Category: home

  • ரத்த வாந்தி எடுத்து வச்சிருக்கானுங்க!.. டீசரை கூட பார்க்க முடியலையே.. நானியின் ‘பாரடைஸ்’ பிழைக்குமா?

    ரத்த வாந்தி எடுத்து வச்சிருக்கானுங்க!.. டீசரை கூட பார்க்க முடியலையே.. நானியின் ‘பாரடைஸ்’ பிழைக்குமா?

    ஹிட் தி தேர்ட் கேஸ் திரைப்படத்தில் அதீத வன்முறையை பயன்படுத்திய நானி அதை விட பல லாரி ரத்தத்தை வைத்து ரத்த வாந்தி எடுக்கிறேன் என நடித்துள்ள படம் தான் இந்த தி பாரடைஸ் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

    அறிமுக டீசரிலேயே ஆபாச வார்த்தைகள் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அனிருத் இசையில் வெளியான ஆயா ஷேர் பாடல் ரசிகர்களை கவர்ந்தாலும் நானியின் லுக் எல்லாம் பயங்கர ட்ரோல் ஆனது.

    இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டீசரை பார்த்தால் குமட்டிக் கொண்டு தான் வருகிறது. சாப்பிடும் போது தயவு செய்து யாரும் இந்த டீசரை பார்த்து விட வேண்டாம். அந்த அளவுக்கு ரொம்பவே ரத்த வாடை வீசுகிறது.

     ஒட்டுமொத்த டீசரிலேயே கயாடு லோஹர் சைக்கிளில் ஏஞ்சல் போல வரும் அந்த ஒரு காட்சி மட்டுமே ஆறுதலாக உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வரும் செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

    கண்டிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை பார்ப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டீசரை போலவே படம் இருந்தால் கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும் என்று கூறலாம். ரியாலிட்டி கொஞ்சமும் இன்றி தனி உலகையே க்ரியேட் செய்து உருவாக்கியது போல ரொம்பவே ஃபேக்காக உள்ளது டீசர்.

  • 15 கோடி கொடுக்கணும்!.. திடீரென பஞ்சாயத்தைக் கூட்டிய ஸ்ருதிஹாசன்!.. கமல் மகளுக்கு என்ன ஆச்சு?..

    15 கோடி கொடுக்கணும்!.. திடீரென பஞ்சாயத்தைக் கூட்டிய ஸ்ருதிஹாசன்!.. கமல் மகளுக்கு என்ன ஆச்சு?..

    AI உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் போன்றவை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன், தனது உரிமைகளை பாதுகாக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவரது மனுவில், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக ஸ்ருதி ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடவும் நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    ஸ்ருதி ஹாசன் தொடர்ந்துள்ள இந்த வழக்கு, பிரபலங்களின் ஆளுமை உரிமை மற்றும் டிஜிட்டல் அடையாள பாதுகாப்பு தொடர்பான முக்கிய வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் இதே போல வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  • என் மகனை விட திறமையானவர்கள் நிறைய பேர் இருக்காங்க!.. செம ஃபிராங்காக பேசிய மாதவன்!..

    என் மகனை விட திறமையானவர்கள் நிறைய பேர் இருக்காங்க!.. செம ஃபிராங்காக பேசிய மாதவன்!..

    ஜிடிஎன் படத்தின் ப்ரோமோசனில் ஈடுப்பட்டிருக்கும் நடிகர் மாதவனை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நேர்காணல் செய்தபோது, தனது சினிமா பயணம், அரசியல், குடும்பம் மற்றும் மகன் வேதாந்த் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

    அப்போது பேசிய மாதவன், நான் தொடர்ந்து பயோபிக் படங்களில் நடிக்கவில்லை. ‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு ‘லெகசி’ என்ற வெப் சீரிஸிலும், ‘சர்க்கிள்’ என்ற படத்திலும் நடித்துள்ளேன். ஆனால் அவை இன்னும் வெளியாகவில்லை. ‘ஜிடிஎன்’ வெளியாகும்போது அதனால் தொடர்ந்து பயோபிக் படங்களில் நடிப்பது போல தோன்றலாம்.

    மேலும், தற்போதைய அரசியல் சூழலில் நல்லது செய்தாலும் விமர்சனம் வரும்; தவறு செய்தாலும் விமர்சனம் வரும். எதைச் செய்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். எனக்கு அரசியலுக்கு வரும் ஆசையே இல்லை. சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. சிறுவயதிலிருந்தே அரசியல் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. ஆனால் அரசியல் பின்னணியில் ஆழமான ஆய்வுடன் ஒரு நல்ல கதை வந்தால், அந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்” என்று தெரிவித்தார்.

    இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகிறது. இதுவரை யாரைப் பற்றியும் தவறாக பேசியதில்லை. வாழ்க்கையில் நான் பெரிதாக கஷ்டப்பட்டதில்லை. எந்த தயாரிப்பாளரிடமும் வாய்ப்பு கேட்டு சென்றதில்லை. 

    தன் மனைவியை பற்றி பேசிய அவர், நீங்கள் உங்கள் பெற்றோருடன் 20 ஆண்டுகள் மட்டுமே இருந்திருக்கிறீர்கள். ஆனால் என்னுடன் 26 ஆண்டுகளாக வாழ்கிறீர்கள். அதனால் உங்களைப் பற்றி அவர்களை விட எனக்குத்தான் அதிகம் தெரியும் என்று என் மனைவி அடிக்கடி கூறுவார்” என சிரித்தபடி பகிர்ந்துகொண்டார்.

    மகன் வேதாந்த், சர்வதேச அளவிலான நீச்சல் வீரராக இருந்தாலும், அவரைவிட சிறப்பாக நீந்தும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர் என் மகன் என்பதால் அனைவருக்கும் தெரிகிறார். இவ்வளவு சிறிய வயதிலேயே கிடைத்திருக்கும் இந்தப் பிரபலத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள், எப்போதும் அடக்கத்துடன் இரு என்று நான் அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார். மாதவனின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

  • மாணவர்களுக்கு தமிழே தெரியல!.. ஃபீல் பண்ண தமிழ் முருகன் ஹீரோ தனுஷ்!..

    மாணவர்களுக்கு தமிழே தெரியல!.. ஃபீல் பண்ண தமிழ் முருகன் ஹீரோ தனுஷ்!..

    நடிகர் தனுஷ், தான் படித்த தாய் சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தனது சொந்த செலவில் மூன்று மாடிக் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளார். அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களிடம் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் ரசிகர்களைச் சந்தித்து தனுஷ் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதற்கிடையில், தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவரும் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    திறப்பு விழாவில் மாணவர்களிடம் பேசிய தனுஷ், “நான் பள்ளியில் படித்தபோது ஆங்கிலத்தில் அவ்வளவு திறமையாக இருக்கவில்லை. ஆனால் தமிழில் சரளமாக இருந்தேன். இன்று பலர் ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுகிறார்கள். ஆனால் தமிழைப் படிக்கவும் எழுதவும் தெரியாமல் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

    மேலும், “ஒரு பிரெஞ்சு திரைப்படத்தில் நடித்தபோது, ஆங்கிலம் தெரிந்திருப்பது கூடுதல் திறன் மட்டுமே. ஆனால் தாய்மொழி தெரிந்திருப்பதுதான் உண்மையான அடையாளம் என்று அவர்கள் கூறினார்கள். தமிழைத் தெரியாமல் இருப்பது பெருமை அல்ல; அது அவமானம்” என்று பேசிய அவர், மாணவர்களுக்கு தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் தனுஷின் நண்பர்கள், சகோதரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். தனுஷ் கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்திற்கு “தனுஷ் பிளாக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து, எதிர்காலத்தில் தங்களது பெயரிலும் இதுபோன்ற கட்டிடங்களை இந்தப் பள்ளிக்கு கட்டிக்கொடுத்து பெருமை சேர்க்க வேண்டும் என்று தனுஷ் ஊக்கமளித்து பேசினார்.

  • என்னோட ‘மகுடம்’ ரெடியாகிடுச்சு!.. ‘தி ஒன்’ சூர்யாவுக்கே சவால் விடும் விஷால்.. டைரக்ட் மோதல்!..

    என்னோட ‘மகுடம்’ ரெடியாகிடுச்சு!.. ‘தி ஒன்’ சூர்யாவுக்கே சவால் விடும் விஷால்.. டைரக்ட் மோதல்!..

    நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் நடிகர் விஷாலின் ‘மகுடம்’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி நேரடியாக போட்டிக்கு தயாராகியுள்ளது. மேலும், ‘மகுடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்தப் படத்தை நடிகர் விஷால் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, துஷாரா விஜயன், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, அஜய், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    vishal

    சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி, ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், விஷால் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். ட்ரெய்லர் வெளியாகும் முன்பே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே நாளில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் வெளியாக இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதவுள்ளன. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • விஜய் மகனுடன் சிக்மா!.. அடுத்து சந்தீப் கிஷன் இப்படியொரு படத்தில் நடிக்கிறாரா?..

    விஜய் மகனுடன் சிக்மா!.. அடுத்து சந்தீப் கிஷன் இப்படியொரு படத்தில் நடிக்கிறாரா?..

    முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘கரிகாலா – A Magical World’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    மேலும், சந்தீப் கிஷன் நடிப்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘சூப்பர் சுப்பு’ தெலுங்கு வெப் தொடரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்த தொடரில் மிதிலா பால்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.san

     ‘கரிகாலா – A Magical World’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னாபிமோஜு இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் உகந்தர்முனி இப்படத்தை இயக்கியுள்ளார்.

