Tag: captain vijayakanth

  • கேப்டன் வீட்டில் அமீர்!. கோபத்தில் காபி-யை திருப்பி அனுப்பிய விஜயகாந்த்!.. நடந்தது இதுதான்!….

    இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர் அமீர். எல்லாம் ஒரே ஊர்க்காரர்கள் மற்றும் நண்பர்கள். சேது படத்தில் பாலாவிடம் அமீரும், சசிக்குமாரும் வேலை செய்தார்கள். அதன்பின் பாலா அடுத்து இயக்கிய நந்தா படத்திலும் அமீர் வேலை செய்தார். அந்த படத்தில் சூர்யாவுக்கு எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தவர் அமீர்தான்.

    அதன் தனது முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். அப்போதுதான் சிவக்குமார் குடும்பத்துடன் அமீருக்கு பழக்கம் ஏற்பட்டது. பருத்திவீரன் கதையை எழுதி அவர் சூர்யாவை நடிக்க வைக்க நினைத்தார். ஆனால், ‘எனது தம்பியை அறிமுகம் செய்து வையுங்கள்’ என சொல்லியது சூர்யாதான்.

    இதையும் படிங்க: முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…

    அப்படித்தான் அந்த படத்தில் கார்த்தி நடித்தார். அந்த படம் கார்த்திக்கு ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. ஆனால், இந்த படத்தின் மூலம் ஒன்றரை கோடி நஷ்டமடைந்தார் அமீர். படம் நன்றாக ஓடினாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய படத்தை ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    இந்த படத்திற்கு பின் ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவான் என்கிற படத்தை இயக்கினார் அமீர். இந்த படம் நன்றாகவே இருந்தது. ஆனால், ஒருமாதிரி ராவாக இருந்ததால் இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. தற்போது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் அமீர் ஈடுபட்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அமீர் விஜயகாந்துடனான தனது உறவு பற்றி பேசினார். ஒருமுறை அவரை சந்திக்க அவரின் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது வேலைக்கார பெண் ஒருவர் எனக்கு காபி கொண்டு வந்தார். கோபப்பட்ட கேப்டன் அவரை திருப்பி அனுப்பிவிட்டு அவரின் மனைவி பிரேமலதாவை காபி எடுத்து வர சொன்னார்.

    அதோடு, பிரேமலதாவிடம் ‘இவர்தான் தம்பி அமீர். மதுரைக்காரர்’ என அறிமுகம் செய்து வைத்தார். இத்தனைக்கும் அவருடன் எனக்கு பழக்கமே கிடையாது. ஆனால், என்னை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். என்னை மிகவும் மரியாதையாக உபசரித்து அனுப்பி வைத்தார்’ என அமீர் சொல்லி இருந்தார்.

  • ஏர்போர்ட்டில் சந்தித்த அவமானம்!.. அப்போது கேப்டன் விஜயகாந்த் எடுத்த அந்த முடிவு!..

    நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நுழைய முயற்சி செய்யும் போது மட்டுமல்ல. சொந்த வாழ்விலும் பல அவமானங்களை தாண்டித்தான் வளர்ந்தவர். மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல முயற்சிகளை செய்தார். துவக்கத்தில் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

    கிடைத்த வாய்ப்புகளையும் சிலர் பறித்துகொண்டனர். அதோடு, விஜயகாந்தோடு ஜோடி போட்டு நடிக்க அப்போதைய கதாநாயகிகள் முன்வரவில்லை. எனவே, அறிமுக நடிகைகள் மட்டுமே விஜயகாந்தோடு நடித்தனர். அல்லது சின்ன சின்ன நடிகர்கள் நடித்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் சட்டம் ஒரு விளையாட்டு படத்தில் நடித்து ஹிட் கொடுத்த போதும் அதே நிலைதான் நீடித்தது.

    இதையும் படிங்க: 36 முறை மோதிய விஜயகாந்த் – சத்யராஜ் படங்கள் : ஜெயித்தது புரட்சிக்கலைஞரா? புரட்சித்தமிழனா?..

