கு விஜயகாந்தை தெரியும். அப்போது அவரின் பெயர் விஜய ராஜ். திருவனந்தபுரத்திற்கு வெல்வெட் ஷாம்பு கம்பெனியில் சேல்ஸ் மேனாக வேலை செய்ய வந்தார். அதன்பின் ஒரு நகைக்கடையிலும் அவர் சேல்ஸ் மேனாக வேலை செய்தார். அப்போது இங்கே 3 தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகும். விஜயகாந்த் அடிக்கடி படம் பார்க்க தியேட்டருக்கு வருவார். மலையாள நடிகர் பிரேம் நசீரின் தீவிர ரசிகர் அவர். அவரின் ஒரு படத்தை கூட விஜயகாந்த் மிஸ் பண்ண மாட்டார்.

    அதன்பின் அவர் நடிகரான பின்னரும் சில சமயங்களில் இந்த தியேட்டருக்கு வருவார். அப்போது எப்படி இருந்தாரோ அப்படித்தான் பேசுவார். அவரிடம் எந்த மாற்றத்தையும் நான் பார்த்தது இல்லை’ என மனோகர் சொல்லி இருக்கிறார். விஜயகாந்த் மறைந்து சமீபத்தில்தான் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.