Author: adminram

  • Vijay: பனையூர் வரச்சொல்லி நஷ்டஈடு தருவாரா? – விஜய் சீண்டிய ப்ளுசட்டை மாறன்

    55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு இன்று வந்திருந்தார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், பகல் 12 மணிக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றினார் விஜய்.

    நடந்தது என்ன?

    பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஈரோடு பொது கூட்டம் எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற்ற நிலையில் சேலம் நிகழ்ச்சியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்:

    மதிய வெயிலில் பந்தல் போடாமல் மேலும் ஒரு உயிரிழப்பு. இவரது வீட்டாரையும் பனையூர் வரச்சொல்லி நஷ்டஈடு தருவார் போல எனக் குறிப்பிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்: தோழிக்காக களமிறங்கும் சமந்தா!

    தென்னிந்தியத் திரையுலகில் ஒரு துணிச்சலான நடிகையாகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது அவர் நடிப்பதுடன் மட்டுமல்லாமல், ஒரு புதிய பரிமாணத்தில் களமிறங்கியுள்ளார். முதன்முதலாக ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் அவர். படத்தின் பெயர் சரஸ்வதி.

    இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் தலைப்பு மற்றும் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் நாளை (சனிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்தச் சிறப்பான வெளியீட்டை வரலட்சுமியின் நெருங்கிய தோழியும், முன்னணி நடிகையுமான சமந்தா ரூத் பிரபு தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வெளியிடுகிறார்.

    இந்தப் படம் ஒரு த்ரில்லர் பாணியில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

  • Pookie Review: காதலும் மோதலும் கலந்த பூக்கி- விமர்சனம்

    Pookie Review: காதலும் மோதலும் கலந்த பூக்கி- விமர்சனம்

    விஜய் ஆண்டனியின் தயாரிப்பில், கணேஷ் சந்திரா இயக்கத்தில் இளமைத் துள்ளலுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பூக்கி’. அஜய் தீஷன், தனுஷா எனப் புதிய முகங்களுடன் பாண்டியராஜன், விவேக் பிரசன்னா போன்ற அனுபவ நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

    ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வரும் கைலாஷ் (அஜய் தீஷன்) மற்றும் ஆழி (தனுஷா), ஒருவரையொருவர் செல்லமாக ‘பூக்கி’ என அழைத்துக்கொள்கிறார்கள். ஒரு பயணத்தின் போது இருவருக்கும் இடையே வெடிக்கும் மோதல், கைகலப்பாக மாறுகிறது. இதைச் சுற்றியுள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்க, ஈகோ முட்டி மோதி இருவரும் பிரிகிறார்கள்.

    இந்தத் தற்காலிகப் பிரிவுக்குப் பின், அவர்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறிச் சென்றார்களா அல்லது பழைய நினைவுகளில் சிக்கித் தவித்தார்களா? என்பதே இப்படத்தின் கலகலப்பான திரைக்கதை.

    இப்படத்திற்கு இசையமைத்து, எடிட்டிங் செய்ததோடு மட்டுமல்லாமல், ஒரு பாடலுக்கு நடனமாடியும், இடைவேளையில் ரசிகர்களுடன் உரையாடியும் ‘கேமியோ’ பாத்திரத்தில் அப்ளாஸ் வாங்குகிறார் விஜய் ஆண்டனி. படம் முழுவதும் நடிகர் சிம்புவின் பழைய பேட்டி வீடியோக்கள் கதையோட்டத்திற்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரு புதுமையான முயற்சி. இது திரையரங்கில் சிரிப்பலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

    இன்றைய காலத்து காதலர்களுக்கே உரிய அந்தத் தவிப்பையும், குழப்பத்தையும் அஜய் தீஷன் மற்றும் தனுஷா மிக நேர்த்தியாகப் பிரதிபலித்துள்ளனர்.ஆனால் படத்தின் நீளம் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையைச் சோதிக்கிறது. எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளைக் குறைத்திருந்தால் படம் கூடுதல் வேகத்தைப் பெற்றிருக்கும்.

    பிரதான காதலைத் தாண்டி அரசியல், மோசடிச் சாமியார்கள் எனப் பல விஷயங்களைத் தொட முயன்றதில், படத்தின் மையக்கரு சிதறுவது போலத் தெரிகிறது.
    சிம்புவின் வீடியோக்கள் மற்றும் ஏஐ காட்சிகள் சில இடங்களில் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவை திரும்பத் திரும்ப வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
    தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இன்றைய தலைமுறை காதலர்களின் மனநிலையைத் திரையில் பார்க்க விரும்புபவர்களுக்கு ‘பூக்கி’ ஒரு நல்ல சாய்ஸ். குறிப்பாக இந்த காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்ற ஒரு ‘கலர்ஃபுல்’ பொழுதுபோக்குத் திரைப்படம் இது.