    பல வெற்றிப்படங்களை கொடுத்த பின்னரே விஜயகாந்துடன் நடிக்க சில நடிகைகள் முன் வந்தனர். அப்படி சினிமாவில் வளர்ந்தவர்தான் விஜயகாந்த். பல அவமானங்களை சந்தித்ததாலோ என்னவோ.. அது மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடாது என நினைத்தார் விஜயகாந்த். எனவே, தன் வாழ்வில் எப்போதும் யாரையும் அவர் அவமானப்படுத்தியதே இல்லை.

    அதோடு, வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். பல புதிய நடிகர், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும்போதெல்லாம் அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தை நிரப்ப விஜயகாந்துக்கு தெரியாதாம்.

    இதையும் படிங்க: அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.

    எனவே, மற்றவர்களிடம் கொடுத்தே அதை நிரப்பி கொடுத்திருக்கிறார். மதுரையில் வசித்தபோது அப்பா தன்னை நல்ல பள்ளியில்தான் படிக்க வைத்தார். தான்தான் சரியாக படிக்காமல் விட்டுவிட்டோம் என வருந்திய விஜயகாந்த் படிக்க வழியில்லாமல் இருந்த பல ஏழை மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்தார்.

    தான் நடத்தி வந்த கல்லூரியிலும் பல ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் கொடுத்திருக்கிறார். அதோடு, தன்னுடைய மகன்களை நன்றாக படிக்க வைத்தார். மேலும், எனக்கு ஆங்கிலம் தெரியாது என பல மேடைகளில் அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.

  • கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் ஃபாலோ பண்ண 5 விஷயங்கள்..

    Vijayakanth: சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். பல இடங்களில் அவமானப்பட்டு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து சினிமாவில் முன்னேறியவர். துவக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி ஆகிய படங்கள் மூலம் முன்னேறியவர்.

    80,90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தார். பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் சில கொள்கைகளை கடைசி வரை விஜயகாந்த் கடைபிடித்தார். சினிமாவில் மட்டுமில்லை. நிஜவாழ்விலும் ஒரு கொள்கையோடு வாழ்ந்திருக்கிறார். அப்படி சினிமாவில் அவர் கடைசிவரை கடைப்பிடித்த 5 விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

    இதையும் படிங்க: இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேப்டன் செய்த செயல்.. கண்ணீர் மல்க கூறிய மகன்

    முதலாவதாக தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழி திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்பதில் கடைசி வரை கடைபிடித்தார். பலமுறை வாய்ப்புகள் வந்தும் விஜயகாந்த் அதில் உறுதியாகவே இருந்தார். கமல், ரஜினி போன்ற நடிகர்கள் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் ஒரு படம் கூட அப்படி நடித்தது இல்லை.

    இரண்டாவதாக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். நல்லது செய்யும், நல்லதை பேசும், அறிவுரைகளை சொல்லும் ஹீரோ கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்பினார் விஜயகாந்த். கடைசி வரை அதை கடைபிடித்தார்.

    இதையும் படிங்க: 2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!.. கெத்து காட்டிய பஹத் பாசில்…

    மூன்றாவது எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். எனக்கு கொடுக்கும் சம்பளத்தை விற்கப்படும் பொருள் மீது வைத்து மக்களிடம் அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, அதை செய்யவே மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

    vijayakanth

    நான்கவதாக பிளே பாய் வேடத்தில் நடிக்க மாட்டேன், பெண்களை மோசமாக சித்தரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதையும் விஜயகாந்த் கடைபிடித்தார். 5வதாக சம்பளத்திற்காக ஆசைப்பட்டு விஜயகாந்த் எந்த படத்திலும் இதுவரை நடித்தது கிடையாது. சம்பளத்தை பெரிதாக நினைக்காத ஒரே ஹீரோ விஜயகாந்த் மட்டுமே என பல தயாரிப்பாளர்கள் அவரை பற்றி பேசியுள்ளனர். சம்பளமே வாங்காமலும், தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் சம்பளத்தை குறைத்துக்கொண்டும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..

  • விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி!.. கமல், விக்ரம், கார்த்தி பங்கேற்பு….

    Viyayakanth: நடிகராக மட்டுமில்லாமல் முன்னாள் நடிகர் சங்க தலைவர், தேமுதிக தலைவர், எதிர்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்தவர் கேப்டன் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடி போராடி பல அவமானங்களை சந்தித்து சினிமாவில் நடிக்க துவங்கியவர்.

    80,90களில் இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தாவர். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது கலைநிகழ்ச்சிகள் நடத்தி அந்த சங்கத்தின் கடனை அடைத்தார். அதன்பின் அரசியலிலும் நுழைந்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார்.

    இதையும் படிங்க: வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்!.. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?…

    கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் 28ம் தேதி மரணமடைந்தார். இவரின் மரணம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் இறப்புக்கு பொதுமக்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    vishal

    கமல்ஹாசன், ரஜினி, விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் அடுத்தநாளே வந்து அஞ்சலி செலுத்தினர். சூர்யா, விஷால், கார்த்தி என பலரும் கொஞ்சம் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஜித், வடிவேலு, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் வரவில்லை.

    இதையும் படிங்க: ராஷ்மிகான்னு நம்பி போனா இப்படி ஏமாத்திப்புட்டீங்களேடா!. ஆந்திராவில் அசிங்கப்பட்ட தனுஷ்…

    இந்நிலையில், நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது. விஷாலின் தலைமையில் நடந்த இந்த நினைவேந்தல் கூட்டத்தில், கமல், விக்ரம், கார்த்தி, நாசர், சரத்குமார், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, ஜெயம் ரவி,கமல்ஹாசன், கலைப்புலி தாணு, எஸ்.பி.முத்துராமன், தேவயாணி, வாகை சந்திரசேகர், நடிகை ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், எஸ்.வி.சேகர், பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், கருணாஸ், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு என பலரும் கலந்து கொண்டனர்.

    இவர்கள் எல்லோரும் விஜயகாந்துடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள். நடிகர்கள் ரஜினி,விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களும் இதில் கலந்துகொள்ளவில்லை. விஜயகாந்த் சார்பில் அவரின் மைத்துனர் சுதீப் மற்றும் அவரின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: எங்க குடும்பத்துல அவங்கதான் ஹிட்லர்!.. அருண் விஜய், ஸ்ரீதேவி உடைத்த குடும்ப ரகசியம்!

  • 18 படங்கள் நடிச்சும் வாய்ப்பில்லாமல் தவித்த விஜயகாந்த்!.. மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய அந்த திரைப்படம்…

    Vijayakanth: சினிமாவில் ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது வெற்றி, தோல்விகளை பொறுத்து மாறி மாறி அமையும். 3 தொடர் வெற்றியை ஒரு நடிக கொடுத்துவிட்டால் போதும். அதை வைத்து 10 வருடங்களை கூட அந்த நடிகரால் ஓட்டமுடியும். தயாரிப்பாளர்கள் அவர்களை நம்பி வருவார்கள். அடுத்த 2 படங்கள் தோற்றாலும் கூட அவருக்கு வாய்ப்புகள் வரும்.

    சம்பளத்தை கொஞ்சம் குறைத்து கொடுப்பார்களே தவிர வாய்ப்புகள் நின்று போகாது. தனுஷெல்லாம் அப்படித்தான். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்தார். அவரின் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் நின்றார்கள். அதுதான் இப்போது தனுஷை பெரிய நடிகராக்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஒதுக்கிய பாலச்சந்தருக்கும் உதவிய விஜயகாந்த்.. என்ன மனுஷம்பா இவரு!..

