Tag: ajithkumar

  • அஜித் உடம்பு குறைச்சது படத்துக்காக இல்லையா?!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!….

    Ajithkumar: நடிகர் அஜித் அதிகமான பைக் ரேஸில் கலந்து கொண்டதால் சிலமுறை விபத்து ஏற்பட்டு அவரின் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு பலமுறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நிறைய ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டார் அஜித்.

    இதன் காரணமாக அவரின் உடலில் எடை அடிக்கடி அதிகரிக்கும். கடந்த 20 வருடங்களாக இந்த பிரச்சனை அவருக்கு இருக்கிறது. அடிக்கடி முதுகுவலியால் அவதிப்படுவார். அந்த வலிகளை பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் நடித்து வருகிறார். அடிக்கடி அவரின் தோற்றம் மாறுவதற்கு காரணமும் அதுதான்.

    வலிமை படத்தில் அவரின் தோற்றத்தை பார்த்துவிட்டு ‘பஜன்லால் சேட்டு போல இருக்கிறார்’ என யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் நக்கலடித்தார். அதேநேரம், திடீரென அஜித் தனது உடல் எடையை குறைத்தும் காட்டுவதுண்டு. விவேகம் படத்திற்காக தொப்பையை குறைத்து உடலை டைட் செய்து காட்டினார்.

    படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வெற்று உடம்புடன் சண்டையும் போட்டார். அதன்பின் அவரின் தோற்றம் மீண்டும் மாறியது. விடாமுயற்சி படத்தில் கொஞ்சம் குண்டான தோற்றத்தில்தான் நடித்து வந்தார். அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானபோதும் அப்படித்தான் இருந்தார்.

    இந்நிலையில்தான், கடந்த சில நாட்களாக வெளியாகும் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. ஏனெனில், நடிக்கவந்த புதிதில் இருந்தது போல மாறியிருக்கிறார் அஜித். குறிப்பாக, விடாமுயற்சி படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் கருப்பு நிற கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்லிம்மாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

    இது அஜித்துக்கு சாத்தியம் எனில் இதை ஏன் அவர் பல வருடங்களாக செய்யவில்லை என்கிற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் அஜித் உடம்பை குறைத்ததன் பின்னணியில் ஒரு செய்தி கசிந்திருக்கிறது. அஜித் துபாயில் உள்ள கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவரின் அணிக்கு அவர்தான் கேபடன். 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் இந்த ரேஸ் நடக்கிறது.

    இந்த ரேஸில் கலந்துகொள்ள வேண்டுமெனில் இவ்வளவுதான் உடல் எடை இருக்கவேண்டும் என விதிமுறை இருக்கிறது. ஏனெனில், அப்போதுதான் அந்த காரில் அமர்ந்து வசதியாக ஒட்ட முடியும். எனவே, அதற்காகவே அஜித் உடலை குறைத்திருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

  • 10 மாதம் சினிமாவுக்கு லீவு விடும் அஜித்!.. அவர் பிளானே இதுதான்!….

    Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக நடிக்க துவங்கி காதல் கோட்டை, வான்மதி போன்ற காதல் கதைகளில் மட்டுமே நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறியவர் அஜித்.

    இவருக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது. பைக் மற்றும் கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பைக் மெக்கானிக் கடையில் அதிக நேரங்களை செலவிட்டிருக்கிறார். பைக்கை எப்படி பழுது பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதுதான் அவரின் ஆர்வமாக இருந்திருக்கிறது.

    ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் வர சில விளம்பர படங்களில் நடித்து அமரவதி படத்தில் அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கிறார். கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்க்கு அடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

    சினிமாவில் நடிப்பது பிடிக்கும் என்றாலும் பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, புதிய இடங்களுக்கு செல்வது, புதிய அனுபவங்களை பெறுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். பொதுவாக சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இப்படியெல்லாம் செய்யவே மாட்டார்கள். ஆனால், அஜித் இதில் விதிவிலக்கு. அவரை பார்த்து பொறாமைப்படும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

    ajith

    ajith

    ஏற்கனவே பைக்கில் உலகை சுற்றி வந்த அஜித் விரைவில் கார் ரேஸிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். ஏற்கனவே, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சினிமா, கார் ரேஸ், பைக் ரேஸ் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில், அஜித்தை பற்றி ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

    2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் அஜித் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கிறாராம். அதேநேரம், அஜித்தின் ரசிகர்கள் ஏமாந்து போக மாட்டார்கள். ஏனெனில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியானால் குட் பேட் அக்லி படம் மே மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் டப்பிங் வேலைகளை முடித்து கொடுத்துவிட்டு கார் ரேஸுக்கு போகிறார் அஜித். அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு 2025 ஆகஸ்டு மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

  • அஜித்தின் அடுத்த பட டைரக்டர் சிவா இல்லையாமே!. இது வேறவெவல் டிவிஸ்ட்!..