  • Sweetie Naughty Crazy Review: இளைஞர்களை கவர்ந்ததா ஸ்வீட்டி நாட்டி கிரேஸி – விமர்சனம்

    Sweetie Naughty Crazy Review: இளைஞர்களை கவர்ந்ததா ஸ்வீட்டி நாட்டி கிரேஸி – விமர்சனம்

    அடல்ட் காமெடி ஜானரில் இன்றைய உறவுமுறைச் சிக்கல்களை மையமாக வைத்து ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’.

    கதைக் களம்

    கல்லூரித் தோழர்களான த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ் ஆகியோரின் நட்பு காதலாக மலர்கிறது. ஒரு கட்டத்தில் த்ரிகுண் தனது கடந்த கால அந்தரங்க உறவுகளைப் பற்றி (வயதில் மூத்த பெண்களுடனான தொடர்பு குறித்து) வெளிப்படையாகக் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், காதலனை நல்வழிப்படுத்த எண்ணி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் நாயகி.

    திருமணத்திற்குப் பின், தனது மனைவியின் குடும்பத்தைச் சந்திக்க ஆவலுடன் கோத்தகிரி செல்லும் நாயகனுக்கு அங்கு ஒரு ‘மெகா அதிர்ச்சி’ காத்திருக்கிறது. மனைவியின் அக்கா (இனியா) மற்றும் அம்மா (ராதா) ஆகியோரைப் பார்த்ததும் த்ரிகுண் ஏன் நிலைகுலைந்து போகிறார்? அந்தச் சிக்கல்களில் இருந்து அவர் எப்படித் தப்பினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    த்ரிகுண்: இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் சங்கடமான சூழல்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கத் தனித் துணிச்சல் வேண்டும். அதைச் சிறப்பாகக் செய்துள்ளார் த்ரிகுண்.

    ஸ்ரீ ஜீத்தா கோஷ்: காதலனின் தவறுகளை மன்னித்து, அவரிடம் அன்பு காட்டும் ஒரு நவீன காலத் துணையாக ரசிகர்களைக் கவர்கிறார். இப்படி தவறை மன்னிக்கும் மனைவி நமக்கு கிடைபாளா என்று ஏங்க வைக்கிறார்.

    இனியா & ராதா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் இனியா, கவர்ச்சியிலும் நடிப்பிலும் அதிரடி காட்டியுள்ளார். ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா, இதில் ‘ஆண்டி’ கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

    மற்றும் தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா என ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே இருந்தாலும், படத்தின் கதைக்களம் ‘காமம்’ சார்ந்தே நகர்வதால் இவர்களது நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை.

    ஒளிப்பதிவு சி.விஜய், இசை அருணகிரி. ராஜசேகர்.ஜி என்பவர் இயக்கியுள்ளார். உறவுமுறைகளைச் சிதைக்கும் வகையிலான ஒரு கதைக் கருவைத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஆபாசத்தின் எல்லைக்குச் செல்லாமல் நகைச்சுவை கலந்து வழங்க முயன்றிருக்கிறார்.
    உறவுமுறைகளில் வக்கிரம் இருப்பதாகத் தோன்றினாலும், அதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுவதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

    பாசிட்டிவ்:

    *விறுவிறுப்பான திரைக்கதை.

    • இளைஞர்களைக் கவரும் வசனங்கள் மற்றும் கவர்ச்சி.

    நெகட்டிவ்:

    • உறவுமுறைகளைச் சித்தரித்துள்ள விதம் சிலருக்கு அதிருப்தியைத் தரலாம்.

    முடிவாக: ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ – தேவையற்ற விவாதங்களை தவிர்த்துவிட்டு , ஒரு அடல்ட் காமெடித் திரைப்படமாகப் பார்த்தால் இளைஞர்களுக்கு இது ஒரு ‘கலர்ஃபுல்’ விருந்து.

  • ரஜினி நடித்து அட்டர் பிளாப் ஆன 5 படங்கள் குறித்த பார்வை

    தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த், தனது ஐம்பது ஆண்டுகாலத் திரைப்பயணத்தில் எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். இருப்பினும், ஒரு நீண்ட காலப் பயணத்தில் சில திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வர்த்தக ரீதியாகப் தோல்வியை சந்தித்த ஐந்து முக்கியமான திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாபா (2002): ரஜினிகாந்தே திரைக்கதை எழுதித் தயாரித்த இந்தப் படம் இது. ஆன்மீக அரசியலை மையமாகக் கொண்டு வெளியானது. இந்த படத்திற்கு அந்த காலகட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், வணிக ரீதியாக இது பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் தனது சொந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