    விக்ரம் கூட அப்படித்தான். சேது, தில், தூள் என 3 படங்களை கொடுத்தார். சாமி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அந்த படத்திற்கு பின் அவ்வளவு பெரிய வெற்றியை விக்ரம் இதுவரை கொடுக்கவில்லை. ஆனாலும் அவரின் வண்டி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு அஜித் நிறைய தோல்விப்படங்களை கொடுத்த ஒரு நடிகர்தான். வாலி படம்தான் அவரை மீண்டும் தூக்கிவிட்டது.

    இப்படி எல்லா நடிகர்களுக்கும் ஒரு கதை இருக்கும். இது விஜயகாந்துக்கும் இருக்கிறது. சினிமாவில் போராடி இனிக்கும் இளமை என்கிற படத்தில் அறிமுகமானார் விஜயகாந்த். அந்த படம் ஓடவிலை. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். எதுவும் ஓடவில்லை. அப்போதுதான் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்.

    இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

    அதன்பின் கிட்டத்தட்ட 15 படங்களில் விஜயகாந்த் நடித்தார். எதுவுமே ஓடவில்லை. சரி வாய்ப்பு வந்தால் நடிப்போம் என விஜயகாந்தும் எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்போதுதான் மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘சாட்சி’ எனும் படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட் அடிக்க அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.

    vijayakanth

    அதன்பின் அவர் நடித்து வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் ஒரு வெள்ளி விழா படமாக அமைந்து விஜயகாந்தின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. அதன்பின் பல ஹிட் படங்களில் நடித்து பெரிய ஹீரோவாகவும் விஜயகாந்த் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…

  • விஜயகாந்த் செய்த தரமான 8 சம்பவங்கள்!.. சினிமா – அரசியல் இரண்டிலும் கலக்கிய கேப்டன்…

    Vijayakanth: நடிகர், முன்னாள் நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி, எதிர்கட்சி தலைவர், தேமுதிக தலைவர், பலருக்கும் சோறு போட்டவர், பலருக்கும் உதவி செய்தவர், தங்க மனசுக்காரர், பாகுபாடு இல்லாமல் பழகியவர், எல்லோரையும் சமமாக நடத்தியவர், கஷ்டம் என யார் போனாலும் அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பவர், வானத்தை போல மனம் படைத்த நல்லவர் என விஜயகாந்தை பொதுவாக எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    ஆனால், அவர் மிகவும் தைரியமானவர். எந்த விஷயத்தையும் துணிந்து செய்தவர். யாருக்காகவும், எப்போதும், எதற்காகவும் அவர் பயந்தது இல்லை. அதேபோல், மனதில் தோன்றுவதை தைரியமாக பேசியவர். சினிமா, அரசியல் என இரண்டிலும் அவர் இதை பின்பற்றினார். செய்தியாளர்களிடம் அவரை போல கோபத்தை காட்டியவர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் விஜயகாந்த் ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால், அவர் தன்னை மாற்றிக்கொண்டதே இல்லை. கேமராவுக்கு முன்பு நடிக்க தெரியாத ஒரே அரசியல்வாதியாக இருந்தது விஜயகாந்த் மட்டுமே.

    இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..

    சினிமா, அரசியல் என இரண்டிலும் விஜயகாந்த் செய்த 8 தரமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம். விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வரும்போது ரஜினி பெரிய ஸ்டாராக இருந்தார். விஜயகாந்துக்கு தமிழை சரியாக உச்சரிக்க தெரியவில்லை என பலரும் சொன்னபோது ‘ரஜினி மட்டும் தமிழை சரியாக உச்சரிக்கிறாரா?’ என கேட்டார் விஜயகாந்த். இதுதான் முதல் சம்பவம்.

    vijayakanth

    திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ‘ஆர்ட் பிலிம் கோஷ்டி’ என நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒதுக்கியபோது அவர்களின் கதை, இசை, இயக்கத்தில் நடித்து அவர்களின் மீது வெற்றி முத்திரை குத்தியது விஜயகாந்த் செய்த இரண்டாவது சம்பவம். ஜெயலலிதா ஆட்சியில் கலைஞருக்கு பொன்விழா எடுக்க பெரிய நடிகர்களே யோசித்தபோது அந்த விழாவை தைரியமாக நடத்தியது மூன்றாவது சம்பவம்.

    இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

    எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கட்டி காப்பாற்றிய நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது நடிகர்,நடிகைகளை திரட்டி கலைநிகழ்ச்சிகளை நடத்தி அந்த கடனை அடைத்ததோடு 2 கோடி இருப்பிலும் வைத்தது அவர் செய்த 4வது சம்பவம். கருணாநிதியும், ஜெயலலிதாவும் களத்தில் இருக்கும்போதே அரசியல் கட்சி துவங்கியது 5வது சம்பவம்.

    முதல் தேர்தலிலியே தனது அரசியல் எதிரி பாமக பலமாக இருந்த விருதாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது கேப்டன் செய்த 6வது சம்பவம். 10 சதவீத வாங்கு வாங்கியை பெற்று ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் கூட்டணிக்காக ஏங்க வைத்து அலையவிட்டது அவர் செய்த 7வது சம்பவம். அதிமுகவோடு கூட்டணி வைத்து சட்டபைக்கு சென்றதால் ஜெயலலிதா பேசும் மேசையை தட்டும் கட்சியாகவே தேமுதிக இருக்கும் என எல்லோரும் நினைத்தபோது நாக்கை மடித்து கெத்து காட்டியது கேப்டன் செய்த தரமான 8வது சம்பவம்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!…

  • அந்த விஷயத்தில் கேப்டனை ஃபாலோ பண்ணும் விஜய்… அட இப்படி மாறிட்டாரா என்ன தளபதி?!…

    Vijay: தமிழ் சினிமாவில் தனது மாஸ் நடிப்பினால் மக்களை தனதுவசம் கட்டிபோட்டவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படம் என்றாலே வசூலிலும் முதல் இடத்தை பிடிக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனது நடிப்பினால் கோலிவுட்டில் முக்கியமான இடத்தை தக்கவைத்துள்ளார்.

    இவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் தனது பல்வேறு வேடங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இவரின் சினிமா வளர்ச்சிக்கு மிக பெரிய அளவில் உதவியுள்ளார்.

    இதையும் வாசிங்க:எல்லாரும் நடிக்குறாங்க… ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனோட கால் தூசி!.. வெடிக்கும் மீசை ராஜேந்திரன்…

    ஆனால் என்னதான் விஜய் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் இவரது திரைப்படங்கள் பெரிதளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் கேப்டன் விஜயகாந்திடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டு கொண்டதால்  செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருந்தார்.

    என்னதான் கேப்டன் அந்த நேரத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்காக விஜய்யையே அப்படத்தில் முன்னணிபடுத்தி காட்டியிருந்தார். அந்த அளவுக்கு விஜயகாந்த் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருந்தார். சமீபத்தில் விஜயகாந்த் மறைவிற்கு விஜய் வந்திருந்தபோது ரசிகர்கள் விஜய் மீது சற்று கோபத்துடன் நடந்து கொண்டனர்.

    இதையும் வாசிங்க:நான் தோத்து போனதுக்கு காரணமே அந்த நடிகர்தான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சித்தப்பு சரவணன்..

    பொதுவாக விஜய் மேடைகளிலோ சரி தனிப்பட்ட முறையிலோ மிகவும் கோபப்படக்கூடியவர். ஆனால் விஜயகாந்த் இறப்பிற்கு வந்தபோது விஜய்க்கு ஏற்பட்ட அந்த நிலைமைக்கு விஜய் எந்தவித கோபமும் படவில்லை. மாறாக விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் விஜயகாந்தின் பாதையையே தானும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டதாக பல கருத்துகளும் உலாவுகின்றன.

    vijay

    அதற்கான வெளிப்பாடாகதான் சமீபத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் கொடுத்ததாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் தற்போது மக்களுடனான தனது உறவை நிலைப்படுத்தவே சமீபத்தில் பல வித செல்பிகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் எனவும் வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.

