Tag: vijayakanth

  • மறுபடியும் ஏன் அப்படி நடிச்சீங்க?!.. சத்யராஜிடம் கோபப்பட்ட விஜயகாந்த்!.. ஒரு பிளாஷ்பேக்..

    மறுபடியும் ஏன் அப்படி நடிச்சீங்க?!.. சத்யராஜிடம் கோபப்பட்ட விஜயகாந்த்!.. ஒரு பிளாஷ்பேக்..

    திரையுலகில் முதலில் வில்லனாக பல படங்களிலும் நடித்து ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறி முன்னணி நடிகராக மாறிய பலரும் இருக்கிறார்கள். தமிழில் சத்யராஜ், சரத்குமார் இருவரையும் அப்படி சொல்லலாம். இருவருமே துவக்கத்தில் நெகட்டிவ்வான வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர்கள்தான்.

    அதிலும் சத்யராஜ் பல வருடங்கள் அடியாளாகவும், வில்லனாக மட்டுமே நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகனின் தங்கையை கற்பழிக்கும் கதாபாத்திரத்தில்தான் நடித்தார் சத்யராஜ். அவர் நடித்தாலே அந்த படத்தில் கண்டிப்பாக ஒரு ரேப் சீன் இருக்கும் என ரசிகர்கள் பேசும் அளவுக்கு இருந்தது. அதிலும் அவரது நூறாவது நாள் படமெல்லாம் சத்யராஜை முக்கிய வில்லனாக மாற்றியது.

    அதேநேரம், பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார் சத்யராஜ். அந்த படம் ஹிட் அடித்ததால் இனிமேல் வில்லனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் சத்யராஜ். தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க தொடங்கினார்.. ஆனால், நூறாவது நாள் படம் மூலம் சினிமாவில் அவருக்கு வாழ்க்கை கொடுத்த அவரின் நண்பர் மணிவண்ணன் கேட்டுக் கொண்டதால் அமைதிப்படை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார்.

    அதேநேரம் அந்த படத்தில் மற்றொரு வேடத்தில் கதாநாயகனாகவும் அவர் நடித்திருப்பார். அந்த படத்தில் வில்லனாக சத்யராஜின் அலட்டலான நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் அமைதிப்படை போல ஒரு பொலிட்டிக்கல் சட்டயர் படம் இதுவரை வரவில்லை என்றே சொல்ல வேண்டும்..

    இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘அந்த படத்தை பார்த்த விஜயகாந்த் என்னிடம் ‘மறுபடியும் ஏன் வில்லனா நடிச்சீங்க?.. ஹீரோவாக நல்லாத்தானே போய்ட்டிருக்கு.. மறுபடி இப்படி நடிச்சா எல்லோரும் உங்களை வில்லனா நடிக்க கூப்பிடுவாங்க!.. நீங்க இப்படி நடிக்கக் கூடாது’ என்று சொன்னார்.. அந்த அளவுக்கு என் கெரியர் மீது அக்கறை கொண்டவர் விஜயகாந்த்’ என்ன சத்யராஜ் சொல்லியிருந்தார்..

  • பார்வையிலயே பவர்.. வலது பக்கம் 10 பேர் விழுவாங்க…. விஜய் குறித்து எஸ்.ஏ.சி பகிர்ந்த வைரல் தகவல்!

    பார்வையிலயே பவர்.. வலது பக்கம் 10 பேர் விழுவாங்க…. விஜய் குறித்து எஸ்.ஏ.சி பகிர்ந்த வைரல் தகவல்!

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். அவரது படங்கள் வெளிவந்தாலே திருவிழா கோலம்தான். சினிமா வியாபாரத்தில் ரஜினியையே முந்திவிட்டார் என்றூ கூறப்படுவது உண்டு. தற்போது அரசியல் கட்சி துவங்கி முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் அவ்ருக்கு துணையாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். தன் மகனுக்கு வெற்றி வேண்டும் என்பதற்காக விஜயகாந்தை அனுகியதாகட்டும், ஒவ்வொரு விசயத்திலும் கவனமாக காய் நகர்த்தி வந்தார்.

    இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    விஜய்யின் கண்களுக்கு என்றுமே ஒரு பயங்கர பவர் உண்டு. ஒரு காட்சியில் அவர் குனிந்துவிட்டு நிமிர்ந்தார் என்றால், அவனது கண்கள் அப்படியே சிவந்து இருக்கும். அந்தப் பார்வையிலேயே அவ்வளவு வீரியம் இருக்கும் என்று பெருமையுடன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உண்மையிலேயே விஜய் பத்து பேரை தனியாக நின்று அடிக்கக் கூடியவர் தான். அவர் சினிமாவில் பெரிய அளவில் பாப்புலர் ஆன பின்பு, நானும் அவரும் வெளியில் செல்லும்போது எங்களைச் சுற்றி பெரிய கூட்டம் கூடிவிடும்.

    அந்தச் சமயங்களில் எனக்கு முன்னாடி வந்து கூட்டத்தை அவர் தள்ளுவார் பாருங்கள்.. அவரது பலத்தில் வலது பக்கம் பத்து பேர் விழுவார்கள், இடது பக்கம் பத்து பேர் விழுவார்கள். அந்த அளவுக்கு அவருக்கு உடல் பலம் அதிகம், அவர் ஒரு ஸ்ட்ராங்கான நபர்” என்று எஸ்.ஏ.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

  • கவுண்டமணி இத பண்ணக்கூடாது!.. சின்னக் கவுண்டரில் இப்ராஹிம் ராவுத்தர் போட்ட கண்டிஷன்!..

    கவுண்டமணி இத பண்ணக்கூடாது!.. சின்னக் கவுண்டரில் இப்ராஹிம் ராவுத்தர் போட்ட கண்டிஷன்!..

    ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர். விஜயகாந்தின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக சின்ன கவுண்டர் அமைந்தது. ஆனால், இந்த படம் ஓடும் என்கிற நம்பிக்கையே இல்லாமல்தான் இந்த படத்தில் விஜயகாந்த் நடித்தார் என்பது பலருக்கும் தெரியாது..

    ஏனெனில், விஜயகாந்த் என்றாலே அனல் பறக்கும் வசனங்களும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருந்த காலகட்டம் அது. அப்படிப்பட்ட விஜயகாந்தை அதிகம் பேசவிடாமல், அமைதியாக நடிக்க வைத்தார் ஆர்.வி.உதயகுமார். ஆனால், விஜயகாந்தே ஆச்சர்யபப்டும்படி படம் சூப்பர் ஹிட்.

    இந்த படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களுக்கும் பங்குண்டு. அதேபோல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது. கவுண்டமணிக்கு வெறும் காமெடி மட்டும் கொடுக்காமல் ஊரே ஒதுக்கும் விஜயகாந்துக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்தை ஆர்.வி. உதயகுமார் கொடுத்திருந்தார்..

    இந்த பட வேலைகள் துவங்கியபோது விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் ஆர்.வி.உதயகுமாரிடம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். ‘இந்த படத்தில் நடிக்கும் கவுண்டமணி எந்த ஒரு காட்சியிலும் விஜயகாந்தை நக்கலடிப்பது போல பேசக் கூடாது. அப்படி பேசினால் விஜயகாந்தின் கதாபாத்திரம் நிக்காது’ என்று கணித்து சொல்லியிருக்கிறார்.

    ராவுத்தர் சொன்னதை ஆர்.வி.உதயகுமார் படம் முழுவதும் கடைபிடித்திருப்பார். அப்படி விஜயகாந்தின் இமேஜ் எந்த வகையிலும் சரிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்.

  • கேப்டனின் பிளாக்பஸ்டர்:  வல்லரசு வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!

    கேப்டனின் பிளாக்பஸ்டர்: வல்லரசு வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!

    தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த். ஆக்‌ஷன் ஹீரோக்களுக்குதனி இலக்கணம் வகுத்தவர் இவர். இவரது படங்களில் சண்டைகாட்சிகளில் மனிதர் வேறு லெவலில் பின்னியெடுப்பார்.குறிப்பாக விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்த படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். அந்த லிஸ்டில் வல்லரசு படமும் ஒன்று.

    ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் விஜய்காந்த் இரு வேடங்களில் நடித்து 2000-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்ட குடும்பத் திரைப்படமான வானத்தை போல படத்திற்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் தான் வல்லரசு. வானத்தை போல படத்தில் ஒரு சாதுவான, பாசமான அண்ணனாக அனைவரையும் கலங்க வைத்த விஜயகாந்த், அடுத்த சில மாதங்களிலேயே ஒரு முரட்டுத்தனமான நேர்மையான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார்.

    வல்லரசு படம் கேப்டனின் சினிமா வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், ‘ராவுத்தர் பிலிம்ஸ்’ மூலம் அவரது பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவருமான இப்ராஹிம் ராவுத்தருக்கும், விஜயகாந்திற்கும் இடையே எதிர்பாராதவிதமாக மனக்கசப்பு ஏற்பட்டு நீண்ட கால நட்பு முறிந்தது. இந்தச் சூழலில் விஜயகாந்த், தனது மைத்துனர் எல்.கே.சுதீஷை முன்னிறுத்தி கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தப் புதிய நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மிகுந்த பொருட்செலவில் உருவான பிரம்மாண்டப் படைப்புதான் வல்லரசு.

    அறிமுக இயக்குநர் மகாராஜன் இயக்கிய இந்தப் படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இப்படத்தில் விஜயகாந்துடன் கரண், ஸ்ரீமன், ரகுவரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர். இயக்குனர் பி. வாசு இப்படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். வடிவேலு ஒரு பாடலில் மட்டும் நடித்திருப்பார்.

    தேவாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. வல்லரசு வெற்றிக்கு விஜயகாந்தின் அதிரடி நடிப்பும், பரபரபான திரைக்கதையும் பக்கபலமாக அமைந்தது. இப்படம் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

  • புலன் விசாரணை படத்தில் நடிக்க தயங்கிய அந்த நடிகர்!.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட்!..

    புலன் விசாரணை படத்தில் நடிக்க தயங்கிய அந்த நடிகர்!.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட்!..

    விஜயகாந்தும், அவரின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தோரோடு இணைந்து தயாரித்து நடித்த திரைப்படம்தான் புலன் விசாரணை. அப்போது சென்னை திரைப்பட கல்லூரியில் இயக்கம் பற்றி படித்த சில மாணவர்கள் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார்கள். அப்படி வந்த ஆர்.கே. செல்வமணிதான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

    முதலில் ஆர்.கே செல்வமனி மீது விஜயகாந்த்துக்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர். ஒரு கட்டத்தில் பட்ஜெட் அதிகமாகவே ஆர்.கே.செல்வமணியிடம் இப்ராஹிம் ராவுத்தர் கோபப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது..

    இந்த படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருந்தார்.. தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தை ஆர்.கே செல்வமணி இப்படத்தை உருவாக்கியிருந்தார். 199ம் வருடம் வெளியான இந்த படம் ஹாலிவுட் பட ஸ்டைலில் இருந்ததாலும், பக்கா ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படம் ஹிட் என்பதால் விஜயகாந்த்தின் 100வது படத்தை இயக்கும் வாய்க்கும் வாய்ப்பு ஆர்.கே. செல்வமணிக்கு கிடைத்தது. அப்படித்தான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் உருவானது..

    ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் என்பது பலருக்கும் தெரியாது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘மணிவண்னனிடம் ஆர்கே செல்வமணி உதவி இயக்குனராக வேலை செய்தபோதே எனக்கு தெரியும்.. அப்போது புலன் விசாரணை கதையை என்னிடம் கூறினார்.. ஆனால் அவருக்கு அனுபவம் இல்லாததால் இந்த கதையை அவர் சரியாக எடுப்பாரா என்கிற சந்தேகம் எனக்கு இருந்ததால் அப்படத்தில் நடிக்க யோசித்தேன்.. ஆனால் விஜயகாந்துக்கு அது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது’ என சொல்லியிருக்கிறார்.

  • எல்லாம் நம்ம வரிப்பணம் .. 2 தொகுதி மேட்டரில் விஜய்யை வச்சு செய்யும் இணையவாசிகள்.. வைரலாகும் கேப்டன் வீடியோ!

    எல்லாம் நம்ம வரிப்பணம் .. 2 தொகுதி மேட்டரில் விஜய்யை வச்சு செய்யும் இணையவாசிகள்.. வைரலாகும் கேப்டன் வீடியோ!

