Category: home

  • பீப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் ; செப்டம்பரில் ரிலீஸ்

    பீப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் ; செப்டம்பரில் ரிலீஸ்

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் இணையும் புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பீப்’.

    எம் குவெஸ்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இல. சண்முகசுந்தர் எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகவ் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரேர்ணா கண்ணா, யாமினி, ‘சார்பட்டா பரம்பரை’ பிரியதர்ஷினி மற்றும் நிதிஷ் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தெலுங்கு இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி இசையமைத்துள்ளார். 

    மேலும், “‘பீப்’ படத்தின் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சாதாரண புகைப்படத்தை வைத்து மனிதர்களின் மனநிலையையும், அதில் மறைந்திருக்கும் தடயங்களையும் கண்டுபிடிக்கும் அபார திறன் கொண்ட இளைஞன், ஒரு மர்ம மரணத்தின் பின்னணியை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு.

    இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், தீபக் தினகர், நடிகைகள் சுகாசினி மற்றும் கோமல் சர்மா ஆகியோர் ஜூலை 29-ஆம் தேதி வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    வழக்கமான க்ரைம் த்ரில்லர்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாகியுள்ள ‘பீப்’, தனது தனித்துவமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்கனவே அதிகரித்துள்ளது. மேலும், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

  • ஓவர் ரிஸ்க் எடுத்த ராஷ்மிகா மந்தனா!.. இடுப்பு வலியால் இப்போ நடிக்க முடியாமல் அவதி.. என்ன ஆச்சு?

    ஓவர் ரிஸ்க் எடுத்த ராஷ்மிகா மந்தனா!.. இடுப்பு வலியால் இப்போ நடிக்க முடியாமல் அவதி.. என்ன ஆச்சு?

    நடிகை ராஷ்மிகா மந்தனா சமீப காலமாக பல முன்னணி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு புதிய படத்திலும், இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, திருமணத்திற்குப் பிறகும் ஓய்வின்றி தனது திரைப்பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 

    இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ராஷ்மிகா மந்தனாவுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சுமார் ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக அவர் ஒப்பந்தமான சில படங்களின் படப்பிடிப்பில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும், ராஷ்மிகாவின் உடல்நிலை குறித்து இதுவரை அவரோ அல்லது அவரது தரப்போ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவையாகவே உள்ளன. ராஷ்மிகா விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  • வதந்தி சீசன் 2 வரப்போகுது!.. டிரைலரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

    வதந்தி சீசன் 2 வரப்போகுது!.. டிரைலரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

    பிரைம் வீடியோவின் வெற்றிகரமான தமிழ் ஒரிஜினல் கிரைம் திரில்லர் தொடரான வதந்தியின் இரண்டாவது சீசனான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

    எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கியுள்ள இந்த தொடரை,  வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த சீசனில் எம். சசிகுமார், நேர்மையான காவல் அதிகாரி SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    வெளியாகியுள்ள டிரெய்லரில், ஜல்லிக்கட்டு திருவிழாவை மையமாகக் கொண்ட மதுரையின் கலாச்சார பின்னணி, பதற்றமான விசாரணை, அதிரடி சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெற்றுள்ளதால், சஸ்பென்ஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான பயணமாகவும் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழுடன் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும் வெளியாகிறது. மேலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும்  இந்த தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

  • சோக்கா இருக்காரே சோபிதா துலிபாலா!.. அந்த ஷேப்புக்கே நாக சைதன்யா ஃபிளாட்டு!..

    சோக்கா இருக்காரே சோபிதா துலிபாலா!.. அந்த ஷேப்புக்கே நாக சைதன்யா ஃபிளாட்டு!..

    நாக சைத்தன்யாவின் இரண்டாவது மனைவியான நடிகை சோபிதா துலிபாலா, தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஃபேஷன் மற்றும் சினிமா என இரு துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள அவர், இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட ஆடையில் சோபிதா தோன்றியுள்ள இந்த போட்டோஷூட்டில், முதுகு திறந்த வடிவமைப்பு, நுணுக்கமான எம்பிராய்டரி அலங்காரங்கள், இடுப்பை ஒட்டிய ஆபரணங்கள் மற்றும் நீளமாக விரிந்த கூந்தலுடன் அவர் காட்சியளித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    shobi