    இதையும் வாசிங்க:என்னை ஏத்துக்கோ பாபு!… கெஞ்சிய மனைவி.. மனம் இறங்காத சந்திரபாபு!… திருமண வாழ்வில் நடந்த திருப்பம்..

  • செத்தா இப்படி சாகணும்! அவர் நினைச்ச மாதிரியே நடந்திருச்சு – கேப்டன் பற்றி ஃபீல் பண்ணும் தயாரிப்பாளர்…

    Captain Vijayakanth: இன்று விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தன் உறவினர்களுடன் அவருடைய சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். பிரேமலதா கண்ணீர் மல்க அவர் சமாதி முன்பு நின்றுகொண்டு மனம் உருகி பூஜை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    விஜயகாந்த் ஒரு நடிகராக அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது என்று சொல்வார்கள்.

    இதையும் படிங்க: பாதி டிரெஸ்ல காட்டினா பல்ஸ் எகிறுது!.. ஃபோகஸ் பண்ணி ரசிக்கும் காஜி ஃபேன்ஸ்…

    ஆனால் விஜயகாந்த் எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் உயர்ந்த விஜயகாந்த் அரசியல்வாதியாக எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த போதிலும் தான் கொண்ட கொள்கையில் என்றைக்கும் மாறாதவராகத்தான் இருந்திருக்கிறார்.

    ஆரம்பத்தில் இருந்தே அவர் இறுதி காலம் வரை மற்றவரின் நலனுக்காகவேதான் இருந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவர் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது இப்படி ஒரு மனிதரை இழந்து விட்டோமே என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

    இதையும் படிங்க: 80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு… எப்படி நடந்ததுன்னு தெரியுமா?

    இன்னும் சிலர் ‘இவரை ஏன் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்கவில்லை?’ என்று புலம்புவதையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர் சிவா விஜயகாந்தை பற்றி இதுவரை சொல்லாத ஒரு ரகசியத்தை கூறியிருக்கிறார்.

    தீவிர எம்ஜிஆர் ரசிகரான விஜயகாந்த் எம்ஜிஆர் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வேதனையில் இருந்தாராம். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் வரும் போது எம்ஜிஆரின் உடலை பார்க்க ஏராளமான மக்கள் ஓடுவதை விஜயகாந்த் பார்த்து ‘செத்தா இப்படி சாகனும்யா’ என்று சொன்னாராம்.

    இதையும் படிங்க: சர்ஜரிக்கு பிறகு அத பண்ணல.. இத செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பார் – கேப்டன் குறித்து SAC உருக்கம்

    இதை குறிப்பிட்டு பேசிய தயாரிப்பாளர் சிவா விஜயகாந்திற்காக மக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அன்று அவர் சொன்ன அந்த வார்த்தைதான் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றும் நினைத்ததை போலவே செய்து காட்டியிருக்கிறார் விஜயகாந்த் என்றும் சிவா கூறினார்.

  • ஸ்டேஜில் இந்த பெர்ஃபாமன்ஸ் தேவையா!… நல்லா பண்ணுறீங்க மில்லர் ஐயா! மொக்கை பண்ணிய பிரபலம்!

    Dhanush: காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹிட் நாயகனாக மாறிய தனுஷின் கேரியர் கிராப் இன்று உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் இயக்கம் என பரபரப்பாக சுற்றி வருகிறார். ஆனால் சில விஷயத்தில் கோட்டை விட்டு ரசிகர்களிடம் ட்ரோல் மெட்டிரியலாகவும் மாறி விடுகிறார்.

    தமிழ்சினிமாவின் புரட்சி கலைஞர் விஜயகாந்த் சமீபத்தில் இறந்து இருந்தார். அவரின் இறுதி அஞ்சலிக்கு நிறைய டாப் நடிகர்கள் மிஸ் ஆகிவிட்டனர். அதில் பலர் காரணத்தை சொன்னாலும் கூட ரசிகர்கள் அவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: விடாமுயற்சி படக்குழுவுக்கு கொடுத்த ஷாக்கை ஏற்கனவே தன்னுடைய ஹிட் இயக்குனருக்கும் அஜித் கொடுத்திருக்கிறாராம்?