    குசேலன் (2008): மலையாளத் திரைப்படமான ‘கதா பறயும்போல்’ என்பதன் ரீமேக் இது. கவிதாலயா சார்பில் கே.பாலசந்தர் தயாரித்த இந்த படத்தில் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், விளம்பரங்கள் அனைத்திலும் அவரை நாயகனாக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    லிங்கா (2014): கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அணை கட்டும் பின்னணியைக் கொண்டிருந்தது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், அதன் விநியோக விலையுடன் ஒப்பிடும்போது போதுமான வசூலைப் பெறவில்லை.அதிலும் க்ளைமாக்ஸ் சண்டைகாட்சி காமெடியாக ட்ரோல் செய்யப்படட்து

    கோச்சடையான் (2014): இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத் திரைப்படம் இது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம், தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் படத்தின் தரம் குறித்த விமர்சனங்களால் ரசிகர்களைக் கவரத் தவறியது. வர்த்தக ரீதியாகவும் இது தோல்வியைத் தழுவியது.

    தர்பார் (2020): ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும், திரைக்கதையில் இருந்த தொய்வு காரணமாக இந்தப் படம் வணிக ரீதியாக விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

    வேட்டையன்: ஜெய்பீம் வெர்றியை அடுத்து இயக்குனர் ஞானவேல் ரஜினியை இயக்கிய படம் இது. படம் நன்றாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் வந்த எதிர்மரை விமர்சனங்களால் தோல்வியை தழுவியது.

  • OTT this week: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் சீரிஸ்

    இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள புதிய திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

    தலைவர் தம்பி தலைமையில்:

    நடிகர் ஜீவா நடித்த இந்தப் படம் பொங்கல் வெளியீடாக வந்தது. பராசக்தி, வா வாத்தியார் படங்களுடன் வெளியாகி யாருமே எதிர்பர்க்காத வெற்றியை பெற்றது . ஜீவாவுக்கு இப்படம் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறது. இன்று 12 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

    மன சங்கர வர பிரசாத் காரு (தெலுங்கு/தமிழ்):

    சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படம் ஜீ5 (ZEE5) தளத்தில் ஸ்ட்ரீமிங் நேற்று வெளியானது. நீண்ட நாட்களுக்கு பின் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள்து இப்படம்.

    அனகனக ஒக்க ராஜூ (தெலுங்கு/தமிழ்): நவீன் பாலிஷெட்டி நடித்த இந்தப் படம் நேற்று நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது.

    பேபி கேர்ள் (மலையாளம்): நிவின் பாலி நடித்துள்ள இந்தத் த்ரில்லர் திரைப்படம் பிப்ரவரி 12 அதாவது இன்று சோனி லிவ் (SonyLIV) தளத்தில் வெளியானது.

    தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் (ஆங்கிலம்/தமிழ்): ஹாரர் ரசிகர்களுக்காக இந்தப் படம் பிப்ரவரி 13 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

    திரைப்படங்கள் தவிர்த்து, ‘கோஹ்ரா’ (Kohrra) சீசன் 2 நெட்ஃபிக்ஸ் தளத்திலும், ‘க்ராஸ்’ (Cross) சீசன் 2 அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகியுள்ளன. இவை தமிழ் டப்பிங் பதிப்புகளுடனும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • உண்மையான கத்தியை எடுத்த விஜயகாந்த்..அல்லு விட்ட தலைவாசல் விஜய்

    1992ல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த தலைவாசல் படம் மூலம் அறிமுகம் ஆனவர் விஜய். இப்படத்தின் வெற்றிக்கு பின் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியிலேயே அழைக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் தலைவாசல் விஜய், விஜயகாந்த் குறித்து சொன்ன விசயங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. பெரிய மருத்து படப்பிடிப்பில் நடந்த அந்த விசயம் என்னவெனில், பெரிய மருது படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில், விஜயகாந்த் ஒரு பெரிய கத்தியால் எதிரிகளைத் தாக்குவது போலப் படமாக்கப்பட்டது. பொதுவாக சினிமாவில் சண்டைக் காட்சிகளில் டம்மி கத்திகளையே பயன்படுத்துவார்கள். அந்த காட்சியில் விஜயகாந்த் என் கையை வெட்டுவது போல காட்சி எடுகக் வேண்டும். ஆனால் அங்கு டம்மி கத்தி இல்லை. நிஜ கத்திதான் இருந்தது. உடனே விஜயகாந்த் தலைவாசல் விஜயிடம் என் மேல் நம்பிக்கை உள்ளதா என்று கேட்டார். ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. ஆனாலும் ஏதும் தப்பா நடந்தாலும் கேப்டன் நம்மை விட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் ஓகே சொன்னேன்.

