Tag: vijayakanth

  • அப்பா ஒரு அடி அடிச்சாரு!.. 15 பேர் விழுந்தாங்க!.. கேப்டன் மகன் சொன்ன பிளாஷ்பேக்!…

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நடிகர் என்பதைவிட மனிதாபிமானமிக்க ஒரு நல்ல மனிதராக இருந்ததால்தான் மக்களுக்கு அவரை பிடித்துப் போனது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை அவர் மற்றவர்களுக்கு செய்துவந்தார். பணமாகவும், பணம் சம்பந்தப்படாத மற்ற உதவிகளையும் செய்தார்.

    குறிப்பக பசிக்கும் பல பேருக்கு உணவையும் அளித்தார். மக்கள் கொண்டாடும் ஒரு நடிகராக விஜயகாந்த் இருந்தார்.. விஜயகாந்த் இருந்தபோது அவரை ட்ரோல் செய்த ரசிகர்களும், ஊடகங்களும் கூட அவர் மறைந்த போது அவரைப் பற்றி பெருமையாக பேசின. இப்போதும் பேசி வருகின்றன.

    விஜயகாந்த் வாரிசாக சினிமாவில் களமிறங்கியிருப்பவர் அவரின் மகன் சண்முக பாண்டியன். சில நாட்களுக்கு முன்பு கூட அவரின் நடிப்பில் கொம்பு சீவி என்கிற திரைப்படம் வெளியானது. சினிமாவில் ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சண்முக பாண்டியன் ஒரு ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.

    நான் அப்பாவுடன் ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தேன். அப்போது கூட்டத்தில் என்னை நசுக்கி விட்டார்கள்.. அப்பா வந்து ஒரே அடிதான் அடித்தார். 15 பேர் ஓரம்போய் விழுந்தாங்க.. அதன்பின் என்னை அங்கிருந்து கூட்டி வந்தார்.. சுலபமாக அவரால் ஒரு கூட்டத்தில் பலரையும் தள்ள முடியும்.. அந்த அளவுக்கு அவருக்கு பலமும் இருந்தது. யாராவது அப்பாகிட்ட திமிரா பேசினா அப்பா சொல்ற விதத்திலே அமைதியாகி விடுவாங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

  • ரஜினிக்காக ஓடிவந்த கேப்டன்!.. கண்கலங்கிய சூப்பர்ஸ்டார்.. ஒரு எமோஷனல் பிளாஷ்பேக்!…

    நடிகர் விஜயகாந்துக்கும் ரஜினிக்கும் இடையிலே நல்ல மரியாதை, அன்பு கலந்த ஒரு நட்பு உண்டு என்பது பலருக்கும் தெரியாது. விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டபோன போது ‘அதுதான் ரஜினிகாந்த் என ஒருவர் இருக்கிறாரே.. நீ என்ன விஜயகாந்த்’ என அவரை பலரும் கலாய்த்தார்கள். இதை விஜயகாந்தே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

    மேலும் ஒரு படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது . னால் ரஜினிக்கு அதில் விருப்பமில்லை என சொல்லி விஜயகாந்த் படத்திலிருந்து தூக்கப்பட்டார். இதை ஒரு நேர்காணலில் ரஜினியிடமே விஜயகாந்த் சொன்ன போது ‘அது எனக்கு தெரியவே தெரியாது’ என்று மறுத்தார் ரஜினி. விஜயகாந்த் கேட்டதால் நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிகளும் ரஜினி கலந்து கொண்டார்.

    viji1
    vijayakanth rajini

    விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபோது அவரை நேரில் போய் பார்த்தார் ரஜினி. அதே போல் விஜயகாந்த் மரணமடைந்தபோது நேரில் சென்று அவருக்கு அஞ்சலியும் செலுத்தினார். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ரஜினி கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ‘எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த போது அங்கே என்னை பார்க்க பலரும் கூடி விட்டார்கள். இது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்தது.. அப்போது அங்கு வந்த விஜயகாந்த் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.. எல்லாரும் போய்விட்டார்கள்.. மேலும் ‘ரஜினி அண்ணன் ரூம் பக்கத்துல எனக்கு ஒரு ரூம் போடுங்க.. நான் பாத்துக்குறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் என் கண் கலங்கிவிட்டது’ என்று ரஜினி பேசியிருக்கிறார்.