    மாடலாக தனது பயணத்தைத் தொடங்கிய சோபிதா துலிபாலா, அனுராக் கஷ்யப் இயக்கிய ‘ராமன் ராகவ் 2.0’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சோபிதா, அதன் பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் பெற்றார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

    dulipala

    அமேசான் பிரைம் வீடியோவின் ‘Made in Heaven’ வெப் தொடரில் தாரா கண்ணா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல் ‘The Night Manager’, ‘Major’, ‘Kurup’ மற்றும் ஹாலிவுட் திரைப்படமான ‘Monkey Man’ ஆகிய படைப்புகளிலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    சினிமாவில் மட்டுமல்லாமல், ஃபேஷன் உலகிலும் தொடர்ந்து புதிய தோற்றங்களால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் சோபிதா துலிபாலாவின் இந்த புதிய போட்டோஷூட் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

  • தனுஷ் மருமகன் படம் ஓடிடியில் வந்துடுச்சு!.. லவ் ஓ லவ் எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

    தனுஷ் மருமகன் படம் ஓடிடியில் வந்துடுச்சு!.. லவ் ஓ லவ் எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

    நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் நாராயண் நடிப்பில் உருவாகி, ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், இன்று ஜூலை 31 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.

    மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த காதல்-நகைச்சுவை திரைப்படத்தில் பவிஷ் நாராயணுடன் நாக துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்தை தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

    lol

    இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ரகுவரன் என்ற ஐடி நிறுவன ஊழியர், காதலியான அவந்திகாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக க்ரேடிட் கார்டை அதிகமாக பயன்படுத்தி, பெரும் நிதிச் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்.

    கடன் சுமை அதிகரிப்பதுடன் வேலை இழப்பும் ஏற்பட, ரகுவரனின் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. இந்தச் சூழலில் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. பின்னர், ரகுவரன் அனுபவித்த பொருளாதாரப் போராட்டத்தை அவந்திகாவும் நேரடியாக உணர வேண்டிய நிலை உருவாகிறது. அதன்பிறகு அவர்களது வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதே படத்தின் மீதமுள்ள கதையாக அமைந்துள்ளது.

    திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘லவ் ஓ லவ்’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு புதிய தேர்வாக அமைந்துள்ளது.

  • கோவையில் கொடி நாட்டப்போகும் சூர்யா!.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா?..

    கோவையில் கொடி நாட்டப்போகும் சூர்யா!.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா?..

    நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கியுள்ள இந்த தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

    படத்தில், சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற தொழில்முறை துப்பாக்கிச் சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நாற்பது வயதை எட்டிய அவர், வயது காரணமாக பார்வை குறையும் சவாலை எதிர்கொள்ளும் நிலையிலும், தனது விளையாட்டு கனவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். அதே நேரத்தில் குடும்பப் பொறுப்புகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவாகிறது.

    இதற்கிடையில், மேடி என்ற கதாப்பாத்திரத்தில் மமிதா பைஜூ சஞ்சய் விஸ்வநாத்தை காதலிக்கிறார். இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் காரணமாக அந்த உறவை ஏற்க தயங்கும் நாயகனின் மனநிலையும், அதைச் சுற்றி உருவாகும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளும் படத்தின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளன.

    மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஓணம் மற்றும் சுதந்திர தின வெளியீட்டை முன்னிட்டு திரைக்கு வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல படங்களுடன் போட்டியிட உள்ளதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

  • காந்தா கருகிப்போச்சு!.. ஐ ஆம் கேம் காப்பாத்தணும் ஆண்டவா!.. துல்கர் சல்மான் ஜோடி கயாடு லோஹர் வேற!

    காந்தா கருகிப்போச்சு!.. ஐ ஆம் கேம் காப்பாத்தணும் ஆண்டவா!.. துல்கர் சல்மான் ஜோடி கயாடு லோஹர் வேற!

    மலையாள சினிமாவின் பிரம்மாண்டமான பான்-இந்தியா படைப்புகளில் ஒன்றாக உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 20, 2026 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், அவரது திரையுலக வாழ்க்கையில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பாகக் கருதப்படுகிறது. ‘RDX’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    வெளியாகியுள்ள டிரெய்லர் முழுவதும் வேகமான திரைக்கதை, விறுவிறுப்பான ஆக்‌ஷன்,  மற்றும் அதிரடி காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும்,  இதுவரை இல்லாத மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

    தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. தற்போது டிரெய்லர் வெளியீடும் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு வலு சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ‘லோகா’ திரைப்படத்திற்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், ஓணம் வெளியீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் என திரையுலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

  • சர்வதேச திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’… தமிழ்ச் சினிமாவுக்கு கிடைத்த பெருமை!