    கேப்டன் அந்த கத்தியைச் சுழற்றிய விதம் பயங்கரமாக இருந்தது. கத்தி என் முகத்திற்கு மிக அருகில் வந்து சென்றது. ஒரு சிறிய பிசிறு ஏற்பட்டிருந்தாலும் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், விஜயகாந்த் சண்டைக் காட்சிகளில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதால், அந்த ஆபத்தான காட்சியை மிகத் துல்லியமாகச் செய்து முடித்தார் என்று வியந்து கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பு முடிந்ததும் விஜயகாந்த் தன்னிடம் வந்து பயந்துட்டியா விஜய்? என்று அன்போடு கேட்டதாகவும் அவர் கூறினார்.

  • வித் லவ்: 6 நாட்கள் ஆகியும் குறையாத வசூல்

    சமீப காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களை விட வளரும் நடிகர்கள் படங்கள் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த லிஸ்இல் கடந்த 6ம் தேதி வெளியான வித் லவ் படமும் உண்டு. ஒரு அழகான காதலை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி காலத்துக் காதல், பழைய காதலைத் தேடிச் செல்லும் பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இளைஞர்களைக் கவரும் வகையில் லவ் வித் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் நாயகனாக டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 16.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார நாட்களிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

  • காதலர் தினத்தை குறிவைக்கும் மௌனம் பேசியதே

    தமிழகத்தில் இது ரீ ரிலீஸ் காலம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் அடித்த படங்கள் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்துவருவது அதிகரித்து வருகிறது. இந்த லிஸ்டில் சூயாவும் இணைகிறார். கடந்த 2002ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா நடித்த கிளாசிக் படமான மௌனம் பேசியதே , வருகிற பிப்ரவரி 13-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. :

    ஏற்கெனவே மௌனம் பேசியதே காதலை மையமாக கொண்ட படமாதலால் காதலர் தினத்தை குறி வைத்து ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.இப்படம் பழைய பதிப்பை விட மேம்படுத்தப்பட்ட 4K தரம் மற்றும் தியேட்டருக்கு ஏற்ற ஒலி அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்திற்கு பின் அடுத்து சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் இது. இதில் “கௌதம்” என்ற கதாபாத்திரத்தில் அவரது அமைதியான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. த்ரிஷா அறிமுகமான முதல் படம் இதுதான். யுவனின் இசையில் “எங்கே போனாய்”, “ஆடாத ஆட்டமெல்லாம்” போன்ற பாடல்கள் இன்றும் இளைஞர்களின் ஃபேவரிட்.
    மௌனம் பேசியதே இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில் இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அம்மா சொன்ன ஒரு வார்த்தை… இன்று வரை அதை செய்யாத ராம்கி

    தமிழ் திரையுலகில் 90-களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராம்கி.

    1987-ம் ஆண்டு வெளியான சின்னப் பூவே மெல்லப் பேசு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. பிரபுவுடன் இணைந்து நடித்த இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் செந்தூரப்பூவே அவருக்கு மிகப்ப்ரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் வந்த இணிந்த கைகள், தொட்டில் சபதம், மருது பாண்டி என பல வெற்றிகளி கொடுத்தார். ராம்கிக்கு ஸ்பெஷலே அவரது தனித்துவமான ஹேர் ஸ்டைல்தான். தன்னுடன் நடித்த நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்தார் அவர். சமீபத்தில் வந்த லக்கி பாஸ்கர் படத்தில் அவரது கெரக்டர் அனைவராலும் பேசப்பட்டது.

    இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ராம்கி கூறியபோது, சின்ன வயதில் நான் சொந்தக்காரங்க வீட்டிற்கு சென்றபோது அவர்கள் வீட்டில் கலர் கலரா சிக்கன் 65 சமைத்து வைத்திருந்தார்கள். நான் அதை எடுத்து சாப்பிடும்போது ஏய் அதை தொடாதே என்று என் அம்மா சொல்வார்கள். என்னடா இது நன்றாக இருக்கிறதே, ஆனால் நம் அம்மா அதனை சாப்பிட விடமாட்றாங்களே அன்று நினைப்பேன். உடனே நான் ஏன் என்று என் அம்மாவிடம் கேட்டேன். அதற்கு என் அம்மா டேய் அதை எல்லாம் சாப்பிடக்கூடாது. ஒரு உயிரை கொன்று வைத்திருக்கிறார்கள்டா , இதனை சாப்பிட்டால் சாமி கண்ணை குத்திவிடும் என்று கூறுவார்கள்.அப்போது நான் சிறு வயது என்பதால் ஏதோ என் மனதில் பட்டுச்சு. அப்போதிலிருந்து இப்போது வரை நான் அசைவத்தை சாப்பிடுவது இல்லை என்று கூறியிருந்தார்.