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை சென்னையில் நடத்தினார். இதில் வரவிருக்கும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதவது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தி களமிறங்கியுள்ள விஜய், ஏன் இரண்டு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருவேளை ஒரு தொகுதியில் தோற்றுவிட்டால், மற்றொரு தொகுதி கை கொடுக்கும் என்ற தோல்வி பயம் தான் இதற்கு காரணமா? என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நடித்த தென்னவன்’ பட வசனத்தை இணையவாசிகள் வைரலாக்கி விமர்சித்து வருகின்றனர்.

    அந்த வீடியோ காட்சியில், ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடக் கூடாது என விஜயகாந்த் கூறுவார். அப்போது குறுக்கிடும் ஒரு பத்திரிகையாளர், “இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? எனக் கேள்வி எழுப்புவார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் விஜயகாந்த், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்பதுதான் ஜனநாயகத்திற்கு எதிரானது. இரண்டு தொகுதியிலும் ஒரு வேட்பாளர் போட்டியிட்டு, இரண்டிலும் வென்ற பின்னர், ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார். அதன் பின்னர் அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தச் சொல்வது.. இதற்கெல்லாம் யார் பணம் செலவாகிறது? கை வண்டி இழுப்பவனும், மூட்டை தூக்குபவனும் கஷ்டப்பட்டு கட்டும் வரிப்பணம்தானே? வேலை செய்து கஷ்டப்பட்டு வரி கட்டும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதா? அரசியல்வாதிகளின் ஈகோவுக்காக மக்களை முட்டாளாக்குவதை இன்னும் எத்தனை வருஷம்தான் அனுமதிக்க முடியும்?” என ஆவேசமாகக் கேட்பார்.

    விஜயகாந்தின் இந்தத் அனல் பறக்கும் வாதம் அடங்கிய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள், “அன்று கேப்டன் திரையில் சொன்னது, இன்று விஜய்க்கு கச்சிதமாகப் பொருந்துகிறது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

  • விஜயகாந்த் சாவுக்கு போயிருந்தா நான் செத்திருப்பேன்!… பொன்னம்பலம் ஃபீலிங்…

    விஜயகாந்த் சாவுக்கு போயிருந்தா நான் செத்திருப்பேன்!… பொன்னம்பலம் ஃபீலிங்…

    80, 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் நடிகராகவும், சண்டை காட்சி நடிகராகவும் இருந்தவர் பொன்னம்பலம். நல்ல உயரம், ஆஜானு பாகுவான உடம்பு என மிரட்டலான லுக்கில் இருப்பார். விஜயகாந்தின் பல திரைப்படங்களில் அவருடன் சண்டை போடும் காட்சிகளில் பொன்னம்பலம் நடித்திருக்கிறார். அதேபோல் பொன்னம்பலத்திற்கு பல வகைகளில் விஜயகாந்து உதவியிருக்கிறார். பல பேட்டிகளில் விஜயகாந்த் தனக்கு செய்த பல உதவிகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் பொன்னம்பலம்..

    கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட ‘கேப்டன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டேன்.. என்னை அவர் காப்பாற்றி இருப்பார்’ என்றெல்லாம் பேசியிருந்தார். மேலும் தான் எப்போது விஜயகாந்த் வீட்டுக்கு போனாலும் 5 கிலோ நல்லி எலும்பு போட்டு குழம்பு வைத்து எனக்கு சாப்பிட கொடுப்பார்.. எனக்கு எப்போது கஷ்டம் வந்தாலும் பணம் கொடுத்து உதவுவார்’ என விஜயகாந்தை பற்றி பல விஷயங்களை பொன்னம்பலம் பேசியிருக்கிறார்..

    அதேநேரம் விஜயகாந்த் இறந்தபோது பொன்னம்பலம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘என் அக்கா இறந்தபோது திடீரென சொன்னால் எனக்கு நெஞ்சு வலி வந்துடும் என்பதால் உடம்பு சரியில்லை என்று நாசுக்காக சொல்லி காரில் கூட்டிட்டு போனார்கள்.. அப்போது கூட நெஞ்சுவலி மாத்திரை, பிபி மாத்திரை எல்லாம் போட்டுட்டுதான் போனேன்..