  • Vijayakanth: பிரேமலதாவுக்கே விபூதி அடிச்ச ஏ.ஆர்.முருகதாஸ்!.. ரமணாவில் நடந்த சம்பவம்!…

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ரமணா. இந்த படம் விஜயகாந்தின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அஜித்தை வைத்து
    தீனா படத்தை இயக்கிய் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரமணா இரண்டாவது படமாக அமைந்தது. இரண்டாவது படமே விஜயகாந்தை வைத்து ரமணா போன்ற ஒரு படத்தை கொடுத்ததால் கோலிவுட் முன்னணி இயக்குனராக ஏ.ஆர்.முருகதாஸ் மாறினார்.
    அதன் பின்னர்தான் அவர் சூர்யா, விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார்.

    இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ரமணா படம் பற்றி பேசியபோது ‘இந்த படத்தின் கதையை சொல்ல நான் விஜயகாந்த் சார் வீட்டுக்கு போனபோது அவரும், அவரின் மனைவி பிரேமலதாவும் கதையை கேட்டார்கள். கதாநாயகன் சிகரெட் பிடிக்கக்கூடாது.. மது அருந்தக்கூடாது.. குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக்கூடாது.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ சாவது போல காட்சி இருக்க கூடாது என்று சொன்னார் பிரேமலதா. இதில் முதல் இரண்டையும் தவிர மற்ற இரண்டும் படத்தில் இருந்தது.

    ஆனாலும் நான் கதையை சொல்ல துவங்கினேன். கதையே சொல்லிக்கொண்டே வந்தேன்.. படத்தில் விஜயகாந்த் சார் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பார். ‘அப்பாவா’ என்று ஷாக்கானர் பிரேமலதா. ‘பிளாஷ்பேக்கிலும் அப்பாவா?’ என்றார். ஆனாலும் கதையை தொடர்ந்து கேட்டார்.

    படத்தின் இறுதி காட்சியை சொன்னதும் ‘கிளைமாக்ஸில் ஹீரோ உயிரோடு இருப்பது போல் மாற்றிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார் அதற்கு விஜயகாந்த் சார் ‘இல்லை.. இந்த கதைக்கு இதுதான் சரியான கிளைமாக்ஸ்’ என சொன்னார். கதையை சொல்லி ரசிகர்களை கன்வின்ஸ் செய்து எப்படி தயார்படுத்துவோமோ அப்படி அவர்களையும் நான் தயார்படுத்தினேன்’ என்று சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

  • Vijay: SKக்கு நன்றி இல்லையா? அப்போ கேப்டன் கூட மட்டும் விஜய் மோதலாமா? லிஸ்ட்ட பாருங்க

    துப்பாக்கியை பிடித்து கையில் கொடுத்தவருக்கே துரோகம் செய்றாருனு சிவகார்த்திகேயனை நெட்டிசன்களும் விஜய் ரசிகர்களும் வச்சு செய்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்ததன் மூலமாகத்தான் விஜயை கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். அப்படி விஜயகாந்தால்தான் விஜய்க்கு அடுத்தகட்ட வாழ்க்கை ஆரம்பித்தது. அந்த நன்றிக் கடன் விஜய்க்கும் இருக்கணும் அல்லவா?

    ஆனால் இன்னொரு வாழ்க்கையை காட்டிய விஜயகாந்துடன் விஜய் எவ்வளவு முறையோ மோதி இருக்கிறார். ஆமாம். பல விஜய் படங்கள் விஜயகாந்த் படங்களுடன் ஒன்றாக மோதி இருக்கின்றன. செந்தூரப்பாண்டி படத்தில் ஒன்றாக அதுவும் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்திருப்பார். இது விஜயை புரோமோட் செய்யும் வகையில் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பீக்கில் இருந்த விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகருக்காக இதை செய்து கொடுத்தார்.