    Ajith next: விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் எல்லோரின் கவனமும் அஜித் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனால், அஜித்தோ சினிமாவில் நடித்தாலும் பைக் ரேஸ், கார் ரேஸ் என ஒருபக்கம் சென்றுவிட்டார். அடுத்த வருடம் 2025 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை முழுக்க முழுக்க கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறார்.

    ஒரு வருடத்திற்கு முன்பு விடாமுயற்சி படத்தில் நடிக்க துவங்கினார். ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கப்போனார். தற்போது விடாமுயற்சி படம் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குட் பேட் அக்லி படம் முடிந்துவிட்டது.

    அதோடு, உடல் எடையை குறைத்து அஜித் நிற்கும் இரண்டு படங்களின் புகைப்படங்களும் வெளியாகி திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியது. ஒருபக்கம், அஜித் உடலை குறைத்தது படத்திற்காக இல்லை. அப்படியெனில் எப்போதோ அதை செய்திருப்பார். துபாயில் நடக்கவுள்ள கார் ரேஸில் கலந்துகொள்ள வேண்டுமெனில் உடல் எடை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது.

    அதற்காகவே அஜித் உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது சிறுத்தை சிவாதான் என சொன்னார்கள். கங்குவாவுக்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தபோது ‘தைரியமாக இருங்கள்’ என அஜித் தரப்பிலிருந்து நம்பிக்கை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    ஆனால், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் கோட் பட இயக்குனர் வெங்கட்பிரபுவும் இருக்கிறாராம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு சின்ன விஷயத்தால் வெங்கட்பிரபு மீது கோபமாக இருந்தார் அஜித். ஆனால், தற்போது இருவரும் மீண்டும் பேச துவங்கிவிட்டனர். எனவே, அஜித் அவரை டிக் அடிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

    ஒருபக்கம், சிறுத்தை சிவா வேண்டாம் என்பதே அஜித் ரசிகர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது. ஏனெனில், அண்ணாத்த மற்றும் கங்குவா பட ரிசல்ட் அவர்களை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை நாம் இயக்க வேண்டும் என வெங்கட்பிரபுவும் முயற்சி செய்து வருகிறாராம். அஜித் என்ன முடிவெடுப்பார் என்பது அடுத்த வரும் ஆகஸ்டு மாதமே தெரியவரும்.

    இதற்கிடையில் அஜித்தின் விடாமுயற்சி படம் 2025 பொங்கலுக்கும், குட் பேட் அக்லி படம் 2025 மே மாதமும் வெளியாகவுள்ளது. அதன் பிறகே தனது அடுத்த பட இயக்குனர் பற்றி அஜித் யோசிப்பார் என்கிறார்கள். 2025 அக்டோபர் மாதம் ரேஸ் முடிந்த பின்னரே அஜித் சென்னைக்கு லேண்ட் ஆக இருக்கிறார் என்கிறார்கள்.

    Also Read : அஜித் எப்படி இப்படி ஸ்லிம்மாக மாறினார் தெரியுமா?!.. கசிந்த தகவல்!…

  • அஜித் பேச்சை கேட்காத ரசிகர்கள்.. மீண்டும் ஒலித்த கோஷம்.. ஆனா இப்போ இங்கேயுமா?..

    நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது தனது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கின்றது.

    விடாமுயற்சி:

    விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார்.

    இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பதற்காகத்தான்.

    குட் பேட் அக்லி:

    விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் கம்மிட்டான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மே மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித்தின் கோரிக்கை:

    நடிகர் அஜித் பல வருடங்களுக்கு முன்பே தனக்கு ரசிகர்கள் மன்றம் எதுவும் வேண்டாம் என்று அனைத்தையும் கலைத்தவர். அதேபோல்தான் கடந்த வருடம் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல என்கின்ற பட்டமும் வேண்டாம் என்று கூறியிருந்தார். தன்னை ஏகே என்றும் அல்லது அஜித் என்றும் அழைத்தால் போதுமானது என்று கூறினார்.

    அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் நடிகர் அஜித்தை தல என்று அழைக்காமல் இருந்து வந்தார்கள். அதற்கு பதிலாக கடந்த சில நாட்களாக கடவுளே அஜித்தை என்று கோஷமிட்டு வந்தார்கள். பொது இடங்களிலும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் சமயங்களிலும் இப்படி அவர்கள் கூச்சலிடுவது பெரும் அசவுரியத்தை ஏற்படுத்தி வந்தது.

    இதனை புரிந்து கொண்ட அஜித் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். தன்னை இதுபோல அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் அஜித் ரசிகர்கள் அவர் கூறுவதை சரியாக பின்பற்றுவதே கிடையாது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

    அதாவது திருமண மேடையில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு தாலி கட்டும் சமயத்தில் அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் ‘கடவுளே அஜித்தே, கடவுளே அஜித்தே’ என்று கத்தி கத்தி கோஷம் இடுகிறார்கள். இதை பார்த்த பலரும் அந்த மனுஷன் எவ்வளவு அன்பாக ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை எதையுமே நீங்கள் சரியாக செய்யவே மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  • இப்பதான் லோகேஷ்!.. நாங்க மங்காத்தாவிலே இத பண்ணிட்டோம்!.. விபி சொல்றத கேளுங்க!..

    50,60,70களில் ஒரு புதிய படத்திற்கான விளம்பரம் என்பது நோட்டீஸ் அடித்து குதிரை வண்டியில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் படத்தின் பெயரை சொல்லி விளம்பரம் செய்து அந்த நோட்டீஸை எல்லோருக்கும் கொடுப்பார்கள். அதேபோல், எல்லா இடத்திலும் புதிய படம் பற்றிய போஸ்டர் ஒட்டுவார்கள்.

    இப்போது வரை போஸ்டர் என்பது நடைமுறையில் இருக்கிறது. கிராமம், நகரம் என எல்லா பகுதியிலும் உள்ள தெருக்களில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு படம் தியேட்டரிலிருந்து தூக்குகிறார்கள் எனில் ‘இன்றே இப்படம் கடைசி’ எனவும் போஸ்டர் மீது ஒட்டுவார்கள். அதேபோல், புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது போஸ்டர்களில் விளம்பரம் கொடுப்பார்கள்.

    ஆனால், இப்போதெல்லாம் எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டது. எனவே, புதிய படங்களின் அறிவிப்பு டிவிட்டரில் வெளியிடுகிறார்கள். முன்பெல்லாம் டிஜிட்டல் போஸ்டர்களை தயார் செய்து பகிர்வார்கள்.

    இப்போதெல்லாம், புதிய பட அறிவிப்பை ஒரு சிறிய வீடியோவாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். இதை துவக்கி வைத்தது லோகேஷ் கனகராஜ்தான். விக்ரம் படம் உருவானபோது கமலை வைத்து அப்படி ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டார். அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற இப்போது எல்லோரும் அதை செய்ய துவங்கிவிட்டனர்.

    இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஒரு படம் துவங்கும்போது அந்த நடிகரை வச்சி வீடியோவை உருவாக்கி அறிவித்தது முதலில் நாங்கள்தான். மங்காத்தா படத்தில் அதை செய்தோம். அதுக்கு முன்னாடி ஒரு நடிகரை வச்சி வீடியோவை உருவாக்கி (மோஷன் போஸ்டர்) ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியானதாக எனக்கு தெரியவில்லை. மங்காத்தா படத்தில் ஒரு சின்ன வீடியோவில் கதை சொல்வது போல ஷூட் செய்து பின்னணி இசையோடு வெளியிட்டோம்’ என சொல்லி இருக்கிறார்.

  • VidaaMuyarchi: விடாமுயற்சி முதல் சிங்கிள் Sawadeeka… சண்டைக்கு நடுவில் அப்டேட் விட்டு சிக்கிய படக்குழு…

    VidaaMuyarchi:: அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நிலையில், தற்போது அதுவும் சிக்கலாக மாறியிருக்கிறது.

    துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிக நீண்ட காலமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஒவ்வொரு அப்டேட்டிற்கும் காத்திருந்த ரசிகர்கள் படத்தின் வெளியீடு குறித்து பல நாட்களாக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது இப்படத்தின் கடைசி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ச்சியாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. இப்படம் காலதாமதம் ஆனதால் தற்போது நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

    முதலில் இந்த திரைப்படம் தான் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது விடாமுயற்சி அந்த நாளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தற்போது இப்படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது.

    அதை ஈடு கட்டும் வகையில் படத்தின் முதல் பாடலான சுவாதிகா வரும் டிசம்பர் 27ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கொண்டாடும் நிலையில் அஜீத் ரசிகர்கள் தற்போது இல்லை என்பது தான் உண்மை.