    கேப்டன் சாவுக்கு கூட நான் போகாத காரணம்.. யார் யாரோ ஏதோ சொல்லுவாங்க.. ஆனா கண்டிப்பா நான் கேப்டன் சாவுக்கு போயிருந்தா நான் செத்துருப்பேன்.. அவர் கூட சேர்த்து என்னையும் தூக்கிட்டு போயிருப்பாங்க.. ஏன்னா என்னால அவர அந்த கோலத்தில் பார்க்க முடியாது.. கேப்டன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன்’ என ஃபீலிங்கோடு பேசினார்.

  • விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததுக்கு காரணமே நான்தான்!… தயாரிப்பாளர் பேட்டி!..

    விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததுக்கு காரணமே நான்தான்!… தயாரிப்பாளர் பேட்டி!..

    நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆருக்கு பின் மக்களிடம் ஆதரவு பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த் என சொல்லலாம். எம்ஜிஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்களில் விஜயகாந்த் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் வரைக்கும் சென்றார். தமிழ்நாட்டுக்கு அவர் முதலமைச்சராக வாய்ப்பும் இருந்தது. ஆனால், திட்டமிட்டு அவருக்கு எதிராக வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்கள் மற்றும் அவரின் உடல்நிலை காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.

    விஜயகாந்துடன் நெருக்கமாக பழகியவரும், தயாரிப்பாளருமான காஜா மொய்தின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். விஜயகாந்த் சார் அரசியலுக்கு வர நானும் ஒரு முக்கிய காரணம்.. கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக மலேசியா சென்றிருந்தபோது அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்..

    அப்போது ‘நீங்கள் அரசியல் கட்சி துவங்குங்கள்’ என சொன்னேன். அதற்கு அவர் ‘நமக்கு இருக்கும் டென்ஷனுக்கு அதெல்லாம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். ‘கண்டிப்பாக உங்களால் முடியும்.. மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்’ என்று சொன்னேன். அதன் பின்னர்தான் அவர் அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் இறங்கினார்..

    மதுரையில் அப்படி ஒரு பிரமாண்ட மாநாடு நடந்தது.. இப்போது இத்தனை லட்சம் பேர் வந்தார்கள்.. அத்தனை லட்சம் பேர் வந்தார்கள் என சொல்கிறார்கள். ஆனால் அந்த மாநாட்டுக்கு வந்த கூட்டம் எண்ணவே முடியாது.. ஒரு தலைவர் வாழும் போது மதிக்கப்படுவதை விட அவர் இறந்த பிறகு அவருக்காக மக்கள் எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

    அப்படி எம்ஜிஆருக்கு பின் விஜயகாந்த் சாருக்குதான் அதிக கூட்டம் வந்தது.. அவர் மலேசியா வந்தபோது அப்படி ஒரு வரவேற்பை நான் கொடுத்தேன். மலேசிய அரசிடம் அனுமதி வாங்கி இரண்டு சைரன் பைக்குகள் மற்றும் 20 பென்ஸ் காரில் அவரை 60 கிலோ மீட்டர் மரியாதையாக அழைத்து சென்றேன்.. அதைப்பார்த்து விஜயகாந்த்தை மிரண்டு போய்விட்டார்.. அதற்கெல்லாம் அவர் மயங்கும் நபர் இல்லை. ஆனால், நமக்காக இதை செய்தானே என என்னிடம் பாசமாக பழகுவார்’ என காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.

  • என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

    என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

    திரைத்துறையில் விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் போல நட்பை பார்க்கவே முடியாது. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவு புரிதலோடு இருந்தது.. அதனால்தான் அவர்களை இருவரும் ஒன்றாக பல வருடங்கள் பயணித்தார்கள். இருவருமே மதுரை சேர்ந்தவர்கள்.. சிறு வயது முதலே நண்பர்கள்.. விஜயகாந்த் நடிகனாக வேண்டும் என முடிவெடுத்து சென்னை வந்த போது கதாசிரியராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவருடனே வந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்.

    ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு எல்லாமுமாக ராவுத்தர் மாறினார். விஜயகாந்த் நடிக்கும் படங்களுக்கு கதைகளை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, சம்பளத்தை முடிவு செய்வது என்கிற எல்லா வேலைகளையும் இப்ராஹிம் பார்த்துக்கொண்டார். ராவுத்தர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசாமல் விஜயகாந்த் கேட்பார்..