    ஆனால் விஜய் பதிலுக்கு என்ன செய்தார். இதுதான் இப்போது வரைக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கான கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் பல படங்கள் விஜயகாந்த் மற்றும் விஜய் ஒன்றாக மோதியிருக்கின்றன.விஜயகாந்துக்கு செகண்ட் இன்னிங்க்ஸாக அமைந்த படம் ரமணா திரைப்படம். அதே போல் விஜயை ஆக்‌ஷன் மோடுக்கு மாற்றிய திரைப்படம் பகவதி. இந்த இரு படங்களும் ஒன்றாக மோதியது.

    அதற்கடுத்தப்படியாக விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த படம் சொக்கத்தங்கம். அதில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். அதே நேரம் விஜய் நடிப்பில் கலகலப்பான காமெடி மற்றும் காதல் திரைப்படமாக வெளியான படம் வசீகரா. இந்த இரு படங்களும் ஒன்றாக போட்டியிட்டன.

    அதே போல் விஜயகாந்தின் ராஜ்ஜியம் திரைப்படமும் விஜய் நடித்த தமிழன் திரைப்படமும் ஒன்றாக போட்டியிட்டன. அதே வரிசையில் விஜயகாந்துக்கு மற்றுமொரு மாபெரும் ஹிட்டடித்த தவசி திரைப்படமும் விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படமும் ஒரே நேரத்தில்தான் ரிலீஸானது.

    அதுமட்டுமில்லாமல் வானத்தை போல் திரைப்படம் இன்று வரை குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியிருக்கிறது. இந்தப் படமும் விஜய் , ஷாலினி நடிப்பில் வெளியான கண்ணுக்குள் நிலவு படமும் ஒன்றாகத்தான் மோதியது.இப்படி தர்ம சக்கரம் – என்றென்றும் காதல், வாஞ்சிநாதன் – ப்ரெண்ட்ஸ், தாயகம் – கோயம்புத்தூர் மாப்பிள்ளை, என விஜயகாந்த் படங்களும் விஜய் படங்களும் ஒன்றுக்கொன்று மோதியிருக்கின்றன. அப்போ இதெல்லாம் என்னென்னு சொல்வீங்கனு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

  • தினமும் சாப்பாடு போட காரணம்!. விஜயகாந்த் சொன்னதை கேட்டு கண்கலங்கிய பிரபலம்!…

    விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மனிதாபிமானம், மற்றவர்களுக்கு அவர் செய்த உதவிகள், அவரின் எளிமையான குணம் ஆகியவைதான். அதன் பின்னர்தான் அவர் நடிகர். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு அவர் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். பசியோடு இருந்த பலருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார்.

    பல வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் ‘நான் அப்போது பிரபலமாகவில்லை. அறிமுக நடிகனாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு படத்தில் நடித்தபோது கதாநாயகி வருவதற்கு தாமதமானதால் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென கதாநாயகி வந்துவிட்டார்.

    உடனே ஓடி வந்து ‘ஹீரோயின் வந்துட்டாங்க. உடனே ஷாட் வைக்கணும் வா’ என சொல்லி அப்படியே இழுத்துக்கொண்டு போய் விட்டார்கள். பசியோடு போய் நடித்தேன். அதுதான் என்னை யோசிக்க வைத்தது.. நாம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்போது எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்று நினைத்தேன் என்று பேசியிருந்தார்.

    vijayakanth
    #image_title

    அவர் உயிரோடு இருக்கும் வரை அதை செய்தும் காட்டினார். அவரின் அலுவலகத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பாடு கிடைக்கும். சினிமாவில் கஷ்டப்பட்ட பலரும் அங்கு சென்று உணவருந்தி பசியை தீர்த்துக் கொண்டார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் சண்டை இயக்குனராக பணிபுரிந்த ஜாக்குவார் தங்கம் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறினார்.

    1978ல் நான் கேப்டனை சந்தித்தேன். அப்பவே அவர் ஆபிசில் நிறைய பேர் வந்து சாப்பிடுவாங்க.. எல்லாமே கஷ்டப்படுறவங்க.. ‘எதுக்குணே தினமும் சாப்பாடு போடுகிறீர்கள்?’ என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘மிருகம் எடுத்து வாழும்.. மனுஷன் மட்டும்தான் கொடுத்து வாழ முடியும்.. நாம மனுசனா இருக்கும்ல.. கொடுத்து வாழுவோம்’ என சொன்னார்.

    அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. ‘புரட்சித்தலைவர்தான் இப்படி பண்ணுவார்’ என்று சொன்னேன். அதற்கு ‘ அவரை மாதிரி வந்தா நானும் நல்லா பண்ணுவேன்’ என்று கேப்டன் சொன்னார். அப்படி வந்து அதை செய்தும் காண்பித்தார்’ என பேசியிருக்கிறார்.

  • அப்பாவால அததான் தாங்கிக்க முடியல!. உடைஞ்சி போயிட்டார்!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…

    நடிகராக மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த மனிதராகவும் மக்களை கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். மிகவும் எளிமையான குணம் கொண்டவர். யாரிடம் பழகினாலும் உண்மையாகவே பழகுவார். உண்மையாக பேசுவார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இரக்க குணம் கொண்டவர்.. பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.. மற்றவர் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஒருவர் என விஜயகாந்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

    அதனால்தான் அவர் மறைந்த பின்னரும் அவரின் புகழ் மக்களிடம் ஓங்கி நிற்கிறது. இப்போதும் அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயகாந்த் போல ஒருவரை இனிமேல் பார்க்க முடியாது என்பதுதான் திரையுலகில் உள்ளவர்களின் கருத்தாக மட்டுமில்லாமல் மக்களின் கருத்தாகவும் இருக்கிறது.

    அரசியலில் வேகமாக விஜயகாந்த் வளர்ந்து கொண்டிருந்தபோது அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன்பின் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாமலும், நடக்க முடியாமலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாதவராகவும் அவர் அவதிப்பட்டார்.

    இந்நிலையில்தான் கொம்புசீவி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்த் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார்.

    ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என எல்லோரும் அப்பாவை பற்றி அவதூறாக பேசிய போது கூட அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் துரோகம் செய்த போதும், நண்பர்களாக இருந்தவர்கள் கூட அவரை விட்டுப் போனப்போதும் அவரால் தாங்க முடியவில்லை.

    அதுதான் அவரின் மனதை அதிகமாக பாதித்தது. அதுவே கூட அவருக்கு நோயாக மாறியிருக்கலாம். அதை அவர் வெளியே சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் அந்த வலி அவரிடம் இருந்தது’ என்று சொல்லி இருக்கிறார்.

  • புலன் விசாரணை படத்துக்கு வந்த சிக்கல்.. No சொன்ன மணிவண்ணன்!.. ஒரு பிளாஷ்பேக்!…

    விஜயகாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கிய போது அது அவரின் முதல் திரைப்படம். எனவே இயக்குனர் மீது நம்பிக்கை இல்லாமல்தான் அப்படத்தை தயாரித்த இப்ராஹிம் ராவுத்தர் இருந்தார். ஆனால் ஒரு இயக்குனர் செல்வதை கேட்டு நடிப்பது விஜயகாந்தின் பழக்கம் என்பதால் அவர் எதிலும் தலையிடவில்லை. ஒருபக்கம் சொன்ன பட்ஜெட்டை தாண்டி படம் சென்றுவிட்டது.

    எனவே செல்வமணியை அழைத்து ‘நீ இனிமேல் நான் ஆபீசுக்கு வராதே’ என்று திட்டி அனுப்பிவிட்டர் ராவுத்தர். ஒருபக்கம் ஏற்கனவே எடுத்த விஜயகாந்த் படங்களில் வந்த நஷ்டம் மற்றும் இந்த படம் பாதியில் நின்றது போன்ற காரணங்களால் ராவுத்தரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    செல்வமணியை விரட்டியதால்தான் தனக்கு இந்த பிரச்சனை என யோசித்த ராவுத்தர் செல்வமணியை மீண்டும் அழைத்து பேச மீண்டும் ஷூட்டிங் துவங்கியது. செல்வமணி சில விஷயங்களில் அடம்பிடித்தார். கவர்னர் வரும் காட்சியில் பென்ஸ் கார்தான் வேண்டுமென்று கேட்டார். ராவுத்தர் கொடுக்க முடியாது என சொல்ல ‘கார் இல்லையென்றால் பேக்கப்’ என செல்வமணி சொல்ல பிரச்சனை துவங்கியது.