    காலையில் இருந்து நடிகர் விஜய்யை கலாய்க்கும் விதமாக, அஜித் ரசிகர்கள் விஜய் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் ஹேஸ்டேக் ஒன்றை உருவாக்கி கலாய்த்து வந்தனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் தற்போது அஜித் குறித்து அதேபோன்று ஹேஸ்டேக்கை உருவாக்கி விமர்சித்து வருகின்றனர்இந்த நேரத்தில் இந்த அப்டேட் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது இதுவும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த சண்டை சில நாட்களாக இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் இருதரப்பும் சண்டை இட்டுக் கொள்வது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    Also Read: விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை நான் ஏன் சரி செய்றேன்னு தெரியுமா? விஜயகாந்தோட பெரிய மனசைப் பாருங்க..!

  • பெரிய நன்றி… முடிச்சிவிட்டாங்கப்பா… விடாமுயற்சிக்கு புல் ஸ்டாப் வைத்த அஜித்குமார்..

    நடிகர் அஜித்குமாருக்கு விடாமுயற்சி படக்குழு தற்போது மிகப்பெரிய நன்றி ஒன்றை கூறி இருப்பதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

    துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிப்பில் எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு வருடமாக அஜித் ரசிகர்கள் கிடைத்த ஏமாற்றத்திற்கு பரிசாக வரும் வருடத்தில் தொடர்ச்சியாக கொண்டாட வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஏனெனில், மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே சிக்கல்தான் அதிகமாக வந்து கொண்டிருந்தது. முதலில் படத்தின் பெயரை மட்டுமே அறிவித்தப்பட குழு செல்லாமல் காலதாமதம் ஆனது.

    பல மாத இடைவேளைக்கு பின்னர் நடிகர் அஜித் குமார் தன்னுடைய உலக சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஷூட்டிங் இருக்கு திரும்பினார். இருந்தும் அவர்கள் படப்பிடிப்பை நடத்திய அஜர்பைஜானின் கால சூழ்நிலை தொடர்ச்சியாக சூட்டிங் கேன்சல் ஆகும் நிலையை உருவாக்கியது.

    இது மட்டுமல்லாமல் படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே போக, ஷூட்டிங்கை சற்று நிறுத்திய லைகா நிறுவனம் தன்னுடைய மற்ற திரைப்படங்களின் ரிலீசில் கவனம் செலுத்தியது. இந்த பிரேக்கை பயன்படுத்திக் கொண்ட நடிகர் அஜித்குமார் உடனே ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்தில் இணைந்தார்.

    இடைத்தொடர்ந்து இப்படத்தின் சூட்டிங் ஒரு வழியாக முடிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் கடைசி கட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது அஜித் குமார் தன்னுடைய டப்பிங் பணியையும் முடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், லைக்கா குரூப்பின் தலைவர் சுபாஷ்கரன், லைகா புரோடக்‌ஷன் நிறுவனத்தின் தலைவர் தமிழ் குமரன் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஹைதராபாத்தில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் முடித்ததற்காக நன்றி சொல்லிக் கொண்டதாக புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

  • மகிழ் திருமேனியிடம் அஜித் சொன்ன ஒற்றை வார்த்தை… ஓ அப்போ உண்மைதானா?

    Vidaamuyarchi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கும் நிலையில், தன்னிடம் முதல் முறையாக அஜித் பேசியது குறித்து மகிழ் திருமேனி தெரிவித்திருக்கிறார்.

    துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்தின் திரைப்படம் இதுவரை வெளியாகி இரண்டு வருடங்களை நெருங்கி இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பின்னர் சூட்டிங் செல்லவே ஆறு மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது.

    அது மட்டுமல்லாமல் படம் ஷூட்டிங் நடந்த அஜர்பைஜானில் தொடர்ச்சியாக கால சூழ்நிலை காரணமாக அடிக்கடி கேன்சல் செய்யப்பட்டதும் பட்ஜெட்டில் பெரிய அளவில் அடி விழுந்தது. இதனால் லைக்கா நிறுவனம் தன்னுடைய மற்ற படங்களின் ரிலீஸில் கவனம் செலுத்த முடிவெடுத்தது.

    இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் ஒப்பந்தமானார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் உடனே நடிக்கவும் தொடங்கினார். அத்திரைப்படத்தின் மொத்த சூட்டிங் பணிகளும் முடிந்துவிட்டது.

    ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டுமே இன்னும் இழுத்தடிக்கப்பட்டது. இந்த மாதத்தின் துவக்கத்தில் கூட சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித்குமார் முடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இன்னும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இதனால் படம் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழுந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் விடாமுயற்சி ட்ரைலரை உடனே வெளியிட வேண்டும் என படக்குழுக்கு ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி, பிரேக் டவுன் படத்தின் கதையை அஜித்குமார் தன்னிடம் சொன்னபோது என்னை கண்ணை மூடிக்கொண்டு நம்புங்கள் என்றார். நாங்கள் பேசிய 10 நாளில் சூட்டிங் சென்று விட்டோம். அஜித்தின் கனவை படமாக்க மட்டுமே நான் செய்தேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • விடாமுயற்சி வேண்டாம்!.. குட் பேட் அக்லியை ரிலீஸ் பண்ணு!.. கொதிக்கும் அஜித் ஃபேன்ஸ்!…

    Vidaamuyarchi: அஜித் ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம்தான் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பின் இந்த படம் துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்தை துவங்குவதற்கு முன்பே பல பஞ்சாயத்துகள் நடந்தது. லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் நியமிக்கப்பட்டு அவர் சொன்ன கதை பிடிக்காமல் அவர் தூக்கப்பட்டார்.

    அதன்பின் மகிழ் திருமேனி இயக்குனராக நியமிக்கப்பட்டாலும் எந்த கதையை படமாக எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. பல கதைகள் பேசப்பட்டு ஒன்றும் இறுதியாகவில்லை. அதோடு, அஜித்தும் பைக்கில் உலகை சுற்றப்போய்விட்டு சில மாதங்கள் கழித்து வந்தார்.

    அதன்பின் ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் கதையை எடுப்பது என முடிவானது. தனது மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு போகும் ஹீரோவின் மனைவியை ஒரு கும்பல் கடத்திவிட அதை அவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் படப்பிடிப்பு அஜர் பைசானில் துவங்கப்பட்டது.

    அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார் என சொன்னார்கள். ஆனால், பல காரணங்களால் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்காமல் தடை பட்டுக்கொண்டே வந்தது. குறிப்பாக இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. ஏனெனில், இந்தியன் 2, விடாமுயற்சி, லால் சலாம் என ஒரே நேரத்தில் பல படங்களை அந்நிறுவனம் தயாரித்ததே அதற்கு காரணம்.

    அதன்பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் வெளியானது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது.. இல்லை முடியவில்லை.. ஒரு பாடல் காட்சி பாக்கி.. என மாறிமாறி செய்திகள் வெளிவந்தது. ஒருகட்டத்தில், அஜித் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போய் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் ஹைப் ஏத்தியது.

    சில நாட்கள் கழித்து மிகவும் சுமாரான விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை ஏமாற்றியது. எனவே, விடாமுயற்சியை விட்டு விட்டு அஜித் ஃபேன்ஸ் குட் பேட் அக்லி படத்தின் மீது கவனத்தை திருப்பினார்கள். ஆனால், சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என செய்திகள் வெளியானது.

    எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்நிலையில்தான் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைக்கா நிறுவனம் நேற்று இரவு செய்தி வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பின்னணி இசை, சென்சார் பணி என சில பணிகளை முடிக்க முடியாது என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விடாமுயற்சி எங்களுக்கு வேண்டாம். குட் பேட் அக்லியை பொங்கலுக்கு வெளியிடுங்கள் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

  • மாமனார் போனா என்ன மருமகனுக்கு ஸ்கெட்ச்சா… விட்ட இடத்தை பிடிக்க போட்டியில் குதிக்கும் ஏகே…

    Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கும் நிலையில், அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    அஜித்குமார் நடிப்பில் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், பண நெருக்கடியால் படத்தின் வெளியீட்டை லைக்கா நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.

    இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, ரசிகர்கள் குட் பேட் அக்லியை ரிலீஸ் செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அப்படத்தின் கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

    வரும் ஏப்ரல் மாதம் 10ந் தேதி குட் பேட் அக்லியை வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம். அதே போல தனுஷ் நடிப்பில் இட்லி கடை படமும் அதே நாளில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    வேட்டையன் படத்துடன் விடாமுயற்சியை மோத விட முயற்சிகள் நடந்தது. ஆனால் அது நடக்காமல் போக தற்போது முன்னாள் மருமகனுடன் மோத தயாராகி இருக்கிறார் நடிகர் அஜித்குமார். ஆனால் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.