    இதுதான் அவர்களின் நட்பின் சாராம்சம். அதேபோல் விஜயகாந்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார் ராவுத்தர். படிப்படியாக சினிமாவில் வளர்த்தது ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியது, அப்படியே அவரை அரசியலுக்கு தயார்படுத்தியது என விஜயகாந்தின் முக்கிய வளர்ச்சிக்கு ராவுத்தர் காரணமாக இருந்தார்.

    ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் என்று பேசிய தயாரிப்பாளர் காஜா மொய்தீன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் – ராவுத்தர் போல ஒரு நட்பை நான் சினிமாவில் யாரிடமும் பார்த்ததில்லை.. விஜயகாந்த் சார் தனது திருணம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்தார்.

    ஆனால், அதில் ராவுத்தருக்கு விருப்பமில்லை.. வேண்டாம் என தடுத்தார். விஜயகாந்த் கேட்கவில்லை. உடனே ராவுத்தர் தரையில் படுத்து ‘என்னை தாண்டி நீ போடா’ என்றார்.. அவ்வளவுதான்.. விஜயகாந்த் எதுவுமே பேசவில்லை.. அப்படியே போய் உட்கார்ந்து விட்டார்.. ‘நீ என்ன சொல்றியோ கேக்குறேன்’ என சொல்லிவிட்டார். அப்படி ஒரு நட்பு அவர்களுடையது’ என்று சொல்லி இருக்கிறார்..

    மேலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் பிரிந்து விட்டாலும் இருவரும் எங்குமே யாரையுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்ராஹிம் ராவுத்தர் இறந்த போது விஜயகாந்த் பல மணி நேரங்கள் அழுது கொண்டே இருந்தார்’ எனவும் காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.

  • என் படத்துக்காக முதல்வர் வீட்டுக்குப் போகமாட்டேன் – தலைவா பிரச்சனைக்கு சி.எம்.ஐ சந்தித்த விஜய்…வைரலாகும் விஜயகாந்த் வீடியோ

    என் படத்துக்காக முதல்வர் வீட்டுக்குப் போகமாட்டேன் – தலைவா பிரச்சனைக்கு சி.எம்.ஐ சந்தித்த விஜய்…வைரலாகும் விஜயகாந்த் வீடியோ

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் விஜய் படங்கள் வெளிகிறது என்றாலே பிரச்சனைகளும் சேர்ந்தே வரும் என்பது எழுதப்படாத விதி. இவரது படங்கள் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ சிக்கல்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல தலைவாவில் தொடங்கி ஜனநாயகன் வரை இது தொடர்கிறது. இப்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் அரசியலுக்கு வரும்முன்பே அவரது படங்களுக்கு பிரச்சனைகள் வரத் தொடங்கின.

    தலைவா தொடர்பான பிரச்சனைகளுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று விளக்கம் அளித்தார் விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர். அதன்பின்னரே படம் வெளியானது. அதன்பிறகு வெளியான ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி வசனப் பிரச்சனை , சர்கார் படத்தில் அரசியல் விமர்சனங்கள் எனப் பல படங்கள் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தன. தற்போது, அவர் நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கும் சென்சார் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து கடும் நெருக்கடிகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு முழுநேர அரசியல் கட்சித் தலைவராக மாறியபோதிலும் ஜனநாயகன் படப் பிரச்சனைக்கு விஜய் இதுவரை வெளிப்படையாக எந்தவொரு கண்டனத்தையோ அல்லது போராட்டக் குரலையோ எழுப்பாமல் இருந்து வருகிறார். இது அவர் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவே உள்ளது.

    இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் விஜயகாந்த், என் படத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அதற்காக நானே களத்தில் இறங்கிப் போராடுவேன். ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும் முதலமைச்சர் வீட்டிற்குச் சென்று உதவி கேட்கவோ நிற்கவோ மாட்டேன் என்று கூறுகிறார்.

    விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரின் வேறுபட்ட அணுகுமுறைகளையும் ஒப்பிட்டு இணையத்தில் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். அயிரம்தான் சொல்லுங்க கேப்டன் தில் யாருக்கும் வராது என்று கருத்துக்களை கூறிவருகின்றனர்.

    வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்