    RK Selvamani
    RK Selvamani

    செல்வமணி விவகாரம் விஜயகாந்த் ராவுத்தருக்கும் இடையே கூட மோதலை உருவாக்கியது. ஒரு கட்டத்தில் மணிவண்ணனை வைத்து படத்தை முடித்து விடலாம் என்று கூட யோசித்துள்ளனர். ஆனால் ஒருவனின் வயிற்றில் அடித்து நான் வாழ மாட்டேன் என்று மணிவண்ணன் சொல்லிவிட மீண்டும் செல்வமணியை அழைத்து படத்தை இயக்க சொன்னார்கள்.

    ஒரு பக்கம் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியே ஆகணும் என்ன ராவுத்தர் சொல்ல அதுக்கு செல்வமணி சரியான பதிலை சொல்லாததும் ராவுத்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார். அப்படி வெளியான புலன் விசாரணை படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படமும் ஹிட் அடித்தது. ‘இதுதான் என் கல்யாண பரிசு’ என்று சொன்னார் விஜயகாந்த். செல்வமணியை அழைத்டு விஜயகாந்தின் 100வது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே கொடுத்தார் ராவுத்தார். அப்படி வெளிவந்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன்.

  • இந்த கதையில் நடிக்கணும்!.. சண்முக பாண்டியனின் நடிக்க ஆசைப்படும் கனவு படம்…

    சகாப்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக களமிறறங்கியவர் சண்முக பாண்டியன். நடிகர் விஜயகாந்தின் மகன்களில் ஒருவர். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் இவர். சகாப்தம் படத்திற்கு பின் சில படங்களில் நடித்தார்.

    ஆனால் ஒன்றும் ஹிட் அடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட படைத்தலைவன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சண்முக பாண்டியன். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    இந்நிலையில்தான், பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதுவரை இப்படம் லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சண்முக பாண்டியன் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. கண்டிப்பாக கொம்பு சீவி திரைப்படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    vijayakanth
    vijayakanth

    இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த சண்முகம் பாண்டியன் ‘அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு.. ஆனால் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எளிதாக படமாக்க முடியாது. அதற்கு சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் அப்பாவின் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன்’ என்று சொல்லி இருக்கிறார் சண்முக பாண்டியன்.

  • Vijayakanth: படம் ஃபிளாப் ஆனா விஜயகாந்த் இததான் செய்வாரு!… தயாரிப்பாளர் பேட்டி!…

    சினிமாவில் எந்த திரைப்படம் வெற்றி பெறும், எந்த படம் தோல்வி அடையும் என கணிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். நல்ல கதை, அதற்கு ஏற்ற திரைக்கதை. சரியான நடிகர், நடிகைகள், அதை சரியாக இயக்கும் இயக்குனர் என எல்லாம் பொருந்தி வர வேண்டும். ஏதோனும் ஒன்று சரியாக அமையாவிட்டாலும் படம் தோல்வியடையும்.

    கதை, திரைக்கதை சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் வெற்றி பெறாது. 60களில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர், நடிகர் திலகமாக இருந்த சிவாஜி கணேசன், இப்போது வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி கூட தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார்கள்..

    நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய போது அந்த நஷ்ட பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி. அதன்பின்னரே தற்போது சிலர் சினிமா துறையில் சிலர் மட்டும் அதை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் எல்லோரும் அதை செய்வதில்லை.

    ஒரு தயாரிப்பாளர் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தரலாம். ஆனால் ஒரு நடிகருக்கு நஷடத்தில் பங்கு இல்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்த் தனது படத்திற்கான நஷ்டத்தில் தான் பங்கெடுத்து கொள்வார்.

    தமிழில் சில படங்களை தயாரிப்பாளர் கே.எல்.அழகப்பன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் படம் நடித்து அந்த படம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா தயாரிப்பாளரை கூப்பிட்டு உங்கள் தயாரிப்பில் நான் மீண்டும் நடிக்கிறேன்.. எனக்கு 5 ஆயிரம் சம்பளம் குறைவக கொடுங்கள்’ என சொல்வார். அப்போது அவருடைய சம்பளம் 40 ஆயிரம், 50 ஆயிரமாகத்தான் இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.