    மேலும், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சாப்டர் 1 2027-ஆம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சாப்டர் 2 அதே ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘கரிகாலா – A Magical World’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ‘நான் சிம்புவின் அம்மா இல்லை… சந்திரா தான்!’ – ‘அரசன்’ படம் குறித்து ஆண்ட்ரியா விளக்கம்

    ‘நான் சிம்புவின் அம்மா இல்லை… சந்திரா தான்!’ – ‘அரசன்’ படம் குறித்து ஆண்ட்ரியா விளக்கம்

    நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நடிகை ஆண்ட்ரியா அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அரசன்’ திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா, “நான் சிம்புவோட அம்மா இல்லை… நான் சந்திராதான்” என்று சிரித்தபடி கூறினார். இந்த ஒரு வரி பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’, அவரது ‘வடசென்னை’ திரைப்பட யுனிவர்ஸை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படைப்பாகும். ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்திலேயே ஆண்ட்ரியா மீண்டும் நடித்து வருகிறார். இதன் காரணமாக, அவரது கதாபாத்திரம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆண்ட்ரியா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

    ஆண்ட்ரியாவின் இந்த விளக்கத்திற்குப் பிறகு, அவரது ‘சந்திரா’ கதாபாத்திரம் படத்தில் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாய் பல்லவி… சுவாமி ஊர்வலத்தை தரிசித்த இந்திரன்ஸ் – ஸ்ரீலீலா!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாய் பல்லவி… சுவாமி ஊர்வலத்தை தரிசித்த இந்திரன்ஸ் – ஸ்ரீலீலா!

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் – அத்தியாயம் 1: உதிரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் நாயகியான சாய் பல்லவி, இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    மேலும், நடிகர் இந்திரன்ஸ் மற்றும் நடிகை ஸ்ரீலீலா, திருவண்ணாமலை தெருக்களில் நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தைக் கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ‘ஓம் – அத்தியாயம் 1: உதிரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த அதிரடி திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசிருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

    ஆர்.டேக் ஸ்டுடியோஸ் மற்றும் வண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வரும் ‘ஓம் – அத்தியாயம் 1: உதிரம்’, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கோவிலுக்கு வந்த சாய் பல்லவி, பக்தர்களுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார் அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
     

  • திடீரென திருக்குறள் பதிவு போட்ட உதயநிதி ஸ்டாலின் ஹீரோயின்!.. டீகோட் செய்யும் நெட்டிசன்கள்!..

    திடீரென திருக்குறள் பதிவு போட்ட உதயநிதி ஸ்டாலின் ஹீரோயின்!.. டீகோட் செய்யும் நெட்டிசன்கள்!..

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரின் பதிவுகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருக்குறள் பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    நடிகை த்ரிஷா மற்றும் பெண்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பின்னர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது.

    இந்த சூழலில், நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பதிவில், “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்.” என்ற குறளை மட்டும் பதிவிட்டுள்ளார்.

    திருக்குறள் 183-ன் பொருள், “பிறர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசிவிட்டு, நேரில் அன்பாக நடிப்பதைவிட, அத்தகைய பொய்யான வாழ்க்கையை வாழாமல் இருப்பதே சிறந்தது” என்பதாகும்.

    எனினும், உதயநிதி ஸ்டாலின் அல்லது தற்போது நிலவி வரும் சர்ச்சை குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் நேரடியாக எந்தக் குறிப்பையும் வெளியிடவில்லை. இதனால், அவரது பதிவின் நோக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

  • திரையரங்குக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் ‘இதயம் முரளி’… வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    திரையரங்குக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் ‘இதயம் முரளி’… வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    நடிகர் அதர்வா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

    இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள ‘இதயம் முரளி’, காதல் ,நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும், அதர்வாவின் மறைந்த தந்தையும் பிரபல நடிகருமான முரளிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், 1991-ஆம் ஆண்டு வெளியான அவரது சூப்பர் ஹிட் திரைப்படமான ‘இதயம்’ படத்தை நினைவுகூரும் வகையிலும் ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    murali

    படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளதுடன், ப்ரீத்தி முகுந்தன் இரட்டையர்களான  நடித்துள்ளார். மேலும், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனுடன், ஃபஹத் பாசில், பாடகி ஜோனிதா காந்தி, இசையமைப்பாளர் எஸ். தமன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் இடம்பெற்றுள்ளனர்.

    டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஓடிடி வெளியீட்டின் மூலம் மேலும் பல பார்வையாளர்களை சென்றடைய உள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம், ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த ஓடிடி வெளியீட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.