    இந்த லிஸ்டில் தனுஷும் உண்டு. ஆனால் அவர் ஷூட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் அதை தனுஷ் தரப்பு கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. இதையடுத்து சமீபத்தில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நடந்தது.

    அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது கண்ணுக்கொரு வண்ணக்கிளி, காதுக்கொரு கானக்குயில் நீதானயா என்ற பாடலை கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். இதுதான் தற்போது மற்றுமொரு சர்ச்சைக்கு வழி வகுத்து இருக்கிறது. இதை கிண்டல் செய்யும் விதமாக புளூசட்டை மாறன் ஒரு ட்வீட்டை போட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: அண்ணனை போல யாரும் இல்ல! விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா! வைரலாகும் புகைப்படம்

    தனுஷின் அக்கா மருத்துவ சீட்டுக்கு அழைந்தார். நேரில் வரணும் தானே என ஒரு கூட்டமும் வாராதவங்களை நம்ம கட்டாயப்படுத்த முடியாது. நீங்க கேப்டன் மில்லர் ரிவியூ செய்யாதீங்க என ஒரு கூட்டமும் மாறி மாறி கமெண்ட்டை தட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

  • ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்கு பதில் கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

    Periyanna Movie: விஜய்க்கு எப்படி விஜயகாந்த் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்து ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் சூர்யாவுக்கும் பெரியண்ணா படத்தில் கேப்டன் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார்,

    அந்தப் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட சூர்யா யார்? அவரது நடிப்பு பற்றி வெளியில் தெரியவந்தது. இன்று கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், சூர்யா இருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது விஜயகாந்த்.

    இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்

    இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகரும் பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகனுமான ஸ்ரீ பெரியண்ணா படத்தில் நடிக்க வேண்டியதே நான்தான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது பெரியண்ணா படத்திற்கு முதலில் சூர்யாவுக்கு பதிலாக கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் ஸ்ரீதானாம்.

    shree
    shree

    ஆனால் சூர்யாவை சிபாரிசு செய்தது நடிகர் விஜயாம். ஆனால் வாய்ப்பு சூர்யாவுக்கு போயிருக்கிறது. விஜயின் நண்பர் சஞ்சீவ் ஸ்ரீக்கும் நண்பர் என்பதால் ஒரு நாள் விஜய் ஸ்ரீயை பார்க்க வேண்டியிருந்ததாம். அப்போது ஸ்ரீயிடம் விஜய் ‘என்ன விஜயகாந்த் சார் உன் பேரை சொல்லிக்கிட்டு இருக்காரு’ என்று கேட்டதாக ஒரு பேட்டியில் ஸ்ரீ கூறினார்.

    இதையும் படிங்க: எவ்வளவு கேஸ் போட்டாலும் கெட்டப் பையன் சார் இந்த அருண்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை

    இருந்தாலும் ஸ்ரீ ‘சூர்யா அதற்கு மிகவும் தகுதியானவர்தான். சினிமாவிற்கு நுழைந்த பிறகு சூர்யா பட்ட கஷ்டங்கள் எனக்கு தெரியும். நடனம் கற்றுக் கொண்டது, ஃபைட் கற்றுக் கொண்டது என மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்று ஸ்ரீ கூறினார்.

    ஒரு வேளை பெரியண்ணா படத்தில் ஸ்ரீ நடித்திருந்தால் இந்நேரம் சூர்யா, விக்ரம் மாதிரி ஒரு பெரிய முன்னணி ஹீரோவாக மாறியிருப்பார்.

    இதையும் படிங்க: குத்தாட்டமும் இல்ல.. கொண்டாட்டமும் இல்ல! கேப்டன் மறைவிற்கு அஜித் வராததற்கு முக்கிய காரணம்