  • Vijayakanth: கேப்டன் சொன்னதை கேட்டு ஃபீல் பண்ணி அழுத எஸ்.ஏ.சி.. ரமணாவுக்கு பிறகு இப்படி நடந்ததா?

    விஜயகாந்த்:

    தமிழ் சினிமா உலகில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்களுக்கு பிடித்தமான ஒரு மனிதராக தான் இருந்து வந்தார். 150 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமா உலகில் வெற்றி வாகை சூடிய ஒரு நடிகர். அதேபோல அரசியலிலும் அவர் ஆதிக்கம் செலுத்திய வரை மக்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும், மக்களுக்காகவே வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றியவர்.

    அவரது மறைவு இன்றுவரை தமிழக மக்களுக்கும் சரி சினிமா ரசிகர்களுக்கும் சரி ஒரு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கொம்புசீவி. வரும் 19ஆம் தேதி அந்த படம் வெளியாக இருக்கின்றது. படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தந்தை மகன் கேரக்டரில் இருவரும் நடிக்கிறார்களா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பிரேமலதா விஜயகாந்த் மாமனுக்கும் மச்சானுக்கும் இடையே இருக்கும் அந்த கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது எனக் கூறியதன் மூலம் மாமன் மருமகன் கதாபாத்திரத்தில் இருவரும் நடிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    ரமணா வெற்றி:

    இந்த நிலையில் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது வந்திருந்த அனைத்து சினிமா பிரபலங்களும் விஜயகாந்தை பற்றி பேசாமல் மேடையை விட்டு இறங்கவில்லை. ஒவ்வொருவரும் விஜயகாந்துடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். ராஜேஷ் இயக்குனர் பொன்ராம் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள். ரமணா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்த போது விஜயகாந்த் அந்த சமயம் மிகவும் பிஸியாக இருந்திருக்கிறார்.

    அப்பொழுது எஸ்.கே சந்திரசேகர் ராஜேஷையும் பொன்ராமையும் அழைத்து தன்னிடம் ஒரு ஆக்சன் சம்பந்தப்பட்ட ஒரு கதை இருப்பதாகவும் அதன் பவுண்டடு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறும் இவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். ராஜேஷ், பொன் ராமன் எஸ்.ஏ சந்திரசேகர் சொன்னதை போல ஒரு பவுண்டடு ஸ்கிரிப்ட் ரெடி செய்து எஸ்.ஏ சந்திரசேகரிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என சந்திரசேகர் கேட்க, இருவரும் பல நடிகர்களின் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால் சந்திரசேகர் இந்த கதைக்கு விஜயகாந்த் பொருத்தமாக இருப்பார் என்று சொல்ல, அதற்கு ராஜேஷ் விஜயகாந்தா? அவர் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்.

    கண்கலங்கி அழுத சந்திரசேகர்

    அவர் நடிப்பாரா என்று கேட்டிருக்கிறார். நான் கேட்டு பார்க்கிறேன் என சந்திரசேகர் உடனே விஜயகாந்துக்கு தொலைபேசி மூலமாக அழைத்திருக்கிறார். அப்போது விஜயகாந்த் வெளியூர் படப்பிடிப்பில் இருந்தாலும், என்ன சார் நான் நேரில் வரணுமா சொல்லுங்க. படப்பிடிப்பை அப்படியே விட்டுவிட்டு கிளம்பி வருகிறேன்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சந்திரசேகர், இல்லை இல்லை என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

    உங்களுக்கு அது பொருத்தமாக இருக்கும் என கூற எப்ப சார் ஷூட்டிங் என விஜயகாந்த் கேட்டிருக்கிறார். நீங்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு சொல்லுங்கள், அதன் பிறகு பேசலாம் என கூறிவிட்டு போனை வைத்து விட்டாராம் சந்திரசேகர். ஆனால் கேப்டன் அப்படி சொன்னதும் சந்திரசேகர், ‘ என்ன மனுஷன்யா இவரு? இன்னும் அவர் உயர போக வேண்டும். மென்மேலும் வளர வேண்டும்’ என சொல்லிக்கொண்டே கண் கலங்கி அழுது விட்டாராம். இதை ராஜேஷ் அந்த மேடையில் கூறினார்.