    சர்வதேச திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’… தமிழ்ச் சினிமாவுக்கு கிடைத்த பெருமை!

    தமிழ் சினிமாவின் தரமான கிரைம்-திரில்லர் படைப்புகளில் ஒன்றாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் புதிய அங்கீகாரத்தைப் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (SIFF 2026)-வில் திரையிடுவதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு திரைப்படங்களில் ‘காளிதாஸ் 2’ இடம்பிடித்துள்ளது. அதிலும், தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் இருந்து தேர்வான ஒரே படமாக ‘காளிதாஸ் 2’ அமைந்திருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

    சீனாவின் ஷாங்காய் நகரில் ஜூன் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடல்கள் ஜூன் 28 வரை பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ‘காளிதாஸ் 2’ திரையிடப்பட்டதன் மூலம் உலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இப்படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் அவர் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

    திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்ற ‘காளிதாஸ் 2’, தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருப்பது,படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படத் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

  • இளையராஜாவுக்கு உரிமை கிடையாது!.. அச்சச்சோ.. இத்தனை படங்களுக்கு நோ சான்ஸ்!..

    இளையராஜாவுக்கு உரிமை கிடையாது!.. அச்சச்சோ.. இத்தனை படங்களுக்கு நோ சான்ஸ்!..

    இசைஞானி இளையராஜா மற்றும் இசை நிறுவனமான சரிகமா இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காப்புரிமை வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.

    அதன்படி, ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’, ‘கவிக்குயில்’, ‘நெற்றிக்கண்’, ‘ராஜா பார்வை’, ‘கல்யாணராமன்’ உள்ளிட்ட மொத்தம் 134 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகள் மீது இளையராஜா உரிமை கோரவோ, அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தவோ, மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் வழங்கவோ முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    இந்த வழக்கில்,  134 படங்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தங்களுக்கே சொந்தம் என சரிகமா நிறுவனம் வாதிட்டது. மேலும், சமீபத்தில் இளையராஜா இந்தப் பாடல்களில் சிலவற்றை டிஜிட்டல் இசைத் தளங்களில் பதிவேற்றி, அவற்றின் உரிமையை தாம் கொண்டிருப்பதாகக் கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய இடைக்காலத் தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி திரைப்படங்கள், இணைய தளங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தனது இசைப் படைப்புகளை பயன்படுத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால், தற்போது நீதிமன்றம் இளையராஜாவுக்கு எதிராக இடைக்காலத் தடையைத் தொடர்ந்துள்ளது. இருப்பினும், இது இறுதித் தீர்ப்பு அல்ல; வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே அந்தப் பாடல்களின் காப்புரிமை தொடர்பான சட்ட நிலை உறுதியாகும்.

  • ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆபாசமா இருக்கே!.. கேஜிஎஃப் ஹீரோவா இப்படி!.. ரொம்பவே டாக்ஸிக்!

    ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆபாசமா இருக்கே!.. கேஜிஎஃப் ஹீரோவா இப்படி!.. ரொம்பவே டாக்ஸிக்!

    ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    kathri

    1940-கள் முதல் 1970-கள் வரையிலான கோவாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அதிரடி-திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. வெளிப்படையாக சொர்க்கம் போல தோன்றும் கோவாவின் கடலோரப் பகுதிகளுக்குள் மறைந்திருக்கும் இருண்ட கும்பல் உலகை இப்படம் ஆராய்கிறது.

    toxic

    படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, உலகளாவிய ரசிகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பான் இந்தியத் திரைப்படமாகும்.

    nayan

    ஏற்கனவே இப்படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது படக்குழு புதிய அதிரடியான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில், படத்தில் இடம்பெறும் ஏழு முக்கிய பெண் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டைலிஷ் காட்சிகள், மிரட்டலான பின்னணி இசை மற்றும் மர்மம் நிறைந்த கதாப்பாத்திர அறிமுகங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    meena

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியான ஏழு நடிகைகளின் கதாப்பாத்திர அறிமுக ப்ரோமோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.